Saturday, May 16, 2020

நரசிம்ம வழிபாடு முதல் பகுதி

நரசிம்மரை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு  கண்திருஷ்டி  தாக்காது.
 நரசிம்மருக்கு சிவப்பு அரளி செம்பருத்தி பூக்கள் பிடிக்கும்.
  கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால் நரசிம்ம வழிபாடு ஒற்றுமையை ஏற்படுத்தும்.
  நரசிம்ம விரதம் பெண்கள் கடைபிடிக்கலாம்  செவ்வாயன்று  சுத்தமாக ஆச்சாரமாக இருந்து வழிபட பலன் கிடைக்கும்.
 நரசிம்ம ஜெயந்தி அன்று கலசம் வைத்து வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை அவருடைய திருவுருவப் படத்தை வைத்தே வணங்கலாம்.
 வீட்டில் நரசிம்ம மூர்த்தியை வடமேற்கு    வாயு மூலையில் வைத்து வழிபட மிகச் சிறப்பான பலனைத் தரும்.
  நரசிம்ம ஜெயந்தி அன்று வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு நரசிம்ம வரலாறு  சொன்னால், பிரகலாதனுக்கு கிடைத்த நன்மைகள்  கிடைக்கும்.
 நரசிம்ம விரதம் இருப்பவர்கள் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை  தவிர்க்க வேண்டும்.
 நரசிம்மனின் அருளைப் பெறுவதற்கு பாகவதம் பாராயணம் செய்ய குறிப்பாக ஏழாவது மற்றும் ஒன்பதாவது  சர்கத்தை  பாராயணம் செய்வது மிகவும் நன்று.
 நரசிம்மரை வழிபட்டு சென்று  வேலை அல்லது தொழில்  செய்தால், எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

No comments:

Post a Comment