Tuesday, October 31, 2023

கர்மவினையை சுட்டிக்காட்டும் அருமையான கதை.

*நல்வினை தீவினை...!*

*கர்மவினை

நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?

ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?

கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?

போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.

 ஒரு கதையின் மூலம் பார்த்துவிடுவோம்..

சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். 

அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக
இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிரார்த்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன்
பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.

அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.

தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும் குணமுடையவனாக அவனிருந்தான்.
அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.

இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்குசித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.

இதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்துவிட்டது. 

கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்மீது தனது பக்தி உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். 

சிரித்துக் கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான்.
இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.

போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில்
வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு அதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான்.
 

வரும்வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரத்தினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ உறுத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். 

கணக்கிட முடியாத செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தோஷத்துடன்
வீடு திரும்பினான். 

இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன் படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.

இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று சித்தனின் மனைவி அவனைவிட்டு நீங்கினாள். 

தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு
நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். 

உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து
கொள்ள முடியவில்லை.

எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில்
குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். 

ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன் வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும்
மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க தோன்றவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். 

தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.
அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அணைத்து கொண்டார். 

அவரின் அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில் வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.

நீ உன் மனைவியை மதித்தது கூட கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான்,
அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.

என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின் பெரும்பாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,.மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய். 

ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே அனுபவிக்க தொடங்குகின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும்.

வித்தனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.

அவன் செய்த அனைத்து புண்ணியங்களும் ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ
அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. 

இனி நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து
தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.

நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. 

நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி
படுத்த படுக்கையாகி விட்டான். 

அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.
தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான்.

ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. 

அது நல்லதாக இருந்தால் நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.
ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க.

விதிவிலக்குகளும் உண்டு..!

சிவ ஓம் நமச்சிவாய 🙏🌺🙏

அகிலம் போற்றும் அண்ணாமலையார் பொற்பாதங்களுக்கு கோடானுகோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏

அன்பான இனிய ஈசனின் அருளுடன் இனிய சிவ காலை வணக்கங்கள் 🙏
🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏

நவகிரக தோஷங்களை நீக்கும் நவதிருப்பதிகள்.

🙏🙏🙏🚩#கிரக_தோஷங்களை_நீக்கும்_நவதிருப்பதி

இந்த வைணவத் திருப்பதிகளை “நவதிருப்பதிகள்“ என்பர். ஒவ்வொரு திருப்பதியை வழிபட ஒரு கிரகதோஷம் நீங்கும் என்று சொல்வார்கள், தாமிரபரணிக்கு ஒரு விசேஷம் உண்டு. தன் இரு கரைகளிலும் ஏராளமான சிவ, விஷ்ணு தலங்களைக்கொண்டிருக்கும் திருநதி இது. 

கங்கையைப் போல், காவிரியைப்போல் சமயப் பெருமை படைத்த நதியே தாமிரபரணியாகும். இதனை தட்சிண கங்கை என்று சொல்வதும் உண்டு.

தாமிரபரணி கரையோரத்தில் ஒன்பது சிவன்கோயில்கள் உண்டு. அதை “நவ கயிலாயம்“ என்பார்கள். நவகயிலாயத்துக்கு இணையாக ஒன்பது திருப்பதிகள் உண்டு. இந்த வைணவத் திருப்பதிகளை “நவதிருப்பதிகள்“ என்பர். ஒவ்வொரு திருப்பதியை வழிபட ஒரு கிரகதோஷம் நீங்கும் என்று சொல்வார்கள்.

*🚩நவதிருப்பதிகளில் முதலாவது #ஸ்ரீவைகுண்டம்🚩*

     இங்குள்ள மூலவர் ஸ்ரீவைகுண்டநாதன், உற்சவர் கள்ளப்பெருமாள், தாயார் முறையே வைகுந்த வல்லி, பூதேவி என்று சொல்லப்படுவார். ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இது சூரியதோஷ நிவர்த்தி தலம்.

*🚩இரண்டாவது #வரகுணமங்கை🚩* 

 வீற்றிருந்த கோலத்தில் விஜயாசனப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். வரகுணவல்லி என்பது தாயாரின் பெயர். வரகுணமங்கை தாயார் உபயநாச்சியார். இந்தத் தலம் பரிகார தலமாகும்.

*🚩மூன்றாவது #திருப்புளியங்குடி🚩*

 புஜங்க சயனத்தில் மூலவர் காய்சேன வேந்தன் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். மலா்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார் இவர் தேவியர். இது புதனுக்குரிய பரிகார தலமாகும்.

*🚩நான்கு, ஐந்தாவது தலங்கள் #திருத்தொலைவில்லிமங்கலம்🚩*
 
 இதனை “#இரட்டைத்_திருப்பதி“ என்பார்கள். இரண்டு பெருமாள் கோயில்கள் உண்டு. சீனுவாசன் (தேவபிரான்). அரவிந்தரோசனன் (செந்தாமரைக் கண்ணன்) ஆகிய இருவரும் முறையே நின்ற வீற்றிருந்த கோலங்களில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றனர். இது ராகு-கேது பரிகாரத் தலமாகும்.

*🚩ஆறாவது திருக்குளத்தை 
எனப்படும் #பெருங்குளமாகும்🚩*

 இங்குள்ள சீனிவாசன் மற்றும் அரவிந்தரோசனன் நின்ற கோலத்திழல் சேவை சாதிக்கிறார்கள். அலமேலுமங்கையார், குழந்தை வல்லி என்பன தாயார் திருநாமங்கள். இது சனி பரிகார தலம்.

*🚩ஏழாவது #திருக்கோளூர்🚩*  

இங்கு வைத்தமானிதி பெருமாள் கோயிலில் வைத்திநிதி பெருமாள், நிஷேபவித்தன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் குமுதவல்லி, கோளூர்வல்லி எனப்படுவர். இது செவ்வாய்க்குரியபரிகார தலமாகும்.

*🚩எட்டாவது #தென்திருப்பேரை எனப்படும் இத்தலம் #திருப்பொறை எனப்படுகிறது🚩* 

மகரநெடுங்குடைகாதன் மற்றும் நிகரில் முகில்வண்ணன் வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் முறையே  குழக்காதவல்லி, திருப்பேறை நாச்சியார் எனப்படுவர். இது சுக்கிரன் பரிகார தலமாகும்.

*🚩ஒன்பதாவது திருத்தலம் திருக்குருகூர் எனப்படும் #ஆழ்வார்திருநகரியாகும்🚩* 

இது நம்மாழ்வார் அவதாரத் தலம். ஆதிநாதன், ஆதிப்பிரான், பொலிந்துநின்றபிரான் என்றெல்லாம் போற்றப்படும் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என்பன தேவியின் திருநாமங்கள். இது குரு பரிகாரத் தலமாகும்.

இந்த ஒன்பது ஆலயங்களிலிருந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது “#நவகருடசேவை“ என்பது விசேஷமாகச் சொல்லப்படும். 

திருநாங்கூர் கருட சேவையைப் போல மிக விசேஷமானது நவகருட சேவையாகும். நவகருட சேவையை தரிசிக்க கிரகதோஷங்கள் அனைத்தும் விலகுதல் உறுதி என்பது அடியவர்கள் அனுபவித்தில் உணர்ந்த நம்பிக்கைகளில் ஒன்றாகும்.

ஓம் நமோ நாராயணாய 🌷🙏🏻

கேது தசை கெடு பலனை குறைக்க கணபதி மந்திரம்.

ஸ்ரீ கணநாயகாஷ்டகம்!

இந்த ஸ்தோத்ரத்தைப் படிப்பதால் ஸர்வ பாபங்களும் விலகும். 

கேது தசை கேது புக்தி காலத்தில் இதைப் படிப்பது நன்மை பயக்கும்.


*ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசா’லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

மௌஞ்ஜீ க்ருஷ்ணாஜின்தரம் நாக யஜ்ஞோப வீதினம்
பாலேந்து விலஸன் மௌலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்
சித்ர ரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம்
 
கஜவக்த்ரம் ஸூரச்’ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம்
பாசா’ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸூர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை, ஸதா
ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்
பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம்
ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம்

கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ ய: படேந் நர:
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி*

Friday, October 27, 2023

November prediction for india and world

21/10/2023
1) within 2-3 days the rain will start Southern districts wii receive heavy rain. Andhra Pradesh Karnataka will receive heavy rains and their speed of the rain will be more

2) the war between Palestine and Israel should stop within 6 days otherwise the problem will arise for the entire world and people of the entire world will suffer very much.

3) people in Palestine will suffer without food and clothing

4) there will be severe shortage for medicine

5) there is going to be water scarcity everywhere we should be very very careful in using the water

6) all the essential commodities prices will go high in all the countries

7) from next month all the prices of other goods also will go high

8) prices of gold will come down

9) in one particular country in one particular state capital in one particular place there will be BOMB 💣 blast

10) even after the warning from America the war will go on

11) one big ice mountain will breakdown and fall and due to this the sea level will increase

12) once again there is going to be a big earthquake in a Muslim country and there will be small tremors felt in New Delhi and Chennai and people will feel the same

13) one big earthquake is waiting in middle of the sea and if it happens there will be Tsunami in several countries

14) in one important temple there is going to be a big problems

15) one important countries president will be in a very big problems

16) one important actor will have a big problem

17) the sea level is rising steadily and due to this there will be very big problems and this will be announced by NASA

18) there is going to be a sudden tension in New Delhi

19) the stock markets will fall down suddenly before 5th of next month

20) America will create a new problem

21) there is going to be a problem for the American president

21/10/2023

1) இன்னும் மூன்று நாட்களில் மழை வரும்.தென் மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும்.ஆந்திரா கர்நாடக மாநிலங்களில் மழை மிகவும் அதிகமாக இருக்கும்.மழை வேகமாக பெய்யும்.

2) இன்னும் ஆறு நாட்களில் இஸ்ரேல் பாலஸ்தீன போர் நிற்காவிட்டால் உலகம் முழுவதும் பிரச்சனைகள் ஏற்படும்.

3) பாலஸ்தீனத்தில் உணவு உடை இல்லாமல் மக்கள் தவிப்பார்கள்.

4) மருந்து கிடைக்காமல் போய்விடும்

5) கண்டிப்பாக தண்ணீர் தட்டுபாடு வரும்.மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

6) உலகம் முழுவதும் எல்லாவிதமான அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் அதிகமாகும்.

7) அடுத்த மாதம் நிறைய பொருட்கள் விலைகள் அதிகமாகும்

8) தங்கம் வெள்ளி விலை குறையும்

9) ஒரு முக்கிய நாட்டின் தலைநகரத்தில் ஒரு முக்கியமான இடத்தில் குண்டு வெடிக்கும்.

10) அமெரிக்கா எச்சரிக்கை செய்தும் யாரும் கேட்காமல் போர் தீவிரம் அடையும்.

11) ஒரு பெரிய பனிமலை சரிந்து விழும்.இதனால் கடல் மட்டம் உயரும்.

12) மறுபடியும் ஒரு முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அதன் அதிர்ச்சியை புதுடெல்லி சென்னை ஆகிய இடங்களில் மக்கள் உணருவீர்கள்.

13)  நடுக்கடலில் ஒரு மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் சூழல் உள்ளது அது நடந்தால் பல நாடுகளில் சுனாமி வரும்.

14) ஒரு முக்கிய ஆலயத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும்.

15) ஒரு முக்கிய நாட்டின் ஜனாதிபதி ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.

16) ஒரு முக்கிய நடிகருக்கு பிரச்சனை ஒன்று ஏற்படும்

17) கடல் மட்டம் மிகவும் உயர்ந்து கொண்டு வருகிறது இதனால் பல பெரிய ஆபத்து உள்ளது.இதை பற்றி நாசா உலகுக்கு தெரிவிக்கும்.

18) புதுடெல்லியில் எதிர்பார்க்காத ஒரு பதஷ்டநிலை ஒன்று உருவாகும்.

19) அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை பங்குச்சந்தைகள் திடிரென்று மிகவும் வீழ்ச்சி அடையும்.

20) அமெரிக்கா புதியதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும்

21) அமெரிக்கா அதிபருக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்

Monday, October 23, 2023

அக்டோபர் மற்றும் நவம்பர் உலக மற்றும் உள்நாட்டு பலன்.

21/10/2023
1) within 2-3 days the rain will start Southern districts wii receive heavy rain. Andhra Pradesh Karnataka will receive heavy rains and their speed of the rain will be more

2) the war between Palestine and Israel should stop within 6 days otherwise the problem will arise for the entire world and people of the entire world will suffer very much.

3) people in Palestine will suffer without food and clothing

4) there will be severe shortage for medicine

5) there is going to be water scarcity everywhere we should be very very careful in using the water

6) all the essential commodities prices will go high in all the countries

7) from next month all the prices of other goods also will go high

8) prices of gold will come down

9) in one particular country in one particular state capital in one particular place there will be BOMB 💣 blast

10) even after the warning from America the war will go on

11) one big ice mountain will breakdown and fall and due to this the sea level will increase

12) once again there is going to be a big earthquake in a Muslim country and there will be small tremors felt in New Delhi and Chennai and people will feel the same

13) one big earthquake is waiting in middle of the sea and if it happens there will be Tsunami in several countries

14) in one important temple there is going to be a big problems

15) one important countries president will be in a very big problems

16) one important actor will have a big problem

17) the sea level is rising steadily and due to this there will be very big problems and this will be announced by NASA

18) there is going to be a sudden tension in New Delhi

19) the stock markets will fall down suddenly before 5th of next month

20) America will create a new problem

21) there is going to be a problem for the American president

21/10/2023

1) இன்னும் மூன்று நாட்களில் மழை வரும்.தென் மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும்.ஆந்திரா கர்நாடக மாநிலங்களில் மழை மிகவும் அதிகமாக இருக்கும்.மழை வேகமாக பெய்யும்.

2) இன்னும் ஆறு நாட்களில் இஸ்ரேல் பாலஸ்தீன போர் நிற்காவிட்டால் உலகம் முழுவதும் பிரச்சனைகள் ஏற்படும்.

3) பாலஸ்தீனத்தில் உணவு உடை இல்லாமல் மக்கள் தவிப்பார்கள்.

4) மருந்து கிடைக்காமல் போய்விடும்

5) கண்டிப்பாக தண்ணீர் தட்டுபாடு வரும்.மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

6) உலகம் முழுவதும் எல்லாவிதமான அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் அதிகமாகும்.

7) அடுத்த மாதம் நிறைய பொருட்கள் விலைகள் அதிகமாகும்

8) தங்கம் வெள்ளி விலை குறையும்

9) ஒரு முக்கிய நாட்டின் தலைநகரத்தில் ஒரு முக்கியமான இடத்தில் குண்டு வெடிக்கும்.

10) அமெரிக்கா எச்சரிக்கை செய்தும் யாரும் கேட்காமல் போர் தீவிரம் அடையும்.

11) ஒரு பெரிய பனிமலை சரிந்து விழும்.இதனால் கடல் மட்டம் உயரும்.

12) மறுபடியும் ஒரு முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அதன் அதிர்ச்சியை புதுடெல்லி சென்னை ஆகிய இடங்களில் மக்கள் உணருவீர்கள்.

13)  நடுக்கடலில் ஒரு மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் சூழல் உள்ளது அது நடந்தால் பல நாடுகளில் சுனாமி வரும்.

14) ஒரு முக்கிய ஆலயத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும்.

15) ஒரு முக்கிய நாட்டின் ஜனாதிபதி ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.

16) ஒரு முக்கிய நடிகருக்கு பிரச்சனை ஒன்று ஏற்படும்

17) கடல் மட்டம் மிகவும் உயர்ந்து கொண்டு வருகிறது இதனால் பல பெரிய ஆபத்து உள்ளது.இதை பற்றி நாசா உலகுக்கு தெரிவிக்கும்.

18) புதுடெல்லியில் எதிர்பார்க்காத ஒரு பதஷ்டநிலை ஒன்று உருவாகும்.

19) அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை பங்குச்சந்தைகள் திடிரென்று மிகவும் வீழ்ச்சி அடையும்.

20) அமெரிக்கா புதியதாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும்

21) அமெரிக்கா அதிபருக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்

Sunday, October 22, 2023

நவக்கிரகங்களால் நாம் பெரும் அதிக நன்மைகள்.

நவக்கிரகங்களினால்  நாம் அடையும் நன்மைகள் 

நமது வழிபாடு முறையில் சூரியன் முதல் ராகுவரையில் அமைந்த நவகோள்களை திருக்கோயில்களில் ஒன்பது முறை வலம் வந்து வழிபாடு செய்கிறோம் அல்லவா?  ஜாதக கட்டங்களில் வேறு வேறு இடங்களில் அமர்ந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைத்திடும் அல்லது நமது வாழ்வினை விதித்த விதி வழியே நடத்திச் செல்லும் இந்த நவகோள்கள் இயல்பாகவே பல விதத்திலும் நமக்கு நன்மைகளைச் செய்பவையேயாகும். ஒவ்வொரு கிரகமும் நமக்கு என்னென்ன நன்மைகளைச் செய்கிறது என்பதைக் காண்போம்.

சூரியன்: நினைத்த காரியத்தை செய்யும் ஆற்றல் தைரியம், உடலாரோக்கியம், ஆகியவைகளைத் தருகிறார். கண் வலி, இருதயவலி, மஞ்சள் காமாலை ஆகிய வியாதிகளில் இருந்து  நம்மை காக்கிறார். காலையில் குளித்து முடிந்ததும் சூரியனை வழிபடுவர்களுக்கெல்லாம் மேலே சொன்ன நன்மைகளைச் சூரிய பகவான் தருகிறார்.

சந்திரன்: நமக்கு ஏற்படும் அன்றாடப் பிரச்னைகளை நல்ல முறையில் ஒழுங்குபடுத்தி, செல்வச் சேர்க்கையினை சந்திர பகவான் தருகிறார்.

செவ்வாய்: எதிர்ப்புகளில், மறைமுக கவிழ்ப்பு வேளைகளில் இருந்து நம்மைக் காத்து, நமக்கு பூமி, வயல், வீடு, பசு பயிர் பச்சை லாபங்களை அங்காரக பகவான் தருகிறார். சுருக்கமாச் சொல்லப்போனால் செவ்வாய்  நமது வாழ்வின் செழிப்பிற்கு உதவுகிறார். 

புதன்: சிறந்த கல்வியாளர்களாக, கவிஞர்களாக தாம் செல்லுமிடமெல்லாம் தனது அறிவாற்றலை அமைதியான போக்கினால் வெளிப்படுத்துதல். அறிஞர்களின் மதிப்பை பெறுதல், அடிப்படை ஜோதிட அறிவினைப் பெறுதல் ஆகிய கல்வி - அறிவு நலன்களை அவரவர் விருப்பப்படி அடைந்து பிரகாசிக்க புத பகவான் உதவுகிறார். 

குரு: புத்திர பாக்கியம், மாங்கல்ய பலம் எனச் சொல்லப்படுகிற  தாலி பாக்கியம் தருவதுடன், வாழ்க்கைச் சிக்கல்களை எதுவானாலும் போக்கி நமக்கு  நல்லதோர் வாழ்க்கையினை குருபகவான் அமைத்துக் கொடுக்கிறார். இதனாலேயே நம்மில் அநேகர் தட்சிணாமூர்த்தி வழிபாட்டினைச் செய்கிறோம். குருபெயர்ச்சி பலன்களைத் தெரிந்து கொள்வதில் ஒவ்வொரு ஆண்டும் நாம் காட்டும் ஆர்வத்திலிருந்தே நமது வாழ்க்கை அமைப்பில் குருவுக்குரிய முக்கியத்துவம் தெரியவரும்.

சுக்கிரன்: சுகமான இல்வாழ்க்கையினையும், லட்சுமி கடாட்சத்தையும் புத்தாடை அணிகலன்களின் சேர்க்கையையும், செல்வ வளத்தினால் சமூகத்தில் அந்தஸ்தையும், ஆயுள் விருத்தியையும் சுக்கிர பகவான் தருகிறார். நமக்கு திடீர் தனப்பிரட்தியை தருவர் இவரே. அதனாலேயே வாழ்க்கை வசதிகள் ஒருவனுக்கு அதிகரித்துச் செல்வதைப் பார்க்கும் பொழுது, அவருக்கு சுக்கிர தெசை எனப் பாராட்டுகிறோம்.

சனி: வாழ்க்கையை அனுபவிக்க முக்கியமாகத் தேவைப்படுவது தீர்க்காயுள், பொதுவாக மனிதன் இருப்பதற்கு  உதவும் உடலாரோகியத்தை  சனிபகவான் தருகிறார். நீண்ட ஆயுளும், உடலாரோகியாமும் உடையவனே செல்வங்களை தனது சுயமுயற்சியால் அடைவதற்கு இயலும் இவ்விதத்தில் வாழ்விற்கான அடிப்படை சனிபகவான் வழங்குகிறார். இந்த அடிப்படைச் குறைந்தால் வாழ்க்கையில் பலவித இன்னல்களை அனுபவிப்பார்.

நீண்டகாலம் (2 1/2 ஆண்டுகள்)  ஒவ்வொரு ராசிவீட்டிலும் சஞ்சரித்து ஒருவரது வாழ்க்கையினை உயர்த்தக்கூடிய அல்லது தாழ்த்தக்கூடிய ஆற்றல் சனிபகவான் ஒருவருக்கே பட்டா பாதியுமாக உள்ளது.

ராகு: நோயற்ற வாழ்வையும், திடீர் அதிருஷ்டத்தையம், எதிர்பாராத சரிவுகளையும் தருபவர் ராகுபகவான். ராகுவின் அருள் பெற்றவர்களே விஷ பயமின்றியும், திரண்ட செல்வத்தையும், பூரண இல்வாழ்க்கை சுகத்தையும் அடைய முடியும் என பண்டைய ஜோதிட நூல்களில் சொல்கின்றன. ராகுவைப்போல் கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட சாஸ்திர  பழமொழிகளில் ஒன்றாகும். 

கேது: புத்தியால் சுக விருத்திக்கான ஞானத்தை  கேது பகவான் தருகிறார். நமக்கு ஏற்படக்கூடிய தோஷங்கள் பீடைகள் எனப்படுகிற துன்பங்களை நீக்கி உயர்ந்த அறிவாற்றல், வெற்றி, துணிவாகச் செயல்படும் திறமை ஆகியவைகளை கேதுபகவான் தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்கிறார்.

எனவே ஜாதக தோஷங்களை எளிதில் போக்கிக்கொள்ள  உதவும் வகையில் திருக்கோயில்களில் நவக்கிரக வழிபாட்டினை நமது முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எதிரியைக் கூட சமயமறிந்து பாராட்டினால் நன்மைகளைச் செய்வான் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நவகிரக வழிபாடு அமைந்துள்ளது எனக் கருதலாம்.

ஸ்ரீவாஞ்சியம் நாம் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஸ்தலம்

ஸ்ரீ வாஞ்சியம்

வாழ்வில் ஒரு முறையேனும்

சென்று தரிசிக்க வேண்டிய தலம்.
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவராக விளங்கும் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி. 
உலகிலேயே எம தர்ம ராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்டு வழிபடும் தலமாக சிறப்பு பெற்றது ஸ்ரீ வாஞ்சியம்.
காசிக்கு ஒப்பான சிறப்புடையதாக 

ஆறு தலங்கள் போற்றப்படுகிறது.

(திருவெண்காடு, திருவையாறு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடை மருதூர், ஸ்ரீவாஞ்சியம்). இந்த ஆறு தலங்களுள் அளப்பரிய மகிமை பொருந்திய தலமாகத் திகழ்வது திருவாரூர் மாவட்டம்  நன்னிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாஞ்சியம்.
பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக் கரையில்திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டு விட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும். தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி (வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம் ஸ்ரீ வாஞ்சியம் எனப்படுகிறது.
மேலும் இத்தலத்தில் சிவனை 

தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் அருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும் எமதர்ம ராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும். 
ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,என வேண்டினாள். அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.  அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. 
மரணபயம், மனச்சஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும்.
ஸ்ரீவாஞ்சியம் தலம் தேவார மூவராலும் மணிவாசகப் பெருமானாலும் பாடல் பெற்றுள்ள தலம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகவும் மேலும் பல சிறப்புக்களை பெற்ற தலமாகவும்  திகழ்கிறது ஸ்ரீவாஞ்சியம்.
மூல மூர்த்தி வாஞ்சிநாதர் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார். அம்பிகையின் திருநாமம் மங்களாம் பிகை. எமன் அருள் பெற்ற . தலமாதலால் இங்கு எமனே சுவாமிக்கும் அம்பிகைக்கும் வாகனத் தொண்டு புரிகிறார்.
ஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில் பாம்பு உடலாகவும் மனித முகமாகவும் ஓரே நிலையில் சஞ்சர்க்கின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம் காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம்.
இத்தலத்தின் பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக கோயில் அருகில் யாராவது இறந்து விட்டால், பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப் படும். ஆனால் இவ்வூரில் பூஜையை நிறுத்துவதில்லை. எமதர்மனே இங்கு க்ஷத்திர பாலகராக இருப்பதால் இவ்வாறு நடக்கிறது. மேலும் கோயில் எதிரிலேயே சுடுகாடு இருக்கிறது. பிணத்தை எரியூட்டியவுடன் அங்கிருந்த படியே சுவாமியை வணங்கி இறந்தவர் சிவனடி சேர வேண்டிக்கொள்கிறார்கள். ஒருவர் இறந்த பின், அவரது பிள்ளை களால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே செய்து, முக்தி கிடைக்க வழி தேடிக்கொள்ளலாம். இதற்கு “ஆத்ம தர்ப்பணம்’ எனப்பெயர். மேலும் இத்தலத்து தீர்த்தத்தை பருகினால் மரண அவஸ்தைப்படுகிற வர்களுக்கு சிரமம் நீங்கும் என்கிறார்கள். இத்தலத்தில் இறந்தாலும், வேறு இடத்தில் இறந்தவர் களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலும் சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் (சிவாயநம) கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.
பிற தலங்களைப் போல் ஸ்ரீவாஞ்சிய தரிசனப் பேறு எளிதில் கிடைக்கப் பெறுவதில்லை. தல யாத்திரை மேற்கொள்ள விழையும் அன்பர்களுக்கு இடர்களோ தடங்கல்களோ சோதனைகளாக வந்த வண்ணம் இருக்கும். அல்லது பல காரணங்களால் தாமதப் படவும் வாய்ப்புகள் உண்டு. ஆன்மாக்களின் கர்ம வினைப் பலன்கள் எளிதில் இத்தலத்தை அடைய விடுவதில்லை.
இருப்பினும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமியையே உபாயமாகப் பற்றி, உறுதியான பக்தியோடு முயற்சி மேற்கொள்ளும் அடியவர்களுக்குப் பெருமான் பெரும் கருணையோடு தரிசனம் தந்தருளி ஆட்கொள்கிறான்.
இத்திருத்தலத்திற்கு எப்படி செல்வது?
இத்திருத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் 

அமையப் பெற்றுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் திருக்கோயில், திருவாரூரில் இருந்து 18 km தொலைவிலும், மயிலாடுதுறை யில் இருந்து 36 km தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 28 km தொலைவிலும், நன்னிலத்தில் இருந்து 6 km தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வந்து, அங்கிருந்து திருவாரூர் சாலையில் அமைந்துள்ள சன்னாநல்லூரை அடைந்து, நன்னிலம் வழியாக ஸ்ரீவாஞ்சியத்தை சென்றடையலாம்.
 

ஓம் நமசிவாய.

எம தீபாவளி என்றால் என்ன? அதைப் பற்றி தெரிந்துகொள்ளுவோம்

தீபாவளி ...!!.. எம தீபாவளி...!!

தீபாவளிக்கு முந்தய நாள் எம தீபாவளி.

இந்த பண்டிகை நமக்கு மட்டும் அல்ல...எம தர்ம ராஜனுக்கும் மிகவும் பிடித்த பண்டிகை என இதிகாசங்கள் சொல்கிறது.

சூரியனின் புத்திரன் யம தர்ம ராஜன் 

சனியின் மூத்தவர் மட்டுமல்ல சனிக்கு அதிதேவதையும் கூட.

யமதர்ம ராஜனை வழிபடுபவர்களை சனி பாதிப்பதில்லை..

யமுனா தேவியின் சகோதரம் மற்றும்  ஞானத்தின் திறவு கோல் இவரே!

தர்மத்தை நிலை நாட்டி மோட்சத்துக்கு வழி காட்டுபவர்.

நம் கர்மவினைகள் தெரிந்தவரும் அதை அழிப்பவரும் ஆவார்.

எளிதில் நம்மை வீழ்த்துபவர், நம் நிழல் போல் நம்முடன் பயணம் செய்பவர்,

நம் முன்னோர்களுக்கு வழிகாட்டி..!!

 இதை மனதில் இருத்திக் கொண்டு மேலே படியுங்கள்...!

தமிழ் நாட்டில் தீபாவளி திருநாள் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.

ஆனால் வட மாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாள் பண்டிகையாகக்  கொண்டாடுகிறார்கள்.
 

திரயோதசி திருநாள்:   தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி திதி அன்று  நம்  வீட்டுக்கு மகா லட்சுமி வருவதாக ஐதீகம். 

அவளை, வரவேற்கும் விதமா வீடுகளில் தீபங்கள் ஏற்றி வைப்பது வழக்கம்.

 இந்தத் திருநாளை ஒரிசாவில், 'தன திரயோ தசி' என்ற பெயரில் ஆராதிக்கிறார்கள்.

 திரயோதசி தினத்தன்று  தங்களது வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள்.

 மஹாளய பட்ச நாட்களில்  பித்ரு லோகத்தில்   இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்லி நமக்கு தெரியும்.

அப்படி வருபவர்கள்  தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்கு மீண்டும் திரும்பி செல்வதாகவும் சாஸ்திரம் உரைக்கிறது.

அப்படி திரும்பி போகின்ற பித்ருக்களுக்கு  வழி தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்  தீபம் ஏற்ற சொல்லி இதிகாசங்கள் உரைக்கின்றன .

 இந்த தீபத்தை வீட்டின் உயரமான இடங்களில் ஏற்றுவது மிகவும் சிறப்பு. 

வீட்டில் வழக்கமாக விளக்கோடு சேர்த்து ஒரு அகல்தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றினாலே போதுமானது. 

 அதுவே, எம தீபம்.....!!..

 இதை உங்கள் வீட்டிலும் , உங்கள் தொழில் செய்யும் ஸ்தாபனங்களிலும் ஏற்றலாம்.

 இப்படி தீபம் ஏற்றுவதினால்  விபத்துகள், திடீர் மரணங்கள் சம்பவிக்காது. நோய் நொடி அண்டாது என்பது நமது இந்து சாஸ்திர நம்பிக்கை.

இரண்டாவது நாள் தீபாவளித் திருநாள்.

 இந்த நாளில், வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகள் ஏற்றி வைத்து, அதிகாலை நீராடி, புத்தாடைகள் அணிந்து தங்கள் குல வழக்கப்படி பூஜைகள் செய்வர். 

சிலருக்கு இது விரத நாட்களும் கூட...

 மூன்றாம் நாளில் விநாயகர், சரஸ்வதிதேவி மற்றும் மகாலட்சுமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதுடன், வணிகர்கள் புதுக்கணக்கும் எழுதுவர். 

சில இடங்களில், கேதார கௌரி விரதமும் லட்சுமி குபேர பூஜையும் செய்வர். 

நான்காம் நாளில் இந்திரன் பெய்வித்த பேய் மழையிலிருந்து கோகுலவாசிகளை, பகவான் கிருஷ்ணர் காப்பாற்றிய திருநாளாக கொண்டாடப்படுகிறது.

சிலர் இந்த தினத்தை, புதுவருடப் பிறப்பாகவும் கொண்டாடுவர். 

ஐந்தாம் நாளில் 'எம துவிதா'வாக வட மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள். 

 'பால்பிஜி' ன்னும், 'பையாதுஜ்'ன்னும் போற்றப்படுது இந்தத் திருநாள். 

மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், நேபாளத்திலும்  சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒரு முறை ஐப்பசி மாத வளர் பிறை துவிதியை திதி அன்றைக்கு  தன் சகோதரி 'எமி'யின் வீட்டுக்குச் சென்றார் எமதர்மன். 

அவருக்கு ஆரத்தி எடுத்து, மாலை சூட்டி, திலகமிட்டு அன்புடன் வரவேற்றாள் சகோதரி எமி.

 இருவரும், ஒருவருக்கொருவர் பரிசுகள், இனிப்புகள் வழங்கி தங்கள் பாசத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

 அப்பொழுது  எமதர்மன், ''இந்த தினத்தில், தன் சகோதரியின் கைகளால்  திலகம் இட்டுக் கொள்பவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு எமவாதனை கிடையாது’’ என்று  வரம் தந்தாராம்!

 அதனால்தான்,  எம துவிதியைத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துவது வழக்கம். 

 சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, 'எமனுக்குப் பிடித்த விழா' என புராணங்கள் சொல்கின்றது.

அதனால், தீபாவளியை மட்டுமல்லாமல்  அதோடு சேர்த்து  எம துவிதியை மற்றும் எம தீபம் ஏற்றும் திரயோதசி ஆகிய நாட்களிலும் தீபம் ஏத்தலாம்.

கீழே உள்ள யம தர்ம ராஜாவுக்கு உண்டான மந்திரத்தை இந்த ஐந்து நாட்களும் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு.

ஸ்ரீ யமாய நம:

யமாய தர்ம ராஜாய

ம்ருத்யவே சாந்த காயச

வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச

ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே

வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:

சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

1. பரணி, மகம், சதயம் நக்ஷத்திரங்களில் பிறந்தவவர்கள் யம தீபம் ஏற்றுவது அதிக சிறப்பு. 

2. யமனை அதிதேவதையாக கொண்ட சனைஸ்வர பகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள் மற்றும் சனி தசா நடப்பில் உள்ளவர்கள் / கோச்சார சனியால் பாதிப்புக்கு உண்டானவர்கள் யம தீபம் ஏற்றுவது நல்ல பலன்களை தர வல்லது.

3. ஆயுள் ஸ்தானத்தில் சனைஸ்வர பகவான் நீசம் அல்லது பலமிழந்தவர்கள் / ஜனன ஜாதகத்தில் சனி வக்கிரம் பெற்றவர்களும் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சுய ஜாதகத்தில் சூரியன் + சனி சேர்க்கை உள்ளவர்களுக்கு இந்த வழிபாது மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.

6. ஜனன கால ஜாதகத்தில் அஸ்வினி , மகம் , மூலம், திருவாதிரை , சுவாதி , சதயம் நட்சத்திரங்களில் சனி நிற்க பிறந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

இந்த ஆண்டு நவம்பர் 02ஆம் தேதி மாலை 5.41 மணி முதல் 6.58 மணிக்குள் எம தீபம் ஏற்றுவது மிகவும் உன்னதம். 

அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கியும் எம தீபம் ஏற்றலாம்.

எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும்.

முன்னோர் ஆசிகள் முழுமையாக கிடைக்கப் பெருவீர்கள்.

செய்தொழில் முன்னேற்றம் காணும்.

திருமணத் தடைகள் விலகும், 

சொத்துகள் சேரும். 

லஷ்மி கடாட்ஷம் பெருகும்.

வாழ்வில் அனைத்து  தடைகளும் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும்.

முக்கியமாக இந்த ஐந்து நாட்களும் அசைவம் தவிர்ப்பது சகல சௌபாக்கியங்களையும் உங்கள் இல்லம் கொண்டு வந்து சேர்க்கும்.

வாழ்த்துக்கள்...!!!

Wednesday, October 18, 2023

செவ்வாய்க்கிழமைகளில் இவைகளை கண்டிப்பாக செய்யக்கூடாது.

*செவ்வாய் கிழமைகளில் ஏன் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா?*
செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்தாலோ வீட்டில் உள்ள பாட்டி அல்லது அம்மா திட்டுவார்கள்.
இந்நாளில் செய்வது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். 
ஆனால் நம்மில் பலர் அதை நம்பாமல், அது வெறும் மூட நம்பிக்கை என்று என்று கூறி, அவர்களை மதிக்காமல் முடி வெட்டவோ அல்லது ஷேவிங் செய்து கொண்டோ வருகிறோம்.
இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. 
இந்நாளில் செலவு செய்யவோ,கடன் கொடுக்கவோ கூடாது .
செவ்வாய் கிழமை செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் இந்நாளில் லட்சுமி நம்மை தேடி வருவாள் என்பதோடு, இந்நாளில் நம்மிடம் உள்ள லட்சுமியை மற்றவருக்கு தானம் செய்தால், லட்சுமி சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர். 
இதனால் பலரும் இந்நாளில் பண வரவை எதிர்பார்ப்பதோடு, பணத்தை செலவிடமாட்டார்கள். வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள் .
எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ மற்றும் நகத்தை வெட்டவோ மாட்டார்களோ, அதேப் போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். 
இப்படி செய்வதால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.
 செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, ஷேவிங் செய்வது, நகம் வெட்டுவது போன்ற செயல்கள் துரதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்பிக்கை உள்ளது. 
இதற்கு   ஜோதிடகாரணத்தின் படி... இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது.
செவ்வாய் கிழமையில் செவ்வாய் குடிக்கொண்டிருக்கிறார். மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடும். 
செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகளாக மற்றொரு ஜோதிட குறிப்பு கூறுவதாவது, முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாககூடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்கள்
 இந்த ஜோதிட குறிப்புகள்  பற்றி  ஆராய்ச்சி செய்து நிரூபிக்கபட்டுள்ள விபரம் எனக்கு தெரியவில்லை. இருப்பினும் நம் முன்னோர்கள் இதை நம்பி பின்பற்றி வருவதால் நாமும் இதை பின்பற்றலாமே!
நண்பர்களுக்காக செவ்வாய் கிழமை சிறப்பை பற்றிய  கூடுதல் தகவல்:
பெயர், புகழ், செல்வம் மேம்பட  செவ்வாய் கிழமை செய்ய வேண்டிய புனித நூல்கள் கூறும்
எளிய ரகசிய பரிகாரம்
இந்து மதத்தில் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உகந்த நாளாக அர்பணிக்கப்படுகிறது. இந்நாளில் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு முன் சொல்வது நல்லது. மேலும் இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதை சாப்பிட்டு செல்லுங்கள். இதனால் அனைத்தும் காரியங்களும் நன்மையாகவே அமையும்.

விசித்திரங்கள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை காகபுஜண்டர்.

விந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை - காகபுசுண்டர்.
                                                                                                                                                                           ஞானத்தையும் பக்தியையும் உருவகக் கதையின் மூலம் சொன்ன காகபுசுண்டர், அற்புதமான ஏழு கேள்வி களுக்குத் தெளிவாக விளக்கங்களைச் சொல்லி நமக்கு வழிகாட்டுகிறார். அந்த ஏழு கேள்விகள்:
1. கிடைத்தற்கு அரிய பிறவி எது?
2. துன்பங்களில் கொடுமையான துன்பம் எது?
3. இன்பங்களில் மேலான இன்பம் எது?
4. சாதுக்கள் - தீயவர்களின் இயல்பு என்னென்ன?
5. மிகப் பெரிய புண்ணியம் என்று வேதங்கள் எதைச் சொல்கின்றன?
6. பாவங்களில் கொடிய பாவம் எது?
7. எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் மனநோய்கள் எவை?
_ இவற்றுக்கு காகபுசுண்டர் கூறிய பதில்களைப் பார்ப்போம்.
 
1. பிறவிகளில் உயர்ந்தது, கிடைத்தற்கு அரியது மனிதப் பிறவியே. இதற்கு ஈடாக எந்தப் பிறவியையும் சொல்ல முடியாது.
‘ஜந்தூனாம் நரஜன்மம் துர்லபம்’, ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’, ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று வேதங்களும் அனுபவப்பட்ட ஞானிகளும் மனிதப் பிறவியின் மேன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அசை பவை - அசையாதவை ஆகிய ஜீவராசிகள் எல்லாம், மானிடப் பிறவியையே வேண்டுகின்றன. சொர்க்கம்- நரகம், அதற்கும் மேலாக முக்தி எனப்படும் அனைத்துக்கும் மனிதப் பிறவியே படிக்கட்டாக உள்ளது. தெளிந்த நல்லறிவு, பக்தி, வைராக்கியம் ஆகியவற்றைத் தரக் கூடியது மனிதப் பிறவியே. இவ்வளவு உயர்ந்த மனிதப் பிறவி கிடைத்தும்; பொறி புலன்களால் அனுபவிக்கும் சுகங்களையே நாடி, ஓடித் திரியும் மனிதர்களை என்ன சொல் வது? நம்மிடம் இருக்கும் பொருள், எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அதன் அருமை தெரியாமல் அலட்சியப் படுத்துவோம். உதவாததை நோக்கி ஓடு வோம். அருமையான மனிதப் பிறவி கிடைத்தும் இப்படிச் செய்பவர்கள், கையில் இருக்கும் வைரக்கல்லை எறிந்துவிட்டு, தெருவில் கிடக்கும் உடைந்துபோன மண்பானைத் துண்டுகளைப் பொறுக்குபவனுக்கு இணையாவார்கள்.

2. மிகவும் கொடுமையான துன்பம் வறுமையே. அந்த வறுமையும் இளம் வயதில் ஒருவனை பாதித்தால், வேறு கொடுமையே வேண்டாம். அதனால்தான் ‘வறுமை கொடிது’ என்ற ஒளவையார், அதைத் தொடர்ந்து, ‘அதைவிடக் கொடுமை இளமையில் வறுமை’ என்றார். இளமை வேகம், துடிக்கும் ரத்தம் எதையெதையோ ஆசைப் படும். அந்த ஆசைகள் நியாயமானவையாக இருந்தா லும், வறுமையின் காரணமாக அவை நிறைவேறாது. தவறுகள் செய்யவும் தீயவற்றில் தீவிரமாகவும் தூண்டு வது வறுமை. கொடுமையான துன்பம் வறுமையே.

3.நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பதே மேலான இன்பம். ‘பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்’ என்பது முதுமொழி. தன் வேண்டுதலைச் சொல்லும் போது, ‘நல்லோர் இணக்கமும்’ என்கிறார் பட்டினத் தார். ‘சத்சங்கம்தான் உயர்ந்தது’ என்பது ஆதிசங்கரர் மொழி. நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பதைப் பற்றிப் பழந்தமிழ்ப் பாடல் ஒன்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது.
நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதும் நன்றே
அவரோடு இணங்கி இருப்பதும் நன்றே
எனவே, நல்லவர்களின் சேர்க்கைதான் என்றும் மேலான இன்பம்.

4. முதலில் சாதுக்களின் இயல்பைப் பார்ப்போம்.
மனம், சொல், செயல் ஆகியவற்றால் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதே சாதுக் களின் இயல்பு. இவர்கள் பிறருக்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொள்வார்கள். அடுத்தவர்களின் நல்வாழ்வுக்காகத் தங்களை இழக்கத் துணிவார்கள். மறந்தும் பிறன் கேடு சூழான் என் பதற்கு இணங்கப் பிறருக்குக் கெடுதல் நினைக்க மாட்டார்கள். இவர்களால் உலகம் வாழும்.
ஆனால், தீயவர்கள் இயல்பு இதற்கு எதிர்மாறானது. மனம், வாக்கு, செயல் ஆகியவற்றால் அடுத்தவர்களுக்குக் கெடுதல் செய்வதே இவர்களின் இயல்பு. இவர்கள் தங்கள் நலத்துக்காக மட்டுமல்ல; தங்களுக்கு பலன் இல்லை என்றாலும்கூட, அடுத்தவர்களுக்குத் துன்பம் செய்வார்கள். பிறரது துயரத் தில் மகிழ்வார்கள். இவர்களால் உல கம் உருப்படாது.

5. எல்லா வேதங்களும் ஒட்டு மொத்தமாகச் சொல்லும் மிகப் பெரிய புண்ணியம் அஹிம்சை.

6. அடுத்தவர்களைத் தூற்றுவதே கொடிய பாவமாகச் சொல்லப்படுகிறது. சிவனையும் குரு வையும் தூற்றுபவர்கள் ஆயிரம் பிறவிகள் தவளையாகப் பிறப்பார்கள். பிரம்ம ஞானிகளைத் தூற்றுபவர், பலவிதமான கொடிய துன்பங்களை அனுபவித்து, பிறகு காக்கையாகப் பிறப்பர். தற்பெருமை பேசி வேதங் களைத் தூற்றுபவர்கள் கொடுமையான நரகத்தில் விழுந்து உழல்வார்கள்.

நல்லவர்களை இகழ்வதில் மகிழ்ச்சி அடைப வர்கள், கோட்டானாகப் பிறப்பார்கள். அறியாமை, மயக்கம் என்னும் இருளில் மூழ்கிக் கிடக்கும் அவர்களுக்கு, ஞானம் என்ற சூரிய ஒளி கிடைக்கவே கிடைக்காது. அடுத்தவர்களைத் திட்டு வதே முழுநேரத் தொழில் என்று இருப்பவர்கள், வெளவால்களாக பிறப் பார்கள்.

7. மனநோய்கள் பல உண்டு. நான் என்னும் அகம்பாவம் - சொறி, சிரங்கு. அடுத்தவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவது - அரிப்பு. துன்பமும் மகிழ்ச்சியும் - கழுத்து நோய். பிறரது மகிழ்ச்சியைக் கண்டு வெதும்புவது - காசநோய். கொடுமை, வஞ்சனை - குஷ்ட ரோகங்கள். திமிர் பிடித்து அகங்காரமாகத் திரிவது - அதிகமான துயரத்தைத் தரும் மூட்டு வலி. டம்பம் (பந்தா), வஞ்சனை, திமிர், தற்பெருமை இவையெல்லாம் - நாக்கில் புழு வருவது என்னும் நோய். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூன்று ஆசைகளும் - சுலபத்தில் நீங்காத அழுத்தமான நோய்கள். பொறாமையும் விவேகம் இல்லாமையும் இரு விதமான ஜுரங்கள். இவற்றைத் தவிர துயரம், மகிழ்ச்சி, அன்பு, பயம், பிரிவைத் தாங் காத தன்மை முதலான மன வியாதி களும் உண்டு.

இந்த வியாதிகள் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், இவை தனக்குள் இருப்பது, சிலருக்குத்தான் தெரியும் (இன்ன வியாதி என்று தெரிந்தால்தானே அதற்கான மருந்தை எடுத்துக் கொள்ள முடியும்? வியாதி இருப்பதையே உணராத வர்களுக்கு, மருந்து பற்றி எப்படித் தெரியும்? பல்லா யிரக்கணக்கான மக்களின் நிலை இதுதான்.)

இவ்வாறு மனோ வியாதிகளைப் பற்றி விவரித்த காகபுசுண்டர், அவற்றுக்குரிய மருந்துகளையும் குறிப் பிடுகிறார்: கட்டுப்பாடான வாழ்க்கை, நற்செயல்கள், நன்னடத்தை, துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல், தெளிந்த நல்லறிவு, யாகம், ஜபம், தானம் முதலானவையே நம் மன வியாதிகளைத் தீர்க்கக் கூடிய மருந்துகள்.

நம் உள்ளத்தில் உள்ள தீராத வியாதிகள் தீர்வதற் காக காகபுசுண்டர் சொன்ன மருந்துகளை நாம் உட்கொண்டால், நம்முடன் சேர்ந்து நம் சந்ததியும் நல்வாழ்வு பெறும். காலம் பல கடந்த காகபுசுண்டர் இவ்வாறு மக்கள் குலம் மேன்மை அடைய, பலப்பல உபதேசங்கள் செய்திருக்கிறார்.

காகபுசுண்டரின் ஸித்தி: காகபுசுண்டர் திருக் கயிலை சென்று கயிலைநாதனை தரிசித்து, ‘‘ஸ்வாமி! நான் முக்தி பெற வேண்டுகிறேன்!’’ என்றார்.

‘‘காகபுசுண்டா! இதோ, எதிரில் இருக்கும் பொய் கையில் மூழ்கு! நீ எங்கு கரை ஏறுகிறாயோ அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்!’’ என்று சிவபெருமான் அருளினார்.

அதன்படி பொய்கையில் மூழ்கிய காகபுசுண்டர் சீர்காழி தாலூகாவில் உள்ள ஆச்சாள்புரம் என்னும் திருத் தலத்தில் எழுந்தார். இங்கு திரு ஞான சம்பந்தருக்குத் திருமணம் நடந்தபோது உருவான ஜோதியில், அங்கிருந்த அனைவரும் கலந்து முக்தி அடைந்தார்கள். அவ்வாறு முக்தி பெற்றவர்களில் காகபுசுண்டரும் ஒரு வர். இங்கு காகபுசுண்டர் வழிபட்ட சிவனும் அம்பாளும் யோகீஸ்வரர், யோகாம்பாள் என்னும் திருநாமங்களில் எழுந்தருளி இருக்கிறார்கள். ஜடாமுடியுடன் காக முகம் கொண்டு, பத்மாஸன திருக்கோலத்தில் காகபுசுண்டரும் எழுந்தருளி இருக்கிறார்.

‘காகபுசுண்டரின் மனைவி பகுளாதேவி. இந்த தம்பதி, கள்ளக்குறிச்சி வட்டம் தென் பொன்பரப்பு கிராமத்தில் இருக்கும் ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் கோயிலில் ஜீவசமாதி அடைந்தார்கள்.’ என்று மற்றொரு தகவலும் உண்டு.

இவற்றில், ஏதாவது ஓர் இடத்தில்தான் காகபுசுண்டர் ஸித்தி அடைந்திருக்க முடியும். அது எந்த இடம்? குழம்ப வேண்டியது இல்லை. பல இடங்களில் ஸித்தி அடைந்த ஸித்த புருஷர்களைப் பற்றிய தகவல்களும் உண்டு. ‘ஸித்த புருஷர்(கள்) எங்கு ஸித்தி அடைந்தார்?’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டாம். அவர்கள் ஸித்தி அடைந்ததும், ஸித்தி அடைய வேண்டியதும் நம் உள்ளங்களில்தான். காகபுசுண்டரும் நம் உள்ளத் தில் ஸித்தி அடைந்ததாகவே கொள்வோம்.

காரைக்காலில் இருந்து 7 கி.மீ. தூரத்திலிருக்கும் திருமலைராயன்பட்டினம் என்னும் ஊரில் காகபுசுண்டர்-பகுளாதேவிக்கு ஓர் அற்புதமான ஆலயம் அமைந் துள்ளது. இதுவே அருள்மிகு பகுளாதேவி உடனுறை காகபுசுண்டருக்கு முதன் முதலில் தோன்றிய ஆலயம். அதுவும் நமது தென்னாட்டிலேயே அமைந்திருப்பது நமது புண்ணியமே ஆகும்.

மேற்கண்ட இடங்களில் காக புசுண்டரின் அவதாரத் திருநாளான பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று விமரிசையான வழிபாடுகள் நடை பெறுகின்றன. 

இந்த செடியை வீட்டில் இருந்தால் கெட்ட சக்தி நெருங்கவே நெருங்காது.

*🙏💱உங்க வீட்டு முன்னாடி…. கட்டாயம் மருதாணி செடியை வையுங்க… துஷ்ட சக்தி நெருங்கவே நெருங்காது…!!!❤️💚*

நம் வீட்டிற்கு முன்பாக மருதாணி செடியை வைத்தால் அது வாஸ்து தோஷத்தை போக்கிடும் என சாஸ்திரம் கூறுகிறது. அது பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

நம்முடைய வீட்டில் மருதாணி செடி வைப்பது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும். முதலில் எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி இருந்தாலும் அந்த வீட்டில் கட்டாயமாக துஷ்ட சக்தி நெருங்கவே நெருங்காது. அதுமட்டுமல்ல பூச்சிகள் நெருங்காது. இதற்கு காரணம் மருதாணி செடியில் இருந்து வரும் வாசம் தான். உங்கள் வீட்டில் எந்த ஒரு பில்லி, சூனியம் போன்ற கெட்ட சக்திகள் நெருங்காமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் வீட்டில் மருதாணி செடி வையுங்கள். இந்த மருதாணியில் உள்ள விதைகளை எடுத்து நன்றாக வெயிலில் காயவைத்து ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை சாம்பிராணி போடும் போது அதில் இதனையும் சேர்த்து போட்டு வீட்டில் தீபம் காட்டினால் கண்ணுக்கு தெரியாத எந்த கெட்ட சக்தியாக இருந்தாலும் அது நீங்கிவிடும். தினமுமே இந்த மருதாணி காய்களை பயன்படுத்துவதால் எந்த தவறும் இல்லை. ஏனெனில் தாந்திரீக வித்தைகளில் இந்த மருதாணி விதைகளை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த தோஷத்தை நீக்கக் கூடிய சக்தி இந்த மருதாணி செடிக்கு உள்ளது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் சிலர் அந்த வீட்டின் வாஸ்து ஒத்துவராமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால், அந்த பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

Tuesday, October 17, 2023

பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கி வாழ்க்கையில் வளம் சேர்க்கலாம்.


பட்டீஸ்வரம் 
ஸ்ரீ துர்க்கையை
 வணங்கி
வாழ்வில் வளம் சேர்க்க
வேண்டிய தினம்
பதினெண் சித்தர்கள்
ஸ்ரீ லோபமுத்திரை ஸ்ரீ அகத்தியர் ஆசி
சகலமும் நலம்.
இனிய காலை வணக்கம்.
இன்று
காணிப்பாக்கம் கணபதியை
வணங்கிதிருவருள் 
பெரும் நாள்
இன்றுஅனைவரின்
இல்லத்தில்
நிம்மதியும்  மேன்மையும்
மேலும் வளர
ஸ்ரீ லோபாமுத்திரை அகத்தியர் ஆசீரவாதம்.
இன்றைய  தினத்தை 
ஸ்ரீ லோபாமுத்திரை அகஸ்த்தியர் பூஜித்த
அருள்மிகு திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோயில்
திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில், திருப்புனவாசல் கிராமத்தில் அமைந்துள்ளது இத்தலத்தில் வேதங்கள் வழிபட்டன என்பது தொன்நம்பிக்கை. கோயிலினுள் பதினான்கு சிவலிங்கங்கள் உள்ளன.
அப்பன் விருத்தபுரீசுவரர்
அம்மை கச்சனிமுலையம்மையை
பூஜித்து 
மகத்தான வாழ்வு பெரும் தினம்.
ஸ்ரீ லோபாமுத்திரையுடன் அகஸ்த்தியர் பூஜித்த 
அகத்திய முனீஸ்வரரை
பூஜித்து சகலருக்கும் சங்கடமில்லா வாழ்வு
 கிடைக்கவேண்டிவரம் பெற்ற மிகவும் சிறப்பு வாய்ந்த திருத்தலம்
விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்)
உற்சவர்:பழம்பதிநாதர்
தாயார்:பெரியநாயகி
பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் சிறை பட்ட பிரம்மா சிவனால் விடுவிக்கப்பட்டார்.தவறு செய்த பிரம்மா மீண்டும் படைக்கும் தொழிலைப் பெற முடிவு செய்து இத்தலத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி,சிவலிங்கத்தின் நான்கு பக்கமும் சிவமுகத்தை உருவாக்கி,சிவலிங்க அபிசேகத்திற்கு தீர்த்தம் ஒன்றை உருவாக்கி வழிபட்டார் என்பது நம்பிக்கை.
முத்தும், பவளமும் கொட்டிக் கிடக்கும் பாண்டிய நாட்டின் கடற்கரை அருகே அமைந்து, அதிஉன்னதத் தலமாக போற்றப்படுகின்றது திருப்புனவாயில். பாண்டிய நாட்டுத் திருத்தலங்களில் இரண்டாவது தலமாகப் புகழ் பரப்பும் இப்பதி, தேவாரத் தல வரிசையில் ஏழாவது இடத்தினை வகிக்கின்றது! தற்போது திருப்புனவாசல் என்று அழைக்கப்படுகின்றது.  மிகப்பழமை வாய்ந்த இத்தலத்தில் அனைத்திற்கும் மூல காரணமான சதாசிவ மூர்த்தியானவர் மகாலிங்கமாய் எழுந்து, பிரம்மா - விஷ்ணு - ருத்ரன் ஆகியோரைப் படைத்து, உடன் அவர்களுக்குண்டான தேவிகளையும் படைத்து, ஐந்தொழில்களைப் புரியுமாறு அவர்களுக்கு ஆணையிட்டு, அண்ட சராசரங்களின் சிருஷ்டி முழுவதையும் தன் கட்டளையின் கீழ் கொண்டு வந்து மீண்டும் இந்த மகாலிங்கத்துள் புகுந்து மறைந்தார்! 

விருத்த (பழம்) பதி, விருத்தபுரி, விருத்த காசி, இந்திரபுரம், மகபதிபுரம், வச்சிரவனம், வனமுகம், புனவை, தட்சிண சிதம்பரம், கைவல்ய ஞானபுரம், நித்யானந்த நகர், புண்ணியநகர் போன்ற எண்ணற்ற பெயர்கள் கொண்ட அற்புதத் திருத்தலமிது.  இந்திர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சந்திர தீர்த்தம், வருண(கடல்) தீர்த்தம், கல்யாண தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், பாம்பாறு ஆகிய பத்து தீர்த்தங்களைக் கொண்டது இந்த பழம்பதி! 
 பாண்டிய மன்னர்களின் கொடைகளையும், நிவந்தங்களையும் பெற்ற இக்கோயில் எண்ணற்ற கல்வெட்டுகளை கொண்டுள்ளது. 
இத்தலத்தல் திருமால், பிரமன், இந்திரன், சூரியசந்திரர், எமன், ஐராவதம், வசிட்டர் முதலிய முனிவர்கள், அகத்தியர், சௌந்திரபாண்டியன் முதலியோர் வழிபட்டுப் பேறடைந்துள்ளனர். சக்தி வாய்ந்த குடவறைக் காளியை யட்டி இப்பகுதியில் பெரும்பாலோர்க்கு காளியப்பன், காளியம்மால் எனும் பெயர்கள் வழங்கப்படுகின்றன
கல்வெட்டில் இத்தல ஈசர் ‘‘திருப்புனவாயிலுடைய நாயனார்” என்றும், திருப்புனவாசலுடைய நாயனார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் இத்தலத்தின் மீது ஆளுக்கொரு பதிகம் பாடிப் போற்றியுள்ளனர்! ராமலிங்கரும் தனது திருவருட்பாவில் இப்பதியினைப் போற்றுகின்றார். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த சுசீலன் என்ற சிவபக்தன் ஒரு சமயம் தனது மனைவியோடு இப்பதிக்கு வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, பழம்பதிநாதரை வணங்கி, சில தினங்கள் தங்கினான்! அப்போது பாம்பு கடித்து இருவரும் இறந்தனர்! 

யம தூதர்கள் அங்கே வந்தபோது நந்தியம் பெருமான் அவர்களுடன் போரிட்டு வெற்றிபெற்று, அவர்களை சிவனார்முன் நிறுத்த, அவர்களுக்கு மோட்சம் அளித்தார் பரமன். யமதூதர்கள் யமனிடம் சென்று நடந்ததை தெரிவிக்க, பிழை செய்தோம் என யமன் தன் தந்தை சூரியனிடம் சென்று விமோசனம் கேட்க, விருத்தபுரி அடைந்து, வழிபடுமாறு கூறினார். அதன்படி யமன் இங்கு வந்து தீர்த்தங்களில் நீராடி, ஈசனை பூஜிக்க, பரமேஸ்வரன் ரிஷபாரூடராய் காட்சி தந்து, ‘‘இத்தலத்திலுள்ளோர் உயிர் உடலைவிட்டு நீங்கும்போது, பத்து நாழிகைக்கு நீ அவ்வுயிரை அணுகக் கூடாது!” என இறைவன் ஆணையிட்டார். 

அதுபடியே நடப்பேன் எனப் பணிந்து யமலோகம் அடைந்தான் யமதர்மன். யமனைத் தொடர்ந்து, சூரியனும் இந்தத் தலம் அடைந்து, தீர்த்தம் உண்டாக்கி அதில் மூழ்கி, மகாதேவனை பூஜித்து, தான் உருவாக்கிய தீர்த்தத்தில் நீராடுவோர், இகபர சௌபாக்யம் பெற வேண்டும் என வேண்டிப் பெற்றான். தென்கோடியை சமன் செய்ய வந்த அகத்தியர் கிழக்கு கடற்கரையோரம் தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி, லிங்கம் பிடித்து, ஈசனை பூஜித்து, திருமணக் காட்சியைக் காட்டியருள வேண்டினார். அதன்படியே பழம்பதிநாதர் அங்கே திருக்கல்யாண காட்சியை அகத்தியருக்குக் காட்டியருளினார். 

இதனால் அவ்விடம் திருக்கல்யாணபுரமென்றும், தீர்த்தம் கல்யாண தீர்த்தமென்றும் ஆயின. பின், அகத்தியர் பழம்பதி அடைந்து, சர்வேஸ்வரனின் திருநடனக் காட்சியை வேண்டினார். பெருமானும் உகந்து, நடனம் புரிந்தருளினார். இதனால் இவ்விடம் ‘‘சிவஞானசபை’’ என்று போற்றப் பெற்றது.  கிழக்கு முகமாக திகழும் 
ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இதன் உயரம் 65 அடி ஆகும். இங்கே வல்லப கணபதியும், தண்டபாணி ஸ்வாமியும் சிறந்து விளங்குகின்றனர். உள்ளே, நேராக கொடிமரம், பலிபீடம், நந்தியம்பெருமான். 
அடுத்ததாக சபா மண்டபம், மாக மண்டபம், இடைமண்டபம், கருவறை என நீண்ட கருங்கல் மண்டப வரிசை ஒரே பெரிய பிராகாரத்தைக் கொண்டுள்ளது. மகா 
மண்டபத்தின் தென் மூலையில் சோமாஸ்கந்தர் வீற்றிருக்கும் அறை. வடப்புறம் தென் முகமாக வீற்றருளும் நடராஜர்-சிவகாமி. உடன் ஏனைய உற்சவர் சிலா விக்ரகங்களும் உள்ளன. அதனெதிரே நால்வரும் உடன் சேக்கிழாரும் கற்சிற்பமாக உள்ளனர். மகாமண்டபத்தின் வலப்புறம் சிறுவாயில் உள்ளது. அடுத்துள்ள இடை மண்டபம் விசாலமானது. இடை மண்டபத்தில் நுழையும்போதே ஈசனின் பிரமாண்டத் திருமேனி நம்மை பிரமிக்க வைக்கிறது.

அளவில் பெரியதாகவும், அழகில் அரியதாகவும் அருள்புரியும் வள்ளலைக் கண்டு உள்ளம் குளிர்கிறோம். 33 அடி ஆவுடையர் மீது 9 அடி உயரமும். 8 1/2 அடி சுற்றும் கொண்ட சுயம்பு பாண லிங்கத்தின் அருட்காட்சி  பரவசமூட்டுகின்றது! பழம்பதிநாதர், விருத்தபுரீஸ்வரர், மகாலிங்கேஸ்வரர் என்றெல்லாம் அழைக்கப்படும் இவருக்கு அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறங்களிலும் உள்ள மரப்படிகள் மீதேற வேண்டும். தேவாதி தேவர்கள் பாபவிமோசனமும், அரிய வரங்களையும் பெற்றது, இந்த நாதனை பூசனைப் புரிந்ததாலேயே எனும்போது ஆனந்தம் பெருகுகின்றது.

அதியற்புதமான சிவ தரிசனம் முடித்து, வலம் வருகையில், தென் கிழக்கில் மதிலொட்டி மடப்பள்ளியும், அருகே தல விருட்சமான புன்னை மரமும் அமைந்துள்ளன. தென்புறமாக கொட்டகையின் கீழ் கபில புத்திரர்கள் ஒன்பது பேருடன் ஆதிசைவ சிவனடியார்கள் இருவரும் வீற்றுள்ளனர். அருகே சதுர்முக லிங்கமும், பஞ்ச கணபதிகளும் உள்ளனர். மேலே மகிழமரம் நிழலோடு, நறுமணத்தையும் பரப்புகிறது. பின்னர் கருவறையை ஒட்டி, கிழக்கு முகமாக சந்நதி கொண்டு எழுந்தருளுகின்றார் ஆகண்டல் கணபதி! இந்திரன் வணங்கிய இந்த விக்னேஸ்வரரை வலமாக வந்து, கோஷ்ட மாடங்களை கண்ணுறுகின்றோம்! 

தென் கோஷ்ட மூர்த்தியான தட்சிணாமூர்த்தி வித்தியாச கோலத்தில் அமர்ந்துள்ளார். வலது மேல் கரத்தில் அட்ச மாலையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, கீழ் வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் தொடை மீது ஊன்றியும் வீற்றுள்ளார். அடுத்து, மேற்கு பிராகாரத்தில் குருந்த மரத்தடியில் 
பெரியாண்டவர் சந்நதி. இவரை குலதெய்வமாகக் கொண்டோர் எண்ணற்றவர்கள். திங்கட்கிழமைகளில் மட்டுமே இவருக்கு பூஜையும், நிவேதனமும். பின்னர் கந்தன் சந்நதியும், நான்கு லிங்கமும் ஒரு அம்பாளும் கொண்ட கொட்டகையும் அமையப் பெற்றுள்ளது! 

அடுத்ததாக அம்பாள் சந்நதி. இந்தச் சந்நதிக்கு முன்னால் வாயில் உண்டு. அதன் கதவுகள் குடைவரைக் காளியின் பொருட்டு, எப்போதும் மூடியே இருக்கும். நந்தி இங்கு வாகனமாய் உள்ளது. வெளிப்புற மண்டபம் பல தூண்களை கொண்டுள்ளது! கருவறையுள் கருணாகடாட்சியாய் அருட்கருணைப் புரிகின்றாள், ஸ்ரீ பரங்கருணை நாயகி! புன்னகை சிந்தியபடி பொலிவுறத் திகழும் இந்த அன்னையை பெரியநாயகி என்றும், பிரஹன்நாயகி என்றும் அழைப்பார்கள். ‘‘கச்சனிமுலையம்மை’’ என கல்வெட்டில் இவளது திருநாமம் பொறிக்கப்பட்டுள்ளது. 

அம்பாளது எழில் தரிசனம் முடித்து, முகப்பு வாயிலை அடைகிறோம். அங்கே ஸ்ரீகுடைவரை காளி திரிசூல வடிவில் தரிசனமளிக்கின்றாள்! வாயிலின் உள்ளே தென்புறமுள்ள திண்ணை மீது கருணாகடாக்ஷிக்கின்றாள்! இவளது முழு தரிசனத்தை ஏதிரே வைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் பிம்பமாக நாம் தரிசித்து இன்புறலாம்! பலரது கோரிக்கைகளை நிறைவேற்றிடும் இந்த அன்னை மிகுந்த வரப்பிரசாதியாவாள். தான் வைத்த கோரிக்கைகள் நிறைவேறியதும் திரிசூலம் நட்டு காணிக்கை செலுத்துகின்றனர், பக்தர்கள். 

கொன்றை மற்றும் ஊமத்தம் மலர்களால் இத்தல பெருமானைப் பூஜித்து பெரும் பலன்களைப் பெறலாம் என்பது திருஞானசமபந்தர் திருவாக்காகும்!
விருத்தம் என்றால் பழமை என்று பொருள், மேலும் இந்த ஈசன் பழம்பதிநாதர்என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். இரண்டாம் சுந்தரபாண்டியன் பாண்டிய நாட்டுக் கட்டிடக் கலையையும், சோழநாட்டுக் கட்டிடக் கலையையும் இணைத்து இராசகோபுரமும், விமானமும் மிக உயரமாகக் கட்டப்பட்டது. கருவறையில் (தஞ்சை பிரகதீசுவரர் சிவலிங்கம் பெரியது, இதை விட கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவலிங்கம் உயரத்தில் மிகவும் பெரியது)உள்ள சிவலிங்கம் சுற்றளவில் மிகப்பெரியது.(சுற்றளவு 82.5அடி)

தல விருட்சம்தொகு
இந்த கோவிலில் நான்கு தல விருட்சங்கள் உள்ளது,ஒவ்வொரு யுகத்திற்கும் ஒன்று என்ற அடிப்படையில்,கிருதா யுகத்தில் வஜ்ரவனம் என்ற பெயரில் சதுரக்கள்ளியும்,திரேதாயுகத்தில் பிரமம்புரம் என்ற பெயரில் குருந்தமரமும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயரில் மகிழமரமும்,கலியுகத்தில் பழம்பதி என்ற பெயரில் புன்னை மரமும் தல விருட்சமாக இருந்ததால், இந்த நான்கும் நான்கு வேதங்களாக பாவித்து வணங்கப்படுகிறது. 

மூலவர் சிவலிங்கத் திருமேனி அழகானது. மிகப் பெரியது. தஞ்சை பிரஹதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள இலிங்க மூர்த்தி இதுவாகும். அதனையட்டி 'மூன்றுமுழமும் ஒருசுற்று முப்பது முழமும் ஒருசுற்று' என்ற பழமொழி வழங்குகிறது. (சுவாமிக்கு 3 முழம், ஆவுடையாருக்கு 30 முழம் ஆடைவேண்டும்) . உயரம் 9 அடி. சுற்றளவு 81/2 அடி. ஆவுடையார் சுற்றளவு 33 அடி. கோமுகி 31/2 அடி நீளம். நந்தியும் பெரியதே. மகாமண்டபத்தில் வடாபல் நடராஜர் உற்சவ மூர்த்தியும், தென்பால் சோமாஸ்கந்தர், நால்வர் சேக்கிழார் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனி கோயில்கள். ஆலயத்தில் ஐந்து விநாயகர்கள், சதுர்முகலிங்கம், கபிலபுத்திரர் ஒன்பதின்மர் ஆகியோரின் உருவங்கள் உள. இந்திரன் வழிபட்ட விநாயகர் "ஆகண்டல விநாயகர்" தனியே உள்ளார். (ஆகண்டலன் = இந்திரன்) கோஷ்ட மூர்த்தமாக நிருத்த கணபதியும் தட்சிணாமூர்த்தியும் உளர்.

மேற்கு பிராகாரத்தில் குருந்த மரமுள்ளது. மதிலையட்டி அகத்தியலிங்கம் (முனீசுவரர்) உள்ளது. இவருக்குத் திங்கட்கிழமைகளில் மட்டமே பூஜை. கோஷ்ட மூர்த்தமாகப் பொதுவாக ஆலயங்களில் (கர்ப்பக்கிருக்ப் பின்சுவரில்) இடம் பெறும் 
இக்கோவிலுக்கு தெற்கே பாம்பாறும்,கோவிலுக்கு எதிரே மூன்று கிலோமீட்டர் தொலைவில் கடலும் உள்ளது.கடல் மற்றும் ஆற்றுப்புனலில் (வாசலில்) ஊர் அமைந்ததால் திருப்புனவாசல் எனப் பெயர் பெற்றதுஇந்திரன் வழிபட்ட விநாயகர் "ஆகண்டல விநாயகர்" தனியே உள்ளார்.

மொட்டைக்கோபுர வாயிலில் குடவறையில் காளி எழுந்தருளியிருப்பதால், அத்தெய்வம் மிக உக்கரத்தில் இருப்பதன்பொருட்டு இக்கதவு எப்போதும் மூடப்பட்டுள்ளது.

இத்தல புராணம் திருவாரூர் தியாகராஜ கவிராயரால் பாடப்பட்டுள்ளது.
பாண்டிய மன்னர்களின் காலத்திய கட்வெட்டுக்கள் ஐந்து இத்தலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்கல் இறைவனை "திருப்புனவாசலுடைய நாயனார்" என்று குறிப்பிடுகின்றன.

Tiruppunavayil temple vimAnam
சிறப்புகள்
விருத்தபதி, விருத்தகாசி, இந்திரபுரம், பிரமபுரம், வச்சிரவனம், கைவல்யஞானபுரம், தட்சிணசிதம்பரம் என்பன வேறு பெயர்கள்.

தஞ்சை பிரகதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள இலிங்க மூர்த்தி இதுவாகும். உயரம் 9 அடி, சுற்றளவு 8 1/2 அடி, ஆவுடையார் சுற்றளவு 33 அடி, கோமுகி 3 1/2 அடி நீளம்.

இதனையொட்டி, 'மூன்று முழமும் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற பழமொழி வழங்குகிறது.

மகாமண்டபத்தில் தென்பால் சோமாஸ்கந்தர், நால்வர், சேக்கிழார் ஆகியோர் காட்சி தருகின்றார்கள்.
ஐந்து விநாயகர், சதுர்முகலிங்கம், கபிலபுத்திரர், ஒன்பதின்மர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.அறந்தாங்கி ஆவுடையார் கோயில், திருவாடானை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்கு வரலாம். விருத்தபதி, விருத்தகாசி, இந்திரபுரம், பிரமபுரம், வச்சிரவனம், கைவல்யஞானபுரம், தட்சிணசிதம்பரம் என்பன வேறு பெயர்கள். 

கோஷ்ட மூர்த்தமாகப் பொதுவாக ஆலயங்களில் இடம் பெறும் இலிங்கோற்பவருக்குப் பதிலாக இங்கு திருமாலும் அநுமனும் உள்ளனர்.
மிகப்பெரிய கோயில். ஊர்நடுவில் கிழக்கு நோக்கியுள்ளது. நீண்ட மதில்கள் கிழக்கிலும் மேற்கிலும் வாயில்கள். கிழக்கில் இருவாயில்கள். சுவாமி அம்பாள் சந்நிதிகளுக்கு நேராகவுள்ளன. சுவாமி கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. அம்பாள் எதிரில் உள்ள மொட்டைக் கோபுர வாயிலில் குடவறையில் காளி எழுந்தருளியிருப்பதால், அத்தெய்வம் மிகச்சக்தி வாய்ந்தாகையால் இக்கதவு எப்போதும் மூடப்பட்டிருக்கிறது.

கோயிலுக்கு வெளியில் உள்ள தீர்த்தம் - பிரமதீர்த்தம். அழகான படிகளை நாற்புறமும் பெற்றுள்ளது. உள்ளே முதலாம், ஏழாம் திருநாள் மண்டபங்கள் உள்ளன.கோபுரத்திற்கு வெளியில் தென்பால் வல்லப கணேசர் சந்நிதியும், வடபால் தண்டபாணி சந்நிதியும் இருக்கின்றன. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் சூரிய, பைரவர் சந்நிதிகளும், இடப்பால் சந்திரன் சந்நிதியும் மேற்கு நோக்கியுள்ளன. சபாமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபங்கள் உள்ளன
அறந்தாங்கி ஆவுடையார் கோயில், திருவாடானை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்கு வரலாம். விருத்தபதி, விருத்தகாசி, இந்திரபுரம், பிரமபுரம், வச்சிரவனம், கைவல்யஞானபுரம், தட்சிணசிதம்பரம் என்பன வேறு பெயர்கள். 
 புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டத்தில் உள்ளது திருப்புனவாசல்! அறந்தாங்கி மற்றும் ஆவுடையார் கோவிலில் இருந்து இங்குவர பேருந்துகள் உள்ளன. கோயில் தொலைபேசி எண்கள்: 04371-239212 / 099652 11768.

ஸ்ரீ லோபாமுத்திரை ஸ்ரீ அகத்தியர் ஆசி
ஆனந்தமான தினம்.
அகத்தியர் அடி பணி.
அனைத்திலும் ஜெயம் இனி.
அகத்தியரை துதி
அவர் மாற்றுவார் உன் விதி.

Monday, October 16, 2023

தெய்வீக ரகசியங்களை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

#தெய்வீக #ரகசியங்கள்!

1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் . குறிப்பாக துளசி அல்லது தொட்டா சிணுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்

2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .

3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்யபணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .

4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .

5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரிசெய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .

6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .
7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் , மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .

8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை , பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .

9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது , இறந்த நாகத்தின் உடலைகண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து காக்கும்.
அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் ( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )

10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவைலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி  தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ..

Saturday, October 14, 2023

அக்டோபர் மற்றும் நவம்பர் உள் நாடு மற்றும் வெளி நாடு கணிப்புகள்.

11/10/2024

1) there is going to be very severe pollution problems everywhere 

2) there is going to be two three viruses simultaneously attacking the people

3) there is going to be very severe water shortage 

4) hereafterwards the heat emitted from the Sun will be very very severe

5) here afterwards there will be sudden rains

6) two foreign countries will witness very severe floods and heavy damages

7) ice mountains in Northern hemisphere and Southern hemisphere will meltdown

8) there will be severe economic inflation

9) the price of petrol and diesel will go very very high

10) the price of all the essential commodities will go very very high

11) starting from the month of November the people will start revolting and protesting

12) in India in one particular state they will impose 144

13) people will indulge in arson and looting

14) one important actor will get into problem

15) one important actor will die

16) the education department will have a new facelift

17) one new kind of cell phone will be introduced and it will be very very useful for the mankind

18) there is going to be new invention in the field of medicine

19) here afterwards there is going to be water shortage everywhere

20) the entire North India will witness several protest and demonstration

21) military will be called to control the public

22) people should be very very careful because all the essential commodities prices will go very very high

23) people should stop eating non vegetarian food

24) the prices of gold will go up and down

25) starting from 25th of this Month to 5th of next month share markets will crash down

26) starting from 15th of this month there is going to be very heavy rains

27) next month three planets are coming in same line at that time there will be very severe floods and several cities and villages will be marooned

28) hereafterwards the natural calamities will be very extreme

29) praying to lord brihaspati and lord Shiva will bring lot of good things

30) parents are advised to take special care in the food habits of children

31) outside food should not be given for children

32) outside food will bring several deadly diseases

33) the health department and also NASA will announce about the packaged food

34) many people will be hospitalised due to having outside food

35) the president of USA will have very big problem and there will be several confusions in the presidential election

36) the present cricket world cup 2 or 3 players will have some problem and also there is problem in the playing ground

37) there is going to be some big disaster happening on 23rd of December

38) the present war between Israel and Palestine will intensify

39) one more country will enter the war

40) because of this war there is going to be some problem for America

41) one City will look like a black desert

42) one whole country will be destroyed completely

43) this war will continue for some more months

44) there is going to be several protest demonstrations arson looting in entire world

45) one small Muslim country will deploy nuclear 💣 BOMB

46) one entire airport will catch fire and be destroyed

47) both the countries will see lot of damages

48) five countries will come together

49) several people will die

50) in India there is going to be problem in the border due to China

51) in another Muslim country there will be a very big earthquake

52) in North India also there will be an earthquake

53) North Korea will create one big problem

54) this year we are going to see one country using a missile attack

55) all the world leaders will have several problems and they will be very much disturbed and they will not be in a position to take any decision

56) countrys like India Pakistan and Sri Lanka will be little bit better than other countries

57) in the middle of the sea one American ship will catch fire

58) in a middle of two countries there is going to be a very big forest fire 🔥

59) in a particular place lot of birds will die

60) suddenly a very big disaster is going to happen wherein the entire world will be shocked

61) there will be severe economic inflation in England

62) Israel and Palestine war will intensify and several lakhs of people will die

63) the entire world will witness several confusions in the month of May 2024

64) here afterwards the heat will be very very severe

65) since the earth is getting hot there will be water scarcity for another 2 years

66) in India several States will be confused because of water scarcity

67) there will be several new inventions in the field of medicine and we will also have medicine for curing deadly disease Cancer

68) one new planet will be discovered by India

11/10/2023

1) சுற்றுச்சூழல் மாசு ஏற்படும்.

2) கலப்படமான நோய்கள் பரவும்

3) வறட்சி ஏற்படும்

4) சூரியனின்  சுட்டுத் தன்மை மிக மிகக் கொடுமையாக இருக்கும் 

5) வெப்ப சலனத்தினால் அடிக்கடி மழை பெய்யும்

6) இரண்டு வெளிநாடுகளில்   மிகப்பெரிய வெள்ளம் வந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் 

7) வடதுருவத்திலும் தென் துருவத்திலும் பனி மலைகள் உருகும்

8) பண வீக்கங்கள் ஏற்படும்

9) பெட்ரோல் டீசல் விலை மிகவும் அதிகமாகும்

10) எல்லாவிதமான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகமாகும்.

11) நவம்பர் மாதத்தில் இருந்து மக்கள் பலவித போராட்டத்தில் ஈடுபடுவார்கள்

12) இந்தியாவில் ஒரு மாநிலத்தில் 144 தடை உத்தரவு போடுவார்கள்

13) மக்கள் வன்முறையில் ஈடுபடுவார்கள் .

14) ஒரு முக்கிய நடிகருக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்

15) ஒரு முக்கிய நடிகர் ஒருவர் இறப்பார்

16) கல்வித் துறையில் புதுவிதமான பாடத்திட்டங்களை உருவாக்குவார்கள்

17) ஒரு புதுமையான செல்போன் வரும்.அதில் நமது அத்தனை வேலைகளையும் செய்யலாம்

18) மருத்துவத்துறையில் புதுப்புது மருந்துகள் கண்டுபிடிப்பார்கள்

19) எல்லா இடத்திலும் கண்டிப்பாக தண்ணீர் பஞ்சம் ஏற்படும்

20) வட இந்தியா முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்

21) இந்த ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த  ராணுவம் வரும்

22) மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் அதிகமாகும்

23) மக்கள் அசைவம் சாப்பிடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்

24) தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்

25) 25ம் தேதி முதல் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை பங்குச்சந்தைகள் மிகவும் வீழ்ச்சி அடையும்

26) இந்த மாதம் 15 ஆம் தேதியில் இருந்து மிகப்பெரிய மழைகள் காத்துக் கொண்டு இருக்கிறது

27) அடுத்த மாதம் மூன்று கிரகங்கள் ஒன்றாக சேரும் அப்போது மிகப்பெரிய வெள்ளம் வரும். பல ஊர்களும் கிராமங்களும் முழுவதும் மூழ்கும் 

28) இயற்கை சீற்றங்கள் மிகவும் கொடுமையாக இருக்கும்

29) குரு வழிபாடும் சிவ வழிபாடும் மக்களுக்கு மிகவும் நன்மைகள் செய்யும்

30) கண்டிப்பாக குழந்தைகளின் உணவில் தனி கவனம் செலுத்த வேண்டும்

31) வெளி உணவுகளை கண்டிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது

33) வெளி உணவுகளில் இருந்து பலவிதமான நோய்கள் உருவாகும்

34) இதைப்பற்றி  நாசா மற்றும் நமது சுகாதார துறையில் தெரிவிப்பார்கள்

35) வெளி உணவினால்  மக்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கபடுவார்கள்

36) அமெரிக்க அதிபருக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று வரும் அதனால் அங்கு ஜனாதிபதி தேர்தலில் சில குழப்பங்கள் ஏற்படும் 

37) தற்போது நடந்து கொண்டிருக்கும் உலக கிரிக்கெட் போட்டியில் இரண்டு மூன்று ஆட்டக்காரர்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்படும்.மேலும் விளையாடும் மைதானமத்திலும் சில பிரச்சினைகள் ஏற்படும்.

38) இந்த வருடம் டிசம்பர் 23ம் தேதி சில விஷயங்கள் நடக்கும்.

39) தற்போது புதியதாக ஆரம்பித்திருக்கும் இஸ்ரேல் போர் மேலும் தீவிரமடையும்

40) வேறு ஒரு நாடும்  போரில் ஈடுபடும்

41) இந்தப் போரினால் அமெரிக்காவிற்கும் சில பிரச்சனைகள் ஏற்படும்

42) ஒரு ஊர் கருப்பு மேகம் போல் மாறிவிடும்

43) ஒரு நாட்டையே தரைமட்டம் ஆக்கும் நிலைக்கு கொண்டு செல்வார்கள்

44) இந்தப் போர் சில காலங்கள் வரை நீடிக்கும்

45) பலவிதமான போராட்டங்கள் உலகம் முழுவதும் ஏற்படும்

46) ஒரு சிறிய முஸ்லிம் நாடு புதியதாக ஒரு ஏவுகணையை செலுத்தும்

47) ஒரு விமான நிலையம் பற்றி எரியும் நிலை உள்ளது

48) இரண்டு நாடுகளிலும் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும்

49) ஐந்து நாடுகள் ஒன்று சேரும்

50) மக்கள் வீணாக இறப்பார்கள்

51) இந்த எல்லையில் சில குழப்பங்கள் சீனாவில் ஏற்படும்

52) மேலும் ஒரு முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் 

53) வட இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும்

54) வடகொரியா ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படுத்துவான் 

55) இந்த வருடம் எங்கோ ஒரு நாட்டில் மிஸைல் குண்டு வெடிக்கும் அபாயம் உள்ளது

56) உலகத்தில் உள்ள எல்லா நாட்டின் அதிபர்களுக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பார்கள் 

57) ஒரு சில நாடுகள் இந்தியா பாகிஸ்தான் இலங்கை ஒரளவு தாக்கு பிடிப்பார்கள்

58) நடுக்கடலில் ஒரு மிகப்பெரிய அமெரிக்கா கப்பல் தீ பற்றி எரியும்.

59) இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள இடத்தில் மிகப்பெரிய காட்டு தீ பற்றி எரியும்.

60) ஒரு இடத்தில் நிறைய பறவைகள் இறக்கும்

61) உலகே கலங்கும் அளவுக்கு ஒரு கோர விபத்து ஒன்று ஏற்படும். அது ரயிலாகவும் இருக்கலாம்

62) இங்கிலாந்தில் பண பிரச்சனைகள் ஏற்படும்

63) இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் அடைந்து பல லட்சம் மக்கள் இறப்பார்கள்

64) 2024 மே மாதம் உலகில் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்படும்

65) வெயில் தாக்கம் இனிமேல் மிகவும் கொடுமையாக இருக்கும்

66) பூமி சூட்டுத்தன்மை அதிகம் ஆவதால் வறட்சி ஏற்படும்.இந்த வறட்சி இரண்டு ஆண்டுகள் இருக்கும் 

67) பல மாநிலங்களில் தண்ணீரினால் குழப்பங்கள் ஏற்படும்

68) பல நோய்களுக்கான மருந்துகள் வந்துவிடும் அதிலும் குறிப்பாக கேன்சர் நோய்க்கு மருந்து வந்துவிடும்

Thursday, October 12, 2023

சித்தர் ரகசியம் புண்ணியம் செய்தால் மட்டும் படிக்க முடியும்

#சித்தர்களின்_ஜீவ #சமாதிப் 
#பீடங்கள்...

தமிழ்நாட்டில் பல கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்துள்ளார்கள். சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இறை உணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணர முடியும்.

நம் மனதில் கோபம்ஆக்ரோஷம் குழப்பம், கவலை ஆகியவை எழும்போது நம் உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் எனக் கூறுகின்றனர்.

நாம் ஓய்வெடுக்கும் போது (ஆழ்ந்த தூக்கத்தின்போது) உடலைச் சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்பா அலைகள் எனக் கூறுகின்றனர்.

அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது, எட்டு ஹெர்ட்ஸ்க்குக் கீழே இருக்கும். இதனைத் தீட்டா அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து தீட்டா வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான கோயில்களில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் மர்மம் இதுதான்.

பதினெட்டுச் சித்தர்கள் அடங்கி யிருக்கும் ஜீவ சமாதிப் பீடங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜீவசமாதிப் பீடங்கள் உள்ளன. உதாரணமாக சென்னையில் திருவெற்றீஸ்வரர் ஆலயம். 
அங்கேயே அருகில் பட்டினத்தார் ஆலயம். 

மைலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், முண்டகக் கண்ணியம்மன் ஆலயம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம், கொரட்டூர் ஜம்பு கேஸ்வரர் ஆலயம், திருமுல்லை வாசல் மாசிலாமணீஸ்வரர் ஆலயம், பூந்தமல்லி அருகில் திருமழிசையாழ்வார் ஆலயம், அரக்கோணம் அருகில் திருவாலங்காடு திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், மாங்காடு ஆலயம் மற்றும் அருகில் திருத்தணி, காளஹஸ்த்தி, திருப்பதி இவை யாவும் சித்தர்கள் அடங்கி அருளும் சிறப்புமிகு தலங்கள். இன்னும் சென்னையிலும் அதைச் சுற்றிலும் பல ஜீவ சமாதிகள்உள்ளன. 

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜரும், சீர்காழி, ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் சட்டமுனியும் (சீர்காழி சட்டநாதர்), சிதம்பரம், திருவாவடுதுறை முதலிய இடங்களில் திருமூலத் தேவரும் இருந்து அருள்புரிகின்றனர். திருவாவடுதுறை நரசிங்கம் பேட்டைக்கு அருகில் (மயிலாடுதுறை –கும்பகோணம் மார்க்கம்) உள்ளது. 

இங்குதான் சிறப்பு மிகு திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. இங்கே ஸ்ரீ சமாதி பீடமும் உள்ளது. இதற்கு அருகிலேயே திருவிடைமருதூர் உள்ளது. இங்கு ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. 

இங்கு ரோமரிஷி, நாரதர் ஜீவசமாதியில் இருந்து அருள்கின்றனர். இங்கு தல விருட்சமாக உள்ள மருத மரத்தினருகில் இருந்து வாசி லயம் செய்தால் உணரலாம். 

இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் கும்பகோணம் உள்ளது. இங்கே கும்பேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு அகத்தியப் பெருமான் அருளுகின்றார். இதற்கு அருகிலேயே சாதார வீதி என்று இருக்கிறது. இங்கே சிவவாக்கியராக இருந்த திருமழிசைஆழ்வாராகிய பெருமான் ஜீவ சமாதி கொண்டுள்ளார்.

குடந்தைக்கு அருகில் உள்ள திருப்பனந்தாள் ஆதீன மடாலயத்திலும் சித்தர்கள் ஜீவ சமாதி யிலிருந்து அருள்கிறார்கள். இதற்கு அருகில் திருபுவனம் இருக்கிறது. இங்கு விராலிமலைச் சித்தர்கள் ஜீவசமாதியுள்ளது.

திருவிடைமருதூருக்கு அருகிலிருப்பது கோவிந்தபுரம். இங்கு ஸ்ரீ போதேந்திராள் ஜீவ சமாதியுள்ளது. 

ஆடுதுறை, குத்தாலம் கதிராமங்கலத்தில் வன துர்க்கை ஆலயமுள்ளது. இங்கு அகத்தியர் அருள்கிறார். 

மயிலாடுதுறையில்மயூரநாதர் ஆலயத்தில் காளங்கி நாதரும் மற்றும் பல சித்தர்களும் ஜீவ சமாதி ஆகியுள்ளார்கள். திருக்கடையூரிலும் காளங்கிநாதர் அருள்கின்றார். 

மாயவரம், சீர்காழி மார்க்கத்தில் வைத்தீஸ்வரன் கோவில் மருந்தீஸ்வரர், முத்துக் குமாரசுவாமி ஆலயம் இருக்கிறது. இங்கே தல விருக்ஷமாகிய வேப்ப மரத்தினடியில் தன்வந்தரியின் ஜீவ சமாதியும், ஆலயத்தினுள் வசிஷ்டரின் ஜீவ சமாதியும் அமைந்து அருள் ஒளி பாய்ச்சுகின்றது. 

சீர்காழி, சிதம்பரம் மார்க்கத்தில் கொள்ளிடத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் ஆச்சாள்புரம் உள்ளது. இங்கே சத்குரு ஸ்ரீகாகபுஜண்டர்அருள்கின்றார். திருஞானசம்பந்தர் ஜோதியில் கலந்த ஆலயம் இங்குள்ளது. 

வடலூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் மேட்டுக்குப்பம் உள்ளது. இங்கே அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்த சித்தி வளாகம். தவறாது கண்டு களித்து அருள்பெற வேண்டிய இடம்.

நெய்வேலிக்கு அருகில் விருத்தாசலம் இருக்கிறது. இங்கே பாம்பாட்டிச் சித்தர் ஜீவ சமாதி இருக்கிறது. 

திருவாரூர், நாகை சாலைக்கு அருகில் எட்டுக்குடி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் ஸ்தல விருக்ஷத்தின் அருகில் வால்மீகி ஜீவசமாதியும், இதனருகில் சிக்கல் சிங்கார வேலன் சன்னதியில் ஸ்ரீ போகநாதரும், வசிஷ்டரும் மற்றும் பல சித்தர்களும் அருளாட்சிசெய்கிறார்கள்.

அகப்பேய் சித்தர் எட்டுக்குடி, தஞ்சைக்கு அருகில் திருவையாற்றில் அருள் புரிகின்றார். 

திருச்சியை அடுத்த கரூரில் கருவூரார் எனப்படும் கருவூர்த்தேவரும், திருச்சி திருவானைக்காவலில் ஸ்ரீகாகபுஜண்டரும், நாகப்பட்டினத்தில் நாகைநாதர் ஆலயத்தில் அழுகண்ணரும், காசிபரும், வரதரும் அருள் புரிகின்றனர்.

நாகைக்கு அருகில் பொய்கை நல்லூரில் ஸ்ரீகோரக்க நாதரும், அருகில் புஜண்டவனத்தில் 
ஸ்ரீ காகபுஜண்டரும், நவநாதாக்களும் அருள்புரிகின்றனர். 

மதுரையில் ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்தில் சுந்தரானந்தர் அகத்தியரும், அருகிலே அழகர்மலையில் பதஞ்சலியும், இராமதேவர், யாக்கோப்பு என்ற தேரையரும், பழமுதிர்ச் சோலையில் ஸ்ரீபோகநாதர், கமலமுனியும், மதுரைக்கு அருகில் திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீபோகநாதரும்,மலை உச்சியில் மச்சமுனியும், அருள் புரிகின்றனர்.

திருச்செந்தூரில் புண்ணாக்கீசர், காசிபர் ஆகியோர் திருவருள் புரிகின்றார்கள். இங்கே எம்பெருமான் சுப்ரமண்யர் சன்னதிக்கு அருகில் இடதுபுறத்தில் சிறிய கதவுண்டு. இதன் வழியே உள்ளே சென்றால் குகையினுள் பஞ்சலிங்க வடிவாக ஐந்து சித்தர்கள் இருப்பதையும், அக்குகைக்குள் சூரிய ஒளி உள்ளே புகுவதையும் கண்ணாரக் கண்டு அருள் பெறலாம்.

திருச்செந்தூருக்கு அருகில் காயல்பட்டினம் உள்ளது. இங்கு பல சித்தர்களும் அருள் வழங்குகின்றனர்.

கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரத்தில்விஸ்வாமித்திரர், வசிஷ்டர், பிருகு முனிவர் ஆகியோரும் அருள் புரிகின்றனர். பழனியில் உள்ளது போல் இங்கு நவபாஷாணத்தால் உள்ள சிவலிங்கம் உள்ளது. சுசீந்திரத்திற்கு அருகில் மருந்து மலை உள்ளது. இங்கு காகபுஜண்டரும், நவநாதாக்களும் அருள்புரிகின்றனர்.

இராமேஸ்வரத்தில்பதஞ்சலி முனிவர் அருள்கிறார். இங்கிருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் 12 கி.மீ. தூரத்தில் கோசமங்கை உள்ளது.இங்குள்ளதலவிருக்ஷம் இலந்தைமரத்தடியில் காகபுஜண்டர் ஜீவ சமாதியும் மற்றும் திருக்கழுக்குன்ற ஆலயத்தில், உச்சியில் ஸ்ரீ கோரக்கரும், காஞ்சிபுரத்தில் கடுவெளிச்சித்தர், காளங்கி நாதர் மற்றும் பல சித்தர்களும் இருந்து ஞானச் செல்வத்தை வாரிவழங்குகின்றனர்.

திருவாரூரில் கமலமுனி, சுந்தரானந்தர், இடைக்காடரும், திருவண்ணாமலையில் தேரையர், இடைக்காடர், கௌத மகரிஷி, நந்தீஸ்வரர், சுப்ரமணியர், அகப்பேய்ச்சித்தர் மச்சமுனி, குகை நமச்சிவாயர் மற்றும் எண்ணிடலங்கா சித்தர்களும் ஜீவ சமாதியில் இருந்து அருள்புரின்றனர்.

திருவண்ணாமலைக் கார்த்திகை மாத பௌர்ணமியன்று உள்ளன்போடு சென்றால், மானிட வடிவில் வந்து இன்றும் சித்தர்கள் காட்சி கொடுத்துக் காத்து இரக்ஷிக்கின்றனர். 

சத்குருநாதர் ஸ்ரீ காகபுஜங்கரின் ஜீவ சமாதிகள் பல்வேறு இடங்களில் இருக்கின்றன. 

சேலம், நாமக்கல் (வழி சேந்தமங்கலம்) சாலைக்கு அருகில் கொல்லிமலை என்னும் சதுரகிரி அமைந்துள்ளது. 

தென்காசிக்கு அருகில் திருக்குற்றாலமலை அமைந்துள்ளது. 

பாபநாசத்திற்கு அருகில் பொதிகைமலைஅமைந்துள்ளது

மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைக்கு அருகில் (தானிப்பாறை வழி) சுந்தரமகாலிங்கம் என்னும் சதுரகிரி அமைந்துள்ளது. பக்தியோடு, உள்ளுணர்வோடு இம்மலைகளுக்குச்சென்று தங்கி வந்தால் சித்தர்களின் அருளையும், சிவனருளையும் முழுமையாகப் பெறலாம். 

கொல்லி மலையில் ஸ்ரீ அறைப்பள்ளீஸ்வரர் ஆலயம் (குகையில் குடிகொண்ட ஈசன்), பெரியண்ணசாமி ஆலயம், சோரமடையான் ஆலயம், எட்டுக்கை அம்மன் ஆலயம் முதலிய ஆலயங்களும், காகபுஜங்கர் குகை, அகத்தியர் குகை, பாம்பாட்டிச் சித்தர், புலிப்பாணி குகை, காளங்கிநாதர் குகை, கன்னிமார் குகை, கோரக்கர் குன்றம் முதலிய இடங்கள் சித்தர்கள் வழி செல்லும். நாமும் தரிசித்து தங்கியிருந்து அருள்பெற வேண்டிய இடங்களாகும்.

குற்றாலமலையில் அருள்மிகு செண்பகாதேவி ஆலயமும், வாலைக்குகை என்று வழங்கும் தெட்சிணாமூர்த்தி குகை, (பொதிகையில்) அகத்தியர் குகை, ஔவையார் குகை, கோரக்கர் குகை, புஜண்டர் குகை (தேனருவியில் உட்புறத்தில் உள்ளது), பரதேசிப்பாறை முதலியவை தரிசித்துத் தங்கி அருள்பெற வேண்டிய இடங்களாகும்.

நமக்கு தன்னலம் அற்ற சித்தர்களும், நம் இறைவனும் போதும்.

குடில் அமைத்து பவனி வரும் பன்னாட்டு சாமியார்களுக்கு நம்மை கட்டிக் காக்கும் சக்தி அறவே கிடையாது.

Monday, October 9, 2023

அக்டோபர் மாத உலக மற்றும் உள் நாட்டு கணிப்பு

.9/10/2023

1) in the coming days the heat will be extremely high people are advised to be very very careful

2) here afterwards there will be very severe drought

3) the mother earth heat is increasing heavily

4) here afterwards there will be very severe rains

5) Tamil Nadu will also witness heavy rains

6) places like Andhra Pradesh Karnataka will receive very heavy rains

7) in North India two States will receive very heavy rains

8) Bangalore and Mumbai will receive very heavy rains

9) Coimbatore and Trichy will receive very heavy rains

10) starting from 15th of this month the rain will come

11) Chennai will receive rains during night Times

12) American President will have some confusions and due to this there will be some confusion in the presidential election.

13) United Nations will announce about the economic inflation and due to this there will be some confusions

14) in America they will unknowns about the gold kept in the federal reserve and due to this the price is will come down

15) afterwards we gold price will increase

16) US dollar value will increase

17) the price of petrol and diesel will go very very high

18) the price of basic commodities will go very high

19) England Europe and Muslim countries will receive heavy rains and due to this there will be very severe floods.

20) there will be a small earthquake in Chennai

21) Thailand Indonesia Cambodia places will have very severe earthquake

22) one big volcano will erupt and it will flow like a river

23) two big snow mountains will meltdown and fall

24) the stock markets will fall down very severly by the end of this month and due to this there will be very big confusions.

25) several billionaires will have very severe financial issues

26) there is going to be a problem in temple premises and few people will also die there

27) the cauvery river water issue will intensify and due to this there will be several other problems

28) the entire world will witness food shortages

29) in India also there will be food shortage

30) in India the foods will be contaminated and due to this new kind of disease will spread


31) in India there will be new kind of virus spreading

32) we should adopt to our traditional eating habits

33) since  the heat is more there will be lot of skin problems

34) people with diabetes should be very careful and they should take care of their food habits

9/10/2023

1) இனிவரும் காலங்களில் வெப்பம் மிக மிகக் கொடுமையாக இருக்கும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

2) இனி வரும் காலங்களில் வறட்சிகள் மிகவும் அதிகமாகும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்

3) பூமியின் சூட்டுத்தன்மை மிகவும் அதிகமாகி கொண்டு இருக்கிறது

4) மழை மிகவும் அதிகமாக பெய்யும்.

5) தமிழ்நாட்டிலும் மழை அதிகமாக இருக்கும்

6) ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை மிகவும் அதிகமாக இருக்கும்

7) வட இந்தியாவிலும் இரண்டு மாநிலங்களில் மழை மிகவும் அதிகமாக இருக்கும்

8) பெங்களூர் மும்பை ஆகிய ஊர்களின் மழை மிகவும் அதிகமாக இருக்கும்

9) திருச்சிராப்பள்ளி கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மழை மிகவும் அதிகமாக இருக்கும்

10) 15ஆம் தேதியிலிருந்து மழைகள் அதிகமாக இருக்கும்

11) சென்னையில் இரவு நேரங்களில் மழை அதிகமாக இருக்கும்

12) அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒரு சில குழப்பங்கள் ஏற்படும் அதனால் அங்கு ஜனாதிபதி தேர்தலில் சில குழப்பங்கள் ஏற்படும்

13) ஐ.நா. சபையில் பணவீக்கம் பற்றி சொல்வார்கள் இதனால் பல குழப்பங்கள் ஏற்படும்

14) அமெரிக்காவில் வங்கிகளில் வைத்துள்ள தங்கம் பற்றி கூறுவார்கள் அதனால் தங்கத்தின் விலை குறையும்

15)அதன் பிறகு தங்கத்தின் விலை ஏறும்

16) அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகும்

17) பெட்ரோல் டீசல் விலை மிகவும் அதிகம் ஆகும்

18) அத்தியாவசிய பொருட்களின் விலையும் மிகவும் அதிகமாகும்

19) இங்கிலாந்து ஐரோப்பா முஸ்லிம் நாடுகள் ஆகிய இடங்களில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும்

20) சென்னையில் ஒரு சிறிய அளவு நிலநடுக்கம் ஏற்படும்

21) தாய்லாந்து இந்தோனேசியா கம்போடியா ஆகிய நாடுகளில் மிகப் பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படும்

22) ஒரு மிகப்பெரிய எரிமலை வெடித்து ஆறு போல் ஓடுவதை நாம் பார்ப்போம்

23) இரண்டு மிகப்பெரிய பனி மலைகள் உருகி விழுவதை நாம் பார்ப்போம்

24) இந்த மாதம் கடைசியில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடையும் இதனால் பல விதமான பிரச்சனைகள் ஏற்படும்

25) பல பெரிய பணக்காரர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும்

26) ஒரு முக்கிய கோவில் வளாகத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் அங்கு ஒரு சிலர் இறக்கும் நிலை உள்ளது

27) கர்நாடகாவில் தண்ணீர் பிரச்சனை மேலும் வலுவடையும் இதனைத் தொடர்ந்து பல பல பிரச்சனைகள் உருவாகும்

28) உலக நாடுகள் முழுவதும் உணவு தட்டுப்பாடுகள் ஏற்படும்

29) இந்தியாவிலும் உணவு தட்டுப்பாடுகள் ஏற்படும்

30) நம் நாட்டில் உணவுகள் மூலம் சில கிருமிகள் பரவுவதை கூறுவார்கள்

31) இந்தியாவில் புதிய வகையான நோய்கள் பரவும்

32) நமது உணவு வகையில் கண்டிப்பாக ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க வேண்டும்

33) வெயில் அதிகமாக இருப்பதனால் தோல் சம்பந்தமான பிரச்சினைகள் வரும்

34) சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை அதிகமாகும். உணவில் கட்டுப்பாடு கண்டிப்பாக தேவை

108 பெருமாள் கோயில்களை பார்க்கலாமா?

108 திவ்ய தேசங்கள்

ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், ""வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்?'' என்று கேட்க, ""ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச'' என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107. பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108. இந்த திவ்யதேசங்களை எல்லாம்ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். 

நாலு வரிகளில் 108 திவ்யதேசங்கள் : --
ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;

“ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு; ஓரிரண்டாம் - சீர்நாடு
ஆரோடீரெட்டுத் தொண்டை; அவ்வட நாடாறிரண்டு
கூறு திருநாடொன்றாக் கொள்”

அதாவது,

சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, திருநாடு (ஸ்ரீவைகுந்தம்) 1 ஆக மொத்தம் 108 திவ்யதேசங்கள் எனக் குறிப்பிடுகிறார்.

திவ்ய தேசங்களில் இறைவன் திருக்கோலம்

திவ்ய தேசங்களில் இறைவன் திருக்கோலம் கீழ்க்காணும் எண்ணிக்கையில் இருக்கின்றன.

1. கிடந்த திருக்கோலம் - 27 திவ்ய தேசங்கள்
2. இருந்த திருக்கோலம் - 21 திவ்ய தேசங்கள்
3. நின்ற திருக்கோலம் - 60 திவ்ய தேசங்கள்.

இறைவன் திருக்கோல திசைகள்

திவ்யதேசங்களில் இறைவன் திருக்கோலம் பார்க்கும் திசைகள் கீழ்க்காணும் எண்ணிக்கையில் இருக்கின்றன.

1. கிழக்கு திசை நோக்கி - 79 திவ்ய தேசங்கள்
2. மேற்கு திசை நோக்கி - 19 திவ்ய தேசங்கள்
3. வடக்கு திசை நோக்கி - 3 திவ்ய தேசங்கள்
4. தெற்கு திசை நோக்கி - 7 திவ்ய தேசங்கள்.

"" வைகுண்டத்தில் ஓடும் விரஜா நதியே காவிரி. வைகுண்டமே ஸ்ரீரங்கம். வாசுதேவனே அரங்கன். 
பிரணவமே விமானம். விமானத்தின் நான்கு கலசங்களே வேதங்கள். உள்ளே பள்ளி கொண்டிருக்கும் அரங்கனே பிரணவத்தால் விவரிக்கப் படும் பரம்பொருள்'' என்றெல்லாம் ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஆலயங்களைத் திவ்யதேசங்கள் என்று புகழ்வர். திவ்யதேசங்கள் 108 என்கிறோம்.

திவ்யதேசங்கள் பட்டியல் : --
-----------------------------------------------

இந்தப் பட்டியலில் 108 திவ்யதேசங்கள் பட்டியலில் முதலில் திருத்தலத்தின் பெயரும், அடைப்புக்குறிக்குள் அத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாள் மற்றும் அவரது தேவியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதற்கடுத்து அந்தத் தலமிருக்கும் மாநிலம் அடைப்புக் குறிக்குள் ஊர்/மாவட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. ஸ்ரீரங்கம் (ஸ்ரீரங்கநாதர் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (திருச்சி)

2. திருஉறையூர் (அழகிய மணவாளன்-வாஸலக்ஷ்மி) தமிழ்நாடு (திருச்சி)

3. தஞ்சை (நீலமேகம் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)

4. சுந்தர்ராஜப்பெருமாள் (வடிவழகியநம்பி - அழகியவல்லி) தமிழ்நாடு (திருச்சி)

5. உத்தமர் கோயில் (புருஷோத்தமன் - பூர்ணவல்லி) - தமிழ்நாடு (திருச்சி)

6. திருவெள்ளரை (புண்டரீகாக்ஷன் - பங்கயச் செல்வி) - தமிழ்நாடு (திருச்சி)

7. புள்ளபூதங்குடி (வல்வில் ராமன் - பொற்றாமறையாள்) - தமிழ்நாடு (கும்பகோணம்)

8. கோயிலடி (அப்பக்குடத்தான் - இந்திராதேவி(கமலவல்லி)) - தமிழ்நாடு (திருச்சி)

9. ஆதனூர் (ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

10. தேரழுந்தூர் (ஆமருவியப்பன் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)

11. சிறு புலியூர் (அருமாகடல் - திருமாமகள்) - தமிழ்நாடு (சீர்காழி)

12. திருச்சேரை (சாரநாதன் - சாரநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

13. தலைச்சங்காடு (நாண்மிதியப்பெருமாள் - தலைச்சங்கநாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)

14. கும்பகோணம் (சாரங்கபாணி, ஆராவமுதன் - கோமளவல்லி) - தமிழ்நாடு (குடந்தை)

15. கண்டியூர் (ஹரசாபவிமோசனர் - கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)

16. ஒப்பிலியப்பன் (ஒப்பிலியிப்பன் - பூமிதேவி) - தமிழ்நாடு (குமப்கோணம்)

17. திருக்கண்ணபுரம் (சௌரிராஜன் - கண்ணபுரநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

18. திருவாலி,திருநகரி (வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் - அமிர்தவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

19. நாகப்பட்டினம் (சௌந்தர்யராஜன் - சௌந்தர்யவல்லி) - தமிழ்நாடு (நாகப்பட்டினம்)

20. நாச்சியார்கோயில் (நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார்) - தமிழ்நாடு (குமபகோணம்)

21. நாதன் கோயில் (ஜகந்நாதர் - செண்பகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

22. மாயவரம் (பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)

23. சிதம்பரம் (கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

24. சீர்காழி (தாடாளன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

25. திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) (ஜகத்ரட்சகன் - பத்மாசநவல்லி)- தமிழ்நாடு (கும்பகோணம்)

26. திருக்கண்ணங்குடி (லோகநாதன் - லோகநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

27. திருக்கண்ணமங்கை (பக்தவத்சலன் - அபிசேகவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

28. கபிஸ்தலம் (கஜேந்த்ரவரதர் - ரமாமணிவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்) 

29. திருவெள்ளியங்குடி (கோலவில்லி ராமர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கும்பகோணம்)

30. மணிமாடக் கோயில் (சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

31. வைகுந்த விண்ணகரம் (வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

32. அரிமேய விண்ணகரம் (குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

33. தேவனார் தொகை (தேவநாயகர் - ஸமுத்ரதநயா) - தமிழ்நாடு (சீர்காழி)

34. வண்புருடோத்தமம் (புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)

35. செம்பொன் செய்கோயில் (செம்பொன்னரங்கர் - சவேதபுஷ்பவல்லி) - தமிழ்நாடு (சீர்காழி)

36. திருத்தெற்றியம்பலம் (செங்கண்மால் - செங்கமலவல்லி) தமிழ்நாடு (சீர்காழி)

37. திருமணிக்கூடம் (மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)

38. திருக்காவளம்பாடி (கோபாலக்ருஷ்ணன் - செங்கமலநாச்சியார்)- தமிழ்நாடு (சீர்காழி)

39. திருவெள்ளக்குளம் (ஸ்ரீநிவாஸன் - பத்மாவதி) - தமிழ்நாடு (சீர்காழி)

40. திருபார்த்தன் பள்ளி (தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன்) - தமிழ்நாடு (சீர்காழி)

41. திருமாலிருஞ்சோலை (அழகர் - சுந்தரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

42. திருக்கோட்டியூர் (சௌம்யநாராயணர் - மஹாலக்ஷ்மி) - தமிழ்நாடு (மதுரை)

43. திருமெய்யம் (சத்யகிரிநாதன் - உஜ்ஜீவன நாச்சியார்) - தமிழ்நாடு (மதுரை)

44. திருப்புல்லாணி (கல்யாணஜகந்நாதர் - கல்யாணவல்லி)- தமிழ்நாடு (மதுரை)

45. திருத்தண்கால் (தண்காலப்பன் - அன்னநாயகி) - தமிழ்நாடு (மதுரை)

46. திருமோகூர் (காளமேகம் - மோஹனவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

47. கூடல் அழகர் கோயில் (கூடலழகர் - மதுரவல்லி) - தமிழ்நாடு (மதுரை)

48. ஸ்ரீவில்லிபுத்தூர் (வடபத்ரசாயி - ஆண்டாள்) - தமிழ்நாடு (ஸ்ரீவில்லிபுத்தூர்)

49. திருக்குருகூர் (நவதிருப்பதி) (ஆதிநாதர் - ஆதிநாதவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

50. தொலைவில்லிமங்கலம் (இரட்டைத் திருப்பதி, நவதிருப்பதி) (அரவிந்தலோசநர் - விசாலக்ருஷ்ணாக்ஷி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

51. வானமாமலை (நவதிருப்பதி) (தோத்தாத்ரி நாதர் - ஸ்ரீவரமங்கை) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

52. திருப்புளிங்குடி (நவதிருப்பதி) (காய்ச்சினவேந்தன் - மலர்மகள்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

53. திருப்பேரை (நவதிருப்பதி) (மகரநெடுங்குழைக்காதர் - குழைக்காதுவல்லி நாச்சியார்) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

54. ஸ்ரீவைகுண்டம் (நவதிருப்பதி) (கள்ளப்பிரான் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

55. திருவரகுணமங்கை(நத்தம்)(நவதிருப்பதி) (விஜயாஸனர் - வரகுணவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

56. திருக்குளந்தை (நவதிருப்பதி) (மாயக்கூத்தர் - குளந்ததைவல்லி (அலமேலுமங்கை)) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

57. திருக்குறுங்குடி (வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

58. திருக்கோளூர் (நவதிருப்பதி) (வைத்தமாநிதி - கோளூர்வல்லி) - தமிழ்நாடு (திருநெல்வேலி)

59. திருவனந்தபுரம் (அனந்தபத்மநாபன் - ஸ்ரீஹரிலக்ஷ்மி) - கேரளம் (கோவளம்)

60. திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) (திருக்குறளப்பன் - கமலவல்லி)- தமிழ்நாடு (கன்னியாகுமரி)

61. திருக்காட்கரை (காட்கரையப்பன் - வாத்ஸல்யவல்லி) - கேரளா (கோட்டயம்)

62. திருமூழிக்களம் (திருமூழிக்களத்தான் - மதுரவேணி) - கேரளா (கோட்டயம்)

63. திருப்புலியூர் (மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார்) - கேரளா (கோட்டயம்)

64. திருச்செங்குன்றுர் (இமையவரப்பன் - செங்கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)

65. திருநாவாய் (நாராயணன் - மலர்மங்கை நாச்சியார்) - கேரளா (திருச்சூர்)

66. திருவல்லவாழ் (கோலப்பிரான் - செல்வத்திருக்கொழுந்து) - கேரளா (கோட்டயம்)

67. திருவண்வண்டுர் (பாம்பணையப்பன் - கமலவல்லி) - கேரளா (கோட்டயம்)

68. திருவட்டாறு (ஆதிகேசவன் - மரகதவல்லி) - தமிழ்நாடு (கன்னியாகுமரி)

69. திருவித்துவக்கோடு (உய்யவந்த பெருமாள் - வித்துவக்கோட்டுவல்லி) - கேரளா (திருச்சூர்)

70. திருக்கடித்தானம் (அற்புதநாராயணன் - கற்பகவல்லி நாச்சியார்) - கேரளா (கோட்டயம்)

71. திருவாரன்விளை (திருக்குறளப்பன் - பத்மாசனி) - கேரளா (கோட்டயம்)

72. திருவஹீந்திபுரம் (தேவநாதன் - ஹேமாப்ஜவல்லி) - தமிழ்நாடு (கடலூர்)

73. திருக்கோவலுர் (திரிவிக்ரமன் - பூங்கோவல்நாச்சியார்) - தமிழ்நாடு (கடலூர்)

74. திருக்கச்சி (வரதராஜன் - பெருந்தேவி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

75. அஷ்டபுஜகரம் (ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

76. விளக்கொளி பெருமாள் (தூப்புல்) (தீபப்ரகாசர் - மரகதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

77. திருவேளுக்கை (முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

78. திருப்பாடகம் (பாண்டவ தூதர் - ருக்மணி,சத்யபாமா) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

79. திருநீரகம் (ஜகதீசப்பெருமாள் - நிலமங்கைவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

80. நிலாத்திங்கள் (நிலாத்திங்கள்துண்டத்தான் - நேரொருவரில்லாவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

81. திரு ஊரகம் (உலகளந்தபெருமாள் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

82. திருவெக்கா (யதோத்தகாரி - கோமளவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

83. திருக்காரகம் (கருணாகரர் - பத்மாமணி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

84. திருக்கார்வானம் (கள்வர்பெருமாள் - கமலவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

85. திருக்கள்வனூர் (ஆதிவராஹர் - அஞ்சிலைவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

86. திருப்பவளவண் (பவளவண்ணப்பெருமாள் - பவளவல்லிநாச்சியார்)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

87. பரமேச்சுரவிண்ணகர் (பரமபதநாதன் - வைகுந்தவல்லி) - தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

88. திருப்புட்குழி (விஜயராகவன் - மரகதவல்லி)- தமிழ்நாடு (காஞ்சிபுரம்)

89. திருநின்றவூர் (பத்தவத்ஸலர் - ஸுதாவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

90. திரு எவ்வுள் (வைத்ய வீரராகவர் - கனகவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

91. திருநீர்மலை (நீர்வண்ணபெருமாள் - அணிமாமலர்மங்கை) - தமிழ்நாடு (சென்னை)

92. திருவிடவெந்தை (நித்யகல்யாணர் - கோமளவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

93. திருக்கடல்மல்லை (ஸ்தலசயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார்) - தமிழ்நாடு (சென்னை)

94. திருவல்லிக்கேணி (பார்த்தசாரதி - ருக்மணி)- தமிழ்நாடு (சென்னை)

95. திருக்கடிகை (சோளிங்கர்) (யோகநரசிம்மர் - அம்ருதவல்லி) - தமிழ்நாடு (சென்னை)

96. திருவேங்கடம் (திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை) - ஆந்திரப் பிரதேசம்

97. அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) (லட்சுமிநரஸிம்ஹன் - செஞ்சுலக்ஷ்மி) - ஆந்திரப் பிரதேசம்

98. திருவயோத்தி (சக்ரவர்த்திதிருமகன் - சீதாபிராட்டி) - உத்தரப்பிரதேசம்

99. நைமிசாரண்யம் (தேவராஜன் - ஹரிலக்ஷ்மி) - உத்தரப்பிரதேசம்

100. சாளக்கிராமம் (ஸ்ரீமூர்த்தி - ஸ்ரீதேவி) - நேபாளம்

101. பத்ரிகாச்ரமம் (பத்ரீநாராயணனன் - அரவிந்தவல்லி) - உத்தராஞ்சல்

102. தேவப்ரயாகை (நீலமேகம் - புண்டரீகவல்லி) - உத்தராஞ்சல்

103. திருப்ரிதி (பரமபுருஷன் - பரிமளவல்லி) - உத்தராஞ்சல்

104. திரு த்வாரகை (கல்யாணநாராயணன் - கல்யாணநாச்சியார்) - குஜராத்

105. வடமதுரை (கோவர்தனகிரிதாரி - சத்யபாமா) - டெல்லி

106. திருவாய்ப்பாடி (நவமோஹன க்ருஷ்ணன் - ருக்மணி,சத்யபாமா) - டெல்லி

107. திருப்பாற்கடல் (க்ஷீராப்திநாதன் - கடலமகள் நாச்சியார்) - புவியில் இல்லை

108. பரமபதம் (பரமபதநாதன் - பெரியபிராட்டியார்) - நாதன் திருவடி