Sunday, May 3, 2020

சிவ வழிபாடு ரகசியம்

சிவனுடைய  ஆலயத்திலே இருபெரும் தெய்வங்கள் அவருடனே இருப்பார்கள் ஒருவர் நந்தி-பெருமான் இன்னொருவர் சண்டிகேஸ்வரர் ஒருவர் காப்பாளர் ஆகும் இன்னொருவர் கணக்கை கொடுப்பவர  ஆகையால் சிவனுடைய ஆலயத்திற்கு செல்பவர்கள் இவரிடம் உத்தரவு பெறாத வரக்கூடாது ஆகையால் உங்களுக்கு வாழ்க்கையில்   நல்ல    வளங்களை பெறவேண்டுமென்றால் இவரை முறைப்படி வணங்கி உத்தரவு பெற்று சிவனின் ஆலயத்திலிருந்து நாம் வெளிவரவேண்டும். இவரை செவிட்டு சாமி என்று சிலர் அழைக்கிறார்  அப்படி  அழைக்கக்கூடாது அது பாவம்,ஆனால் உண்மையில்  எப்பொழுதும் சிவனைக் குறித்து ஆழ்ந்த தியானத்தில் இருப்பார் ஆகையால் இவரை தொந்தரவு செய்யாமல் மற்றும் கைத்தட்டி அவருடைய தியானத்தை கலைக்காமல் வணங்க வேண்டும். கைகளை அவரிடம்  திறந்து காட்டி ஆலயத்திலிருந்து  எதையும் எடுத்து செல்லவில்லை என்று அடையாளம் காட்டி உத்தரவு பெற்று ஆலயத்தை விட்டு வெளிவர வேண்டும் அப்படி செய்தால், நம் பாவ புண்ணியத்திற்கு தகுந்தார் போன்று அவர் சிவனிடம் நம்முடைய பிரார்த்தனை மற்றும் கணக்கை ஒப்படைத்து உத்தரவு பெற்று நம் வாழ்க்கையிலே அற்புதத்தித்தை ஏற்படுத்துவார் இப்படித்தான் அவரை வணங்க வேண்டும் இதுதான் சிவரகசியம் இனிமேல் இதை கடைபிடித்து உங்கள் வாழ்க்கையிலே  எல்லா வளமும் நலமும் பலமும் பெறலாம்.

No comments:

Post a Comment