Monday, August 31, 2020

ஓணம் பண்டிகையின் வரலாறு

ஓணம் ( திருவோணம் )பண்டிகை கேரளா மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று.

மகாபலி சக்கரவர்த்தி என்னும் அரசர் பக்த பிரகலாதனின் பேரன். அதனால், அவன் அசுர குலத்தில் பிறந்து இருந்தாலும், தர்ம சிந்தனை உள்ளவனாக இருந்தான்.  யாராவது இல்லை என்று வந்து இரந்தால் அவர்களுக்கு கேட்டதைக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவன். அவனுக்கு கர்வமும் அதிகம் இருந்தது. மகாபலி உலகத் தலைமை பதவி வேண்டி ஒரு யாகம் செய்ய விரும்பினான். அந்த யாகம் நிறைவேறிவிட்டால், இந்திரனின் பதவிக்கே ஆபத்து வந்துவிடும்.

 
அதை தடுக்க, தேவர்களின் வேண்டுகோளின்படி, ஸ்ரீமன் நாராயணன் வாமனனாக அவதாரம் செய்தார். வாமனன் மகாபலியிடம் தன் கால் அளவில் மூன்றடி நிலம் தானம் கேட்டான். மகாபலி நீ சிறுவன் ஆதலால் அதிகம் நிலம் கிடைக்காது, எனக் கூறியும் வாமனன் பிடிவாதமாக தன் காலால் மூன்றடி நிலமே வேண்டும் என்றான். மகாபலியும் தாரை வார்த்து, ‘கொடுத்தேன்’ என்று சொன்னான்,  உடனே வாமனனாக வந்த பகவான், ஓங்கி உயர்ந்து ஓர் அடியால் பூமியையும், மற்றுமோர் அடியால் விண்ணையும் அளந்து முடித்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டார்.

 
வந்தது கடவுள் என அறிந்துக் கொண்ட மகாபலி தன்னுடைய தலையில் பகவானின் மூன்றாவது அடியை வைத்துக்கொள்ளுமாறு சொன்னான். பகவானின் திருவடியை தாங்கும் பெரும்பேறு அவனுக்கு வாய்த்தது.  எம்பெருமான், மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பினார்.
அப்போது மகாபலி எம்பெருமானிடம் ஒரு வரம் கேட்டார். “வருடம் ஒரு முறை இதே நாளான திருவோணத்தில், நான் இந்த பூமிக்கு வந்து எல்லா மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்வதை பார்த்து செல்ல வேண்டும்” என்னும் வரத்தை கோரினான். எம்பெருமானும் வரத்தை  அருளினார்.  மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு தோறும் மக்களை காண வரும் இந்த “ஓணம்” நாளை, “திருவோணம்” என்று போற்றி விழாவாக கொண்டாடுகிறார்கள்.

எனது வாட்ஸ்அப் நண்பர்கள்,முகநூல் நண்பர்கள் மற்றும் முகநூல் நட்பில் இருக்கும் அனைத்து கேரள மக்கள் மற்றும் ஓணம் பண்டிகையை கொண்டாடும் கேரள வம்சாவழி தமிழர்களுக்கும் இனிய ஓணம் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

உயிர் பிரியும் பதினோரு வாசல்கள்

இந்த உடலை விட்டு உயிர் பிரியும் வாசலகள் 1-to-11 வாசல்கள்

அவர் அவர் செய்த பாவ

புண்ணியத்திற்கு

ஏற்ப உயிர் அந்தந்த

வாசல் வழியாக பிரியும்

என அகத்தியர் தனது

கர்ம காண்டம் நூலில்

விளக்கமாக விவரித்து

கூறுகிறார்

(பழி பாவம்

செய்தவர்களுக்கு

மலத்துடன் மல வாசல்

வழியாக பிரியும். இவை

நேரே நரகத்திற்கு

செல்லும் திரும்ப ரிட்டன்

ஆக நாளாகும் வந்தாலும்

நல்ல பிறவி கிடையாது

(இப்போ எல்லாம் ஹார்ட்

அட்டாக் வருபவர்களுக்கு

maximum அபாண வாயு

&மலத்துடனே சூக்சும

சரீரம் போகும் accident case

இப்படியே

பாவம் செய்தவர்களுக்கு

நீர் வாயில் வழியாக உயிர்

பிரியும் இந்த உயிர்கள்

மறுபிறப்பில் காமியாய்

திரியும்

பாவம் நிறையவும்

புண்ணியம் குறைவாகவும்

செய்த உயிர்கள் நாபி

வழியே பிரியும். இந்த

உயிர்கள் மறுபிறப்பில்

இஸ்டபட்டவனாகவும்

நோயாளியாகவும்

அங்ககீனமுடையதாகவும்

பிறந்து வினையை

கழிக்கும்

(பாவம் புண்ணியம்

சமமாக செய்தவர்களின்

உயிர்கள் வாய்

வழியாகப்பிரியும். இவை

மறுபிறப்பில் உணவுப்

பிரியர்களாகவும்

சாப்பாட்டு ராமர்களாகவும்

பிறப்பார்கள்

இடது, வலது நாசிகள்

வழிய தனித்தனியாக

பிரிந்த உயிர்கள் அதிக

பாவம் செய்யாத உயிர்கள்.

இவை மறுபிறப்பில்

நற்மணத்தையே விரும்பும்

இடது, வலது செவிகள்

வழியாக பிரிந்த உயிர்கள்

மிகவும் சிறிதளவே பாவம்

செய்த உயிர்கள். இவை

மறுபிறப்பில் கேள்விச்

செல்வம் உடையதாக

பிறக்கும். முக்தி தேடி

முயற்ச்சிக்கும்

இடது, வலது கண்கள்

வழியாக பிரிந்த உயிர்கள்

மிகவும் புண்ணியம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கல்வி செல்வம் முதலியன பெற்று உயர்வுடன் வாழும் இவைகளும் முக்தி தேடி

முயற்சிக்கும்.. பழி

பாவத்தைக் கண்டு அஞ்சி

வாழும்.. குருபக்தி கடவுள்

பக்தியுடன் வாழும்

சிவ யோக நெறியில்

இருக்கும் உயிர்கள்

பிராரப்த கர்மங்களை

தனக்கு கொடுக்கப்பட்ட

உடல் கொண்டு கழித்து

பல காலங்கலாகப் பழகிய

யோகப் பயிற்சியின்

துணை கொண்டு

சுழுமுனை நாடிவழியாக

இருக்கும் உயிர்கள்

பிராரப்த கர்மங்களை

தனக்கு கொடுக்கப்பட்ட

உடல் கொண்டு கழித்து

பல காலங்கலாகப் பழகிய

யோகப் பயிற்சியின்

துணை கொண்டு

சுழுமுனை நாடிவழியாக

பிராணனை மேல் எழுப்பி

பிரமாந்திர வழியை திறந்து

கபால வழியாக ஒளிமயமாக

உச்சி வாசலூடாக செல்லும்

அவ்வாறு சென்ற உயிர்

மீண்டும் பிறவாத

அகத்தியர் கர்ம

காண்டம் நூலில் இருந்து

சித்தர்களின் குரல்.

Sunday, August 30, 2020

புதுமனை புகுவிழாவில் ஆன்மிகம் ரகசியம்.

புதுமனை புகும்போது முதலில் பசுமாட்டை

உள்ளே அழைத்துச்

செல்வது ஏன்? என்பது பற்றிய பகிர்வுகள் பசுவின் உடலில் பதினான்கு உலகங்களும் அடக்கம் என்கிறது தர்மசாஸ்திரம் தேவதைகளும் பசுவில் வாசம் செய்கிறார்கள்

பசுவின் பாலில் சந்திரனும்

நெய்யில் அக்னி தேவனும்

உறைந்திருப்பார்கள்

என்கிறது வேதம். பஞ்சகவ்யம், (பால், தயிர் நெய், சாணம், கோமூத்திரம்) அபிஷேகத்துக்கும் உகந்தது. மருந்தாகவும் செயல்பட்டு பிணியை அகற்றும் என்கிறது

ஆயுர்வேதம்.

குளம்படிபட்ட தூசி நமது உடலில் பற்றிக்கொண்டால் நீராடிய தூய்மை உண்டு மேய்ந்து வீடு திரும்பும் பசுமாடுகளின் குளம்படி பட்டு தூசி மேலே கிளம்பும் வேளையை நல்ல வேளையாக முஹுர்த்த

சாஸ்திரம் சொல்லும்

(கோதூளி லக்னம்).

பசு மாட்டின் சாணம்

நெருப்புடன் இணைந்து

திருநீறு உருவெடுக்கும்

நீராடியதும் தூய்மை

பெற திருநீறு அணியச்

சொல்லும் சாஸ்திரம்

நெற்றியில் த்ரிபுண்ட்ரம்

இருக்க வேண்டும் என்று

வற்புறுத்தும். ஈசனின்

உடல் முழுதும் திருநீறு

ஜ்வலிக்கும். குழந்தைகளின்

பயத்தை அகற்ற

மந்திரத்தை உச்சரித்து

திருநீறு அணிவிப்பதுண்டு

நாம் செய்த பாவம் அறவே

அகல பசுவை தானமாக

அளிக்கச் சொல்கிறது

தர்மசாஸ்திரம். ரஜஸ்வலா

தோஷ நிவர்த்திக்கு பசுவை

கொடையாக வழங்கச்

சொல்லும் சாஸ்திரம்

பசு வளர்ப்பதை அறமாக

எண்ணினான் கண்ணன்

கோபாலன் என்ற பெயர்

அவனது பசு பணிவிடையை

சுட்டிக்காட்டும். பசுவின்

காலடி பட்ட இடம்

பரிசுத்தமாகும்

புதுமனை புகுவிழாவில்

மனையின் தூய்மைக்குப்

பசு வேண்டும். முதலில் பசுமாடு மனையில் புகுந்து தூய்மை பெற்ற பிறகு நாம் நுழைவது நமது முன்னேற்றத்துக்கு அத்தாட்சி. வீடு விளங்க பசுமாடு வேண்டும். பசுவை

நான்கு கால் பிராணியாக

விலங்கினமாக மட்டுமே

பார்க்கக் கூடாது. அதில் ஒட்டுமொத்த தேவதைகளும் ஒன்றியிருப்பதால், அதன் வரவானது, செல்வத்தில் வரவாக மட்டுமின்றி மகிழ்ச்சியின் வரவாகவும் அமையும். ஆகையால்

புதுமனைப் புகுவிழாவில்

முதலில் வீட்டுக்குள்

நுழைவது பசுவாக

இருக்க வேண்டும்.

நட்சத்திர பழமொழிகள்

நட்சத்திர பழமொழிகள்

 

படிச்சு வாங்கின பட்டம் இல்லைனாலும் அடிச்சு சொல்லலாம் நம் முன்னோர்கள் அறிவாளிகள்.

சிரிக்க  மட்டும்  இல்லை, சிந்திக்கவும் வைத்தவர்கள். ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்தான்.

அதிசயமான ஊர்ல ஆம்பிள பிள்ளை பிறந்துச்சாம், தொப்புள் கொடி அறுத்தவுடனே கப்பல் ஏறி போச்சுதாம் - நக்கல்.

அக்காள் இருக்கிற வரைதான் மச்சான் உறவு- யதார்த்தம்

அரிசி கொடுத்து அக்காள் விட்டில் என்ன சாப்பாடு- கேள்வி

என்னை கெடுத்தது நரை. என் மகளை கெடுத்தது அழகு- சோகம்

இப்படி வாழ்க்கையின் எல்லா நிலையிலும் பழமொழியை சொன்னவர்கள் நம் முன்னோர்கள். ஜோதிடத்திற்கு மட்டும் சொல்லமால் இருப்பார்களா. இப்ப அந்த பழமொழியைத்தான் பார்க்க போகிறோம்.

பார்ப்போமா? 

பரணி தரணி ஆளும்.   


தரணின்னா உலகம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த உலகத்தையே ஆழ்வார்களாம்.

உலகத்தை ஆள்கிறார்களோ இல்லையோ, சுற்றி இருக்கிற சமூகத்தில், சார்த்து இருக்கிற நண்பர்கள் உறவுகள் மத்தியில் அவருக்கு என்ன கவலைன்னு சொல்கிற மாதிரி ஒரு வாழ்க்கை அமையுமாம். அதைதான் இப்படி சொல்றாங்க.

ரோஹிணியில் பிள்ளை வந்தா ரோதனை மாமனுக்கு 


என்னவாம்?

ரோஹிணி கிருஷ்ணன் பிறந்த நட்சத்திரம். கிருஷ்ணன் பிறந்து மாமனை கொன்னானோ இல்லையோ...அதான் சொல் வழக்கா வந்துடுத்து.

தாய் மாமனுக்கு ஆகாதாம்.  கொலைவெறி பிடிச்ச பிள்ளை, மாமன் தலைமுறை விளங்கவிடாம பண்ணுமாம்.

உண்மையாவா?

ஊருக்குள்ள அப்படிதான் பேசிக்கிறாங்க. ஆனால் உண்மையில்லை. அது சும்மா?

கொண்டவன் ஆத்தாளை கொண்டே போய்டும் ஆயில்யம்.


இது என்ன கரடி?

கொண்டவன்னா... கல்யாணம் செய்து கொண்ட ஆண்மகன்.  அதாவது கட்டிகிட்ட புருஷன்.

ஆத்தான்னா... அவரோட அம்மான்னு அர்த்தம். இதனால் நமக்கு சொல்ல வருவது என்னவென்றால்... மாமியாருக்கு ஆகாது.

ஆகாது மீன்ஸ்.. மாமியாருக்கு கண்டம்.

இதாவது உண்மையா?

நிறைய மாமியார்... பூவோடும் பொட்டோடும், தீர்க்க சுமங்கலியாய் இருக்காங்க.  இன்னும் விளக்கம் வேணுமா?

மகத்து பிள்ளை ஜகத்தை ஆளும்.


இது என்னவோ?

ஜகம்னா உலகம். மகத்தில் பிறந்த பிள்ளைகள் செல்வத்தோடும், செல்வாக்கோடும், தன்னை சார்ந்தவர்கள் மத்தியில் உள்ளூர் MLA மாதிரி உலா வருமாம்.

நிஜாமாவா?

உண்மையா சொல்லபோனால்... தான் எண்ணற்ற எண்ணம் கொண்டவர்கள். தன்னால் முடியும் என்று நினைப்பவர்கள்.  கர்விகள்.

கர்விகள்னா?

கர்வம். மற்றவர்கள் பார்வையில் தலைக்கனம். நான் சொல்லலை அப்படி. பேசிக்கிறாங்க.

அனுசத்திலே மனுஷன் பிறக்கவே கூடாது.


ஏன்?

அனுஷம் சனியோட நட்சத்திரம்.

சனி யாரு?

பாடு பட்டு உழைச்சா பலனில் பாதியை கொடுக்கும் பண்ணையார்.  நூறை எதிர்பார்த்தால் ஆறஅமர 50 அம்பது கொடுக்கும் முதலாளி. அங்கேதான் சந்திரன் நீசமாகிறார்.

நீசம்மா என்ன?

சுத்தமா பவர் போச்சுன்னு அர்த்தம். மனசுல கவலைப்பட ஒரு காரணம் இருந்து கொண்டே  இருக்கும். ஒன்னு போனா ஒன்னு வரும். ஒரு கவலை தீர்ந்தா மறு கவலை வரும்.

மொத்தத்தில் எதிர்காலம் புதிர்காலமாய் காட்சி அளிக்கும்.

உண்மையா?

இது நிஜம்தான்.

கேட்டையில் பிறந்த  பொண்ணு கோட்டையை கட்டினாலும் கட்டுவா? அழிச்சாலும் அழிப்பா.


விளக்கம் தருக.

கோட்டைங்கிறது என்ன?

கௌரவம், அந்தஸ்த்து, புகழ், செல்வாக்கோடு வாழ்வது என்று பொருள். கேட்டை நட்ச்சதிரத்தில் ஒரு பொண்ணு பிறந்தால்,  அவளுக்கு அமைந்த கிரக அமர்வை பொறுத்து,  மெல்ல மெல்ல உயர்ந்து நல்ல வாழ்க்கையை வாழலாம்.

அல்லது....

அவள் பிறந்த பிறகு வாழ்வாங்கு வாழும் அவள் குடும்பம் நலிந்து ஏழ்மை நிலையை அடையலாம். எதுவாக இருப்பினும் கிரக நிலையே காரணம். ஓகே...

ஆண் மூலம் அரசாலும், பெண் மூலம் நிர்மூலம்


மூலம் என்பது ஆஞ்சநேய பெருமான் பிறந்த நட்சத்திரம். சர்வ வல்லமை பொருந்திய வாயு புத்திரன் மாதிரி தடாலடி செயல்பாடு நிறைந்தவர்கள்.  ஆண்களாக இருந்தால் கூட சரி தொலையுது என்று விட்டு விடலாம்.

அதுவே பெண்களாக இருந்தால். யோசிச்சு பாருங்க சொர்ணக்காவை. வீடு தாங்குமா. பொறுந்து போக முடியுமா?  

கல்யாணம் ஆகி போகுதுன்னு வச்சுக்கோங்க. போன அன்னைக்கு வச்சுருந்து புதன் கிழமை பார்த்து அனுப்பி விட்டுடுவாங்க.

பூராட பொண்ணு உறவாடாது. 


அதாவது பூராடத்தில் பிறந்த பொண்ணு  சுதந்திர பிரியர்கலாம்.  கூட்டு குடும்ப வாழ்க்கைக்கு ஆகவே ஆகாதாம். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு போற பொண்ணுங்க என்கிறார்கள். ஆனால் நடைமுறைக்கு ஒத்தே வரலை.

உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் முனையில் கொஞ்சம் நிலமும் இருந்தால் வாழக்கையில் ஒரு கவலையும் இல்லை. 

 

எவ்வளவு ஏழ்மையான  குடும்பமாக இருந்தாலும், இந்த நட்ச்சதிரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்த குடும்பம் வளருமாம். அந்த தலைமுறையில் இருந்து வறுமை இல்லாத வாழ்க்கை அமையுமாம்.

 

அவிட்டத்தில் பிள்ளை பிறந்தால் தவிட்டு பானை எல்லாம் தங்கமாகும்.

 

தவிட்டு பானை என்பது என்ன. மாட்டு தீவனம். அதை என்ன பொட்டியில் வைத்தா பூட்டி வைக்க  போறாங்க. அது எங்காவது ஒரு ஓரத்திலே இருக்கும்.

Saturday, August 29, 2020

தியானத்தின் பலன்கள்

#தியானத்தின்_பலன்கள்;-


1) வியாதிகளிலிருந்து நிவாரணம்

2) வியாதி வராமல் தடுக்கும் சக்தி பெருகி, நிரந்தர ஆரோக்கியம் பெறுதல்.

3) தேவையற்ற பழக்க வழக்கங்கள் மடிந்து மறைதல்

4) மனம் எப்பொழுதும், அமைதியான, ஆனந்த நிலையில் இருத்தல்

5) மற்றவருடன் தோழமை, நட்பு வளர்ந்து, செம்மைப்படுதல்.

6) எண்ணிய எண்ணம் வலுப்பெற்று, நிறைவேறுதல்.

7) ஞாபக சக்தி அதிகரிப்பு.

8) இந்த வாழ்க்கையின் இலட்சியத்தை குறிக்கோளை - தெள்ளத் தெளிவாக அறிதல்.

9) வேலைத்திறன் கூடுதல், மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்தல்.

10) மேலுலக குருமார்களுடன், தியானத்தில் தொடர்பு கொண்டு, அவர்கள் அறிவுரைப்படி தீராத பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.

11) சூட்சும சரீர யாத்திரை, வருமுன் கண்டறிதல் இன்னும் பற்பல தியான அனுபவங்கள் ஏற்பட்டு தன்னையறிந்து, முக்தி பெறுதல்.

12) முன் ஜன்மங்களை தியானத்தில்கண்டறிதல்.

13) எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் (awareness) செயல்படல்.

#மாணவ_மாணவியருக்கு:-

1) உடல் ஆரோக்கியம் அடையும்.

2) தேவையற்ற பழக்கங்கள் மடிந்துமறையும்.

3) பாடத்தில், கூடுதல் கவனம் ஏற்படும்.

4) ஞாபக சக்தி வளரும்.

5) எல்லோருடனும் சுமூக உறவு ஏற்பட்டு செம்மை பெறும்.

6) உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் கலைத்திறமை, மற்றும் பற்பல திறமைகளை கண்டறிந்து, வளரச் செய்ய இயலும்.

7) பயம், போன்ற தேவையற்ற உணர்ச்சிகள் நம்மைவிட்டு அகலும். தன்மைபிக்கை பன்மடங்காகும்.

8) உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாமல் மனம், குதூகலம், அமைதி, திருப்தி அடையும்.

9) மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும்.

10) நஷ்டங்களை மற்றும் தோல்விகளைக் கண்டு தளராத மனவலிமை ஏற்படும்.

11) அளவான தூக்கம் மற்றும் பேச்சு உண்டாகும். தேவைக்கதிகமான தூக்கத்திலும், பேச்சிலும், நேரம் வீண் போகாது.

12) சூட்சுமமானவற்றையும் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு வளரும்.

13) தேர்ந்தெடுக்கும் திறன் (Power of choice) எண்ணத்தின் வலிமை (thought power) இவை உண்டாகும் .

#கர்ப்பணிபெண்களுக்கு - தியானம் மிக மிக அவசியம்.

1) தாய், சேய் நலம் உண்டாகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராகும்.

2) மன வலிமை, மன அமைதி ஏற்படும்.

3) பயம் அகன்று, தைரியம் உண்டாகும்.

4) சுகப் பிரசவம் உண்டாகும். பழைய ஆரோக்கிய நிலைக்கு உடனடியாகத் திரும்பலாம்.

5) குழந்தைக்கு ஆன்மீக நெறியான அடிப்படை பாடம், பிறக்கும் முன்பே உருவாகி, வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும்.

நரசிம்ம மூர்த்தியின் வழிபாடு

#ஸ்ரீ_நரசிம்மர்_வழிபாடு

1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.*

2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு     8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.*

*3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி,    உயர் நிலையைப் பெற்றன.*

*4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.*

*5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.*

*6. நரசிம்மருக்கு.   நர சிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன்,* *சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.*
.
*7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை.ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக* *கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.*

*8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.*
*9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.*

*10. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது.*
.
*11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.*

*12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.*

*13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியததில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.*

*14. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.*

*15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.*

*16. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.*

*17. "எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.*

*18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.*

*19. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.*

*20. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.*

*21. நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.*

*22. நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon' என்று கூறியுள்ளார்*.

*23. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.*

*24. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.*

*25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.*

*26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.*

*27. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.*

*28. ராமாயணம், மகாபாரதம்,   பாகவதம், 18 புராணங்கள்,             உப-புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.*

*29. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.*

*30. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.*

*31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.*

*32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.*

*33. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.*

*34. நரசிம்மரை வழிபடும் போது "ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.*

*35. "அடித்த கை பிடித்த பெருமாள்'' என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.*

*36. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.*

*37. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.*

*38. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.*

*39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.*

Friday, August 28, 2020

பிரித்தியங்கரா தேவியின் தோற்றம் மற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்.

#பிரத்தியங்கிரா #வழிபாடு - #மந்திரங்கள், #இறைவழிபாடு!

நரசிம்மருக்கும் சரபருக்குமிடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்டபோது கண்ட பேருண்டம் என்ற பக்ஷியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார். கண்ட பேருண்டம் சரபப் பக்ஷிக்கு வைரியாகும். சரபருக்கு கோபத்தில் அவர் நெற்றிக்கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள். இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கி விட்டாள். சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும், சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவிகள். இருவரும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியே தான். சரப மூர்த்தி நரஸிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக உக்ரா என்று அழைக்கப்படுகிறாள்.
பிரத்தியங்கிராவுக்கு ஆயிரம் முகங்கள். இம்முகம் எல்லாம் சிங்க முகம் போலவே இருக்கும். இரண்டாயிரம் கைகள், பெரிய சரீரம், கரிய நிறம், நீல ஆடை, சூலம், கபாலம், பாசம், டமருகம் முதலிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவள். சந்திர கலை, கரிய நிறம், நீல ஆடை இப்படி தியானித்து உபாசித்தால் நாட்டுக்கோ, மக்களுக்கோ சத்ரு பயம் ஏற்படாது. தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்தியங்கிரா தான். இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர்கள் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித் நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான். தன்னை உபாசிப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள். பிரத்தியங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்து விட்டு மறு வேலை பார்த்தார்.
பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும். பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம். ஆனந்தம் ப்ரும்ஹனோ வித்வான் ந பிபேதி குதச்சன ஸம்ஸாரமே பயங்கரமானது. இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள்.
பீதம்மாம் நிதராம் அனன்ய சரணம் ரக்ஷ அனுகம்பாநிதே
ப்ரஸீத பரதேவதே மம ஹ்ருதி ப்ரபூதம் பயம் விதாரய
- தேவி மஹிம்ன ஸ்தோத்திரம்
ஆயிரம் தலை தத்துவம்
ஆயிரம் தலை, 2000 கைகள் என்றால் அவள் விச்வரூபி என்றே கொள்ள வேண்டும். விஸ்வமென்ற சமஸ்த ஜகத்திலும் பரவி இருப்பவள் என்று பொருள்.
யதாஹி கதலீ நாமத்வக் பத்ரான்யா ந த்ருச்யதே
ஏவம் விஸ்வஸ்ய நான்யத்வம் த்வத்ஸ்தா ஈஸ்வர த்ருச்யதே
- விஷ்ணு புராணம்
முன்பு இல்லை (ப்ராக பாவம்) இனி இருக்கப் போவதில்லை (த்வம்ஸாபாவம்) என்று பல பாவங்கள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் அம்பிகைக்கு இல்லை. இதை பின் கண்ட வாக்கியங்கள் விளக்குகின்றன.
ஸ பூர்வேஷாமபி குரு : காலேநா நவசச் சேதாத்
- யோக ஸூத்திரம்
புமான் ஆகரசவத் வ்யாபீ ஸ்வாதிர்க்தம் ம்ருஷாயத:
தேசத: காலதச் சாபி ஹ்யநந்தோ வஸ்துத: ஸ்ம்ருத :
- ஸெளர ஸம்ஹிதை
கோபம் என்பது அற்ப குணம்தான். ஆனால் வீரபத்திரரின் கோபம் தர்மாவேசம்தான். சிஷ்ட பரிபாலன துஷ்ட நிக்ரஹ வெறி தான். இதற்குப் பக்கத் துணையாக இருந்தவள் பிரத்தியங்கிரா. அம்பிகைக்கு க்ரோத சமனீ அதாவது கோபத்தை நாசம் செய்பவள் என்று பெயர். கோபமுடையவர் செய்யும் தானம். யக்ஞம், தபஸ் உபாசனை எல்லாம் பச்சை மண்ணாலாகிய குடத்தில் எடுத்த ஜலம்போல போய் விடுகிறது என்கிறது ஆபஸ்தம்ப ஸூத்திரம். தாருகனை அழித்தவளும் பத்ரகாளியான பிரத்தியங்கிராவே. தாருகனை அழிக்க சிவபெருமான் சிருஷ்டித்த இவளுக்கு காலகண்டி என்று பெயர் என்கிறது லிங்க புராணம்.
ஸ ஸர்ஜ காளீம் காமாரி : கால கண்டீம் காபர்தினீம்
பிரத்தியங்கிராவை உபாசித்தால் சத்ரு பயம் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ ஏற்படாது.
க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி மஹத்பயி
தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பைரவ மஹிஷி
சரபர், பைரவர் எல்லோருமே சிவ அம்சம். பிரத்தியங்கிரா பைரவரின் மஹிஷி. லோகத்திற்கு மரணம் (சிருஷ்டி) ரமணம் (ஸ்திதி) வமனம் (சம்ஹாரம்) செய்வதால் பரமசிவனுக்கு பைரவர் என்று பெயர். ஸ்ரீ புரத்தில் 22, 23 -வது பிராகாரங்களுக்கு நடுவில் மார்த்தாண்ட பைரவர் வசிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
பைரவ மூர்த்தி
சிவலீலைகளில் ஒன்று அந்தகன் என்ற அசுரனை பைரவ மூர்த்தியாக சிவபெருமான் வதம் செய்தது. சிவபெருமான் பைரவரை அழைத்து அந்தகனுக்கு அந்திய காலத்தைக் கொடுக்கும் ரகசியத்தைச் சொல்லி அனுப்பினார். பைரவர் அந்தகனை சம்ஹரித்துத் திரும்பி வருகிறார். இதற்கு உதவியாக இருந்தவள் பிரத்தியங்கிரா. பைரவ பத்னியாதலால் பைரவி என்ற பெயரும் உண்டு.
மங்கள ரூபிணி
ஒன்றை விரும்பி ஒன்றை வெறுப்பது என்ற எண்ணம் இருந்தால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. எல்லாவற்றிலும் சரி, சமத்துவ மனோபாவம் ஏற்பட்டால்தான் ஞானத்தை அடைய முடியும். காளியை தாமஸீ என்கிறது தேவி மகாத்மியம். மோக்ஷம் என்பது இவளது கிருபையாலேதான் கிடைக்கிறது. மோக்ஷம் அடைவது என்றால் ஏதோ இறந்த பின்பு கிடைப்பது என்பதில்லை. இவள் அருள் இருந்தால் உயிருள்ள போதே மோக்ஷ நிலை கிடைக்கும். இதற்கு உன்மனீ நிலை என்பர். பிரத்தியங்கிராவின் தயவு இருந்தால் இத்தகைய உன்மனீ பாவம் எளிதில் ஏற்படும்.
ஞான ரூபிணி
இவள் ஞானத்தை தருபவளாதலால் வித்யை ரூபமாகவும், அவித்யை ரூபமாகவும் இருக்கிறாள். வித்யை, ஸ்வாத்மா ரூபமான ஞானம். அவித்யை (ஞானம் ஏற்படுவதற்கு முன்புள்ள நிலை). கடைசி விருத்தியின் ரூபமான ஞானம். இவ்விரண்டு ஸ்வரூபங்களாகவும் அம்பிகை இருக்கிறாள். இவ்விரண்டையும் உடையவன் அவித்யையினால் ம்ருத்யுவை ஜயித்து வித்யையினால் அமிர்தத்துவத்தை அடையச் செய்கிறான்.
வித்யாம் சாவித்யாம் ச யஸ்தத் வேதோபயம்  ஸஹ
அவித்யாய ம்ருத்யும் தீர்த்வா வித்யயாம்ருதமசநுதே - ச்ருதி
இந்த இரண்டு ரூபங்களில் வித்யா ரூபத்தால் ஜீவன் விடுவிக்கப்படுகிறதென்றும், அவித்யா ரூபத்தால் கட்டப்படுகிறதென்றும் சொல்லப்படுகிறது.
வித்யா வித்யேதி தேவ்யா த்வே ரூபே ஜானிஹீ பார்த்திவ
ஏகயா முச்யதே ஜந்து : அந்யயா பத்யதே புந : -தேவி பாகவதம்
வ்யக்தா  அவ்யக்தம்
முதல் முதலில் ஏற்படும் மஹத் தத்துவம் வ்யக்தம் எனப்படும். எல்லாவற்றையும் விட பெரியதாகையால் மஹத். இது வ்யக்தம், அவ்யக்தம் என்று பிரிந்தது. பூதங்களால் ஏற்படும் விகாரங்களோடு கூடியது வ்யக்தவான ரூபம். இவ்விதமான விகாரங்களுக்கு உட்படாதது அவ்யக்தமான ரூபம், இந்த இரண்டு விதமும் அம்பிகைக்கு உண்டு. தத்துவங்களில் மஹத் முதலிய 23 தத்துவங்கள் வ்யக்தம் என்றும், அவ்யக்தமென்றால் பராப்ரக்ருதி என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
பிரத்தியங்கிரா விதானம்
அஸ்ய ஸ்ரீ அதர்வண பத்ர காளீ மகா மந்திரஸ்ய பிரயங்கிரா ரிஷய : அதர்வண பத்ரகாளீ தேவதா
க்ஷம் பீஜம் ஹும் சக்தி : பட் கீலகம்
மம ஸர்வ துரித நிவிர்த்யர்த்தே ஜபே விநியோக:
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வால ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யகரே க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்.
- அங்கன்யாஸம், கரன்யாஸம்
தியானம்
ஸிம்ஹீம் ஸிம்ஹ முகீம் பகவத: ஸ்ரீ பைரவஸ் யோல்லஸ சூல ஸ்தூல கபால பாச டமரு வ்யக்ரோக்ர ஹஸ்தாம் புஜாம்
தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்ய குஹராமாக்த நேத்ரத்ரயீம் பாலேந்து த்யுதி மௌக்திகாம் பகவதீம் ப்ரத்யங்கராம் பாவயே லம் இத்யாதி பஞ்சபூஜா.
மூல மந்திரம்
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கரே க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்
தேவியின் இம்மூலமந்திரத்தை தினமும் பய பக்தியுடன் ஜெயிப்பவர்கள் நோய் நொடியற்று, சத்ரு அழிந்து, பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம் நீங்கி, பாதுகாப்பான வாழ்வில் எல்லா ஆனந்தத்தை யும் அடைந்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் அருள்பெற்று, நீண்ட ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள்.
பிரணவத்தில் இருந்து விரிவடைந்திருக்கும் இந்தத் தேவியின் மூலமந்திரம் காயத்ரீ மஹா மந்திரம் சொல்லுவதுபோல் ஐந்து இடைவெளி விட்டுச் சொல்ல வேண்டும்.
ஓம் - என்ற பிரணவத்தை தீர்க்க ஸ்வரத்திலும் அடுத்த க்ஷம் என்பதை ஸ்வரித அதாவது குறுகிய ஸ்வரத்திலும் ஓம் -க்ஷம் என்று ஒரு இடைவெளியிலும்
பக்ஷஜ்வாலா ஜிஹ்வே என்று இரண்டாவது இடைவெளியும் -
கராளதம்ஷ்ட்ரே என்று மூன்றாவது இடைவெளியும் -
ப்ரத் யங்கரே என்று நான்காவது இடைவெளியும் - க்ஷம் - ஹ்ரீம் ஹும்பட் ஸ்வாஹா என்று ஐந்தாவது இடைவெளியும் வைத்து ஒவ்வொரு இடைவெளிக்கும் இடைப்பட்ட காலம் மூன்று மாத்திரை நேரம் எனக் கொள்ளலாம். மூன்று மாத்திரை என்பது மூன்று செகண்டுகள் என்று கொள்ளலாம்.
கருணை உள்ளம் கொண்ட இத்தேவியின் மூல மந்திர அக்ஷரத்தின் பிரணவ கலைகளைக் கூர்ந்து நோக்கின், இதில் சம்ஹாரத்தைக் குறிக்கும் கலைக்கு இடமே இல்லை என்று கூறலாம். 1. ஜ்ஜம் என்ற சித்தி கலையும், 2. ஜம் என்ற சித்திகலையும், 3. கம் என்ற சிருஷ்டி கலையும், 4. த்தம் என்ற வரத கலையும் தான் உள்ளது. இந்தக் கலைகள் அக்னி சூரியக் கலைகளில் அடங்கி ஒளி வீசுகின்றபடியால் ஜ்வாலா என்ற பெயரை அடைகின்ற தேவி சித்தி, சிருஷ்டியை வரமாக அளிக்கும் வரதா எனப் பெயர் பெற்று, ஒளி வீசி, பக்த கோடிகளுக்கு உபாசகர்களுக்கு ஸகல சம்பத்துகளையும் அளிக்கின்ற பிரத காளி என்ற திருப்பெயரையும் பெற்று பிரத்தியங்கிரா தேவியாக என்றும் போற்றித் துதிக்கப்படுகிறாள். தனித்து ஏகாந்தமாக புன்னாக மரங்கள் சூழ்ந்த ஸ்தலத்தில் சர்வமங்களம் பொருந்திய காரிண்யை யாக ஒளிவீசுகின்ற மகா சக்தியான இந்தத் தேவியை போற்றித்துதித்து புகழும் ,பொருளும் சர்வசம்பத்தும் பெறுவோமாக.
அதர்வ ருக் மந்திரம்
ஓம் க்ருஷ்ணவர்ணீ ப்ருஹத்ரூபி, பிருஹத் கண்டீ மஹத்பயீ
தேவி தேவி மஹா தேவி மம சந்ரூன் விநாசய மம:
சத்ரூன் விநாசயோன் நம:
மூல மந்திரம்
கட் பட் ஜஹி மஹா க்ருத்யே விதூ மாக்நி ஸமப்ரபே தேவி தேவி மஹா தேவி மம சத்ரூன் விநாசய, மம சத்ரூன் விநாசயோம் நம:
ஓம் உச்சிஷ்ட புருஷி கும்ஸ்வபிஷி பயமே ஸமுபர்ச்சிதம் யதி சக்யம் சக்யம் வா தன்மே பகவதி சமய ஸ்வாஹா
பிரத்தியங்கிரா யந்த்ரம்
பிந்து, திரிகோண அஷ்ட கோண விருத்த அஷ்டதள, விருத்தத்ரர பூபுரம்.
பிந்து :- ஆதார சக்தி கமலாஸனாய நம: ஸ்ரீ பைரவ ஸஹித ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவ்யை நம:
ஆவரண பூஜை
பூபுரம் :- ருத்ராய நம: அக்னி, யம, நிருதி, வருண வாயு, குபேர, ஈசனாய நம: வஜ்ராய நம: சக்தி, தண்ட கட்க, பாச, அங்குச கதா திரிசூலாய நம:
விருத்தத்ரயே
திவ்யௌக குரவே நம: ஸித்தௌக குரவே நம: மானவெளக குரவே நம: கௌலானந்த நாத பரமகுருவே நம: பரமா சார்ய குரவே நம: பரமேஷ்டி குரவே நம: ஸ்வ குரவே நம:
அஷ்டதளம் மூலே
ஓம் அஸிதாங்க பைரவாய நம
ஓம் ருரு பைரவாய நம
ஓம் சண்ட பைரவாய நம
ஓம் க்ரோதந பைரவாய நம 
ஓம் உன்மத்த பைரவாய நம
ஓம் கபால பைரவாய நம
ஓம் பீஷண பைரவாய நம
ஓம் ஸம்ஹார பைரவாய நம
அஷ்டதளாக்ரே
ஓம் பிராம்யை நம
ஓம் மாகேஸ்வரியை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் வராஹ்யை நம
ஓம் இந்திராண்யை நம
ஓம் நாரஸிம்ஹ்யை நம
ஓம் சாமுண்டாயை நம
அஷ்டதள கிரந்தி ஸ்தானேஷு
ஓம் காமரூப பீடாய நம
ஓம் மலயகிரி பீடாய நம
ஓம் கொல்லகிரி பீடாய நம
ஓம் காலாந்தக பீடாய நம
ஓம் ஸெளஹார பீடாய நம
ஓம் ஜாலாந்திர பீடாய நம
ஓம் உட்டியான பீடாய நம
ஓம் தேவகூட பீடாய நம
விருத்த மண்டலே
ஓம் ஹேதுக பைரவாய நம
ஓம் வேதாள பைரவாய நம
ஓம் த்ரிபுராந்தக பைரவாய நம
ஓம் அக்னி ஜிஹ்வ பைரவாய நம
ஓம் காலாந்தக பைரவாய நம
ஓம் ஏக பாத பைரவாய நம
ஓம் கபால பைரவாய நம
ஓம் பீமரூப பைரவாய நம
ஓம் மலய பைரவாய நம
ஓம் தாடகேஸ்வர பைரவாய நம
அஷ்ட கோணேஷு
ஓம் ஸ்தம்பின்யை நம
ஓம் ÷க்ஷõபின்யை நம
ஓம் திராவின்யை நம
ஓம் ப்ராமின்யை நம
ஓம் மோகின்யை நம
ஓம் ஸ்தம்பின்யை நம
ஓம் ரௌத்ராயை நம
ஓம் சம்ஹாரிண்யை நம
திரிகோணாத் பரித :
ஓம் ஆக்னேயாதி நம
ஓம் ஹிருதயாய வாமின்யை நம
ஓம் சிரஸே நீலின்யை நம
ஓம் சிகாய சக்ரிண்யை நம
ஓம் கவசாய கட்கின்யை நம
ஓம் நேத்ரயாய பாசாங்க்யை நம
ஓம் அஸ்த்ராய காம்பின்யை நம
திரிகோகேணஷு
ஓம் காள்யை நம
ஓம் பத்ர காள்யை நம
ஓம் நித்யா காள்ளை நம:
பிந்து
ஊர்த்வ கேசிம் ச ஸிம்ஹஸ்தம் சந்த் ராங்கித சிரோருஹாம்
கபால சூல டமரு நாகபாச தராம் சுபாம்
ப்ரயத்யங்காரம் பஜேந் நித்யம் ஸர்வ சத்ரு விநாசினீம்
ஸ்ரீ பைரவ ஸஹிதாம் ஸ்ரீ ப்ரத்யங்கரா மஹா தேவீம் ஸம்பூஜ்ய
பூபுரே
ஓம் வடுகாய நம:
ஓம் யோகினீப்யோ நம:
ஓம் ÷க்ஷத்ர பாலேப்யோ நம:
ஓம் கணபதயே நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் த்வாதசாதி த்யேப்யோ நம:
ஓம் ஏகாதச ருத்ரேப்யோ நம:
ஓம் ஸர்வேப்யோ பூதேப்யோ நம:

#ஸ்ரீ #பிரத்யங்கராதேவியின் 108 #போற்றி!

ஸ்ரீ பிரத்யங்கராதேவியின் 108 போற்றி

ஓம் சகல நாயகி போற்றி

ஓம் சர்வ ப்ரத்யங்கரா தேவி போற்றி

ஓம் தர்ம பரிபாலதையே போற்றி

ஓம் தக்க வரமருள் தாயேபோற்றி

ஓம் துக்க நிவாரணி மாதா போற்றி

ஓம் துஷ்ட சிஷ்ட சம்ஹார போற்றி

ஓம் இஷ்ட குண சோதரியே போற்றி

ஓம் கஷ்ட வழி தகர்ப்பாய் போற்றி

ஓம் எண்ணவரும் பிரத்யங்கரா போற்றி

ஓம் ரூபமது ஓங்காரியே போற்றி

ஓம் வரிந்த தோற்றமானாய் போற்றி

ஓம் நெடிதுயர் விஸ்வரூபி போற்றி

ஓம் ஹரத்துள்ளாயே போற்றி

ஓம் கபால மாலையணிந்தாயே போற்றி

ஓம் எண்ணிலா சிரமுள்ளாய் போற்றி

ஓம் எண்ணமதி அறிவாய் போற்றி

ஓம் வண்ண உயிர் வடிவே போற்றி

ஓம் சிம்மவாகினி பிரத்யங்கரா போற்றி

ஓம் சிங்க முகமுடையவலே போற்றி

ஓம் சூலமது ஏந்தினாயே போற்றி

ஓம் சதுர்கரம் தரித்தாயே போற்றி

ஓம் ஸ்ஹம்கார சக்தியே போற்றி

ஓம் சிவந்த விழி மூன்றுடையாய் போற்றி

ஓம் சீற்றத்தில் சர்வ பாப நாசி போற்றி

ஓம் தெற்றுப்பல் எண்ணிலாய் போற்றி

ஓம் சந்திரனை தரித்தாயே போற்றி

ஓம் இந்திரனும் பணிந்தாயே போற்றி

ஓம் கர்ணகோர ரூபமே போற்றி

ஓம் ஞானவழி எழிலே போற்றி

ஓம் நாளும் இடர் அழிப்பாயே போற்றி

ஓம் பாடும் மனம் அமர்வாயே போற்றி

ஓம் ஓடும் மனம் நிறுத்துவாயே போற்றி

ஓம் வாடும் பயிர் காபாயே போற்றி

ஓம் வானம் பூமி காபாயே போற்றி

ஓம் ரூபா ரூபம் கலந்தாயே போற்றி

ஓம் வினை நீக்கும் பிரத்யங்கரா போற்றி

ஓம் எதிர்வினை பொசிப்பாய் போற்றி

ஓம் ஏவியோரை அழிப்பாய் போற்றி

ஓம் எல்லோர்க்கும் சமமே போற்றி

ஓம் ஏற்றத் தாழ்வு இல்லாயே போற்றி

ஓம் பக்தர் மனம் வசிப்பாயே போற்றி

ஓம் பக்தர் குறை தீர்ப்பாயே போற்றி

ஓம் முக்தி தரும் சக்தியே போற்றி

ஓம் சித்தி வழி சித்தியே போற்றி

ஓம் சக்தி தரும் பிரத்யங்கரா போற்றி

ஓம் சிவந்தவாழி பேரெழிலே போற்றி

ஓம் உகந்த வழி காட்டுவாய் போற்றி

ஓம் புகலும் மொழி வருவாயே போற்றி

ஓம் இகம் புரம் சுகமாவாயே போற்றி

ஓம் தவம் தரும் யோகமாயே போற்றி

ஓம் தயை சுவை மோகனமே போற்றி

ஓம் கண் ஏறு நகிப்பாயே போற்றி

ஓம் சூன்ய ஏவல் எரிப்பாயே போற்றி

ஓம் சர்வ லோக பிரத்யங்கரா போற்றி

ஓம் பத்ரகாளி வடிவே போற்றி

ஓம் பாரோச்சும் சக்தீ போற்றி

ஓம் சூலினியின் துணையே போற்றி

ஓம் சூரர்களை வதிப்பாயே போற்றி

ஓம் சூழ்ச்சிக்கு வீழ்ச்சியே போற்றி

ஓம் சுந்தர வதன மாதேவி போற்றி

ஓம் நெருப்பின் நெருப்பானாய் போற்றி

ஓம் விருப்பமது அணைப்பாயே போற்றி

ஓம் திருப்பமது பிரத்யங்கரா போற்றி

ஓம் மகிஷசுர மர்த்தினியே போற்றி

ஓம் மாவீர கோகிலமே போற்றி

ஓம் சர்வபாப விநாசனி போற்றி

ஓம் சத்ய ஜோதி வடிவமே போற்றி

ஓம் உள்ளம் உள்ளதறிவாய் போற்றி

ஓம் உகந்தது தருவாயே போற்றி

ஓம் நினைத்தது நடத்துவாய் போற்றி

ஓம் கணித்தது புகுவாயே போற்றி

ஓம் விரைந்துதவும் பிரத்யங்கரா போற்றி

ஓம் ஆபத் சகாயமே போற்றி

ஓம் ஆகாய வெளிவழியே போற்றி

ஓம் ஆயிரம் வியழி ஜோதி போற்றி

ஓம் ஆதரவு தர வருவாயே போற்றி

ஓம் சங்கர ஸ்வரூபியே போற்றி

ஓம் பார்வதி மய சக்தியே போற்றி

ஓம் ப்ராணரூப ஆட்சியே போற்றி

ஓம் பிரணவரூப ஒலியே போற்றி

ஓம் சரணாகதம் பிரத்யங்கரா போற்றி

ஓம் புவனேஸ்வரி ரூபமே போற்றி

ஓம் புவன யோக வீரமே போற்றி

ஓம் யுக யுகாந்திர ஆற்றலே போற்றி

ஓம் தவ ரூப மய ஸ்வரூபமே போற்றி

ஓம் புத பேத நாசினி போற்றி

ஓம் யோக தவம் அருள்வாய் போற்றி

ஓம் வனநேச பாரிதியே போற்றி

ஓம் குண ரூப சாரதியே போற்றி

ஓம் வரவேண்டும் பிரத்யங்கரா போற்றி

ஓம் டமருகம் தரித்தாய் போற்றி

ஓம் சூலமும் கொண்டாய் போற்றி

ஓம் பக்தரின் பிரியமே போற்றி

ஓம் பணிந்தோர்க்கு காவலே போற்றி

ஓம் ராஜராஜ தேவியே போற்றி

ஓம் கங்காதர காருண்யே போற்றி

ஓம் வித்தைக் கதிபதியே போற்றி

ஓம் வித்வ மூல சித்தமே போற்றி

ஓம் வேண்டதருள் பிரத்யங்கரா போற்றி

ஓம் கல்ப விருட்சமானாய் போற்றி

ஓம் காமதேனு மடியே போற்றி

ஓம் காற்று நீர் நேருப்பே போற்றி

ஓம் சித்த வித்யா புத்தியே போற்றி

ஓம் தத்துவ சத்தியத் தாயே போற்றி

ஓம் மகாபல மாசக்தியே போற்றி

ஓம் மகா பைரவி தேவியே போற்றி

ஓம் நலம் தரும் நாயகியே போற்றி

ஓம் ஆத்மலய பிரத்யங்கரா போற்றி.

ராம நாமத்தின் சிறப்பு மற்றும் மகிமை

#ராமநாமத்தை_இடைவிடாது 

கேட்க வேண்டும் என்பதற்காகவே, ராமஅவதார காலம் முடிந்த பின்னரும் வைகுண்டம் செல்லாமல் பூவுலகிலேயே தங்கிவிட்டவன் ராமதூதனான அனுமன்.  

அப்படிப்பட்ட அனுமன் ஆலயம் ஒன்றில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து 24 மணி நேரமும் ராமநாமத்தை இடைவிடாமல் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு சாந்நித்யம் மிக்கதாக இருக்கும்.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் அழகிய ரம்யமான சூழ்நிலையில் ரன்பால் ஏரி அமைந்துள்ளது. இங்குள்ளவர்களால் லக்கோடா ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கரையில் சிரஞ்சீவியான ஸ்ரீரமபக்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.

ஏரியின் தென்கிழக்குப் பகுதியில் அழகே உருவாய் கோயிலும் மூர்த்தியும் புகழ்பெற்று விளங்குகிறது. மூலவராக வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் செந்தூரம் பூசப்பட்ட திருக்கோலத்துடன் காட்சி தருகிறார்.  
பிரேம் பீகுஜி மகராஜ் என்பவரால் 1961ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலில், தினமும் நடைபெற்று வரும் 'ராம் தூன்' என்ற 'ராம நாம சங்கீர்த்தனம்' மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

1964ம் ஆண்டு முதல் இந்த ராம பஜன் தொடர்ந்து இடைவெளி என்பதே இல்லாமல் நடைபெற்று வருகிறது.

24 மணி நேரமும், ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம என்ற பதின்மூன்று அட்சரம் கொண்டு ராம மந்திரம் இங்கே இடைவிடாமல் ஜபிக்கப்பட்டு வருகிறது.

இந்த ராமநாம சங்கீர்த்தனத்தில் பக்தர்கள் பங்கேற்க விரும்பினால் இரண்டுடொரு நாட்களுக்கு முன்பே திருக்கோயில் நிர்வாகத்திடம் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் நிர்வாகம் திருக்கோயில் அறவிப்பு பலகையில் அறிவித்துள்ள கால நேரப்படி, முன்னரே பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தவறாமல் வந்து பஜனையில் பங்கேற்க வேண்டும். இந்த ஜப சேவையில் சிறியவர், பெரியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எந்த வேறுபாடுமின்றி அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள்.  

இப்படி 'ராம் தூன்' பஜன் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற ஆலய நிர்வாகம் எல்லாவித முன்னேற்பாடுகளையும் செய்கிறது முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் உரிய காலத்தில் வராத பட்சத்தில் நான்கு பேர் அடங்கிய ஒரு பஜனைக் குழுவினை எந்நேரமும், எந்தவிதமான சூழ்நிலையிலும் எதிர்கொண்டு நாம பஜனை செய்திடத் தயாராக வைத்திருக்கிறார்கள்.

அகண்ட நாம சங்கீர்த்தனம் என்ற இந்தத் தொடர் பஜனையை கின்னஸ் உலக சாதனையாக 1984ல் உலக சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கௌரவித்துள்ளார்கள். கடந்த 2001ம் ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட பங்கர நிலநடுக்கத்தின் போதும், இந்த அனுமன் கோயிலுக்க எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை. ராமநாம பஜனும் எந்தவிதமான தடங்களும் இன்றி தொடர்ந்து நடந்த வண்ணமிருந்தது என்பதே இத்தலத்து அனுமனின் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

Thursday, August 27, 2020

கிருபானந்தவாரியாரின் கற்பூர கதை

கிருபானந்த வாரியார் சொன்ன கற்பூர கதை

கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு

இரண்டறக் கலந்து

போவோம்

பக்தன் ஒருவன்

கோயிலுக்குச் சென்றான் அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக

வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன தேங்காய் பேச ஆரம்பித்தது

நம் மூவரில் நானே

கெட்டியானவன்

பெரியவனும் கூடப்!" என்றது அடுத்து வாழைப்பழம், நமது மூவரில் நானே இளமையானவள்

இனிமையானவன்

என்று பெருமைப்பட்டுக்

கொண்டது

கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது

பக்தன் சந்நிதியை

அடைந்தான். தேங்காய் உடைந்தது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது

பக்தர்களாகிய நாம்

இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன்

இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடும்

இனிமையாக இருந்தாலும் வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள்

கிழிபடலாம். ஆனால் கற்பூரம்

போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து

போவோம்.

ஆறுமுகத்தின் மகிமை மற்றும் முருகனின் பெருமை

ஆறுமுகத்தை வழிபட்டால் ஏறுமுகம் ...!!

ஆறு படைவீடுகளில் முருகப்பெருமான் ஆறு நிலைகளில் விளங்குகிறார். 

1. திருப்பரங்குன்றத்தில் திருமண நிலை (உல்லாசம்), 

2. திருச்செந்தூரில் கவலை தோய்ந்த நிலை (நிராகுலம்), 

3. பழநி மலையில் 
ஞான பண்டிதனாகத் துறவி கோலநிலை (யோகம்),

4. சுவாமிமலையில் தந்தைக்கு இதமாகப் பிரணவப் பொருள் உபதேசித்த குரு நிலை (இதம்),

5. திருத்தணியில் குறிஞ்சி குன்றுகளில் மகிழ்ந்த நிலை (சல்லாபம்), 

6. சோலைமலையில் ஞானப்பழம் உதிர்க்கும் ஆனந்தநிலை (விநோதம்) நிலையில் அருள்பாலிக்கிறார். 

~~~~~~
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள், 
ஆறு திருமுகம், 
ஆறு கார்த்திகை பெண்கள், 
ஆறு சமயங்களுக்கும் 
தனிப் பெருங்கடவுள், 
ஆறு மந்திரங்கள், 
ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம், 
ஆறுமுகனுக்கு உகந்த ஆறு நூல்கள், 
தோன்றிய இடமும் ஆறு (கங்கை ஆறு) இவ்வாறு ஆறு என்பதுடன் முருகப்பெருமானுக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. 

ஆறுமுகத்தை மனமுருகி வழிபட்டால் நம் வாழ்க்கையில் ஏறுமுகத்தை காணமுடியும். 
🙏🙏🙏

Wednesday, August 26, 2020

சென்னை காளிகாம்பாள் விசேஷம்

சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று 
காளிகாம்பாள் கோவில். 
இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக குடியிருந்தாள். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் கால கட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்து விட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.

காளிகாம்பாள் கோவில் ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்பு செட்டித் தெருவிற்கு இடம் மாறினாள். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து கொண்டே இருந்தனர்.  அப்படி வந்த ஒரு விஐ.பி. பக்தர்தான் சத்ரபதி சிவாஜி. 1677-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

மகாகவி பாரதியார் சுதேசிமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தபாது பிராட்வேயில் தங்கி இருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவார். “யாதுமாகி நின்றாய் காளி” என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான். சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவளை சரண் அடைந்து அருள் பெறுகிறார்கள்.

கடற்கரைக் கோவிலில் காளி உருவம் உக்கிரமாக இருந்ததாக வும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கருணை தெய்வமான காளிகாம்பாள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்... ஏராளம்... அவற்றை எவராலும் பட்டியலிட முடியாது.
பொதுவாக தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் முதலியன கொண்டு கோப ரூபத்துடன் இருப்பவளே காளி என்று சொல்வார்கள். ஆனால், நம் அன்னை ஸ்ரீகாளிகாம்பாளின் ரூபத்தினை சற்றே உன்னிப்பாகப் பார்த்தால், அன்னை எழில் கொஞ்சும் திருமேனியுடன் இருப்பதை காணலாம்.

ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பவ மலர் மற்றும் தன் திருவடிகளை தஞ்சமென அடைய உயிர்கட்குக் காட்டும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலம் என்று அன்னை நம் மனதை மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க வைக்கிறாள்.

அன்னையின் இத்திருமேனி, அன்னை ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ரூபம் கொண்டது. ஆனந்த வாழ்வளிக்கும் அன்னை, வேண்டுபவர்க்கு வேண்டுவன அளித்து ஆனந்தம் நல்குகிறாள். நம் அன்னை வரப்ரதாயினி. ஞானச்சுடராய் விளங்கி பெருங்கருணையோடு ஜீவன்களைக் காத்து அருளும் அன்னையினைக் காண கண்கள் கோடி வேண்டும்.

உலக வாழக்கையை வெறுத்து விரக்தியுடன் வந்து தரிசனம் செய்யும் பக்தனுக்கு முக்தி அளிக்கும் சக்தி கொண்டவள் அம்பிகை- காளிகாம்பாள் ஆவாள் அம்பாளைப் பார்க்கும் போது, அவள் நம்மை பாசத்தோடும், நேசத்தோடும் பார்ப்பது போலவே இருக்கும். அன்னை காளிகாம்பாள் தலத்திலும் இதை நாம் உணரலாம்.

காளிகாம்பாளும் நாம் வேண்டுவதை, ஒரு தாய் தன் பிள்ளையிடம் எப்படி கருணையோடு கேட்பாளோ, அந்த மாதிரி கேட்பாள். அவள் முகத்தை பார்க்கும் போது, ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் ஒரே நேரத்தில் ஒளியை வெளிப்படுத்துவது போல இருக்கும். தீபாராதனை காட்டும் போது காளிகாம்பாளை நன்கு உன்னிப்பாகப் பாருங்கள் அவள் விழிகள் சுடர் விழிகள் போல மாறி இருக்கும்.

கருவறையில் அம்பாள் வீற்றிருந்த கோலத்தில் இருக்கிறாள். வலது மேல் கையில் அங்குசம் ஏந்தியுள்ளாள். இடது மேல் கையில் பாசம் உள்ளது. வலது கீழ் கையில் தாமரை புஷ்பமும், இடது கீழ் கையில் வரஹஸ்தமும் வைத்துள்ளாள். மேலும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டபடி அமர்ந்துள்ளாள். அந்த கால் பாதம் தாமரை மலர் மீது படியும்படி அமர்ந்து இருக்கிறாள்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சொல்ல வேண்டிய பதிகம்

*வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, இதை மட்டும் செய்தால் போதுமே! நீங்கள் செய்யும் காரியம் நிச்சயம் வெற்றிதான்.*

*வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, நாம் சில பாடல் வரிகளை உச்சரிக்கும் பட்சத்தில் அது நமக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று நம்முடைய சாஸ்திர குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில், தினந்தோறும் வீட்டை விட்டு செல்லும் போது, என்ன பதிகத்தை படிக்க வேண்டும், நீண்ட தூர பயணம் செல்லும்போது, அந்தப் பயணம் நல்லபடியாக அமைய, என்ன பதிகத்தை படிக்க வேண்டும், பதிகங்களை படிக்கவே தெரியாதவர்கள், என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.*

*இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்ற முதல் பதிகம், ‘கோளறு பதிகம்’. இது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தடையை நீக்கக் கூடிய சக்தி இந்த பதிகத்திற்கு அதிகமாகவே உள்ளது என்று சொல்லலாம். நாயன்மார்களில் மிக முக்கியமான நால்வரில் ஒருவரான, திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகம் தான் இது!*

*தினம் தோறும் வீட்டில் இருந்து வெளியே கிளம்புவதற்கு முன்பு, இந்தப் பாடலை உச்சரித்து கிளம்பினால், நீங்கள் செல்லும் வேலை சிறப்பாக முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கான கோளாறு பதிகம் இதோ*

*தினம்தோறும் வெளியே செல்வதற்கு முன்பு படிக்க வேண்டிய பதிகம்:*

*வேயுறு* *தோளிபங்கன்* *விடமுண்ட கண்டன்*
*மிகநல்ல வீணை தடவி*
*மாசறு திங்கள்* *கங்கை* *முடிமேலணிந்தென்*
*உளமே புகுந்த* *அதனால்*
*ஞாயிறு* *திங்கள்செவ்வாய்* *புதன்வியாழன்* *வெள்ளி*
*சனிபாம்பி ரண்டு முடனே*
*ஆசறு நல்லநல்ல* *அவைநல்ல நல்ல*
*அடியா ரவர்க்கு மிகவே.*

*அடுத்ததாக, நீண்ட தூர பயணத்திற்கு செல்கின்றோம். மூன்று நாட்களோ அல்லது நான்கு நாட்களோ அல்லது அதற்கு மேல் வெளியூரில் தங்கி ஆன்மீக சுற்றுப் பயணம் செய்தாலும் அல்லது வேறு வகையில் பயணத்தை மேற்கொண்டாலும், அந்தப் பயணம் நல்லபடியாக அமைய வேண்டும் என்று, பயணத்தை முடித்துக்கொண்டு பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று, வீட்டிலிருந்து கிளம்பும்போது எந்த பதிகத்தை படிக்க வேண்டும்? அருணகிரிநாதர் நமக்காக அருளிய  பதிகம் உங்களுக்காக இதோ!*

*நீண்ட தூர பயணத்தின் போது படிக்க வேண்டிய பதிகம்:*

*சேயவன் புந்தி* *வனவாச மாதுடன்* *சேர்ந்தசெந்திற்*
*சேயவன் புந்தி* *கனிசா சராந்தக* *சேந்தவென்னிற்*
*சேயவன் புந்தி* *பனிப்பானு* *வெள்ளிபொன்* *செங்கதிரோன்*
*சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே.*

*சரி, இதை எதுவுமே படிப்பதற்கு நேரம் இல்லை. படிக்கவும் தெரியாது! என்று சொல்பவர்களுக்கும், ஒரு தீர்வு உண்டு. வீட்டிலிருந்து கிளம்பும்போது பூஜை அறைக்கு சென்று, குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, திலகம் வைத்துக்கொண்டு, ‘ஓம் கேசவாய நமஹ’ என்ற மந்திரத்தை மனதார மூன்று முறை உச்சரித்து, செல்லக்கூடிய காரியம் தடையில்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும், என்று வழிபாடு செய்வது மிகமிக நன்மையை தேடித்தரும்.*

*வேலைக்கு நேர்காணலுக்கு செல்கிறீர்கள் அல்லது ஏதேனும் முக்கியமான விஷயம் உங்கள் பக்கம் வெற்றியாக வேண்டும், செல்லக்கூடிய வேலை உங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்றால், உங்கள் மீது பாசமாக இருக்கக்கூடிய உங்கள் அம்மாவின் கையாலேயே அல்லது உங்களுடைய மனைவியின் கையாலோ, ஒரு டம்ளர் தண்ணீரை பருகி விட்டு செல்வது நன்மையை தரும்.*

*அதாவது, அவர்கள் நேர்மரையோடு, உங்களுக்கு தரக்கூடிய அந்த தண்ணீரில் இருந்து, கிடைக்கக்கூடிய ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மங்களகரமான காரியங்கள் தடை இல்லாமல் நடப்பதற்கும், முக்கியமான வேலைகள் தோல்வியில் முடியாமல் இருப்பதற்கும், குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு, ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து, பூஜை அறையில் வைத்து விட்டு, கிளம்புவது நல்ல பலனைக் கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு நாம் எந்த ஒரு செயல்பாட்டை செய்தாலும் அந்த நம்பிக்கை, எப்போதுமே நம்மை கைவிடாது! 

அடுத்தவர்களுடைய நம்பிக்கையை, கேலி செய்பவர்களுக்கு பரிகாரங்கள் என்றுமே பலன் தராது,*

Tuesday, August 25, 2020

ராகு கேது கிரகங்களின் புராண வரலாறு.



*திருப்பாற்கடலை கடையும்போது வெளிவந்த பொருட்கள்.*

*🌺 அப்போது மலையை கடைவதால் ஏற்பட்ட வலியால் வாசுகி பெருமூச்சு விட அது விஷமாக மாறி கடலில் கலந்து கடையப்பட்டதால் உருண்டு திரண்டு ஆலகால விஷமாக வெளிப்பட்டது.* 

*அனைத்து பிரபஞ்சங்களையும் அழிக்கும் வல்லமை கொண்ட அந்த விஷத்தை அழிப்பது எவ்வண்ணம் என தெரியாமல் அனைவரும் அஞ்சி ஓடினர்.*

*🌺 உலகத்தை காக்கும் சர்வேஸ்வரரான சிவபெருமான் அந்த விஷத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அவரையே அழிக்கும் சக்தியைக் கொண்ட ஆலகால விஷத்தை அவரது தொண்டை பகுதியிலே உமையவளான பரமேஸ்வரி தடுத்து நிறுத்தினார்.*

*🌺 (விஷ தாக்குதலின் விளைவாக சிவபெருமான் மயங்கி சாய்ந்தார். பார்வதிதேவி அவரை தன் மடியில் வைத்து படுக்க வைத்ததால் சிவபெருமான் சரியாகிவிட்டார்) விஷமானது கண்டப் பகுதியிலே நின்றதால் கண்டப்பகுதி நீல நிறமாக மாறியது. அது முதல் பரமேஸ்வரன் நீலகண்டன் என்று அழைக்கப்பட்டார்.*

*🌺 முதலாவதாக வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் எடுத்து அருந்திய பின் பயம் தெளிந்த தேவர்களும், அசுரர்களும் மீண்டும் மலையை கடைய முற்பட்டனர். மலையை கடைய கடைய அபூர்வ சக்திகள் கொண்ட பல பொருள்கள் வெளிவந்தன. அவைகளை தேவர்களும், அசுரர்களும் ஆளுக்கு ஒன்றாக பகிர்ந்து கொண்டனர்.*

*திருப்பாற்கடலை கடையும்போது வெளிவந்தவைகள் :*

*1. ஆலகால விஷம்.*

*2. காமதேனு.*

*3. உச்சை சிரவஸ் என்னும் வெள்ளைக்குதிரை.*

*4. ஐராவதம் என்னும் வெள்ளை யானை.*

*5. கற்பக விருட்சம்.*

*6. அப்சரஸ்திரிகள்.*

*7. அகலிகை என்ற அழகான பதுமை.*

*8. திருமகள் என்னும் லட்சுமி.*

*9. அமுத கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி.*

*ராகு, கேது உருவானக் கதை :*

*🌺 காமதேனு, உச்சை சிரவஸ், ஐராவதம் மற்றும் கற்பக விருட்சத்தை தேவேந்திரன் எடுத்துக்கொண்டார்.* 

*அப்சரஸ்திரிகளை அசுரர்கள் ஏற்றுக் கொண்டனர்.* 

*அகலிகை என்ற அழகான பதுமையை பிரம்மன் தனது வளர்ப்பு மகளாக எடுத்துக்கொண்டார்.*

*🌺 திருமகள் என்னும் லட்சுமியை மகாவிஷ்ணு தனது தேவியாக ஏற்றுக்கொண்டார்.* 

*அமுத கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரியிடமிருந்து அசுரர்கள் திட்டமிட்டப்படி அமுத கலசத்தை அபகரித்து சென்றனர்.*

*🌺 அமுதத்தை யார் அடைவது என்ற சண்டையில் அமுதம் வீணாகிவிடும் என்ற நிலைக்கே சென்றது. இதைக் கண்ட தேவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் மகாவிஷ்ணுவை வேண்டினார்கள்.*

*🌺 மகாவிஷ்ணுவும் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை காணச் சென்றார். மோகினியின் அழகில் மயங்கி அசுரர்களும் அமுத கலசத்தை மோகினியிடம் ஒப்படைத்தனர்.*

*🌺 மோகினி அமுதத்தை இருவருக்கும் சரிபாதியாக பகிர்ந்தளிப்பதாக கூறினாள். பின் அசுரர்களையும், தேவர்களையும் இரு வரிசைகளாக நிற்கச் சொன்னார். முதலில் எந்த வரிசைக்கு கொடுக்கட்டும் அல்லது ஒருவர் மாற்றி ஒருவராக தரட்டுமா என கேட்டார்.*

*🌺 மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அமுத கலசத்தின் அடிப்பாகத்தில் உள்ள அமுதத்தை தங்களுக்கும் தெளிந்த மேல் பகுதியை தேவர்களுக்கும் அளிக்கலாம் எனக் கூறினார்கள்.*

*🌺 தேவர்களுக்கு அமுதம் அதிகமாகவே மோகினியால் விநியோகம் செய்யப்பட்டது. இதை அறியாத அசுரர்கள் நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.*

*🌺 மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்த சுவர்பானு தேவரை போல் உருவம் மாற்றிக் கொண்டு தேவர்கள் நின்ற வரிசையில் நின்றார். மோகினி ஆளைப் பாராமல் அமுதத்தை சுவர்பானுவிடம் கொடுத்து விட்டார்.*

*🌺 அமுதம் கிடைத்தவுடன் அதை சட்டென்று சுவர்பானு பருகிவிட்டான். ஆனால், எவரும் அறியவில்லை என்று கருதிய சுவர்பானுவின் செயலை கவனித்த சூரியன் மற்றும் சந்திரன் சுவர்பானுவை அசுரன் என்று காட்டிக் கொடுத்து விட்டார்கள்.*

*🌺 இதையறிந்த மோகினி சுவர்பானுவின் தலையை துண்டித்து விட சுவர்பானு தலை வேறு, உடல்வேறாகிவிட்டான். இருப்பினும் அமுதம் உண்ட காரணத்தால் மரணம் ஏற்படாமல் தலைக்கு பாம்பின் உடலும், உடலுக்கு 5 பாம்பின் தலையும் முளைத்து உயிரை காத்தன.*

*🌺 இத்தகைய மாறுபட்ட உருவ அமைப்பை கொண்ட சுவர்பானுவை தேவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுவர்பானுவின் செயலால் அசுரர்களுக்கு கிடைக்க வேண்டிய அமுதம் கிடைக்காமல் போனது என்று அவரை வெறுத்தனர் அசுரர்கள். அதனால் சுவர்பானுவை அசுரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.*

*🌺 மிகவும் வருந்தத்தக்க நிலையை அடைந்த சுவர்பானு பிரம்மதேவரை தஞ்சமடைந்தார். பிரம்மதேவரும் மனமிறங்கி வரத்தை கேள் என்று கூறினார். சுவர்பானு தனது பழைய நிலையை அடைய அருள் பாவிக்குமாறு கூறினார்.*

*🌺 பிரம்மதேவரோ ஸ்ரீமந் நாராயணன் தண்டிக்கப்பட்ட உனக்கு அம்மாதிரியாக வரம் அளிக்க இயலாது. நீ இன்று போல் என்றும் இரு வேறு உடல் பிரிவுகளை கொண்டவராக இருப்பாய் என அருளினார்.*

*🌺 மேலும், மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்ட உடல் அமைப்பிற்கு 'ராகு" என்றும், மனித உடலும் பாம்பின் தலையும் கொண்ட அமைப்புக்கு 'கேது" என்ற பெயரும் நிலைக்கும் என்றார் பிரம்மதேவர்.*

*பிரம்மதேவர் சுவர்பானுவிற்கு அளித்த வரம் :*

*🌺 சூரியன் மற்றும் சந்திரனால் காட்டி கொடுக்கப்பட்டு இந்த நிலை அடைந்ததால் அவர்களை பழி வாங்குவதற்கு அருள் பாவிக்க வேண்டும் என்று வேண்டினார் சுவர்பானு. பிரம்மதேவர் எவ்வளவு எடுத்துரைத்தும் சமாதானம் அடையாத சுவர்பானுவை கண்ட பிரம்மதேவர் நவகிரக பரிபாலனத்தில் இணையும்போது சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகளை அடக்கி அவர்களுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்துவீர்களாக என அருள் புரிந்தார்.*

*🌺 இதுவே அவர்களின் செயலுக்கான தண்டனை. இத்துடன் திருப்திக்கொள் என்றார் பிரம்மதேவர். மேலும், நீங்கள் இருவரும் மற்ற கிரகங்களை போல் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி எதிர் எதிராக சஞ்சாரம் செய்வீராக என அருள் பாவித்தார்.*

*🌺 அப்போது மகாவிஷ்ணு ராகு, கேதுவின் முன் தோன்றினார். நவகிரக பரிபாலனத்தில் இடமளித்தும் ஒளியை அளிக்கும் சூரியன் மற்றும் சந்திரனுக்கு கிரகணமாக பிடிக்கும் வரத்தினை அளித்து விட்டீர்களா என பிரம்மதேவரிடம் கேட்டார். மேலும், அசுரர்களின் ஆட்சி நடக்கும் காலத்தில் ஒரு அசுரனை எவ்வாறு நவகிரக பரிபாலனத்தில் ஈடுபடுத்த முடியும்.*

*🌺 இது அசுரர்களின் பலத்தை மேலும் அதிகரிக்கும். எனவே கடைசி அசுரன் இராவணன் அழியும் வரை இவர்கள் இருவரில் கேதுவானவன் கடக ராசியில் அமர்ந்து ரிக், யஜூர், சாம வேதங்களையும், ராகுவானவன் மகர ராசியில் இருந்து அதர்வண வேதத்தையும் உரியவர்கள் மூலம் கற்றுணர்ந்து வேத ஞானம் பெற்ற ராகு ஞானகாரனாகவும், கேது மோட்சகாரனாகவும் செயல்பட்டு பூமியில் தோன்றிய உயிர்களுக்கு ஞானம் மற்றும் மோட்சம் பெற அனுகிரகம் செய்யட்டும் என்றார். அதன்படியே, இறுதியில் அசுரன் இராவணன் மாண்ட பிறகு நவகிரகங்களில் இருவரும் கிரக அந்தஸ்து பெற்று சஞ்சாரம் செய்யத் தொடங்கினார்கள்.*

*ராகுவால் ஏற்படும் தோஷங்கள் :*

*🌟 ராகு 2ல் இருந்தால் குடும்ப வாழ்க்கை சரியாக அமையாது.*

*🌟 ராகு 4ல் இருந்தால் மனை தோஷம் ஏற்படும்.*

*🌟 ராகு 7ல் இருந்தால் திருமண தோஷம் உண்டாகும்.*

*கேதுவால் ஏற்படும் தோஷங்கள் :*

*🌟 திருமணத் தடையை ஏற்படுத்துவார்.*

*🌟 குழந்தை பாக்கியத்தை தாமதப்படுத்துவார்.*

*🌟 அவச்சொற்களுக்கு ஆளாக்குவார்.*

*🌟 கேது 12ல் இருந்தால் மோட்சம் தருவார்.*

*ராகுவிற்கான பரிகாரங்கள் :*

*🌟 கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள ராகுபகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.*

*🌟 அரசமரமும், வேப்பமரமும் உள்ள இடத்தில் சர்ப்ப கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ள இடத்திற்கு சென்று வழிபட தோஷ நிவர்த்தியாகும்.*

*🌟 செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பு.*

*கேதுவிற்கான பரிகாரங்கள் :*

*🌟 விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.*

*🌟 காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் ஆலயம் சென்று வழிபட கேதுவினால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும்.*

*சுபம்!!*
*********

*ஓம் நமசிவாய*
*அவனருளால் அவன்தாள் வணங்குவோம்!*

 *பகிர்தல் ஒரு மிகச் சிறந்த பண்பாடு மட்டுமல்ல வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்*
.
 

திருப்பதியை பற்றிய பொன்னான தகவல்கள்

திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

 * திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

 * இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

 * ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

 * பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

 * உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

 * பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

 * ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா? 

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

 * பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

 * சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

 * ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

 * ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

 * பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

 * மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

 * அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

 * வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

 * மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை. 

 * அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

 * திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

 * சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

 * ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 * திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

 * ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

 * 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

 [இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.

Monday, August 24, 2020

இறைவனின் நாமத்தின் மகிமை

நாமத்தின் மகிமை

முற்கலன்

பூலோக வாழ்வு முடிந்த படியால் அவனை இழுத்து வந்து நரகத்தின் வாசலில்
நிறுத்துகின்றனர். நரகத்தின் உள்ளிருந்து எமன் (நமன்) வெளியே வந்து

"ஏன்யா, இப்படி வந்து நிற்கிறாய்?

நீ ஒருதடவையாவது கடவுள் நாமத்தை சொல்லாமல் என்ன செய்தாய்? கடவுள் நாமத்தைச் சொல்வதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்
தெரியுமா?

"சஹஸ்ரநாமம் என பகவானின் நாமங்கள் ஆயிரம் உள்ளதே? அதில் ஒரு நாமத்தையாவது
சொல்லி இருக்கலாமே?

"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!
சஹஸ்ரநாம தத் துல்யம் ராமநாம வராநநே!!"

என்று ராம நாமம் கூடவா உனக்குத் தெரியாது? என்று கடவுள் நாமத்தின் 
மகிமையைப் பற்றி முற்கலனுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தான் எமன்."

"ரங்கா" என்று ஒருதடவை சொல்லி இருந்தால் நரகத்திற்கு வந்திருக்க வேண்டாமே?

"அறிவிலா மனிதர் எல்லாம்
அரங்கமென்றுஅழைப்பராகில்
பொறியில்வாழ் நரகம் எல்லாம்
புல்லெழுந்து ஒழியுமன்றோ?"

அறிவு இல்லாத மனிதன் கூட ஓரு தடவை "அரங்கா" என்று அழைத்தால் நரகம் எல்லாம் புல் முளைத்துப் போயிருக்கும். எனக்கு வேலை இருந்திருக்காதே ஐயா! 

இது மட்டுமா “அரங்கா" என்று சொல்லாத உனக்கு, இடும் சோற்றை நாய்க்கு இடுங்கள், அது கூட நன்றியோடு இருந்திருக்கும் ஐயா!"

" அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும சோற்றை
விலக்கி நாய்க்கு இடுமினீரே!"

"உங்களுக்காகத் தானே தொண்டரடிப்பொடிஆழ்வார், போன்ற ஆழ்வார்கள் எல்லாம்,
சொல்லி இருக்கிறார்கள். 

நீ ஒரு தடவை கூட சொல்லவில்லை போலிருக்கு" என்று எமன் முற்கலனிடம் நாமத்தின் மகிமையை விளக்கிச் சொல்லி விட்டு தன் வேலையாளிடம், “இவனை நரகத்துக்கு இழுத்துப் போங்கள்" என்று ஆணை இட்டுவிட்டு தான் இருப்பிடத்தை நோக்கி நகருகிறான்.

நரகத்தைக் காணோம்!

உள்ளே செல்ல முற்படும், எமனை காவலாளி தடுத்து “உங்களுக்கு வேலையில்லை, நரகம் எல்லாம் சொர்க்கமாகிவிட்டது ஐயா"
"என்னப்பாசொல்கிறாய்?" என்று எமன் கேட்க....   ஆம் ஐயா, நாமத்தின் மேன்மையை நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, இங்கு அதனைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும் சொர்க்கத்துக்குப் போய் விட்டார்கள், நரகம் இல்லாமல்
போய்விட்டது ஐயா!" என்று காவலாளி சொன்னான். 

“நமனும் முற்கலனும் பேச
நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சொர்க்கமாகும்
நாமங்கள் உடைய நம்பி”

அப்படிப்பட்டது அவன் நாமம். 
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களை!

தினமும் சொல்வீர்...

ஹரே கிருஷ்ண
ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண  
ஹரே  ஹரே
ஹரே ராம  ஹரே ராம
ராம ராம  ஹரே  ஹரே...

 🌸ஆனந்தம்  அடைவீர்🌸

தமிழ் மாத பிரதோஷ வழிபாடு நன்மைகள்

*ஒவ்வொரு தமிழ் மாத பிரதோஷ தினத்திலும் எதை நிவேதனமாக படைத்தால்! என்ன நன்மைகள் நடக்கும் !!*
                       🕉 🙏 💐

பிரதோஷ தினம் என்றாலே மிகவும் விசேஷமான நாளாகத் தான் இருக்கும். அன்றைய நாளில் நந்தி வழிபாடும், சிவ வழிபாடும் எண்ணற்ற சிறப்பான பலன்களை பக்தர்களுக்கு நல்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! இதில் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் விசேஷமான நிவேதனப் பொருட்கள் பிரதோஷ நாட்களில் சிவனுக்கு படைக்கப்பட வேண்டும். அதற்கு தாத்பர்ய காரணங்களும், அதனால் உண்டாகக்கூடிய நன்மைகளும் உண்டு. அதைப் பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சித்திரை மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு நீர் மோரும், தயிர் சாதமும் நிவேதனமாக படைத்து பின்னர் சிறு சிறு பிள்ளைகளுக்கு அவற்றை தானம் கொடுப்பதனால் மூலம், பவுத்திரம், எலும்பு தேய்மானம் முதலிய நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.

வைகாசி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு சர்க்கரை பொங்கலும், பசும்பாலையும் நிவேதனமாகப் படைத்து பின் அவற்றை பக்தர்களுக்கு தானம் கொடுப்பதன் மூலம் சகலவிதமான வயிறு பிரச்சனைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஆனி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு தினை மாவும், தேனும் நிவேதனமாகப் படைத்து பின் பக்தர்களுக்கு தானம் கொடுப்பதன் மூலம் மலட்டுத்தன்மை நீங்கி பிள்ளைப் பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.

ஆடி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு விசேஷமாக ஆராதனைகள் செய்து வெண்ணையுடன் சர்க்கரை சேர்த்து நிவேதன பொருளாக படைப்பதன் மூலம் உடலில் இருக்கும் 
கொழுப்புகளினால் உண்டாகும் பிரச்சனைகள் முழுவதுமாக தீர்ந்து நிவாரணம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆவணி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு ஆராதனைகள் செய்து தயிர்சாதம் நிவேதனமாகப் படைத்து பக்தர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நோய் தாக்கத்திலிருந்து மீண்டு வரக்கூடிய வாய்ப்புகள் அமையும், அதுமட்டுமல்லாமல் காரியத்தடை நீங்கி வெற்றிகள் குவியும் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு புளியோதரையும், சர்க்கரைப் பொங்கலும் நிவேதன பொருளாக படைத்து வழிபட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட அத்தனை நோய்களும் நீங்கப்பெற்று ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம்.

ஐப்பசி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு உளுந்து வடையும், ஜிலேபியும் நிவேதனப் பொருளாக படைத்து வழிபாடுகள் செய்து பின் தானம் செய்தால் சீதள நோய் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு எலுமிச்சை சாதமும், தேங்காய் சாதமும் நிவேதனமாகப் படைத்து பக்தர்களுக்கு தானம் அளிப்பதன் மூலம் பெண்களுக்கு கருப்பை சம்பந்தப்பட்ட அத்தனை நோய்களும் விரைவில் குணமடையும் என்பது ஐதீகம்.

மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு வெண் பொங்கலும், சுண்டலும் நிவேதன பொருளாக படைத்து ஆராதனைகள் செய்து வழிபட்ட பின் பக்தர்களுக்கு தானம் அளிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் விரைவில் குணமடையும் என்பது நம்பிக்கை.

தை மாதத்தில் வரும் பிரதோஷ நாட்களில் சுத்தமான தயிரிலிருந்து கிடைக்கப் பெற்ற ஏட்டில், தேனை சேர்த்து நிவேதனப் பொருளாக படைத்து வழிபட்டு வந்தால் கபம் தொடர்பான அத்தனை நோய்களும் நீங்கி ஆரோக்கியம் மேம்படும் என்பது ஐதீகம்.

மாசி மாதத்தில் வரும் பிரதோஷ நாட்களில் எல்லாம் சிவபெருமானுக்கு சுத்தமான நெய்யுடன் சர்க்கரை கலந்து நிவேதனமாகப் படைத்து வழிபட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனை, வயிறு தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.

பங்குனி மாத பிரதோஷ நாட்களில் எல்லாம் சிவபெருமானுக்கு தேங்காய் சாதமும், தக்காளி சாதமும் நிவேதன பொருளாக வைத்து ஆராதனைகள் செய்த பின் பக்தர்களுக்கு தானம் செய்யப்பட வேண்டும். இதனால் பித்தம், மனநல பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக நீங்கும் என்பது ஐதீகம்.

இது போல் தமிழ் மாதத்தில் வரும் ஒவ்வொரு பிரதோஷ நாட்களிலும் விசேஷமான இந்த நிவேதனப் பொருட்களை சிவபெருமானுக்கு படைத்து, தீப ஆராதனைகள் செய்து வழிபட்டு பின் பக்தர்களுக்கு தானம் கொடுப்பதன் மூலம் மேற்கூறிய அத்தனை பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஈசனிடம் இவ்வாறாக முறையிட்டு நீக்கிக் கொள்ளுங்கள்.

Sunday, August 23, 2020

ஆனி மாதத்தில் மூத்த மகன் அல்லது மூத்த மகன் திருமணம் செய்யலாமா?

#ஆனி மாதத்தில் குடும்பத்தின் மூத்த மகனுக்கோ மகளுக்கோ திருமணம் செய்யக் கூடாது என்பது சரியானதா? 

ஆனி மாதத்தினை சாந்திரமானத்தில் ஜேஷ்ட மாதம் என்று அழைப்பர். இந்த ஜேஷ்ட மாதம் என்பது வைகாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி ஆனி மாத அமாவாசை வரை உள்ள காலம் மட்டுமே. இந்த ஜேஷ்ட மாதத்தில் பிறந்த மூத்த குமாரனுக்கும் (ஜேஷ்ட குமாரன்), அதே ஜேஷ்ட மாதத்தில் பிறந்த மூத்த குமாரத்திக்கும் (ஜேஷ்ட குமாரத்தி), ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் வைகாசி அமாவாசைக்கு மறுநாள் முதல் ஆனி அமாவாசை வரை உள்ள காலத்தில் திருமணம் செய்யக்கூடாது, சந்ததி பாதிக்கப்படும் என்று உரைக்கிறது காலாமிருதம் என்கிற ஜோதிட நூல். 

இதனை ‘த்ரிஜேஷ்டை’ என்று ஜோதிட அறிஞர்கள் சொல்வார்கள். ஒரு சிலர் இதையே தலைச்சனுக்குத் தலைச்சன் ஆகாது என்று சொல்வார்கள். உண்மையான அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளாது பொத்தாம் பொதுவாய் சொல்வது தவறு. த்ரிஜேஷ்டை அதாவது மூன்று ஜேஷ்டைகள் இணையக்கூடாது என்றுதான் ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. இதில் கேட்டை நட்சத்திரத்தையும் ஜேஷ்டா நட்த்திரம் என்று அழைப்பார்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த தலைச்சன் பிள்ளைக்கும், மற்றொரு தலைச்சன் பெண்ணிற்கும் ஆனி மாதத்தில் வைத்து திருமணம் செய்ய இயலாது. இதுபோன்ற ஜேஷ்டை என்ற வார்த்தையின் பொருள் உணர்ந்து அதற்கேற்றார்போல் நிர்ணயம் செய்ய வேண்டும். பொதுவாக ஆனி மாதத்தில் தலைச்சன் பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ திருமணம் செய்யக்கூடாது என்று சொல்வது தவறான கருத்து.
                                                                                                                                                                                        #குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்துத்தான் ஜாதகம் எழுத வேண்டும் என சொல்லப்படுவது எதனால்? 

 ஒரு வருடம் வரை பிறந்த குழந்தையானது கடவுளின் குழந்தையாகப் பார்க்கப்படுகிறது. நமக்கெல்லாம் ஒரு வருடம் என்பது தேவலோகத்தைப் பொறுத்த வரை ஒரு நாள் மட்டுமே. ஆக இந்த உலகில் பிறந்த குழந்தையானது அந்த ஒரு நாள் மட்டும் கடவுளின் குழந்தையாகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். பிறந்து மூன்று மாதமே ஆன குழந்தை உறங்கும்போது சிரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்தக் குழந்தையின் கனவில் கடவுள் வந்து விளையாட்டு காட்டுவதாக நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். ஒரு வயது முடியும் வரை அந்தக் குழந்தைக்கு அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்யமாட்டார்கள். 

குலதெய்வத்தின் கோயிலில் வைத்து குழந்தைக்கு மொட்டை அடித்து, அதன் பின்னர் காதுகுத்தி கர்ணபூஷணம் செய்தபின் தனது குழந்தையாக ஸ்வீகரணம் செய்து கொள்கிறார்கள். அதுவரை குழந்தைக்கு ஜாதகம் எழுதக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். இறைவனின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் குழந்தைக்கு ஜாதகம் எழுதி பலனை நிர்ணயம் செய்ய இயலாது, செய்யவும் கூடாது என்பதால்தான் ஒருவயது வரை ஜாதகம் எழுதக்கூடாது என்று சாஸ்திரம் அறிந்தவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. 
                                                                                                                                                                                     #ஆண்கள் விளக்கேற்றினால் ஆண்களே குளிர்விக்கக் கூடாது, தானே குளிரட்டும் என்று சொல்கிறார்கள். வேலை நிமித்தமாக நான் வெளியூரில் தனியாக தங்கியிருக்கிறேன். எரிகின்ற விளக்கை அப்படியே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல தயக்கமாக உள்ளது. என்னுடைய சந்தேகம் நீங்க வழி சொல்லுங்கள்.

தயக்கமே தேவையில்லை. ஆண்கள் விளக்கேற்றினால் அதனை குளிர்விக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை. வேலைக்குச் செல்லும் நீங்கள் பூஜையை முடித்த பிறகு தாராளமாக விளக்கினை குளிர வைத்துவிட்டு வேலைக்குச் செல்லலாம். இதில் எந்த விதமான தவறும் இல்லை. தயக்கமோ, சந்தேகமோ வேண்டாம். சிரத்தையுடன் பூஜையை முடித்து விட்டு விளக்கினை குளிர வைத்து விட்டு வேலைக்குச் செல்லுங்கள். அதனால் எந்த விதமான குறையும் உண்டாகாது. இந்த விதி ஆண் - பெண் என இருபாலருக்கும் பொருந்தும்.

இதை நீ உணர்ந்தால் நீயும் ஞானி தான்

🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

🌷உணர்ந்து கொண்டால்
     நீயும் ஞானி தான் !🌷

🌷வெள்ளை என்பது  நிறம் 
🌷கருப்பு என்பது காந்தம் 
🌷இயற்கை என்பது , அழகு 
🌷உணவு என்பது மருந்து
🌷ஆடை என்பது  மானம்  
🌷பணம் என்பது  தேவை  
🌷ஆங்கிலம் என்பது மொழி 
🌷தமிழ் என்பது உயிர் 
🌷அம்மா என்பது  பாசம்  
🌷அப்பா என்பது ஆசான் 
🌷குரு  என்பது உயர்வு 
🌷அன்பு என்பது உறவு 
🌷வேஷம்  என்பது விஷம் 
🌷காதல் என்பது போதை 
🌷ஆனந்தம்  என்பது ஆயுள் 
🌷கவலை என்பது  விரையம் 
🌷சினம் என்பது நோய் 
🌷துன்பம்  என்பது பரீட்சை
🌷தோல்வி என்பது  பாடம் 
🌷வெற்றி என்பது தற்காலிகம் 
🌷நட்பு  என்பது  இளமை 
🌷குடும்பம் என்பது பற்று  
🌷கர்மா என்பது தொடரும் 
🌷எண்ணம் என்பது வாழ்க்கை
🌷உலகம்  என்பது மாயை 
🌷நான்  என்பது அறியாமை 
இதில் ஏதும் இல்லை நிரந்தரம்
🌷ஆன்மா  என்பதே நிஜம் 
 இதை உணர்ந்துகொண்டால் 
🌷நீ. . . ஞானி!

🔔🔔🔔🔔🔔🔔🔔

Saturday, August 22, 2020

ஜோதிடத்தைப் பற்றி ராகவேந்திரரின் கருத்து

ஒருசமயம், ராகவேந்திரரைக் காண வந்த ஜோதிடர்கள் மூவரிடம், தமது ஆயுள் குறித்து கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்டார் ராகவேந்திரர்.

""தங்களுக்கு 100 வயது"" சொன்னார் ஒரு ஜோதிடர்.

""ஸ்வாமிகள் 300 வருடங்கள் இருப்பீர்கள்!"" என்றார் மற்றவர்.

""700 ஆண்டுகள் உங்கள் ஆயுள்!""மூன்றாமவர் சொன்னார். 

"எப்படி மூவரும் வெவ்வேறு விதமாக கணித்திருக்க முடியும்?" புரியாமல் குழம்பினார்கள் சீடர்கள். அவர்களுக்குப் புரியும்படி ஸ்வாமிகள் சொன்னார். ""என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்...
என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும்...
பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!""

""எங்கே இருக்கிறான் உன் ஹரி!?"" என்று இரண்யன் கேட்டபோது, ""எங்கும் இருக்கிறான்!"" என்று சொன்ன பிரகலாதனின் அம்சமாகவே கருதப்படும் ராகவேந்திரர், சென்ற இடமெலாம் இறைவனின் பெருமையை உணர்த்தினார்.

ராகவேந்திரரின் மகிமையைச் சோதிக்க விரும்பிய நவாப், மாமிசங்கள் நிறைந்த கூடையை, மலர்க்கூடை எனச் சொல்லி அளித்தான்.

புன்முறுவலோடு, புனித நீரைத் தெளித்து அதனை ஏற்றுக்கொண்டார் ராகவேந்திரர். பின்னர், தம் சீடர்களை அழைத்து அந்தக் கூடையைத் திறக்கச் சொன்னார்.

நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்த புலால், புஷ்பமாக மாறி மணந்து கொண்டிருந்தது. 

நவாப்பிடம் மாஞ்சாலம் (இன்றைய மந்திராலயம்) கிராமம் மட்டுமே போதும் எனக் கூறி அதனைப் பெற்றுக் கொண்டார் மகான்.

துங்கபத்ரா நதிக்கரையில் இருந்த அந்த கிராமமே, கிருதயுகத்தில் தாம் பிரகலாதனாக இருந்தபோது யாகம் செய்த பூமி என்பதை உணர்ந்திருந்த மகான், தாம் பிருந்தாவனம் கொள்ள ஏற்ற இடமும் அதுவே என நினைத்தார். 

அங்கே தமக்கு ஒரு பிருந்தாவனம் அமைக்கும்படி வெங்கண்ணாவிடம் சொன்னார். அப்படியே அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த ஆகஸ்ட் மாதத்தில் மூன்று நாட்கள் ஆராதனை விழா விமரிசையாக நடைபெறுகிறது.

அழகு எழில் கொஞ்சும் துங்கபத்திரை நதிக்கரையோரம் அமைந்திருக்கும், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மடத்திற்கு சென்று வந்தால் நிச்சயம் நம் பிரார்த்தனை நிறைவேறுவதோடு மன அமைதியும் கிடைக்கும்.

கங்காஸ்நானமும், துங்கா பானமும் வாழ்வில் தவற விடக்கூடாதவை.
ஜயா பொன்னையா சுவாமிகள் பதிவு 
இது பகிர்ந்து கொண்டேன் 
ஜயாவுக்கு நன்றிகள்

தேங்காயின் சகுன அறிகுறி

தேங்காய் சகுணம்.:
(1) தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்

(2) ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும்

(3) சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும்

(4) மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் இரத்தினம் சேரும்

(5) ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும்

(6) உடைக்கும் பொழுது கைப்பிடியிலிருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் & பொருள் இழப்பு ஏற்படும்

(7) நீளவாக்கில் உடைந்தால் தனம் அழிந்து துன்பம் உண்டாகும்

(8) முடிப்பாகம் இரு கூறானால் தீயினால் பொருள் சேதம்

(9) முடிப்பாகம் இரு கூறாக உடைந்து அந்த இரு கூறுகளோடு அவற்றின் ஓடு உடனே தெறித்து வீழ்ந்தால் நோய்களினால் துன்பம் ஏற்படும்

(10) சிறு, சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு & ஆபரண லாபம் உண்டாகும்

(11) ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் வேண்டும் காரியம்
வெற்றியை தரும்.

Friday, August 21, 2020

பிள்ளையார்பட்டி சிறப்பு தகவல்கள்



பிள்ளையார்பட்டி அதிசயம்
அர்ச்சணை கட்டணம்

கிடையாது

தரிசணங்களுக்கு வரிசை கட்டணம் கிடையாது VIP சாதாரணமானர்

எனும் பாகுபாடுகள்

கிடையாது

ஒரேயொரு பிரார்த்தனை உண்டியல் தவிர வேறு எந்த இடத்திலும் உண்டியல் கிடையாது

அர்ச்சகர்களின்

கட்டாய அடாவடி வசூல்

கிடையாது

குறிப்பாக ஊழல் உலவாரம் செய்ய அரசு அறநிலையத்துறையின் கட்டுப்பாடு கிடையாது

நியாயமான விலையில்

அர்ச்சனை தட்டு கோவில்

நிர்வாகத்தால் மட்டுமே

கிடைக்கிறது

ஒரு குறிப்பிட்ட

எல்லைக்கு மேல்

பிரைவேட் வியாபாரிகள்

நுழைய தடை. இப்படி

ஒழுக்கமும், நியாயமும்

தூய பராமரிப்பும்

அமைதியான சூழலும்

நிறைந்த அற்புதமான

கோவிலுக்கு வாருங்கள்

நாட்டுக் கோட்டை

நகரத்தார்களால்

முற்றிலும் தூய்மையாக

தூய பக்தியோடு

பராமரிக்கப்பட்டு

ஒளி வெள்ளத்தில்

ஜொளிக்கும்

இந்தியாவின்

பிரபளமான கற்பக

விநாயகரை வாழ்வில்

ஒரு முறையேனும்

தரிசியுங்கள்

முக்திபேரு அடையுங்கள்.

கும்பாபிஷேகத்தின் வகைகள்

#கும்பாபிஷேகம்_பற்றிய 
#அரிய_செய்திகள் !!!
 
கோவில் கும்பாபிஷேகம் அதிகம் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது.
 
#கும்பாபிஷேகத்தின்_வகைகள்.

1. ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது.

2. அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

3. புனராவர்த்தம் – கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

4. அந்தரிதம் – கோவில் உள்ளே ஏதேனும் தகாதன நேர்ந்துவிடின் அதன் பொருட்டு செய்யப்படும் பரிகார பூஜை.

கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் அவசியமான பூஜைகள் பற்றிய விளக்கம்.

1. அனுக்ஞை – (அனுமதி வாங்குதல்) செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் (புரோகிதர்) தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

2. சங்கல்பம் – இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

3. பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.

4. கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

5. வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

6. பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

7. பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு செய்யப்படும் பரிகாரம்}

8. மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில் இருந்து மண் எடுத்து அந்த பள்ளத்தில் அபிஷேகம் செய்தல். { ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்டப்படுத்தியதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் சாந்தி பரிகாரம்}

9. அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

10. ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} பூஜைகளை செய்யும் ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் எவ்வித இடையூறுகளும் வராதபடிக் காத்தற் பொருட்டு அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.

11. கும்ப அலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

12. கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

13. யாகசாலை பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

14. சூர்ய, சோம பூஜை – யாகசாலையில் சூரிய சந்திரனை வழிபடுதல்.

15. மண்டப பூஜை – அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

16. பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.

17.நாடி சந்தானம் – யாகசாலை இடத்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். {இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இணைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}

18. விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் பூஜை செய்வது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது

19. பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

20. ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

21. அஷ்டபந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.

22. பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.

23. கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

24. மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

25. மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

மற்றும் சில.

ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைத்தல்.

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தனை தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2 காலம், 4 காலம், 8காலம், 12 காலம் வரை செய்யும் முறை உள்ளது.

Thursday, August 20, 2020

சிவபெருமானை வணங்கி விலங்குகள் முக்தி பெற்ற ஆலயங்கள்

சிவபெருமானை வழிபட்டு உய்வு பெற்ற உயிா்கள்.

சக்தி, திருமால், பிரம்மா, இந்திரன், தேவர்கள் என சிவபெருமானை வழிபட்டு பேறுபெற்றதைப் போல பூமியில் உள்ள உயிர்களும் உய்வு பெற்றுள்ளன. 

கீழே உயிர்களின் பெயர்களும், வழிபட்ட தலங்களும்.

1)சிங்கம் – திருநல்லூர்
2)யானை – திருக்குற்றாலம், மதுரை, காளையார் கோவில், திருவானைக்காவல், திருக்காளத்தி.
3)காளை – திருவையாறு
4)குதிரை – சீயாத்தமங்கை
5)ஆடு – திருவாடானை
6)பன்றி – சிவபுரம்
7)கழுதை – கரவீரம்
8)குரங்கு, அணில், காகம் – குரங்கணில் முட்டம்
9)நாரை – நாரையூர், மதுரை
10)கரிக்குருவி – மதுரை, வலிவலம்
11)மயில் – மயிலாடுதுறை, மயிலாப்பூர்
12) ஜடாயு– வைத்தீஸ்வரன்கோயில், 
13)நண்டு – திருந்துதேவன்குடி, திருநீடூர்
14)வண்டு – திருசைலம், திருவெண்டுறை, வாழ்கொளிபுத்தூர்
15)தேனீ – நன்னிலம்
16)ஆமை – திருமணஞ்சேரி
17)எறும்பு – திருவெறும்பூர்
18)பாம்பு –திருக்காளத்தி, திருப்பாம்புரம், குடந்தை குடந்தைக் கீழ்க்கோட்டம் திருநாகேஸ்வரம்.
19)சிலந்தி – ஆனைக்கா திருக்காளத்தி
20)எலி – திருமறைக்காடு 
21)ஆமை-திருக்கச்சூர்
22)ஈ-திருஈங்கோய்மலை
23)எறும்பு-திருவெறும்பூர்
24)கருடன்-திருச்சிறுகுடி, திருகுடவாயில்
25)கழுகு-திருக்கழுக்குன்றம்
26)கருங்குருவி-திருவலிவலம் மதுரை
27)குரங்கு-திருக்குரக்காவல்
28)எலி-திருமறைக்காடு
30)தேனி-நன்னிலம்
31)வண்டு-திருநல்லூர்
32)பசு-ஆவர் பசுபதீஸ்வரம் பட்டீஸ்வரம் கரூா் திருவாவடுதுறை செய்யாறு
33)வெள்ளையானை-மதுரை, பெண்ணாகரம் 
34)ஐராவதம்-திருப்பணந்தாள்
35)காமதேனு-தில்லை ஸ்தானம், பட்டீஸ்வரம்
36)பூனை-மேலப்பாதி 
37)பூனுகுபூனை- மயிலாடுதுறை
38)தவளை-ஆத்தூர்
39)மீன்-கோவில் தேவராயன்பேட்டை
40)வாசுகி-கோவில் திருமாளம்.
          சிவசிவ

பில்லி ஏவல் சூனியம் இவற்றை நீக்கும் வீரபத்திரரின் காயத்ரி

பில்லி, சூனியம், செய்வினை போக்கும் வீரபத்திரர் காயத்ரி மந்திரம்


தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்த வீரபத்திரரை இம்மந்திரத்தை கூறி நாம் வழிபடுவதால், நம்மை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் நீங்கும்.

ஓம் தீக்ஷ்ணதேஹாய வித்மஹே
பக்தரக்ஷகாய தீமஹி
தந்நோ வீரபத்ர: ப்ரசோதயாத்


வாரத்தின் எந்த நாட்களிலும் இம்மந்திரத்தை கூறி வழிபடலாம் என்றாலும், ஞாயிற்று கிழமை மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக வீரபத்திரர் சந்நிதி இருக்கும் கோவிலுக்கு சென்று, பசுவெண்ணெய் சிறிது எடுத்து வீரபத்திரர் சிலையின் வாயில் தடவி, நெய்தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீளலாம்.

மேலும் நம்மை ஏதாவது தீய சக்திகள் பீடித்திருந்தால் அவை நீங்கும். தீய சக்திகளை அழிக்க, நல்லவற்றை காப்பாற்ற சிவபெருமான் பல முறை பல்வேறு வடிவங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்று தான் இந்த “வீரபத்திரர்” வடிவம். புராண காலத்தில் தக்சனுடனான போரின் போது, சிவ பெருமானின் உடலில் இருந்து அவரது அம்சமாகவே தோன்றியவர் தான் வீரபத்திரர். சிவனின் மற்றொரு அம்சமான பைரவரை போலவே இந்த வீரபத்திரரும் ஒரு காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார்.

Wednesday, August 19, 2020

கடன் தொல்லையை நீக்கும் தாந்த்ரீக பரிகாரம்

கடன் தொல்லை தீர்க்கும் தாந்திரீக பரிகாரம்!!

இன்றைய காலக்கட்டத்தில் நாம் கடன் வாங்குவது சில நேரங்களில் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. அதை திருப்பி அடைக்க முடியாமல் பலர் தற்போது உள்ள கால சூழலில்  திணறுகின்றனர்.

பொதுவாகவே கடன் தொல்லை தீர வேண்டும் என்று எண்ணுபவர்கள் அதனை ஒரு நல்ல நாள் பார்த்து கடனை திருப்பி செலுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கடன் தொல்லை நிறந்திரமாக தீரும் என்பது ஐதீகம்.

இதனை சரிசெய்ய வியாழக்கிழமை இரவு அருகே உள்ள ஏதேனும் அம்மன் ஆலயம் சென்று இரவு பூஜை நடக்கையில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு அங்கு தரும் குங்மத்தை எடுத்து வந்து மறு நாள் வெள்ளிக்கிழமை காலை சூரிய உதயத்திற்கு முன்பு குளிக்கும் நீரில் கலந்து குளித்து விட்டு காலை அதே ஆலயம் சென்று காலை பூஜை நடக்கையில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 11 வாரம் செய்து வர எவ்வளவு பெரிய கடன் தொல்லையாக இருந்தாலும் நீங்கிவிடும்.

சித்தனும் சிவனும் ஒன்றே

சித்தனும் சிவனும் வேறு வேறு அல்ல....

மனிதனும் சிவனும் வேறு வேறு அல்ல... 

மனித பிறவி இல்லையேல்  சித்தசிவத்தை அறிய இயலாது.... !

1.ஒருவன்.... கர்மத்தின் சுழற்சியால் மனிதனாக பிறக்கிறான். 
2.பிறந்ததின் பயனை,  உணர்ந்ததின் பயனாக தானதர்மங்கள் செய்கிறான். 
3.தான தர்மத்தின் பயனாக பக்தியை வளர்க்கிறான். 
4.பக்தியின் முற்றாக யோகத்தை 
வளர்க்கிறான். 
5.யோகத்தின் நிறைவாக  ஞானத்தில் மிதக்கிறான். 
6.ஞானத்தின் உச்சமாம் சித்தனும் ஆகிறான். பித்தனும் மறைகிறான். 
7.பித்தம் தெளிந்து சித்தத்தை அடைந்ததால்,  இறுதியில்  சிவனுமாகிறான்.......!

ஆகவே மனித பிறவி இல்லாமல் ஈசனை அடைய இயலாது . 
இத்தகைய மனித பிறவியை வீண் செய்யலாமா?? 

ஈசனை உணர்ந்து, பின் அவனை அடைய முயற்சி செய்... !
அதை விட இன்பம் எதிலும் இல்லையே.... !

சொல், செயல்  இரண்டிலும் ஈசனை நிலை நிறுத்து.... !

              பின்பு அவனே உன்னுள் நிலை கொண்டிடுவான்..... !!
                             🙏🙏🙏

Tuesday, August 18, 2020

அரசமர வழிபாடு ரகசியம்

*🚩🔯அரச மரத்தை வலம் வர இது தான் சரியான நேரம்*

        
*🔯அரச மரத்தை வலம் வர இது தான் சரியான நேரம்*

கடவுள் தூணிலும் இருப்பார்.. துரும்பிலும் இருப்பார் என்பதற்கேற்ப  ராஜவிருட்சம் என்று அழைக்கப்படும் அரசமரத்தின் அடியில் மும்மூர்த்திகள் இணைந்து வாசம் செய்து அருள்பாலிக்கிறார்கள் என்பது ஐதிகம்.

 கீதையில் கண்ணன் மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன் என்று சொல்லும்போதே  அரசமரத்தின் அருமையை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

 அரசமரத்துக்கு அஸ்வத்தம் என்ற பெயரும் உண்டு.

 அதாவது அஸ்வத்தா என்றால் வழிபடுபவர்களின்பாவத்தை அடுத்த நாளே போக்குவது என்று பொருள். 

இதற்கு அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம்  போன்ற பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

 இந்துக்களின் வழிப்பாட்டில் அரசமரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அரசமரத்தின் அடிப்பாகத்தில் படைக்கும் தொழிலைக் கொண்ட பிரம்மா வசிக்கிறார். 

மரத்தின் நடுப்பகுதியில் காக்கும் கடவுளான விஷ்ணுவும்,

 மேல்பகுதியில் சிவனும் இருப்பதாக புராணம் சொல்கிறது.

 அரசமரத்தைச் சுற்றி 30 மீட்டருக்குள் கோயில் இருந்தால் அங்கு வழிபடும்போது நிச்சயம் அமைதி கிடைக்கும்.

 புத்தருக்கு ஞானம் கிடைத்தது போதிமரத்தில் தான் என்று சொல்கிறோம்.

 அந்த போதிமரமே அரசமரம் தான்.

 அரசமரத்தைச் சுற்றி வேண்டியதைப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

மரத்தை சுற்றுவதற்கு ஏற்ப பலன்கள் உண்டு. அதே போல் வழிபடும் கிழமைகளுக்கேற்ப பலன்களையும் பெறலாம்.

*🔯அரசமரத்தைச் சுற்றும் போது இந்த மந்திரத்தைச் சொல்லி சுற்ற வேண்டும்.*

*🚩மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே*

*அக்ரதஸ் சிவரூபாய வ்ருக்ஷ ராஜாயதே நம:*

*ஆயுர்பலம் யசோவர்ச்ச: ப்ரஜா: பசு வஸுநிச*

*ப்ரம்ம ப்ரக்ஞாம் சமேதாம் சத்வம் நோதேஹி வனஸ்பதே.🚩*

🔯ஞாயிற்றுக்கிழமைகளில் அரசமரம் சுற்றும்போது சூரியபகவானை வணங்கிய பிறகு அரசமரத்தை 15 முறை மந்திரம் சொல்லி வலம் வந்தால் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் நீங்கும். 

🔯திங்கள் கிழமைகளில் சிவனை நினைத்தும்,

 🔯செவ்வாய்க்கிழமைகளில் அம்பிகையை நினைத்தும், 

🔯புதன் கிழமைகளில்  முப்பத்து முக்கோடி தேவர்களையும்,

 🔯வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும் ,

 🔯வெள்ளிக்கிழமைகளில் லஷ்மியையும்,

 🔯சனிக்கிழமைகளில் விஷ்ணுவையும் நினைத்து சுற்றவேண்டும். 

வறுமை விலகி குலம் தழைக்கவும், செல்வம் பெருக்கவும் அரச மரம் வழிபாடு அவசியம்.

 அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டு பார்த்தாள் என்ற பழமொழி உண்டு.

 பெண்களின் கருப்பைக் கோளாறுகளை நீக்கும் தன்மை அரசமரசத்திலிருந்து வெளிவரும் காற்றுக்கு உண்டு. 

குலம் தழைக்கச் செய்யும். பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். இது விஞ்ஞான பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரச மரத்தின் அடியில் அமர்ந்தாலே மனம் அமைதியடையும். 

அரச மரத்தின் கீழ் அமர்ந்து ஸ்லோகங்களைச் சொல்லும் போது அதற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும்.

 தர்மசாஸ்திரத்தின் படி அரசமரத்தை காலை 10.40 மணிக்குள் வழிபட வேண்டும்.

 சனிக்கிழமையன்று மட்டும் காலை 8.30 மணிக்குள் அரசமரத்தை வலம் வரவேண்டும். 

உங்கள் வேண்டுதலின் படி 15, 54,108 என்ற எண்ணிக்கையில் சுற்றலாம்.

 சனிக்கிழமையன்று மட்டுமே அரசமரத்தை தொட்டு வணங்கலாம்.

 மற்ற நாட்களில் அரசமரத்தைக் கையால் தொடக்கூடாது.

 இனி காலை நேரங்களில் அரசமரத்தை எங்கு கண்டாலும் பத்து நிமிடம் ஒதுக்கி சுற்றி வாருங்கள். பலனை உணர்வீர்கள்.🙏🌹🌈