Saturday, May 9, 2020

குளிக்கும் பின்பு கடை பிடிக்கும் தேவ ரகசியம்.

நாம் குளிக்கும் பொழுது  தேவ ரகசியத்தை பயன்படுத்தினால், நமக்கு லட்சுமி கடாட்சம் ஏற்படும் அது எப்படி என்றால், குளித்த பிறகு  துண்டை பயன்படுத்தி நம்மை நாம் சுத்தம் செய்து  கொள்வோம். அதில் நாம் என்ன செய்யவேண்டும் என்றார் முதலில்  முதுகுப்பக்கம் சுத்தம் செய்த பிறகு முகத்திற்கு வந்து சுத்தம் செய்யவும், ஏனென்றால் ஸ்ரீதேவி, மூதேவி என்று அக்கா தங்கை உறவிலே  தெய்வங்கள் படைக்கப்பட்டு இருக்கிறது முதலில் சுத்தமான இடத்திற்குச் சென்று அசுத்தத்தை ஏற்படுத்துவதில் மூதேவிக்கு அதிக பங்கு இருக்கிறது ஆகையால் முதுகுப்பக்கம் நாம் சுத்தம் செய்து கொண்டாள் நம்முடைய பின்பக்கம் மூதேவி ஆட்கொள்வாள்,   ஆகையால் நமக்கு முகத்திலே தரித்திரம் தெரியாது அதனால் தான் நம் முன்னோர்கள் இந்த ரகசியத்தை  நமக்கு விட்டுச் சென்றாரகள், அதற்குப் பிறகு முகத்தைத் துடைத்துக் கொள்ளும் பொழுதே ஸ்ரீதேவி நம் முகத்தில் வந்து தங்கி விடுவான் அதனால் நமக்கு லட்சுமிகடாட்சம் வந்துவிடும் முகம் எப்பொழுதும் சுபிட்சமாக இருக்கும் வசீகரமாக இருக்கும் அதனால்தான் பெருமாள் ஸ்ரீதேவியை நீ முன்னால் நடந்து வரும்பொழுது அழகு என்றார். அதுபோல மூதேவியை நீ திரும்பிச் சென்றால் அழகு  என்று சொன்னார். ஆகையால் இனிமேல்  குளித்த பிறகு முதலில் முதுகுப்பக்கம் துடைக்கவும் பிறகு முகத்திற்கு சுத்தம் செய்யவும் அதாவது முன்பக்கம் சுத்தம் செய்தாள் சத்தமில்லாமல் லட்சுமி கடாட்சம் நம்மை பின்பற்றி வரும் இந்த ஆன்மீக ரகசியத்தை பெரியவர்கள் நாம் நல்லபடியாக வாழ நமக்குச் சொல்லிவிட்டுச் சென்றார்கள், ஏன் இதை கடைபிடிக்க கூடாது. வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment