Tuesday, May 5, 2020

புதன் தோஷம் நீங்க சித்த்ர் வழி பாடு

ஜோதிட புலமை உங்களுக்கு குறைவாக இருக்கிறதா அப்பொழுது புதன் கெட்டு விட்டார்  என்று அர்த்தம்.
  படிப்பில் கணக்கு சரியாக வரவில்லையா நுண்ணிய பாடப்பிரிவுகளில் சரியான மதிப்பெண் எடுக்க முடியவில்லையா அப்பொழுது புதன் கெட்டு விட்டார்  என்று அர்த்தம்.
 தொழில் வியாபாரம் டிரேடிங் வியாபாரம் சரியாக செய்ய முடியவில்லையா அப்பொழுது புதன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 கவிதை கற்பனா சக்தி பேச்சுத்திறமை எல்லாம் அடிபட்டு போய்விட்டதா  அப்பொழுது புதன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 வங்கியில் வேலை கிடைக்கவில்லையா புதன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 சிஏ படிப்பு ஆடிட்டர் படிப்பு உங்களுக்கு வரவில்லையா அடிக்கடி தோல்வி   சந்திக்கிறீர்கள் என்றால் புதன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 ஆசிரியர் பேராசிரியர் பதவி கிடைக்கவில்லையா கல்வி வியாபாரம் சிறப்பாக இல்லையா புதன் கெட்டு விட்டார்  என்று அர்த்தம்.
 நரம்பு சம்பந்தப்பட்ட தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வருகிறது என்றால் புதன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
  தொழில் வரி வருமான வரி வியாபார வரி ஆகியவை யால்  நீங்கள் பாதிக்கப்பட்டால் புதன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 குழந்தைச்செல்வம் சரியாக கிடைக்கவில்லையா அப்பொழுது புதன் கெட்டு விட்டார் என்று அர்த்தம்.
 மேற்கண்ட  பாதிப்புகள் உங்களை விட்டு விலகி புதன் தோஷமும் உங்களுக்கு தீமை செய்யாத இருக்க இருபெரும் சித்தர்களை வணங்க வேண்டும். குறைந்தபட்சம் யாராவது ஒரு சித்தர்  வழிபாடு காலை நீங்கள் செய்துவர அதாவது 108 மந்திரம் தொடர்ந்து சொல்லி வர புதனால் ஏற்படுகின்ற தொல்லைகள் உங்களை அணுகாது. அந்த சக்தி வாய்ந்த மந்திரம் என்னவென்றால் ஓம் ஸ்ரீ இடைக்காட்டு சித்தர் போற்றி போற்றி. இரு சித்தர்கள் ஒருவர் வள்ளலார் சித்தர் இன்னொருவர்  இடை காட்டு   சித்தர் ஆவார்.

No comments:

Post a Comment