Monday, May 25, 2020

குழந்தை வரம் பெறுவதற்கு பலவகையான வழிபாடுகள்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது.

குழந்தை பிறப்பதற்கான பரிகாரம் பற்றியதாகும். ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே அவருக்கு குழந்தை பேறு இருக்கிறதா.? இல்லையா.7 என்பதை காட்டும் ஸ்தானம் 5ம் ஸ்தானம், இயற்கையிலேயே 5வது இடத்தில் ராகு இருந்தாலும், ஆண் ஜாதகத்திலே 5வது இடத்தில் ராகு இருந்தாலும், பெண் ஜாதகத்தில் 5லோ, 9லோ பாவிகள் இருந்தாலும், பாவிகளுடைய பார்வைகள் இருந்தாலும், பாவிகளோடு கலந்திருந்தாலும், இந்த மக்கள் பேறு' என்று சொல்லப்படுகின்ற இந்த குழந்தை செல்வத்தைத் தடுத்து விடுகின்றது அதற்கான முக்கிய பரிகாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக அன்பர்களுக்கு அளிக்க இருக்கின்றான்.

5லே ராகு இருக்கப்பெற்றாலும்கூட

"பத்ரகாளியை பார்த்த மாத்திரத்திலேயே ராகு கதிகலங்கி விடுவார். அதனால்தான் சிவ ஆலயத்தில் இருக்கின்ற துர்க்கை வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.

ராகு கரும்பாம்பு என்று கூறுவதால், சனியின் குணத்தோடு ஒத்திருப்பதால், அவர் கருங்கோல் என்றும் அழைக்கப்படுகிறார். அவருடைய தினமான சனியன்று நீங்கள் தீபத்தை ஏற்றி வைத்து வர, உங்களுக்கு குழந்தைபேறுக்கு ஒரு அருமையான வாய்ப்பு, 5ல் செவ்வாய் இருக்கப்பெற்றவர்களுக்கு அடிக்கடி

கருச்சிதைவு' ஏற்படுகின்றது

உலகத்தில் இந்து மதத்தில் மட்டும்தான் இந்த கருச்சிதைவிற்கு என்று ஒரு கடவுள் இருக்கிறார். இவ்வாறு அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு அந்த பெறாத தன்மையை விலக்க

"கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யலாம். அல்லது உங்கள் ஊரிலே இருக்கப்பெற்ற

கருக்காத்தம்மன்" இருக்கப்பெற்றால் அல்லது முருகப்பெருமானை வழிபட்டாலும் கருச்சிதைவிலிருந்து, காப்பார், "நரசிம்ம வழிபாட்டு" இந்த கருச்சிதைவை தடுக்கும் வல்லமை கொண்டது.

செவ்வாயை 'ரத்த காரகன்' என்று சொல்வதால், செவ்வாயின் மூலம் ஏற்படும் இந்த கருச்சிதைவு களைத் தடுக்கின்ற கடவுள்களை வரிசைகிரமமாக கூறியிருக்கின்றோம். அன்பர்கள் தங்களின் சௌகரியத்துக்கு தகுந்தாற்போன்று, இக்கடவுள்களை வணங்கி, தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் 5வது இடத்திலே சனி இருக்கப்பிறந்தவர்களுக்கு காலதாமதமான, மகப்பேறு என்று சொல்லப்படுகின்ற குழந்தைச்செல்வம் கிடைக்கிறது. 5 குழந்தை செல்வத்தைக்காட்டுகின்ற பகுதியாக இருந்தாலும் கூட ஜோதிடத்திலே 9 என்பது பாக்கியத்தைக் காட்டுகின்றது. குழந்தை அவ்வளவு முக்கியமா என்றால், அது மிகவும் முக்கியம்தான். ஏனென்றால் ஒரு மனிதன் தன் இறப்பிற்குப்பின் செய்யப்படும் இறுதிச்சடங்குகளை காண இயலாவிட்டாலும், அச்சடங்குகள் முறையாக நடைபெற வேண்டுமென்று ஆண்மை ரூபத்தில் மிகவும் எதிர்பார்ப்பான், அதற்கு மிகவும் அவசியம் பிள்ளைச் செல்வம் ஆகும்.

அந்த பிள்ளைச்செல்வத்திற்காக பெற்றோர்கள் எப்படியெல்லாம் ஏங்குகிறார்கள். எந்தெந்த பரிகாரங்களை அவர்கள் செய்கிறார்கள். 'எதை தின்றால் பித்தம் தீரும்” என்ற நிலையிலிருப்பவர்களுக்கு இந்த பரிகார தொகுப்பு, ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை .

ஒவ்வொரு சனியன்றும், சனியிருக்கப்பிறந்தவர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வர, அது நிறைவேறும் பட்ச்சத்தில் அவருக்கு வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு சாற்றலாம். அவரை வழிபடவழிபட இந்த சனியால் ஏற்படும் தொல்லை அகன்று வருகிறது.

5லே சூரியன் இருக்கப்பிறந்தவர்களுக்கு இப்படிப்பட்ட மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது. சிவனை நீங்கள் வழிபடும்பொழுது, திருவண்ணமலையிலே பஞ்சஸ்தலங்களிலே ஒன்றான அக்கினியை சாட்சியாக வைத்து சித்தர்கள் பரவியிருக்கும் "சித்தர்பூமி"

என்றழைக்கப்படுமிடத்திலே வியாழனன்று வரும் பௌர்ணமி தினத்திலே கிரிவலம் வந்து சிவபிரானை வணங்கி மூலிகைக் காற்றை சுவாசிக்க 5லிருக்கும் சூரியன் குழந்தைப்பேறை கொடுத்துவிடுகிறது.

கேது இருக்கப்பிறந்தவர்கள் விநாயகப்பெருமானை வணங்கி விநாயகர் காயத்ரி மந்திரத்தை சொல்லி வர, அரச மர விநாயகரை வழிபட்டு, தொட்டில் கட்ட கேதுவால் ஏற்பட்ட தோஷம் அகலும்,

ஏற்கனவே கூறியதுபோன்று புதுச்சேரி அன்னையை வணங்கி உங்களது பிரார்த்தனையை எழுதி மனதார பிரார்த்தித்து, குழந்தை பேறு கிடைக்க வேண்டினால், பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும் என்பது உறுதி. என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

No comments:

Post a Comment