Thursday, May 28, 2020

அதிகமாக சம்பாதிக்க தாந்த்ரீக பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, சுய சம்பாத்தியத்தில் ஒருவர் வாழ்வில் வெற்றிபெற இயலுமா, அதற்கான சாத்தியக்கூறுகள் அவர்களின் ஜாதகத்தில் இருக்கின்றதா? என்று ஆவலாக எதிர்நோக்கும் அன்பர்களுக்கு அளிக்கப்படும் பரிகாரம் பற்றியதாகும்.

ஒருவரது ஜனன ஜாதகத்தினை எடுத்துக்கொண்டால் பத்தாம் ஆதி வலுபெற வேண்டும். பதினோறாவது ஆதி அங்கு உறுதியாக இருக்க வேண்டும்.

இரண்டாம் ஆதி என்று சொல்லப்படுகின்ற வருமானத்திற்குரியவர் வளமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும்தான், நீங்கள் உங்கள் தந்தையின் சொத்தை எதிர்பார்க்க வேண்டாம். உங்களின் சொந்தக்காலிலே நின்று, உங்கள் சுய சம்பாத்தியத்திலே வென்று, நீங்கள் இந்த பூமிக்கு வந்த காரணத்தை நோக்கத்தை உறுதி செய்து, உங்களைச் சார்ந்த சொந்த பந்தங்களிடையே முத்திரை பதிக்கின்றீர்கள் என்றால், அதற்கு உங்களுடைய ஜாதகத்திலே இருக்கின்ற அமைப்புகள் தான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

பல ஆயிரக்கணக்கான ஜாதகங்களுக்கு பலன் சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அமைப்பை உடையவர்களுக்கு இயற்கையாகவே சுயசம்பாத்தியம் வேலை செய்து விடுகின்றது. அப்படி இல்லையென்றால், பத்தாம் ஆதி என்னுடைய ஜாதகத்திலே ஆறிலே மறைந்துவிட்டார், எட்டிலே மறைந்துவிட்டார்,பனிரெண்டிலே மறைந்துவிட்டார, லக்கனத்திற்கு அடுத்தபடியாக இருக்கின்ற இரண்டாவது அதிபதியும் அப்படியே மறைந்துவிட்டார்.

"நீங்கள் சொல்லுகின்ற அந்த பதினோறாவது ஆதி லாபாதிபதி என் ஜாதகத்தில் இல்லையே' என்று புலம்பும் அன்பர்களுக்கு, நண்பர்களுக்குத்தான் இன்றைய தினம் மேற்கண்ட பரிகாரம் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .

ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் பல ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் எண் சொல்லுகின்றார்கள் என்றால் நம் ஜாதகத்தில் இருக்கின்றபடிதான், நம் வாழ்க்கை இருக்கும் என்று

அதை நம்முன்னோர்கள் பரிகார சாஸ்திரத்தைப் பயன்படுத்துவதின் மூலமாக, தகர்த்தெறிந்து விட்டார்கள்.

பரிகாரத்திற்கு எவ்வளவு சக்தி உண்டு, அதை நாம் முறையாக செய்ய வேண்டும், முழுநம்பிக்கையோடு செய்ய வேண்டும், விடமுயற்ச்சியோடு செய்ய வேண்டும், அப்படிச் செய்தால் வெற்றி உங்களுக்கே என்பது உறுதியாகிவிடும்.

இப்படிப்பட்ட அமைப்பை உடையவர்கள் எனக்கு சுயமாக சம்பாத்தியம் இல்லை என்று வேதனையுடன் புலம்புவதை விட்டு, உங்களுடைய வீட்டிலே இருக்கின்ற பூஜை அறையில் ஐந்து வெற்றிலைகள், ஐந்து கொட்டைப்பாக்குகள் இதை வைத்து சாதகமான பாதையிலே அழைத்துச் சென்று, எனக்கு ஒரு நிரந்தரமான வருமானத்தை ஏற்படுத்து என்று தினந்தோறும் உருகி, விடாமல் முழு நம்பிக்கையோடு அந்தாத தெய்வங்களைக் கேட்டுக்கொண்டால் ஒரு நாள் அது செவி சாய்க்கும். அன்றைய தினத்திலிருந்து உங்கள் விதி மாற்றி எழுதப்பட்டு, நீங்கள் அதிலிருந்து தப்பிக்கும் அந்த ரசவாத வித்தையைப் பெறுவீர்கள்.

அப்படி, செய்ய இயலாதவர்களுக்கு, இன்னொரு மாற்றுப் பரிகாரம் என்னவென்றால், உங்களுடைய பூஜை அறைக்குச் சென்று, 'குரு அருள், திரு அருள்" என்ற இந்த மந்திரத்தை குறைந்த பட்சம் ஒன்பது தடவை, அதிகபட்சம் நூற்றி எட்டு தடவை சொல்லிவர உங்கள் வாழ்க்கையிலே வசந்தம் வந்துவிடும்.

ஏனென்றால், ஒரு மனிதனுக்கு குரு அருள் இன்றி திரு அருள் கிடைக்காது, அதனால்தான் "கருவாய், உருவாய், திருவாய் வருவாய்" என்றார்கள். அப்படி கிடைக்கவில்லையென்றால், குருவை நீங்கள் நினைத்துக்கொண்டீர்களென்றால், நிச்சயமாக அவர் கடவுளைக் காண்பித்து, பல அற்புதங்களை உங்கள் வாழ்க்கையிலே நடனமாட செய்வார், என்பதை உங்கள் மனதிலே பதிவு செய்து கொண்டு, இதை முயற்சி செய்து நீங்கள் வாழ்க்கையிலே எல்லாவளமும் பெற்று நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

No comments:

Post a Comment