Friday, April 30, 2021

ராமேஸ்வரமும் அதனுடைய புனித தீர்த்தங்கள்

#இராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்!

இராமேஸ்வரம் தல வரலாறுராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர் ஆனது. மக்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.

22தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்

1. மகாலெட்சுமிதீர்த்தம் : இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது. இதில் ஸனானம் செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.

2. சாவித்திரி தீர்த்தம், 3. காயத்ரி தீர்த்தம், 4. சரஸ்வதி தீர்த்தம் :இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது. இம்மூன்று தீர்த்ங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையலாம்.

5. சேது மாதவ தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம். இதில் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும், சித்த சக்தியும் பெறலாம்.

6. நள தீர்த்தம் : மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சுரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

7. நீல தீர்த்தம் : மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது. இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர்.

8. கவாய தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் சக்குசாயம், கோபம் மனைவலினம், தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

9. கவாட்ச தீர்த்தம் : இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்குஅருகில் உள்ளது. இதில் நீராடுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள். மன வலிமை, தேக ஆரோக்கியம், திட சரீரம் கிடைக்கும்.

10. கந்நமாதன தீர்த்தம் : சேது மாதவர் சன்னதியின் முன்பகுதியில் கவாய், கவாட்ச தீர்த்தங்களுக்கு அருகில் உள்ளது. இதில் நீராடுவதால் மகாதரித்திரம் நீங்கி ஐஸ்வர்ய சித்தியும் பெற்று பிரம்ம ஹத்தியாதிபாப நிவர்த்தி பெறுவர்.

11. சங்கு தீர்த்தம் : இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் இதில் நீராடுவதால் செய்நன்றி மறந்த சாபம் நீங்கப் பெறும்.

12. சக்கர தீர்த்தம் : இராமநாதசுவாமி கோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் வடபுறம் உள்ள கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது. இதில் நீராடுவதால் ஊனம், குருடு, செவிடு ஆகியவை நீங்கி சௌக்கியம் அடைவர்.

13. பிரம்மாத்திர விமோசன தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி அருகில் உள்ளது. இதில் நீராடுவதால்பிரம்மஹத்தயாதிதோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாவதடன், பில்லி சுனியமும் நீங்கும்.

14. சூர்ய தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் அமைந்துள்ளது. இத்திர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் ரோகங்கள் நிவர்த்தியாகும்.

15. சந்திர தீர்த்தம் : இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது. இதில் நீராடுவதால் ரோக நிவர்த்தி அகலும்.

16. கங்கா தீர்த்தம் 17. யமுனா தீர்த்தம் 18. காயத்ரி தீர்த்தம்:இம்மூன்று தீர்தத்தங்களும்திருக்கோவில் இரண்டாம் பிரகாலத்தில் அமைந்தள்ள கருவூலத்தில் மேற்கு பக்கம் உள்ள சூரியன், சந்திரன் தீர்த்தத்திற்குஎதிரில் அமைந்துள்ளது. இவைகளில் நீராடுவதனால் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம்.

19. சாத்யாம்ருத தீர்த்தம் : திருக்கோவில் அம்பாள் சன்னதியின் மூலஸ்தான நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது. இதில் நிராடினால் தேவதாகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன், சூரியமூர்த்தி, மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும்.

20. சிவ தீர்த்தம் : இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது. இதில் ஸ்னானம் நீராடினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

21. சர்வ தீர்த்தம் : இந்ததீர்த்தம் முதல் பிரகாரத்தில் இராமநாதசுவாமி சன்னத முன் உள்ளது. இதில் நிராடினால் பிறவிக்குருடு, நோயம் நரை திரையும் நீங்கி வளமடையலாம். கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள். இவை புயலாலும், ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது.

22. கோடி தீர்த்தம் : இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷஙடை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது. அதனால் ராமநானவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது. அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது. இந்நீரானது இராமநாதசுவாமி மற்றும் எல்லா சுவாமி அம்பாள் ஆகியவர்கள் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படவதால் பக்தர்கள் இத்தீர்த்தத்தில் நேரடியாக தாங்களே தீர்தத்தை எடுத்து குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு கட்டணம் உண்டு. பக்தர்கள் இத்திர்த்தத்தில் நீராட இரண்டாம் பிரகாரம் வடபகுதியில் உள்ள பைரவர் சன்னதி முன்புறம் உள்ள கோமுக் மூலம் தீர்த்தத்தை விடுவார்கள், அதன் மூலம் நீராடலாம்.கோடி திர்த்தத்தில் நிராடியபின் இவ்வூரில் இரவு தங்கலாகாது என்பது சம்பிரதாயம்.

Thursday, April 29, 2021

உலகின் பெரிய செய்தி கொரோனவை பற்றியது.

BREAKING NEWS உலகின் பெரிய செய்தி,
  இறந்த கொரோனா நோயாளியின் பிரேத பரிசோதனை இத்தாலி செய்தது, பெரிய வெளிப்பாடு நடந்தது
  கோவிட் -19 இலிருந்து இறந்த உடலில் பிரேத பரிசோதனை (பிரேத பரிசோதனை) செய்த முதல் நாடாக இத்தாலி திகழ்கிறது, மேலும் விரிவான விசாரணையின் பின்னர், கோவிட் -19 வைரஸாக இல்லை என்பதைக் கண்டுபிடித்தது, ஆனால் மிகப் பெரியது  ஒன்று.  உலகளாவிய மோசடி.  "பெருக்கப்பட்ட குளோபல் 5 ஜி மின்காந்த கதிர்வீச்சு (விஷம்)" காரணமாக மக்கள் உண்மையில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

  இத்தாலியில் உள்ள மருத்துவர்கள் உலக சுகாதார அமைப்பு (WHO) சட்டத்தை மீறியுள்ளனர், இது கொரோனா வைரஸால் இறந்த நபர்களின் உடல்கள் மீது பிரேத பரிசோதனைக்கு (பிரேத பரிசோதனை) அங்கீகாரம் அளிக்கவில்லை.  இது ஒரு வைரஸ் அல்ல, ஆனால் மரணத்தை உண்டாக்கும் ஒரு பாக்டீரியம், இது நரம்புகளில் இரத்த உறைவு ஏற்படுகிறது, அதாவது இந்த பாக்டீரியத்தின் காரணமாக நரம்புகள் மற்றும் நரம்புகளில் இரத்த உறைவு ஏற்படுகிறது, இது நோயாளி தான் மரணத்திற்கு காரணமாகிறது.
  இத்தாலி இந்த வைரஸை வென்றுள்ளது, "ஃபெலியா-இன்ட்ராவாஸ்குலர் உறைதல் (த்ரோம்போசிஸ்) தவிர வேறு எதுவும் இல்லை, அதை சமாளிப்பதற்கான வழி அதை குணப்படுத்துவதாகும்" என்று கூறியுள்ளது.
  நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மாத்திரைகள்
  அழற்சி எதிர்ப்பு மற்றும்
  ஆன்டிகோகுலண்ட்ஸ் (ஆஸ்பிரின்) எடுத்துக்கொள்வது அதை குணப்படுத்தும்.
  இந்த நோய்க்கு ஒரு சிகிச்சை சாத்தியம் என்பதைக் குறிக்கும் வகையில், உலகத்திற்கான இந்த பரபரப்பான செய்தியை இத்தாலிய மருத்துவர்கள் கோவிட் -19 வைரஸிலிருந்து சடலங்களை பிரேத பரிசோதனை (பிரேத பரிசோதனை) மூலம் தயாரித்துள்ளனர்.  வேறு சில இத்தாலிய விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, வென்டிலேட்டர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யூ) ஒருபோதும் தேவையில்லை.  இதற்கான நெறிமுறைகள் இப்போது இத்தாலியில் வெளியிடப்பட்டுள்ளன.
  சீனா ஏற்கனவே அதைப் பற்றி அறிந்திருந்தது, ஆனால் அதன் அறிக்கையை ஒருபோதும் பகிரங்கப்படுத்தவில்லை.
  இந்த தகவலை உங்கள் குடும்பத்தினர், அயலவர்கள், அறிமுகமானவர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள், இதனால் அவர்கள் கோவிட் -19 இன் பயத்திலிருந்து வெளியேற முடியும், மேலும் இது ஒரு வைரஸ் அல்ல, 5 ஜி கதிர்வீச்சுக்கு வெளிப்படும் ஒரு பாக்டீரியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிப்பதே காரணம்.  இந்த கதிர்வீச்சு வீக்கம் மற்றும் ஹைபோக்ஸியாவையும் ஏற்படுத்துகிறது.  இதற்கு இரையாகிறவர்கள் ஆஸ்ப்ரின் -100 மி.கி மற்றும் அப்ரோனிக்ஸ் அல்லது பாராசிட்டமால் 650 மி.கி.  ஏன்… ???  क .கோவிட் -19 இரத்தத்தை உறைவதற்கு காரணமாகிறது, இது நபருக்கு த்ரோம்போசிஸை ஏற்படுத்துகிறது, இதன் காரணமாக நரம்புகளில் இரத்தம் உறைந்து போகிறது மற்றும் இதன் காரணமாக மூளை, இதயம் மற்றும் நுரையீரல் ஆக்ஸிஜனைப் பெற முடியாது, இதன் காரணமாக மூச்சு விடுபவர் ஆகிறார்  கடினமானது மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக ஒரு நபர் விரைவாக இறந்து விடுகிறார்.
  இத்தாலியில் உள்ள மருத்துவர்கள் WHO இன் நெறிமுறைக்கு கீழ்ப்படியவில்லை மற்றும் கோவிட் -19 காரணமாக இறந்த சடலங்கள் மீது பிரேத பரிசோதனை செய்தனர்.  மருத்துவர்கள் கைகள், கால்கள் மற்றும் உடலின் பிற பாகங்களைத் திறந்து, அவற்றைச் சரியாக ஆராய்ந்து பரிசோதித்தபின், இரத்த நாளங்கள் நீண்டு, நரம்புகள் த்ரோம்பியால் நிரம்பியிருப்பதைக் கவனித்தனர், இது பொதுவாக இரத்தம் பாய்வதைத் தடுக்கும்.  மேலும் உடலில் ஆக்ஸிஜனின் ஓட்டத்தை குறைக்கிறது, இதனால் நோயாளி இறக்க நேரிடும்.  இந்த ஆராய்ச்சியை அறிந்த பிறகு, இத்தாலிய சுகாதார அமைச்சகம் உடனடியாக கோவிட் -19 இன் சிகிச்சை நெறிமுறையை மாற்றி, அதன் நேர்மறை நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் வழங்கியது.  100 மி.கி மற்றும் எம்பிரோமேக்ஸ் கொடுக்கத் தொடங்கியது.  இதன் விளைவாக, நோயாளிகள் குணமடையத் தொடங்கினர் மற்றும் அவர்களின் உடல்நலம் முன்னேற்றத்தைக் காட்டத் தொடங்கியது.  இத்தாலிய சுகாதார அமைச்சகம் ஒரே நாளில் 14,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளை வெளியேற்றி வீட்டிற்கு அனுப்பியது.
  ஆதாரம்: இத்தாலிய சுகாதார அமைச்சகம்

  இதை மற்றவர்களுக்கு வேகமாக அனுப்புங்கள்.

Wednesday, April 28, 2021

சித்தர்கள் கூறும் எப்படி தூங்குவது.

#தூங்கும்முறை #பற்றி #சித்தர்கள் #கூறியது.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்கள் தன்உடலில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மல்லாந்து கால்களையும், கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான

வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

சித்தர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் நன்மைக்காகவே இருக்கும்…

நம் வாழ்க்கை நம் கையில்… நாம் எவ்வாறு நல் வழிகளை பின்பற்றுகிறோமோ அவ்வாரே நமக்கு நன்மைகளும் கிடைக்கும்.

Tuesday, April 27, 2021

சந்தனம் குங்குமம் விபூதி இவைகளின் பயன் என்ன?

*சந்தனம்,விபூதி,குங்குமம் எல்லாம் எதுக்காக..? 

#இந்து மதம் அற்புதம்  !!!*

நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.

தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.

திருநீறு அணியும் காரணம்
"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.
திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்
1. உடல் நாற்றத்தைப் போக்கும்.
2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.
3. தீட்டுக் கழிக்கும்.
4. உடலைச் சுத்தம் செய்யும்.
5. வியாதிகளைப் போக்கும்.
6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.
7. முகத்திற்கு அழகைத் தரும்.
8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.
9. புத்திக் கூர்மையைத் தரும்.
10. ஞானத்தை உண்டாக்கும்.
11. பாவத்தைப் போக்கும்.
12. பரக்தியைத் தரும்.
திருநீர்
---------
எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும்தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது.

*குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டும் :*
-------------------------- -------------------------- ------------------------
திருநீர் அணிவதைப் பற்றிக்கூறும் போது சில நேரங்களில் ஈரமான விபூதி அணிய வேண்டுமென்றும் ,சில நேரங்களில் ஈரமில்லா திருநீர் அணிய வேண்டும் என்று கூறுவது ஒன்றுக் கொன்று முரண்பாடாக உள்ளதே என்று தோன்றலாம். திருநீர் அணிந்தவர்களை கண்டால் மனதுக்குள்ளாவது இகழும் இக்காலத்தில் இந்த முரண்பாடுக்கு விளக்கம் கூறுவது அவசியம். 

நம் முன்னோர்கள் மருத்துவ குணங்களை பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர். அதிகாலையில் எழுந்து கை, கால், முகம், கழுவி, திருநீர்ச்சட்டியிலிருந்து ஒரு பிடி எடுத்து நெற்றியிலும், பின் மாறிடத்தும் .இரு புஜங்களிலும் சில வர்மஸ்தானங்களிலும் பாட்டனும் பாட்டியும் பூசிக்கொள்ளவதை சிலராவது பார்த்திருப்போம் .மாலைப் பொழுதிலும் இவ்வாறு கை,கால்,கழுவி வந்து நனைக்காமல் திருநீர் பூசுவதுண்டு , ஆனால் குளித்த ஓய்ந் திருநீர் எடுத்து நணித்து உடலில் பூசி வந்தனர் .இப்படி இரண்டு வகையான திருநீர் பூசும் முறை பார்க்கும் போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது நனைக்காத திருநீருக்கு அணுக்களை அழிக்கும் சக்த்தியும் நனைத்த திருநீருக்கு உடலில் மிகையாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும் சக்தியும் உண்டென்பதாகும்.

இவ்வளவும் அறிந்த பின் ,நம் உடலில் காலையிலும் ,மாலையிலும் மட்டும் ஏன் அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது என்பதை கவனிப்போம் .இரவு ஒரு நேரம் ஒரு நபர் தூங்கும் போது அவர் படுக்கையில் லட்சக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும் என்று விஞானம் கூறுகிறது. அதே போல் மாலை நேரத்தில் சுற்று சூழலில் எண்ணற்ற நோயனுக்கள் உலாவுகின்றன என்பது அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு .அதனால் காலையும் மாலையும் 
நோயனுக்களின் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஈரமில்லாத திருநீரை அணிந்து வருகின்றனர்.

குளிக்கும் நேரம் உடலின் மூட்டுகளில் ஈரம் காரணமாக நீர் கட்டு உருவாகவும் காலப் போக்கில் அது வாயிலாககொழுப்பு அதிகரிக்கவும் அது மூட்டு வாதமாக மாறவும் வாய்ப்புண்டு .இப்படி உருவாகும் நீர்க்கட்டி தவிர்ப்பதற்க்காகத்தான் குளித்த உடன் ஈரமான திருநீர் அணிவது வழக்கமாக்க பட்டது .

அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.
சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.
ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.
மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். 

*அணியும் முறை*
-----------------------
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போதுதிருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும்.

*திருநீறு அணியும் இடங்கள்*
-------------------------- ------------
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை
1. தலை நடுவில் (உச்சி)
2. நெற்றி
3. மார்பு
4. தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5. இடது தோள்
6. வலது தோள்
7. இடது கையின் நடுவில்
8. வலது கையின் நடுவில்
9. இடது மணிக்கட்டு
10. வலது மணிக்கட்டு
11. இடது இடுப்பு
12. வலது இடுப்பு
13. இடது கால் நடுவில்
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்குக் கீழ்
16. கழுத்து முழுவதும்
17. வலது காதில் ஒரு பொட்டு
18. இடது காதில் ஒரு பொட்டு

*பலன்கள்*
-------------
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!

*திருநீறு (விபூதி):-*

திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஜசுவரி்யம் என்றும் கூறப்படும்.

*திருநீறு வகைகள்*

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை
1. கல்பம்
2. அணுகல்பம்
3. உபகல்பம்
4. அகல்பம்

1.கல்பம்

கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

2.அணுகல்பம்

ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

3.உபகல்பம்

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

4.அகல்பம்

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.

அணியும் காரணம்

"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். 

மும்மலங்களையும்சாம்பலாக்கி  அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.

புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.

*இது தற்பொழுது உள்ள குறிப்பு.*

1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம்.

2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டுமாகில் திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம்.
அணியும் காரணம் -- மற்றொரு விளக்கம்
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட.

சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும்.

ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம்.

*நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.*

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு.

ஆக்ஞா (நெற்றி) தியானம்

மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா யோகோ போன்ற இடங்களில் சென்றால் சொல்லித்தருவார்கள்.
பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.

இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.

இதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும் 
செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும்.
இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
அணியும் முறை
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவஎன்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும்.

*திருநீறு:-*

திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்.

1. உடல் நாற்றத்தைப் போக்கும்.

2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.

3. தீட்டுக் கழிக்கும்.

4. உடலைச் சுத்தம் செய்யும்.

5. வியாதிகளைப் போக்கும்.

6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.

7. முகத்திற்கு அழகைத் தரும்.

8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.

9. புத்திக் கூர்மையைத் தரும்.

10. ஞானத்தை உண்டாக்கும்.

11. பாவத்தைப் போக்கும்.

12. பரக்தியைத் தரும்.

*குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக.....*

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

*குங்குமம்..!*

மஞ்சளில் பல வகையுண்டு. விரலி மஞ்சள், சருகு மஞ்சள், பூச்சு மஞ்சள், கறி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், நாட்டு மஞ்சள், சீமை மஞ்சள், குரங்கு மஞ்சள் என்பவை அவற்றுள் சில. மஞ்சள் நிறமுடையவை பெரும்பாலும் மங்கலகரமானவையாகக் கருதப்பட்டாலும் சில மஞ்சள் சமாச்சாரங்களுக்குப் பயப்பட வேண்டித்தான் இருக்கிறது. மஞ்சள் காமாலை, மஞ்சள் கடுதாசி, மஞ்சள் பத்திரிக்கை முதலியவற்றைக் கூறினேன்.

மஞ்சள் பொடியில் அர்ச்சனை செய்வதும் உண்டு. ஹரித்ரா சூர்ணம் என்பதே மஞ்சள் பொடி. மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படுவதை ஹரித்ரா குங்குமம் என்று கூறுகின்றோம். உண்மையிலேயே குங்குமம் என்பது ஆரம்பகாலத்தில் குங்குமப்பூவைக் குறித்தது. குங்குமப்பூ என்பது ஒரு தனிப் பொருள். இதைக் கடைகளில் வாங்கலாம். மெல்லிய இழைகளாக - குங்கும வர்ணத்தில் கிடைக்கு. மெல்லிய-ஆனால் நீண்ட தூரம் பரவும் நறுமணம் உடையது. இது ஒருவகைச் செடியின் மலரின் காயவைக்கப்பட்ட மகரந்தக் காம்புகள். காஷ்மீர், துருக்கி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கிடைக்கும். 

"குங்குமப்பூவே! கொஞ்சும் புறாவே!" என்று பாடல் சிறப்புப் பெற்ற குங்குமப்பூ இதுதான்.

மிகவும் கிராக்கியான பொருள். ஆகவே அதிகக் கலப்படத்துக்கு ஆளாகிறது. தேங்காய்ப்பூவில் கலரைச் சேர்த்து குங்கும எஸென்ஸைச் சேர்த்து அதைக் குங்குமப்பூ என்று விற்பார்கள். 'எடைக்கு எடைத் தங்கம்' என்பார்கள். அது குங்குமப்பூவுக்குப் பொருந்தும். 

குங்குமப்பூவைப் பச்சைக் கற்பூரம் சேர்த்துப் பன்னீருடன் உரசுகல்லில் உரசி எடுப்பார்கள். இதுதான் குங்குமப்பூச்சு; அல்லது குங்குமக்குழம்பு. இதைத்தான் அம்பிகைக்குத் திலகமாக இட்டு, பூச்சாகவும் பூசுவது. பழங்காலத்தில் வசதி மிக்க அரச வர்க்கத்துப் பெண்கள், பணக்காரப் பெண்கள் முதலியோர் குங்குமப் பூச்சு, குழம்பு ஆகியவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தினார்கள். 

குங்குமம் என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் 'ஹரித்ரா குங்குமம்' என்பது குண்டு மஞ்சள், எலுமிச்சைச் சாறு, சீனாக்காரம், படிக்காரம், நல்லெண்ணெய் முதலியவற்றிலிருந்து செய்யப்படும். வைணவர்கள் ஸ்ரீசூர்ணம் என்னும் பொடியை நாமமாக அணிந்து கொள்கிறார்கள்

*தருப்பைப்புல்*

 புண்ணியபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இப்புல்லில் கரமும் புளிப்பு இருப்பதால் செம்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் தெய்கிறார்கள் அவை பல நாள் ஒலிஉடனும் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். சூரிய கிரகணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகரிக்கும். தோற்று நோய்கள் இதன் காற்றுபடும் இடங்களில் இருக்காது 

இந்து மற்றும் புத்த சமயத்தில் தருப்பை பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு புனிதத் தாவரமாகும். இது புத்தர் ஞான ஒளி பெறுவதற்காகத் தியானம் செய்வதற்கான ஒரு ஆசனமாகப் பயன்பட்டு வந்தது. ரிக் வேதத்தில்(Rig Veda) மதச் சடங்குகள் செய்யப்பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தருப்பை குறிப்பிடப் படுகிறது. மேலும் இது துறவிகள், மத போதகர்கள் மற்றும் இறைவனுக்கான ஆசனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் தியானம் செய்வதற்குச் சிறந்த ஆசனமாகக் கிருட்டிணனால் தருப்பையாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.

Monday, April 26, 2021

கொரோனாவை பற்றி அருமையான பதிவு கண்டிப்பாக படிக்கவும்.

1. *நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ?* 

இல்லை. நீங்கள் எப்பேற்பட்ட அசகாய சூரர் என்றாலும் தகுந்த சுழ்நிலை *(Suitable Condition for Virus Exposure) அதாவது கரோனா வைரஸ் உங்கள் உடலுக்குள் செல்லும் தருணம் அமைந்தால் உங்களை அது தாக்கத்தான் செய்யும். அந்த தகுந்த சூழ்நிலை *அதாவது கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்மிய இடத்துக்கு நீங்கள் சென்று இருந்தாலோ அவரின் எச்சின் திவலைகள் காற்றில் இருக்கும் போதோ)* க்கு நீங்கள் உட்படவில்லை என்று அர்த்தமே தவிர நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர் என்று அர்த்தம் இல்லை. 

2. *கரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்து எத்தனை நாட்களில் முதல் அறிகுறி தெரியும் ?* 

இது வரை பாதிக்கப் பட்டவர்களின் தரவுகளின்படி சராசரியாக வைரஸ் உங்கள் உடலுக்குள் நுழைந்து 5-6 வது நாட்களில் காய்ச்சலோ உடல்வலியோ, தலைவலியோ வரும். அதே நேரத்தில் 14 நாட்கள் வரை Incubation Period இந்த வைரஸ்க்கு இருக்கிறது. 

3. *கரோனா வைரஸ் வந்து போனதே தெரியாமல் பலர் இருக்கலாம் என்று கூறுகிறார்களே உண்மையா ?* 

ஓரளவு உண்மை. ஆனால் ஏதாவது ஒரு அறிகுறியையாவது அவர்கள் அனுபவித்து இருப்பார்கள். அது காய்ச்சலாகவோ, லேசான சளியாகவோ, உடல்வலியாகவோ இருந்து இருக்கலாம். எந்த அறிகுறியும் தராமல் கரோனா வைரஸ் உங்கள் உடலை விட்டு நீங்கி இருக்காது. வெளிப்புற அறிகுறி உங்களுக்கு தெரியாவிட்டாலும் *CT Lungs* எடுத்து பார்த்தால் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. எனவே ஒரு அறிகுறியையாவது நீங்கள் அனுபவிப்பீர்கள்.

4. *எனக்கு இருமல் காய்ச்சல் இருக்கிறது. ஆனால் சோதனை செய்ய பயமாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் ?* 

உங்களுக்கு இருமல் காய்ச்சல் ஒரு நாள் இருந்தால் கூட யோசிக்காமல் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் *RT PCR* பரிசோதனைக்கு உங்கள் மாதிரியை கட்டாயம் கொடுங்கள். உயிர் காக்க முன்னரே நாம் நடவடிக்கைகள் எடுத்து கொள்ளலாம். பயந்து சோதனை செய்யாமல் இருந்தால் வைரஸ் பல்கி பெருகி உங்கள் உயிருக்கே உலை வைக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்லும்போது உங்களால் பலருக்கு பரவ வாய்ப்பும் இருக்கிறது. 

5. *கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் பேசினாலே அல்லது அவர் சென்ற அறைக்கு சென்றாலே அவர் தொட்ட பொருளை தொட்டாலே நாம் தொற்றுக்கு உள்ளாகி விடுவோமா ?* 

அமெரிக்காவின் CDC வெளியிட்ட தரவுகளின் படியும் உலக சுகாதார நிறுவனத்தின் கடந்த ஒரு வருட ஆய்வறிக்கையின் படி *99 சதவீதம் மூக்கு வழியாக தான்* இந்த கரோனா வைரஸ் பரவுகிறது. அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருள் மூலமாக இன்னொருவருக்கு பரவுவது என்பது 0.001 வாய்ப்பு தான் என்று உலக சுகாதார நிறுவனமே கூறி இருக்கிறது. அப்படி பரவி இருந்தால் இதற்குள் உலக மக்கள் தொகை பாதி அழிந்து இருக்கும். கரோனா பாதிக்கப்பட்ட நபர் தும்முவதன் மூலமும் இருமுவதின் மூலமாக தான் அதிகம் பரவுகிறது. 

6. *பிறகு ஏன் கோலப்பொடி போல குளோரின் பொடியையும் மருந்தையும் கரோனா பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிலும் அலுவலகத்திலும் தெளித்து சுத்தம் செய்கிறார்கள்? அவ்வாறு செய்வதால் கரோனா அழிந்து விடுமா ?* 

கண்டிப்பாக இல்லை. கரோனா பரவிய நேரத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டு இந்த வைரஸ் பற்றிய தெளிவு உலக சுகாதார நிறுவனத்திடம் இல்லை.கடந்த ஆண்டே உலக சுகாதார நிறுவனம் கிருமிநாசினி வீட்டிலும் அலுவலகத்திலும் தெளிப்பதால் கரோனா வைரஸ் ஒழியாது என்று தெளிவாக  கூறிவிட்டது. இவ்வாறு தெளிப்பதால் பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் சாகுமே தவிர கரோனா வைரஸ் அழியாது. 

7. *ஏன் சிலர் லேசான அறிகுறிகளாலும் சிலர் தீவிர அறிகுறிகளாலும் பாதிக்கப்படுகின்றனர் ?*

இதற்கு பல காரணங்கள் உள்ளன. வயது, ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டது என பல காரணங்கள் உள்ளன. ஆனாலும் முக்கிய காரணம் நீங்கள் எவ்வளவு அளவு வைரசால் (Viral Dose) பாதிக்கப் படுகிறீர்கள் என்பது முக்கிய பங்காற்றுகிறது. அதிக அளவு வைரஸ் க்கு நீங்கள் Expose ஆனால் தீவிர தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. குறைந்த அளவு Viral Dose க்கு நீங்கள் Expose ஆனால் குறைவான பாதிப்புக்கு உள்ளாகலாம். அதே நேரத்தில் உடலின் உச்ச பட்ச நோய் எதிர்ப்பு போராட்டமான *Cytokine Storm* அதாவது நம் உடல் சொந்த செல்லையே தாக்கி கொல்லும் நிலைக்கு உங்கள் உடல் சென்றாலும் உயிரிழப்பு ஏற்படும். 

8. *கரோனா Positive என்று அறிய வந்தால் என்ன செய்ய வேண்டும்* ? 

முதலில் பதறக் கூடாது. யாரிடமும் மறைக்க கூடாது. வீட்டில் உள்ளவரிடம் தெரியபடுத்தி 14 நாட்களுக்கு தனி அறையில் இருக்க வேண்டும். வெளியே வரவே கூடாது. முதல் நாளிலேயே உங்கள் நுரையீரலை CT Scan எடுத்து பார்த்து விடுவது நல்லது. தொடர்ந்து 5 நாட்கள் மேல் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். பெரும்பாலனோருக்கு காய்ச்சல் முதல் மூன்று நாட்களிலேயே குணமாகி மற்ற அறிகுறிகளான இருமல் உடல் வலி தொடர்கிறது.ஆனால் தொடர் காய்ச்சல் என்பது நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயமாக கருத வேண்டும். 

9. *என்னென்ன மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்* ? 

Paracetamol காய்ச்சலை குறைப்பதற்கும் இருமல் என்பது பாக்டிரியாவல் ஏற்படுவது எனவே அதை குறைக்க Antibiotics ஆன Cefixime or Azithromycin or Amoxcyillin மாத்திரைகளை தவறமால் உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து காலை இரவு என உட்கொள்ளும் பட்சத்தில் ஐந்து நாட்களில் உங்களுக்கு உடல் முன்னேற்றம் தென்படும். 

10. *எப்போது நாம் அச்சம் கொள்ள வேண்டும்* ? 

கரோனா பாதித்து 5,6,7 ஆம் நாட்கள் மிக முக்கியமானது. அப்போது உங்களுக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்று விட வேண்டும் 

11. *என்ன சாப்பாடு சாப்பிட வேண்டும்* ? 

வழக்கமான சாப்பாடு சாப்பிட்டாலே போதுமானது. அதே நேரத்தில் அதிகமான நீர் குடிக்க வேண்டும். பழச்சாறு தவறாமல் பருக வேண்டும். புரதமே உடலின் கட்டுமான வீரர்கள். எனவே சைவம் என்றால் பருப்பு வகைகளையும் அசைவம் என்றால் சிக்கன் மீன் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உங்களுக்கு சுவை மணம் போன்ற உணர்வுகளை இழந்து இருப்பீர்கள். சாப்பிட முடியாது, ஆனால் சாப்பிட்டே ஆக வேண்டும் தவறாமல். ஒன்றே ஒன்று தான். உங்கள் உடல் ஆற்றலை இழக்க கூடாது. இழக்கும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அதிக தொற்றுக்கு அது வழி வகுக்கும். 

12. *Walking,Yoga போன்றவற்றை செய்யலாமா* ? 

தாராளமாக செய்யலாம். நீங்கள் அடைந்து இருக்கும் அறைக்குள் மட்டுமே. ஆனால் இதையெல்லாம் செய்ய உங்கள் மனம் ஒத்துழைக்காது என்பதே உண்மை. ஏனெனில் அதிக உளவியல் பாதிப்புக்கு உள்ளாகும் போது உங்களால் சகஜமாக இருக்க முடியாது. 

13. *ஏன் கரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர்* ? 

நோய் பற்றிய புரிதல் இல்லாததும் அறிவியல் விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம். இது ஒரு தொற்று. அதே நேரத்தில் அசிங்கப்பட கூடிய நோய் ஒன்றும் அல்ல. இது வல்லரசு நாடுகளின் அதிபர்கள் முதல் பாமர மக்கள் வரை யாரை வேண்டுமானாலும் பாதிக்க கூடிய தொற்று. எனவே பாதிப்பு வந்த உடன் நாம் சொல்லும் போது மட்டுமே மற்றவர்கள் நம்மிடம் வராமல் இருக்கவும் நம்மால் பிறருக்கு பரவாமல் இருக்கவும் நாம் செய்யும் சமூக கடமை. அதே நேரத்தில் உங்கள் அனுபவங்களை பகிர்வதன் மூலம் பலர் எச்சரிக்கையுடன் இருப்பர். வைரசின் சங்கிலியை அறுத்தாலே கரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வந்துவிடும் 

14. *கரோனாவால் பாதிக்கபட்டால் நம் உடல் மீண்டும் தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புண்டா* ? 

இயற்கையாகவே நம் உடல் எல்லா விதமான வைரஸ் பாக்டீரியாவை எதிர்கொள்ளும் திறன் உடையது தான். ஒரு புதுவிதமான வைரஸ் உள்ளே வரும்போது தான் நம் உடல் திணறும். அந்த திணறலே காய்ச்சல் இருமல் உடல்வலியாக நமக்கு நம் உடல் நம்மிடம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் வைரஸை முழுமையாக நம் உடல் போரிட்டு வென்ற உடன் நம் உடலில் Antibodiesஐ உற்பத்தி செய்துவிடும். இது அடுத்த நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். 
ஆனால் கரோனவை பொறுத்தவரை இயற்கையாகவே நம் உடலில் Antibodies உற்பத்தி ஆனாலும் சுமார் 6-9 மாதங்களே அந்த பாதுகாப்பு இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உங்கள் உடல் எந்த அளவிற்கு Antibodies உற்பத்தி செய்துள்ளது என்பதை கரோனா பாதித்த 21 நாட்களுக்கு பிறகு Covid Antibody Test எடுத்து பார்த்தால் நமக்கு தெரியவரும். அந்த சோதனையில் Antibodies கம்மியாக இருந்தால் நீங்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி அந்த Antibodies அளவை கூட்டிக் கொள்ளலாம். இது மீண்டும் தொற்றுக்கு உள்ளாவதில் இருந்து கூடுதல் பாதுகாப்பு தரும். 

15. *தொற்றில் இருந்து தப்பிக்க மிகச்சிறந்த வழி என்ன* ? 

Mask மட்டுமே. Mask ன் முன் பகுதியை நாம் தொடக்கூடாது. தொட்டுவிட்டு கழட்டி நம் முகத்தை துடைத்தால் தொற்றுக்கு உள்ளாக நேரிடும். அதே போல் கையுறை பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. ஏற்கனவே சொன்னது போல மூக்கு தான் கரோனாவின் நுழைவு வாயில். 

16. *கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா* ? 

கட்டாயம் எடுத்து கொள்வது நல்லது. இது தீவிர தொற்று நிலைக்கு கொண்டு செல்லாமல் உங்களை பாதுகாக்க உதவும். அதே நேரத்தில் *தடுப்பூசி எடுத்து கொண்டாலே கரோனா தாக்காது என்று எண்ண கூடாது.*

Wednesday, April 21, 2021

60 வயதுக்குப் பிறகும் சாதனை செய்ய முடியும்

*அறுபதில் ஆட்டத்தை* *தொடங்குங்கள்!*
இப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்...

60 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான, வளமான  மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்...

பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...!!!

வாழ்க்கையில் 60-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்...

 *60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய  அவசியமான விஷயங்கள்:* 

😎புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்...

😎உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள கடினமான இலக்கை  முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு  செல்லுங்கள்...

😎எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள்...

😎70 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம்  உருவாக்காதீர்கள்...

😎இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம்  அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...

😎அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 60 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகுதான்...

😎உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள்,  நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 60+ காரர்கள் தான் அதிகம்..!!!

😎 பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடி பயணம் செல்லுங்கள்...

😎வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்...

😎புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனிபோட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப்படியுங்கள்...

😎நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை  விரும்பி காணுங்கள்...

😎சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்...

😎விரோதிகளை விலக்குங்கள், பெருமைக் காரர்களை, பொறாமைக் காரர்களை காலவிரயம் கருதி  ஒதுக்குங்கள்...

😎மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி,
சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்...

😎வாரம் ஒரு முறையாவது உங்கள் இணை மனதினருடன் சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள்...

😎மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள், உங்களை அவர்கள்  பக்கத்திலேயே  படுக்க வைத்து விடுவார்கள்...

😎பொதுச் சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை,  சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள்...

😎முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப் படுபவர்களுக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை  நீங்களே புதிதாக ரசித்து  மகிழ்வீர்கள்...

😎எப்போதுமே முதல் இன்னிங்சை விட இரண்டாம் இன்னிங்கஸ்தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை  நிர்ணயிப்பதில்    பெரும் பங்கு வகிக்கிறது...

😎மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 60+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை தோழர்களே...

😎மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்துவிட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்துவிடப்  போகிறது...???

😎இது உங்களுக்கான ஆட்டம், அறுபதின்மாரே இப்போதே துவங்குங்கள்...!!!
😎🕺🤓🕺😎🕺

பகிர்வு பதிவு

Tuesday, April 20, 2021

தினமும் எந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் பலன்.

பிரம்ம முகூர்த்தத்திற்கு இணையான சந்தியா காலம் நேரத்தில் விளக்கு ஏற்றினால் பிரச்சனைகள் தீரும்

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து ஸ்நானம் செய்து விட்டு வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் அதிர்ஷ்டமான பலன்களை கொடுக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை. எல்லோராலும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கு ஏற்றுவது என்பது கடினமான காரியம். ஆனால் இதை செய்பவர்களுக்கு 100% நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது மட்டும் உறுதி. இந்த நேரத்தில் விளக்கு ஏற்றுபவர்களுக்கு தேவர்களின் ஆசீர்வாதமும், தெய்வங்களின் அருளும் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது.

நம்மால் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கொள்ள முடியாது. அதற்கு பதிலாக வேறு என்ன செய்யலாம்? அதைத் தான் இனி இப்பதிவில் பார்க்க இருக்கிறோம். பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு இணையாக இருப்பது சூரியன் மறையும் நேரமாக இருக்கும் சந்தியா காலம் ஆகும். கிட்டத்தட்ட சந்தியா காலமும், பிரம்ம முகூர்த்தத்துக்கு இணையானது தான். சந்தியா காலம் என்பது மாலை வேளையில் மூன்றில் இருந்து ஆறு மணி வரை கொண்ட காலம் ஆகும். இதில் இறுதியாக இருக்கும் ஒரு மணி நேரம் மிகவும் விசேஷமானது.

 
மாலையில் தினமும் 5 லிருந்து 6 மணிக்குள்ளாக விளக்கேற்றுவது சாஸ்திர நியதி. வெள்ளிக் கிழமைக ளில் 6 மணிக்கு மேல் தான் சிலர் விளக்கு ஏற்றுவார்கள். இப்படி செய்வதை விட 6 மணிக்குள்ளாகவே நாம் விளக்கு ஏற்றி விடுவது மிக மிக நல்லது. ஐந்திலிருந்து ஆறு மணிக்குள் தினமும் பூஜை அறையில் 3 விளக்குகளை வைத்து வழிபடுவது ராஜ யோகத்தைக் கொடுக்கும்.

சந்தியா கால நேரத்தில் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் அத்தனை தெய்வங்களின் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தினமும் மாலை வேளையில் ஐந்திலிருந்து இறை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தால் உங்களுக்கு இருக்கும் அத்தனை கஷ்டங்களும் நீங்கி நல்ல விஷயங்கள் நடக்க துவங்கும். நீங்கள் செய்ய செய்ய உங்களுக்கு அவற்றின் மகத்துவத்தை உணர கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இப்படி சந்தியா கால வேளையில் ஏற்றும் விளக்கானது மஞ்சள் திரியை கொண்டு ஏற்றுவது மிக மிக நல்ல பலன்களைக் கொடுக்க வல்லது.

ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் ஒவ்வொரு நிறத்தில் திரியை ஏற்றுவது வழக்கம். அவ்வகையில் மஞ்சள் நிற திரியானது துன்பங்களைப் போக்க கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. சாதாரண திரியில் மஞ்சள் தோய்த்து காய வைத்து பின்னர் பயன்படுத்தினால் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுபவர்கள் 5 விளக்கில் இது போல் மஞ்சள் திரியை கொண்டு தீபம் ஏற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த இரண்டு வேளைகளும் இறை வழிபாட்டிற்குரிய மிக மிக விசேஷமான காலம் ஆகும்.

Sunday, April 18, 2021

சுந்தரகாண்டம் படிப்பதால் கற்பனைக்கு எட்டாத பயன்கள்.

*🔯சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!* 

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.

31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா? அதுவும் ஒரே நாளில்… என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம

33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.

34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.

36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.

38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.

40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.

ஸ்ரீ ராம ஜெயம்.
💐🦜🙏🏻MPK🙏🏻🦜💐

Saturday, April 17, 2021

பழனி ஆண்டி கோல தரிசனத்தின் பலன்

அற்புத பலன்கள் தரும் பழனி ஆண்டி கோலம் முருகர் தரிசனம்
 **"***************

வாழ்வில் தடை போட்டி பொறமை   கஷ்டம் போன்ற பல பிரச்சனைகள் விலக ஆண்டி கோலத்தில் இருக்கும் பழனியாண்டவர் முருகனை தரிசனம் செய்வதால் நன்மைகள் பல உண்டாகும்

 ஒருவருக்கு வாழ்க்கையில் தீராத கஷ்டம்  தடைகள்  குடும்பத்தில் சண்டை வருமானம் இல்லாமை போன்ற பல்வேறு விதமான பிரச்சனையை மட்டுமே எதிர் கொண்டு வாழும் சூழ்நிலை இருந்தால்  நிச்சயம் இதற்கு கர்ம வினைகள் தான் காரணம்  ஆகும்

கலியுகத்தில், நாம் செய்த கர்மவினைகளை குறைக்கக்கூடிய மாபெரும் சக்தி முருகப்பெருமானுக்கு உள்ளது. முருகப்பெருமானை பழனி மலைக்கு சென்று தரிசனம் செய்தால் நம்முடைய கர்மவினைகள் கட்டாயம் குறையும் 

 கர்ம வினைகளால் ஏற்படும் நம்முடைய  பிரச்சனைகள் தீர பழனி முருகனை எப்படி வழிபாடு பூஜை செய்வது என்று பார்ப்போம்

பழனி  முருகப்பெருமானை  ஆண்டி கோலத்தில் இருக்கும் போது தரிசனம் செய்தால் நம்மை ஆண்டியாக ஆக்கி விடுவார் என்றும்  ராஜ அலங்காரத்தில் தான் இருக்கும் போதும் மட்டுமே தரிசனம் செய்தால்  ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்று  சொல்வார்கள்

ஆனால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தீராத துயரத்தை அனுபவித்து வந்தால், அதிகப்படியான தடைகள்  இருந்தால்   நீங்கள் பழனி முருகனை தண்டாயுதபாணி கோலத்தில் ஆண்டி அலங்காரத்தில் தரிசிப்பது தான் சிறந்தது

திங்கள் கிழமையில் காலை நேரத்தில் மலையேறி முருகப்பெருமானை ஆண்டி கோலத்தில் தரிசித்தால், உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகி  படிப்படியான முன்னேற்றம் மாற்றம் ஏற்படும்

உங்களுடைய ஜாதகத்தில் பாதிப்பு தரக்கூடிய நிலையில் எந்த கிரகங்கள்  இருந்தாலும்  அந்த கிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு தாக்கம் குறைய  வேண்டுமென்றால், அதற்கான ஒரே தீர்வு பழனி முருகனை ஆண்டி கோலத்தில் திங்கட்கிழமை காலை வேளையில் தரிசனம் வழிபாடு பூஜை தானம் தர்மம் அன்னதானம் செய்வதால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் நன்மைகள் பல கிடைக்கும்

 நம்பிக்கையோடு  செய்து நலம் பல பெறுங்கள்.

Friday, April 16, 2021

மனிதனைப் பற்றிய முக்கிய உளவியல் தகவல்.

_*மனிதம் பற்றிய உளவியல் தகவல்*_

_*1.* ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்._ 

_*2.* அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்._ 

_*3.* எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால் யாரையோ 'மிஸ்' பண்றீங்களாம்._

_*4.* குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய்விட்டு சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு ரொம்ப பிடித்தவராவர்._ 

_*5.* நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்._ 

_*6.* உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம்._ 

_*7.* சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்._

_*8.* மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம்._ 

_*9.* முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை._

_*10.* இது கொஞ்சம் சங்கடமான விஷயம் - யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்._ 

_*11.* ஒருவர் ஒரு விசயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால், அதை அவர் செய்திருக்கலாம் என்று
 உளவியல் கூறுகிறது._

_*12.* ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாக போகின்றார்) என்று அர்த்தம்._ 

_*13.* ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். அவர் அந்த பதற்றத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்._  

_*14.* ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விசயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விசயங்களும் காத்திருக்கும்._ 

 _*15.*  ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்._  

_*16.* ஒருவர் அடிக்கடி Mobile phoneயை பார்த்துக் கொண்டிருப்பது or Mobile சத்தம் (Notification tones) கேட்டால் உடனடியாக அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார் என்று அர்த்தம்._

 _*17.* ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6 மணித்தியாளங்கள் (மணிநேரம்) ஆழ்நிலையில் உறங்க வேண்டும் (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது._ 

_*18.* ஒருவர் அதிகமாக  *Negative Thoughts* (முடியாது/கிடைக்காது/இயலாது) பேசுபவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். இவர்களே அதிகம் *Negative Thoughts* பேசுபவராக இருப்பார்._

_மருத்துவர் மலர்விழி_ 
_உளவியல் நிபுணர்_ 
_ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை_ 
_சென்னை_

Thursday, April 15, 2021

அனைத்து விதமான கெட்ட சக்திகளை போக்க காளி கட்டு மந்திரம்.

அனைத்து விதமான கெட்ட சக்திகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரு சுலபமான மந்திரம் தான் காளி கட்டு மந்திரம். உங்களை நீங்களே பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு செல்வதற்கான காளி கட்டு.நம்மை பிடிக்காதவர்கள்,நம்முடைய விரோதிகள், நம் மேல் பொறாமை கொண்டவர்கள், நம்மை அழிப்பதற்காக நம்மேல் ஏவிவிடும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற எதிர்மறை ஆற்றல்கள் யாவும் நம்மை தாக்காமல் இருக்கவும், நம்மையறியாமலேயே நம்மை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள் நம்மை தாக்காமல் இருக்கவும் நம்மை நாமே பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. இப்படி அனைத்து விதமான கெட்ட சக்திகளிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரு சுலபமான மந்திரம்தான் காளி கட்டு மந்திரம். உங்களை நீங்களே பாதுகாப்பு வட்டத்திற்குள் கொண்டு செல்வதற்கான காளி கட்டு மந்திரம் இதோ..

“ஓம் பஹவதி! பைரவி!!
என்னை எதிர்த்து வந்த எதையும் கட்டு,
கடுகென பட்சியை கட்டு, மிருகத்தைகட்டு
ஓம், காளி ஓம், ருத்ரி ஓங்காரி, ஆங்காரி,
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு!
சத்ருவை கட்டு, எதிரியை கட்டு,
எங்கேயும் கட்டு!
சிங் வங் லங் லங்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம”
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா”

இந்த மந்திரத்தை நாம் வெளிப்படையாக உச்சரிக்காமல் நம் ஆழ் மனதுக்குள் பத்து நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். தினந்தோறும் நீங்கள் இதனை தொடர்ந்து செய்துவந்தால் உங்கள் வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றத்தினை உங்களால் அனுபவபூர்வமாக உணர முடியும்.

Wednesday, April 14, 2021

தெரிந்துகொள்வோமா திருமண சடங்குகளும் விளக்கங்களும்.

!!*திருமண சடங்குகளும்,விளக்கமும்*!!
******************************************

நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது செய்யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக
விளக்கம் அளித்துள்ளேன்..,

1.நாட்கால் நடல்:
******************

இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள். பந்தகால் நடுவதற்கு வே ரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நட வேண்டும். மரத்தின் நுனியில் , முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ மூன்றையும் இணைத்து கட்ட வேண்டும். 

பின்பு நட வேண்டிய குழி யில் வெள்ளி நாணயம் , பூ , நவ தானியம் இவற்றை போட்டு போட்டு பந்த கால் நட வேண்டும். சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டும். 

பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும். மாவிலை , நவதானியம் , வெள்ளி நாணயம் , பூ , தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும்.  பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்கமாகும்.

2.பொன்னுருக்குதல்:
***********************

திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும், போற்றி பாதுகாக்க படவேண்டியது ஆகும். நல்ல நாளில், தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் (பொற்கொல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.

3.கலப்பரப்பு:
**************

மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி (தரையில் விரித்து) மணப் பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இரு வீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி (கலம் என்பது பாத்திரம்) ஆகும். பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை (மஞ்சள் கலவை, வெற்றிலை , பாக்கு , தேங்காய் , பழக்கள் பூச்சரம்) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும் .

4.காப்பு கட்டுதல்:
*******************

காப்பு என்பது அரண் போன்றது . மங்களகரமான சக்தி வாய்ந்த
மங்கள உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது. திருஸ்டி மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு காப்புக் கட்டுவதில் இருந்து மறுநாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமான  அனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும். அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.

5.முளைப்பாலிகை :
**********************

நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது. முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வதுபோல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச் சடங்கு . கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம். எனவே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின்றது.

6.தாரை வார்த்தல் :
*********************

தாரை என்றால் நீர் என பொருள் . நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது. இப்படி தெய்வத் தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர். திருமணச்சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல். தாரை வார்த்த பின்பு தான் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான்.

”என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு – மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி . 

எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க , அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை , மணமகனின் கை , மணப்பெண்ணின் கை , மணப்பெண்ணின் தந்தையின் கை , எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை. இந்த வரிசையில் கைகளை வைத்து இச்சடங்கு நடைபெறும்.  உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் எனப்படும்.

7.தாலி கட்டுவது
******************

தாலி என்பது மணமகன், மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும். மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும்.

 தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர், ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்த படியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். 

பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுது
பட்டதால் நிரந்தரமாக இரு க்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.

ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

 (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின்  “மஞ்சள் கயிறு கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது. தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர்.ஆனால் அது தவறாகும். பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்.

பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என் று கூறப்பட்டுள்ளது.

மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும். ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை குறிக்கிறது.

தெய்வீககுணம், தூய்மையான குணம், மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே, ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியபடுகிறது.

8. ஹோமம் வளர்த்தல் :
**************************

வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும். ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும். ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது. ஹோமப்புகை உடலுக்கு ம், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாகும் .

9.கும்பம் வைத்தல் :
**********************

கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம். இறைவனது திருமேனி , கும்பத்தில் பாவிக்கப்படும்.
கும்பவஸ்திரம்——- உடம்பின் தோல்
நூல்———————— நாட நரம்புகள்
குடம் —————————— தசை
தண்ணீர் ————————– இரத்தம்
நவரத்தனங்கள் —————— எலும்பு
தேங்காய் ————————- தலை
மாவிலை ——————– தலைமயிர்
தருப்பை ————————- குடுமி
மந்திரம் ————————– உயிர்
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.

10.அம்மி மிதித்தல் :
**********************

அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செயவதற்கு பயன்படும், பொருட்களை அரைப்பதற்கு பயன்படும் கருவியாகும். அம்மி மிக உறுதியுடனும், ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும். திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமியார், நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும், மன உறுதியுடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும்.

11.அருந்ததி பார்த்தல் :
*************************

அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் அவர்களின் மனைவியாவார். ஏழு ரிஷிகளும், வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள். இதைத் தான் நாம் துருவ நட்சத்திரம் என்கிறோம். ஏழு நட்சத்திரங்களில், ஆறாவதாக (நட்சத்திரம்) இருப்பவர் வசிஷ்டர் ஆவார். இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.

இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால், சப்த ரிஷி மண்டலத்தை காணலாம். ஆறாவது நட்சத்திரமாக ஒளி வீசும் வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும் பார்க்கலாம். மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா, ஊர்வசி, மேனகை இவர்களிடம் சபலபட்டவர்கள். அதேபோல் அவர்களுடைய மனைவிகளும்,  இந்திரனனின் மேல் சபலப்பட்டவர்கள்.

ஆனால் வசிஷ்டரும், மனைவியும் ஒன்று சேர்ந்து, மற்றவர்களின் மீது எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள். அருந்ததி நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும், நம் கண்களுக்கு ஒரே நட்சத்திரமாக தெரிகிறது.

அதேபோல் மணமக்கம் இருவராக இருந்தாலும், எண்ணங்களும், சிந்தனைகளும் ஒன்றாக இருக்கவேண்டும். மணமகளும் அருந்ததியை போல் கண்ணியமாகவும், கட்டுபாட்டுடன் வாழ வேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்க சொல்கிறார்கள்.

12.ஏற்றி இறக்குதல் :
***********************

மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலிகள் மங்கலப் பொருட்களை (திருவிளக்கு , நிறைநாழி , சந்தனக்கும்பம், பன்னீர்ச் செம்பு , தேங்காய் , பழம் , குங்குமச்சிமிழ் , மஞ்சள் பிள்ளையார் போன்றவை) தொட்டுச் செய்யும் சடங்கு. மேலும் அருவ நிலையிலிருந்து மணமக்களை ஆசிர்வதிக்கும் தெய்வங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் , முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப்படுவதும் உண்டு.

13. அடை பொரி :
*******************

பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும் பல உருவத்தைக் கட்டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும் , திருமண நிகழ்வுகளால் ஏற்படும் பல்வேறு திருஸ்டி தோஸங்களை நீக்க வல்லது. இது அட்டத்திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம் ஆகும்.

14. நிறை நாழி :
******************

நித்தமும் குத்து விளக்கு என்று சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது ஐதீகம் ஆகும்.

15.ஒலுசை :
**************

ஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர். மணமகள் அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி. 

சிறப்பான இல்லற வாழ்விற்கு அத்தியாவசியமான பொருட்களை பொறுப்புணர்ச்சியுடன் பெண் வீட்டார் கொடுப்பது. ஒலுசைப் பொருட்களைப் பட்டியலிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந் து வருகிறது . இது வரவேற்க்க தக்க விசயமாகும்.

16.மணமகள் பொங்கலிடுதல் :
**********************************

முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த இறைவனுக் கும் , முன்னோர்களுக்கும் சூரியன் முதலான் தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும். 

மணமகள் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்பதைக் வெளிப்படுத்துவது. புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது.

 இதுதான் மணப்பெண்ணின் முதல் சமையல். இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும் என்பதற்கான அறிகுறியே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.

17. பிள்ளை மாற்றுவது :
***************************

எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச்சாரம். இனியும் நீங்கள் பச்சைக் குழந்தைகள் அல்ல என்பதை மணமக்களுக்கு உணர்த்தும் செயல்வடிவ உபதேசம். 

பிறக்கப் போகும் குழ்ந்தைகள் நல்ல முறையில் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒரு சேர வாழ்த்துவது. 

திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு ”மங்கலமென்ப மனைமாட்சி மற்று அதன் நஙலம் நன்மக்கட்பேறு “ – திருவள்ளுவரின் வாக்காகும்.  நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு .

18. மறுவீடு :
**************

மணமகளின் பெற்றோரும் – உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று – விருந்துண்டு மகிழ்ந்து – உறவை வலுப்படுத்துவது.

ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும் , புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச் செய்வதே – ம்றுவீடு ஆகும்.

19கோவிலுக்கு அழைத்துச் செல்லல் :
*****************************************

நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும். வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலுக்கு அழைதுச் செல்ல வேணடும்.

                       -

Monday, April 12, 2021

திருமணம் குழந்தை வரம் தரும் வக்ரகாளியம்மன்.

🙏🏼🔱#திருமணம்_குழந்தை_வரம்_தரும்_வக்கிரகாளியம்மன🙏🏼🔱

🔱தொண்டை நாட்டிலுள்ள 32சிவத்தலங்களுள் 30வது தலமாகவும் 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதும் சமயக்குறவர் நால்வரில் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற சிறப்புடைய திருத்தலமாக விளங்குகிறது திருவக்கரை ஸ்ரீசந்திரமெளலீஸ்வரர் மற்றும் வக்கிரகாளியம்மன் கோயில். 

🔱விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரை கிராமத்தில் வராக நதி என்றழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் 10 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 

🐎ஆதித்யசோழன் என்னும் சோழ மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலை கட்டி உள்ளான். 

🔱இங்கு இறைவன் சந்திரமெளலீஸ்வரர் கிழக்கு நோக்கி மூன்றுமுக லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

🔱#இது_எங்கும் காணமுடியாத காட்சி.

 
ராஜகோபுர வழியாக நுழைந்தவுடன் வக்கிரகாளியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 

பொதுவாக காளிகோயில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். 

ஆனால் ஊரின் நடுவே ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகேவக்கிரகாளியம்மன் அமைந்துள்ளது இங்கு மட்டும்தான்.  

🔱வக்கிராசூரன் என்னும் அரக்கன் சிவபெருமானை தனது கண்டத்தில் வைத்து பூஜை செய்தான். 

#தனது தவ வலிமையினால் தன் முன் தோன்றிய சிவபெருமானிடம் சாகா வரம் பெற்றான். 

தான் பெற்ற வரத்தைகொண்டு தேவர் முதலானவர்களை கொடுமை செய்துவந்தான்.

அவன் செய்த கொடுமைகளை தாங்கமுடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். 

🔱சிவபெருமான் வைகுண்ட வாசனான மகாவிஷ்ணுவை அழைத்து வக்கிராசூரனை வதம் செய்யும்படி கூறினார். 

அவரும் சிவபெருமானின் வார்த்தையை கேட்டு மகாவிஷ்ணு வக்கிராசூரனிடம் போரிட்டு தனது ஸ்ரீசக்கரத்தை பிரயோகம் செய்து அரக்கனை அழித்தார்.

#இங்கு_மகாவிஷ்ணு வரதராஜபெருமாளாக கோயிலின் பின்புறத்தில் மேற்குநோக்கி சங்கு சக்கரத்துடன் ஆறடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். 

வக்கிராசூரன் மறைவுக்கு பிறகு அவனின் தங்கையான துன்முகி தன் சகோதரனைப்போலவே கொடுஞ்செயல் புரிந்துவந்தாள். 

அவளைவதம் செய்யும்படி சிவபெருமான் பார்வதியிடம் கூற பார்வதிதேவியும் அரக்கி துன்முகியை வதம்செய்ய சென்றார். 

அப்பொழுது துன்முகி கருவுற்றிருந்தாள். 

சாஸ்திர முறைப்படி கர்ப்பிணியையோ, சிசுவையோ வதம் செய்யக்கூடாது. 

🔱#எனவே_அகிலாண்ட_நாயகியான_பார்வதிதேவி துன்முகியின் வயிற்றைக்கிழித்து அவள் வயிற்றிலிருந்த சிசுவை தனது வலது காதில் குண்டலமாக அணிந்துகொண்டு, பின்புஅரக்கியான துன்முகியை வதம் செய்தாள். 

வக்கிராசூரனின் தங்கையை அழித்ததனால் வக்கிரகாளியாக அங்கேயே அமர்ந்துவிட்டாள். 

அவள் பெயராலேயே இந்த ஊர் திருவக்கரை என்று அழைக்கப்படுகிறது.

#தோஷம்_நீக்கும் பிரார்த்தனை:

வக்கிரமாக அமையப்பெற்ற கிரகங்களால் பல்வேறு பாதிப்புக்கு ஆளானவர்கள் இத்தலத்தில் வக்கிரமாக அமையப்பெற்ற தெய்வங்களை வழிபட்டு, வக்கிரமான கட்டுப்பட்டுள்ள இக்கோயிலை வலம் வந்தால் துன்பங்கள் நீங்க பெற்று வளமான வாழ்வு பெறுவார்கள். இது வக்கிரதோஷ நிவர்த்தி தலமாகும்.

🔱#திருமண_தோஷம்:

திருமணமாகாதவர்கள், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இந்த கோயிலில் உள்ள துர்க்கை அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இராகு காலத்தில் பூஜை செய்துவந்தால் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை, 

நினைத்த காரியம் கைகூடபௌர்ணமி தினத்தன்று வக்கிரகாளியம்மனை தொடர்ந்து 3 மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்து வந்தால் எண்ணிய காரியம் கைகூடும். 

அதனாலேயே பௌர்ணமி அன்று இரவு 12.00 மணிக்கு நடைபெறும் ஜோதி தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 

தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாது கர்நாடகம், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

இந்த திருக்கோயிலில் தனியாக அமைந்துள்ள தீபலட்சுமியின் கோயிலில் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இராகு காலத்தில் விளக்கேற்றி அம்மனை கும்பிட்டு, மாங்கல்யம் கட்டி பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

இந்த அண்டசராசரத்தில் சுழன்று கொண்டிருக்கிற ஒன்பது கிரகங்களுக்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. 

அதன்படி ராகு, கேது இரண்டிற்கும் அதிதேவதை காளி. 

எனவே இந்தகோயிலை வலம் வர நினைப்பவர்கள் வலதுபக்கமாக 5 முறையும், இடது பக்கமாக 4 முறையும் வலம் வந்து தொழுது வணங்கவேண்டும். 

🙏🏼#குண்டலினி_சித்தர்_சன்னதி:
 
கருவறைக்கு தென்திசையில் குண்டலினி மாமுனிவர் என்னும் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. 

தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மயிலம், இரும்பை, திருவக்கரை ஆகிய ஊர்களில் இவ்வகை கோயில்கள் உள்ளன. 

சித்தர்கள் இறைவழிபாட்டில் நமக்கு குருவாக விளங்குபவர்கள். 

அத்தகைய பெருமைமிக்க சித்தர்களில் ஒருவரின் ஜீவசமாதி இந்த கோயிலில் அமைந்துள்ளது சிறப்பு.்🙏🏼

Saturday, April 10, 2021

பணம் எப்பொழுதும் வந்து கொண்டிருக்க செய்ய வேண்டிய பரிகாரம்.

*செல்வம்* பெருகி நிலைக்க சித்தர்களால் எழுதப்பட்ட  தந்திர நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்கள்.:
                                    
1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ  அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.

2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். 

3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.

4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).

5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.

6. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.

7. மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும். 
( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).

8.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.

9. பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.

10. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.

11. குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.

12. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.

13. கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.

14. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.

15. வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.

16. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.

17. சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.

Friday, April 9, 2021

சிவனின் ஆயிரம் பெயர்கள் தெரியுமா?

சிவனின் 1000 தமிழ் பெயர்கள்.

இப்பதிவினை மேலோட்டமாக பார்த்து வெளியேறாதீர்கள்.  ஓருமுறையேனும் இந்த 1000 நாமங்களை உரக்க உச்சரியுங்களேன்.

பலன்.........நிச்சயம் மனஅமைதி கிட்டும்.

Adaikkalam Kaththan - அடைக்கலம் காத்தான்  
Adaivarkkamudhan - அடைவார்க்கமுதன்  
Adaivorkkiniyan - அடைவோர்க்கினியன்  
Adalarasan - ஆடலரசன்  
Adalazagan - ஆடலழகன்  
Adalerran - அடலேற்றன்  
Adalvallan - ஆடல்வல்லான்  
Adalvidaippagan - அடல்விடைப்பாகன்  
Adalvidaiyan - அடல்விடையான்  
Adangakkolvan - அடங்கக்கொள்வான்  
Adarchadaiyan - அடர்ச்சடையன்  
Adarko - ஆடற்கோ  
Adhaladaiyan - அதலாடையன்  
Adhi - ஆதி  
Adhibagavan - ஆதிபகவன்  
Adhipuranan - ஆதிபுராணன்  
Adhiraiyan - ஆதிரையன்  
Adhirthudiyan - அதிர்துடியன்  
Adhirunkazalon - அதிருங்கழலோன்  
Adhiyannal - ஆதியண்ணல்  
Adikal - அடிகள்  
Adiyarkkiniyan - அடியார்க்கினியான்  
Adiyarkkunallan - அடியார்க்குநல்லான்  
Adumnathan - ஆடும்நாதன்  
Agamabodhan - ஆகமபோதன்  
Agamamanon - ஆகமமானோன்  
Agamanathan - ஆகமநாதன்  
Aimmukan - ஐம்முகன்  
Aindhadi - ஐந்தாடி  
Aindhukandhan - ஐந்துகந்தான்  
Ainniraththannal - ஐந்நிறத்தண்ணல்  
Ainthalaiyaravan - *ஐந்தலையரவன்  
Ainthozilon - ஐந்தொழிலோன்  
Aivannan - ஐவண்ணன்  
Aiyamerpan - ஐயமேற்பான்  
Aiyan - ஐயன்  
Aiyar - ஐயர்  
Aiyaranindhan - ஐயாறணிந்தான்  
Aiyarrannal - ஐயாற்றண்ணல்  
Aiyarrarasu - ஐயாற்றரசு  
Akandan - அகண்டன்  
Akilankadandhan - அகிலங்கடந்தான்  
Alagaiyanrozan - அளகையன்றோழன்  
Alakantan - ஆலகண்டன்  
Alalamundan - ஆலாலமுண்டான்  
Alamarchelvan - ஆலமர்செல்வன்  
Alamardhevan - ஆலமர்தேன்  
Alamarpiran - ஆலமர்பிரான்  
Alamidarran - ஆலமிடற்றான்  
Alamundan - ஆலமுண்டான்  
Alan - ஆலன்  
Alaniizalan - ஆலநீழலான்  
Alanthurainathan - ஆலந்துறைநாதன்  
Alappariyan - அளப்பரியான்  
Alaramuraiththon - ஆலறமுறைத்தோன்  
Alavayadhi - ஆலவாய்ஆதி  
Alavayannal - ஆலவாயண்ணல்  
Alavilan - அளவிலான்  
Alavili - அளவிலி  
Alavilpemman - ஆலவில்பெம்மான்  
Aliyan - அளியான்  
Alnizarkadavul - ஆல்நிழற்கடவுள்  
Alnizarkuravan - ஆல்நிழற்குரவன்  
Aluraiadhi - ஆலுறைஆதி  
Amaivu - அமைவு  
Amaiyanindhan - ஆமையணிந்தன்  
Amaiyaran - ஆமையாரன்  
Amaiyottinan - ஆமையோட்டினன்  
Amalan - அமலன்  
Amararko - அமரர்கோ  
Amararkon - அமரர்கோன்  
Ambalakkuththan - அம்பலக்கூத்தன்  
Ambalaththiisan - அம்பலத்தீசன்  
Ambalavan - அம்பலவான்  
Ambalavanan - அம்பலவாணன்  
Ammai - அம்மை  
Amman - அம்மான்  
Amudhan - அமுதன்  
Amudhiivallal - அமுதீவள்ளல்  
Anaiyar - ஆனையார்  
Anaiyuriyan - ஆனையுரியன்  
Anakan - அனகன்  
Analadi - அனலாடி  
Analendhi - அனலேந்தி  
Analuruvan - அனலுருவன்  
Analviziyan - அனல்விழியன்  
Anandhakkuththan - ஆனந்தக்கூத்தன்  
Anandhan - ஆனந்தன்  
Anangkan - அணங்கன்  
Ananguraipangan - அணங்குறைபங்கன்  
Anarchadaiyan - அனற்சடையன்  
Anarkaiyan - அனற்கையன்  
Anarrun - அனற்றூண்  
Anathi - அனாதி  
Anay - ஆனாய்  
Anban - அன்பன்  
Anbarkkanban - அன்பர்க்கன்பன்  
Anbudaiyan - அன்புடையான்  
Anbusivam - அன்புசிவம்  
Andakai - ஆண்டகை  
Andamurththi - அண்டமூர்த்தி  
Andan - அண்டன்  
Andan - ஆண்டான்  
Andavan - ஆண்டவன்  
Andavanan - அண்டவாணன்  
Andhamillariyan - அந்தமில்லாரியன்  
Andhivannan - அந்திவண்ணன்  
Anekan - அனேகன்/அநேகன்  
Angkanan - அங்கணன்  
Anip Pon - ஆணிப் பொன்  
Aniyan - அணியன்  
Anna - அண்ணா  
Annai - அன்னை  
Annamalai - அண்ணாமலை  
Annamkanan - அன்னம்காணான்  
Annal - அண்ணல்  
Anthamillan - அந்தமில்லான்  
Anthamilli - அந்தமில்லி  
Anthanan - அந்தணன்  
Anthiran - அந்திரன்  
Anu - அணு  
Anychadaiyan - அஞ்சடையன்  
Anychadiyappan - அஞ்சாடியப்பன்  
Anychaikkalaththappan - அஞ்சைக்களத்தப்பன்  
Anychaiyappan - அஞ்சையப்பன்  
Anychezuththan - அஞ்செழுத்தன்  
Anychezuththu - அஞ்செழுத்து  
Appanar - அப்பனார்  
Araamuthu - ஆராஅமுது  
Aradharanilayan - ஆறாதாரநிலயன்  
Araiyaniyappan - அறையணியப்பன்  
Arakkan - அறக்கண்  
Arakkodiyon - அறக்கொடியோன்  
Aran - அரன்  
Aranan - ஆரணன்  
Araneri - அறநெறி  
Aranivon - ஆறணிவோன்  
Araravan - ஆரரவன்  
Arasu - அரசு  
Araththurainathan - அரத்துறைநாதன்  
Aravachaiththan - அரவசைத்தான்  
Aravadi - அரவாடி  
Aravamudhan - ஆராவமுதன்  
Aravan - அறவன்  
Aravaniyan - அரவணியன்  
Aravanychudi - அரவஞ்சூடி  
Aravaraiyan - அரவரையன்  
Aravarcheviyan - அரவார்செவியன்  
Aravaththolvalaiyan - அரவத்தோள்வளையன்  
Aravaziandhanan - அறவாழிஅந்தணன்  
Aravendhi - அரவேந்தி  
Aravidaiyan - அறவிடையான்  
Arazagan - ஆரழகன்  
Arccithan - அர்ச்சிதன்  
Archadaiyan - ஆர்சடையன்  
Areruchadaiyan - ஆறேறுச்சடையன்  
Areruchenniyan - ஆறேறுச்சென்னியன்  
Arikkumariyan - அரிக்குமரியான்  
Arivaipangan - அரிவைபங்கன்  
Arivan - அறிவன்  
Arivu - அறிவு  
Arivukkariyon - அறிவுக்கரியோன்  
Ariya Ariyon - அரியஅரியோன்  
Ariya Ariyon - அறியஅரியோன்  
Ariyan - ஆரியன்  
Ariyan - அரியான்  
Ariyasivam - அரியசிவம்  
Ariyavar - அரியவர்  
Ariyayarkkariyan - அரியயற்க்கரியன்  
Ariyorukuran - அரியோருகூறன்  
Arpudhak Kuththan - அற்புதக்கூத்தன்  
Arpudhan - அற்புதன்  
Aru - அரு  
Arul - அருள்  
Arulalan - அருளாளன்  
Arulannal - அருளண்ணல்  
Arulchodhi - அருள்சோதி  
Arulirai - அருளிறை  
Arulvallal - அருள்வள்ளல்  
Arulvallal Nathan - அருள்வள்ளல்நாதன்  
Arulvallan - அருள்வல்லான்  
Arumalaruraivan - அறுமலருறைவான்  
Arumani - அருமணி  
Arumporul - அரும்பொருள்  
Arunmalai - அருண்மலை  
Arunthunai - அருந்துணை  
Aruran - ஆரூரன்  
Arurchadaiyan - ஆறூர்ச்சடையன்  
Arurmudiyan - ஆறூர்முடியன்  
Arut Kuththan - அருட்கூத்தன்  
Arutchelvan - அருட்செல்வன்  
Arutchudar - அருட்சுடர்  
Aruththan - அருத்தன்  
Arutperunychodhi - அருட்பெருஞ்சோதி  
Arutpizambu - அருட்பிழம்பு  
Aruvan - அருவன்  
Aruvuruvan - அருவுருவன்  
Arvan - ஆர்வன்  
Athikunan - அதிகுணன்  
Athimurththi - ஆதிமூர்த்தி  
Athinathan - ஆதிநாதன்  
Athipiran - ஆதிபிரான்  
Athisayan - அதிசயன்  
Aththan - அத்தன்  
Aththan - ஆத்தன்  
Aththichudi - ஆத்திச்சூடி  
Atkondan - ஆட்கொண்டான்  
Attugappan - ஆட்டுகப்பான்  
Attamurthy - அட்டமூர்த்தி  
Avanimuzudhudaiyan - அவனிமுழுதுடையான்  
Avinasi - அவிநாசி  
Avinasiyappan - அவிநாசியப்பன்  
Avirchadaiyan - அவிர்ச்சடையன்  
Ayavandhinathan - அயவந்திநாதன்  
Ayirchulan - அயிற்சூலன்  
Ayizaiyanban - ஆயிழையன்பன்  
Azagukadhalan - அழகுகாதலன்  
Azakan - அழகன்  
Azal Vannan - அழல்வண்ணன்  
Azalarchadaiyan - அழலார்ச்சடையன்  
Azalmeni - அழல்மேனி  
Azarkannan - அழற்கண்ணன்  
Azarkuri - அழற்குறி  
Azicheydhon - ஆழிசெய்தோன்  
Azi Indhan - ஆழி ஈந்தான்  
Azivallal - ஆழிவள்ளல்  
Azivilan - அழிவிலான்  
Aziyan - ஆழியான்  
Aziyar - ஆழியர்  
Aziyarulndhan - ஆழியருள்ந்தான்  
Bagampennan - பாகம்பெண்ணன்  
Bagampenkondon - பாகம்பெண்கொண்டோன்  
Budhappadaiyan - பூதப்படையன்  
Budhavaninathan - பூதவணிநாதன்  
Buvan - புவன்  
Buvanankadandholi - புவனங்கடந்தொளி  
Chadaimudiyan - சடைமுடியன்  
Chadaiyan - சடையன்  
Chadaiyandi - சடையாண்டி  
Chadaiyappan - சடையப்பன்  
Chalamanivan - சலமணிவான்  
Chalamarchadaiyan - சலமார்சடையன்  
Chalanthalaiyan - சலந்தலையான்  
Chalanychadaiyan - சலஞ்சடையான்  
Chalanychudi - சலஞ்சூடி  
Chandhavenpodiyan - சந்தவெண்பொடியன்  
Changarthodan - சங்கார்தோடன்  
Changarulnathan - சங்கருள்நாதன்  
Chandramouli - சந்ரமௌலி  
Chargunanathan - சற்குணநாதன்  
Chattainathan - சட்டைநாதன்  
Chattaiyappan - சட்டையப்பன்  
Chekkarmeni - செக்கர்மேனி  
Chemmeni - செம்மேனி  
Chemmeni Nathan - செம்மேனிநாதன்  
Chemmeniniirran - செம்மேனிநீற்றன்  
Chemmeniyamman - செம்மேனியம்மான்  
Chempavalan - செம்பவளன்  
Chemporchodhi - செம்பொற்சோதி  
Chemporriyagan - செம்பொற்றியாகன்  
Chemporul - செம்பொருள்  
Chengkankadavul - செங்கன்கடவுள்  
Chenneriyappan - செந்நெறியப்பன்  
Chenychadaiyan - செஞ்சடையன்  
Chenychadaiyappan - செஞ்சடையப்பன்  
Chenychudarchchadaiyan - செஞ்சுடர்ச்சடையன்  
Cherakkaiyan - சேராக்கையன்  
Chetchiyan - சேட்சியன்  
Cheyizaibagan - சேயிழைபாகன்  
Cheyizaipangan - சேயிழைபங்கன்  
Cheyyachadaiyan - செய்யச்சடையன்  
Chirrambalavanan - சிற்றம்பலவாணன்  
Chiththanathan - சித்தநாதன்  
Chittan - சிட்டன்  
Chivan - சிவன்  
Chodhi - சோதி  
Chodhikkuri - சோதிக்குறி  
Chodhivadivu - சோதிவடிவு  
Chodhiyan - சோதியன்  
Chokkalingam - சொக்கலிங்கம்  
Chokkan - சொக்கன்  
Chokkanathan - சொக்கநாதன்  
Cholladangan - சொல்லடங்கன்  
Chollarkariyan - சொல்லற்கரியான்  
Chollarkiniyan - சொல்லற்கினியான்  
Chopura Nathan - சோபுரநாதன்  
Chudalaippodipusi - சுடலைப்பொடிபூசி  
Chudalaiyadi - சுடலையாடி  
Chudar - சுடர்  
Chudaramaimeni - சுடரமைமேனி  
Chudaranaiyan - சுடரனையான்  
Chudarchadaiyan - சுடர்ச்சடையன்  
Chudarendhi - சுடரேந்தி  
Chudarkkannan - சுடர்க்கண்ணன்  
Chudarkkozundhu - சுடர்க்கொழுந்து  
Chudarkuri - சுடற்குறி  
Chudarmeni - சுடர்மேனி  
Chudarnayanan - சுடர்நயனன்  
Chudaroli - சுடரொளி  
Chudarviduchodhi - சுடர்விடுச்சோதி  
Chudarviziyan - சுடர்விழியன்  
Chulaithiirththan - சூலைதீர்த்தான்  
Chulamaraiyan - சூலமாரையன்  
Chulappadaiyan - சூலப்படையன்  
Dhanu - தாணு  
Dhevadhevan - தேவதேவன்  
Dhevan - தேவன்  
Edakanathan - ஏடகநாதன்  
Eduththapadham - எடுத்தபாதம்  
Ekamban - ஏகம்பன்  
Ekapathar - ஏகபாதர்  
Eliyasivam - எளியசிவம்  
Ellaiyiladhan - எல்லையிலாதான்  
Ellamunarndhon - எல்லாமுணர்ந்தோன்  
Ellorkkumiisan - எல்லோர்க்குமீசன்  
Emperuman - எம்பெருமான்  
Enakkomban - ஏனக்கொம்பன்  
Enanganan - ஏனங்காணான்  
Enaththeyiran - ஏனத்தெயிறான்  
Enavenmaruppan - ஏனவெண்மருப்பன்  
Engunan - எண்குணன்  
Enmalarchudi - எண்மலர்சூடி  
Ennaththunaiyirai - எண்ணத்துனையிறை  
Ennattavarkkumirai - எந்நாட்டவர்க்குமிறை  
Ennuraivan - எண்ணுறைவன்  
Ennuyir - என்னுயிர்  
Enrumezilan - என்றுமெழிலான்  
Enthai - எந்தை  
Enthay - எந்தாய்  
En Tholar - எண் தோளர்  
Entolan - எண்டோளன்  
Entolavan - எண்டோளவன்  
Entoloruvan - எண்டோளொருவன்  
Eramarkodiyan - ஏறமர்கொடியன்  
Ereri - ஏறெறி  
Eripolmeni - எரிபோல்மேனி  
Eriyadi - எரியாடி  
Eriyendhi - எரியேந்தி  
Erran - ஏற்றன்  
Erudaiiisan - ஏறுடைஈசன்  
Erudaiyan - ஏறுடையான்  
Erudheri - எருதேறி  
Erudhurvan - எருதூர்வான்  
Erumbiisan - எரும்பீசன்  
Erurkodiyon - ஏறூர்கொடியோன்  
Eruyarththan - ஏறுயர்த்தான்  
Eyilattan - எயிலட்டான்  
Eyilmunreriththan - எயில்மூன்றெரித்தான்  
Ezhaipagaththan - ஏழைபாகத்தான்  
Ezukadhirmeni - எழுகதிமேனி  
Ezulakali - ஏழுலகாளி  
Ezuththari Nathan - எழுத்தறிநாதன்  
Gangaichchadiayan - கங்கைச்சடையன்  
Gangaiyanjchenniyan - கங்கையஞ்சென்னியான்  
Gangaichudi - கங்கைசூடி  
Gangaivarchadaiyan - கங்கைவார்ச்சடையன்  
Gnanakkan - ஞானக்கண்  
Gnanakkozunthu - ஞானக்கொழுந்து  
Gnanamurththi - ஞானமூர்த்தி  
Gnanan - ஞானன்  
Gnananayakan - ஞானநாயகன்  
Guru - குரு  
Gurumamani - குருமாமணி  
Gurumani - குருமணி  
Idabamurvan - இடபமூர்வான்  
Idaimarudhan - இடைமருதன்  
Idaiyarrisan - இடையாற்றீசன்  
Idaththumaiyan - இடத்துமையான்  
Ichan - ஈசன்  
Idili - ஈடிலி  
Iirottinan - ஈரோட்டினன்  
Iisan - ஈசன்  
Ilakkanan - இலக்கணன்  
Ilamadhichudi - இளமதிசூடி  
Ilampiraiyan - இளம்பிறையன்  
Ilangumazuvan - இலங்குமழுவன்  
Illan - இல்லான்  
Imaiyalkon - இமையாள்கோன்  
Imaiyavarkon - இமையவர்கோன்  
Inaiyili - இணையிலி  
Inamani - இனமணி  
Inban - இன்பன்  
Inbaniingan - இன்பநீங்கான்  
Indhusekaran - இந்துசேகரன்  
Indhuvaz Chadaiyan - இந்துவாழ்சடையன்  
Iniyan - இனியன்  
Iniyan - இனியான்  
Iniyasivam - இனியசிவம்  
Irai - இறை  
Iraivan - இறைவன்  
Iraiyan - இறையான்  
Iraiyanar - இறையனார்  
Iramanathan - இராமநாதன்  
Irappili - இறப்பிலி  
Irasasingkam - இராசசிங்கம்  
Iravadi - இரவாடி  
Iraviviziyan - இரவிவிழியன்  
Irilan - ஈறிலான் -  
Iruvareththuru - இருவரேத்துரு  
Iruvarthettinan - இருவர்தேட்டினன்  
Isaipadi - இசைபாடி  
Ittan - இட்டன்  
Iyalbazagan - இயல்பழகன்  
Iyamanan - இயமானன்  
Kadaimudinathan - கடைமுடிநாதன்  
Kadalvidamundan - கடல்விடமுண்டான்  
Kadamba Vanaththirai - கடம்பவனத்திறை  
Kadavul - கடவுள்  
Kadhir Nayanan - கதிர்நயனன்  
Kadhirkkannan - கதிர்க்கண்ணன்  
Kaichchinanathan - கைச்சினநாதன்  
Kalabayiravan - காலபயிரவன்  
Kalai - காளை  
Kalaikan - களைகண்  
Kalaippozudhannan - காலைப்பொழுதன்னன்  
Kalaiyan - கலையான்  
Kalaiyappan - காளையப்பன்  
Kalakalan - காலகாலன்  
Kalakandan - காளகண்டன்  
Kalarmulainathan - களர்முளைநாதன்  
Kalirruriyan - களிற்றுரியன்  
Kalirrurivaipporvaiyan - களிற்றுரிவைப்போர்வையான்  
Kallalnizalan - கல்லால்நிழலான்  
Kalvan - கள்வன்  
Kamakopan - காமகோபன்  
Kamalapathan - கமலபாதன்  
Kamarkayndhan - காமற்காய்ந்தான்  
Kanaladi - கனலாடி  
Kanalarchadaiyan - கனலார்ச்சடையன்  
Kanalendhi - கனலேந்தி  
Kanalmeni - கனல்மேனி  
Kanalviziyan - கனல்விழியன்  
Kananathan - கணநாதன்  
Kanarchadaiyan - கனற்ச்சடையன்  
Kanchumandhanerriyan - கண்சுமந்தநெற்றியன்  
Kandan - கண்டன்  
Kandthanarthathai - கந்தனார்தாதை  
Kandikaiyan - கண்டிகையன்  
Kandikkazuththan - கண்டிக்கழுத்தன்  
Kangkalar - கங்காளர்  
Kangkanayakan - கங்காநாயகன்  
Kani - கனி  
Kanichchivanavan - கணிச்சிவாணவன்  
Kanmalarkondan - கண்மலர்கொண்டான்  
Kanna - கண்ணா  
Kannalan - கண்ணாளன்  
Kannayiranathan - கண்ணாயிரநாதன்  
Kannazalan - கண்ணழலான்  
Kannudhal - கண்ணுதல்  
Kannudhalan - கண்ணுதலான்  
Kantankaraiyan - கண்டங்கறையன்  
Kantankaruththan - கண்டங்கருத்தான்  
Kapalakkuththan - காபாலக்கூத்தன்  
Kapali - கபாலி  
Kapali - காபாலி  
Karaikkantan - கறைக்கண்டன்  
Karaimidarran - கறைமிடற்றன்  
Karaimidarrannal - கறைமிடற்றண்ணல்  
Karanan - காரணன்  
Karandthaichchudi - கரந்தைச்சூடி  
Karaviiranathan - கரவீரநாதன்  
Kariyadaiyan - கரியாடையன்  
Kariyuriyan - கரியுரியன்  
Karpaganathan - கற்பகநாதன்  
Karpakam - கற்பகம்  
Karraichchadaiyan - கற்றைச்சடையன்  
Karraivarchchadaiyan - கற்றைவார்ச்சடையான்  
Karumidarran - கருமிடற்றான்  
Karuththamanikandar - கறுத்தமணிகண்டர்  
Karuththan - கருத்தன்  
Karuththan - கருத்தான்  
Karuvan - கருவன்  
Kathalan - காதலன்  
Kattangkan - கட்டங்கன்  
Kavalalan - காவலாளன்  
Kavalan - காவலன்  
Kayilainathan - கயிலைநாதன்  
Kayilaikkizavan - கயிலைக்கிழவன்  
Kayilaimalaiyan - கயிலைமலையான்  
Kayilaimannan - கயிலைமன்னன்  
Kayilaippadhiyan - கயிலைப்பதியன்  
Kayilaipperuman - கயிலைபெருமான்  
Kayilaivendhan - கயிலைவேந்தன்  
Kayilaiyamarvan - கயிலையமர்வான்  
Kayilaiyan - கயிலையன்  
Kayilaiyan - கயிலையான்  
Kayilayamudaiyan - கயிலாயமுடையான்  
Kayilayanathan - கயிலாயநாதன்  
Kazarchelvan - கழற்செல்வன்  
Kedili - கேடிலி  
Kediliyappan - கேடிலியப்பன்  
Kezalmaruppan - கேழல்மறுப்பன்  
Kezarkomban - கேழற்கொம்பன்  
Kiirranivan - கீற்றணிவான்  
Ko - கோ  
Kodika Iishvaran - கோடிக்காஈச்வரன்  
Kodikkuzagan - கோடிக்குழகன்  
Kodukotti - கொடுகொட்டி  
Kodumudinathan - கொடுமுடிநாதன்  
Kodunkunrisan - கொடுங்குன்றீசன்  
Kokazinathan - கோகழிநாதன்  
Kokkaraiyan - கொக்கரையன்  
Kokkiragan - கொக்கிறகன்  
Kolachchadaiyan - கோலச்சடையன்  
Kolamidarran - கோலமிடற்றன்  
Koliliyappan - கோளிலியப்பன்  
Komakan - கோமகன்  
Koman - கோமான்  
Kombanimarban - கொம்பணிமார்பன்  
Kon - கோன்  
Konraialangkalan - கொன்றை அலங்கலான்  
Konraichudi - கொன்றைசூடி  
Konraiththaron - கொன்றைத்தாரோன்  
Konraivendhan - கொன்றைவேந்தன்  
Korravan - கொற்றவன்  
Kozundhu - கொழுந்து  
Kozundhunathan - கொழுந்துநாதன்  
Kudamuzavan - குடமுழவன்  
Kudarkadavul - கூடற்கடவுள்  
Kuduvadaththan - கூடுவடத்தன்  
Kulaivanangunathan - குலைவணங்குநாதன்  
Kulavan - குலவான்  
Kumaran - குமரன்  
Kumaranradhai - குமரன்றாதை  
Kunakkadal - குணக்கடல்  
Kunarpiraiyan - கூனற்பிறையன்  
Kundalachcheviyan - குண்டலச்செவியன்  
Kunra Ezilaan - குன்றாஎழிலான்  
Kupilan - குபிலன்  
Kuravan - குரவன்  
Kuri - குறி  
Kuriyilkuriyan - குறியில்குறியன்  
Kuriyilkuththan - குறியில்கூத்தன்  
Kuriyuruvan - குறியுருவன்  
Kurram Poruththa Nathan - குற்றம்பொருத்தநாதன்  
Kurran^Kadindhan - கூற்றங்கடிந்தான்  
Kurran^Kayndhan - கூற்றங்காய்ந்தான்  
Kurran^Kumaiththan - கூற்றங்குமத்தான்  
Kurrudhaiththan - கூற்றுதைத்தான்  
Kurumpalanathan - குறும்பலாநாதன்  
Kurundhamarguravan - குருந்தமர்குரவன்  
Kurundhamevinan - குருந்தமேவினான்  
Kuththan - கூத்தன்  
Kuththappiran - கூத்தபிரான்  
Kuvilamakizndhan - கூவிளமகிழ்ந்தான்  
Kuvilanychudi - கூவிளஞ்சூடி  
Kuvindhan - குவிந்தான்  
Kuzagan - குழகன்  
Kuzaikadhan - குழைகாதன்  
Kuzaithodan - குழைதோடன்  
Kuzaiyadu Cheviyan - குழையாடுசெவியன்  
Kuzarchadaiyan - குழற்ச்சடையன்  
Machilamani - மாசிலாமணி  
Madandhaipagan - மடந்தைபாகன்  
Madavalbagan - மடவாள்பாகன்  
Madha - மாதா  
Madhavan - மாதவன்  
Madhevan - மாதேவன்  
Madhimuththan - மதிமுத்தன்  
Madhinayanan - மதிநயனன்  
Madhirukkum Padhiyan - மாதிருக்கும் பாதியன்  
Madhivanan - மதிவாணன்  
Madhivannan - மதிவண்ணன்  
Madhiviziyan - மதிவிழியன்  
Madhorubagan - மாதொருபாகன்  
Madhupadhiyan - மாதுபாதியன்  
Maikolcheyyan - மைகொள்செய்யன்  
Mainthan - மைந்தன்  
Maiyanimidaron - மையணிமிடறோன்  
Maiyarkantan - மையார்கண்டன்  
Makayan Udhirankondan - மாகாயன் உதிரங்கொண்டான்  
Malaimadhiyan - மாலைமதியன்  
Malaimakal Kozhunan - மலைமகள் கொழுநன்  
Malaivalaiththan - மலைவளைத்தான்  
Malaiyalbagan - மலையாள்பாகன்  
Malamili - மலமிலி  
Malarchchadaiyan - மலர்ச்சடையன்  
Malorubagan - மாலொருபாகன்  
Malvanangiisan - மால்வணங்கீசன்  
Malvidaiyan - மால்விடையன்  
Maman - மாமன்  
Mamani - மாமணி  
Mami - மாமி  
Man - மன்  
Manakkuzagan - மணக்குழகன்  
Manalan - மணாளன்  
Manaththakaththan - மனத்தகத்தான்  
Manaththunainathan - மனத்துணைநாதன்  
Manavachakamkadandhar - மனவாசகம்கடந்தவர்  
Manavalan - மணவாளன்  
Manavazagan - மணவழகன்  
Manavezilan - மணவெழிலான்  
Manchumandhan - மண்சுமந்தான்  
Mandharachchilaiyan - மந்தரச்சிலையன்  
Mandhiram - மந்திரம்  
Mandhiran - மந்திரன்  
Manendhi - மானேந்தி  
Mangaibagan - மங்கைபாகன்  
Mangaimanalan - மங்கைமணாளன்  
Mangaipangkan - மங்கைபங்கன்  
Mani - மணி  
Manidan - மானிடன்  
Manidaththan - மானிடத்தன்  
Manikantan - மணிகண்டன்  
Manikka Vannan - மாணிக்கவண்ணன்  
Manikkakkuththan - மாணிக்கக்கூத்தன்  
Manikkam - மாணிக்கம்  
Manikkaththiyagan - மாணிக்கத்தியாகன்  
Manmarikkaraththan - மான்மறிக்கரத்தான்  
Manimidarran - மணிமிடற்றான்  
Manivannan - மணிவண்ணன்  
Maniyan - மணியான்  
Manjchan - மஞ்சன்  
Manrakkuththan - மன்றக்கூத்தன்  
Manravanan - மன்றவாணன்  
Manruladi - மன்றுளாடி  
Manrulan - மன்றுளான்  
Mapperunkarunai - மாப்பெருங்கருணை  
Maraicheydhon - மறைசெய்தோன்  
Maraikkattu Manalan - மறைக்காட்டு மணாளன்  
Maraineri - மறைநெறி  
Maraipadi - மறைபாடி  
Maraippariyan - மறைப்பரியன்  
Maraiyappan - மறையப்பன்  
Maraiyodhi - மறையோதி  
Marakatham - மரகதம்  
Maraniiran - மாரநீறன்  
Maravan - மறவன்  
Marilamani - மாறிலாமணி  
Marili - மாறிலி  
Mariyendhi - மறியேந்தி  
Markantalan - மாற்கண்டாளன்  
Markaziyiindhan - மார்கழிஈந்தான்  
Marrari Varadhan - மாற்றறிவரதன்  
Marudhappan - மருதப்பன்  
Marundhan - மருந்தன்  
Marundhiisan - மருந்தீசன்  
Marundhu - மருந்து  
Maruvili - மருவிலி  
Masarrachodhi - மாசற்றசோதி  
Masaruchodhi - மாசறுசோதி  
Masili - மாசிலி  
Mathevan - மாதேவன்  
Mathiyar - மதியர்  
Maththan - மத்தன்  
Mathuran - மதுரன்  
Mavuriththan - மாவுரித்தான்  
Mayan - மாயன்  
Mazavidaippagan - மழவிடைப்பாகன்  
Mazavidaiyan - மழவிடையன்  
Mazuppadaiyan - மழுப்படையன்  
Mazuvalan - மழுவலான்  
Mazuvalan - மழுவாளன்  
Mazhuvali - மழுவாளி  
Mazhuvatpadaiyan - மழுவாட்படையன்  
Mazuvendhi - மழுவேந்தி  
Mazuvudaiyan - மழுவுடையான்  
Melar - மேலர்  
Melorkkumelon - மேலோர்க்குமேலோன்  
Meruvidangan - மேருவிடங்கன்  
Meruvillan - மேருவில்லன்  
Meruvilviiran - மேருவில்வீரன்  
Mey - மெய்  
Meypporul - மெய்ப்பொருள்  
Meyyan - மெய்யன்  
Miinkannanindhan - மீன்கண்ணணிந்தான்  
Mikkarili - மிக்காரிலி  
Milirponnan - மிளிர்பொன்னன்  
Minchadaiyan - மின்சடையன்  
Minnaruruvan - மின்னாருருவன்  
Minnuruvan - மின்னுருவன்  
Mudhalillan - முதலில்லான்  
Mudhalon - முதலோன்  
Mudhirappiraiyan - முதிராப்பிறையன்  
Mudhukattadi - முதுகாட்டாடி  
Mudhukunriisan - முதுகுன்றீசன்  
Mudivillan - முடிவில்லான்  
Mukkanmurthi - முக்கண்மூர்த்தி  
Mukkanan - முக்கணன்  
Mukkanan - முக்கணான்  
Mukkannan - முக்கண்ணன்  
Mukkatkarumbu - முக்கட்கரும்பு  
Mukkonanathan - முக்கோணநாதன்  
Mulai - முளை  
Mulaimadhiyan - முளைமதியன்  
Mulaivenkiirran - முளைவெண்கீற்றன்  
Mulan - மூலன்  
Mulanathan - மூலநாதன்  
Mulaththan - மூலத்தான்  
Mullaivananathan - முல்லைவனநாதன்  
Mummaiyinan - மும்மையினான்  
Muni - முனி  
Munnayanan - முன்னயனன்  
Munnon - முன்னோன்  
Munpan - முன்பன்  
Munthai - முந்தை  
Muppilar - மூப்பிலர்  
Muppuram Eriththon - முப்புரம் எறித்தோன்  
Murramadhiyan - முற்றாமதியன்  
Murrunai - முற்றுணை  
Murrunarndhon - முற்றுணர்ந்தோன்  
Murrunychadaiyan - முற்றுஞ்சடையன்  
Murththi - மூர்த்தி  
Murugavudaiyar - முருகாவுடையார்  
Murugudaiyar - முருகுடையார்  
Muthaliyar - முதலியர்  
Muthalvan - முதல்வன்  
Muththan - முத்தன்  
Muththar Vannan - முத்தார் வண்ணன்  
Muththilangu Jodhi - முத்திலங்குஜோதி  
Muththiyar - முத்தியர்  
Muththu - முத்து  
Muththumeni - முத்துமேனி  
Muththuththiral - முத்துத்திரள்  
Muvakkuzagan - மூவாக்குழகன்  
Muvameniyan - மூவாமேனியன்  
Muvamudhal - மூவாமுதல்  
Muvarmudhal - மூவர்முதல்  
Muvilaichchulan - மூவிலைச்சூலன்  
Muvilaivelan - மூவிலைவேலன்  
Muviziyon - மூவிழையோன்  
Muyarchinathan - முயற்சிநாதன்  
Muzudharindhon - முழுதறிந்தோன்  
Muzudhon - முழுதோன்  
Muzhumudhal - முழுமுதல்  
Muzudhunarchodhi - முழுதுணர்ச்சோதி  
Muzudhunarndhon - முழுதுணர்ந்தோன்  
Nadan - நடன்  
Nadhichadaiyan - நதிச்சடையன்  
Nadhichudi - நதிசூடி  
Nadhiyarchadaiyan - நதியார்ச்சடையன்  
Nadhiyurchadaiyan - நதியூர்ச்சடையன்  
Naduthariyappan - நடுத்தறியப்பன்  
Naguthalaiyan - நகுதலையன்  
Nakkan - நக்கன்  
Nallan - நல்லான்  
Nallasivam - நல்லசிவம்  
Nalliruladi - நள்ளிருளாடி  
Namban - நம்பன்  
Nambi - நம்பி  
Nanban - நண்பன்  
Nandhi - நந்தி  
Nandhiyar - நந்தியார்  
Nanychamudhon - நஞ்சமுதோன்  
Nanychanikantan - நஞ்சணிகண்டன்  
Nanycharththon - நஞ்சார்த்தோன்  
Nanychundon - நஞ்சுண்டோன்  
Nanychunkantan - நஞ்சுண்கண்டன்  
Nanychunkarunaiyan - நஞ்சுண்கருணையன்  
Nanychunnamudhan - நஞ்சுண்ணமுதன்  
Nanychunporai - நஞ்சுண்பொறை  
Narchadaiyan - நற்ச்சடையன்  
Naripagan - நாரிபாகன்  
Narravan - நற்றவன்  
Narrunai - நற்றுணை  
Narrunainathan - நற்றுணைநாதன்  
Nasaiyili - நசையிலி  
Nathan - நாதன்  
Nathi - நாதி  
Nattamadi - நட்டமாடி  
Nattamunron - நாட்டமூன்றோன்  
Nattan - நட்டன்  
Nattavan - நட்டவன்  
Navalan - நாவலன்  
Navalechcharan - நாவலேச்சரன்  
Nayadi Yar - நாயாடி யார்  
Nayan - நயன்  
Nayanachchudaron - நயனச்சுடரோன்  
Nayanamunran - நயனமூன்றன்  
Nayananudhalon - நயனநுதலோன்  
Nayanar - நாயனார்  
Nayanaththazalon - நயனத்தழலோன்  
Nedunychadaiyan - நெடுஞ்சடையன்  
Nellivananathan - நெல்லிவனநாதன்  
Neri - நெறி  
Nerikattunayakan - நெறிகாட்டுநாயகன்  
Nerrichchudaron - நெற்றிச்சுடரோன்  
Nerrikkannan - நெற்றிக்கண்ணன்  
Nerrinayanan - நெற்றிநயனன்  
Nerriyilkannan - நெற்றியில்கண்ணன்  
Nesan - நேசன்  
Neyyadiyappan - நெய்யாடியப்பன்  
Nidkandakan - நிட்கண்டகன்  
Niilakantan - நீலகண்டன்  
Niilakkudiyaran - நீலக்குடியரன்  
Niilamidarran - நீலமிடற்றன்  
Niilchadaiyan - நீள்சடையன்  
Niinerinathan - நீனெறிநாதன்  
Niiradi - நீறாடி  
Niiranichemman - நீறணிச்செம்மான்  
Niiranichudar - நீறணிசுடர்  
Niiranikunram - நீறணிகுன்றம்  
Niiranimani - நீறணிமணி  
Niiraninudhalon - நீறணிநுதலோன்  
Niiranipavalam - நீறணிபவளம்  
Niiranisivan - நீறணிசிவன்  
Niirarmeniyan - நீறர்மேனியன்  
Niirchchadaiyan - நீர்ச்சடையன்  
Niireruchadaiyan - நீறேறுசடையன்  
Niireruchenniyan - நீறேறுசென்னியன்  
Niirran - நீற்றன்  
Niirudaimeni - நீறுடைமேனி  
Nirupusi - நீறுபூசி  
Nikarillar - நிகரில்லார்  
Nilachadaiyan - நிலாச்சடையன்  
Nilavanichadaiyan - நிலவணிச்சடையன்  
Nilavarchadaiyan - நிலவார்ச்சடையன்  
Nimalan - நிமலன்  
Ninmalan - நின்மலன்  
Ninmalakkozhunddhu - நீன்மலக்கொழுந்து  
Nimirpunchadaiyan - நிமிர்புன்சடையன்  
Niramayan - நிராமயன்  
Niramba Azagiyan - நிரம்பஅழகியன்  
Niraivu - நிறைவு  
Niruththan - நிருத்தன்  
Nithi - நீதி  
Niththan - நித்தன்  
Nokkamunron - நோக்கமூன்றோன்  
Nokkuruanalon - நோக்குறுஅனலோன்  
Nokkurukadhiron - நோக்குறுகதிரோன்  
Nokkurumadhiyon - நோக்குறுமதியோன்  
Nokkurunudhalon - நோக்குறுநுதலோன்  
Noyyan - நொய்யன்  
Nudhalorviziyan - நுதலோர்விழியன்  
Nudhalviziyan - நுதல்விழியன்  
Nudhalviziyon - நுதல்விழியோன்  
Nudharkannan - நுதற்கண்ணன்  
Nunnidaikuran - நுண்ணிடைகூறன்  
Nunnidaipangan - நுண்ணிடைபங்கன்  
Nunniyan - நுண்ணியன்  
Odaniyan - ஓடணியன்  
Odarmarban - ஓடார்மார்பன்  
Odendhi - ஓடேந்தி  
Odhanychudi - ஓதஞ்சூடி  
Olirmeni - ஒளிர்மேனி  
Ongkaran - ஓங்காரன்  
Ongkaraththudporul - ஓங்காரத்துட்பொருள்  
Opparili - ஒப்பாரிலி  
Oppili - ஒப்பிலி  
Orraippadavaravan - ஒற்றைப்படவரவன்  
Oruthalar - ஒருதாளர்  
Oruththan - ஒருத்தன்  
Oruthunai - ஒருதுணை  
Oruvamanilli - ஒருவமனில்லி  
Oruvan - ஒருவன்  
Ottiichan - ஓட்டீசன்  
Padarchadaiyan - படர்ச்சடையன்  
Padhakamparisuvaiththan - பாதகம்பரிசுவைத்தான்  
Padhimadhinan - பாதிமாதினன்  
Padikkasiindhan - படிகாசீந்தான்  
Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன்  
Padiran - படிறன்  
Pagalpalliruththon - பகல்பல்லிறுத்தோன்  
Pakavan - பகவன்  
Palaivana Nathan - பாலைவனநாதன்  
Palannaniirran - பாலன்னநீற்றன்  
Palar - பாலர்  
Palichchelvan - பலிச்செல்வன்  
Paliithadhai - பாலீதாதை  
Palikondan - பலிகொண்டான்  
Palinginmeni - பளிங்கின்மேனி  
Palitherchelvan - பலித்தேர்செல்வன்  
Pallavanathan - பல்லவநாதன்  
Palniirran - பால்நீற்றன்  
Palugandha Iisan - பாலுகந்தஈசன்  
Palvanna Nathan - பால்வண்ணநாதன்  
Palvannan - பால்வண்ணன்  
Pambaraiyan - பாம்பரையன்  
Pampuranathan - பாம்புரநாதன்  
Panban - பண்பன்  
Pandangkan - பண்டங்கன்  
Pandaram - பண்டாரம்  
Pandarangan - பண்டரங்கன்  
Pandarangan - பாண்டரங்கன்  
Pandippiran - பாண்டிபிரான்  
Pangkayapathan - பங்கயபாதன்  
Panimadhiyon - பனிமதியோன்  
Panimalaiyan - பனிமலையன்  
Panivarparru - பணிவார்பற்று  
Paraayththuraiyannal - பராய்த்துறையண்ணல்  
Paramamurththi - பரமமூர்த்தி  
Paraman - பரமன்  
Paramayoki - பரமயோகி  
Paramessuvaran - பரமேச்சுவரன்  
Parametti - பரமேட்டி  
Paramparan - பரம்பரன்  
Paramporul - பரம்பொருள்  
Paran - பரன்  
Paranjchothi - பரஞ்சோதி  
Paranjchudar - பரஞ்சுடர்  
Paraparan - பராபரன்  
Parasudaikkadavul - பரசுடைக்கடவுள்  
Parasupani - பரசுபாணி  
Parathaththuvan - பரதத்துவன்  
Paridanychuzan - பாரிடஞ்சூழன்  
Paridhiyappan - பரிதியப்பன்  
Parrarran - பற்றற்றான்  
Parraruppan - பற்றறுப்பான்  
Parravan - பற்றவன்  
Parru - பற்று  
Paruppan - பருப்பன்  
Parvati Manalan - பார்வதி மணாளன்  
Pasamili - பாசமிலி  
Pasanasan - பாசநாசன்  
Pasuveri - பசுவேறி  
Pasumpon - பசும்பொன்  
Pasupathan - பாசுபதன்  
Pasupathi - பசுபதி  
Paththan - பத்தன்  
Pattan - பட்டன்  
Pavala Vannan - பவளவண்ணன்  
Pavalach Cheyyon - பவளச்செய்யோன்  
Pavalam - பவளம்  
Pavan - பவன்  
Pavanasan - பாவநாசன்  
Pavanasar - பாவநாசர்  
Payarruraran - பயற்றூரரன்  
Pazaiyan - பழையான்  
Pazaiyon - பழையோன்  
Pazakan - பழகன்  
Pazamalainathan - பழமலைநாதன்  
Pazanappiran - பழனப்பிரான்  
Pazavinaiyaruppan - பழவினையறுப்பான்  
Pemman - பெம்மான்  
Penbagan - பெண்பாகன்  
Penkuran - பெண்கூறன்  
Pennagiyaperuman - பெண்ணாகியபெருமான்  
Pennamar Meniyan - பெண்ணமர் மேனியன்  
Pennanaliyan - பெண்ணாணலியன்  
Pennanmeni - பெண்ணாண்மேனி  
Pennanuruvan - பெண்ணானுருவன்  
Pennidaththan - பெண்ணிடத்தான்  
Pennorubagan - பெண்ணொருபாகன்  
Pennorupangan - பெண்ணொருபங்கன்  
Pennudaipperundhakai - பெண்ணுடைப்பெருந்தகை  
Penparrudhan - பெண்பாற்றூதன்  
Peralan - பேராளன்  
Perambalavanan - பேரம்பலவாணன்  
Perarulalan - பேரருளாளன்  
Perayiravan - பேராயிரவன்  
Perchadaiyan - பேர்ச்சடையன்  
Perezuththudaiyan - பேரெழுத்துடையான்  
Perinban - பேரின்பன்  
Periyakadavul - பெரியகடவுள்  
Periyan - பெரியான்  
Periya Peruman - பெரிய பெருமான்  
Periyaperumanadikal - பெரியபெருமான் அடிகள்  
Periyasivam - பெரியசிவம்  
Periyavan - பெரியவன்  
Peroli - பேரொளி  
Perolippiran - பேரொளிப்பிரான்  
Perrameri - பெற்றமேறி  
Perramurthi - பெற்றமூர்த்தி  
Peruman - பெருமான்  
Perumanar - பெருமானார்  
Perum Porul - பெரும் பொருள்  
Perumpayan - பெரும்பயன்  
Perundhevan - பெருந்தேவன்  
Perunkarunaiyan - பெருங்கருணையன்  
Perunthakai - பெருந்தகை  
Perunthunai - பெருந்துணை  
Perunychodhi - பெருஞ்சோதி  
Peruvudaiyar - பெருவுடையார்  
Pesarkiniyan - பேசற்கினியன்  
Picchar - பிச்சர்  
Pichchaiththevan - பிச்சைத்தேவன்  
Pidar - பீடர்  
Pinjgnakan - பிஞ்ஞகன்  
Piraichchenniyan - பிறைச்சென்னியன்  
Piraichudan - பிறைசூடன்  
Piraichudi - பிறைசூடி  
Piraikkanniyan - பிறைக்கண்ணியன்  
Piraikkirran - பிறைக்கீற்றன்  
Piraiyalan - பிறையாளன்  
Piran - பிரான்  
Pirapparuppon - பிறப்பறுப்போன்  
Pirappili - பிறப்பிலி  
Piravapperiyon - பிறவாப்பெரியோன்  
Piriyadhanathan - பிரியாதநாதன்  
Pitha - பிதா  
Piththan - பித்தன்  
Podiyadi - பொடியாடி  
Podiyarmeni - பொடியார்மேனி  
Pogam - போகம்  
Pokaththan - போகத்தன்  
Pon - பொன்  
Ponmalaivillan - பொன்மலைவில்லான்  
Ponmanuriyan - பொன்மானுரியான்  
Ponmeni - பொன்மேனி  
Ponnambalak Kuththan - பொன்னம்பலக்கூத்தன்  
Ponnambalam - பொன்னம்பலம்  
Ponnan - பொன்னன்  
Ponnarmeni - பொன்னார்மேனி  
Ponnayiramarulvon - பொன்னாயிரமருள்வோன்  
Ponnuruvan - பொன்னுருவன்  
Ponvaiththanayakam - பொன்வைத்தநாயகம்  
Poraziyiindhan - போராழிஈந்தான்  
Porchadaiyan - பொற்சசையன்  
Poruppinan - பொருப்பினான்  
Poyyili - பொய்யிலி  
Pugaz - புகழ்  
Pugazoli - புகழொளி  
Pulaichchudi - பூளைச்சூடி  
Puliththolan - புலித்தோலன்  
Puliyadhaladaiyan - புலியதலாடையன்  
Puliyadhalan - புலியதளன்  
Puliyudaiyan - புலியுடையன்  
Puliyuriyan - புலியுரியன்  
Pulkanan - புள்காணான்  
Punachadaiyan - புனசடையன்  
Punalarchadaiyan - புனலார்சடையன்  
Punalchudi - புனல்சூடி  
Punalendhi - புனலேந்தி  
Punanular - பூணநூலர்  
Punarchadaiyan - புனற்சடையன்  
Punarchip Porul - புணர்ச்சிப் பொருள்  
Punavayilnathan - புனவாயில்நாதன்  
Punchadaiyan - புன்சடையன்  
Pungkavan - புங்கவன்  
Punidhan - புனிதன்  
Punniyamurththi - புண்ணியமூர்த்தி  
Punniyan - புண்ணியன்  
Puramaviththan - புரமவித்தான்  
Purameriththan - புரமெரித்தான்  
Purameydhan - புரமெய்தான்  
Puramureriththan - புரமூரெரித்தான்  
Puranamuni - புராணமுனி  
Puranan - புராணன்  
Puranycherran - புரஞ்செற்றான்  
Puranychuttan - புரஞ்சுட்டான்  
Purathanan - புராதனன்  
Purichadaiyan - புரிசடையன்  
Purinunmeni - புரிநூன்மேனி  
Purameriththan - புரமெரித்தான்  
Puranan - பூரணன்  
Purari - புராரி  
Purridankondar - புற்றிடங்கொண்டார்  
Pusan - பூசன்  
Puthanathar - பூதநாதர்  
Puthanayakan - பூதநாயகன்  
Puthapathi - பூதபதி  
Puthiyan - புதியன்  
Puthiyar - பூதியர்  
Puththel - புத்தேள்  
Puuvananaathan - பூவனநாதன்  
Puuvananaathan - பூவணநாதன்  
Puyangan - புயங்கன்  
Saivan - சைவன்  
Saivar - சைவர்  
Sakalasivan - சகலசிவன்  
Samavethar - சாமவேதர்  
Sampu - சம்பு  
Sangkaran - சங்கரன்  
Santhirasekaran - சந்திரசேகரன்  
Saranan - சாரணன்  
Sathasivan - சதாசிவன்  
Sathikithavarththamanar - சாதிகீதவர்த்தமானர்  
Saththan - சத்தன்  
Sathuran - சதுரன்  
Sayampu - சயம்பு  
Sedan - சேடன்  
Seddi - செட்டி  
Selvan - செல்வன்  
Semman - செம்மான்  
Sempon - செம்பொன்  
Senneri - செந்நெறி  
Sevakan - சேவகன்  
Sevalon - சேவலோன்  
Seyyan - செய்யன்  
Shivan - சிவன்  
Silampan - சிலம்பன்  
Silan - சீலன்  
Singkam - சிங்கம்  
Siththan - சித்தன்  
Siththar - சித்தர்  
Sittan - சிட்டன்  
Sivakkozundhu - சிவக்கொழுந்து  
Sivalokan - சிவலோகன்  
Sivamurththi - சிவமூர்த்தி  
Sivan - சிவன்  
Sivanandhan – சிவானந்தன்  
Sivanyanam – சிவஞானம்  
Sivaperuman – சிவபெருமான்  
Sivapuran – சிவபுரன்  
Sivapuraththarasu – சிவபுரத்தரசு  
Sudar – சுடர்  
Sulamani – சூளாமணி  
Sulapani – சூலபாணி  
Sulappadaiyan – சூலப்படையன்  
Sulaththan – சூலத்தன்  
Suli – சூலி  
Sundharar – சுந்தரர்  
Surapathi – சுரபதி  
Suvandar – சுவண்டர்  
Thadhaiyilthadhai – தாதையில்தாதை  
Thaduththatkolvan – தடுத்தாட்கொள்வான்  
Thaduththatkondan – தடுத்தாட்கொண்டான்  
Thaiyalpagan – தையல்பாகன்  
Thakkanralaikondan – தக்கன்றலைகொண்டான்  
Thalaikalanan – தலைக்கலனான்  
Thalaimakan – தலைமகன்  
Thalaimalaiyan – தலைமாலையன்  
Thalaipaliyan – தலைபலியன்  
Thalaipaththadarththan – தலைப்பத்தடர்த்தான்  
Thalaivan – தலைவன்  
Thalaiyendhi – தலையேந்தி  
Thalamiithadhai – தாளமீதாதை  
Thalirmadhiyan – தளிர்மதியன்  
Thamizan – தமிழன்  
Thamizcheydhon – தமிழ்செய்தோன்  
Thamman – தம்மான்  
Thanakkuvamaiyillan – தனக்குவமையில்லான்  
Thaninban – தானின்பன்  
Thanipperiyon – தனிப்பெரியோன்  
Thanipperunkarunai – தனிப்பெருங்கருணை  
Thaniyan – தனியன்  
Thannaiyan – தன்னையன்  
Thannaiyugappan – தன்னையுகப்பான்  
Thannarmadhichudi – தண்ணார்மதிசூடி  
Thannerillan – தன்னேரில்லான்  
Thanninban – தன்னின்பன்  
Thannoliyon – தன்னொளியோன்  
Thanpunalan – தண்புனலன்  
Thanthiran – தந்திரன்  
Thanthonri – தாந்தோன்றி/தான்தோன்றி  
Thapothanan – தபோதனன்  
Thaththuvan – தத்துவன்  
Thavalachchadaiyan – தவளச்சடையன்  
Thayilaththayan – தாயிலாத்தாயன்  
Thayinumnallan – தாயினும்நல்லன்  
Thayinumparindhon – தாயினும்பரிந்தோன்  
Thayirchirandhon – தாயிற்சிறந்தோன்  
Thayumanavan – தாயுமானவன்  
Thazalendhi – தழலேந்தி  
Thazhaleduththan – தழலெடுத்தான்  
Thazalmeni – தழல்மேனி  
Thazhalvannan – தழல்வண்ணன்  
Thazalviziyan – தழல்விழியன்  
Thazarpizampu – தழற்பிழம்பு  
Thazchadaiyan – தாழ்சடையன்  
Thazhchadaikkadavul – தாழ்சடைக்கடவுள்  
Thedonaththevan – தேடொணாத்தேவன்  
Thenmugakkadavul – தென்முகக்கடவுள்  
Thennadudaiyan – தென்னாடுடையான்  
Thennan – தென்னன்  
Thennansivan – தென்னான்சிவன்  
Thenpandinadan – தென்பாண்டிநாடன்  
Thesan – தேசன்  
Thevar Singkam – தேவர் சிங்கம்  
Thigattayinban – திகட்டாயின்பன்  
Thigazchemman – திகழ்செம்மான்  
Thiyampakan – தியம்பகன்  
Thiiyadi – தீயாடி  
Thiiyadukuththan – தீயாடுகூத்தன்  
Thillaikkuththan – தில்லைக்கூத்தன்  
Thillaivanan – தில்லைவாணன்  
Thillaiyambalam – தில்லையம்பலம்  
Thillaiyuran – தில்லையூரன்  
Thingalchudi – திங்கள்சூடி  
Thingatkannan – திங்கட்கண்ணன்  
Thiran – தீரன்  
Thirththan – தீர்த்தன்  
Thiru – திரு  
Thirumani – திருமணி  
Thirumeninathan – திருமேனிநாதன்  
Thirumeniyazagan – திருமேனியழகன்  
Thirumidarran – திருமிடற்றன்  
Thiruththalinathan – திருத்தளிநாதன்  
Thiruththan – திருத்தன்  
Thiruvan – திருவான்  
Thiruvappudaiyan – திருவாப்புடையன்  
Thodudaiyacheviyan – தோடுடையசெவியன்  
Tholadaiyan – தோலாடையன்  
Tholaiyachchelvan – தொலையாச்செல்வன்  
Thollon – தொல்லோன்  
Tholliyon – தொல்லியோன்  
Thondarkkamudhan – தொண்டர்க்கமுதன்  
Thonraththunai – தோன்றாத்துணை  
Thorramilli – தோற்றமில்லி  
Thozan – தோழன்  
Thudikondan – துடிகொண்டான்  
Thudiyendhi – துடியேந்தி  
Thukkiyathiruvadi – தூக்கியதிருவடி  
Thulakkili – துளக்கிலி  
Thulirmadhiyan – துளிர்மதியன்  
Thumani – தூமணி  
Thumeniyan – தூமேனியன்  
Thunaiyili – துணையிலி  
Thundachchudar – தூண்டாச்சுடர்  
Thundappiraiyan – துண்டப்பிறையன்  
Thunduchodhi – தூண்டுச்சோதி  
Thuniirran – தூநீற்றன்  
Thurai Kattum Vallal – துறைகாட்டும்வள்ளல்  
Thuyaramthiirththanathan- துயரம்தீர்த்தநாதன்  
Thuyavan – தூயவன்  
Thuyon – தூயோன்  
Thuyyan – துய்யன்  
Uchchinathar – உச்சிநாதர்  
Udaiyan – உடையான்  
Udaiyilavudaiyan – உடையிலாவுடையன்  
Udukkaiyoliyan – உடுக்கையொலியன்  
Ulaganathan – உலகநாதன்  
Ulagiinran – உலகீன்றான்  
Ulakamurththi – உலகமூர்த்தி  
Ullankavarkalvan – உள்ளங்கவர்கள்வன்  
Umaiannal – உமைஅண்ணல்  
Umaikadhalan – உமைகாதலன்  
Umaikandhanudanar – உமைகந்தனுடனார்  
Umaikelvan – உமைகேள்வன்  
Umaikon – உமைகோன்  
Umaikuran – உமைகூறன்  
Umaikkun^Athan – உமைக்குநாதன்  
Umaipangan – உமைபாங்கன்  
Umaiviruppan – உமைவிருப்பன்  
Umaiyagan – உமையாகன்  
Umaiyalpangan – உமையாள்பங்கன்  
Umaiyoduraivan – உமையோடுறைவான்  
Umaiyorubagan – உமையொருபாகன்  
Umapathi – உமாபதி  
Unamili – ஊனமிலி  
Uravan – உறவன்  
Uravili – உறவிலி  
Urutharuvan – உருதருவான்  
Uruththiralokan – உருத்திரலோகன்  
Uruththiramurthy – உருத்திரமூர்த்தி  
Urutthiran – உருத்திரன்  
Uruvilan – உருவிலான்  
Uruvodupeyariivallal – உருவொடுபெயரீவள்ளல்  
Uththaman – உத்தமன்  
Utrran – உற்றான்  
Uvamanilli – உவமநில்லி  
Uyyakkolvan – உய்யக்கொள்வான்  
Uyyakkondaan – உய்யக்கொண்டான்  
Uzaiyiiruriyan – உழையீருரியன்  
Uzuvaiyuriyan – உழுவையுரியன்  
Uzimudhalvan – ஊழிமுதல்வன்  
Vanchiyanathan – வாஞ்சியநாதன்  
Vadathali Nathan – வடத்தளிநாதன்  
Vaigalnathan – வைகல்நாதன்  
Vaippu – வைப்பு  
Vaiyan – வையன்  
Valaipiraiyan – வளைபிறையன்  
Vallal – வள்ளல்  
Valampuranathan – வலம்புரநாதன்  
Valampuri – வலம்புரி  
Valarivan – வாலறிவன்  
Valarmadhiyan – வளர்மதியன்  
Valarpiraiyan – வளர்பிறையன்  
Valichcharan – வாலீச்சரன்  
Valiyan – வலியன்  
Valiyasivam – வலியசிவம்  
Valizaibagan – வாலிழைபாகன்  
Valizaipangan – வாலிழைபங்கன்  
Vallavan – வல்லவன்  
Vaman – வாமன்  
Vamathevar – வாமதேவர்  
Vanavan – வானவன்  
Vanorkkiraivan – வானோர்க்கிறைவன்  
Varadhan – வரதன்  
Varaichilaiyan – வரைச்சிலையன்  
Varaivillan – வரைவில்லான்  
Varambilinban – வரம்பிலின்பன்  
Varanaththuriyan – வாரணத்துரியன்  
Varanaththurivaiyan – வாரணத்துரிவையான்  
Varaththan – வரத்தன்  
Varchadai Aran – வார்ச்சடிஅரன்  
Varchadaiyan – வார்சடையன்  
Vayan – வாயான்  
Vayiram – வயிரம்  
Vayira Vannan – வயிரவண்ணன்  
Vayirath Thun Nathan – வயிரத்தூண்நாதன்  
Vaymurnathan – வாய்மூர்நாதன்  
Vazikattu Vallal – வழிகாட்டுவள்ளல்  
Vazmudhal – வாழ்முதல்  
Vedan – வேடன்  
Vedhagiidhan – வேதகீதன்  
Vedhamudhalvan – வேதமுதல்வன்  
Vedhan – வேதன்  
Vedhanathan – வேதநாதன்  
Vedhavedhanthan – வேதவேதாந்தன்  
Vedhavizupporul – வேதவிழுப்பொருள்  
Vedhevar – வேதேவர்  
Velanthadhai – வேலந்தாதை  
Velirmidarran – வெளிர்மிடற்றன்  
Velladainathan – வெள்ளடைநாதன்  
Vellam Anaiththavan – வெள்ளம் அணைத்தவன்  
Vellerukkanjchadaimudiyan-வெள்ளெருக்கஞ்சடைமுடியான்  
Vellerran – வெள்ளேற்றன்  
Vellerrannal – வெள்ளேற்றண்ணல்  
Vellimalainathan – வெள்ளிமலைநாதன்  
Velliyan – வெள்ளியன்  
Velviyalar – வேள்வியாளர்  
Vendhan – வேந்தன்  
Venkadan – வெண்காடன்  
Venkuzaiyan – வெண்குழையன்  
Venmadhiyan – வெண்மதியன்  
Venmadhikkudumiyan – வெண்மதிக்குடுமியன்  
Venmadhippadhiyan – வெண்மதிப்பாதியான்  
Venmidarran – வெண்மிடற்றான்  
Venneyappan – வெண்ணெய்அப்பன்  
Venniirran – வெண்ணீற்றன்  
Venninathan – வெண்ணிநாதன்  
Venpiraiyan – வெண்பிறையன்  
Venturainathan – வெண்டுறைநாதன்  
Ver – வேர்  
Vethiyan – வேதியன்  
Vetkaiyilan – வேட்கையிலான்  
Veyavanar – வேயவனார்  
Vezamuganradhai – வேழமுகன்றாதை  
Vezanthadhai – வேழந்தாதை  
Vidaippagan – விடைப்பாகன்  
Vidai Aran – விடை அரன்  
Vidaivalan – விடைவலான்  
Vidaiyan – விடையன்  
Vidaiyan – விடையான்  
Vidaiyavan – விடையவன்  
Vidaiyeri – விடையேறி  
Vidaiyudaiyan – விடையுடையான்  
Vidaiyurdhi – விடையூர்தி  
Vidaiyurvan – விடையூர்வான்  
Vidalai – விடலை  
Vidamundakantan – வடமுண்டகண்டன்  
Vidamundon – விடமுண்டோன்  
Vidangkan – விடங்கன்  
Vidar – வீடர்  
Vilakkanan – விலக்கணன்  
Viinaiviththagan – வீணைவித்தகன்  
Viirattesan – வீரட்டேசன்  
Viiziyazagan – வீழியழகன்  
Vikirdhan – விகிர்தன்  
Vilakku – விளக்கு  
Villi – வில்லி  
Vilvavananathan – வில்வவனநாதன்  
Vimalan – விமலன்  
Vinaikedan – வினைகேடன்  
Vinnorperuman – விண்ணொர்பெருமான்  
Viraichercharanan – விரைச்சேர்சரணன்  
Viralvedan – விறல்வேடன்  
Viran – வீரன்  
Viranar – வீரணர்  
Virichadaiyan – விரிசடையன்  
Virindhan – விரிந்தான்  
Virumpan – விரும்பன்  
Virundhitta Varadhan – விருந்திட்டவரதன்  
Viruppan – விருப்பன்  
Viruththan – விருத்தன்  
Vithi – விதி  
Vithiyar – விதியர்  
Viththagan – வித்தகன்  
Viththaga Vedan – வித்தகவேடன்  
Viththan – வித்தன்  
Viyanchadaiyan – வியன்சடையன்  
Vizinudhalan – விழிநுதலான்  

Vaziththunai – வழித்துணை  
Vizumiyan – விழுமியான்  
Yanaiyuriyan – யாசிவனின் 1000 தமிழ் பெயர்கள்.

இப்பதிவினை மேலோட்டமாக பார்த்து வெளியேறாதீர்கள்.  ஓருமுறையேனும் இந்த 1000 நாமங்களை உரக்க உச்சரியுங்களேன்.

பலன்.........நிச்சயம் மனஅமைதி கிட்டும்.

Adaikkalam Kaththan - அடைக்கலம் காத்தான்  
Adaivarkkamudhan - அடைவார்க்கமுதன்  
Adaivorkkiniyan - அடைவோர்க்கினியன்  
Adalarasan - ஆடலரசன்  
Adalazagan - ஆடலழகன்  
Adalerran - அடலேற்றன்  
Adalvallan - ஆடல்வல்லான்  
Adalvidaippagan - அடல்விடைப்பாகன்  
Adalvidaiyan - அடல்விடையான்  
Adangakkolvan - அடங்கக்கொள்வான்  
Adarchadaiyan - அடர்ச்சடையன்  
Adarko - ஆடற்கோ  
Adhaladaiyan - அதலாடையன்  
Adhi - ஆதி  
Adhibagavan - ஆதிபகவன்  
Adhipuranan - ஆதிபுராணன்  
Adhiraiyan - ஆதிரையன்  
Adhirthudiyan - அதிர்துடியன்  
Adhirunkazalon - அதிருங்கழலோன்  
Adhiyannal - ஆதியண்ணல்  
Adikal - அடிகள்  
Adiyarkkiniyan - அடியார்க்கினியான்  
Adiyarkkunallan - அடியார்க்குநல்லான்  
Adumnathan - ஆடும்நாதன்  
Agamabodhan - ஆகமபோதன்  
Agamamanon - ஆகமமானோன்  
Agamanathan - ஆகமநாதன்  
Aimmukan - ஐம்முகன்  
Aindhadi - ஐந்தாடி  
Aindhukandhan - ஐந்துகந்தான்  
Ainniraththannal - ஐந்நிறத்தண்ணல்  
Ainthalaiyaravan - *ஐந்தலையரவன்  
Ainthozilon - ஐந்தொழிலோன்  
Aivannan - ஐவண்ணன்  
Aiyamerpan - ஐயமேற்பான்  
Aiyan - ஐயன்  
Aiyar - ஐயர்  
Aiyaranindhan - ஐயாறணிந்தான்  
Aiyarrannal - ஐயாற்றண்ணல்  
Aiyarrarasu - ஐயாற்றரசு  
Akandan - அகண்டன்  
Akilankadandhan - அகிலங்கடந்தான்  
Alagaiyanrozan - அளகையன்றோழன்  
Alakantan - ஆலகண்டன்  
Alalamundan - ஆலாலமுண்டான்  
Alamarchelvan - ஆலமர்செல்வன்  
Alamardhevan - ஆலமர்தேன்  
Alamarpiran - ஆலமர்பிரான்  
Alamidarran - ஆலமிடற்றான்  
Alamundan - ஆலமுண்டான்  
Alan - ஆலன்  
Alaniizalan - ஆலநீழலான்  
Alanthurainathan - ஆலந்துறைநாதன்  
Alappariyan - அளப்பரியான்  
Alaramuraiththon - ஆலறமுறைத்தோன்  
Alavayadhi - ஆலவாய்ஆதி  
Alavayannal - ஆலவாயண்ணல்  
Alavilan - அளவிலான்  
Alavili - அளவிலி  
Alavilpemman - ஆலவில்பெம்மான்  
Aliyan - அளியான்  
Alnizarkadavul - ஆல்நிழற்கடவுள்  
Alnizarkuravan - ஆல்நிழற்குரவன்  
Aluraiadhi - ஆலுறைஆதி  
Amaivu - அமைவு  
Amaiyanindhan - ஆமையணிந்தன்  
Amaiyaran - ஆமையாரன்  
Amaiyottinan - ஆமையோட்டினன்  
Amalan - அமலன்  
Amararko - அமரர்கோ  
Amararkon - அமரர்கோன்  
Ambalakkuththan - அம்பலக்கூத்தன்  
Ambalaththiisan - அம்பலத்தீசன்  
Ambalavan - அம்பலவான்  
Ambalavanan - அம்பலவாணன்  
Ammai - அம்மை  
Amman - அம்மான்  
Amudhan - அமுதன்  
Amudhiivallal - அமுதீவள்ளல்  
Anaiyar - ஆனையார்  
Anaiyuriyan - ஆனையுரியன்  
Anakan - அனகன்  
Analadi - அனலாடி  
Analendhi - அனலேந்தி  
Analuruvan - அனலுருவன்  
Analviziyan - அனல்விழியன்  
Anandhakkuththan - ஆனந்தக்கூத்தன்  
Anandhan - ஆனந்தன்  
Anangkan - அணங்கன்  
Ananguraipangan - அணங்குறைபங்கன்  
Anarchadaiyan - அனற்சடையன்  
Anarkaiyan - அனற்கையன்  
Anarrun - அனற்றூண்  
Anathi - அனாதி  
Anay - ஆனாய்  
Anban - அன்பன்  
Anbarkkanban - அன்பர்க்கன்பன்  
Anbudaiyan - அன்புடையான்  
Anbusivam - அன்புசிவம்  
Andakai - ஆண்டகை  
Andamurththi - அண்டமூர்த்தி  
Andan - அண்டன்  
Andan - ஆண்டான்  
Andavan - ஆண்டவன்  
Andavanan - அண்டவாணன்  
Andhamillariyan - அந்தமில்லாரியன்  
Andhivannan - அந்திவண்ணன்  
Anekan - அனேகன்/அநேகன்  
Angkanan - அங்கணன்  
Anip Pon - ஆணிப் பொன்  
Aniyan - அணியன்  
Anna - அண்ணா  
Annai - அன்னை  
Annamalai - அண்ணாமலை  
Annamkanan - அன்னம்காணான்  
Annal - அண்ணல்  
Anthamillan - அந்தமில்லான்  
Anthamilli - அந்தமில்லி  
Anthanan - அந்தணன்  
Anthiran - அந்திரன்  
Anu - அணு  
Anychadaiyan - அஞ்சடையன்  
Anychadiyappan - அஞ்சாடியப்பன்  
Anychaikkalaththappan - அஞ்சைக்களத்தப்பன்  
Anychaiyappan - அஞ்சையப்பன்  
Anychezuththan - அஞ்செழுத்தன்  
Anychezuththu - அஞ்செழுத்து  
Appanar - அப்பனார்  
Araamuthu - ஆராஅமுது  
Aradharanilayan - ஆறாதாரநிலயன்  
Araiyaniyappan - அறையணியப்பன்  
Arakkan - அறக்கண்  
Arakkodiyon - அறக்கொடியோன்  
Aran - அரன்  
Aranan - ஆரணன்  
Araneri - அறநெறி  
Aranivon - ஆறணிவோன்  
Araravan - ஆரரவன்  
Arasu - அரசு  
Araththurainathan - அரத்துறைநாதன்  
Aravachaiththan - அரவசைத்தான்  
Aravadi - அரவாடி  
Aravamudhan - ஆராவமுதன்  
Aravan - அறவன்  
Aravaniyan - அரவணியன்  
Aravanychudi - அரவஞ்சூடி  
Aravaraiyan - அரவரையன்  
Aravarcheviyan - அரவார்செவியன்  
Aravaththolvalaiyan - அரவத்தோள்வளையன்  
Aravaziandhanan - அறவாழிஅந்தணன்  
Aravendhi - அரவேந்தி  
Aravidaiyan - அறவிடையான்  
Arazagan - ஆரழகன்  
Arccithan - அர்ச்சிதன்  
Archadaiyan - ஆர்சடையன்  
Areruchadaiyan - ஆறேறுச்சடையன்  
Areruchenniyan - ஆறேறுச்சென்னியன்  
Arikkumariyan - அரிக்குமரியான்  
Arivaipangan - அரிவைபங்கன்  
Arivan - அறிவன்  
Arivu - அறிவு  
Arivukkariyon - அறிவுக்கரியோன்  
Ariya Ariyon - அரியஅரியோன்  
Ariya Ariyon - அறியஅரியோன்  
Ariyan - ஆரியன்  
Ariyan - அரியான்  
Ariyasivam - அரியசிவம்  
Ariyavar - அரியவர்  
Ariyayarkkariyan - அரியயற்க்கரியன்  
Ariyorukuran - அரியோருகூறன்  
Arpudhak Kuththan - அற்புதக்கூத்தன்  
Arpudhan - அற்புதன்  
Aru - அரு  
Arul - அருள்  
Arulalan - அருளாளன்  
Arulannal - அருளண்ணல்  
Arulchodhi - அருள்சோதி  
Arulirai - அருளிறை  
Arulvallal - அருள்வள்ளல்  
Arulvallal Nathan - அருள்வள்ளல்நாதன்  
Arulvallan - அருள்வல்லான்  
Arumalaruraivan - அறுமலருறைவான்  
Arumani - அருமணி  
Arumporul - அரும்பொருள்  
Arunmalai - அருண்மலை  
Arunthunai - அருந்துணை  
Aruran - ஆரூரன்  
Arurchadaiyan - ஆறூர்ச்சடையன்  
Arurmudiyan - ஆறூர்முடியன்  
Arut Kuththan - அருட்கூத்தன்  
Arutchelvan - அருட்செல்வன்  
Arutchudar - அருட்சுடர்  
Aruththan - அருத்தன்  
Arutperunychodhi - அருட்பெருஞ்சோதி  
Arutpizambu - அருட்பிழம்பு  
Aruvan - அருவன்  
Aruvuruvan - அருவுருவன்  
Arvan - ஆர்வன்  
Athikunan - அதிகுணன்  
Athimurththi - ஆதிமூர்த்தி  
Athinathan - ஆதிநாதன்  
Athipiran - ஆதிபிரான்  
Athisayan - அதிசயன்  
Aththan - அத்தன்  
Aththan - ஆத்தன்  
Aththichudi - ஆத்திச்சூடி  
Atkondan - ஆட்கொண்டான்  
Attugappan - ஆட்டுகப்பான்  
Attamurthy - அட்டமூர்த்தி  
Avanimuzudhudaiyan - அவனிமுழுதுடையான்  
Avinasi - அவிநாசி  
Avinasiyappan - அவிநாசியப்பன்  
Avirchadaiyan - அவிர்ச்சடையன்  
Ayavandhinathan - அயவந்திநாதன்  
Ayirchulan - அயிற்சூலன்  
Ayizaiyanban - ஆயிழையன்பன்  
Azagukadhalan - அழகுகாதலன்  
Azakan - அழகன்  
Azal Vannan - அழல்வண்ணன்  
Azalarchadaiyan - அழலார்ச்சடையன்  
Azalmeni - அழல்மேனி  
Azarkannan - அழற்கண்ணன்  
Azarkuri - அழற்குறி  
Azicheydhon - ஆழிசெய்தோன்  
Azi Indhan - ஆழி ஈந்தான்  
Azivallal - ஆழிவள்ளல்  
Azivilan - அழிவிலான்  
Aziyan - ஆழியான்  
Aziyar - ஆழியர்  
Aziyarulndhan - ஆழியருள்ந்தான்  
Bagampennan - பாகம்பெண்ணன்  
Bagampenkondon - பாகம்பெண்கொண்டோன்  
Budhappadaiyan - பூதப்படையன்  
Budhavaninathan - பூதவணிநாதன்  
Buvan - புவன்  
Buvanankadandholi - புவனங்கடந்தொளி  
Chadaimudiyan - சடைமுடியன்  
Chadaiyan - சடையன்  
Chadaiyandi - சடையாண்டி  
Chadaiyappan - சடையப்பன்  
Chalamanivan - சலமணிவான்  
Chalamarchadaiyan - சலமார்சடையன்  
Chalanthalaiyan - சலந்தலையான்  
Chalanychadaiyan - சலஞ்சடையான்  
Chalanychudi - சலஞ்சூடி  
Chandhavenpodiyan - சந்தவெண்பொடியன்  
Changarthodan - சங்கார்தோடன்  
Changarulnathan - சங்கருள்நாதன்  
Chandramouli - சந்ரமௌலி  
Chargunanathan - சற்குணநாதன்  
Chattainathan - சட்டைநாதன்  
Chattaiyappan - சட்டையப்பன்  
Chekkarmeni - செக்கர்மேனி  
Chemmeni - செம்மேனி  
Chemmeni Nathan - செம்மேனிநாதன்  
Chemmeniniirran - செம்மேனிநீற்றன்  
Chemmeniyamman - செம்மேனியம்மான்  
Chempavalan - செம்பவளன்  
Chemporchodhi - செம்பொற்சோதி  
Chemporriyagan - செம்பொற்றியாகன்  
Chemporul - செம்பொருள்  
Chengkankadavul - செங்கன்கடவுள்  
Chenneriyappan - செந்நெறியப்பன்  
Chenychadaiyan - செஞ்சடையன்  
Chenychadaiyappan - செஞ்சடையப்பன்  
Chenychudarchchadaiyan - செஞ்சுடர்ச்சடையன்  
Cherakkaiyan - சேராக்கையன்  
Chetchiyan - சேட்சியன்  
Cheyizaibagan - சேயிழைபாகன்  
Cheyizaipangan - சேயிழைபங்கன்  
Cheyyachadaiyan - செய்யச்சடையன்  
Chirrambalavanan - சிற்றம்பலவாணன்  
Chiththanathan - சித்தநாதன்  
Chittan - சிட்டன்  
Chivan - சிவன்  
Chodhi - சோதி  
Chodhikkuri - சோதிக்குறி  
Chodhivadivu - சோதிவடிவு  
Chodhiyan - சோதியன்  
Chokkalingam - சொக்கலிங்கம்  
Chokkan - சொக்கன்  
Chokkanathan - சொக்கநாதன்  
Cholladangan - சொல்லடங்கன்  
Chollarkariyan - சொல்லற்கரியான்  
Chollarkiniyan - சொல்லற்கினியான்  
Chopura Nathan - சோபுரநாதன்  
Chudalaippodipusi - சுடலைப்பொடிபூசி  
Chudalaiyadi - சுடலையாடி  
Chudar - சுடர்  
Chudaramaimeni - சுடரமைமேனி  
Chudaranaiyan - சுடரனையான்  
Chudarchadaiyan - சுடர்ச்சடையன்  
Chudarendhi - சுடரேந்தி  
Chudarkkannan - சுடர்க்கண்ணன்  
Chudarkkozundhu - சுடர்க்கொழுந்து  
Chudarkuri - சுடற்குறி  
Chudarmeni - சுடர்மேனி  
Chudarnayanan - சுடர்நயனன்  
Chudaroli - சுடரொளி  
Chudarviduchodhi - சுடர்விடுச்சோதி  
Chudarviziyan - சுடர்விழியன்  
Chulaithiirththan - சூலைதீர்த்தான்  
Chulamaraiyan - சூலமாரையன்  
Chulappadaiyan - சூலப்படையன்  
Dhanu - தாணு  
Dhevadhevan - தேவதேவன்  
Dhevan - தேவன்  
Edakanathan - ஏடகநாதன்  
Eduththapadham - எடுத்தபாதம்  
Ekamban - ஏகம்பன்  
Ekapathar - ஏகபாதர்  
Eliyasivam - எளியசிவம்  
Ellaiyiladhan - எல்லையிலாதான்  
Ellamunarndhon - எல்லாமுணர்ந்தோன்  
Ellorkkumiisan - எல்லோர்க்குமீசன்  
Emperuman - எம்பெருமான்  
Enakkomban - ஏனக்கொம்பன்  
Enanganan - ஏனங்காணான்  
Enaththeyiran - ஏனத்தெயிறான்  
Enavenmaruppan - ஏனவெண்மருப்பன்  
Engunan - எண்குணன்  
Enmalarchudi - எண்மலர்சூடி  
Ennaththunaiyirai - எண்ணத்துனையிறை  
Ennattavarkkumirai - எந்நாட்டவர்க்குமிறை  
Ennuraivan - எண்ணுறைவன்  
Ennuyir - என்னுயிர்  
Enrumezilan - என்றுமெழிலான்  
Enthai - எந்தை  
Enthay - எந்தாய்  
En Tholar - எண் தோளர்  
Entolan - எண்டோளன்  
Entolavan - எண்டோளவன்  
Entoloruvan - எண்டோளொருவன்  
Eramarkodiyan - ஏறமர்கொடியன்  
Ereri - ஏறெறி  
Eripolmeni - எரிபோல்மேனி  
Eriyadi - எரியாடி  
Eriyendhi - எரியேந்தி  
Erran - ஏற்றன்  
Erudaiiisan - ஏறுடைஈசன்  
Erudaiyan - ஏறுடையான்  
Erudheri - எருதேறி  
Erudhurvan - எருதூர்வான்  
Erumbiisan - எரும்பீசன்  
Erurkodiyon - ஏறூர்கொடியோன்  
Eruyarththan - ஏறுயர்த்தான்  
Eyilattan - எயிலட்டான்  
Eyilmunreriththan - எயில்மூன்றெரித்தான்  
Ezhaipagaththan - ஏழைபாகத்தான்  
Ezukadhirmeni - எழுகதிமேனி  
Ezulakali - ஏழுலகாளி  
Ezuththari Nathan - எழுத்தறிநாதன்  
Gangaichchadiayan - கங்கைச்சடையன்  
Gangaiyanjchenniyan - கங்கையஞ்சென்னியான்  
Gangaichudi - கங்கைசூடி  
Gangaivarchadaiyan - கங்கைவார்ச்சடையன்  
Gnanakkan - ஞானக்கண்  
Gnanakkozunthu - ஞானக்கொழுந்து  
Gnanamurththi - ஞானமூர்த்தி  
Gnanan - ஞானன்  
Gnananayakan - ஞானநாயகன்  
Guru - குரு  
Gurumamani - குருமாமணி  
Gurumani - குருமணி  
Idabamurvan - இடபமூர்வான்  
Idaimarudhan - இடைமருதன்  
Idaiyarrisan - இடையாற்றீசன்  
Idaththumaiyan - இடத்துமையான்  
Ichan - ஈசன்  
Idili - ஈடிலி  
Iirottinan - ஈரோட்டினன்  
Iisan - ஈசன்  
Ilakkanan - இலக்கணன்  
Ilamadhichudi - இளமதிசூடி  
Ilampiraiyan - இளம்பிறையன்  
Ilangumazuvan - இலங்குமழுவன்  
Illan - இல்லான்  
Imaiyalkon - இமையாள்கோன்  
Imaiyavarkon - இமையவர்கோன்  
Inaiyili - இணையிலி  
Inamani - இனமணி  
Inban - இன்பன்  
Inbaniingan - இன்பநீங்கான்  
Indhusekaran - இந்துசேகரன்  
Indhuvaz Chadaiyan - இந்துவாழ்சடையன்  
Iniyan - இனியன்  
Iniyan - இனியான்  
Iniyasivam - இனியசிவம்  
Irai - இறை  
Iraivan - இறைவன்  
Iraiyan - இறையான்  
Iraiyanar - இறையனார்  
Iramanathan - இராமநாதன்  
Irappili - இறப்பிலி  
Irasasingkam - இராசசிங்கம்  
Iravadi - இரவாடி  
Iraviviziyan - இரவிவிழியன்  
Irilan - ஈறிலான் -  
Iruvareththuru - இருவரேத்துரு  
Iruvarthettinan - இருவர்தேட்டினன்  
Isaipadi - இசைபாடி  
Ittan - இட்டன்  
Iyalbazagan - இயல்பழகன்  
Iyamanan - இயமானன்  
Kadaimudinathan - கடைமுடிநாதன்  
Kadalvidamundan - கடல்விடமுண்டான்  
Kadamba Vanaththirai - கடம்பவனத்திறை  
Kadavul - கடவுள்  
Kadhir Nayanan - கதிர்நயனன்  
Kadhirkkannan - கதிர்க்கண்ணன்  
Kaichchinanathan - கைச்சினநாதன்  
Kalabayiravan - காலபயிரவன்  
Kalai - காளை  
Kalaikan - களைகண்  
Kalaippozudhannan - காலைப்பொழுதன்னன்  
Kalaiyan - கலையான்  
Kalaiyappan - காளையப்பன்  
Kalakalan - காலகாலன்  
Kalakandan - காளகண்டன்  
Kalarmulainathan - களர்முளைநாதன்  
Kalirruriyan - களிற்றுரியன்  
Kalirrurivaipporvaiyan - களிற்றுரிவைப்போர்வையான்  
Kallalnizalan - கல்லால்நிழலான்  
Kalvan - கள்வன்  
Kamakopan - காமகோபன்  
Kamalapathan - கமலபாதன்  
Kamarkayndhan - காமற்காய்ந்தான்  
Kanaladi - கனலாடி  
Kanalarchadaiyan - கனலார்ச்சடையன்  
Kanalendhi - கனலேந்தி  
Kanalmeni - கனல்மேனி  
Kanalviziyan - கனல்விழியன்  
Kananathan - கணநாதன்  
Kanarchadaiyan - கனற்ச்சடையன்  
Kanchumandhanerriyan - கண்சுமந்தநெற்றியன்  
Kandan - கண்டன்  
Kandthanarthathai - கந்தனார்தாதை  
Kandikaiyan - கண்டிகையன்  
Kandikkazuththan - கண்டிக்கழுத்தன்  
Kangkalar - கங்காளர்  
Kangkanayakan - கங்காநாயகன்  
Kani - கனி  
Kanichchivanavan - கணிச்சிவாணவன்  
Kanmalarkondan - கண்மலர்கொண்டான்  
Kanna - கண்ணா  
Kannalan - கண்ணாளன்  
Kannayiranathan - கண்ணாயிரநாதன்  
Kannazalan - கண்ணழலான்  
Kannudhal - கண்ணுதல்  
Kannudhalan - கண்ணுதலான்  
Kantankaraiyan - கண்டங்கறையன்  
Kantankaruththan - கண்டங்கருத்தான்  
Kapalakkuththan - காபாலக்கூத்தன்  
Kapali - கபாலி  
Kapali - காபாலி  
Karaikkantan - கறைக்கண்டன்  
Karaimidarran - கறைமிடற்றன்  
Karaimidarrannal - கறைமிடற்றண்ணல்  
Karanan - காரணன்  
Karandthaichchudi - கரந்தைச்சூடி  
Karaviiranathan - கரவீரநாதன்  
Kariyadaiyan - கரியாடையன்  
Kariyuriyan - கரியுரியன்  
Karpaganathan - கற்பகநாதன்  
Karpakam - கற்பகம்  
Karraichchadaiyan - கற்றைச்சடையன்  
Karraivarchchadaiyan - கற்றைவார்ச்சடையான்  
Karumidarran - கருமிடற்றான்  
Karuththamanikandar - கறுத்தமணிகண்டர்  
Karuththan - கருத்தன்  
Karuththan - கருத்தான்  
Karuvan - கருவன்  
Kathalan - காதலன்  
Kattangkan - கட்டங்கன்  
Kavalalan - காவலாளன்  
Kavalan - காவலன்  
Kayilainathan - கயிலைநாதன்  
Kayilaikkizavan - கயிலைக்கிழவன்  
Kayilaimalaiyan - கயிலைமலையான்  
Kayilaimannan - கயிலைமன்னன்  
Kayilaippadhiyan - கயிலைப்பதியன்  
Kayilaipperuman - கயிலைபெருமான்  
Kayilaivendhan - கயிலைவேந்தன்  
Kayilaiyamarvan - கயிலையமர்வான்  
Kayilaiyan - கயிலையன்  
Kayilaiyan - கயிலையான்  
Kayilayamudaiyan - கயிலாயமுடையான்  
Kayilayanathan - கயிலாயநாதன்  
Kazarchelvan - கழற்செல்வன்  
Kedili - கேடிலி  
Kediliyappan - கேடிலியப்பன்  
Kezalmaruppan - கேழல்மறுப்பன்  
Kezarkomban - கேழற்கொம்பன்  
Kiirranivan - கீற்றணிவான்  
Ko - கோ  
Kodika Iishvaran - கோடிக்காஈச்வரன்  
Kodikkuzagan - கோடிக்குழகன்  
Kodukotti - கொடுகொட்டி  
Kodumudinathan - கொடுமுடிநாதன்  
Kodunkunrisan - கொடுங்குன்றீசன்  
Kokazinathan - கோகழிநாதன்  
Kokkaraiyan - கொக்கரையன்  
Kokkiragan - கொக்கிறகன்  
Kolachchadaiyan - கோலச்சடையன்  
Kolamidarran - கோலமிடற்றன்  
Koliliyappan - கோளிலியப்பன்  
Komakan - கோமகன்  
Koman - கோமான்  
Kombanimarban - கொம்பணிமார்பன்  
Kon - கோன்  
Konraialangkalan - கொன்றை அலங்கலான்  
Konraichudi - கொன்றைசூடி  
Konraiththaron - கொன்றைத்தாரோன்  
Konraivendhan - கொன்றைவேந்தன்  
Korravan - கொற்றவன்  
Kozundhu - கொழுந்து  
Kozundhunathan - கொழுந்துநாதன்  
Kudamuzavan - குடமுழவன்  
Kudarkadavul - கூடற்கடவுள்  
Kuduvadaththan - கூடுவடத்தன்  
Kulaivanangunathan - குலைவணங்குநாதன்  
Kulavan - குலவான்  
Kumaran - குமரன்  
Kumaranradhai - குமரன்றாதை  
Kunakkadal - குணக்கடல்  
Kunarpiraiyan - கூனற்பிறையன்  
Kundalachcheviyan - குண்டலச்செவியன்  
Kunra Ezilaan - குன்றாஎழிலான்  
Kupilan - குபிலன்  
Kuravan - குரவன்  
Kuri - குறி  
Kuriyilkuriyan - குறியில்குறியன்  
Kuriyilkuththan - குறியில்கூத்தன்  
Kuriyuruvan - குறியுருவன்  
Kurram Poruththa Nathan - குற்றம்பொருத்தநாதன்  
Kurran^Kadindhan - கூற்றங்கடிந்தான்  
Kurran^Kayndhan - கூற்றங்காய்ந்தான்  
Kurran^Kumaiththan - கூற்றங்குமத்தான்  
Kurrudhaiththan - கூற்றுதைத்தான்  
Kurumpalanathan - குறும்பலாநாதன்  
Kurundhamarguravan - குருந்தமர்குரவன்  
Kurundhamevinan - குருந்தமேவினான்  
Kuththan - கூத்தன்  
Kuththappiran - கூத்தபிரான்  
Kuvilamakizndhan - கூவிளமகிழ்ந்தான்  
Kuvilanychudi - கூவிளஞ்சூடி  
Kuvindhan - குவிந்தான்  
Kuzagan - குழகன்  
Kuzaikadhan - குழைகாதன்  
Kuzaithodan - குழைதோடன்  
Kuzaiyadu Cheviyan - குழையாடுசெவியன்  
Kuzarchadaiyan - குழற்ச்சடையன்  
Machilamani - மாசிலாமணி  
Madandhaipagan - மடந்தைபாகன்  
Madavalbagan - மடவாள்பாகன்  
Madha - மாதா  
Madhavan - மாதவன்  
Madhevan - மாதேவன்  
Madhimuththan - மதிமுத்தன்  
Madhinayanan - மதிநயனன்  
Madhirukkum Padhiyan - மாதிருக்கும் பாதியன்  
Madhivanan - மதிவாணன்  
Madhivannan - மதிவண்ணன்  
Madhiviziyan - மதிவிழியன்  
Madhorubagan - மாதொருபாகன்  
Madhupadhiyan - மாதுபாதியன்  
Maikolcheyyan - மைகொள்செய்யன்  
Mainthan - மைந்தன்  
Maiyanimidaron - மையணிமிடறோன்  
Maiyarkantan - மையார்கண்டன்  
Makayan Udhirankondan - மாகாயன் உதிரங்கொண்டான்  
Malaimadhiyan - மாலைமதியன்  
Malaimakal Kozhunan - மலைமகள் கொழுநன்  
Malaivalaiththan - மலைவளைத்தான்  
Malaiyalbagan - மலையாள்பாகன்  
Malamili - மலமிலி  
Malarchchadaiyan - மலர்ச்சடையன்  
Malorubagan - மாலொருபாகன்  
Malvanangiisan - மால்வணங்கீசன்  
Malvidaiyan - மால்விடையன்  
Maman - மாமன்  
Mamani - மாமணி  
Mami - மாமி  
Man - மன்  
Manakkuzagan - மணக்குழகன்  
Manalan - மணாளன்  
Manaththakaththan - மனத்தகத்தான்  
Manaththunainathan - மனத்துணைநாதன்  
Manavachakamkadandhar - மனவாசகம்கடந்தவர்  
Manavalan - மணவாளன்  
Manavazagan - மணவழகன்  
Manavezilan - மணவெழிலான்  
Manchumandhan - மண்சுமந்தான்  
Mandharachchilaiyan - மந்தரச்சிலையன்  
Mandhiram - மந்திரம்  
Mandhiran - மந்திரன்  
Manendhi - மானேந்தி  
Mangaibagan - மங்கைபாகன்  
Mangaimanalan - மங்கைமணாளன்  
Mangaipangkan - மங்கைபங்கன்  
Mani - மணி  
Manidan - மானிடன்  
Manidaththan - மானிடத்தன்  
Manikantan - மணிகண்டன்  
Manikka Vannan - மாணிக்கவண்ணன்  
Manikkakkuththan - மாணிக்கக்கூத்தன்  
Manikkam - மாணிக்கம்  
Manikkaththiyagan - மாணிக்கத்தியாகன்  
Manmarikkaraththan - மான்மறிக்கரத்தான்  
Manimidarran - மணிமிடற்றான்  
Manivannan - மணிவண்ணன்  
Maniyan - மணியான்  
Manjchan - மஞ்சன்  
Manrakkuththan - மன்றக்கூத்தன்  
Manravanan - மன்றவாணன்  
Manruladi - மன்றுளாடி  
Manrulan - மன்றுளான்  
Mapperunkarunai - மாப்பெருங்கருணை  
Maraicheydhon - மறைசெய்தோன்  
Maraikkattu Manalan - மறைக்காட்டு மணாளன்  
Maraineri - மறைநெறி  
Maraipadi - மறைபாடி  
Maraippariyan - மறைப்பரியன்  
Maraiyappan - மறையப்பன்  
Maraiyodhi - மறையோதி  
Marakatham - மரகதம்  
Maraniiran - மாரநீறன்  
Maravan - மறவன்  
Marilamani - மாறிலாமணி  
Marili - மாறிலி  
Mariyendhi - மறியேந்தி  
Markantalan - மாற்கண்டாளன்  
Markaziyiindhan - மார்கழிஈந்தான்  
Marrari Varadhan - மாற்றறிவரதன்  
Marudhappan - மருதப்பன்  
Marundhan - மருந்தன்  
Marundhiisan - மருந்தீசன்  
Marundhu - மருந்து  
Maruvili - மருவிலி  
Masarrachodhi - மாசற்றசோதி  
Masaruchodhi - மாசறுசோதி  
Masili - மாசிலி  
Mathevan - மாதேவன்  
Mathiyar - மதியர்  
Maththan - மத்தன்  
Mathuran - மதுரன்  
Mavuriththan - மாவுரித்தான்  
Mayan - மாயன்  
Mazavidaippagan - மழவிடைப்பாகன்  
Mazavidaiyan - மழவிடையன்  
Mazuppadaiyan - மழுப்படையன்  
Mazuvalan - மழுவலான்  
Mazuvalan - மழுவாளன்  
Mazhuvali - மழுவாளி  
Mazhuvatpadaiyan - மழுவாட்படையன்  
Mazuvendhi - மழுவேந்தி  
Mazuvudaiyan - மழுவுடையான்  
Melar - மேலர்  
Melorkkumelon - மேலோர்க்குமேலோன்  
Meruvidangan - மேருவிடங்கன்  
Meruvillan - மேருவில்லன்  
Meruvilviiran - மேருவில்வீரன்  
Mey - மெய்  
Meypporul - மெய்ப்பொருள்  
Meyyan - மெய்யன்  
Miinkannanindhan - மீன்கண்ணணிந்தான்  
Mikkarili - மிக்காரிலி  
Milirponnan - மிளிர்பொன்னன்  
Minchadaiyan - மின்சடையன்  
Minnaruruvan - மின்னாருருவன்  
Minnuruvan - மின்னுருவன்  
Mudhalillan - முதலில்லான்  
Mudhalon - முதலோன்  
Mudhirappiraiyan - முதிராப்பிறையன்  
Mudhukattadi - முதுகாட்டாடி  
Mudhukunriisan - முதுகுன்றீசன்  
Mudivillan - முடிவில்லான்  
Mukkanmurthi - முக்கண்மூர்த்தி  
Mukkanan - முக்கணன்  
Mukkanan - முக்கணான்  
Mukkannan - முக்கண்ணன்  
Mukkatkarumbu - முக்கட்கரும்பு  
Mukkonanathan - முக்கோணநாதன்  
Mulai - முளை  
Mulaimadhiyan - முளைமதியன்  
Mulaivenkiirran - முளைவெண்கீற்றன்  
Mulan - மூலன்  
Mulanathan - மூலநாதன்  
Mulaththan - மூலத்தான்  
Mullaivananathan - முல்லைவனநாதன்  
Mummaiyinan - மும்மையினான்  
Muni - முனி  
Munnayanan - முன்னயனன்  
Munnon - முன்னோன்  
Munpan - முன்பன்  
Munthai - முந்தை  
Muppilar - மூப்பிலர்  
Muppuram Eriththon - முப்புரம் எறித்தோன்  
Murramadhiyan - முற்றாமதியன்  
Murrunai - முற்றுணை  
Murrunarndhon - முற்றுணர்ந்தோன்  
Murrunychadaiyan - முற்றுஞ்சடையன்  
Murththi - மூர்த்தி  
Murugavudaiyar - முருகாவுடையார்  
Murugudaiyar - முருகுடையார்  
Muthaliyar - முதலியர்  
Muthalvan - முதல்வன்  
Muththan - முத்தன்  
Muththar Vannan - முத்தார் வண்ணன்  
Muththilangu Jodhi - முத்திலங்குஜோதி  
Muththiyar - முத்தியர்  
Muththu - முத்து  
Muththumeni - முத்துமேனி  
Muththuththiral - முத்துத்திரள்  
Muvakkuzagan - மூவாக்குழகன்  
Muvameniyan - மூவாமேனியன்  
Muvamudhal - மூவாமுதல்  
Muvarmudhal - மூவர்முதல்  
Muvilaichchulan - மூவிலைச்சூலன்  
Muvilaivelan - மூவிலைவேலன்  
Muviziyon - மூவிழையோன்  
Muyarchinathan - முயற்சிநாதன்  
Muzudharindhon - முழுதறிந்தோன்  
Muzudhon - முழுதோன்  
Muzhumudhal - முழுமுதல்  
Muzudhunarchodhi - முழுதுணர்ச்சோதி  
Muzudhunarndhon - முழுதுணர்ந்தோன்  
Nadan - நடன்  
Nadhichadaiyan - நதிச்சடையன்  
Nadhichudi - நதிசூடி  
Nadhiyarchadaiyan - நதியார்ச்சடையன்  
Nadhiyurchadaiyan - நதியூர்ச்சடையன்  
Naduthariyappan - நடுத்தறியப்பன்  
Naguthalaiyan - நகுதலையன்  
Nakkan - நக்கன்  
Nallan - நல்லான்  
Nallasivam - நல்லசிவம்  
Nalliruladi - நள்ளிருளாடி  
Namban - நம்பன்  
Nambi - நம்பி  
Nanban - நண்பன்  
Nandhi - நந்தி  
Nandhiyar - நந்தியார்  
Nanychamudhon - நஞ்சமுதோன்  
Nanychanikantan - நஞ்சணிகண்டன்  
Nanycharththon - நஞ்சார்த்தோன்  
Nanychundon - நஞ்சுண்டோன்  
Nanychunkantan - நஞ்சுண்கண்டன்  
Nanychunkarunaiyan - நஞ்சுண்கருணையன்  
Nanychunnamudhan - நஞ்சுண்ணமுதன்  
Nanychunporai - நஞ்சுண்பொறை  
Narchadaiyan - நற்ச்சடையன்  
Naripagan - நாரிபாகன்  
Narravan - நற்றவன்  
Narrunai - நற்றுணை  
Narrunainathan - நற்றுணைநாதன்  
Nasaiyili - நசையிலி  
Nathan - நாதன்  
Nathi - நாதி  
Nattamadi - நட்டமாடி  
Nattamunron - நாட்டமூன்றோன்  
Nattan - நட்டன்  
Nattavan - நட்டவன்  
Navalan - நாவலன்  
Navalechcharan - நாவலேச்சரன்  
Nayadi Yar - நாயாடி யார்  
Nayan - நயன்  
Nayanachchudaron - நயனச்சுடரோன்  
Nayanamunran - நயனமூன்றன்  
Nayananudhalon - நயனநுதலோன்  
Nayanar - நாயனார்  
Nayanaththazalon - நயனத்தழலோன்  
Nedunychadaiyan - நெடுஞ்சடையன்  
Nellivananathan - நெல்லிவனநாதன்  
Neri - நெறி  
Nerikattunayakan - நெறிகாட்டுநாயகன்  
Nerrichchudaron - நெற்றிச்சுடரோன்  
Nerrikkannan - நெற்றிக்கண்ணன்  
Nerrinayanan - நெற்றிநயனன்  
Nerriyilkannan - நெற்றியில்கண்ணன்  
Nesan - நேசன்  
Neyyadiyappan - நெய்யாடியப்பன்  
Nidkandakan - நிட்கண்டகன்  
Niilakantan - நீலகண்டன்  
Niilakkudiyaran - நீலக்குடியரன்  
Niilamidarran - நீலமிடற்றன்  
Niilchadaiyan - நீள்சடையன்  
Niinerinathan - நீனெறிநாதன்  
Niiradi - நீறாடி  
Niiranichemman - நீறணிச்செம்மான்  
Niiranichudar - நீறணிசுடர்  
Niiranikunram - நீறணிகுன்றம்  
Niiranimani - நீறணிமணி  
Niiraninudhalon - நீறணிநுதலோன்  
Niiranipavalam - நீறணிபவளம்  
Niiranisivan - நீறணிசிவன்  
Niirarmeniyan - நீறர்மேனியன்  
Niirchchadaiyan - நீர்ச்சடையன்  
Niireruchadaiyan - நீறேறுசடையன்  
Niireruchenniyan - நீறேறுசென்னியன்  
Niirran - நீற்றன்  
Niirudaimeni - நீறுடைமேனி  
Nirupusi - நீறுபூசி  
Nikarillar - நிகரில்லார்  
Nilachadaiyan - நிலாச்சடையன்  
Nilavanichadaiyan - நிலவணிச்சடையன்  
Nilavarchadaiyan - நிலவார்ச்சடையன்  
Nimalan - நிமலன்  
Ninmalan - நின்மலன்  
Ninmalakkozhunddhu - நீன்மலக்கொழுந்து  
Nimirpunchadaiyan - நிமிர்புன்சடையன்  
Niramayan - நிராமயன்  
Niramba Azagiyan - நிரம்பஅழகியன்  
Niraivu - நிறைவு  
Niruththan - நிருத்தன்  
Nithi - நீதி  
Niththan - நித்தன்  
Nokkamunron - நோக்கமூன்றோன்  
Nokkuruanalon - நோக்குறுஅனலோன்  
Nokkurukadhiron - நோக்குறுகதிரோன்  
Nokkurumadhiyon - நோக்குறுமதியோன்  
Nokkurunudhalon - நோக்குறுநுதலோன்  
Noyyan - நொய்யன்  
Nudhalorviziyan - நுதலோர்விழியன்  
Nudhalviziyan - நுதல்விழியன்  
Nudhalviziyon - நுதல்விழியோன்  
Nudharkannan - நுதற்கண்ணன்  
Nunnidaikuran - நுண்ணிடைகூறன்  
Nunnidaipangan - நுண்ணிடைபங்கன்  
Nunniyan - நுண்ணியன்  
Odaniyan - ஓடணியன்  
Odarmarban - ஓடார்மார்பன்  
Odendhi - ஓடேந்தி  
Odhanychudi - ஓதஞ்சூடி  
Olirmeni - ஒளிர்மேனி  
Ongkaran - ஓங்காரன்  
Ongkaraththudporul - ஓங்காரத்துட்பொருள்  
Opparili - ஒப்பாரிலி  
Oppili - ஒப்பிலி  
Orraippadavaravan - ஒற்றைப்படவரவன்  
Oruthalar - ஒருதாளர்  
Oruththan - ஒருத்தன்  
Oruthunai - ஒருதுணை  
Oruvamanilli - ஒருவமனில்லி  
Oruvan - ஒருவன்  
Ottiichan - ஓட்டீசன்  
Padarchadaiyan - படர்ச்சடையன்  
Padhakamparisuvaiththan - பாதகம்பரிசுவைத்தான்  
Padhimadhinan - பாதிமாதினன்  
Padikkasiindhan - படிகாசீந்தான்  
Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன்  
Padiran - படிறன்  
Pagalpalliruththon - பகல்பல்லிறுத்தோன்  
Pakavan - பகவன்  
Palaivana Nathan - பாலைவனநாதன்  
Palannaniirran - பாலன்னநீற்றன்  
Palar - பாலர்  
Palichchelvan - பலிச்செல்வன்  
Paliithadhai - பாலீதாதை  
Palikondan - பலிகொண்டான்  
Palinginmeni - பளிங்கின்மேனி  
Palitherchelvan - பலித்தேர்செல்வன்  
Pallavanathan - பல்லவநாதன்  
Palniirran - பால்நீற்றன்  
Palugandha Iisan - பாலுகந்தஈசன்  
Palvanna Nathan - பால்வண்ணநாதன்  
Palvannan - பால்வண்ணன்  
Pambaraiyan - பாம்பரையன்  
Pampuranathan - பாம்புரநாதன்  
Panban - பண்பன்  
Pandangkan - பண்டங்கன்  
Pandaram - பண்டாரம்  
Pandarangan - பண்டரங்கன்  
Pandarangan - பாண்டரங்கன்  
Pandippiran - பாண்டிபிரான்  
Pangkayapathan - பங்கயபாதன்  
Panimadhiyon - பனிமதியோன்  
Panimalaiyan - பனிமலையன்  
Panivarparru - பணிவார்பற்று  
Paraayththuraiyannal - பராய்த்துறையண்ணல்  
Paramamurththi - பரமமூர்த்தி  
Paraman - பரமன்  
Paramayoki - பரமயோகி  
Paramessuvaran - பரமேச்சுவரன்  
Parametti - பரமேட்டி  
Paramparan - பரம்பரன்  
Paramporul - பரம்பொருள்  
Paran - பரன்  
Paranjchothi - பரஞ்சோதி  
Paranjchudar - பரஞ்சுடர்  
Paraparan - பராபரன்  
Parasudaikkadavul - பரசுடைக்கடவுள்  
Parasupani - பரசுபாணி  
Parathaththuvan - பரதத்துவன்  
Paridanychuzan - பாரிடஞ்சூழன்  
Paridhiyappan - பரிதியப்பன்  
Parrarran - பற்றற்றான்  
Parraruppan - பற்றறுப்பான்  
Parravan - பற்றவன்  
Parru - பற்று  
Paruppan - பருப்பன்  
Parvati Manalan - பார்வதி மணாளன்  
Pasamili - பாசமிலி  
Pasanasan - பாசநாசன்  
Pasuveri - பசுவேறி  
Pasumpon - பசும்பொன்  
Pasupathan - பாசுபதன்  
Pasupathi - பசுபதி  
Paththan - பத்தன்  
Pattan - பட்டன்  
Pavala Vannan - பவளவண்ணன்  
Pavalach Cheyyon - பவளச்செய்யோன்  
Pavalam - பவளம்  
Pavan - பவன்  
Pavanasan - பாவநாசன்  
Pavanasar - பாவநாசர்  
Payarruraran - பயற்றூரரன்  
Pazaiyan - பழையான்  
Pazaiyon - பழையோன்  
Pazakan - பழகன்  
Pazamalainathan - பழமலைநாதன்  
Pazanappiran - பழனப்பிரான்  
Pazavinaiyaruppan - பழவினையறுப்பான்  
Pemman - பெம்மான்  
Penbagan - பெண்பாகன்  
Penkuran - பெண்கூறன்  
Pennagiyaperuman - பெண்ணாகியபெருமான்  
Pennamar Meniyan - பெண்ணமர் மேனியன்  
Pennanaliyan - பெண்ணாணலியன்  
Pennanmeni - பெண்ணாண்மேனி  
Pennanuruvan - பெண்ணானுருவன்  
Pennidaththan - பெண்ணிடத்தான்  
Pennorubagan - பெண்ணொருபாகன்  
Pennorupangan - பெண்ணொருபங்கன்  
Pennudaipperundhakai - பெண்ணுடைப்பெருந்தகை  
Penparrudhan - பெண்பாற்றூதன்  
Peralan - பேராளன்  
Perambalavanan - பேரம்பலவாணன்  
Perarulalan - பேரருளாளன்  
Perayiravan - பேராயிரவன்  
Perchadaiyan - பேர்ச்சடையன்  
Perezuththudaiyan - பேரெழுத்துடையான்  
Perinban - பேரின்பன்  
Periyakadavul - பெரியகடவுள்  
Periyan - பெரியான்  
Periya Peruman - பெரிய பெருமான்  
Periyaperumanadikal - பெரியபெருமான் அடிகள்  
Periyasivam - பெரியசிவம்  
Periyavan - பெரியவன்  
Peroli - பேரொளி  
Perolippiran - பேரொளிப்பிரான்  
Perrameri - பெற்றமேறி  
Perramurthi - பெற்றமூர்த்தி  
Peruman - பெருமான்  
Perumanar - பெருமானார்  
Perum Porul - பெரும் பொருள்  
Perumpayan - பெரும்பயன்  
Perundhevan - பெருந்தேவன்  
Perunkarunaiyan - பெருங்கருணையன்  
Perunthakai - பெருந்தகை  
Perunthunai - பெருந்துணை  
Perunychodhi - பெருஞ்சோதி  
Peruvudaiyar - பெருவுடையார்  
Pesarkiniyan - பேசற்கினியன்  
Picchar - பிச்சர்  
Pichchaiththevan - பிச்சைத்தேவன்  
Pidar - பீடர்  
Pinjgnakan - பிஞ்ஞகன்  
Piraichchenniyan - பிறைச்சென்னியன்  
Piraichudan - பிறைசூடன்  
Piraichudi - பிறைசூடி  
Piraikkanniyan - பிறைக்கண்ணியன்  
Piraikkirran - பிறைக்கீற்றன்  
Piraiyalan - பிறையாளன்  
Piran - பிரான்  
Pirapparuppon - பிறப்பறுப்போன்  
Pirappili - பிறப்பிலி  
Piravapperiyon - பிறவாப்பெரியோன்  
Piriyadhanathan - பிரியாதநாதன்  
Pitha - பிதா  
Piththan - பித்தன்  
Podiyadi - பொடியாடி  
Podiyarmeni - பொடியார்மேனி  
Pogam - போகம்  
Pokaththan - போகத்தன்  
Pon - பொன்  
Ponmalaivillan - பொன்மலைவில்லான்  
Ponmanuriyan - பொன்மானுரியான்  
Ponmeni - பொன்மேனி  
Ponnambalak Kuththan - பொன்னம்பலக்கூத்தன்  
Ponnambalam - பொன்னம்பலம்  
Ponnan - பொன்னன்  
Ponnarmeni - பொன்னார்மேனி  
Ponnayiramarulvon - பொன்னாயிரமருள்வோன்  
Ponnuruvan - பொன்னுருவன்  
Ponvaiththanayakam - பொன்வைத்தநாயகம்  
Poraziyiindhan - போராழிஈந்தான்  
Porchadaiyan - பொற்சசையன்  
Poruppinan - பொருப்பினான்  
Poyyili - பொய்யிலி  
Pugaz - புகழ்  
Pugazoli - புகழொளி  
Pulaichchudi - பூளைச்சூடி  
Puliththolan - புலித்தோலன்  
Puliyadhaladaiyan - புலியதலாடையன்  
Puliyadhalan - புலியதளன்  
Puliyudaiyan - புலியுடையன்  
Puliyuriyan - புலியுரியன்  
Pulkanan - புள்காணான்  
Punachadaiyan - புனசடையன்  
Punalarchadaiyan - புனலார்சடையன்  
Punalchudi - புனல்சூடி  
Punalendhi - புனலேந்தி  
Punanular - பூணநூலர்  
Punarchadaiyan - புனற்சடையன்  
Punarchip Porul - புணர்ச்சிப் பொருள்  
Punavayilnathan - புனவாயில்நாதன்  
Punchadaiyan - புன்சடையன்  
Pungkavan - புங்கவன்  
Punidhan - புனிதன்  
Punniyamurththi - புண்ணியமூர்த்தி  
Punniyan - புண்ணியன்  
Puramaviththan - புரமவித்தான்  
Purameriththan - புரமெரித்தான்  
Purameydhan - புரமெய்தான்  
Puramureriththan - புரமூரெரித்தான்  
Puranamuni - புராணமுனி  
Puranan - புராணன்  
Puranycherran - புரஞ்செற்றான்  
Puranychuttan - புரஞ்சுட்டான்  
Purathanan - புராதனன்  
Purichadaiyan - புரிசடையன்  
Purinunmeni - புரிநூன்மேனி  
Purameri