Thursday, October 28, 2021

சிங்கப்பூரின் பிரம்படி எப்படி இருக்கும் தெரியுமா?

சிங்கப்பூரின் பிரம்படி எப்படிபட்டது? 

குற்றங்கள் செய்து சிங்கப்பூர் போலீசிடம் சிக்கினால் ,  கை கால்களைக் கட்டி குனிய வைத்து , ‘பின் புற’த்தில் வலிமையான குச்சியால் அடி பின்னுவார்கள் .
ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு  ஜென்மத்துக்கும் வலிக்கும் என்கிறார்கள்.

நாலு பிரம்படிக்கு பதிலா அபராதம் 5 லட்சம் சிங்கப்பூர் டாலர் கட்டுறயா என்றால் சரி என கட்டுவார்கள் என்பதே அடி எப்படி இருக்கும் என சொல்லும். 

மூங்கில் போன்ற ஒரு மரத்தின் குச்சி 1.5 இன்ச் தடிமனாகவும் 4 அடி நீளமாகவும் இருக்க வேண்டும். அடிப்பதற்கு ஒரு நாள் முன்பு ஊற வைப்பார்கள் குச்சி உடையாமல் இருக்க. புண் ஆனால் சீழ் பிடிக்காமல் இருக்க ஆன்டிசெப்டிக் மருந்து தடவப்படும். 

முழு நிர்வாணமாக கீழே படத்திலே இருப்பது போல கட்டி வைத்து மேலே சிறுநீரகத்தை பாதுகாக்கும் தடுப்பு வைத்து அடிப்பார்கள்.  

முதல் அடியிலேயே பெரும்பாலானோர் மயக்கம் அடைந்துவிடுவார்கள். பின்பு மயக்கம் தெளியவைத்து தெளிய வைத்து அடிப்பார்கள். மொத்தமாக 24 அடி அடிக்கலாம் என சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. 

4 அடி என்றால் ஒரே காவல் அதிகாரியே அடிப்பார் அதற்கும் மேல் என்றால் இரண்டு மூன்று மாறிக் கொள்வார்கள். உச்சகட்ட விசையோடு ஓங்கி அடிக்கவேண்டும் என்பதே விதி. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலே தடி இறங்கும். 

மயக்கம் தெளிய வைக்க அல்லது மருத்துவரீதியா வலுவாக இருக்கிறாரா என பரிசோதிக்க மருத்துவர் உடன் இருப்பார்.

4 அடிகளுக்கு மேல் வாங்கினாலே பின்பக்க தசை கிழிந்துவிடும். 5 அடிகளுக்கு மேல் என்றால் ஒருவருடம் நடக்கவே முடியாது. புண் ஆறினாலும் தழும்புகள் மறையாது. 

தமிழ்நாட்டிலே செய்வது போல் கருப்புபணம் பதுக்கினால் 24 அடி விழும். 

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது சிங்கபூரிலே இல்லை ஏன்னா இந்த அடி தான். ரவுடித் தனம், திருட்டு, கருப்பு பணம், கொள்ளை என்று அனைத்தையும் ஒழித்தது  இந்த அடிதான். 

24 அடி வாங்கினவன் வாழ் நாளிலே திரும்ப ஒழுங்கா நடக்க கூட முடியாது. அப்புறம் எங்க பொம்பளை கையபிடிச்சு இழுக்கறது? கொள்ளையடிக்கறது? 

தமிழ்நாட்டு புனிதர்களுக்காகவே இதை கொண்டு வரனும். ஒரு வருசம் நடைமுறையிலே இருந்தா போதும். தமிழ்நாடு சிங்கப்பூராகி விடும்.

Wednesday, October 27, 2021

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்.

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி :

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.
எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.
இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

*‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.*

Friday, October 22, 2021

தீபாவளிக்கு முன் நம்முடைய முன்னோர்களுக்கு யம தீபம் ஏற்றுவோம்

நமது முன்னோர்களுக்கு 
"எம தீபம்" ஏற்றுவோம் ....

நவம்பர் 2ஆம் தேதி எமதீபம் ஏற்றுவதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும் சொத்துக்கள் சேரும்.

தீபாவளித் திருநாளன்று, நாம் செய்யும் பூஜையையும், படையலையும் பித்ருக்கள் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு, நம்மை ஆசீர்வதித்து, பின்னர் அவர்களது உலகுக்குத் திரும்புகின்றனர் என்பது ஐதீகம். எனவேதான் தீபாவளித் திருநாளில் பித்ருக்களை அவசியம் வழிபட வேண்டும். இதனால் மறைந்த நம் முன்னோர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

தீபாவளி பண்டிகைக்கு அதிக சத்தம் தரும் வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூலோகம் வந்திருந்த நம்முடைய பித்ருக்கள் நாம் காட்டும் மத்தாப்பு வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் சொர்க்கம் நோக்கி முன்னேறிச் செல்வார்கள் என்பது நம்பிக்கை.

நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள். நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும்.

பித்ரு கடன் .....

அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர். வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. 

பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம்தான். எனவேதான் முதலில் பிதுர் தோஷத்தினையும், சாபத்தினையும் போக்க வேண்டும்.

ஐபசி அமாவாசை....

மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வந்து நம்முடன் தங்கியிருக்கும் முன்னோர்கள் ஐப்பசி அமாவாசை வரை பூலோகத்திலிருந்து நாம் தரும் தர்ப்பணம் மற்றும் பூஜைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது ஐதீகம். 

எனவே ஐப்பசி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கினால் அவர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

எம தீபம் ஏற்றுவோம் ....

தீபாவளிக்கு முதல் நாளில் திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு நவம்பர் 02ஆம் தேதி மாலை 5.41 மணி முதல் 6.58 மணிக்குள் எம தீபம் ஏற்றலாம். அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கியும் எம தீபம் ஏற்றலாம். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். 
அனைத்து விதத் தடைகளும் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும்.

Tuesday, October 19, 2021

முதுமையில் மனைவி இறந்து விட்டாள் அனாதையான வாழ்க்கை..

*காணாமல் போகும்  உறவுகள்...!*

அவர் இறந்து விட்டார். அடக்கம் செய்யணும்.., சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!

மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை – ஆனால் இப்போதுதான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!

இருபது வருடங்கள் முன்னாடி... அவர் மனைவி இறந்த பிறகு, *சாப்பிட்டாயா..!!* என்று யாரும் கேட்காத நேரத்தில்.. அவர் இறந்திருந்தார், யாருமே கவனிக்கவில்லை...!!

*பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே..* – என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...!!

*தாய்க்குப் பின் தாரம்.. தாரத்துக்குப் பின்.. வீட்டின் ஓரம் ...!!!* என்று வாழ்ந்த போது – அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை ..!!!

*காசு இங்கே மரத்திலேயா காய்க்குது..* - என்று மகன் அமிலவார்த்தையை வீசிய போது..!!! அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!!

*என்னங்க...!!! ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க...!!!* என்று காதிலே விழுந்த போதும் அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை...!!!

*உனக்கென்னப்பா...!!!பொண்டாட்டி தொல்லை இல்லை..* என்று வாழ்த்துவது போல கிண்டலடிக்கப் பட்ட போது அவர் இறந்திருந்தார்..!!!அப்போதும் யாருமே கவனிக்க வில்லை.

*இப்போதுதான் இறந்தாராம்!* என்கிறார்கள்..!
எப்படி நான் நம்புவது..???

*_நீங்கள் செல்லும் வழியில்இப்படி யாராவது இறந்து கொண்டிருப்பார்கள்..._*
ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டுச் செல்லுங்கள்..!!!

இல்லையேல்...!
உங்கள் அருகிலேயே இறந்துகொண்டிருப்பார்கள் புரிந்து கொள்ளுங்கள்..

*வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல..!!!*
*வாழவைப்பதும்தான் ..!!!!*

பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது. இன்றைய நவீன உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து விஞ்ஞானத்தோடு உறவு வளர்ந்து வருகிறது. இன்றைய உலகில் மனிதர்களுக்கு உறவுகள் தேவையில்லை... மாறாக திறன்பேசி (SMART PHONE) இருந்தால் போதும் என்ற மன நிலையில் வாழ்ந்து வருகிறோம்... ஆக!, மனித உறவுகள் இன்று ஊதாசினப்படுத்தப் பட்டு வருகின்றன என்பதே உண்மை...

பெற்ற பிள்ளைகளோடும், உற்றார் உறவினர்களோடும், சிரித்து மகிழ்ந்து உறவாடிய நாட்கள் போய், இன்று உறவுகள் களைந்து, குடும்பங்கள் சிதைந்து, பிள்ளைகளை மறந்து, கணிணியும், அலைபேசியும் இருந்தால் போதும் என்று நிலையில் வாழ்ந்து வருகிறோம்...

இது ஒருபுறம் இருக்க, இனி வரும் காலங்களில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன்... இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது...

எவரும் அப்படிக் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும்... காரணம்., நகரவாழ் பெரியோர்கள் கூறுவது போல "*ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு*" என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்தது தான்...! அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்...?

கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள், இனி யார் போவார்கள்...? ஒவ்வொரு பெண்ணும், சொந்த பந்தம் ஏதுமின்றி ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்கப் போகிறார்கள்...

ஒவ்வொரு ஆணும் தன் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள அண்ணன், தம்பி யாருமின்றி அவதிப் பட போகிறார்கள், அப்பா அம்மாவைத் தவிர எந்த உறவுகளும் இருக்கப் போவதில்லை...
அந்த ஒரு குழந்தையும் வெளியூருக்கோ, இல்லை தனிக் குடித்தனமோ சென்று விட்டால்...?

*"ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு"* என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ, இல்லை!, அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்...! 

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் இதே நிலை தான்...! 

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டால் ஓடோடி வந்து இனி யார் வரப் போகிறார்கள்...? வாகனங்கள், வீட்டு வசதி வாய்ப்புகளுடன் ''ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு'' என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும், வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா...? இவ்வளவு பாடு பட்டு ஓடி ஓடி செல்வம் ஈட்டுகிறீர்கள்...?

ஒரே ஒரு முறை நம் கடைசி காலத்தை நினைத்துப் பார்ப்போம்...!

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை, ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்து விடாதீர்கள்...!!_*

படித்ததில் பிடித்தது...

Monday, October 18, 2021

நீச்ச சனிக்கு சக்தி வாய்ந்த பரிகாரம்.

சனியும் பரிகாரமும்..!

ஜனன ஜாதகத்தில் சனி நீச்சம் அல்லது ஷட் வலுவில் வலுவிழந்து இருந்தால் கீழ் காணும் எதிர்மறை நிகழ்வுகளை ஜாதகர் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும், மேலும் கீழே கொடுத்துள்ளவாறு ஒருவர் செயல்பட்டால் சனியின் நீச்ச பலனை அனுபவிக்க நேரும்..!

தென்மேற்க்கு அல்லது தெற்கே அடசல் அல்லது சாக்கடை போன்ற அசுத்தமான இடங்கள் இருப்பது..!
சனி வலுவிழந்தால் ஜாதகருக்கு கொடூரமான குணாதிசயம், எப்பொழுதும் அதீத கவலையில் இருப்பது, கட்டுபடுத்துவது, ஆழமான கண்கள், ஒல்லியான தேகம், நீண்ட கழுத்து, கீழே உள்ள உடல் பாகங்கள் ஒல்லியாக நீண்டு இருப்பது போன்ற அமைப்புகள் இருக்கும்..!
பொதுவாகவே சனி வலுவிழந்தவர்களின் முகம் பொலிவாக இருக்காது, இவ்வாறானா நபர்களை தொழிலாளர் சங்கங்கள், சுகாதாரத்துறை போன்ற இடங்களில் காணலாம்..!
நீண்ட கால மற்றும் குணபடுத்த கடினமான நோய்கள் இருக்கும், இவர்களுக்கு நோய் தாக்கம் ஏற்பட்டால் நீண்ட காலம் ஆகும் குணமாக ஏனெனில் சனி காலம் தழ்த்தியே பலனளிப்பார்..!
கடினமாக உழைக்கும் சூழ்நிலை..!
அமைதியாக பேச சிரமப்படுவார்..!
கீழ்தரமான வார்த்தைகளை பேசும் பொழுது பயன்படுத்துவார்..!
எதிர்பார்ப்புகள் அதிகம் அதீத ஏமாற்றங்கள், லாபங்கள் குறைவு..!
சேமிப்பு இல்லாமை மற்றும் அறிவின்மை அல்லது அதீத அறிவு..!
சனி நின்ற வீட்டின் காரகங்கள் கிடைபதில் தாமதம்..!
முட்டி மற்றும் முழங்கால்களில் வலி..!
வீடு மற்றும் நில புலங்களில் பொருளாதார இழப்புகள்..!
வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் ஒழுக்கமின்மை..!
அதிக எண்ணை பண்டங்களை உட்கொள்வது..!
சமையலறை கழுவு தொட்டி அசுத்தமாக இருப்பது..!
பொய் பேசுவது வேலையாட்கள் ஒத்துழைப்பின்மை அல்லது வேலையாட்களை மோசமாக நடத்துவது..!
வீட்டில் தெற்க்கு பகுதியில் அடசல் அல்லது சரியாக உபயோகபடுத்தாமல் இருப்பது..!

பரிகாரம்.. !

சுக்கிலபட்ச சனிக்கிழமையில் ஆரம்பித்து, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் வரும் முதல் ஹோரை சனி ஹோரையில் தசரத சனி சோஸ்த்திரம் குறைந்தது 11 முறையும் பொதுவாக 108 முறையும் பாராயணம் செய்யவும்..!
ஹனுமான் சாலிஸா சோஸ்த்திரம் இரவு வேளையில் ஒரே இடத்தில் ஆசனத்தில் 11 முறை பாராயணம் செய்யவும், ஹனுமான் சாலிஸா சோஸ்த்திரம் பாராயணத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்க தினமும் பாராயணம் செய்யும் முன்னர் "ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வராணனே" என்று உச்சரித்து ஆரம்பியுங்கள்..!
விஷ்ணுவின் கூர்ம அவதாரத்தை வழிபடுங்கள், ஹனுமான் பூஜை செய்யுங்கள்..!
சனிக்கிழமை நல்லேண்ணை தேய்த்து குளிப்பது உத்தமம்..!
கருப்பு எள்ளு தானம் தாருங்கள், எருமை மாட்டை தானம் கொடுங்கள், நல்லெண்ணை தானம் கொடுங்கள்..!
தோல் ஆடை அல்லது பை, செருப்பு, கருப்பு நிற துணிகள் போன்றவற்றை சுக்கிலபட்ச சனிக்கிழமையில் தானம் கொடுங்கள்..!
சனிக்கிழமை விரதம் இருக்கலாம், 14 முக ருத்திராட்சம் அணியலாம்..!

மீண்டும் சந்திப்போம்..!

Tuesday, October 5, 2021

தெய்வீக ரகசியங்களை படித்து புரிந்து கொள்ளுங்கள்.

#தெய்வீக #ரகசியங்கள்!

1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் . குறிப்பாக துளசி அல்லது தொட்டா சிணுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்

2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .

3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்யபணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து
ஆயுளை விருத்தி செய்யும் .

4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .

5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரிசெய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல்
தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .

6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .
7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் , மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .

8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை , பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )
நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் ,மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .

9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது , இறந்த நாகத்தின் உடலைகண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து காக்கும்.
அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் ( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )

10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவைலான பொருட்களை வாங்கி கொடுப்பது,
வெள்ளத்துடன் பச்சரிசி  தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ..