Sunday, May 30, 2021

சித்தர் பட்டினத்தார் உடைய கருத்துள்ள பாட்டு.

*சித்தர் பாடல் - பட்டினத்தார்..!*

"நாட்டம் என்றே இரு! சற்குரு
பாதத்தை நம்பு பொம்மல்
ஆட்டம் என்றே இரு! பொல்லா
உடலை: அடர்ந்த சந்தைக்
கூட்டம் என்றிரு சுற்றத்தை
வாழ்வைக் குடம் கவிழ் நீர்
ஓட்டம் என்றே இரு நெஞ்சே
உன்னக்குபதேசம் இது."

- பட்டினத்தார் -

"உண்டென்றிரு தெய்வம் உண்டென்
றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம்
பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடுநீங்காம
லே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு
உப தேசம் இதே"

- பட்டினத்தார் -

மேலே சொல்லப்பட்ட இரண்டு பாடலும் பட்டினத்தார் தன் மனதிற்கு தானே சொல்லிக் கொள்வது போல அமைந்துள்ளது.

உண்மையை உணர்ந்த ஒழுக்கமுள்ள குருவின் உபதேசங்களை நம்பு, அவர் திருவடிகளை தொழு,

உனது உடலும், உறவுகளும், செல்வமும் நிலையானது என்று நம்பாதே ,

அப்படி நம்பினால் உடலை வளர்க்கவே பாடுபடுவாய்.

இந்த உடல் தோன்றி மறையும் பொம்மலாட்டம் என்று எண்ணு. 

குடத்தைக் கவிழ்த்ததும் ஓடி மறையும் நீர் போல நிலையற்றது செல்வம் என்று உணர்ந்துகொள். 

இந்த உண்மையை மறவாமல் எண்ணியிருந்தால் பாவம் செய்யாமல் நன்மை செய்து வாழ முடியும்.

மனமே! நான் உனக்கு செய்யும் உபதேசம் இதுவே, என்று சொல்லும் பட்டினத்தார்....

தொடர்ச்சியாக

யாராக இருந்தாலும் முதலில் தன்னை ஒரு ஒழுங்கில் வைத்திருக்க வேண்டும், 

நேர்மையான வழியில் நடத்தல் வேண்டும், 

தீய வழியில் நடந்து கொண்டு, பிறருக்கு உபதேசம் செய்பவர் சொல்லும் சொல்லுக்கு மதிப்பிருக்காது,

அகந்தையை விடுங்கள், பஞ்சமா பாதகரின் கூட்டுறவு வேண்டாம், 

பாவ செயல்களில் இருந்து விலகியிருப்போம்,

நல்லவர்களை குறை கூறாது அவர்தம் நட்பை நாடுவோம், 

பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கு நன்னடத்தை முதன்மையானது, 

எண்ணம், சொல், செயல் இந்த மூன்றும் ஒன்றாய் நன்றாய் இருப்பதே சிறந்தது.

இந்த உண்மைகள் பட்டினத்தார் பாடல்களில் நமக்கு விளங்குகின்றன. 

இதுவே பண்டைத்தமிழர் பின்பற்றிய ஒழுக்க நெறி.

புதிய மனிதனாய் எழுந்து பாருங்கள்.....

சித்தர் பட்டினத்தார் திருவடிகளே போற்றி..!

*"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"*

Saturday, May 29, 2021

புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே தரிசிக்கக் கூடிய சிவா ஆலயம்.

🍁புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!
🙏🙏

🍁உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

🍁அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

🍁பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.
🍁சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

🍁சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. 🍁இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.

🍁மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது.

🍁திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

🍁படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

🍁 இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.

🍁உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.

🍁ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

🍁அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.
“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!

உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறினான் அரசன்.

🍁அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.

🍁இது ஆறாவது சிலை.
ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

🍁மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.
உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.

🍁 இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.
“அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.
🍁சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.
“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.
அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றான்.

“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?

கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று பதட்டத்தோடு சொல்ல.

“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்” என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..

🍁சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.

ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

🍁அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.
கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.

🍁உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!

🍁வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.
ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

🍁குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

🍁நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.

🍁ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான்.

🍁”உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை என்று தலையாட்டினார், “என்ன சொல்ல வருகிறாய்?” மன்னன் மறுபடியும் சீறினான்.

🍁”இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சொல்ல….
“இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான்.

🍁”இல்லை அரசே .இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.

உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

🍁பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது! தரையை நனைத்தது.

🍁மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.
இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.🙏

🍁எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.

🍁வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.
கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் *திருநல்லம்*. இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

🍁ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.

🍁உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!

🍁 கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.

🍁அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!

🍁 தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.

🍁தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.

🍁இறைவி பெயர் தேகசௌந்தரி,
ஸ்தலமரம் அரசு,
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.

🍁கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும்.

🍁குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்.
🍁 எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள்!

கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்களேன்!

திருநல்லம் ஒரு முறையேனும் சென்று வாருங்கள். சிவ அழகில் சொக்கிப் போய் வருவது கண்கூடான உண்மை…!🙏
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

Friday, May 28, 2021

சக்திவாய்ந்த தேங்காய் பரிகாரம்.

*திருஷ்டியால் துன்பமா?* *துர்சக்திகளை விரட்டும் தேங்காய் மகிமை!*

தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளை உள்ளடக்கியது.

மேலும் நிலம், நீர், ஒளி, காற்று, விண் ஆகிய பஞ்சபூத தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்சபூத சக்திகள் குவிக்கப்படுகிறது. இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது சிவனின் மூல சக்தியாக உள்ளது. இதில் உள்ள முக்கண்களின் வழியே பஞ்சபூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும். கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும்போது அது இறை சக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது.

இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது.

ஒரே இடத்தில் தேங்காயை சிதறுகாய் இடும்போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும். முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது அங்கு துர்சக்திகள் விலக்கப்படுகிறது.

ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில், திங்கள் கிழமையின் முற்பகலில் முச்சந்தி விநாயகருக்கு வாரம்தோறும் சிதறுகாய் இட்டால் காலசர்ப்பதோஷம் கூட சரியாகிவிடும். வீட்டில் தினம் ஒரு தேங்காயை உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.

மாந்திரீகத்தில் சண்ட காளிவேர், நரபூதாளம், சூலநாசவேர் இவற்றுடன் வேண்டாதவரின் காலடி மண் இந்த நான்கையும் நவமி திதியில் வேங்கை மரத்தின் கீழ் பதித்தால் சம்பந்தப்பட்டவர்கள் நிலை அதோகதிதான். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மறு நவமி வரை அந்தியில் தேங்காய் உடைத்து உடன் நுகரச் செய்தால் குணமாகிவிடும். இது சித்தர்கள் முறையாகும்.

முள்ளம்பன்றி முள், எட்டிமர வேர், இரண்டையும் வீட்டில் வைத்து விட்டால் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துவிட்டால் சுபிட்சம் ஏற்படும். மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசுபிசுவென்று இருப்பதை காணலாம்.

அமாவாசையில் பிறந்த குழந்தைகள் கெட்ட பெயரெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த குழந்தைகளுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் குணம் மாறும்.

குழந்தைகளுக்கு தேங்காய் பால் கொடுத்தால் உடல் பலமாகும். ஞாபக சக்தி கூடும். வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் தேங்காயில் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டிவிட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்டியும் கழிந்துவிடும்.

வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறு காய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும்...

Wednesday, May 26, 2021

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக படிக்க கூடிய பதிவு இது.

*படித்ததில் பிடித்தது*

60/65 வயதிற்கு மேற்பட்ட*  இருபால் அன்பர்களுக்கும் 
சில முக்கியமான டிப்ஸ்:-

1.பாத்ரும் செல்லும் பொழுது (வீட்டில்)  கதவை சும்மா சாத்தி வைங்க, -  தாழ் போடவேண்டாம்.
2.வீட்டை தண்ணீர் கொண்டு தரையை துடைக்கும்பொழுது நடக்க வேண்டாம்.
3.ஸ்டூல், நாற்காலி, பெஞ்ச் போன்றவற்றின் ‌மீது ஏறி பொருட்களை எடுப்பது,சுத்தம்செய்வது, துணிகளை
காயப்போடுவது, போன்ற வேலைகளை தவிர்க்கவும்.
4.கார் இருந்தால் தனியாக ஓட்டவே  கூடாது. கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும். 
5.மாத்திரை மருந்துகளை  வேளாவேளைக்கு தவறாமல்எடுத்துக் கொள்ளவும்..
6.உங்களை எந்தவிஷயம் சந்தோஷப்படுத்துமோ அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம்.
7. வங்கிக்கு பணம்  எடுக்கச் சென்றால் தனியாகச் செல்ல வேண்டாம். துணையுடன்செல்லவும்.
8. வீட்டில் தனியாக இருக்கும்பொழுது அறிமுகமில்லாத யாராவது வந்தால் கூடியவரை அச்சூழலை
தவிர்க்கவும். அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும்.
9. கூடியவரை படுக்கையறை, குளியலறை, கழிப்பறை  ஆகியவற்றில் காலிங் பட்டன் அவசியம். அசாதாரண சூழலில் அழைப்பதற்கு உதவும்.
10. சைக்கிள் முதல் கார் வரை அனைத்து வாகனங்கள் ஓட்டுவதை முடிந்தஅளவு தவிர்க்கவும்.
11. வாழும் காலத்தில் உடல்நலம், மன அமைதி, மன மகிழ்ச்சி, உறவின நண்பர்கள்தொடர்பு மற்றும் துணை போன்றவை அதிமுக்கியம். மிக மிக அவசியம். எல்லோரிடமும் இனிமையோடு பழகவும்.
12.கடந்தகாலம்  மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள்🙏 வேண்டாம். நிகழ்காலம் உன்னதமானது. அதை முழுமையாக, மகிழ்ச்சியாக,இனிமையாக  அனுபவித்து வாழுங்கள்.  
தங்களுக்கு எல்லாம் வல்ல இறையருளும் குருவருளும் துணைபுரிய வாழ்த்தி மகிழ்கிறேன்.💐
நன்றி!!! 🍒
வாழ்க நலமுடன்🙏
வாழ்க வளமுடன்

Saturday, May 22, 2021

நாக தோஷம் தீர்க்க பரிகாரம்.

#நாகதோஷம்! 

"நல்ல உடல்நிலை கொண்ட திடகாத்திரமான மனிதருக்கு, எந்த காயங்களும் இல்லாமலேயே, திடீரென்று சில இடங்களில் முதுகுத்தண்டு வீக்கமடைய துவங்கும் - இது நாகதோஷம்".
"முடிவில்லாத சிறுநீர் பாதை தொற்றுநோய் எந்த காரணமும் இல்லாமல் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இதை நாம் நாகதோஷம் என்று சொல்வோம்".

இதற்கு பல அம்சங்கள் உள்ளன. நாகதோஷம் என்று சொல்லும்போது, நாம் வெளியில் உள்ள ஒரு பாம்பைப் பற்றி சொல்லுவதில்லை. இன்று, ஓர் நிரூபிக்கப்பட்ட உண்மை என்ன வென்றால், உங்கள் மூளையின் ஒரு குறிப்பிட்ட பாகம் ஊர்வனவற்றிற்கான மூளையின் அம்சம் (Reptilian Brain) கொண்ட தன்மையாக உள்ளது. உங்கள் மூளைக்குள்ளேயே ஒரு சிறிய மூளை, தோராயமாக உங்கள் கைமுட்டி அளவு உள்ளது. அது ஒரு முதலையின் மூளை அளவில் உள்ளது.

மூளையின் இந்த பகுதிதான், உங்கள் பிழைப்புக்கு உதவிகரமாக உள்ளது. மூளையின் இந்த பகுதிதான், நீங்கள் எங்கு செல்லவேண்டும், எங்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்துகிறது. மூளையின் இந்த பகுதிதான், எல்லா பயங்களுக்கும் அடிப்படையானது. மூளையின் இந்த பகுதிதான், எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும் என்று விரும்புகிறது. மூளையின் இந்த பகுதிதான், உங்களை திருமணம் புரியச் செய்தது. ஏனென்றால், திருமணம் என்பது உங்கள் எல்லைகளை நிர்ணயிப்பதற்கான ஒரு வழிதான். குடும்பம் என்பது ஒரு எல்லைதானே? உண்மையா, இல்லையா? குடும்பம் என்பது ஒரு எல்லை, ஒரு மரபுரீதியான எல்லை. எனவே, பெரும்பான்மையான மக்களுக்கு மூளையின் இந்த பகுதிதான் அதிகமாக செயல்படுகிறது. மூளையின் அடுத்த பகுதியான புறமூளை (Cerebral Cortex) என்பதை, துரதிஷ்டவசமாக பெரும்பான்மையான மக்கள் ஒரு பிரச்சனையாகவே உணர்கிறார்கள்.

பெரும்பான்மையான மக்கள் விடுதலையை நாடுவதில்லை. அவர்கள் பந்தத்தையே விரும்புகிறார்கள், உண்மைதானே? நீங்கள் சுதந்திரத்தை விரும்புகிறீர்களா அல்லது பந்தத்தை விரும்புகிறீர்களா? கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், நீங்கள் ஒருவிதமான பந்தத்தையே விரும்புகிறீர்கள் என்று உங்களுக்குப் புரியும். நீங்கள் எப்போதுமே ஒரு விதத்தில் கட்டுண்டு இருப்பதையே விரும்புகிறீர்கள், அதுதான் ஊர்வனவற்றிக்கான மூளை என்பது. உங்களை மனிதனாக்குகிற புறமூளையின் பரிமாணங்கள் உங்களுக்குள் செயல்படுமேயானால், நீங்கள் சுதந்திரம் அடையவே விரும்புவீர்கள். நீங்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுதலை அடைய விரும்புவீர்கள்.

ஆன்மீக செயல்பாடுகள் இயல்பானவை. தேடுதல் என்பது இயல்பானது. ஆனால், நீங்கள் ஊர்வனவற்றிக்கான மூளையின் பாகத்திலிருந்து செயல்படுவீர்களானால், அதைத்தான் நான் நாகதோஷம் என்பேன். இதுவே மிகக் கொடிய விதமான நாகதோஷம். ஆனால், உண்மையில் நாகதோஷம் என்பது பலதரப்பட்ட நிலைகளில் உள்ளது. சிலர் தோல் சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாவர் - இதுவும் நாகதோஷமே. ஆனால், நீங்கள் உங்கள் ஊர்வன வற்றிக்கான மூளையோடு எல்லைகட்டி நிற்பதே மிகக் கொடிய விதமான நாகதோஷம் ஆகும். உங்களை மனிதத் தன்மைக்கு கொண்டு வருகிற மூளையின் பாகம் இன்னும் செயல் பாட்டில் இல்லை. நீங்கள் இதை எல்லாவற்றிற்குமான ஒரு தீர்வு என்பதை விட ஒரு தொந்தரவாகவே, ஒரு பிரச்சனையாகவே உணர்கிறீர்கள்.

ஆகையால், ஆன்மீக செயல்பாடு என்பது இதுதான்:  எப்போதும் எல்லை கட்டவே முயற்சிக்கின்ற ஊர்வன வற்றிக்கான மூளையிலிருந்து விடுபட்டு செல்வது. ஒரு நாய் எல்லா இடத்திலும் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது அந்த நாய்க்கு ஏதோ சிறுநீர் பிரச்சனை இருக்கிறது என்பதால் அல்ல. (சிலர் சிரிக்கிறார்கள்). அது தன் எல்லையை நிர்ணயம் செய்துகொள்கிறது. நீங்கள் நம்புவது போலவே, அந்த நாயும் அதுவே தனது ராஜ்ஜியம் என நம்புகிறது. நீங்கள் தொடர்ந்து எல்லைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள் - மக்களுடனோ அல்லது பொருள்களுடனோ அல்லது இப்புவியின் பரப்புடனோ - நீங்கள் எல்லை கட்டவே விரும்புகிறீர்கள். ஊர்வனவற்றிக்கான மூளையின் அதிகபட்ச வெளிப்பாடுதான் தேசம். ஊர்வனவற்றிற்கான மூளையின் குறைந்த பட்ச வெளிப்பாடுதான் குடும்பம் (கை தட்டல்). எனவே நீங்கள் கண்டிப்பாக நாகதோஷத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள், சர்ப்பத்தின் சாபத்தினால்.

எனவே, நீங்கள் விடுதலை அடைய, நாகம் தனது எல்லைகளைக் கடந்து மேலெழும்புதல் என்பது யோகத்தின் முழு அடையாளமாகவே உள்ளது. நாகம் எப்போது மேலெழும்புகிறதோ அப்போது அது நுண்ணுணர்வின் வித்தியாசமான பரிமாணமாக ஆகிறது, அங்கே அது எல்லா தளைகளையும் உடைக்கிறது, எல்லா எல்லைகளையும் கடந்து செல்கிறது. மனிதத்தன்மை என்று கருதப்படுவதையும் தாண்டிச் செல்கிறது. எனவே நாகத்தை தன் தலைக்கு மேலே கொண்டவனை தமிழில் கடவுள் என்றே சொல்கிறார்கள். ஏனென்றால், அவனுடைய உணரும்திறன், அவன் உள்ளனுபவம், அவனுடைய புரிதல் எல்லா எல்லைகளையும் கடந்து நிற்கிறது. எனவே நீங்கள் அவனை கடவுளுக்கு ஒப்பானவன் என்றே கொள்வீர்கள்.

தீராநோய்களும் நாகதோஷமும்:

இந்தியாவில் உள்ள சில ஊர்களில், பொதுவாக நாகதோஷம் என்று சொல்லப்படுவது, ஒரு குறிப்பிட்ட விதமான நோயாகும். அது எந்தவித சிகிச்சை முறைக்கும், எந்த மருந்துக்கும் கட்டுப்படாது. ஆனால் நீங்கள் நாகம் சம்பந்தப்பட்ட ஒருசிலவற்றைச் செய்தீர்களேயானால், அந்நோய்கள் மறைந்தே போகும். சில சமயங்களில், இது, சிறுநீர் பாதை தொற்றுநோய் போல வெளிப்படலாம். நீங்கள் எண்ணற்ற மருத்துவரிடம் செல்லலாம், எவ்வித மருந்தும் உட்கொள்ளலாம். ஆனால் வருடக்கணக்கில் குணமடையாது, குணமடையாது, குணமடையவே ஆகாது. மருத்துவர்கள் இது போன்றோரை பார்த்திருக்கக்கூடும். முடிவில்லாத சிறுநீர் பாதை தொற்றுநோய் எந்த காரணமும் இல்லாமல் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இதை நாம் நாகதோஷம் என்று சொல்வோம். நோய் எதற்குமே கட்டுப்படவில்லை எனும்போது, சில குறிப்பிட்டவற்றை ஒருவர் செய்யமுடியும்.

ஏனென்றால், இந்நாட்களில் பெரும்பான்மையானவர்களுக்கு முதுகுத்தண்டு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவர்களுக்கு உடலில் போதுமான அளவு தசைகள் இல்லை - அது வேறு விஷயம். அவர்கள் தங்கள் உடலை கல்லறைக்காக பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உடலை அவர்கள் உபயோகப் படுத்துவதே இல்லை. அந்த மாதிரியானவர்களுக்கு முதுகுத்தண்டு பிரச்சனை இருக்கும். இது அதை பற்றி அல்ல. நல்ல உடல்நிலை கொண்ட திடகாத்திரமான மனிதருக்கு, எந்த காயங்களும் இல்லாமலேயே, திடீரென்று சில இடங்களில் முதுகுத்தண்டு வீக்கமடைய துவங்கும் - இது நாகதோஷம்.

சில குறிப்பிட்டவற்றைச் செய்வதன் மூலம் இதை சுலபமாக சரிசெய்துவிட முடியும். அவர்கள் கோயிலுக்கு சென்று வந்தாலே பிரச்சனை மறைந்துவிடும். இதுபோன்ற எண்ணற்ற மக்களை, குறிப்பாக தென்னிந்தியாவில் நீங்கள் பார்க்க முடியும். அல்லது அவர்கள் ஏதேனும் அர்ப்பணம் செய்தால் அது மறைந்துவிடும்.

Thursday, May 20, 2021

கொராணா பற்றி சில கேள்விகள் மற்றும் சில பதில் கள்.

கொரோனா சில சந்தேகங்கள் ...

1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?* 

இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை. 

2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?* 

இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந்த வைரஸ்க்கு இருக்கிறது. 

3. *கரோனா வைரஸ் வந்து போனதே தெரியாமல் பலர் இருக்கலாம் என்று கூறுகிறார்களே உண்மையா ?* 

ஓரளவு உண்மை. ஆனால் ஏதாவது ஒரு அறிகுறியையாவது அவர்கள் அனுபவித்து இருப்பார்கள். அது காய்ச்சலாகவோ, லேசான சளியாகவோ, உடல்வலியாகவோ இருந்து இருக்கலாம். எந்த அறிகுறியும் தராமல் கரோனா வைரஸ் உங்கள் உடலை விட்டு நீங்கி இருக்காது. வெளிப்புற அறிகுறி உங்களுக்கு தெரியாவிட்டாலும் *CT Lungs* எடுத்து பார்த்தால் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. எனவே ஒரு அறிகுறியையாவது நீங்கள் அனுபவிப்பீர்கள்.

4. *எனக்கு இருமல் காய்ச்சல் இருக்கிறது. ஆனால் சோதனை செய்ய பயமாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் ?* 

உங்களுக்கு இருமல் காய்ச்சல் ஒரு நாள் இருந்தால் கூட யோசிக்காமல் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் *RT PCR* பரிசோதனைக்கு உங்கள் மாதிரியை கட்டாயம் கொடுங்கள். உயிர் காக்க முன்னரே நாம் நடவடிக்கைகள் எடுத்து கொள்ளலாம். பயந்து சோதனை செய்யாமல் இருந்தால் வைரஸ் பல்கி பெருகி உங்கள் உயிருக்கே உலை வைக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லும்போது உங்களால் பலருக்கு பரவ வாய்ப்பும் இருக்கிறது. 

5. *கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் பேசினாலே அல்லது அவர் சென்ற அறைக்கு சென்றாலே அவர் தொட்ட பொருளை தொட்டாலே நாம் தொற்றுக்கு உள்ளாகி விடுவோமா ?* 

அமெரிக்காவின் CDC வெளியிட்ட தரவுகளின் படியும் உலக சுகாதார நிறுவனத்தின் கடந்த ஒரு வருட ஆய்வறிக்கையின் படி *99 சதவீதம் மூக்கு வழியாக தான்* இந்த கரோனா வைரஸ் பரவுகிறது. அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருள் மூலமாக இன்னொருவருக்கு பரவுவது என்பது 0.001 வாய்ப்பு தான் என்று உலக சுகாதார நிறுவனமே கூறி இருக்கிறது. அப்படி பரவி இருந்தால் இதற்குள் உலக மக்கள் தொகை பாதி அழிந்து இருக்கும். கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்முவதன் மூலமும் இருமுவதின் மூலமாக தான் அதிகம் பரவுகிறது. 

6. *பிறகு ஏன் கோலப்பொடி போல குளோரின் பொடியையும் மருந்தையும் கரோனா பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிலும் அலுவலகத்திலும் தெளித்து சுத்தம் செய்கிறார்கள்? அவ்வாறு செய்வதால் கரோனா அழிந்து விடுமா ?* 

கண்டிப்பாக இல்லை. கரோனா பரவிய நேரத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டு இந்த வைரஸ் பற்றிய தெளிவு உலக சுகாதார நிறுவனத்திடம் இல்லை.கடந்த ஆண்டே உலக சுகாதார நிறுவனம் கிருமிநாசினி வீட்டிலும் அலுவலகத்திலும் தெளிப்பதால் கரோனா வைரஸ் ஒழியாது என்று தெளிவாக  கூறிவிட்டது. இவ்வாறு தெளிப்பதால் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் சாகுமே தவிர கரோனா வைரஸ் அழியாது. 

7. *ஏன் சிலர் லேசான அறிகுறிகளாலும் சிலர் தீவிர அறிகுறிகளாலும் பாதிக்கப்படுகின்றனர் ?*

இதற்கு பல காரணங்கள் உள்ளன. வயது, ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டது என பல காரணங்கள் உள்ளன. ஆனாலும் முக்கிய காரணம் நீங்கள் எவ்வளவு அளவு வைரசால் (Viral Dose) பாதிக்கப் படுகிறீர்கள் என்பது முக்கிய பங்காற்றுகிறது. அதிக அளவு வைரஸ் க்கு நீங்கள் Expose ஆனால் தீவிர தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. குறைந்த அளவு Viral Dose க்கு நீங்கள் Expose ஆனால் குறைவான பாதிப்புக்கு உள்ளாகலாம். அதே நேரத்தில் உடலின் உச்ச பட்ச நோய் எதிர்ப்பு போராட்டமான *Cytokine Storm* அதாவது நம் உடல் சொந்த செல்லையே தாக்கி கொல்லும் நிலைக்கு உங்கள் உடல் சென்றாலும் உயிரிழப்பு ஏற்படும். 

8. *கரோனா Positive என்று அறிய வந்தால் என்ன செய்ய வேண்டும்* ? 

முதலில் பதறக் கூடாது. யாரிடமும் மறைக்க கூடாது. வீட்டில் உள்ளவரிடம் தெரியபடுத்தி 14 நாட்களுக்கு தனி அறையில் இருக்க வேண்டும். வெளியே வரவே கூடாது. முதல் நாளிலேயே உங்கள் நுரையீரலை CT Scan எடுத்து பார்த்து விடுவது நல்லது. தொடர்ந்து 5 நாட்கள் மேல் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். பெரும்பாலனோருக்கு காய்ச்சல் முதல் மூன்று நாட்களிலேயே குணமாகி மற்ற அறிகுறிகளான இருமல் உடல் வலி தொடர்கிறது.ஆனால் தொடர் காய்ச்சல் என்பது நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயமாக கருத வேண்டும். 

9. *என்னென்ன மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்* ? 

Paracetamol காய்ச்சலை குறைப்பதற்கும் இருமல் என்பது பாக்டிரியாவல் ஏற்படுவது எனவே அதை குறைக்க Antibiotics ஆன Cefixime or Azithromycin or Amoxcyillin மாத்திரைகளை தவறமால் உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து காலை இரவு என உட்கொள்ளும் பட்சத்தில் ஐந்து நாட்களில் உங்களுக்கு உடல் முன்னேற்றம் தென்படும். 

10. *எப்போது நாம் அச்சம் கொள்ள வேண்டும்* ? 

கரோனா பாதித்து 5,6,7 ஆம் நாட்கள் மிக முக்கியமானது. அப்போது உங்களுக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்று விட வேண்டும் 

11. *என்ன சாப்பாடு சாப்பிட வேண்டும்* ? 

வழக்கமான சாப்பாடு சாப்பிட்டாலே போதுமானது. அதே நேரத்தில் அதிகமான நீர் குடிக்க வேண்டும். பழச்சாறு தவறாமல் பருக வேண்டும். புரதமே உடலின் கட்டுமான வீரர்கள். எனவே சைவம் என்றால் பருப்பு வகைகளையும் அசைவம் என்றால் சிக்கன் மீன் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உங்களுக்கு சுவை மணம் போன்ற உணர்வுகளை இழந்து இருப்பீர்கள். சாப்பிட முடியாது, ஆனால் சாப்பிட்டே ஆக வேண்டும் தவறாமல். ஒன்றே ஒன்று தான். உங்கள் உடல் ஆற்றலை இழக்க கூடாது. இழக்கும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அதிக தொற்றுக்கு அது வழி வகுக்கும். 

12. *Walking,Yoga போன்றவற்றை செய்யலாமா* ? 

தாராளமாக செய்யலாம். நீங்கள் அடைந்து இருக்கும் அறைக்குள் மட்டுமே. ஆனால் இதையெல்லாம் செய்ய உங்கள் மனம் ஒத்துழைக்காது என்பதே உண்மை. ஏனெனில் அதிக உளவியல் பாதிப்புக்கு உள்ளாகும் போது உங்களால் சகஜமாக இருக்க முடியாது. 

13. *ஏன் கரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர்* ? 

நோய் பற்றிய புரிதல் இல்லாததும் அறிவியல் விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம். இது ஒரு தொற்று. அதே நேரத்தில் அசிங்கப்பட கூடிய நோய் ஒன்றும் அல்ல. இது வல்லரசு நாடுகளின் அதிபர்கள் முதல் பாமர மக்கள் வரை யாரை வேண்டுமானாலும் பாதிக்க கூடிய தொற்று. எனவே பாதிப்பு வந்த உடன் நாம் சொல்லும் போது மட்டுமே மற்றவர்கள் நம்மிடம் வராமல் இருக்கவும் நம்மால் பிறருக்கு பரவாமல் இருக்கவும் நாம் செய்யும் சமூக கடமை. அதே நேரத்தில் உங்கள் அனுபவங்களை பகிர்வதன் மூலம் பலர் எச்சரிக்கையுடன் இருப்பர். வைரசின் சங்கிலியை அறுத்தாலே கரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வந்துவிடும் 

14. *கரோனாவால் பாதிக்கபட்டால் நம் உடல் மீண்டும் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புண்டா* ? 

இயற்கையாகவே நம் உடல் எல்லா விதமான வைரஸ் பாக்டீரியாவை எதிர்கொள்ளும் திறன் உடையது தான். ஒரு புதுவிதமான வைரஸ் உள்ளே வரும்போது தான் நம் உடல் திணறும். அந்த திணறலே காய்ச்சல் இருமல் உடல்வலியாக நமக்கு நம் உடல் நம்மிடம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் வைரஸை முழுமையாக நம் உடல் போரிட்டு வென்ற உடன் நம் உடலில் Antibodiesஐ உற்பத்தி செய்துவிடும். இது அடுத்த நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். 
ஆனால் கரோனவை பொறுத்தவரை இயற்கையாகவே நம் உடலில் Antibodies உற்பத்தி ஆனாலும் சுமார் 6-9 மாதங்களே அந்த பாதுகாப்பு இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உங்கள் உடல் எந்த அளவிற்கு Antibodies உற்பத்தி செய்துள்ளது என்பதை கரோனா பாதித்த 21 நாட்களுக்கு பிறகு Covid Antibody Test எடுத்து பார்த்தால் நமக்கு தெரியவரும். அந்த சோதனையில் Antibodies கம்மியாக இருந்தால் நீங்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி அந்த Antibodies அளவை கூட்டிக் கொள்ளலாம். இது மீண்டும் தொற்றுக்கு உள்ளாவதில் இருந்து கூடுதல் பாதுகாப்பு தரும். 

15. *தொற்றில் இருந்து தப்பிக்க மிகச்சிறந்த வழி என்ன* ? 

Mask மட்டுமே. Mask ன் முன் பகுதியை நாம் தொடக்கூடாது. தொட்டுவிட்டு கழட்டி நம் முகத்தை துடைத்தால் தொற்றுக்கு உள்ளாக நேரிடும். அதே போல் கையுறை பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல மூக்கு தான் கரோனாவின் நுழைவு வாயில். 

16. *கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா* ? 

கட்டாயம் எடுத்து கொள்வது நல்லது. இது தீவிர தொற்று நிலைக்கு கொண்டு செல்லாமல் உங்களை பாதுகாக்க உதவும். அதே நேரத்தில் தடுப்பூசி எடுத்து கொண்டாலே கரோனா தாக்காது என்று எண்ண கூடாது.

(ஒரு மருத்துவரின் பதிவு)

Wednesday, May 19, 2021

அனுபவமே உயர்ந்தது என்ற உண்மையை காட்டுகின்ற கதை.

அனுபவமே உயர்ந்தது.....

பார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர் புத்தரிடம் அழைத்து வந்தனர். அவர்கள் "இந்த இளைஞன் வெளிச்சத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்" என்று கூறினர். அப்போது பார்வையற்ற இளைஞன் "வெளிச்சத்தை நான் தொட்டு பார்க்க வேண்டும். சுவைத்து பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?" என்றான்.

அவனுடன் வந்தவர்கள் புத்தரிடம், "நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்" என்று கூறினர். அதற்கு புத்தர், "அவன் உணர முடியாத ஒன்றை அவனை நம்ப வைக்கும் செயலை நான் செய்ய மாட்டேன். இப்போது அவனுக்கு தேவை பார்வை. வெளிச்சம் பற்றிய விளக்கமல்ல. அவனுக்கு பார்வை வந்து விட்டால், விளக்கம் தேவைபடாது. அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வை கிடைக்கச் செய்யுங்கள்" என்று கூறி அனுப்பினார்.

புத்தர் கூறியதை ஏற்று பார்வையற்ற இளைஞனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சை முலம் அவனுக்கு பார்வையும் கிடைத்தது. உடனே அந்த இளைஞன் புத்தரிடம் ஓடி வந்து, "வெளிச்சம் இருக்கிறது" என்று கூறினான். உடனே, புத்தர், “வெளிச்சம் இருக்கிறது என்று அவர்கள் கூறிய போது ஏன் நம்ப மறுத்து விட்டாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன், "கண் தெரியாத என்னால், எவ்வாறு வெளிச்சத்தை உணர முடியும்? அவர்கள் சொன்னதை அப்படியே நான் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்னும் நான் கண் தெரியாதவனாகவே இருந்திருப்பேன்" என்றான்.

"அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது" என்பதை புத்தர் இந்த நிகழ்ச்சியின் முலம் சீடர்களுக்கு புரிய வைத்தார்.

Tuesday, May 18, 2021

பணத்தை அதிகமாக சம்பாதிக்க மற்றும் காப்பாற்ற பரிகாரம்.

பணத்தை சம்பாதிப்பது கஷ்டம் என்றால் அதைவிட அதை சேமிப்பது மிகவும் கஷ்டம். பணத்தை எங்கு வேண்டுமானாலும் வைக்க கூடாது.

பணம் வீட்டில் அதிகம் சேர முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது என்ன தெரியுமா? பணம் வைக்க பெட்டி ஒன்றை ஏற்படுத்துவது. அதாவது பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம் மாற்றம் உண்டாகும். மரபெட்டிக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. நீங்கள் 10,000 சம்பதிப்பவராக இருந்தாலும் சரி, 10,0000 சம்பாதிப்பவராக இருந்தாலும் சரி கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்ததும் இந்த பெட்டியில் வைத்து விடுங்கள். இந்த பெட்டியை எங்கே வைக்க வேண்டும்? எந்த திசையில் வைக்க வேண்டும்? வாஸ்து சாஸ்திரம் என்ன கூறுகிறது? இது போன்ற தகவல்களை இப்பதிவில் காணலாம் வாருங்கள்.

பெட்டியில் பணத்தை வைச்சா மட்டும் பணம் பெருகிடுமானு கேட்கலாம்!! ஆமாம் பெருகும். உதாரணத்திற்கு சாதாரணமாக உங்களால் சில்லறைகள் கூட சேமிக்க முடியாது. ஆனால் அதுவே ஒரு உண்டியல் வாங்கி வீட்டில் வைத்து பாருங்கள். கட கடவென சில்லறைகள், நோட்டுகள் என்று ஆர்வமாக போட்டு கொண்டு வருவோம். சிறிது காலத்திலேயே அந்த உண்டியலும் நிரம்பிவிடும். இதெல்லாம் புரியாத டிரிக்ஸ். ஜோதிடத்தில் இதனை வாஸ்து என்கிறார்கள். வாஸ்துவில் இதனை பண ஈர்ப்பு விதி என்கிறார்கள். ஒரு பொருளை நீங்கள் வைக்கும் திசை உங்கள் வாழ்க்கையில் சில மாறுதல்களை உண்டு பண்ணும். உளவியல், அறிவியல், ஆன்மீகம் அல்லது ஜோதிடம் எந்த பேரில் சொன்னாலும் பலன் மட்டும் உண்டு.

செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரன் ஒருவரது வீட்டில் வடக்கு திசையில் தான் அமர்கிறார். எனவே செல்வம் நிலைக்க மென்மேலும் பெருக வேண்டும் என்று நினைப்பவர்கள், உங்களது பணப்பெட்டியை வடக்கு திசையில் வைப்பது நல்லது. பணப்பெட்டி அல்லது பீரோ இவற்றில் தான் பணத்தை வைக்க வேண்டும். ஒரு சிலர் என்ன செய்வார்கள் என்றால், பணத்தை சமையல் அறையில் கொண்டு போய் வைப்பார்கள். இன்னும் சிலர் பணம், நகைகளை பரண்மேல் கூட வைப்பார்கள். அவ்வாறு வைப்பதும் சரியான முறை அல்ல. பணத்தைப் பணமாக மட்டும் பார்க்காமல் மகாலட்சுமி ஆக பார்க்க வேண்டும். அதற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும். பணத்தை சுற்றிலும் தெய்வீக மணம் வீச வேண்டும். பணப்பெட்டியில் அல்லது பீரோவில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, மாதுளை குச்சி போன்ற லக்ஷ்மி அம்சம் பொருந்திய பொருட்களை வாசனைக்காக வைத்துக்கொண்டால் செல்வம் நிலையாக தங்கும்.

வடக்கு திசையில் வைக்க முடியாதவர்கள் மாற்றாக கிழக்கு திசையில் வைக்கலாம். கிழக்கிலும் செல்வம் பெருகுவதற்கான வாஸ்து சாஸ்திரம் இடம்பெற்றுள்ளன. நீங்கள் பணத்தை வைக்கும் இடத்தில் லக்ஷ்மி குபேர படத்தை, அல்லது எந்திரத்தை வைத்துக்கொண்டால் செல்வம் மேலும் பெருகும். நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களாக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கை ஆனது வட மேற்கு திசையை நோக்கியவாறு இருந்தால், நீங்கள் பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கை இருந்தால் வலதுபுறத்தில் பணத்தை வைக்கும் இடம் அமைத்துக் கொள்வது நல்லது.

பணம் வைப்பதற்கான மிகச்சரியான திசை என்றால் வடக்கு திசை தான். அறையின் 4 மூலைகளில் கட்டாயம் பணத்தை வைக்கக்கூடாது. அதாவது வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு போன்ற மூலைகளில் பணத்தை வைப்பது கூடாது. தெற்கு திசையும் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இந்த திசைகளில் எல்லாம் நீங்கள் பணம் வைத்திருந்தால், உங்களது வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் குறையும். கையில் இருக்கும் பணம் விரைவாக செலவாகிவிடும். சேமிப்பதற்கு வாய்ப்புகள் அமையாது.

பணம் வைத்திருக்கும் இடமானது நுழைவு வாயிலை பார்த்தவாறு கட்டாயம் இருக்கக் கூடாது. வீட்டிற்குள் நுழையும் மற்றவர்களின் கண்களுக்கு நேரடியாக படாதபடி இருக்கவேண்டும். அதேபோல் பூஜையறையில் சிலர் பணத்தை வைத்திருப்பார்கள். இதுவும் தவறான முறையாகும். பூஜை அறையிலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்வது போல் வைத்துக் கொள்ளாதீர்கள். இதுவும் பணம் தங்காமல் போவதற்கு காரணமாக இருக்கும். வீட்டின் நுழைவு வாயில், சமையலறை, குளியலறை, கழிவறை, மாடிபடிக்கட்டுகள் இவற்றையும் நோக்கியபடி பணத்தை வைக்கக்கூடாது. பணம் வைத்திருக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக பார்த்து கொள்ள வேண்டும். பூச்சிகள் வரும்படி விட்டுவிட கூடாது..

பணம் வைத்திருக்கும் பெட்டியில் எப்போதும் 1 ரூபாய் நாணயம் ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் உபயோகப்படுத்தும் மணி பர்ஸிலும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்திருங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபரிடமிருந்து அல்லது உங்கள் வளர்ச்சியை பார்த்து பெருமைப்படும் நபரிடமிருந்து இந்த ஒரு ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

பணம் என்பது நிலையான ஒரு பொருள் அல்ல. இன்று இருக்கும் நாளை இல்லாமல் போகும். எவ்வளவு தான் பணம் வைத்திருந்தாலும் நொடிகளில் செலவு செய்து விடலாம். ஆனால் அதை ஈட்டுவதற்கு பெரும்பாடு பட வேண்டும் ஒரு சிலர் அவன் நிறைய பணம் வைத்திருக்கிறான், எப்படித்தான் இவ்வளவு பணம் சம்பாதித்தானோ என்று கண் வைப்பார்கள். இவ்வாறு நினைப்பதும் தவறான செயலாகும். பணம் சம்பாதிக்க அறிவும், திறமையும் இங்கே மூலதனமாக வைக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் நீங்கள் சம்பாதிக்கும் பணம் வீண் போவதில்லை. அடுத்தவர்கள் பேசுவதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. விடாமுயற்சியில் முன்னேறுங்கள். ஈட்டிய செல்வத்தை நிலைக்குமாறு வழி செய்து கொள்ளுங்கள்.

Saturday, May 15, 2021

பயமே அதிகமாக உயிரை கொல்லும்.

#உணர்ச்சிநெரிசலில் (#EmotionalStampede) சிக்கி கொத்துக்கொத்தாக இறந்து கொண்டிருக்கும் இந்திய மக்கள். 

வியாதியினால் இறப்பவர்களை விட,  பீதியினால் இறப்பவர்களே அதிகம் இருக்கக் கூடும் என நம்புகிறேன். 

பயமும் பதட்டமும் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு இளைஞனுக்கே கூட, அவனது உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை (#Cortisol) தூண்டும். அதனால் உடல் வெப்பநிலையை அதிகரிக்க வைக்கும். காரணம் உடல் வெப்பநிலையை மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் (#Hypothalamus) என்ற பகுதிதான் கட்டுப்படுத்துகிறது.
"சூடு உடம்பு" என்று சொல்வார்கள், கேள்விப்பட்டிருப்போம். "இவன் உட்கார்ந்து எழுந்தால், அந்த இடமே சூடாக இருக்கும்," என்றும் சொல்வார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இயற்கையாகவே பதட்ட சுபாவம் (#Anxious_Personality)உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் ஹைப்போதலாமஸ் மிதமாக வேலை செய்து கொண்டிருப்பதால், உடலில் சுரக்கும் அட்ரினல் என்னும் ஹார்மோன் உடல் வெப்பநிலையை கொஞ்சம் சூடாகவே வைத்திருக்கும். ஆனால் அவர்களுக்கு தெர்மாமீட்டரில் டெம்பரேச்சர் அளவிடும்போது  நார்மலாகத் தான் இருக்கும். 

மேலும் அந்த ஆரோக்கியமான இளைஞனுக்கு பயமும் பதட்டமும்
உடல் வெப்பநிலையை அதிகரிப்பது மட்டுமல்லாமல்...
நெஞ்சு படபடப்பு(palpitation),  அதீத உடல் அசதி(Severe fatigue),  மூச்சுத்திணறல் (breathing difficulty) ஆகியவற்றை ஏற்ப்படுத்தும். 

பதட்ட குணம் இல்லாதவர்களுக்கே கூட மேலே சொன்ன அறிகுறிகள் வரும் எனும்போது,
இயல்பாகவே பதட்ட சுபாவம் கொண்டவர்களுக்கு..., இந்த பயமும் பதட்டமும் பீதியாக(PANIC) மாறி இந்த அறிகுறிகளை பன் மடங்கு அதிகப்படுத்தும். ஆகையினால் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு கணமும்  

"இதனால் என்ன ஆகுமோ?,  நம் அன்புக்குரியவர்களை பறிகொடுத்து விடுவோமோ?,  நாம் பலியாகிவிட்டால் நம் குடும்பத்தை யார் பார்ப்பது?," 

என்பன போன்ற,  அதீத கட்டுப்படுத்த முடியாத துளைத்தெடுக்கும் எண்ண ஓட்டங்கள்( #irresistible intrusive thoughts),  அவர்களுக்குள் மேலும் மேலும் ஸ்ட்ரஸ் ஹார்மோன்களை சுரக்க வைத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைந்து, காய்ச்சல்-கோல்டு (Fever &cold) போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். 

உள உளைச்சல் சில நேரங்களில்
காமன் கோல்டு, முதல் கேன்சர் வரை
காரணமாகவும் பல நேரங்களில் பிரச்சனையை அதிகரிப்பதாகவும், ஆராய்ச்சிகள் சொல்கின்றன(#PsychologicalDistress can cause a cold or aggravate the seriousness of cancer progression). 

சூழ்நிலைகளில் ஏதேனும் பதட்டமடையச் செய்யும், கவலையுரச் செய்யும் நிகழ்வுகள் நடக்கும்போது
ஒரு கட்டத்தில்...... 

ஸ்ஸ்ஸஸபாபா.....என்று பெருமூச்சு (Sighing Respiration) விடுவோமல்லவா? 

அப்படி பெருமூச்சு விடுவதற்கு முன்பாக நம் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகளுக்கு, நாம் இழுத்துவிடும் அந்த ஒரு பெரிய மூச்சு....
நாம் இன்று மூச்சுப்பயிற்சி என சொல்கிறோமே?,  அதை உடல் இயற்கையாகவே செய்யும் ஒரு பாதுகாப்பு செயலே (defence mechanism) ஆகும். 

சிறுவயதில் நான் பெருமூச்சு விடும் நேரங்களில்  எனது பாட்டி,
"ஏண்டா பெருமூச்சு விடுற வீட்டுக்கு தரித்திரியம்டா," என்று சொல்வார்கள். அதன் அர்த்தத்தை நான் யோசித்துப் பார்க்கும்போது...  அந்தப் பாட்டி மறைமுகமாக அந்த காலத்தின் அறிவு மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப, 

"செல்லம் பயப்படாதடா" என்று சொல்வதற்கு பதிலாக,  அந்த பாட்டி கொஞ்சம் அதட்டி பயப்படாமல் இருக்கச் சொல்லும் ஒரு ஆலோசனையோ? என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த இடத்தில் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்று குழம்பாதீர்கள்.  நான் பலமுறை சொல்வதுண்டு. "நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை, ஆனால் அதை சொல்லி இன்றைய நவீன உணவு முறையை மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளாமல் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் மனிதர்கள் முட்டாள்கள் தான்".

இந்த உணர்ச்சி நெரிசலை பத்திரிகைகளும், சமூக வலைதளங்களும் செய்தி சேனல்களும் பன்மடங்கு அதிகப்படுத்தும் சமூக அவலத்தை கண்கூடாக பார்க்க முடிகிறது.  

ஸ்டாம்பீட் ( Stampede) என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்றால், கூட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்டு அல்லது மூச்சுத்திணறி உயிரை இழப்பது அல்லது பெரும் உடல்-உள காயங்களுடன் தப்பித்து வருவது. உதாரணமாக 1996 ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோயிலில் ஒரு தீ விபத்து நடந்தது. அப்போது கோயில் வளாகத்துக்குள் இருந்த சில நூறுபேர்  பீதியில், தப்பிக்கும் முயற்சியில் அந்த வளாகத்தில் இருந்து வெளியேறும்  ஒரே ஒரு நுழைவாயிலை நோக்கி அத்தனை பேரும் ஓடினார்கள். அப்போது அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் அதிகமானோர் இறந்து போனார்கள், 200க்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள்.  அதில் இறந்தவர்கள் ஒருவர்கூட தீயினால் கருகி இறந்தவர்கள் அல்ல.  தீயினால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் தான். 

அதேபோல இன்றைய கொரோனா நோய் 135 கோடி பேர் வாழும் இந்திய தேசத்தை தாக்கும்போது... கொத்துக் கொத்தாக பிணங்கள் கிடப்பது, அதை எரிப்பதற்கு சுடுகாடுகள் நிரம்பி வழிவது, பிணங்களை ஆற்றில் எரிவது போன்ற நிகழ்வுகளை ஊடகங்களின் வாயிலாக காணும் மனிதர்கள் பீதியடைந்து, உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை சுரக்க வைத்து, உணர்ச்சி நெரிசலில் சிக்கி அதனால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் கொரோனா நோய்க்கான அத்தனை அறிகுறிகளையும் அப்படியே வெளிப்படுத்தும் பட்சத்தில்... அதற்கான தீர்வு தேடி அலையும்போது அந்த அலைச்சல்-உளைச்சலாலேயே பலருக்கு கொரோனா தொற்று ஏற்படுவது மட்டுமல்லாமல், மிதமாக தொற்று ஏற்பட்வர்கள் அந்த அலைச்சல் நேரத்தில் உடலுக்கு நீரும், காற்றும் கிடைக்காமல்  உயிருக்கு ஆபத்தாகவே முடிந்துவிடுகிறது.
நேற்று ஒரு 34 வயது இளைஞன், கடந்த 2 மாதங்களில் ஆறு தடவை RT-PCR பரிசோதனை செய்திருக்கிறான். கொரோனா உடலில் வந்ததற்கான அத்தனை அறிகுறிகளும் இருக்கிறது. 

பத்து நிமிடத்திற்கு ஒருமுறை பார்க்கிறான்.
உடல் வெப்பநிலை 96, 97, 98 மாறி மாறி வருகிறது. PULSE-OXYMETERல் நாடித்துடிப்பு 95, 100, 110 என மாறி மாறி வருகிறது. ஆக்சிஜன் அளவு 99, 100, 96 என மாறி மாறி வருகிறது.  இரண்டு குழந்தைகளை வைத்திருக்கும் அந்த இளைஞன், நிலைகுலைந்து போயிருக்கிறான். தன்னால் தன் குடும்பத்துக்கு தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று தன்னை தனி அறையில் அடைத்து கொண்டு தூக்கமில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான்.  உறவினர்களும் நண்பர்களும், அக்கம் பக்கத்தினரும்... 

"பயப்படாதேடா!" 

என்பதை பல்வேறு கோணங்களில் அந்த அறையின் ஜன்னல் வழியாக மாற்றி மாற்றி அறிவுரைகளையும் ஆறுதல்களையும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் அனைத்தும் அவனுக்கே புரிகிறது. 

'தான் தேவையில்லாமல் அதிகமாக பயப்படுகிறோம்'
'தேவையில்லாமல் பரிசோதனைகள் செய்கிறோம்' 

என்பது நன்றாகவே அவனுக்குத் தெரிகிறது.  அவனுக்கு தெரியும் அதே விஷயத்தை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் சொல்லும்போது.. 

எனக்கே தெரிகிறதே?, ஆனால் அவர்கள் சொல்லும்படியாக என்னால் இருக்க முடியவில்லையே?! நான் குடும்பத்தினருக்கு பாரமாக இருக்கிறேனே?,  நான் உளைச்சல் அடைவது மட்டுமல்லாமல் மொத்த குடும்பத்தையும் உளைச்சல் அடையச் செய்கிறேனே?,  நாம் உயிருடன் இருப்பதால் தானே நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் உளைச்சல்!?."
என்பன போன்ற எண்ணங்கள் வந்து தற்கொலை முயற்சி செய்து காப்பாற்ற பட்டிருக்கிறான். 

நான் மனநல மருத்துவத்தில் நிபுணன் அல்ல, ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக தினமும் இத்தகைய மன உளைச்சலினால் ஏற்படும் உடல் உபாதைகளை (Psychosomatic distresses) ஆர்வத்துடன் பார்த்து சிகிச்சை கொடுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். 

இந்த கட்டுரையின் வாயிலாக நான் சொல்ல வருவது.... நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர், zinc, vitaminC, வைட்டமின் டி போன்ற சப்ளிமெண்ஸ்(supplements) கொடுப்பதைப் போல,  இந்த பெருந்தொற்றின் உச்சநிலை குறைந்து இயல்பு நிலைக்கு வரும் வரை.... 

மிகுந்த கட்டுப்பாட்டுடன் (strict guidelines) சில மனப் பட்டத்திற்கான மருந்துகளை, சில மாதங்களுக்கு கொடுத்து அதை படிப்படியாக குறைத்து அடுத்த சில மாதங்களில் நிறுத்திவிடலாம். 

சில வளர்ந்த நாடுகளில்
மனச்சோர்வுக்கான மருந்துகள் (#SSRI) கொரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பதாகவும், ஏற்பட்டவர்களுக்கு நோயின் தன்மை தீவிரமடைவதை தடுப்பதாகவும் ஆங்காங்கே சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். 

நம் தேசத்தில் ஒரு துறையில் நிபுணன் என்றால்,  அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட பெரும் இன்ஸ்டிடியூஷன்களில் வயது மூப்பின் காரணமாக தலைமையில் இருப்பவர்கள் தான். அவர்கள் ஒருங்கிணைந்து இது மாதிரியான ஆலோசனைகளை கொடுத்தால்தான் அரசாங்கங்கள் செவிசாய்க்கும். 

ஒரு தனியார் மருத்துவர் சொல்வது சமூக வலைதளங்களில் பரப்பப்படும் விஷயங்களில் நூற்றில் நூற்றி ஒன்றாகத்தான் பார்க்கப்படும். ஆகையினால் அரசாங்கங்கள் மனநல மருத்துவ நிபுணர்களை கூட்டி இத்தகைய பரிந்துரைகளை, பெரும் சமூகத்திற்கு ஒரு supplementஆக சில மாதங்களுக்கு கொடுப்பதற்கான நடைமுறைகளை ஒழுங்குபடுத்தலாம்.

Dr P. ஆனந்தன். MBBS, DPM, FIPS 
Fellow: European Association of Psychosomatic Medicine 
மனநல மருத்துவர்
08/05/2021.

Friday, May 14, 2021

கண்திருஷ்டி காணாமல் போக பரிகாரம்.

கண் திருஷ்டி காணாமல் போவதை உங்கள் கண்களால் காண வேண்டுமா? இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!.

கண்திருஷ்டி என்பது கண்ணுக்கு புலப்படாத ஒரு விஷயம் தான். கண்திருஷ்டியால் நமக்கு இந்த பிரச்சனை வந்து இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பவர்கள் இந்த சோதனையை செய்து, பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.கண் திருஷ்டியை கண்டுபிடிக்க ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் இது.அந்த அளவிற்கு சுலபமான பரிகாரமும் கூட! ஏவல் பில்லி சூனியத்தை விட கண் திருஷ்டிக்கு மிகவும் சக்தி அதிகம்.செய்வினை கோளாறுகள் இருந்தாலும் அதனை சில பரிகாரங்கள் மூலமாக படிப்படியாகக் குறைத்துவிட முடியும். கண்திருஷ்டி என்பது அப்படி கிடையாது. சட்டென்று ஆளைத் தூக்கும் அளவிற்கு சக்திவாய்ந்தது. கண்திருஷ்டியை உதாசீனப்படுத்தி, எக்காரணத்தைக் கொண்டும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. உங்களுடைய வீட்டில் தொடர் சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும், வீட்டில் இருப்பவர்கள் அதி விரைவாக முன்னேற்றம் அடைந்தாலும், நாம் சந்தோஷமாக இருந்தாலும், ஊர் பார்வையில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று சொல்லுவார்கள் அல்லவா? அப்படிப்பட்ட ஏதாவது ஒரு கண், நம் மேல் விழுந்து விட்டால்  வாழ்க்கை நிலைகுலைந்து போய் விடும்*

அந்தக் காலத்தில் நம்பப்பட்டு வந்த இந்த கண் திருஷ்டியானது நவநாகரீகம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. வரக்கூடிய பிரச்சினைகளுக்கு கண்திருஷ்டி தான் காரணம் என்று தெரியாமல், பல பேர் பல வகைகளில் பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டு, வீண் விரயங்களை செய்து வருகிறார்கள்.காரணம் முன்னோர்கள் சொல்வதை கேட்பது கிடையாது.அந்த காலத்தில் ஞாயிற்றுக்கிழமை அமாவாசை தினம் என்றாலே வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சுற்றி போடும் பழக்கம் வீட்டில் இருக்கும்.பாட்டிமார்கள் தவறாமல் தங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சுற்றி போடுவார்.இன்றளவும் ஞாயிற்றுக்கிழமையும், அமாவாசை தினத்திலும் சுற்றி போடும் பழக்கம் நம் நிறைய பேர் வீடுகளில் உள்ளது. முடிந்த வரை உங்களுடைய வீட்டிலும் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் உங்களால் முடிந்தால் திருஷ்டி கழியுங்கள்*

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் ஒரு படிகாரக் கல்லை கையில் வைத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர வைத்துவிட்டு, அவர்களது தலையை மூன்று முறை இடப்பக்கம் மூன்று முறை, வலப்பக்கம் மூன்று முறை, மேலிருந்து கீழ் இப்படியாக மூன்று முறை சுற்றவேண்டும். திருஷ்டி சுற்றும் போது கண்திருஷ்டி விநாயகரை மனதார நினைத்துக்கொண்டு, வீட்டில் இருக்கும் திருஷ்டி அனைத்தும் ஓடிப் போய் விட வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள். திரிஷ்டி சுற்றுவதற்கு முன்பாகவே வீட்டு வாசலில் கொஞ்சமாக கொட்டாங்குச்சியை வைத்து நெருப்பை மூட்டி விடுங்கள். எரிந்து கொண்டிருக்கும் அந்த கொட்டாங்குச்சியில், திருஷ்டி கழித்த உங்கள் கையில் இருக்கும் படிகார கல்லை போட்டு விடுங்கள். 

உங்களுடைய வீட்டில் இருப்பவர்கள் மேல் திருஷ்டி இருந்தால் அந்த பரிகாரங்கள் ஒரு உருவ பொம்மை போல உருகுவதை உங்கள் கண்களாலேயே பார்க்கலாம். இது நிஜமான ஒன்று. நம்பிக்கையுள்ளவர்கள் சோதித்து பாருங்கள். உங்களை பிடித்தது அனைத்தும் அந்த பரிகார ரூபத்தில் உருகி கரைந்து போய்விடும். 

கண்திருஷ்டி காணாமல் போவதற்கு இது ஒரு சுலபமான பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. பெரிய அளவிலான பிரச்சனைகளை கூட, சுலபமாக தீர்த்து வைக்கும் இந்த பரிகாரத்தை வாரம் ஒருமுறை நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Thursday, May 13, 2021

கொஞ்சம் சாஸ்திரத்தைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

*கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !!*

*1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது*

*2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.*

*3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. என தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.*

*4. அளவிற்து அதிகமாக உண்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.*

*5. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.*

*6. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.*

*7. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.*

*8. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.*

*9. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. .*

*10. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.*

*11. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.*

*12. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.*

*13. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது*

*14. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.*

*15. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.*

*16. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.*

*17. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.*

*18. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.*

*19. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.*

*20. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.*

*21. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.*

*22. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.*

*23. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;.*

*24. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.*

*25. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.*

*26. வெள்ளித் தட்டில் இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.*

*27. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.*

*28. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ;ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.*

*29. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.*

*30. அதே போல் முதலில் கீரையோ  வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.*

    *வாழ்வில் நாம் செய்யக் கூடாதவை*

*1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.*

*2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.*

*3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.*

*4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. .*

*5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.*

*6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.*

*7. கர்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.*

*8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.*

*9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.*

*10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.*

*11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது.*

*12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.*

*13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.*

*14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.*

*15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது.*
*மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.*

*இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள்.*

*அதனால் தான் அவர்களின் ஆயுள் 120 வயது வரை திட காத்திரமாக இருந்தது.‌*

*ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது.*

*முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள்.*

*இப்போது தான் யூடியூப் இருக்கிறதே நீங்களே அழகாக சமைக்கலாமே !!*

*ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது.*

*இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்யமாக அமைதியாயக அமோகமாக அமைய வாழ்த்துகள்*

*நல்ல தகவல்களை அனைவருக்கும் பகிர்வோமே 🙏🙏🙏*

Tuesday, May 11, 2021

திருவண்ணாமலையின் வயது 260 கோடி வருடமா?

"260 கோடி வயது"

திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். 
அதாவது,  இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.  இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்....

திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். 
இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். 
ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். 
இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக்கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.

தீபதரிசன மண்டபம்: 
அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது.  மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர்.  இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு, பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

கரும்புத்தொட்டில் அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். 
குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஆறுவிரல் ஆறுமுகம்: 
திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்!  அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது. 

கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்:
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்!  இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம். 

மீனின் பெயர் செல்லாக்காசு:
திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர்.  இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி!  அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

தங்கமலை ரகசியம்: 
அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு.  ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. 
இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. 

இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது. 

கிரிவலம் செய்யும் முறை:
திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். 
கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். 

வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. 

இந்திர லிங்கம், 
அக்னி லிங்கம், 
எமலிங்கம், 
நிருதி லிங்கம், 
வருண லிங்கம், 
வாயுலிங்கம், 
குபேர லிங்கம், 
ஈசான லிங்கம் 
ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.

நந்திக்கு பெருமை: 
மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார். 

அண்ணாமலை பொருள்: 
அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். 
அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். 
பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

செந்தூர விநாயகர்: 
ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். 
ஆனால், 
திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். 
சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்...

Saturday, May 8, 2021

வலம்புரி சங்கு தோன்றிய கதை.

*வலம்புரிச் சங்கு தோன்றிய கதை*

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறு வகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன.

 அவற்றுள் வலம்புரிச் சங்கும் திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார். 

இதே போல் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்த சாந்திபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி *பஞ்சஜனன்* என்ற கடல் அரக்கன் அவர்களது ஒரே மகனைக் கடத்திக் கொண்டு போய்க் கடற் பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குருதட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினாள். 

கிருஷ்ணரும் பலராமரும் கடல் ராஜாவை அழைத்து வழி கேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால் -சங்கிற்குப் *பாஞ்சஜன்யம்* என்ற பெயர் ஏற்பட்டது. 

இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்துக் கொண்டு ஊதத் தொடங்கினார், அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற பஞ்சபாண்டவர்களில் ஐவருமே ஒவ்வொரு விதமான சங்கை வைத்திருந்ததாக பாகவதம் கூறுகிறது.

*தருமருடைய சங்கு - அனந்த விஜயம்*
*அர்ஜுனனுடையது  - தேவதத்தம்*
*பீமனுடையது - மகாசங்கம்*
*நகுலனுடையது - சுகோஷம்*
*சகாதேவனுடையது  -மணி புஷ்பகம்*

கடலில் பிறக்கும் சங்குகளில் 

*மணி சங்கு*
*துவரி சங்கு*
*பாருத சங்கு* 
*வைபவ சங்கு*
*பார் சங்கு*
*துயிலா சங்கு*
*வெண் சங்கு*
*பூமா சங்கு*

என்ற எட்டு வகை சங்குகள் உள்ளன. இவற்றில் வலம்புரி சங்குதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகமமும், சாஸ்திரங்களும் சொல்வதைக் காணலாம். மேலே உள்ள இந்த சங்குகள் ஒவ்வொரு தெய்வத்தின் கரங்களில் இருப்பதாக விகனச ஆகமவிதியில் கூறப்பட்டுள்ளது. 

*திருப்பதி பெருமாளுக்கு - மணி சங்கும்*
*ரெங்கநாதருக்கு - துவரி சங்கும்*
*அனந்த பத்மநாப சுவாமிக்கு -  பாருத சங்கும்*
*பார்த்தசாரதி பெருமாளுக்கு - வைபவ சங்கும்*
*சுதர்ஸன ஆழ்வாருக்கு  - பார் சங்கும்*
*சவுரிராஜப் பெருமாளுக்கு - துயிலா சங்கும்*
*கலிய பெருமாளுக்கு - வெண் சங்கும்*
*ஸ்ரீ நாராயண மூர்த்திக்கு - பூமா சங்கும்*  உள்ளன.

வலம்புரிச் சங்கு என்கிற கடல் வாழ் நத்தையின் கூட்டை வழிபட்டால் நம்மைத்தேடி மகாலட்சுமி வருவாள் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை, முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடுகிறது. இதை

*சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி*
*அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாதிகம் தஹேத்*

என்ற வரிகளால் அறிந்து கொள்ளலாம். வாஸ்துக் குறை வீட்டில் காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் காலையில் தெளித்து விட்டால் குறைகள் நீங்குவதாக ஐதீகம் இருக்கிறது. 

முற்காலங்களில் மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்ததற்குக் காரணம், வீடு கட்டும்போது ஐந்து வெள்ளிக் கிழமைகள் லக்ஷ்மி வஸ்ய பூஜை செய்த வலம்புரிச் சங்கை வீட்டு நிலை வாசற் படியில் வைத்து - நடு ஹாலில் சங்கு ஸ்தாபன பூஜை செய்து திருமகள் மற்றும் வாஸ்து பகவானை வழிபட்டார்கள். எந்தக் குறைவும் இல்லாமல் அவர்களால் வாழ முடிந்தது.

Friday, May 7, 2021

தர்ப்பைப்புல் மகத்துவம்

தர்பை  புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது!

தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்துகிறோம். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.

இந்த புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது!

முன்னோர்களுக்கு திதி கொடுக்கும்போதும், அம்மாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கும்போதும் கையிலும் பிண்டத்தோடும் பயன்படுத்தப்படுவது, தர்ப்பை புல். அதற்கு அவ்வளவு மகிமை உள்ளது.

தர்ப்பை புல், இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது.
தர்ப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும், நுனியில் ருத்ரனும் இருப்பதாக ஐதீகம்.  

தர்பை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது.
இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது. நமது உடலில், வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.

தர்பைக்கு அக்னிகற்பம் என்பது பெயர். இந்த புல், தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர்.

அக்கிரஸ்தூலமுடையது பெண் தர்பை, மூலஸ்தூலம் உடையது அலி தர்பை, அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது, ஆண் தர்பை.

ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும்.

நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தியானம், பித்ரு தர்ப்பணம், பிராணயாமம் முதலிய காரியங்களில், கையில் பவித்ரம் அணிந்து கொள்ளாமல் செய்வது பலனை தராது. விஷேஷ காரியங்கள் நடத்தும் போது வலது கை மோதிர விரலில் பவித்திரம் என தர்பை புல்லை அணிவிப்பார்கள் மோதிர விரல் மூளையுடன் சம்பந்தப்பட்டது .

ஆகவே தர்பை பவித்ரம் போடும் பொது, பிரபஞ்ச சக்தி, விரல் மூலம் மூளைக்கு செல்கிறது; உடலிலும் பரவும். கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தர்பையை போடுவது வழக்கம்.

தர்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்த வேண்டும், 
தர்பை, உஷ்ண விரீயமும் அதிக வேகமும் உடையது. பஞ்சலேங்களில், தாமிரத்துக்கு, மின்சாரத்.ைதை கடத்தும் சக்தி உண்டு, அ.ேதே சக்தி, தர்.ைபைக்கும் உண்டு. எல்லா ஆசனங்களை காட்டிலுமும், தர்பாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலனை தரும். அசுப காரியங்கள் ஒரு தர்பையாலும், சுப காரியங்களுக் இரண்டு தர்பைகளாலும், பித்ரு காரியங்களாலும், தேவ காரியங்களுக்கு 5 தர்பைகளாலும், சாந்தி கர்ம காரியங்களுக்கு 7 தர்பைகளாலும் மோதிரம் முடியவேண்டும்.

தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்துகிறோம். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.

தர்பையில்  மருத்துவ குணங்கள் பல உள்ளன. இதன் ஒரு சில துண்டுகளை குடிநீர்ப் பானையில் போட்டுவைத்து, அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும். சூரிய, சந்திர கிரகணத்தின்போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், தர்பைப் புல்களின் காற்றுபட்ட இடங்களில் தொற்றுநோய் ஏற்படாமலிருக்கும் என்பதால், இதை கிராமத்து வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். 

இந்தப் புல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. குடிநீரில் தர்பைப் புல்லை துண்டாக்கிப் போட்டு குடித்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.

சிறுநீரகம், கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் அந்தப் பிரச்னைகள் நீங்கும். அதோடு, சிறுநீரகக் கற்களையும் வெளியேற்றும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.

தர்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல்சூடு தணியும்; மன உளைச்சல் நீங்கும்; நல்ல உறக்கம் கிடைக்கும்; ஆரோக்கியம் நீடிக்கும்.

Thursday, May 6, 2021

வாராகி சக்தி வாய்ந்த மந்திரங்கள்.

🤘12  -  சக்தி வாய்ந்த  வாராஹி  நாமங்கள்

1.   ஓம்  ஐம்   க்ளெளம்   பஞ்சமியை   நமஹ .
2.   ஓம்  ஐம்   க்ளெளம்   தண்டநாதாயை  நமஹ.
3.   ஓம்  ஐம்   க்ளெளம்  சங்கேதாயை   நமஹ.
4.   ஓம்  ஐம்   க்ளெளம்  சமயேஸ்வரியை  நமஹ. 
5.   ஓம்  ஐம்   க்ளெளம்  சமயசங்கேதாயை  நமஹ.
6.   ஓம்  ஐம்   க்ளெளம்   வாராஹியை  நமஹ.
7.   ஓம்  ஐம்   க்ளெளம்   போத்ரிணியை   நமஹ.
8.   ஓம்  ஐம்   க்ளெளம்   சிவாயை   நமஹ.
9.   ஓம்  ஐம்   க்ளெளம்   வார்த்தாளியை  நமஹ.
10. ஓம்  ஐம்   க்ளெளம்  மஹாசேனாயை  நமஹ.
11. ஓம்  ஐம்   க்ளெளம் ஆக்ஞாசக்ரேஸ்வரியை  நமஹ.
12. ஓம்  ஐம்   க்ளெளம்   அரிக்னியை  நமஹ.

    மேற்கண்டவை    மிகவும்  சக்தி வாய்ந்த  வாராஹியின்   நாமாக்கள்.  தினமும்  குறைந்தபட்சம்  இவற்றை  அர்ச்சனை  செய்வோம்.  வாராஹியின்  பேரருளை  பெறுவோம்.அகசத்ருக்கள், புறச்சத்ருக்களை  அழிக்கக்கூடியவள்  வாராஹி. நம்மை  மட்டுமல்ல,  நம்முடைய  தேச பாதுகாப்பையும்  அரணாக  நின்று  பாதுகாப்பவள்  இவளே.  நம்  குடும்ப  உறுப்பினர்களையும்   பாதுகாத்து  நல்ல  வழியில்   தொடர்ந்து  செல்ல  அருள்பாலிப்பவள்    அன்னை  வாராஹி ! குழந்தைகளுக்கும்  இந்த எளிய  நாமாக்கள்  கற்றுத்தந்து  லகு  பூஜைகள் செய்ய உற்சாகப்படுத்துவோம்  !  எல்லா வித  சம்பத்துக்களையும்   அள்ளித்தருபவள்  இவளே.

Wednesday, May 5, 2021

பெண்களுக்கு மெட்டி கொலுசு ஏன் தேவை.

பெண்களுக்கு மெட்டி மற்றும் கொலுசு ஏன் அணிவிக்கப்படுகிறது??

நமது பாரம்பரியத்தில் பெண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே காலில் வெள்ளி கொலுசும், 
        திருமண நாளில் கணவனால் கால் இரண்டாவது விரலில் மெட்டியும் அணியப்படுகிறது.

காலில் கொலுசு அணியும் இடத்தில் தான் கருப்பை, சூலகம், மற்றும் மார்பகத்தின் செயல்பாடுகளை தூண்டும் நரம்பு முடிவிடங்கள் வந்து முடிகின்றன. 
          பொதுவாகவே உலோகங்கள் கடத்தல் தொழில்பாடடை சிறப்பாக செய்ய வல்லன.  வெள்ளி உலோகமானது நமது இனப்பெருக்க உறுப்புகளின் விருத்திக்கு மிகப்பெரும் நன்மையை செய்வது. 

ஜோதிட ரீதியில் கூட, 7 ஆமிடம் இனப்பெருக்க உறுப்புகளையே குறிக்கிறது. இயற்கை ஜாதகத்தில் 7 ஆமிடம் துலா ராசியை குறிக்கும்.

 துலா ராசி வெள்ளியின் சொந்த வீடு. வெள்ளி கிரகம் வெள்ளி உலோகத்தில் அதிக சக்தியை செலுத்தக் கூடியது. இதன் காரணத்தாலேயே வெள்ளி என்பது இனப்பெருக்க உறுப்புகளை தூண்டி விடுவதில் சிறந்த பங்காற்றுகிறது.

அதனால் தான் பெண் குழந்தைகளுக்கு காலில் கொலுசு வெள்ளியில் செய்து அணிவிக்கும் வழக்கம் வந்தது.

இதன் மூலம் அவர்களின் கருப்பை, மார்பகங்கள் சீரான வளர்ச்சியை பெற்று உரிய காலத்தில் பருவமடைய உதவுகின்றன. 

இப்போதெல்லாம் பருவமடைதலில் தாமதம் என்றால் மருத்துவரை நாடுகின்றனர். பருவமடைந்தாலும் மாதவிலக்கு பிரச்சனைகள், மற்றும் மார்பக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு காலில் வெள்ளியில் கொலுசு போட்டு விடுங்கள். படிப்படியாக இந்த பிரச்சனைகள் குறைவதை அவதானிக்க முடியும். 

கருப்பை இறக்கத்தை கூட தடித்த கொலுசுகள் சரி செய்யும் குணமுள்ளவை. 

சரி மெட்டி ஏன் திருமணமாகாத இளம் பெண்கள் அணிவதில்லை. 

ஆனால் திருமணத்தில் கணவன் கையால் அணிவிக்கப்படுகிறது?

மெட்டி அணியும் இடத்தில் உள்ள நரம்பு முடிவிடங்கள் பாலுணர்வை தூண்டக்கூடியவை.

திருமணமானாலும், பல பெண்களுக்கு தாம்பத்தியம் பற்றிய விபரங்கள் தெரிவதில்லை. 

இப்போதெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கணவனுடனான தாம்பத்தியத்தையே உடல் வலியாக உணரும் பெண்கள் உள்ளதை பார்க்க முடிகிறது. 

இதற்கு அவர்களுக்கு முறையான பாலுணர்வு ஏற்படாமையே காரணம். அந்த பாலுணர்வை இந்த வெள்ளி மெட்டி இரண்டாம் விரலில் உள்ள நரம்புகளை தூண்டுவதன் மூலம் தூண்டி விட்டு சரி செய்யும். தரமான வெள்ளியில் அளவான மெட்டி இதனை சரி செய்யும் வல்லமை படைத்தது. 

அது மட்டுமல்ல இன்றைய பல ஆண்களுக்கும் பெண்களை சரியாக கையாள தெரிவதில்லை என்பதும் இன்னொரு மறுக்க முடியாத காரணமே. 

ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டிவிட தேவையில்லை. அது உடனே வந்து விடும்.

ஆனால் பெண்கள் நிலை அதுவல்ல. அவர்களது உணர்வுகள் தூண்டப்படடால் மட்டுமே அவர்களால் தாம்பத்தியத்தில் முறையாக ஈடுபட முடியும். அதற்கு ஆண்களின் ஒத்துழைப்பும் புரிதலும் மிக அவசியம். 

அதனால் தான் தாம்பத்தியத்தில் வெறுமே சேர்க்கை என்பதை விடுத்து, முன் விளையாட்டுகள், சீண்டல்கள் மிக மிக அவசியம்.

 இதனை சில மிருகங்களின் கூடலில் கூட அவதானிக்கலாம். மிருகங்களுக்கே உள்ள புரிதல், மனிதர்களின் இன்றைய அவசர வாழ்க்கை முறையினால் மழுங்கடிக்கப்பட்டு பல வாழ்க்கை பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது.

Tuesday, May 4, 2021

கடவுள் ஆன்மிக கதை அவசியம் படிக்கவும்.

கட+உள் = கடவுள்
ஆன்மீக கதை.
Very interesting.

கங்கைக் கரையின் ஓரம் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன்.

தினமும் கங்கா மாதாவை தூரமாக இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி.

தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த மனிதரை தீண்டினால் புனிதம் கெடுமாம்.

இப்படியெல்லாம் இருந்த காலத்தில்.

ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார்.

கங்கையில் இறங்கி நீராடுவர். 
அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார்.

எவ்வளவு பாக்கியசாலி அவர்'' என்று அவரை தூர இருந்தே இரு கரம் கூப்பி கிழவன் அவரை வேண்டுவான்.

அவனைப் பார்த்தாலே தூர நகர்வார் அவர். அவனோடு பேசுவார்.

ஒருநாள்,அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை கிழவனிடம் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னார்.

நன்றாக ரிப்பேர் செய்தும் கொடுத்தான்.

அவனருகே ஒரு அணா காசு விட்டெறிந்தார். அருகே வந்து தரமுடியாதே. அவன் வணங்கி ''சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன். 

நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும் வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர்.

உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்'' என்றான்.

உன் காசு எனக்கு வேண்டாம்.
இதை என்ன செய்வது ? நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் 
அதை நான் ஏற்கவே முடியாது 
என்கிறார்,அந்த பண்டிதர்.

ஐயா,இந்த ஏழைக்கு ஒரு உதவி நீங்கள் செய்வீர்களா ? இதோ இந்த கங்கா
மாதாவை அனுதினமும் நானும் வணங்குகிறேன்,

என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நான் அளித்த காணிக்கையாக நீங்களே அதை அவளுக்கு சமர்ப்பிக்க முடியுமா ?

என்ன சொல்கிறாய் ? இந்த ஓரணாவை கங்கையில் நீ அளித்ததாக நான் எறிய வேண்டும் அவ்வளவு தானே ? 

சரிபண்டிதர் கங்கையில் இறங்கினார் வணங்கினார். மந்திரங்கள் ஜெபித்தார்.

அம்மா கங்கா தேவி, 
இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவன் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது.

ஏற்றுக் கொள் என்று சொல்லி வீசி எறிந்தார்.

நுங்கும் நுரையுமாக ப்ரவாஹமாக ஓடிக் கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய கை வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக அன்பாக பெற்றுக் கொண்டது.

கங்கையின் முகம் தோன்றி பேசியது.

பண்டிதரே, எனக்கு மிக்க மட்டற்ற மகிழ்ச்சி, 

இதோ,இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த கிழவரிடம் கொடுங்கள், என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்னக் கற்கள் பதித்து ஒளி
வீசிய தங்க வளையலை, கொடுத்தாள்.

பண்டிதன் அசந்து போனான். 
ஆச்சர்யத்தில் நடுங்கினான்.

அதை தனது மேல் துண்டில் பத்திரமாக முடிந்து வைத்து கொண்டான்.

கிழவனிடம் ஒன்றுமே 
அது பற்றி சொல்லவில்லை.

வீட்டிற்கு போய் மனைவிடம்,கமலா, இதோ பார்த்தாயா, நான் எதற்குமே பிரயோஜனம் இல்லை, 

ஏட்டுச் சுரைக்காய் என்பாயே'' இன்று என்ன நடந்தது தெரியுமா உனக்கு ?

'என்ன பெரிதாக சாதித்து விட்டீர்கள் ? உங்களை போல் உதவாக்
கரைகளுடன் பேசிவிட்டு தேங்காய் மூடி வாங்கி கொண்டு வந்திருப்பீர்கள்.

சீக்கிரம் கொடுங்கள். இன்றைய பொழுது துவையலிலாவது கழியட்டும். '' என்றாள் மனைவி.

அசடே, இதைப் பார். 
என் வேதத்தை மதித்து கவுரவித்து 
அதனால் பெற்றது.

உனக்காக நான் சம்பாதித்தது'' என்று கங்காதேவி தந்த வளையலை அவன் மனைவியிடம் தந்தான் பண்டிதன்.

கமலாவுக்கு தன்னையோ, தன் கண்களையோ நம்ப முடியவில்லை.

கையில் போட்டு அழகு பார்த்தாள். மின்னியது. கண்கள் கூசியது. 

என்ன இது ஒருவளையல் தானா ? இன்னொன்று ?''

அடுத்த முறை கங்கையை கேட்டு வாங்கி தருகிறேன்'' என்று சமாளித்தான் பண்டிதன்.

இந்த ஒன்று எதற்கும் உதவாதே .

நாமோ ஏழைகள். திருடர்கள் கொள்ளையர்
களால் இதனால் உயிர் போனாலும் போகலாம்.

எனவே,அவன் மனைவி கெட்டிக்காரி என்ன சொன்னாள் ?

இதோ பாருங்கோ, இந்த ஒண்ணை வச்சுண்டு என்ன பிரயோஜனம்.

அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அழகான ஒத்தை வளை கையில் போட்டுக் கொண்டு அலைந்தால் எல்லாரும் கேவலமாக சிரிப்பார்கள்.

பேசாமல் இதை ராஜாவிடம் கொடுத்து விட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வாருங்கள்.

கொஞ்ச காலம் நிம்மதியாக சௌகர்யமாக வாழலாம்.

ராஜாவிடம் சென்றான். கொடுத்தான். ராஜா வாங்கி பார்த்து மகிழ்ந்தான். 

பதிலுக்கு ஒரு பை நிறைய பொற்காசுகளை கொடுத்தான்.

ராணியிடம் ஆசையோடு அந்த வளையலை கொடுத்தான். மிக்க மகிழ்ச்சி அந்த ராணிக்கு.

அவள் கைக்கு அது பொருத்தமாகவும் அமைந்தது. அப்போது தான் அவளுக்கு தோன்றியது.

இன்னொன்று எங்கே ?''

ராஜாவிடம்,இன்னொன்றும் வேண்டுமே எங்கே'' என்று கேட்டாள் . 

ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதனை அழைத்து வர செய்தான்.

ஹோய் ப்ராமணா. இன்னொரு வளையல் எங்கே ? ஏன் அதை தரவில்லை ?

வீட்டில் வைத்திருந்தால் கொண்டு வந்து உடனே கொடு. ராணி கேட்கிறாள்''

பிராமணன் தயங்குவதை பார்த்த ராஜாவுக்கு கடும் கோபம் வந்தது. 

என்ன விளையாடு கிறாயா ?

என்னிடம். இன்னும் ரெண்டு மணிநேரத்தில் இன்னொரு வளையலுடன் நீ வரவில்லை என்றால் உன் உயிர் உனதல்ல .
ஜாக்கிரதை'' என்றான்.

ராஜாவின் கட்டளை பண்டிதனுக்கு
எம பயத்தை தந்ததால் ஓடினான். 

எங்கே ?

கங்கைக்கரைக்கு
அந்த கிழவன் வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து கங்கைக் கரைக்கு தூர நின்று இரு கரம் கூப்பி கண்களை மூடியே கங்கையை வணங்கினான்.

அருகிலே தேங்கி நின்ற அழுக்கு நீரில் கொஞ்சம் எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டான். அது தான் அவனுக்கு கங்காஜலம்.

செருப்பு தைக்க தேவையான ஜலத்தை 
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்
கொண்டு அமர்ந்தான்.

திடீரென்று தன் கண் முன்னே பண்டிதன் ஓடி வந்து நின்றதும், வணங்குவதும்,

அவனுக்கு ஒரு பேரதிர்ச்சியை தந்தது.

சாமி நீங்க என்ன செய்றீங்க ?"' என்ன ஆச்சு உங்களுக்கு ? நான் தானே உங்களை எப்போவும் வணங்கறது ?'' வழக்கம்,

என்னை மன்னிச்சுடுப்பா. 
நான் துரோகி.

கங்கா மாதா உனக்கு கொடுத்த பரிசை திருடி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போனவன் அதை வித்து ராஜாகிட்ட நிறைய பணம் வாங்கினேன்.

இப்போ என் உயிரே காற்றிலே ஊசல் ஆடுது என்று முழு விஷயத்தையும் சொன்னான் பண்டிதன்.

ஆஹா அப்படியா. 

நமக்கு யார் இப்ப உதவி செய்வாங்க இப்போ ? 

எப்படி இன்னொரு வளையல் கிடைக்கும் ?

கங்காமாதாவையே கேட்போம்.

கிழவன் கண்ணை மூடினான்.

தனக்கு எதிரே இருந்த அழுக்கு பாத்திரத்தில் நிரம்பிய நீரை தொட்டபடியே வேண்டினான்.

அம்மா தாயே ! கங்கா,  நீ எனக்கு பரிசாக ஒரு வளையலை கொடுத்ததற்கு நான் எத்தனையோ ஜென்மம் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் தாயே.

பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. 

இன்னொரு வளையலும் தாம்மா. 
அவர் பிழைக்கட்டும்'' என்று தனது கையை அந்த அழுக்கு நீரினுள் கையை விட்டான்.

மீண்டும் பிரகாசமான அந்த கங்கையின் கை,
இந்த முறை, கிழவனின் அழுக்குப் பாத்திரத்திரத்திலிருந்தே நீண்டு மேலோங்கி 
தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையலைஅந்த கிழவனிடம் கொடுத்தது.

அப்புறம் என்ன நடந்தது ??

பண்டிதன் அந்த வளையலை ராஜாவிடம் எடுத்து போகவில்லை.

தனது உயிரைப் பற்றியும் கவலைப் படவில்லை. 

வீடு, கமலா எல்லாவற்றையும் மறந்தானா , துறந்தானா என எதுவோ ஒன்று. 

அங்கேயே, அப்படியே செருப்பு தைக்கும் கிழவனின் அழுக்கு கால்களை இறுக்க கெட்டியாக பிடித்துக்கொண்டு கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தான்.

சீடனாகவே கிழவர் அருகில் அமர்ந்தான்.

விஷயம் பரவியது. ராஜாவும் அவன் மனைவியும் ஓடோடி வந்தார்கள்.

கிழவனை வணங்கினார்கள்,
அரண்மனைக்கு கூப்பிட்டார்கள்.

எனக்கு கங்காமாதா தரிசனம் ஒன்றே எனக்குப் போதும் என்று கூறி அவர்களை திரும்பி வணங்கினான் கிழவன்,

உண்மையான பக்தி என்பது ஆத்மார்த்தத்தில் நம் மனதின் உள்ளே இருப்பது...

வெளியே காட்டிக்கொள்ளும் 
சடங்குகளிலோ..
சம்பிரதாயங்களிலோ..
அறிவிலோ..பணத்திலோ..
வைபவங்களிலோ.....
ஆடம்பரத்திலோ..
ஒரு போதும் இல்லவே இல்லை..

கட+உள் = கடவுள்
"கடந்து" 
போ "உள்ளே"
என்பது தான் கடவுள்.

அதை. 
நமக்குள் உணர வைப்பதற்கே
கோயில்களும்....
சம்பிரதாயங்களும்.....

புற அலங்காரங்களைஅகற்றி....
மனம் அழுக்கின்றி ஆராதியுங்கள்,
முற்றிலும் எளிமையாக உண்மையாக 
கடவுளை உணரலாம்.