Friday, May 15, 2020

பதவி இழந்தவர்கள் மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கு ஆலய வழிபாடு



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, பதவி உயர்வு பெறவும், இழந்த பதவியை காக்கவும் மேற்கொள்ளும் பரிகாரமாகும்.

ஒரு மனிதனின் ஜாதகத்தை ஆராயும்பொழுது, பதவி உயர்வு, இழப்பு இவற்றை தீர்மானிப்பது நவக்கிரகங்களையும்

நச்சுகிரகங்கள் அவரின் ராசியில் உள்ள 10 ஆவது இடத்தை அணுகும் பொழுது அல்லது தசைகள் நடப்பில் இருக்கும்பொழுது அல்லது ராகு-கேது தசை நடப்பில் இருக்கும்பொழுது இப்பிரச்சினைகள் வருகிறது

இப்பிரச்சினைகள் தீர நம் முன்னோர்கள் சில கோயில்களைக் கூறியுள்ளார்

அப்படிப்பட்ட திருத்தலங்களில் ஒன்றுதான்

திருப்பஞ்சலி" ஆகும். இத்தலம் திருச்சியிலிருந்து-மணச்சநல்லூர் வழியாக இத்தலத்தை அடையலாம். தல இறைவன் - நீலகண்டேசுவரர், இறைவி விசாலாட்சி, தலமரம்- ஜூலி வாழை, இது உண்ண ஏற்றதல்ல, மேலும் பயிராவதுமில்லை . இங்கு வசிக்கும் பெருமான், நடராஜர் உருவில் வசிஷ்டருக்கு காட்சியளித்தார். அதனால் இது

மேல சிதம்பரம்" என்று அழைக்கப்படுகிறது

இத்தலத்தின் சிறப்பம்சம் "எமதர்மனுக்கு"

இங்கு தனி சன்னதி உள்ளது. ஆறுகால பூஜையும் உள்ளது. செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளிலே சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது

பதவி இழந்தவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், பதவி கிடைக்காதவர்கள் இத்தலத்திற்கு சென்று வழிபட்டால் நல்ல பலன் பெறலாம் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்

No comments:

Post a Comment