Sunday, May 31, 2020

வேலை கிடைக்க அற்புதமான பரிகாரம்



அன்பர்களே, இன்று நாம் எடுத்துக் கொண்டுள்ள தலைப்பு, "வேலையின்மை".

வேலையின்மை எதனால் வருகிறது, யாரைப்பாதிக்கின்றது, என்பதேயாகும்.

ஒருவரது "ஜனன ஜாதகத்திலே" வரும் பத்தாவது இடம்தான் "கர்மஸ்தானம்" என்று சொல்லப்படுகின்ற வேலைக்கான ஸ்தானம். அந்த வேலை ஸ்தானத்துக்குரிய கிரகம் 6இலோ, 8இலோ, 12இலோ மறைந்திருந்தால் அல்லது 6ஆம் ஆதி, 8ஆம் ஆதி, 12ஆம் ஆதி ஆகியவற்றுடன் இணைந்திருந்தால் சதா சர்வகாலம் அவர்களுக்கு வேலையில் பிரச்சினை இருக்கும். செய்து கொண்டிருக்கும் வேலையிலும் ஆர்வம் இருக்கிறது. அதை அவர்கள் ஒரு அதிருப்தியோடுதான் செய்து கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு மிகமிக சக்திவாய்ந்த பரிகாரத்தைதான் இன்று நாம் அளிக்க இருக்கிறோம். அதாவது இப்படிப்பட்டவர்கள், மாதத்தில் புனர்பூசம் என்ற நட்சத்திரத்தின் 4ஆம் பாதம், கடக ராசியிலே உலா வரும் நேரத்திலே, அதை ஜோதிடர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

புனர்பூசம் 1,2,3 மிதுனதிலிருக்கும் போது இந்த பூஜையை செய்யக் கூடாது. 4வது இடத்தில் வரும் புனர்பூசம் கடக ராசி சார்ந்ததாக இருக்கும்.

அப்போது, நல்லதொரு ஓரையில் ஆஞ்சநேய மூர்த்தியின், சுந்தரகாண்டம் என்ற புனித நூலை எடுத்துக் கொண்டு, ராமர் பட்டாபிஷேகம் படம், அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லுகின்ற படம். இதை வாங்கி வைத்துக் கொண்டு, சொல்லப்படுகின்ற புனர்பூசம், சந்திரன், கடகத்திலே வருகின்ற அந்த நேரத்தில் உங்களுடைய பூஜையை நீங்கள் துவங்கலாம்.

ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு அத்தியாயம் என்ற விதத்திலே அந்த அஞ்சநேய மூர்த்தியை வழிபட்டு, இராமரின் பட்டாபிஷேகப்படத்திற்கு முன்பு, வெல்லம் குழைத்த சம்பா கோதுமையில் தயாரித்த சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமாக படைத்து, ஒரு நாளைக்கு ஒரு சர்கம்(அத்தியாயம்) என்று நீங்கள் பாராயணம் செய்கின்ற காலகட்டத்தில், நீங்கள் சங்கல்பம் என்று எதை வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், உங்களுடைய ஜனன ஜாதகத்திலே உங்களுக்கு பாதகமாக இருக்கும் வேலைவாய்ப்புக்குரிய அந்த கிரகத்தை வைத்துக் கொண்டு, கடவுளை உளமார நினைத்து, உங்களுக்கு ஏற்ற நிரந்திரமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அதற்கு ஆஞ்சநேயமூர்த்தியின் கருணை கிடைக்க வேண்டுமன்று பிரார்தித்து பூஜையை துவங்க வேண்டும்.

அற்புதமான அந்த நாளில் அந்த காண்டத்திலுள்ள அத்தியாயத்தை இவர்கள் படித்து வரும் போது அவர்களுக்கு அதன் பலன் தெரிந்து விடும், 68 அத்தியாயங்கள் கொண்டதுதான் சுந்தர காண்டம். சுந்தரன் என்றாலே அழகு என்று அர்த்தம். ஆஞ்சநேய மூர்த்தி நினைத்து இந்த காண்டத்தை பயபக்தியோடு படித்து வருகின்ற நேரத்திலே நீங்கள் முயற்சி செய்து எதிர்பார்த்த வேலைவாய்ப்பு நிச்சயமாக உங்களுக்கு கிடைத்துவிடும். ஏனென்றால், ஆஞ்சநேயருக்கு கட்டுப்படாத கிரகங்களே இல ல. சதா சர்வகாலமும் சூரியனின் அம்சமாக இருக்கின்ற, இராமனை, அந்த ஆஞ்சநேயர் தியானத்திலே "ராம், ராம்"

என்று சொல்லிக் கொண்டிருப்பதால், அந்த சூரியனை சுற்றிதான், மற்ற கிரகங்கள் இயங்குகின்றன, என்று கூறுகிறது ஜோதிடம்.

அப்படிப்பட்ட, ராமமூர்த்தி, தசாவதாரத்திலே சூரியனை சுட்டிகாட்டிடும் கிரகமாக காட்டுகிறார். மேலும், ராமாயணத்தின் ஒரு பகுதிதான் இந்த சுந்தரகாண்டம், இந்த சுந்தரகாண்டத்தை நீங்கள், ஆரம்பம் முதல் தொடங்கி பாராயணம் செய்து, வரும்போது நிச்சயமாக மனமாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும்.

என்று கூறி இனிதே இப்பகுதியை நிறைவு செய்கிறோம்.

நிம்மதி மற்றும் மன அமைதி பெறுவதற்கான ஆலயவழிபாடு

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, மனநிம்மதியை பெறுவதற்கான பரிகாரம் பற்றியதாகும்.

பணம், பொருள், குடும்பம் என எவ்வளவு இருந்தாலும், மன அமைதி இருந்தால்தான் அதை அனுபவிக்க முடியும். நிம்மதி இல்லாதவனுக்கு சொர்க்கத்தில் கூட சுகம் கிடைக்காது. மனநிம்மதியின்றி குழப்பத்தில் வாடித்தவிப்போரை ஆறுதல் படுத்தும் "சிவன்" "திருப்பூர்" அருகே

"திருமுருகன்பூண்டியில்" இருக்கின்றார்.

முதலிலே ஜாதகரீதியாக யாருக்கெல்லாம் மனம் அமைதி அற்று காணப்படும்.

யாருடைய ஜாதகத்தில் சந்திரன் நீச்சம் பெறுகின்றதோ, யாருடைய ஜாதகத்திலே மனோகாரகன் என்று அழைக்கப்படும், சந்திரன் 6,8, 12-ல் மறைந்தால் அல்லது யாருடைய ஜாதகத்தில் சந்திரன் சர்ப்பங்களின் கால்கள் என்று வருணிக்கப்படுகின்ற ராகு, கேது இவர்களுடைய பாதசாரத்தில் இருக்கும்பொழுது அல்லது ராகு,கேது,சனி என்ற கடுமையான பாவிகளின் சேர்க்கை பெற்றிருக்கும்போது ஒருவருக்கு மனம் நிம்மதி அற்று காணப்படும்.

அந்த சூழ்நிலையிலே எந்தக் கோயிலுக்குச் சென்றால் மன நிம்மதி அடையும் என்பதையும் காண்போம். அவ்வாறு மன நிம்மதி வேண்டி இந்த திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயிலிலே வேண்ட பலன் கிடைக்கும். "சூரபத்மன்" எனும் அசுரன் ஆணவம் கொண்டு தேவர்களை சிறைபிடித்து துன்புறுத்தி வந்தான்.அவனது கொடுமையை தாங்க முடியாத தேவர்கள் தங்களை காக்கும்படி முருகனை வேண்டினார்கள்.

முருகப்பெருமான் அசுரனை "சம்ஹாரம்"

செய்தார். அவர் தெய்வமாக இருந்தாலும் கூட, அசுரனைக் கொன்றதால், "வீரக்கத்தி தோஷம்" அவருக்கு பற்றியது. அதனால், அவர் என்ன செய்தார் என்றால், இந்த கோவிலுக்கு சென்று தன்னுடைய வேலை கோயில் வாசலிலே குத்தி நிலைநிறுத்தி, உள்ள சென்று தன் தந்தையான சிவபெருமானை வேண்டிவணங்கும் பொழுது, அவருடைய வீரக்கத்திதோஷம் விலகியது.

இந்தக் கோயிலின் மற்றொரு அம்சம் என்னவென்றால், "வேலும், மயிலும்"

இல்லாமல் தனித்தன்மையோடு இருக்கும் முருகப்பெருமான் அழகாக காட்சியளிக்கின்றார். அவரையும் நீங்கள் வணங்கலாம்.

மன நோய்க்கு மருந்தாக இந்த ஸ்தலம் பிரதானமாக விளங்குகிறது.

"சித்தப்பிரமை", "மனக்குழப்பம்" உள்ள பக்தர்கள் இங்குள்ள "பிரம்ம தீர்த்தத்தில்"

நீராடி தெளிவு பெறலாம். தாங்கள் செய்தது எப்பேற்பட்ட பாவங்களாக இருந்தாலும் இந்த 'சண்முக தீர்த்தத்தில்" நீராடி போக்கலாம். தமக்கு வேண்டிய ஆகைகளும் நிறைவேற "பால்குடம், காவடி"

எடுத்து நேர்த்திகடனை செலுத்துகின்றார்கள். இப்படிப்பட்ட ஸ்தலங்களுக்கு நாம் செல்வதுதான் நம் அனைவருக்கும் பெருமையான ஒன்றாகும். இத்திருக்கோயில் திருமுருகன்பூண்டி திருத்தலமானது கோயம்புத்தூரிலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 5:30 மணி முதல் பகல் 12:45 மணிவரையிலும் மாலை 3:30 மணியிலிருந்து இரவு 8:15 மணிவரையிலும் திறந்திருக்கும்.

இப்பேற்பட்ட இத்தலத்திற்குச் சென்று நிறைவான மனநிம்மதி பெற வேண்டுமென்று என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

காதல் திருமணம் வெற்றி பெற பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, காதல் திருமணங்கள் அமையும் ஜாதகங்கள் பற்றியதாகும்.

"களஸ்திரகாரகன்' என்று அழைக்கப்படும் சுக்கிரன், ஒரு ஜாதகத்திலேவலிமையாக இருந்தால், லக்கனத்திலிருந்து எண்ணிவர ஐந்தாம் அதி ஏழில் இருந்தாலும், ஏழாம் ஆதி ஐந்தில் இருந்தாலும், அவர்களுக்கு காதல் திருமணம் கைகூடும்.

காதல் திருமணத்திற்கு ஏராளமான வாய்ப்பாடுகள் இருக்கின்றன. உங்களை அதிகம் குழப்பாது, ஒருசில வாய்ப்பாடுகளக் கூறி அதற்கான பரிகாரத்தையும் கூறுவதே சாலச்சிறந்தது.

ஐந்தாம் ஆதி, ஏழில் இருந்தாலும், ஏழாம் ஆதி ஐந்தில் இருந்தாலும் லக்கனாதிபதியும், சுக்கிரனும் வலிமை பெற்றிருந்தாலும். மேலும், ஏழாவது இடத்திலே சந்திரன் இருக்கப்பிறந்தவர்கள் சந்திரன் இருக்க அந்த அமைப்பை ஜாதகமாகக்கொண்டவர்கள், சந்திரன் ராகு அல்லது கேது சேரும் அமைப்பை உடையவர்கள் இவர்களுக்கெல்லாம் காதல் திருமணம் வரும்.

இந்தக் காதல் திருமணம் அனைவருக்கும் மகிழ்ச்சி தருமா? தரதா? என்பதை அவர்களின் ஜாதகம் காட்டும். இந்த காதல் திருமண அமைப்பு சில பெற்றோர்களுக்கு பிடிக்காத நிலையில் இருக்கும் பொழுது, அவர்களை எதிர்த்து காதல் மணம் புரிய தைரியமற்றவர்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும்பொழுது அந்த ஜாதகர்களுக்கு அளிக்கப்படும் விளக்கம் எப்படிப்பட்டதென்றால், நாம் பலகைகளில் காண்கிறோமே "விபத்துப்பகுதி" என்ற வாசகம் அதுபோலாகும். அதாவது அங்கு விபத்து நடக்காமல் இருப்பதை தடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும், ஒரு எச்சரிக்கை பலகையாகும். அதுபோல, இந்த வாலிப விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், வாலிபத்திலே வருகின்ற ஹார்மோன் விளையாட்டுக்களின்படி, இந்த அமைப்பிலிருந்து காக்க சில மார்க்கங்கள் கூறப்படுகிறது.

அதாவது, மேற்கூறிய அமைப்பின்படி இருப்பவர்கள், சுக்கிரன் அதிதேவதையான லஷ்மிதேவியை வழிபாடு செய்ய வேண்டும். சந்திரன் அதிதேவதையான அம்பாளை வழிபாடு செய்ய வேண்டும். சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லஷ்மிகளும் (எட்டு லஷ்மிகளும்) குடிகொண்டுள்ள அஷ்டலக்ஷ்மி கோயிலுக்கு

"நெய் தீபத்தில் தான்" லக்ஷ்மி தேவி உறைகிறாள் என்ற வாக்கின்படி மூன்று வேளைகளிலே வரும் சுக்கிரஹோரை என்று அழைக்கப்படும் ஒரு வெள்ளியன்று.

காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரையும், மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிவரையும், மாலை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரையும் தீபம் ஏற்றலாம். குறிப்பாக, இந்த நண்பகலைத் தவிர்த்து மற்ற இரண்டு வேளைகளிலே நெய் தீபம் ஏற்றி, மானசீகமாக லஷ்மிதேவியின் மஹா மந்த்ரத்தை ஆலயத்திலிருந்து கூறிவர, இப்படிப்பட்ட வாலிப விபத்து தடுக்கப்பட்டது, லஷ்மிதேவியின் அருளாசியால், கடாட்ச்சத்தால் உங்களின் தலையெழுத்து மாறும்.

மேலும், சந்திரன் அமைப்பை பெற்றவர்கள் சக்தியின் ஸ்தலங்களுக்குச் சென்று குறிப்பாக காஞ்சியிலே இருக்கின்ற காமாட்சியை வணங்கி வழிபட இந்தச் சுக்கிரனும், சந்திரனும் கட்டுப்படுகின்றார்கள். காமத்தின் ஆட்சிதான் காமாட்சி, காமத்தின் கோளாறே, இந்த காதல் விளையாட்டு, அந்த அன்னையை ஒரு திங்களன்று அல்லது வெள்ளியன்று சென்று நெய் தீபம் ஏற்றி அந்த அம்மனை வணங்கி வர, உங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடைபெறும்.

இதை மானசீகமாக செய்துவர நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன்கள் தெரியும் என்பதைக்கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

Saturday, May 30, 2020

கடனை அடைக்க எளிய வலிய பரிகாரம்



ஆன்மீக நண்பர்களே, நமது இன்று ஒரு தகவல்" ஜோதிடரத்னா , பரிகார சக்கரவர்த்தி.  ஸ்ரீகுமார் அவர்கள் வழங்கிவரும் பரிகாரமும் பலன்களும் பகுதியில் நாளொன்றுக்கு ஒரு பரிகாரம் என்ற ரீதியிலே தங்களுக்கு பரிகாரங்களும் அதற்க்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டு வகுகிறது அன்பர்கள் அதை பயனபடுத்தி பலன் பெற்று வருவதோடு மட்டுமின்றி பரிகங்களுக்கும் நல்லாதரவு அளித்து வருகிறார்கள். மிக்க மகிழ்ச்சி |

அன்பர்களே, இந்த பரிகாரமும், பலன்களும் பகுதியில் பல பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து காண்டுவரும் அன்பர்களாகிய நீங்கள் இதை ஒரு அற்புதமான பயனுள்ள பகுதியாக கூறி மனதார வாழ்த்தி, வாயார புகழ்கிறீர்கள் என்றால் உங்களின் பெருந்தன்மை அளவிட முடியாதது நீங்கள் வரும் எல்லா நலனும் பெற்று.

இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இனி மேற்கொண்டு பகுதியை தொடருவோம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது கடன் யாருக்கு அதிகம் ஏற்படுகிறது,

யாரை அதிகபட்சமாக அது தாக்குகின்றது அதற்குக் காரணகர்த்தா யார்? அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? என்பதை எல்லாம் ஒரு தொகுப்பாக காணவிருக்கின்றோம்

ஒரு ஜாதகத்திலே ஒருவருக்கு, கடன் இருக்கிறதா இல்லையா?

ஆறாவது இடமே ஒருவருடைய கடன்படும் நிலையை காட்டுகிறது. அந்த இடத்தை ரணம், ருண, சத்ரு என்று கூறுகின்றார்கள்

ருணம் என்றால் நாம் பெற்ற அவமானங்கள், அவமரியாதைகள், கடன்கள், சத்ரு என்றால் விரோதிகள் இந்த கடன் எப்படி தோன்றுகின்றது என்றால் ஒருவருடைய ஜாதகத்திலே, இரண்டாவது இடம் வருமானத்தைக் காட்டுகின்ற இடம் அந்த வருமானததைக் காட்டுகின்ற அதிபதி ஆறிலே சென்று மறைந்தால் அல்லது பத்தாம் ஆதி என்று சொல்லப்பட்டவர்.

ஆறில் சென்று இருந்தால் கடன் உருவாகின்றது இந்த கடன் உருவாக்கத்தை அதிகமாகக் கொடுப்பவர் செவ்வாய் ஆவார். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் ஆறிலே சென்று நின்றால் எட்டில் சென்று நின்றால் இந்த ஆறாவது ஸ்தானம், எட்டாவது ஸ்தானம் என்ற மோசமான இடத்தில் பூமிகாரகன் வீட்டைக் குறிக்கின்ற அந்த செவ்வாய் சென்று நின்றால் நிச்சயமாக கடன் தொல்லை உண்டாகும் அதே செவ்வாய் எட்டிலே சென்று மறையும்போது விட்டுப் பத்திரம் வங்கியில் அல்லது தனியார் நிறுவனங்களிலோ அடமானமாக சென்றுவிடும், பிரச்சினையிலிருந்து விடுபட இவர்களுக்கான சக்தி வாய்ந்த பரிகாரம் என்ன?

அதை இடைக்காட்டு சித்தர் அளிக்கும் விளக்கம் மூலமாக காணலாம். ஒருமுறை இடைக்காட்டுச்சித்தரை வழிபட்ட பக்தர் ஒருவர் சித்தரிடம் சுவாமி, நான் எந்த கடவுளை வணங்கினால், என் கடன் தொல்லையிலிருந்து, நான் விலக முடியும் என்று வினவினார்.

அதற்கு இடைக்காட்டு சித்தர் அவர்களின் சித்த மொழியிலே, பரிபாஷைகள் புரியாத வண்ணம் சில வார்த்தைகளைக்கூறி விடுவார். அது புரிந்தாய நமக்கு விடுதலை அதுபோன்று அறிவுரை கேட்டவரிடம் சித்தர், "ஏழயை வழிபாடு' இடையனை வழிபாடு", இளிச்சவாயனை வழிபாடு" என்று கூறினாராம். அப்போது அந்த பக்தருக்கு ஒன்றுமே புரியவில்லை. குழம்பினார்.

தனக்குத்தானே. யார் ஏழை? யார் இடையன்? யார் இளிச்சவாயன் என்று ஆழ்ந்து யோசிக்கும் பொழுது,விஷ்ணு அவதாரங்களிலே, மூன்று பேரை இடைக்காட்டு சித்தர் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதை உணர்ந்துகொண்டார். ஏழை எனக்குறிப்பிடப்பட்டவர் யாரென்றால், அரசகுலத்திலே பிறந்து விதியின் வசத்தால் நாடுகளில் அநாதை போன்று வாழ்த்தலர் இராமபிரான் அவரை

"ஏழை' என்றார் கிருஷ்ண பரமாத்மா ஆயர் குலத்தில் பிறந்த பேர் என்பதைச் ஈட்டும் விதமாக இடையன்' என்றார் இளிச்சவாயன் என்று சிரித்துக் கொண்டே இருக்கும் நரசிம்ம பெருமாளைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த நரசிம்ம பெருமாளை நாம் எடுத்துக்கொண்டால், இவரை வணங்குவதால் கடன் தொல்லைகளிலிருந்து மிக சுலபமாக வெளியே வந்து விடலாம். செவ்வாய் என்பது வினைய தத்துவத்தின்படி, நரசிம்மன் காட்டும், நரசிம்மன் வணங்கிய குழந்தை பிரகலாதனுக்கு

நரசிம்மர் உதவி செய்ய காத்திருந்தாராம்.

பிரகலாதன் எந்தத் பொருளை காட்டிலும் அதிலிருந்து வெளிபட அவர் தயாராக இருந்தார். அப்படிப்பட்ட நரசிம்மரை ஒரு செவ்வாய் தினத்தன்று, நீங்கள் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் நான்கு நரசிம்மரை வணங்கினால் நீங்கள் இந்த கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

அதாவது, "தவளைக்குப்பம்

அருகில் இருக்கின்ற அபிஷேகப்பாக்கம்"

என்ற இடத்திலிருக்கும் ஒரு நரசிம்மர்,

"பூவரசன்குப்பம்" என்ற இடத்திலே இருக்கின்ற ஒரு நரசிம்மர், பரிக்கல்"

என்ற இடத்திலிருக்கும் ஒரு நரசிம்மர், அந்தலீ என்ற கிராமத்தில் இருக்கின்ற இன்னொரு நரசிம்மர் இந்த நான்கு நரசிம்மர் களையும், ஒரே நேர்க்கோட்டில் அதாவது. கடலூர் மாவட்டத்தில் இரண்டு நரசிம்பர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நரசிம்மர்கள். இவர்களை வழிபட இந்த செல்வாய் ஆறு, எட்டிலிருந்து அவர்களைத் தாக்குவது குறைந்து கடனில் இருந்து விடுதலை அடையலாம்.

மேலும், இன்னொரு முறை இருக்கிறது.

ஆறு எட்டில் செல்வாய் இருந்தால் வழக்குப்பிரச்சினைவரும், அந்த வழக்குப் பிரச்சினையை தீர்க்கும் சக்திவாய்ந்தவராக காஞ்சிபுரத்திலே இருப்பவர்தான் வழக்கறுத்த ஈஸ்வரன்"

அவரை ஒவ்வொரு திங்களன்றும் நெய் தீபம் ஏற்றி வழிபட வழக்கு பிரச்சினைகளும் கடன் பிரச்சினைகள் கட்டுப்படும் என்பது உண்மை . அதை முறையாகப் பின் பற்றி கஷ்டம் தீர்ந்து இன்புற்று வாழுங்கள், என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிரேன்.

குழந்தைச் செல்வம் பெற ஆன்மீக பரிகாரம்



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, குழந்தை பிறப்பதற்கான பரிகாரம் பற்றியதாகும் ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே அவருக்கு குழந்தை பேறு இருக்கிறதா.? இல்லையா.? என்பதை காட்டும் ஸ்தானம்  5 வது ஸ்தானம் இயற்கையிலேயே 5வது இடத்தில் ராகு இருந்தாலும், ஆண் ஜாதகத்திலே 5 வது இடத்தில் ராகு இருந்தாலும், பெண் ஜாதகத்தில் 5லோ, 9லோ பாவிகள் இருந்தாலும், பாவிகளுடைய பார்வைகள் இருந்தாலும், பாவிகளோடு கலந்திருந்தாலும், இந்த "மக்கள் பேறு"

என்று சொல்லப்படுகின்ற இந்த குழந்தை செல்வத்தைத் தடுத்து விடுகிறது.

அதற்கான முக்கிய பரிகாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக அன்பர்களுக்கு அளிக்க இருக்கின்றான்,

5லே ராகு இருக்கப்பெற்றாலும்கூட 'பத்ரகாளியை பார்த்த மாத்திரத்திலேயே ராகு கதிகலங்கி விடுவார். அதனால்தான் சிவ ஆலயத்தில் இருக்கின்ற துர்க்கை வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.

ராகு கரும்பாம்பு என்று கூறுவதால், சனியின் குணத்தோடு ஒத்திருப்பதால், அவர் கருங்கோல் என்றும் அழைக்கப்படுகிறார். அவருடைய தினமான சனியன்று நீங்கள் தீபத்தை ஏற்றி வைத்து வர, உங்களுக்கு குழந்தைபேறுக்கு ஒரு அருமையான வாய்ப்பு, 5ல் செவ்வாய் இருக்கப்பெற்றவர்களுக்கு அடிக்கடி 'கருச்சிதைவு ஏற்படுகின்றது.

உலகத்திலேயே, இந்து மதத்தில் மட்டும்தான் இந்த கருச்சிதைவிற்கு என்று ஒரு கடவுள் இருக்கிறார். இவ்வாறு அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு அந்த பெறாத தன்மையை விலக்க

கர்ப்பரட்சாம்பிகை' கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யலாம். அல்லது உங்கள் ஊரிலே இருக்கப்பெற்ற

*கருகாத்த அம்மன் இருக்கப்பெற்றால், அல்லது முருகப்பெருமானை வழிபட்டாலும் கருச்சிதைவிலிருந்து, காப்பார். "நரசிம்ம வழிபாட்டு" இந்த கருச்சிதைவை தடுக்கும் வல்லமை கொண்டது.

செவ்வாயை "ரத்த காரகன்" என்று சொல்வதால், செவ்வாயின் மூலம் ஏற்படும் இந்த கருச்சிதைவு களைத் தடுக்கும் கடவுள்களை வரிசைகிரமமாக கூறியிருக்கின்றோம். அன்பர்கள் தங்களின் சௌகரியத்துக்கு தகுந்தாற்போன்று, இக்கடவுள்களை வணங்கி, தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம்.

5வது இடத்திலே சனி இருக்கப்பிறந்தவர்களுக்கு கால தாமதமான மகப்பேறு என்று சொல்லப்படுகின்ற குழந்தைச்செல்வம் கிடைக்கிறது. 5 குழந்தை செல்வத்தைக்காட்டுகின்ற பகுதியாக இருந்தாலும் கூட, ஜோதிடத்திலே 9 என்பது பாக்கியத்தைக் காட்டுகின்றது. குழந்தை அவ்வளவு முக்கியமா என்றால், அது மிகவும் முக்கியம்தான். ஏனென்றால் ஒரு மனிதன் தன் இறப்பிற்குப்பின் செய்யப்படும் இறுதிச்சடங்குகளை காண இயலாவிட்டாலும், அச்சடங்குகள் முறையாக நடைபெற வேண்டுமென்று ஆண்மை ரூபத்தில் மிகவும் எதிர்பார்ப்பான், அதற்கு மிகவும் அவசியம் பிள்ளைச் செல்வம் ஆகும்.

அந்த பிள்ளைச்செல்வத்திற்காக பெற்றோர்கள் எப்படியெல்லாம் ஏங்குகிறார்கள். எந்தெந்த பரிகாரங்களை அவர்கள் செய்கிறார்கள். எதை தின்றால் பித்தம் தீரும்" என்ற நிலையிலிருப்பவர்களுக்கு இந்த பரிகார தொகுப்பு, ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை , ஒவ்வொரு சனியன்றும், சனியிருக்கப்பிறந்தவர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வர, அது நிறைவேறும் பட்ச்சத்தில் அவருக்கு வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு சாற்றலாம். அவரை வழிபடவழிபட இந்த சனியால் ஏற்படும் தொல்லை அகன்று வருகிறது.

லே சூரியன் இருக்கப்பிறந்தவர்களுக்கு இப்படிப்பட்ட மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது. சிவனை நீங்கள் வழிபடும்பொழுது, திருவண்ணமலையிலே பஞ்சஸ்தலங்களிலே ஒன்றான அக்கினியை சாட்சியாக வைத்து சித்தர்கள் பரவியிருக்கும் "சித்தர்பூமி"

என்றழைக்கப்படுமிடத்திலே வியாழனன்று வரும் பௌர்ணமி தினத்திலே கிரிவலம் வந்து சிவபிரானை வணங்கி மூலிகைக் காற்றை சுவாசிக்க 5லிருக்கும் சூரியன் குழந்தைப்பேறை கொடுத்துவிடுகிறது.

கேது இருக்கப்பிறந்தவர்கள் விநாயகப்பெருமானை வணங்கி விநாயகர் காயத்ரி மந்திரத்தை சொல்லி வர

அரச மர விநாயகரை வழிபட்டு, தொட்டில் கட்ட கேதுவால் ஏற்பட்ட தோஷம் அகலும்,

ஏற்கனவே கூறியதுபோன்று புதுச்சேரி அன்னையை வணங்கி உங்களது பிரார்த்தனையை எழுதி மனதார பிரார்த்தித்து, குழந்தை பேறு கிடைக்க வேண்டினால், பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும் என்பது உறுதி, என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி

உங்களுடைய தர்மத்தை அதிகரிக்க செய்யும் வழிபாடு.

.

ஒரு மனிதன் இந்த பூமியில் பிறப்பதற்கு காரணம் என்னவென்றால், அவன் முற்பிறவியிலே செய்த "பாவம், புண்ணியமும்" ஆகும். அவனின் பாவ, புண்ணியங்களை அனுபவிப்பதற்காகவே இப்பூமிக்கு வருகிறான். அதனால் நாம் வாழும் பூமிக்கு "தர்ம, கர்ம பூமி என்று பெயர்.

ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து வருகிறார்கள்.

ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு சிலரோ செய்ய நினைத்தவற்றை நினைத்த மாத்திரத்திலேயே செய்து வருகிறார்கள்.

வேறு சிலர் எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை . இது ஏன்....? இதற்க்கு "பிறந்த நேரம் தான்" காரணம்

நடைமுறையிலே சிலர் பேச நாம் கேட்டிருக்கின்றோம். அவருக்கென்ன குறை? அவர்பிறந்த நேரம். அவர் ராஜாவைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், பலவித நன்மைகளை அடைகிறார், அவர் நினைத்ததை சாதித்து வருகிறார்.

ஜாதகத்திலே 9வது இடம்தான்

"உயர்வானது அடைவது" அதாவது நாம் இந்த உலகத்தில் வந்து நம் ஆசைகளை அடைகின்ற பகுதி. அந்த 9வது இடத்திற்கு ஒருவரது ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார், எண்ணியதையும் அடைந்து விடுகிறார்.

ஒன்பதிலே மோசமான கிரகங்கள் அல்லது பாவ கிரகங்களின் பார்வை இவைகளெல்லாம் இருக்கப் பிறந்தவர் தடுமாறுகிறார், போராடுகிறார், அந்த இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார். இதுதான் "ஜோதிட ரகசியம்" இதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதாவது, ஒவ்வொறு அமாவாசை தினத்தன்றும், "குதப காலம்"

என்று கூறுவார்கள். "குதபகாலம்" என்றால் அமாவாசை பகுதியிலே பகல் பதினோன்றிலிருந்து, பனிரெண்டு மணி வரை சுமார் ஒரு மணி நேரம், இந்த ஒரு மணி நேரத்தில்தான் பித்ருக்கள்" நாம் படைக்கும் "அமாவாசை பண்டத்தை" ஏற்க தயாராக இருக்கிறார்கள்.

அந்த நேரத்திலே, உங்கள் ஊரில் உள்ள

"அரச மரங்களைச்" சுற்றி வாருங்கள்.

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் 'குதப காலம்" என்று சொல்லப்படுகின்ற அந்தக் காலக் கட்டத்திலே, நீங்கள் அரச மரத்தைச்சுற்றி வலம் வரும்போது, ஒரு குறிப்பிட்ட அமாவசையிலே உங்களுடைய ஆசைகள் நிறைவேறத்துவங்கும். சுமார் இதை ஒரு வருட காலம் நாம் முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

அதனால் கொடுத்த இந்த ரகசியத்தை நீங்கள் பயன்படுத்தி உங்களின் வறுமை நிலையிலிருந்து, செழுமை நிலைக்கு நீங்கள் வரவேண்டுமென்று எல்லா வல்ல இறைவனை வேண்டி இப்பகுதியினை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

Friday, May 29, 2020

நஷ்டங்களை தவிர்க்க ஆஞ்சநேய வழிபாடு

யாருக்கெல்லாம், எப்படியெல்லாம், இந்த நஷ்டம் வருகிறது, எந்த காலகட்டத்தில் நஷ்டங்கள் வருகிறது என்பதை, ஜாதகத்தின் வாயிலாக காணலாம்.

ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே 3,6,11-ல் நல்ல கிரகம் இருந்தால் அவர்கள் வாழ்க்கையிலே பலவிதமான கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். இந்த ல் மோசமான கிரகங்கள் இருக்கப் பிறந்தவர்களுக்கு நஷ்டங்கள் இருக்காது.

கஷ்டத்திலிருந்து விடுபட பரிகாரம்

நஷ்டம் என்ற கோரப்பிடியிலிருந்து இவர்கள் விலக வேண்டுமென்று நினைத்தால்,

1. ஆஞ்சநேய பிரபுவே அவர்கள் வணங்கவேண்டும்.

2. அவரின் கோயில்களுக்கு சனிக்கிழமைகளில் செல்ல வேண்டும்,

சதா சர்வ காலம் அனுமனை வழிபாடு செய்ய வேண்டும்.

4. அப்படி முடியாதவர்கள், தாங்கள் இருக்கின்ற இடத்திலே இருந்துகொண்டு,

"ராம்,ராம்" என்று தொடர்ந்து சொல்ல வேண்டும்.

இவ்வாறு செய்பவர்கள் அவர்களுடைய வாழ்க்கையிலே உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி ஆஞ்சநேயர் அனுக்கிரகத்தால் மேன்மை அடைகின்றனர்.

குபேர வழிபாடு செல்வ வளத்தை பெருக்கும்

நம் வாழ்க்கையிலே லக்ஷ்மிக்கு அடுத்தபடியாக நாம் வணங்குவது குபேர சம்பத்தாகும். அவர் "யட்சன்"

இருந்தாலும், வறுமையை ஒழித்து, செழுமையைக் கொடுப்பவர். குபேரனின் அருள் நமக்குக் கிடைத்துவிட்டால், நம் ஜாதகத்திலுள்ள தரித்தரங்களை நாம் தொலைத்து விடுவோம். ஒரு சிலர் சித்தர்களின் உதவியைப் பெற்று, செழுமை அடைகின்றார்கள்.

பலன்கள்

யட்சன் எனப்படும் குபேரனை வணங்கும், குபேர சம்பத்தை நாம் பெற்று விட்டால்,

1. வாழ்வில் நாம் இன்பத்தை அனுபவிப்போம்.

பிறருக்காக தானங்களை வழங்குவோம்.

நம் வம்சாவளியினருக்கும் வழிகாட்டுவோம்.

வணங்க வேண்டிய திருத்தலம்

திருவாரூரிலிருந்து, நாகப்பட்டினம் செல்லும் வழியிலே 'தேவாவூர்' என்ற ஒரு ஊர் உள்ளது. இங்குள்ள

1. இறைவியின் திருப்பெயர் - தேவபுரீஸ்வரர், கதலீஸ்வரர்

2. இறைவியின் திருப்பெயர் - மதுராபாஷினி, தேன்மொழி அம்மை

தல மரம் - வெல்வாழை

4. தீர்த்தம் - தேவ தீர்த்தம்

இத்தலத்திற்கு சென்று குபேரனை வணங்கி வர பல நன்மைகளை அடையலாம்.

கண் திருஷ்டி நீங்க அற்புதமான பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது

"கண் திருஷ்டி பற்றியதாகும்.

நாம் இருக்கின்ற இந்த கணிணி யுகத்திலும் "கண் திருஷ்டி" வேலை செய்யுமா? நிச்சயமாக உறவினர் ஒருவர் நம் வீட்டிற்கு வருகை புரிந்து நாம் அளிக்கின்ற விருந்தை சாப்பிட்டிருப்பார்

நம் வீட்டில் உள்ள பொருட்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டிருப்பார். அல்லது தீய எண்ணத்தோடு நம் விருந்தில் கலந்து கொண்டு, அவரின் பார்வையை பதிவு செய்வதன் மூலமாக, திடீரென்று அந்தப் பொருள்கள் உடையும், அந்தப் பொருட்கள் காணாமலோ அல்லது திருட்டு போகவோ செய்யும், இது எவ்வாறு சாத்தியம் என்று நீங்கள் சற்றே சிந்தித்தீர்களென்றால், இதற்கான விடை உங்கள் மனதிலே மலரும்.

"திருஷ்டி" என்றால் என்ன? கண் படுதல், என்ன காரணத்திற்காக இன்றளவிலும் கூட பிறந்த குழந்தைக்கு கன்னத்தில் கருப்புப்பொட்டு வைக்கின்றார்கள் என்றால், அப்பச்சிளங்குழந்தையை சற்று அவலட்சணமாக்கி, அழகுபார்க்கின்றார்கள் என்றால், இந்த கண் திருஷ்டியிலிருந்து காக்கவேயாகும்.

அதுபோன்று கிரகங்களிலே, சில கிரகங்களுக்கு மோசமான பார்வை இருக்கின்றது. அது என்ன என்றால், சனி, இவருக்கு மூன்றாம் பார்வை, ஏழாம் பார்வை, பத்தாம் பார்வை. அடுத்து செவ்வாய், இவருக்கு நான்காம் பார்வை, ஏழாம் பார்வை, எட்டாம் பார்வை, ராகு, கேது, சூரியன், தேய்பிறை சந்திரன் இந்த கிரகங்கள் லக்னத்தையோ, இராசியையோ பார்க்க அந்த ஜாதகர் படும் பாடு என்னவென்று சொல்வது. ஒரு மாணவன் நன்கு படிக்கின்றான், நல்ல மதிப்பெண்களைப் பெற்று பல வெற்றிகளைக் குவிக்கும். அவன் பெற்ற மதிப்பெண்களையும், பரிசுகளையும் பார்த்த, படிப்பில் ஆர்வம் கொள்ளாத சக மாணவன் கண் வைக்கின்றான். அச்சக மாணவனின் இயலாத தன்மை, பொறாமை குணம் ஆகியவை அவனின் கண்களின் மூலமாக சென்று, கெட்டிக்கார மாணவனைச் சென்றடைந்து, அவனை பாதிப்புக்குள்ளாகிறது.

சிலர் கூற நாம் கேட்டிருப்போம், யார் கண் பட்டதோ நான்றாக இருந்த நான் இப்படி மோசமான நிலைக்குச் சென்று விட்டேன்?

என்று யார் கண் பட்டதோ எங்கள் குடும்பம் சீர் குலைந்து விட்டதே? என்றெல்லாம் இன்றைய காலக்கட்டத்தில் கூட பேசுகின்றார்கள் அப்படிப்பட்ட திருஷ்டிகளில் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள் இருக்கின்றன இப்போது அவைகளைப் பார்ப்போம், நீங்கள் கண் திருஷ்டியில் அகப்பட்டு, பாதிக்கப்பட்டீர்களேயானால், உங்கள் வீட்டில் பலவிதமான யாகங்கள் செய்யலாம். அது என்னவென்றால்,

"சுதர்சன ஹோமம்", "நவக்கிரக ஹோமம்", "தன்வந்திரி ஹோமம்"

போன்ற ஹோமங்களை நீங்கள் செய்தால் அந்த ஹோமப்புகையிலிருந்து, வருகின்ற சக்தியானது திருஷ்டியை அகற்றி வருகிறது.

இதற்கு வழி இல்லை என்றால், ஒவ்வொரு செவ்வாயன்று, வெள்ளியன்றும் 'தூப தீபம்' அல்லது

"சாம்பிராணி புகையை' உங்கள் வீடு முழுவதும், யார் மீது திருஷ்டி விழுந்திருக்கின்றதோ அவர் மீதும் காட்ட வேண்டும்.

மேலும், சிலர் நம் வீட்டு விருந்து முடிந்து சென்றவுடனே சில மோசமான செய்திகள் நம்மை வந்தடையும். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், கருப்பட்டி வெல்லத்திலே சீரகத்தை கலந்து அவர்களுக்கு பானகம் தயாரித்து அளிக்கவேண்டும். இப்படிப்பட்டவர்களை நாம் தவிர்க்க இயலாது. மேலும் அவர்கள் நம் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டுதான் ஆகவேண்டும், நம் குடும்பத்தையும் அவரின் கண் திருஷ்டியிலிருந்து காக்க அவர்களுக்கு இந்த கருப்பட்டி பானகம் அளித்துவிட்டால், எப்பேற்ப்பட்ட கண் திருஷ்டியும் அகன்று விடுகின்றதோ.

ஆண்களாக இருந்தால் விபூதி, சந்தனம் அல்லது குங்குமம் வைத்தால் உங்களை இந்த கண் திருஷ்டி பாதிக்காது.

பெண்களாக இருந்தால் மஞ்சள் பூசி உங்கள் முகத்தில் குங்குமம் வைக்க திருஷ்டியின் தாக்கம் உங்களை அணுகாது. மேலும் இத்தாக்கத்திலிருந்து நம் குடும்பத்தை காக்க ஆஞ்சநேயப்பிரபு, பிரத்யங்கிரா தேவி நரசிம்மர் ஆகிய மூன்று பேரையும் வணங்கிவர

"கண்திருஷ்டி யில் இருந்து" விடுபடலாம் என்று கூறி அன்பர்களே, இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கின்றோம்.

Thursday, May 28, 2020

நீச்ச கிரகங்களுக்கு உரிய பரிகாரங்கள்



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, நீச்ச கிரகங்களுக்கான பரிகாரங்கள் பற்றியதாகும்.

கிரகங்கள் ஒவ்வொரு வீட்டிலும் உச்ச பலனையும், அதற்கு எதிர்மாறாக 7-ஆவது வீட்டில் நீச்ச பலனையும் பெறுகின்றன.

உச்சம் என்பது புண்ணியமாகக் கருதப்பட்டாலும், நீச்சமென்பது பாவத்தின் கணக்கில் வருகின்றது. மேஷ ராசியிலே சனி உச்சமடைகிறார்.

இப்படிப்பட்டவருக்கு 7-ஆவது இடமாக சனி நீச்சப்பட்டு திருமண வாழ்க்கை நடக்கின்ற அந்த சூழ்நிலையிலே நாம் கால பைரவரையும் ஆஞ்சநேய மூர்த்தி வணங்க வேண்டும். இப்படி நாம் தொடர்ந்து செய்வதன் மூலமாக சனியின் நீச்சத்தைக் கட்டுப்படுத்தலாம். கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெறுகின்றார். செவ்வாய் வது இடமாக வந்து நீச்சம் பெற்றால் அது கணவன் அல்லது மனைவியை பாதிக்கும் அவர்கள் திருமண வாழ்க்கை பாதிக்கும்.

அப்படிப்பட்டவர்கள் முருகன் வழிபாடு குறிப்பாக அஷ்டமி தினம், மேலும் கிருத்திகை நட்சத்திரத்திலே அவர் பிறந்த நட்சத்திரமான விசாக நட்சத்திரத்திலே வழிபாடு செய்யும்பொழுது, இந்த தீட்சை குறையும், நீச்ச தோஷம் கட்டுப்படும்.

கன்னியிலே சுக்கிரன் நீச்சம் பெறுகிறார். உச்சம் பெற்ற சுக்கிரன் திருமண வாழ்க்கையை சிறப்பிக்கமாட்டார். காலதாமதத்தை உண்டு பண்ணுவார், சுக்கிரன் கன்னியிலிருந்து உச்சம் பெறும் பொழுது, மகாலஷ்மியை வணங்க வேண்டும்.

ஒவ்வொரு வெள்ளியன்றும் மஹாலக்ஷ்மி கோயிலுக்குச் சென்று அவர்கள் தீபத்தை ஏற்றி வரும் போது, அந்நீச்ச தோஷம் கட்டுப்படுகிறது.

சூரியன் துலாமிலே நீச்சமடையும்பொழுது அது 7-வது இடமான திருமண பாகமாக இருந்தால் அவர்கள் செய்ய வேண்டிய தெய்வீக முயற்சி ஒவ்வொரு ஞாயிறு அன்று சிவ ஆலயங்களுக்குச் சென்று அல்லது ஞாயிறு அன்று வரும் கிரிவலத்தில் அல்லது சிவனின் நாள் ஞாயிற்றுக்கிழமையில் அவரை வசியம் செய்கின்ற கோதுமையைக் கொண்டு செய்யப்படுகின்ற சப்பாத்திகளை குழந்தைகளுக்கோ, உறவினர்களுக்கோ அல்லது பிற ஜீவராசிகளுக்கோ அளித்துவர சூரிய நீச்ச கிரக தோஷம் கட்டுப்படும்.

அதுபோன்று மகரத்திலே குரு நீச்சம் பெறுகின்றார் என்றால் தட்சிணாமூர்த்தி வழிபாடு, வியாழக்கிழமைகளிலே சிவ ஆலயங்களுக்குச் சென்று தீபமேற்றுவது, பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களுக்கு உதவி செய்தல்.

பிராமணர்களை அன்பாக நேசித்தல்,வாசித்தல் அவர்களின் வழிமுறைகளைக் கேட்பதென்பது தட்சிணாமூர்த்தியை வழிபடும் சிறப்பை அளிப்பதால் அதைக் கடைபிடிப்பது.

மேலும், புதன் மீனத்திலே நீச்சம் பெறுகிறார். அவருக்கு புதனன்று பெருமாள் கோயிலிலே ஏற்றப்படுகின்ற தீபம் நீச்ச பரிகாரத்திற்கு அருமருந்தாகக் கருதப்படுகின்றது, இதைக் கருத்தில் கொண்டு மேற்காணும் பரிகாரங்கள் செய்து பலன் பெறவேண்டுமெனக்கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது,

குலதெய்வ வழிபாடு பற்றியதாகும் குலதெய்வத்தை ஒருவர் வணங்காமல் வாழ்க்கையில் முன்னுக்கு வர இயலாது

"குலதெய்வம்" என்றால் என்ன என்பதை சுருக்கமாக கூற வேண்டுமென்றால், நீங்கள் நினைக்கின்றபடி சக்தி வாய்ந்த முருகன், கணபதியோ, சிவனே, பெருமாளோ, அனைவருக்கும் குலதெய்வமாக ஆகிவிட மாட்டார்கள்.

அப்படியிருக்க, உங்களின் குலதெய்வம் யாரென்று தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆவல் இருக்கும். ஊரிலே இருக்கின்ற கருப்பு. சின்னக்கருப்பு, பெரிய கருப்பு, சின்ன ஆண்டவர், பெரியாண்டவர், மதுரைவீரன், காட்டேரி, முனீஸ்வரன், சுடலைமாடசாமி போன்ற தெய்வங்களை கிராமத்தில் வழிவழியாக உங்களின் முன்னோர்களால் வழிபடக்கூடிய தெய்வங்களே குல தெய்வங்களாகும்.

யாரோ ஒருவர் உங்களுக்கு செய்வினை செய்து விடுகிறார்கள் என்றால், சூன்யம் வைத்து என்றால், இந்தக் குலதெய்வத்தின் அருளாசி இல்லாமல் அதை இவர்கள் வைக்க இயலாது, பெரியபெரிய தெய்வங்கள் கூட உங்கள் வீட்டிற்கு வருகை தரும் பொழுது, இந்தக் குலதெய்வம் குறுக்கே நின்றால், அந்த தெய்வங்கள் கூட உத்தரவு வாங்கித்தான் உள்ளே செல்ல வேண்டும். அப்பொழுது, அதன் சக்தியை எண்ணிப்பாருங்கள்.

நமக்கு வருகின்ற கஷ்டங்கள் அனைத்தும் கிரகங்களின் மூலமாக வந்து விடுகின்றதா? என்றால் இல்லை, பித்ருக்களின் மூலமாக வந்துவிடுகிறதா? அதுவும் இல்லை , குலதெய்வத்தின் மூலமாக வந்து விடுகின்றதா என்றால் அதையும் இல்லையென்றே சொல்ல வேண்டும்.

பின்பு, எதற்காக இந்த பரிகாரம் என்று கேட்கத் தோன்றும், வரும் கஷ்டங்கள் கிரகத்தினாலும் வருகிறது, பித்ருக்களினாலும் வருகிறது.

குலதெய்வத்தினாலும் வருகிறது.

அப்படியென்றால், குலதெய்வத்தைக் கண்டுபிடிக்க ஜாதகத்தில் வழி இருக்கின்றதா? என்றால் வழி இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்:

லக்கனத்திலிருந்து எண்ணிவர 5வது இடத்திலே ஆண் தெய்வமாக இருந்தால் அவர்களுடைய குலதெய்வம் ஆண் தெய்வம் லக்கனத்திலிருந்து

-எண்ணிவர அது பெண் தெய்வமாக இருந்தால் குலதெய்வம் பெண் தெய்வம் அந்த 5வது இடத்தில்) ஆணுக்குரிய கிரகமும், பெண்ணுக்குரிய கிரகமும் இருந்தால் அவர்களுக்கு ஆண் தெய்வமும், பெண் தெய்வமும் குலதெய்வமாக இருக்கிறது.

இப்படி கண்டுபிடிக்க இயலாதவர்கள் வருந்தவோ, வாடவோ வேண்டாம் தங்களுக்கு குலதெய்வமே இல்லையென்று கருதி விட வேண்டாம்.

அவர்களுக்கெல்லாம் குலதெய்வம் தெரியவில்லையென்றால், குலதெய்வ வழிபாடு அவர்களுடைய வழக்கிலே இல்லையென்றாலோ, கடைபிடிக்கவில்லையென்றாலோ கவலைப்பட வேண்டாம்.

குலதெய்வமாக காஞ்சி காமாட்சியை"

வணங்க வேண்டும் அல்லது "தேனி மாவட்டத்திலுள்ளவர்கள் "மூங்கிலணை காமாட்சி' என்ற ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் இருக்கின்றது. அதை அவர்கள் வணங்கலாம். பெண் தெய்வம் தெரியாதவர்கள், திருச்செந்தூர் முருகப்பெருமானை வணங்கலாம், இப்பொழுது அன்பர்களுக்கு சந்தேகம் கூட வரலாம்.

இந்த தெய்வங்களை வணங்குவதால், உங்களுடைய வேண்டுகோள் குலதெய்வத்திற்குச் சென்று சேருமா? எங்களுடைய குலதெய்வ சாபம் தீருமா? ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் குலதெய்வம் என்பது ஏறத்தாழ மனிதனின் குணாதிசயங்களைப் பெற்ற சிறுதெய்வங்களே, நம் வீட்டில் ஒரு சூப் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கின்றது என்றால், அதில் கலந்துகொள்ளும் அன்பர்கள் அனைவரும் வந்து விட மாட்டார்கள். |

அது போல்தான் நாம் வணங்கும் பொழுது குலதெய்வங்கள் வருவதும், கிராமத்திலே குலதெய்வத்தை வணங்கி வந்தார்கள், யாரென்றால் நம் முன்னோர்கள், நம் மூத்தவர்கள், அப்படிப்பட்ட குலதெய்வங்களுக்கு கட்டளை இடுகின்ற சக்தி குலதெய்வங்களின் குணமறிந்த கடவுள்களான திருச்செந்தூர் முருகன், காஞ்சி காமாட்சி ஆகியோர் கொடுக்கும் பலன்களையும், கட்டளைகளையும் அவர்கள் ஏற்கிறார்கள், ஏற்று நமக்கு நன்மையை செய்கிறார்கள், திடீரென்று ஏற்படும் விபத்து, அல்லது ஆபத்து, நஷ்டம், கஷ்டம் இவையனைத்திற்கும் காரணம் குலதெய்வங்களின் சீற்றமேயாகும். பெரிய தெய்வங்கள் தண்டனை அளிக்கும் நிலையில் குலதெய்வங்கள் தண்டனை அளிக்கும்.

எனவே, அன்பர்களே நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், என்னுடைய அறியாமையை மன்னித்து என் குடும்பத்தை காப்பாற்ற அருள் புரியுமாறு செய்ய வேண்டும், என்று மனப்பூர்வமாக வேண்ட நிச்சயமாக குலதெய்வத்தின் அருளாசி உங்களுக்கு கிடைக்கும் என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி

அதிகமாக சம்பாதிக்க தாந்த்ரீக பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, சுய சம்பாத்தியத்தில் ஒருவர் வாழ்வில் வெற்றிபெற இயலுமா, அதற்கான சாத்தியக்கூறுகள் அவர்களின் ஜாதகத்தில் இருக்கின்றதா? என்று ஆவலாக எதிர்நோக்கும் அன்பர்களுக்கு அளிக்கப்படும் பரிகாரம் பற்றியதாகும்.

ஒருவரது ஜனன ஜாதகத்தினை எடுத்துக்கொண்டால் பத்தாம் ஆதி வலுபெற வேண்டும். பதினோறாவது ஆதி அங்கு உறுதியாக இருக்க வேண்டும்.

இரண்டாம் ஆதி என்று சொல்லப்படுகின்ற வருமானத்திற்குரியவர் வளமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டும்தான், நீங்கள் உங்கள் தந்தையின் சொத்தை எதிர்பார்க்க வேண்டாம். உங்களின் சொந்தக்காலிலே நின்று, உங்கள் சுய சம்பாத்தியத்திலே வென்று, நீங்கள் இந்த பூமிக்கு வந்த காரணத்தை நோக்கத்தை உறுதி செய்து, உங்களைச் சார்ந்த சொந்த பந்தங்களிடையே முத்திரை பதிக்கின்றீர்கள் என்றால், அதற்கு உங்களுடைய ஜாதகத்திலே இருக்கின்ற அமைப்புகள் தான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

பல ஆயிரக்கணக்கான ஜாதகங்களுக்கு பலன் சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அமைப்பை உடையவர்களுக்கு இயற்கையாகவே சுயசம்பாத்தியம் வேலை செய்து விடுகின்றது. அப்படி இல்லையென்றால், பத்தாம் ஆதி என்னுடைய ஜாதகத்திலே ஆறிலே மறைந்துவிட்டார், எட்டிலே மறைந்துவிட்டார்,பனிரெண்டிலே மறைந்துவிட்டார, லக்கனத்திற்கு அடுத்தபடியாக இருக்கின்ற இரண்டாவது அதிபதியும் அப்படியே மறைந்துவிட்டார்.

"நீங்கள் சொல்லுகின்ற அந்த பதினோறாவது ஆதி லாபாதிபதி என் ஜாதகத்தில் இல்லையே' என்று புலம்பும் அன்பர்களுக்கு, நண்பர்களுக்குத்தான் இன்றைய தினம் மேற்கண்ட பரிகாரம் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது .

ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் பல ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் எண் சொல்லுகின்றார்கள் என்றால் நம் ஜாதகத்தில் இருக்கின்றபடிதான், நம் வாழ்க்கை இருக்கும் என்று

அதை நம்முன்னோர்கள் பரிகார சாஸ்திரத்தைப் பயன்படுத்துவதின் மூலமாக, தகர்த்தெறிந்து விட்டார்கள்.

பரிகாரத்திற்கு எவ்வளவு சக்தி உண்டு, அதை நாம் முறையாக செய்ய வேண்டும், முழுநம்பிக்கையோடு செய்ய வேண்டும், விடமுயற்ச்சியோடு செய்ய வேண்டும், அப்படிச் செய்தால் வெற்றி உங்களுக்கே என்பது உறுதியாகிவிடும்.

இப்படிப்பட்ட அமைப்பை உடையவர்கள் எனக்கு சுயமாக சம்பாத்தியம் இல்லை என்று வேதனையுடன் புலம்புவதை விட்டு, உங்களுடைய வீட்டிலே இருக்கின்ற பூஜை அறையில் ஐந்து வெற்றிலைகள், ஐந்து கொட்டைப்பாக்குகள் இதை வைத்து சாதகமான பாதையிலே அழைத்துச் சென்று, எனக்கு ஒரு நிரந்தரமான வருமானத்தை ஏற்படுத்து என்று தினந்தோறும் உருகி, விடாமல் முழு நம்பிக்கையோடு அந்தாத தெய்வங்களைக் கேட்டுக்கொண்டால் ஒரு நாள் அது செவி சாய்க்கும். அன்றைய தினத்திலிருந்து உங்கள் விதி மாற்றி எழுதப்பட்டு, நீங்கள் அதிலிருந்து தப்பிக்கும் அந்த ரசவாத வித்தையைப் பெறுவீர்கள்.

அப்படி, செய்ய இயலாதவர்களுக்கு, இன்னொரு மாற்றுப் பரிகாரம் என்னவென்றால், உங்களுடைய பூஜை அறைக்குச் சென்று, 'குரு அருள், திரு அருள்" என்ற இந்த மந்திரத்தை குறைந்த பட்சம் ஒன்பது தடவை, அதிகபட்சம் நூற்றி எட்டு தடவை சொல்லிவர உங்கள் வாழ்க்கையிலே வசந்தம் வந்துவிடும்.

ஏனென்றால், ஒரு மனிதனுக்கு குரு அருள் இன்றி திரு அருள் கிடைக்காது, அதனால்தான் "கருவாய், உருவாய், திருவாய் வருவாய்" என்றார்கள். அப்படி கிடைக்கவில்லையென்றால், குருவை நீங்கள் நினைத்துக்கொண்டீர்களென்றால், நிச்சயமாக அவர் கடவுளைக் காண்பித்து, பல அற்புதங்களை உங்கள் வாழ்க்கையிலே நடனமாட செய்வார், என்பதை உங்கள் மனதிலே பதிவு செய்து கொண்டு, இதை முயற்சி செய்து நீங்கள் வாழ்க்கையிலே எல்லாவளமும் பெற்று நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

Wednesday, May 27, 2020

வாஸ்து சாஸ்திரம் எளிய பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, ஏற்கனவே நாம் வேறொரு கோணத்தில் கண்டு பயன்பெற்ற "வாஸ்து பரிகாரம்' அல்லது "வாஸ்து தோஷத்தின் மற்றொரு கோணமாகும், அதிகபட்ச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப்பரிகாரம் அளிக்கப்படுள்ளது. இனி மேற்கொண்டு பகுதிக்கு செல்வோம்.

அன்பர்களே, இன்று எங்குபார்த்தாலும் பரவலாக பேசப்படுவது வாஸ்து குற்றம், வாஸ்து தோஷம் பற்றியதாகவே இருக்கின்றது. அதிலிருந்து விலக நீங்கள் செய்ய வேண்டிய பரிகார முறைகளைக் காணவிருக்கின்றீர்கள்.

பொதுவாக பண வசதி படைத்தவர்கள், எத்தனை முறை வீடு கட்டினாலும், அதில் வாஸ்து தோஷம் இருக்கின்றது என்று தெரிந்தால் அவர்களால் இடிக்க முடியும், கட்டவும் முடியும். அது இன்றைய அளவிலே ஒரு நாகரீகமான செயலாகிவிட்டது.

ஆனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு நிலம் வாங்குவது, வீடு கட்டுவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது, நிறைவேற்றப்பாடுபடுகின்ற கனவாக இருக்கிறது. அவர்கள் எப்படி தங்களின் வீட்டைக் கட்டமுடியும். அவர்கள் எப்படி இடிக்க முடியும், அவர்கள் எப்படி இந்த

"வாஸ்து குற்றத்திலிருந்து தப்பிக்க முடியும், என்று நாம் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, வாடகை வீட்டில் இருப்பவர்கள் "வாஸ்து தோஷம்" பற்றிக் கொண்டால், அவர்கள் அவ்வீட்டினை இடிப்பது என்பது எங்ஙனம் சாத்தியமாகும் என்று சற்றே நம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இப்படிப்பட்டவர்கள் எல்லாம், மன உளைச்சலிலே, அந்த வீட்டில் இருந்து படுகின்ற துன்பங்களுக்குக் காரணம் இந்த

வாஸ்து தோஷமே" என்று அவர்கள் மனம் புழுங்கி, மனம் வெதும்பி வேதனை அடைகிறார்கள்,

அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு அற்புதமான பரிகாரம், அதாவது ர்ந்த வீட்டில் வாஸ்து தோஷம் இருக்கின்றது என்று சொல்லுகிறார்களோ அந்த வீட்டின் பிரதான வாசல் அதாவது தலைவாசலின் உயரத்தையும் அகலத்தையும் அளந்து கொள்ளுங்கள், அளவிற்கு ஏற்ப அருகம்புல் மாலையையும், வெற்றிலை மாலையையும் விற்பவரிடமிருந்து பேரம் பேசாத, சொல்லுகின்ற விலை கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள். தலைவாசலிலே அம்மாலைகளை ஒரு தினம் முழுதும் இருக்கச்செய்யுங்கள். மறுதினம் ஒரு வாளியிலே நிரப்பப்பட்ட தண்ணீரிலே அவ்விரண்டையும் ஊறவைக்கவும், அதன்பின் அந்த தண்ணீரை எடுத்து வீடு முழுவதும் சுற்றித்தெளியுங்கள். பிறகு அந்த வெற்றிலைக் கொடியும், அருகம்புல் மாலையையும் எடுத்து இஸ்திரி இடப்பட்ட ஒரு வெள்ளைத்துணியிலே முடிந்து, சூரியன் வருவதற்கு முன்பு, கால்வாய்களிலோ குளம், குட்டைகளில் அதைப்போட்டு அந்நீர்நிலைகளிலே விட்டுவிட, தொண்ணூறு நாட்களுக்குப் பிறகு, இந்த வாஸ்து தோஷம் நிவர்த்தியாகி மகாலக்ஷ்மியின் உடைய பார்வை உங்கள் வீட்டில் பதியும், அதனால் உங்கள் வீட்டில் இழந்த மகிழ்ச்சியை பெறுவீர்கள்.

இது, நிச்சயம், அவ்வீட்டினில் நீங்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ்வீர்கள் என்பது உறுதி.

மேலும், நடுத்தர வர்க்க மக்கள் வீடு கட்டுவது என்பது அவர்களின் சொந்த ஜாதகத்தின் அடிப்படையிலேயாகும். நிலம் வாங்குவதும் அவ்வாறே. அப்படி இருக்கும்பொழுது இந்த வாஸ்து குற்றம் வந்து, அவர்களை வைக்கும்போது, இப்படிப்பட்ட பரிகாரங்களை தக்க தருணத்தில் நீங்கள் செய்தீர்கள் என்றால், நீங்கள் அந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருந்து உங்கள் காலத்தைக் கழிக்கலாம், இந்தக் குற்றத்தை போக்கும்.

அன்பர்களே, ஒவ்வொரு பரிகாரமும், தங்களுக்கு மனமுவந்து நல்லெண்ணத்தில் வழங்கப்படுகின்றது என்று கூறினால் அது நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அதீத அன்பினாலும், தெய்வத்தின் கட்டளைப்படியினாலும் மேயன்றி வேறொன்றுமில்லை. என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

திருமண வாழ்க்கையில் சனி தோஷம் நிவர்த்தி

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, சனி கிரகம் எவ்வாறு திருமணத்தை தடைபடுத்துகின்றது என்பது பற்றியதாகும்.

ஒருவரின் ஜாதகத்திலே சனி 7வது இடத்தில் அதாவது மேஷத்திலே நீச்சம் பெற்றால் அவர்களுடைய திருமண வாழ்க்கை மோசமானதாக இருக்கும்.

அப்படிப்பட்ட தோஷத்தை முறியடிக்க 7-ஆம் ஆதி 6,8,12-ல் மறைந்தாலோ, அதுவும் சனியே இருந்து மறைகின்ற சூழ்நிலையிலே, அதற்கு பரிகாரம் செய்யும்பொழுது, நிச்சயம் அதற்கு விமோசனம் கிடைக்கும்.

சனி, சூரியன் சேர்ந்திருந்தால், கேது- ராகுவோடு அல்லது செவ்வாய் சேர்ந்திருந்தாலோ அந்த திருமண வாழ்க்கை தாமதப்படும், பல சோகங்கள் வரும்.

இச்சூழ்நிலையிலே சனி கிரகத்தின் அதி தேவதையாக இருப்பவர் பைரவர். மேலும் சனி பகவானின் குருநாதர் பைரவர் வர்.

அஷ்டமியிலே பைரவர் வழிபாடு செய்வது, சனி கிரகத்தால் ஏற்படும் சகல தோஷங்களுக்கும் பரிகாரமாக இருக்கும்.

சனிக்கிழமைகளிலே சனிபகவானுக்கு அபிஷேக, ஆராதனை செய்து அர்ச்சிப்பதால் சனி கிரக தோஷம் விலகும். மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னவஸ்திரம் தானம் தருவதால் சனி கிரக பிரீதி பெறலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு அன்ன வஸ்திரம் தானம் செய்து சனி பகவான் அருளைப்பெறலாம். காகத்திற்கு தினமும் எள் சாதம் வைப்பதால் சனி கிரக பிரீதி உண்டாகும். ஏழைக்கன்னிப்பெண்களுக்கு திருமண உதவிகள் செய்து சனிகிரக பிரீதி யைப் பெறலாம்.

ஏழை எளியோர்க்கு உதவ சனிபகவான் மகிழ்வார். நம் வாழ்க்கையிலும் மனமகிழ்ச்சியை உண்டாக்குவார்.

ஒவ்வொரு கிரகமும் 7-வது இடத்திலே வரும்பொழுது, அதுதான் நம் எதிர்கால துணையை காட்டுகின்றது.அப்படிப்பட்ட சூழ்நிலையிலே சனி கிரகம் நமக்கு பாதகமாக இருந்தால் மேற்கூறிய பரிகாரங்களில் அனைத்தையோ அல்லது ஏதேனும் ஒன்றையோ செய்யும்பொழுது சனியின் கருணை உங்களுக்கு ஏற்படும்.

இறைவனின் கருணை இல்லாது திருமண வாழ்க்கை கிடையாது. ஒரு மனிதனுக்கு மிகமிக முக்கியமானது ஆயுள்,திருமணத்திற்கு பிறகு அவன் இருக்க வேண்டுமென்றால் சிறக்க வேண்டுமென்றால் இறைகருணை அவசியம்.லக்னத்திலிருந்து எண்ணிவர 7

-வது இடத்தில் சனியோடு சில நச்சுகிரகங்கள்,பகை கிரகங்களின் பார்வை இருக்கும் பொழுது இயற்கையாகவே அவர்களின் திருமணம் தாமதப்பட்டு, நடைபெற இயலாத சூழ்நிலைக்கு உள்ளாகின்றது. ஆகவே மேற்கூறிய பரிகாரங்களை செய்து நிவர்த்தி பெறுமாறு கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்.

சர்ப சாந்தி பூஜை செய்ய பரிகாரம்

சந்திரன் ராகு மற்றும் சூரியன்  ராகு இந்த அமைப்பை பெற்றவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்.

அன்பர்களே. இன்று நாம் காணவிருப்பது, நன்றாக இருந்த ஒரு மனிதனின் வாழ்க்கையிலே, அவன் பாதிப்படைகின்ற நிலைக்கு அவன் உள்ளாகும்போது, அவன் ஜாதகத்தை பார்க்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு அவன் ஜாதகத்திலே சந்திரன் ராகுவோடு சேர்ந்திருந்தால் அல்லது சூரியன், ராகுவோடு சேர்ந்திருந்தாலோ 2,8 அல்லது 1,7,5,11 என்ற அமைப்பிலே ஜாதகத்திம் இருந்தால், அது நாக தோஷம் இருந்தாலும், ராகு தசையாக இருந்தாலும், ராகு புத்தியாக இருந்தாலும் இவருடைய கட்டுப்பாட்டில் வரும்.

குழந்தைகளின் இளம் பருவத்திலே ராகு தசை வருகின்றது என்றால், பிறப்பு நட்சத்திரம் திருவாதிரை,சுவாதி, சதயம் அமைப்பிலே பிறந்தவர்களுக்கு ராகு தசை நடப்பிலே வருகின்றது.படிக்கின்ற காலங்களில் ராகு தசை வரக்கூடாது.

அப்படி வந்தால் அதற்கான பரிகாரம் தான் இங்கு விளக்கத்துடன் தர இருக்கின்றோம்.

ராகு தசை வந்தால் முதலிலே, நாம் பாம்புகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரண்டாவது நீர்நிலைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக மாலை 6லிருந்து காலை 6 மணி வரை "இரவு" நேரம் என்று சொல்லப்படும் நேரத்திலே நீண்ட பயணங்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். விஷப் பூச்சிகளுக்கு அதிகாரியாக ராகு இருப்பதால், நாம் சாப்பிடும் பொழுது தேள், கரப்பான், பூரான், பல்லி போன்றவைகள் நாம் உண்ணும் உணவில் கலப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது.

மேலும் விதவை, கணவனை விட்டு பிரிந்தவர்கள் போன்றவர்களின் உறவை அறவே ஒழிக்க வேண்டும். ராகு பெருமான் போதை வஸ்துக்கு அடி பணிவது, அப்பழக்கத்திற்கு அவர் ஆசை காட்டுவதால், இந்தக் காலகட்டத்திலே கெட்டப் பழக்கங்கள், கெட்ட மனிதர்கள், தொழில் விருத்தி, திருமண நிகழ்ச்சிகளை தகுந்த ஜோதிடரிம் காட்டி அதனுடைய நிலையைப் பெற்று நீங்கள் இந்தக் காலகட்டத்திலே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொதுவாக, ராகு பழுதுபடும் பொழுது, நமக்கு ஆலோசனை எப்படி வருமென்றால்,

"திருநாகேஸ்வரம்" செல்ல வேண்டுமென்று வரும். இதுவும் கும்பகோணத்தின் அருகாமையிலே இருக்கின்றது. சென்னைவாசிகள் குன்றத்தூர் "ஸ்ரீ நாகேஸ்வரர்"

ஆலயத்திற்குச் சென்றால்,

"திருநாகேஸ்வரத்தில்" சென்ற பலனை நாம் இங்கே அடையலாம் என்று நம் முன்னோர்கள் உரைத்துள்ளார்.

குன்றத்தூர் "ஸ்ரீ நாகேஸ்வரர்"

ஆலயத்திற்கு ஒரு ஞாயிரன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை என்ற மணியளவில் அவரை நாம் வணங்கி வர, நம் ஜாதகத்தில் ராகுவால் ஏற்படும் தீமைகள் கட்டுக்குள் வரும், அதிகபட்சமாக நம்மைத் தாக்காது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இது ஒரு அற்புதமான பரிகாரமாகும்.

இப்படிப்பட்ட நிலையில் ஒருவர் பாதிக்கப்படும் பொழுது, அவரது ஜாதகத்தை ஆராயும் போது, ஒரு காட்சித் தெளிவு வரும். அதாவது, ஒரு மனிதன் ராகு தசையிலே இருக்கும்பொழுது நல்ல இடங்களில் இருந்தால் அந்த ராகு தசையிலே அவன் பாவ நிலையை எட்டுகின்றான். அவனுக்கு சிறிதும் பொருத்தமில்லாத நிலையில் தசை நடக்கும்பொழுது இந்த பாம்பு கிரகம், மாயாகிரகம், சாயா கிரகம் என்ற காலகட்டத்திலே, அவன் தடுமாறுகின்றான் என்பதைக் கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்.

Tuesday, May 26, 2020

வீடு பிரச்சனை மற்றும் நிலப் பிரச்சினை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்.

உங்களுக்காக

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, நிலப்பிரச்சனை தீர வேண்டி நாம் மேற்கொள்ளும் பரிகாரம் பற்றியதாகும்.

ஒருவருடைய ஜாதகத்தில்,செவ்வாய் என்று சொல்லப்படும் நிலத்தைக் காட்டுகின்ற கிரகம், சுக்கிரன் என்று சொல்லப்படும் கட்டிடத்தை காட்டுகின்றது கிரகம் ஆகியவை பழுதுபட்டால் ஒருவருடைய நான்காவது வீடு என்று அழைக்கப்படுகின்ற லக்கனத்திலிருந்து எண்ணிவர நான்காவது வீடே அவர்களுக்கு அமைகின்ற சொந்த நிலம், சொந்த வீடு என்ற பகுதியை கிடைக்கிறது. அதுவும் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு பலன் தருகின்ற வகையில் ஏதேனும் ஒரு அருமையான பெருமையான பரிகாரம் இருக்கின்றதா என்றால் இருக்கின்றது என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

"கையளவு நிலம் என்றாலும் சொந்த நிலம் வேண்டும்" என்பது அனைவருக்கும் உள்ள பொதுவான கனவு.

சிறுக சிறுக சேர்த்தாவது ஒரு இடத்தை வாங்கிவிடவேண்டுமென்பது, அதிலே ஒரு வீடு கட்டி அழகு பார்க்க வேண்டுமென்பதும் அனைவருடைய கனவாகவும் இருந்து வருகின்றது. அப்படி நாம் வாங்கும் இடத்தில் ஏதேனும் பிரச்சினை வந்தாலும், வந்த அப்பிரச்சினையிலிருந்து மீளவும் அருள் புரிகின்றார் "திருச்சியிலே"

இருக்கின்ற "பூமிநாதர்".

நில தரகு வேலை செய்பவர்கள் செல்ல வேண்டிய தலமும் இதுதான். இத்தலத்தின் வரலாறு பற்றி சுருக்கமாக காண்போம்.

ஒருமுறை ஒரு மகான் இத்தலத்திற்கு விஜயம் செய்தார். அவர் அந்நாட்டு மன்னனை சந்திக்க சென்ற வேளையில் அவர் மன்னனுடைய முகக்குறிப்பிலிருந்து மன்னனுடைய துயரத்தை அறிந்து,"மன்னா உனக்கு என்ன துயரம் நேர்ந்தது எனக் கேட்க, மன்னன் அதற்கு", "நான் சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் எழுப்பி வணங்க ஆசைப்படுகின்றேன்" என்று அந்த மன்னன் மகானிடம் கூறினார்.

அதன் படிதான், மன்னன்

"லிங்க பிரதிஷ்டை " செய்து வழிபட்டு.

சுவாமிக்கு "பூமிநாதன்" என்ற பெயரும் சூட்டினான்.

நிலத்திலே பிரச்சினையா? வீடு நிலம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் சிறப்பான பரிகார நிவர்த்தி பெற பூலோகநாதரை வழிபடுகின்றனர். வாஸ்து பரிகார பூஜையும் இங்கு செய்யப்படுகின்றது. வாஸ்து நாளன்று சுவாமிக்கு விசேஷ யாகம் நடக்கிறது.

இந்த யாகத்திலே ஆறு கலசங்களை வைத்து பூஜை செய்வார்கள். பின்பு அந்தத் தீர்த்தத்தை பூலோகநாதருக்கு மஹாபிஷேகம் செய்வார்கள்.

இவ்வேளையில் சுவாமிக்கு பூமியின் கீழே விளையும் தானியங்கள், கிழங்குவகைகளை படைத்து நைவேத்தியம் செய்கின்றனர்.

கட்டிடம் தொடர்பான பிரச்சினை உள்ளோர்கள் இதி கலந்து கொண்டால் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

இப்படிப்பட்ட ஸ்தலம் எங்கே இருக்கிறது, இதனுடைய இருப்பிடம் திருச்சி மார்கெட் பேருந்து நிறுத்தம் அருகே இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் நடைதிறப்பு நேரம் காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணிவரையிலும், மாலை 4 மணியிலிருந்து இரவு 8 வரையிலும் திறந்திருக்கும், அன்பர்கள் அங்கு சென்று தங்களின் குறைகளை தீர்த்து நலம் பெற வேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

விரைவான திருமணங்கள் அமைய பரிகாரம்.

விரைவான திருமணங்கள் அமைய செய்ய வேண்டிய பரிகாரங்கள்.









































   























 விரைவான திருமணங்கள் அமைய செய்ய வேண்டிய பரிகாரங்கள்.


அன்பர்களே. இன்று நாம் காணவிருப்பது,

"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன."

மனித வாழ்க்கையிலே திருமணம் மிகமிக முக்கியப் பங்கை வகிக்கின்றது. ஒரு ஆணிற்கோ, பெண்ணிற்கோ பொறுப்பு நிலையை கொடுத்து அவர்களின் வம்சம் விரிவடையச் செய்கிறது.

பொதுவாக நாம் ஜாதகத்தைப் பார்க்கும் பொழுது, "கலஸ்திரகாரகன்" என்று வர்ணிக்கப்படுகின்ற சுக்கிரன் நிலை பாழ்பட்டால், காலதாமதமான திருமணம் ஏற்படும், திருமண வாழ்க்கை குழப்பமாகிவிடும், திருமணத்தில் சுகம் கிடைக்காது. கட்டிடம் கிடைக்காது, வாகனம் கிடைக்காது, சுக போகங்கள் கிடைக்காது.

ஒருவரது ஜாதகத்திலே சுக்கிரன் பாதிக்கப்படக் கூடாது. ஆண்களின் ஜாதகத்தை சற்று ஆராயும் பொழுது அவர்களின் மனைவியை சுக்கிரன் என்ற கிரகம் காட்டும், அவர்களுக்குத் திருமண சுகம் கிடைக்க வேண்டுமென்றால் 6,8,12-ல் மறையக் கூடாது. சுக்கிரனை

"கட்டிட காரகன்" என்றழைக்கிறார்கள்.

அவரை "கலஸ்திர காரகன்" என்றும் அழைக்கின்றார்கள். சுக்கிரனை "வாகன காரகன்" என்றும் அழைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சுக்கிரன் சுகபோக நிகழ்வுகளைக் கொடுப்பதால் இவருடைய பங்கு நம் ஜாதகத்திலே நல்ல நிலையிலே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவர்களுக்குத்தான் பரிகாரம்.

சுக்கிரன் நிலை பாதிக்கப்பட்டால் கால தாமதமான திருமணம் நடக்கும்.

நடந்தாலும் திருமண வாழ்க்கை இனிக்காது. அவர்களுக்கு நல்ல முறையிலே மாமியார் உறவு அமையாது.

வாகன வசதிகள் கிடைக்காது. இப்படிப்பட்ட நிலையை ஒரு மனிதன் அவனின் தின வாழ்க்கையிலே சந்திக்கின்றான் என்றால், அவனின் ஜாதகத்தில் சுக்கிரன் பாழ்பட்டிருப்பார் அல்லது பழுது பட்டிருப்பார்.

அப்படிப்பட்டவர்களெல்லாம் என்ன செய்ய வேண்டுமென்றால் கும்பகோணத்திற்கு அருகாமையிலுள்ள "கஞ்சனூர்"

ஸ்ரீரங்கத்திற்குச் செல்கின்றனர்.

அப்பிரச்சினை உள்ளவர்கள் சென்னை வாசியாக இருந்தால் அவர்கள் அங்கு செல்ல வேண்டியதில்லை.

சென்னையிலுள்ள "மாங்காட்டு வெள்ளீஸ்வரர்" ஒரு வெள்ளிக் கிழமை அன்று வணங்கி அர்ச்சனை செய்து

நெய் தீபம் ஏற்றி வழிபட்டு சிறிது நேரம் அவ்வாலயங்களிலே அமர்ந்துவிட்டு வர வேண்டும்.

ஏன் நாம் ஆலயங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால், ஆலயங்களே அதிக சக்தியை உற்பத்தி செய்து, ஒரு மனிதனுக்கு கொடுத்து, அவன் கர்மாவை மெல்லக் கரைத்து, சக்கரங்களை இயக்க, அவனின் உடம்பிலே ஒரு காந்த சக்தியை புகுத்தி, ஆணாக இருந்தால் மணமகன் அம்சத்தை ஊட்டி, பெண்ணாக இருந்தால் மணமகள் அழுகை ஊட்டி, திருமணத்தை விரைவாகச் செய்து அவர்களின் திருமண வாழ்க்கையிலே பிணக்குகள் ஏற்பட்டாலும், கணக்குகள் தவறினாலும் சுக்கிரன் ஆலோசனை கிடைக்கும்.

அப்படிப்பட்ட சுக்கிரன் கருணையை நாம் பெறுவதற்கு மாங்காடு வெள்ளீஸ்வரர் வெள்ளியன்று வணங்க மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்று கூறி, இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்.













    

வருடத்தில் மூன்று முக்கிய அமாவாசைகள் கடைபிடியுங்கள்.



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, பித்ரு தோஷம் கட்டுப்பட நாம் மேற்கொள்ளவேண்டிய பரிகாரம் பற்றியதாகும்.

இறைவன் நமக்கு வருடத்தில் மூன்று சக்திவாய்ந்த அமாவாசை களை உருவாக்கித்தருகின்றார். ஒன்று தை அமாவாசை, இப்பொழுது நடந்துகொண்டிருக்கின்ற ஆடி அமாவாசை, மஹாளய பச்ச அமாவாசை. இந்த மூன்று அமாவாசைகளிலே பித்ருக்களை நாம் நினைவு கூற வேண்டும். ஏனென்றால், நம் ஜனன ஜாதகத்திலே பித்ரு தொல்லை இருக்கின்றது, பித்ரு சாபம் இருக்கின்றது என்பதை கண்டறிவதற்கான ஜோதிட வாய்ப்பாடுகளை இப்பொழுது காணலாம்.

ஒன்று சூரியன் என்ற கிரகம் நீச்சம் பெற்றிருந்தாலோ அல்லது சூரியன் பகைவர்களின் கால்களிலே இருந்தாலோ அல்லது 9வது இடத்திலே நச்சு கிரகங்கள் இருந்தாலும் சூரியனின் மீது பகை கிரகங்களின் பார்வை விழுந்தாலும் ஒருவரது ஜனன ஜாதகத்திலே இந்த பித்ரு தோஷம் இருக்கிறது.

இந்த பித்ரு தோஷம் விலக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முன்பு, கருட புராணம் என்ன சொல்லுகின்றது என்றால், இங்கு நாம் வாழும் பூமி மண்டலத்திலிருந்து ஒன்பதே கால் கோடி மைல்களுக்கு அப்பால் சூரியன் என்ற ஒரு கிரகம் இருக்கின்றது. அந்தச் சூரிய கிரகத்திலிருந்து ஒன்பதே கால் கோடி மைல்களுக்கு அப்பால் "பித்ரு லோகம்"

இருக்கிறது.

அந்த பித்ரு லோகத்திலே இருக்கின்ற சூட்சும சரீரத்தை தாங்கி இருப்பவர்களுக்கு உணவு என்னவென்றால், நாம் இங்கே அவர்களை மனதில் நினைத்து அவர்களுக்கு அளிக்கும் எள்ளானது அவர்களுக்கு அமிர்தமாக மாறிவிடும். அதைபெற்ற சூரியன் பித்ரு தேவதைகளிடம் ஒப்படைத்து அவர்களின் மூலமாக நம் பித்ருக்களின் பசியை போக்குகிறது.

நம் உலகத்திற்கும், பித்ருக்களின் உலகத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், நம் உலகக் கணக்கின்படி காணும் போது,365 நாட்கள் கொண்டது ஒரு வருடம். நமது ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாள் கணக்காகும்.

உதாரணமாக, நமது பாட்டன் இறந்து நிலவுலக கணக்கின் படி 50 வருடங்கள் என்பது அங்கே 50 நாட்களாக மாறும்.

பித்ருகளுக்கு சரிவர திதி, திவசம், தர்ப்பணம் செய்யவில்லையென்றால், அவர்கள் மனதில் புழுங்கி வடிக்கும் கண்ணீர் நம் சந்ததியையே பாதிக்கும்.

எப்படி நம் பாட்டனுக்கு, தந்தைக்கு அல்லது நம் முன்னோர்களுக்கு திதி செய்யவில்லையேன்றால் நம்மை எப்படி பாதிக்கின்றது என்றால், நம் உடலில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள் என்றும், அவர்களின் குறைகள் நிவர்த்தியாகும் வரை இவ்வுலகை விட்டு அவர்கள் அகலமாட்டார்கள் என்றும் கருட புராணம் கூறுகிறது.

ஆகவே, அவர்களுக்குரிய திதி, தர்ப்பணம், திவசம் ஆகியவற்றை முறையாக செய்வது ஒன்றே அவர்களுக்கு நிச்சயமாக விடுதலை அளிக்கும். அதனால் இந்த ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து, திதி.திவசம் செய்து முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று இன்பமாக வாழவேண்டும்.என்றுகூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

Monday, May 25, 2020

ஆலய வழிபாடு முறைகள் மற்றும் ஆலய வழிபாடு செய்ய விதிமுறைகள்.



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, ஆலய வழிபாட்டு விதிமுறைகள் பற்றியதாகும். ஒருவர் முதலிலே ஆலய கோபுரத்தை பார்த்து வழிபட்ட பிறகுதான் ஆலயத்திற்கு உள்ளே செல்ல வேண்டும்.

ஆலயங்களுக்குச் செல்லும் போது, குளித்து, தூய ஆடை அணிந்து சுத்தமாகச் செல்ல வேண்டும். பூ, பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு, சூடம், பத்தி, விளக்கேற்றத் தேவையான எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஆலயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆலயத்திற்குள் சென்றபிறகு ஒருவர் மற்றவரை வணங்குதலோ ஒருவர் மற்றவருக்கு விபூதி இடுவதோ கூடாது.

மூல விக்கிரகத்திற்கு திரையிட்டிருக்கும் பொழுது வணங்குதல் கூடாது. மூலவரை அனைவரும் தரிசிக்கும்படி ஒதுங்கி நின்று தரிசிக்க வேண்டும். சிலைகளை தொட்டு வணங்கவோ, சிலைகளின் பாதங்களில் சூடம் ஏற்றவோ கூடாது. உற்சவர் பவனி வரும் பொழுது உடன் செல்ல வேண்டும்.

ஆலயத்திற்குள் வீண் பேச்சு பேசக்கூடாது.சப்தமாக பேசுவதோ, உரக்கச் சிரிப்பதோ ஆலயத்தினுள் செய்யக்கூடாது.

ஆலயத்தினுள் அழக்கூடாது.

சிவ ஆலயங்களில் சிவனை முதலில் வணங்கிவிட்டு, பிறகு, உமாதேவியை வழிபடுவதும், வைணவ ஆலயங்களில் ஸ்ரீதாயாரை முதலில் வணங்கிவிட்டு பெருமாளை வணங்குவதும் சிறப்பு,ஆலயங்களில் பிரகாரங்களை சுற்றி வந்து வழிபாட்டை முடித்த பிறகே இறுதியில் நவக்கிரகங்களையும், ஆஞ்சநேயரையும் வணங்க வேண்டும்.

அவ்வாறு வணங்கி சில நிமிடங்களாவது அங்கு அமர்ந்து விட்டு பிறகுதான் புறப்பட வேண்டும்.

ஆலயத்தில் விபூதி வாங்கும் பொழுது வலது கையின் கீழ் இடது கையை சேர்த்து விபூதி வாங்கி அப்படியே நெற்றியில் தரிப்பது நலம். அப்படி இல்லாமல் ஒரு தாளில் விபூதியை விட்டு அதிலிருந்து எடுத்து தரிக்கலாம். ஆலயத்தின் வாசலிலே உள்ள பிச்சைக்காரர்களுக்கு நாம் ஆலயத்தின் உள் செல்லும் பொழுது தர்மம் செய்யலாம், ஆனால் வெளியேறும் பொழுது தர்மம் செய்தால் தரிசன பலனை அவர்களுக்கு தாரை வார்த்தது போலாகும்.

சிவ ஆலயங்களில் ஒன்று பிரதட்சணங்கள், விஷ்ணு ஆலயங்களில் நான்கு பிரதட்சணங்கள், விநாயகர் ஆலயத்திலே ஒரே பிரதட்சணம் செய்ய வேண்டும். நவக்கிரகங்களை ஒன்பது பிரதட்சணை செய்ய வேண்டும்.

அம்பிகையை தரிசிக்க செவ்வாய், வெள்ளிக்கிழமையும், அபிராமியம்மனை தரிசிக்க வெள்ளி இரவும், துர்க்கை அம்மனை தரிசிக்க ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ராகு காலங்களிலும், காளியை அஷ்டமியிலும் வணங்குவது நல்லது.

சண்டிகேசவர் சன்னிதியிலே

தியானத்தில் இருக்கும் சண்டிகேசவரின் முன் நின்று கைதட்டாமல் அமைதியுடன் சிவ வழிபாடு அமைந்ததை தெரிவிக்க வேண்டும். சிவனுடைய பூத கணங்கள் நம்முடன் வராமல் இருக்க, சிவன் சொத்து குல நாசம் என்பதற்கிணங்க சிவன் கோயிலில் உள்ள தூசைக்கூட நம் மீது ஓட்ட விடக்கூடாது, சிவன் கோவில் சற்று அமர்ந்து விட்டு வர வேண்டும்,

விஷ்ணு கோயில்களில் லக்ஷ்மி நம்முடன் வீட்டுக்கு வந்து அதிர்ஷ்டத்தைப் பொங்க, விஷ்ணு கோயில்களில் தரிசனம் செய்த பிறகு அங்கு அமர்ந்து விட்டு வரக்கூடாது, ஆலயத்தில் கொடிக்கம்பம் அல்லது பலிபீடத்திற்கு முன்னால் வடக்கு நோக்கி தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

திருக்கோயில்களில் அபிஷேகம்' அல்லது 'திருமஞ்சன தீர்த்தம்" வாங்கிக் கொள்ளும் பொழுது இடது கையின் மேல், சிறு வஸ்திரம் வைத்து அதன்மேல் வலது உள்ளங்கையை குவித்து அந்த தீர்த்தத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்.

திருக்கோயில்களுக்குச் செல்லும்பொழுது கைலி அணிந்து செல்லக்கூடாது, எக்காரணம் கொண்டும் ஈரத்துணி உடுத்தி சிவனுடைய ஆலயங்களுக்குச் செல்லக்கூடாது என்பதை நீங்கள் கடைபிடிக்கும் பொழுது நிச்சயமாக உங்களுக்கு அந்த இறை வழிபாட்டின் பலன்கள் கண்டிப்பாக வந்து சேரும்.

இதுதான் நாம் ஆலயத்திற்கு சென்று வணங்கும்பொழுது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளாகும். அவற்றை நன்முறையில் பின்பற்றி இறைவனின் திருவருள் பெற வேண்டுமென்று கூறி, இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.

குழந்தை வரம் பெறுவதற்கு பலவகையான வழிபாடுகள்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது.

குழந்தை பிறப்பதற்கான பரிகாரம் பற்றியதாகும். ஒருவருடைய ஜனன ஜாதகத்திலே அவருக்கு குழந்தை பேறு இருக்கிறதா.? இல்லையா.7 என்பதை காட்டும் ஸ்தானம் 5ம் ஸ்தானம், இயற்கையிலேயே 5வது இடத்தில் ராகு இருந்தாலும், ஆண் ஜாதகத்திலே 5வது இடத்தில் ராகு இருந்தாலும், பெண் ஜாதகத்தில் 5லோ, 9லோ பாவிகள் இருந்தாலும், பாவிகளுடைய பார்வைகள் இருந்தாலும், பாவிகளோடு கலந்திருந்தாலும், இந்த மக்கள் பேறு' என்று சொல்லப்படுகின்ற இந்த குழந்தை செல்வத்தைத் தடுத்து விடுகின்றது அதற்கான முக்கிய பரிகாரங்களை ஒன்றன்பின் ஒன்றாக அன்பர்களுக்கு அளிக்க இருக்கின்றான்.

5லே ராகு இருக்கப்பெற்றாலும்கூட

"பத்ரகாளியை பார்த்த மாத்திரத்திலேயே ராகு கதிகலங்கி விடுவார். அதனால்தான் சிவ ஆலயத்தில் இருக்கின்ற துர்க்கை வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.

ராகு கரும்பாம்பு என்று கூறுவதால், சனியின் குணத்தோடு ஒத்திருப்பதால், அவர் கருங்கோல் என்றும் அழைக்கப்படுகிறார். அவருடைய தினமான சனியன்று நீங்கள் தீபத்தை ஏற்றி வைத்து வர, உங்களுக்கு குழந்தைபேறுக்கு ஒரு அருமையான வாய்ப்பு, 5ல் செவ்வாய் இருக்கப்பெற்றவர்களுக்கு அடிக்கடி

கருச்சிதைவு' ஏற்படுகின்றது

உலகத்தில் இந்து மதத்தில் மட்டும்தான் இந்த கருச்சிதைவிற்கு என்று ஒரு கடவுள் இருக்கிறார். இவ்வாறு அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு அந்த பெறாத தன்மையை விலக்க

"கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யலாம். அல்லது உங்கள் ஊரிலே இருக்கப்பெற்ற

கருக்காத்தம்மன்" இருக்கப்பெற்றால் அல்லது முருகப்பெருமானை வழிபட்டாலும் கருச்சிதைவிலிருந்து, காப்பார், "நரசிம்ம வழிபாட்டு" இந்த கருச்சிதைவை தடுக்கும் வல்லமை கொண்டது.

செவ்வாயை 'ரத்த காரகன்' என்று சொல்வதால், செவ்வாயின் மூலம் ஏற்படும் இந்த கருச்சிதைவு களைத் தடுக்கின்ற கடவுள்களை வரிசைகிரமமாக கூறியிருக்கின்றோம். அன்பர்கள் தங்களின் சௌகரியத்துக்கு தகுந்தாற்போன்று, இக்கடவுள்களை வணங்கி, தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் 5வது இடத்திலே சனி இருக்கப்பிறந்தவர்களுக்கு காலதாமதமான, மகப்பேறு என்று சொல்லப்படுகின்ற குழந்தைச்செல்வம் கிடைக்கிறது. 5 குழந்தை செல்வத்தைக்காட்டுகின்ற பகுதியாக இருந்தாலும் கூட ஜோதிடத்திலே 9 என்பது பாக்கியத்தைக் காட்டுகின்றது. குழந்தை அவ்வளவு முக்கியமா என்றால், அது மிகவும் முக்கியம்தான். ஏனென்றால் ஒரு மனிதன் தன் இறப்பிற்குப்பின் செய்யப்படும் இறுதிச்சடங்குகளை காண இயலாவிட்டாலும், அச்சடங்குகள் முறையாக நடைபெற வேண்டுமென்று ஆண்மை ரூபத்தில் மிகவும் எதிர்பார்ப்பான், அதற்கு மிகவும் அவசியம் பிள்ளைச் செல்வம் ஆகும்.

அந்த பிள்ளைச்செல்வத்திற்காக பெற்றோர்கள் எப்படியெல்லாம் ஏங்குகிறார்கள். எந்தெந்த பரிகாரங்களை அவர்கள் செய்கிறார்கள். 'எதை தின்றால் பித்தம் தீரும்” என்ற நிலையிலிருப்பவர்களுக்கு இந்த பரிகார தொகுப்பு, ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை .

ஒவ்வொரு சனியன்றும், சனியிருக்கப்பிறந்தவர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வர, அது நிறைவேறும் பட்ச்சத்தில் அவருக்கு வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு சாற்றலாம். அவரை வழிபடவழிபட இந்த சனியால் ஏற்படும் தொல்லை அகன்று வருகிறது.

5லே சூரியன் இருக்கப்பிறந்தவர்களுக்கு இப்படிப்பட்ட மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது. சிவனை நீங்கள் வழிபடும்பொழுது, திருவண்ணமலையிலே பஞ்சஸ்தலங்களிலே ஒன்றான அக்கினியை சாட்சியாக வைத்து சித்தர்கள் பரவியிருக்கும் "சித்தர்பூமி"

என்றழைக்கப்படுமிடத்திலே வியாழனன்று வரும் பௌர்ணமி தினத்திலே கிரிவலம் வந்து சிவபிரானை வணங்கி மூலிகைக் காற்றை சுவாசிக்க 5லிருக்கும் சூரியன் குழந்தைப்பேறை கொடுத்துவிடுகிறது.

கேது இருக்கப்பிறந்தவர்கள் விநாயகப்பெருமானை வணங்கி விநாயகர் காயத்ரி மந்திரத்தை சொல்லி வர, அரச மர விநாயகரை வழிபட்டு, தொட்டில் கட்ட கேதுவால் ஏற்பட்ட தோஷம் அகலும்,

ஏற்கனவே கூறியதுபோன்று புதுச்சேரி அன்னையை வணங்கி உங்களது பிரார்த்தனையை எழுதி மனதார பிரார்த்தித்து, குழந்தை பேறு கிடைக்க வேண்டினால், பிரார்த்தனை நிச்சயம் நிறைவேறும் என்பது உறுதி. என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமைய செய்ய வேண்டிய ஆலய பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, வீடு கட்ட வீடெனும் செல்வம் பெற செல்லும் திருத்தலங்கள்.

ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் என்பது மிகவும் அவசியமாகும். இருக்க இடம் என்பது மட்டும் ஈடேறாமல் போகிறது.

வீடின்றி ஒரு மனிதன் படும் வேதனை சொல்லி மாளாது. சொந்த வீடு கிடைக்காதா என்று அவன் ஏங்குகிறான், அனைவரும் சொந்த வீட்டில்தான் வாசம் செய்கின்றார்களா? என்றால் நிச்சயம் இல்லை .

இந்த நிலையை ஏற்படுத்துகின்ற தன்மை அவரின் ஜாதகத்திற்கு உண்டு.

பூமிச்செல்வத்தை அளிப்பவர் செவ்வாய்.

வீடாக மேம்படுத்திக் கொடுப்பவர் சுக்கிரன். இது ஒருவருக்கு இருக்கின்றதா என்பதை அவரின் ராசியின் 4-காவது வீடு காட்டிவிடுகின்றது. மேலும், செவ்வாய், சுக்கிரன், லக்னத்தின் 4-வது வீடு பாதிக்கப்படக்கூடாது. அவ்வாறு பாதிக்கப்படாமலிருந்தால் அவர்களுக்கு வீடு பெரும் பாக்கியம் அமைகின்றது.

அவ்வாறு அமையாதவர்களுக்கு தெய்வத்தின் கடாட்சம் இருந்தால் சொந்த வீடு கட்டும் பாக்கியம் அமைந்து விடுகின்றது.

வீடு கட்ட இயலாதவர்கள், வீடை பாதி நிலையிலேயே கட்டி நிறுத்தியவர்கள் ஆகியோர் சென்று வணங்க வேண்டிய தலம் சுசீந்திரம். நாகர்கோயில்

- கன்னியாகுமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது இத்தலம். பிரம்மா, விஷ்ணு , சிவன் மூவரும் காட்சி தரும் இடம் , சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி ஆகிய மூவரும் தவக்கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.தல மரம் - கொன்றை

பதினாறு அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் இங்கு தரிசனம் செய்யலாம். லிங்க அமைப்பு பிரம்மா, விஷ்ணு, சிவன் அம்சமாக உள்ளது. அனுசுயாவின் கற்பை சோதிக்க இம்மூவரும் குழந்தை வடிவாக மாறியதே இத்தலம்.

சுசீந்திரம் நவக்கிரகத்தை பூஜை செய்தால் சொந்த வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். தல இறைவன்-அம்பாள் ஆகியோரை வழிபட நல்ல பலன் பெறலாம் எனக்கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.

Sunday, May 24, 2020

செய்வினை தோஷம் அகல பில்லி ஏவல் சூனியம் ஒழிய ஆலய பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, செய்வினை தோஷம் அகல வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும். இந்த நவீன யுகத்தில் செய்வினை என்பது சாத்தியமா?

செய்வினை என்றால் என்ன? நாம் செய்த வினையே செய்வினையாகும். அற்ப காசிற்காக ஆசைப்பட்டு பிறர்க்கு தீய வினை செய்யும் மந்திரவாதிகள் பின்பு அதனாலேயே மாண்டு போகிறார்கள்.

ஒரு மனிதனை செய்வினை அதிகம் தாக்குகின்ற காலம் எதுவெனில் ராகு-கேது தசை அல்லது சந்திரன் உச்சம் பெற்று தசை நடத்துகின்ற காலம், மேலும் 6,8,12 -லே மோசமான கோச்சார சூழ்நிலையிலே ஜோதிடம் அறிந்த மந்திரவாதிகள், வைத்துச் செய்யப்படுகின்ற மோசமான முறையே இந்த செய்வினை ஆகும். இதை நீக்க நாம் செல்ல வேண்டிய திருத்தலம்

"திருவாரூர்", இத்தல இறைவன்

"வன்மிகநாதர்", இறைவி-அல்லியன் கோதை அம்மை.

வைகாசி மாதம் 10 நாட்கள் இங்கு திருவிழா நடைபெறுகின்றது. பூக்குழி எனப்படும் தீமிதி திருவிழாவும் நடைபெறுகின்றது. இங்குள்ள சீதளா தேவி அம்பாளை வணங்கி வேண்டும்பொழுது நற்பலன்களைப் பெறலாம். ஒவ்வொரு மாதம் பௌர்ணமியிலும் அபிஷேகம் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டால் செய்வினை அகலுகின்றது.

இத்திருத்தலத்திலுள்ள சக்கரத்தின் தன்மையானது செய்வினைக்கு மட்டுமின்றி மற்ற துன்பங்களுக்கும் நிவர்த்தி அளிக்கின்றது. என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.



மன அமைதி மற்றும் மன நிம்மதி வாழ்க்கையில் பெற ஆலய பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, மனநிம்மதியை பெறுவதற்கான பரிகாரம் பற்றியதாகும்.

பணம், பொருள், குடும்பம் என எவ்வளவு இருந்தாலும், மன அமைதி இருந்தால்தான் அதை அனுபவிக்க முடியும். நிம்மதி இல்லாதவனுக்கு சொர்க்கத்தில் கூட சுகம் கிடைக்காது. மனநிம்மதியின்றி குழப்பத்தில் வாடித்தவிப்போரை ஆறுதல் படுத்தும் "சிவன்" "திருப்பூர்" அருகே

"திருமுருகன்பூண்டியிலே" இருக்கின்றார்.

முதலிலே ஜாதகரீதியாக யாருக்கெல்லாம் மனம் அமைதி அற்று காணப்படும்.

யாருடைய ஜாதகத்தில் சந்திரன் நீச்சம் பெறுகின்றதோ, யாருடைய ஜாதகத்திலே மனோகாரகன் என்று அழைக்கப்படும், சந்திரன் 6,8,12-ல் மறைந்தால் அல்லது யாருடைய ஜாதகத்தில் சந்திரன் சர்ப்பங்களின் கால்கள் என்று வருணிக்கப்படுகின்ற ராகு,கேது இவர்களுடைய பாதசாரத்தில் இருக்கும்பொழுது அல்லது ராகு,கேது சனி என்ற கடுமையான பாவிகளின் சேர்க்கை பெற்றிருக்கும்போது ஒருவருக்கு மனம் நிம்மதி அற்று காணப்படும்.

அந்த சூழ்நிலையிலே எந்தக் கோயிலுக்குச் சென்றால் மன நிம்மதி அடையும் என்பதையும் காண்போம். அவ்வாறு மன நிம்மதி வேண்டி இந்த திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயிலிலே வேண்ட பலன் கிடைக்கும். "சூரபத்மன்" எனும் அசுரன் ஆணவம் கொண்டு தேவர்களை சிறைபிடித்து துன்புறுத்தி வந்தான். அவனது கொடுமையை தாங்க முடியாத தேவர்கள் தங்களை காக்கும்படி முருகனை வேண்டினார்கள்.

முருகப்பெருமான் அசுரனை "சம்ஹாரம்"

செய்தார். அவர் தெய்வமாக இருந்தாலும் கூட, அசுரனைக் கொன்றதால், "வீரக்கத்தி தோஷம்" அவருக்கு பற்றியது. அதனால், அவர் என்ன செய்தார் என்றால், இந்த கோவிலுக்கு சென்று தன்னுடைய வேலை கோயில் வாசலிலே குத்தி நிலைநிறுத்தி, உள்ள சென்று தன் தந்தையான சிவபெருமானை வேண்டிவணங்கும் பொழுது, அவருடைய வீரக்கத்திதோஷம் விலகியது.

இந்தக் கோயிலின் மற்றொரு அம்சம் என்னவென்றால், "வேலும், மயிலும்"

இல்லாமல் தனித்தன்மையோடு இருக்கும் முருகப்பெருமான் அழகாக காட்சியளிக்கின்றார். அவரையும் நீங்கள் வணங்கலாம்.

மன நோய்க்கு மருந்தாக இந்த ஸ்தலம் பிரதானமாக விளங்குகிறது.

"சித்தப்பிரமை", "மனக்குழப்பம்" உள்ள பக்தர்கள் இங்குள்ள "பிரம்ம தீர்த்தத்தில்"

நீராடி தெளிவு பெறலாம். தாங்கள் செய்தது எப்பேற்பட்ட பாவங்களாக இருந்தாலும் இந்த "சண்முக தீர்த்தத்தில் நீராடி போக்கலாம். தமக்கு வேண்டிய ஆகைகளும் நிறைவேற "பால்குடம், காவடி"

எடுத்து நேர்த்திகடனை செலுத்துகின்றார்கள். இப்படிப்பட்ட ஸ்தலங்களுக்கு நாம் செல்வதுதான் நம் அனைவருக்கும் பெருமையான ஒன்றாகும். இத்திருக்கோயில் திருமுருகன்பூண்டி திருத்தலமானது கோயம்புத்தூரிலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 5:30 மணிமுதல் பகல் 12:45 மணிவரையிலும் மாலை 3:30 மணியிலிருந்து இரவு 8:15 மணிவரையிலும் திறந்திருக்கும்.

இப்பேற்பட்ட இத்தலத்திற்குச் சென்று நிறைவான மனநிம்மதி பெற வேண்டுமென்று என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

காதல் திருமணம் வெற்றி பெற பயன்பாடு உள்ள பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, காதல் திருமணங்கள் அமையும் ஜாதகங்கள் பற்றியதாகும்.

'களஸ்திரகாரகன்" என்று அழைக்கப்படும் சுக்கிரன், ஒரு ஜாதகத்திலேவலிமையாக இருந்தால், லக்கனத்திலிருந்து எண்ணிவர ஐந்தாம் அதி ஏழில் இருந்தாலும், ஏழாம் ஆதி ஐந்தில் இருந்தாலும், அவர்களுக்கு காதல் திருமணம் கைகூடும்.

காதல் திருமணத்திற்கு ஏராளமான வாய்ப்பாடுகள் இருக்கின்றன. உங்களை அதிகம் குழப்பாது, ஒருசில வாய்ப்பாடுகளக் கூறி அதற்கான பரிகாரத்தையும் கூறுவதே சாலச்சிறந்தது.

ஐந்தாம் ஆதி, ஏழில் இருந்தாலும், ஏழாம் ஆதி ஐந்தில் இருந்தாலும் லக்கனாதிபதியும், சுக்கிரனும் வலிமை பெற்றிருந்தாலும். மேலும், ஏழாவது இடத்திலே சந்திரன் இருக்கப்பிறந்தவர்கள் சந்திரன் இருக்க அந்த அமைப்பை ஜாதகமாகக்கொண்டவர்கள், சந்திரன் ராகு அல்லது கேது சேரும் அமைப்பை உடையவர்கள் இவர்களுக்கெல்லாம் காதல் திருமணம் வரும்.

இந்தக் காதல் திருமணம் அனைவருக்கும் மகிழ்ச்சி தருமா? தரதா? என்பதை அவர்களின் ஜாதகம் காட்டும். இந்த காதல் திருமண அமைப்பு சில பெற்றோர்களுக்கு பிடிக்காத நிலையில் இருக்கும் பொழுது அவர்களை எதிர்த்து காதல் மணம் புரிய தைரியமற்றவர்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும்பொழுது அந்த ஜாதகர்களுக்கு அளிக்கப்படும் விளக்கம் எப்படிப்பட்டதென்றால், நாம் பலகைகளில் காண்கிறோமே "விபத்துப்பகுதி" என்ற வாசகம் அதுபோலாகும். அதாவது அங்கு விபத்து நடக்காமல் இருப்பதை தடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும், ஒரு எச்சரிக்கை பலகையாகும். அதுபோல, இந்த வாலிப விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், வாலிபத்திலே வருகின்ற ஹார்மோன் விளையாட்டுக்களின்படி, இந்த அமைப்பிலிருந்து காக்க சில மார்க்கங்கள் கூறப்படுகிறது.

அதாவது, மேற்கூறிய அமைப்பின்படி இருப்பவர்கள், சுக்கிரன் அதிதேவதையான லஷ்மிதேவியை வழிபாடு செய்ய வேண்டும். சந்திரன் அதிதேவதையான அம்பாளை வழிபாடு செய்ய வேண்டும். சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லஷ்மிகளும் (எட்டு லஷ்மிகளும்) குடிகொண்டுள்ள அஷ்டலக்ஷ்மி கோயிலுக்கு

"நெய் தீபத்தில் தான்" லக்ஷ்மி தேவி உறைகிறாள் என்ற வாக்கின்படி மூன்று வேளைகளிலே வரும் சுக்கிர ஹோரை என்று அழைக்கப்படும் ஒரு வெள்ளியன்று, காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரையும், மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிவரையும், மாலை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரையும் தீபம் ஏற்றலாம். குறிப்பாக, இந்த நண்பகலைத் தவிர்த்து மற்ற இரண்டு வேளைகளிலே நெய் தீபம் ஏற்றி, மானசீகமாக லஷ்மிதேவியின் மஹா மந்த்ரத்தை ஆலயத்திலிருந்து கூறிவர, இப்படிப்பட்ட வாலிப விபத்து தடுக்கப்பட்டது, லஷ்மிதேவியின் அருளாசியால், கடாட்ச்சத்தால் உங்களின் தலையெழுத்து மாறும்.

மேலும், சந்திரன் அமைப்பை பெற்றவர்கள் சக்தியின் ஸ்தலங்களுக்குச் சென்று குறிப்பாக காஞ்சியிலே இருக்கின்ற காமாட்சியை வணங்கி வழிபட இந்தச் சுக்கிரனும், சந்திரனும் கட்டுப்படுகின்றார்கள். காமத்தின் ஆட்சிதான் காமாட்சி. காமத்தின் கோளாறே, இந்த காதல் விளையாட்டு, அந்த அன்னையை ஒரு திங்களன்று அல்லது வெள்ளியன்று சென்று நெய் தீபம் ஏற்றி அந்த அம்மனை வணங்கி வர, உங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடைபெறும்.

இதை மானசீகமாக செய்துவர நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன்கள் தெரியும் என்பதைக்கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

Saturday, May 23, 2020

மரண பயம் நீங்க மற்றும் மரண கண்டம் தவிர்க்க ஆலய பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது,மரண கண்டம் நீங்க வணங்க வேண்டிய திருத்தலம் பற்றியதாகும். ஒரு மனிதனின் ஜாதகத்தில் ஏழரை சனி வருகின்ற காலம், அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி வருகின்ற காலங்களில் கண்டங்களும் வரும்.

சர்ப்ப தசை எனப்படும், ராகு, கேது தசைகளில் 6,8,12-ல் தசை நடக்கும் காலங்களிலே, 8-ஆவது வீட்டில் நச்சுக் கிரகங்கள் இருந்து அது தசை நடத்தும் நேரங்களிலே மரண கண்டங்களை சந்திக்கிறான்.

இந்த அபாய கண்டங்களில் இருந்து தப்பிக்க, தவிர்க்க நாம் வழிபட வேண்டிய திருத்தலம்

"திருநீலக்குடி" கும்பகோணம் காரைக்கால் செல்லும் வழியில் இத்தலம் உள்ளது. இறைவன் திருநீலகண்டர், காமதேனுபுரீஸ்வரர் எனும் பெயர்களில் அழைக்கப்படுகின்றார்.

ஞானசம்பந்தபெருமான் இத்தலத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவருக்கு இறைவன் திருமண கோலத்தைக் காட்டுகின்றார்.

மரண கண்டம் உடையவர்கள் இத்தல இறைவனை வழிபட்டபின் எருமை, நீலப்பட்டுத்துணி, எள் முதலியவற்றை தானம் செய்ய வேண்டும். அதனால் எம பயம், மரண பயம் நீங்கும். ராகு, தோஷம் உடையவர்கள் உளுந்து, நீல வஸ்திரம் வெள்ளி விநாயகர், வெள்ளிப் பாத்திரம் முதலானவற்றை இத்தலத்திலே தானம் செய்தால் ராகு தோஷம் நிவர்த்தியாகும்

மகிழ்ச்சியான நேரத்தில் மனிதன் இறைவனை மறந்து விடுகிறான்.

தனியே விடும்பொழுதுதான் இறைமை நினைக்கின்றான். மரணபயம் வரும்போதுதான் பரிகாரங்கள் செய்ய முயற்சிக்கின்றான்.

அத்தகைய வேண்டுதல்களை நிறைவேற்ற இப்பரிகாரத்தலங்களுக்கு சென்று பயன் பெற வேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்.

வேலை அல்லது தொழில் அமைவதற்கான தெய்வீக பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் எடுத்துக் கொண்டுள்ள தலைப்பு, "வேலையின்மை".

வேலையின்மை எதனால் வருகிறது, யாரைப்பாதிக்கின்றது, என்பதேயாகும்.

ஒருவரது "ஜனன ஜாதகத்திலே" வரும் பத்தாவது இடம்தான் "கர்மஸ்தானம்" என்று சொல்லப்படுகின்ற வேலைக்கான ஸ்தானம். அந்த வேலை ஸ்தானத்துக்குரிய கிரகம் 6இலோ, 8இலோ, 12இலோ மறைந்திருந்தால் அல்லது 6ஆம் ஆதி, 8ஆம் ஆதி, 12ஆம் ஆதி ஆகியவற்றுடன் இணைந்திருந்தால் சதா சர்வகாலம் அவர்களுக்கு வேலையில் பிரச்சினை இருக்கும். செய்து கொண்டிருக்கும் வேலையிலும் ஆர்வம் இருக்கிறது. அதை அவர்கள் ஒரு அதிருப்தியோடுதான் செய்து கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு மிகமிக சக்திவாய்ந்த பரிகாரத்தைதான் இன்று நாம் அளிக்க இருக்கிறோம். அதாவது இப்படிப்பட்டவர்கள், மாதத்தில் புனர்பூசம் என்ற நட்சத்திரத்தின் 4ஆம் பாதம், கடக ராசியிலே உலா வரும் நேரத்திலே, அதை ஜோதிடர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

புனர்பூசம் 1,2,3 மிதுனதிலிருக்கும் போது இந்த பூஜையை செய்யக் கூடாது. 4வது இடத்தில் வரும் புனர்பூசம் கடக ராசி சார்ந்ததாக இருக்கும்.

அப்போது, நல்லதொரு ஓரையில் ஆஞ்சநேய மூர்த்தியின், சுந்தரகாண்டம் என்ற புனித நூலை எடுத்துக் கொண்டு, ராமர் பட்டாபிஷேகம் படம், அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லுகின்ற படம். இதை வாங்கி வைத்துக் கொண்டு, சொல்லப்படுகின்ற புனர்பூசம், சந்திரன், கடகத்திலே வருகின்ற அந்த நேரத்தில் உங்களுடைய பூஜையை நீங்கள் துவங்கலாம்.

ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு அத்தியாயம் என்ற விதத்திலே அந்த அஞ்சநேய மூர்த்தியை வழிபட்டு, இராமரின் பட்டாபிஷேகப்படத்திற்கு முன்பு, வெல்லம் குழைத்த சம்பா கோதுமையில் தயாரித்த சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமாக படைத்து, ஒரு நாளைக்கு ஒரு சர்கம் (அத்தியாயம்) என்று நீங்கள் பாராயணம் செய்கின்ற காலகட்டத்தில், நீங்கள் சங்கல்பம் என்று எதை வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், உங்களுடைய ஜனன ஜாதகத்திலே உங்களுக்கு பாதகமாக இருக்கும் வேலைவாய்ப்புக்குரிய அந்த கிரகத்தை வைத்துக் கொண்டு, கடவுளை உளமார நினைத்து, உங்களுக்கு ஏற்ற நிரந்திரமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அதற்கு ஆஞ்சநேயமூர்த்தியின் கருணை கிடைக்க வேண்டுமன்று பிரார்தித்து பூஜையை துவங்க வேண்டும்.

அற்புதமான அந்த நாளில் அந்த காண்டத்திலுள்ள அத்தியாயத்தை இவர்கள் படித்து வரும் போது அவர்களுக்கு அதன் பலன் தெரிந்து விடும்.

68 அத்தியாயங்கள் கொண்டதுதான் சுண்டரகாண்டம். சுந்தரன் என்றாலே அழகு என்று அர்த்தம். ஆஞ்சநேய மூர்த்தி நினைத்து இந்த காண்டத்தை பயபக்தியோடு படித்து வருகின்ற நேரத்திலே நீங்கள் முயற்சி செய்து எதிர்பார்த்த வேலைவாய்ப்பு நிச்சயமாக உங்களுக்கு கிடைத்துவிடும். ஏனென்றால், ஆஞ்சநேயருக்கு கட்டுப்படாத கிரகங்களே இல்லை . சதா சர்வகாலமும் சூரியனின் அம்சமாக இருக்கின்ற, இராமனை, அந்த ஆஞ்சநேயர் தியானத்திலே "ராம்,ராம்"

என்று சொல்லிக் கொண்டிருப்பதால், அந்த சூரியனை சுற்றிதான், மற்ற கிரகங்கள் இயங்குகின்றன, என்று கூறுகிறது ஜோதிடம்,

அப்படிப்பட்ட, ராமமூர்த்தி, தசாவதாரத்திலே சூரியனை சுட்டிகாட்டிடும் கிரகமாக காட்டுகிறது. மேலும், ராமாயணத்தின் ஒரு பகுதிதான் இந்த சுந்தரகாண்டம், இந்த சுந்தரகாண்டத்தை நீங்கள், ஆரம்பம் முதல் தொடங்கி பாராயணம் செய்து, வரும்போது நிச்சயமாக மனமாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும்.

என்று கூறி இனிதே இப்பகுதியை நிறைவு செய்கிறோம்.

அறியாமல் செய்த பாவத்தை போக்க ஆலய பரிகாரம்.



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, அறியாமையினால் செய்த பாவம் நீங்கிட மேற்கொள்ளும் பரிகாரம் பற்றியதாகும்.

தவறு செய்யாத மனிதர்களே இவ்வுலகில் எவரும் இல்லை . அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனிதர்கள் தவறு இழைத்து விடுகிறார்கள். அதனால் ஏற்படும் தோஷத்தினால் வருந்துவதைவிட, அதை பற்றிய எண்ணமே அவர்களுக்கு பெருந்துயரத்தை உண்டாக்கி வருகிறது.

அறியாமையினால் செய்யும் தவறுகளினால் ஏற்படும் தோஷங்களை போக்கும் பெருமாளின் அருள் பற்றிதான், இன்று நாம் காணவிருக்கிறோம். அப்பெருமைகள் வாய்ந்த பெருமாள் திருமலைவையாவூரில் அருள்கின்றார். திருவோணம் நட்சத்திரம் நாளிலே தீபம் ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்யலாம். மனிதன் ஏன் இந்த பாவங்களைச் செய்கின்றான் என்றால் அவனுடைய ஜாதகத்திலே ஒன்பதாவது இடம் அவன் ஆசையை பூர்த்தி செய்கின்ற இடம். அந்த இடத்திலே இருக்கின்ற நச்சுக்கிரகங்களின் ஆலோசனையின்படி அவன் சில தவறுகளை செய்து விட்டு மனசாட்சியினால் சவுக்கடி பெறுகின்றான், அந்தச் சூழ்நிலையிலே அவனுக்கு தாழ்வுமனப்பான்மை உண்டாகி காலம் முழுவதும் அவன் வருத்தத்தையே எப்பொழுதும் எண்ணி உழன்று சுழன்று அவன் கீழ்நோக்கிச் செல்ல அதனால் அவன் வாழ்க்கையிலே துன்பங்களும், துயரங்களும் படையெடுக்கின்றன.

அப்பொழுது அவன் தனக்கு ஏதாவது விடுதலை வராதா? எதாவது வாய்ப்புகளின் மூலம் நாம் வாழ்க்கையிலே முன்னுக்கு வரமாட்டேன்? 'எதைத் தின்றால் பித்தம் தீரும்' என்று அவன் சித்தம் கலங்கும் பொழுது, அவனை நோக்கி வருகின்ற அருமையான ஒரு வரப்பிரசாதம் போன்ற பகுதிதான் இந்தப்பரிகாரம்.

இக்கோயிலின் தல வரலாறு பற்றியும் சற்று சுருக்கமாகக் காண்போம். ஒருமுறை இந்தப்பெருமாளின் மீது அதீத பக்தி கொண்டிருந்தார் ஒருவர். அந்த ஒருவர்தான் இந்த நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னர். அவர் ஒருமுறை இந்த மலையின் உச்சிக்குச் சென்று பெருமாளுக்கு நான் இங்கு ஸ்தலம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

அப்பொழுது அவருக்கு பிரசன்ன வெங்கடேசர் (பிரசன்னம் என்றால் காட்சி தருதல் என்று அர்த்தம்) இந்த மன்னனுக்கு இங்கு பெருமாள் காட்சியளித்தார். அந்த நாள்தான் திருவோணம், திருவோண நட்ச்சத்திரத்திலே இக்கோயிலிலே குன்றின் மீது ஒவ்வொரு மாதமும் திருவோண நட்ச்சத்திரத்திலே ஓண தீபம் ஏற்றுகின்றனர். ஓண தீபம் ஏற்றுவதற்கும் ஒரு முக்கிய நிகழ்வு சான்றாகக் கூறப்படுகின்றது அதாகப்பட்டது, சிவாலயத்திலே வசித்த ஒரு எலி தற்செயலாக அணைய இருந்த ஒரு விளக்கின் மீது தாவியது. அதன் மூலம் அணைய இருந்த விளக்கின் திரி தூண்டப்பட விளக்கு பிரகாசமாக எரிந்தது.

இந்த புண்ணிய செயலால் அவ்வொலி

"மகாபலி" மன்னனாகப் பிறந்தது. அது திருவோண நட்ச்சத்திரத்தில் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டது. இந்த நாளே திருவோண நாளாக இங்கு கொண்டாடப்படுகிறது.

இந்தக் கோவிலில் மாதந்தோறும், திருவோணத்தன்று அகண்ட தீபம் ஏற்றி சுவாமியை பூஜை செய்கின்றனர்.

அப்படிப்பட்ட இத்தலத்திற்கு சென்று தாங்கள் நிம்மதியை பெற வேண்டும்.

தங்களுடைய பாவம் மறைய வேண்டும் என்று ஆவல் கொள்ளும் அன்பர்கள் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் 70 கிலோ மீட்டர் தொலைவில்

"படாளம்" கூட் ரோடிலிருந்து வேடந்தாங்கல் செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தொலைவில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.

மேலும், செங்கல்பட்டிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலே இக்கோயில் இருக்கிறது. இதற்கு மேல்,

"திருமலை வையாவூர், திருமலைவையாவூர்" என்று அழைக்கப்படுகின்ற பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் தான் அன்பர்கள் வணங்கவேண்டிய கோயில் அங்கு சென்று மனதார வணங்க வேண்டிய கோயில் அங்கு சென்று அன்பர்கள் பெருமாளின் அருளாசியைப் பெற வேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

Friday, May 22, 2020

பெற்ற தந்தையால் பெறுகின்ற திருமணத்தடையை நீக்க ஆன்மிக பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, தந்தையால் திருமணத் தடை ஏற்படுமா?

என்பது பற்றியும்.

ஒருவருடைய ஜனன ஜாதகத்தை நாம் எடுத்துக்கொண்டால், அதில் தந்தையைக் குறிக்கின்ற கிரகம் சூரியன். இந்த சூரியன் ஒரு ஜாதகத்திலே 1,5,9 என்ற இடத்திலே, ராகு கேதுவும் இணைந்து இருந்தால் அல்லது ராகுவிற்கோ கேதுவிற்கோ 1,5,9 என்று சொல்லப்படுகின்ற இடத்திலே சூரியன் இருக்கப்பெற்றாலும் ராகு, கேது 1,5,9 என்ற நிலையில் நடுவில் இருந்தாலும், சூரியன் சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தாலும், சூரியன், செவ்வாய் அஸ்தமனமானாலும், சூரியன் நீச்சம் பெற்றாலும், ஒன்பதிலே சனி, ராகு அல்லது கேது இருந்தாலும், சூரியன், லக்கனம் என்று சொல்லப்பட்ட இடத்தில், 7வது இடத்திலே அவர் பாதகாதிபதியாக இருந்தாலும், 7வது இடம் பாதக ஸ்தானத்தில் சூரியன் இருந்தால், மேற்கண்ட இந்த விதிகளில் சூரியன் இருந்தாலும் அந்த சுய ஜாதகத்திற்கு சொந்தக்காரர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஜாதக அமைப்பை உடையவர்கள் விரைவாக திருமணம் முயற்சி செய்யும் இந்த நேரத்திலே தந்தையே திருமணத்திற்கு தடையாக இருந்துவிடுகின்றனர்.

அப்பொழுது அந்த தந்தையை திருமணத்திற்கு முயற்சி செய்கின்ற அந்த முக்கியமான காலகட்டத்தில் ஒதுக்கி நாம் திருமண முயற்சி செய்யும் பொழுது, இந்த ஜோதிட அபிப்பிராயத்தை நாம் தகர்த்தெறிகின்றோம் என்பது மிக முக்கிய ஒன்றாகும்.

அவருடைய ஜாதகத்தைப் பார்க்கும் பொழுது தந்தையால் அந்த திருமணம் தாமதப்படுவதும், தடைபடுவதும் அது அவருக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்துகின்ற செயலாக இருந்தாலும், பொதுவாக நாம் திருமண விஷயத்தில் தந்தையின் ஈடுபாட்டைக் குறைத்து அவருக்கு பதிலாக பொறுப்பான வேறொருவரை அமர்த்தி அந்த திருமணம் முயற்சியை செய்யும்பொழுது, அந்தத் திருமணம் விரைவாகவும் வெற்றிகரமாகவும் முடிந்து விடுகிறது.

இந்த ஜோதிடத்தின் நுட்பத்தையும் இந்த ஜோதிடாத்தி ஆழத்தையும் இந்த பரிகாரத்தை நமக்கு கற்பித்த பெரியவர்களையும் முக்கியமாக நினைவு கூற வேண்டும். ஏனென்றால் இப்படிப்பட்ட சூட்சுமங்கள் என்பது ஜோதிடத்தை சாதாரணமாக கணிதம் செய்பவர்களுக்கு வரவே வராது.

ஜோதிடத்திலேயே தங்களை அர்பணித்த விற்பன்னர்களுக்கு மட்டும்தான் இது கண்டிப்பாக வரும். அப்பொழுது உங்களது ஜாதகத்தைப் பார்த்து இதுபோன்று ஒரு நிலை உங்களில் யாருக்கேனும் காணப்பெற்றால் தந்தையின் முயற்சியை ஒதுக்கிவிட்டு அதற்குபதிலாக பொறுப்பான வேறு மனிதரை அமர்த்தி இந்தத் திருமண முயற்சியை செய்யும் பொழுது, நிச்சயமாக வெற்றிகரமான விரைவான திருமண அழைப்பு ஏற்படுத்தும் என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

நம்முடைய சொந்த ஜாதகத்தில் இருக்கின்ற குரு தோஷத்தை போக்க பரிகாரம்.

நம்முடைய ஜாதகத்திலே இருக்கின்ற குரு தோஷம் போக்க பயன்படுத்துகின்ற பரிகாரம்.


அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, குரு கிரகம் பாதிக்கப்பட்டால் திருமணம் தடையாவது பற்றியதாகும்.

குரு எப்படியெல்லாம் சொந்த ஜாதகத்திலே பாதிக்கப்படுகின்றார் என்றால் நீச்சமடைந்து, பங்கம் அடையவில்லையென்றால், அதாவது குரு மகரத்திலே நீச்சமடைகின்றார். குரு சுக்கிரனின் வீடான ரிஷபம், துலாமில் இருக்கும்பொழுது, மந்தப்பலனைத் தருவார். குருவின் விரோதியாக இருக்கின்ற சுக்கிரனின் சாரங்களிலே இருக்கின்ற அது 7-ஆவது இடமாக நமது ஜாதகத்திலே இருக்கும் பொழுது, தடைகளையும் தாமதங்களையும் உருவாக்குவார்.

மேலும் குரு பாவ கிரகங்களோடு சேர்ந்து 7 ஆவது இடத்திலே இருக்கும் பொழுது, நமது திருமண வாழ்க்கையை பாதித்துவிடும்.

அப்பொழுது குரு தாமதப்படுகின்ற சூழ்நிலையிலே, நச்சு கிரகங்களின் சேர்க்கையிலோ அது 7- ஆவது இடத்திலே இருக்கும்பொழுது 6,8,12 - இல் குரு மறைந்தாலும் ஜாதகத்திலே குரு பாவியாக இருந்தாலும், அவருடைய காலகட்டத்திலே திருமணம், நடைபெறுவதற்கான சாத்தியம் குறைவு. அதை நிவர்த்தி செய்ய, நாம் செய்ய வேண்டியது "ஆதி குரு சிவனே"

அவர் தட்சிணாமூர்த்தியின் அம்சத்தில் இருப்பதால், தட்சிணாமூர்த்தியின் வழிபாடு இருக்க வேண்டும்.

குரு கிரகத்தால் ஏற்படும் திருமண தோஷங்களுக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய வேண்டும். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போன்று தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், ஆராதனை செய்ய வேண்டும். அன்ன, வஸ்திர தானம் செய்வதால் அவரின் அருள் நமக்கு கிட்டும். அதன் மூலம் காலதாமதமான திருமணத்தை விரைவு படுத்தலாம். குரு ஹோரையில் குருவை வணங்க அவரின் அருள் கிட்டும். அவரின் பார்வையாலே அனைத்து திருமணங்களும் நடந்தேறும். குருவை எவ்வாறெல்லாம் ஆராதித்து பிரீதி செய்ய முடியுமோ அவ்வாறு செய்ய வேண்டும்.வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தட்சிணை அளிக்க வேண்டும். அன்ன, வஸ்திர தானம் செய்ய வேண்டும். குரு கிரக பிரீதி இது அழைத்து வரும். மண வாழ்க்கையை துரிதப்படுத்தும்.

திருமண முயற்சியிலே ஈடுபடுபவர்களுக்கு ஆலங்குடி வழிபாடு, திருச்செந்தூர் வழிபாடு, குருவின் மஞ்சள் நிற குதிரை நம் உடலில் திணித்து சக்கரங்களிலே இணைத்து இயங்கச் செய்வதால் திருமணக் கலை வரும்.

குறிப்பிட்ட ஆலயங்களிலே சென்று வணங்கும்பொழுது குருவின் கருணை நமக்கு முழுமையாகக் கிடைத்து, திருமணம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறி, இனிதே நிறைவு செய்கிறேன்.

வீட்டில் இருக்கின்ற துஷ்ட சக்திகளை விரட்ட பயன்படுத்துகின்ற பரிகாரம்

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, தீய சக்திகள், துஷ்ட சக்திகள் நம் வீட்டைத்தாக்கினால் நாம் மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்களைப் பற்றியதாகும்.

தீயசக்திகள், துஷ்டசக்திகள் நம் வீட்டைத்தாக்கினால் என்ன செய்ய வேண்டும், அது தீய சக்திகள் இருக்கின்ற வீட்டில் நம்முடைய பூஜை பலன்களை எதிர்பார்த்த அளவிற்கு அனுபவிக்க முடியாது.அப்படிப்பட்ட ஒரு அமைப்பில் உள்ள வீட்டில் இருக்கும் அனைவருக்கும் நிம்மதியின்மை ஏற்படும்.

அந்த நிம்மதியின்மை, அமைதியின்மை அந்த வீட்டிலே மகிழ்ச்சியின்மை இவையெல்லாம் அந்த வீட்டில் தீய சக்திகள் இருப்பதற்கு அடையாளமாகும்.

நாம் ஒரு வீட்டிலே இருக்கின்றோம் என்றால், அந்த வீட்டில் இருக்கின்ற துஷ்ட சக்தி,தீய சக்தி எப்பொழுதும் துயரத்தில் வைத்து மகிழ்ச்சியைப் பறிக்கிறது. | இப்படிப்பட்ட அந்த சக்திகளை விலக்குவதற்கு உங்கள் வீட்டின் அருகாமையிலே உள்ள சிவஸ்தலங்களுக்குச் சென்று பசுவின் கோமியத்தைப் பெற்று நம் வீடு முழுவதும் தெளித்துவிட்டு, வீட்டைச்சுத்தம் செய்யும் பொழுது, கோயிலிலிருந்து பெறப்பட்ட காரணத்தினால் அக்கோமியத்திற்கு அதீத சக்தி இருக்கும். அதன் மூலம் நம் வீட்டில் துஷ்ட சக்திகளை அப்புறப்படுத்தப்படுகின்றது, அதன் மூலம் நமக்கும் மகிழ்ச்சி உண்டாகின்றது.

மற்றொரு மாற்றுப்பரிகாரம் என்னவென்றால், பொதுவாக நாம் உணவிற்குப் பயன்படுத்தும் கல் உப்பை தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் தெளித்துவர வர வேண்டும். அதன் பின்பு நீங்கள் அதை சுத்தம் செய்ய வேண்டும்.

இப்படி வாரத்திற்கு ஒரு முறையாக தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்ய எப்படிப்பட்ட துஷ்ட சக்திகளாக இருந்தாலும் இந்த இரண்டு பரிகாரங்களுக்குக் கட்டுப்பட்டு, வெளியேறி அங்கு லக்ஷ்மி கடாட்சம் வந்து விடுமென்றால் அது மிகையல்ல.

இதை அனுபவித்தவர்கள் இப்பரிகாரமுறையினால் லக்ஷ்மி கடாட்சம் வராவிட்டாலும், அமைதி வந்து விடுகின்றது என்று கூறுகின்றார்கள்.

அமைதி வந்துவிட்டால் அது அதிர்ஷ்டத்தின் அடிப்படை. அப்போது நம் வீட்டில் தீய சக்திகள் விலகிவிட்டது என்று அர்த்தம். அதனால் வீட்டில் மங்களகரமான காரியங்கள் பல நடக்கும்.

இதுவே அதற்குச் சான்றாக இருக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இறை பக்தியோடு முழுமையாக இறைவனை வணங்கி, இக்காரியங்களைப் பொறுமையாக செய்து வரும் போது, இந்தப் பரிகாரங்களின் சக்தி உங்களை எட்டும். அப்பொழுது உங்கள் வீட்டில் இருக்கும் அத்துஷ்ட சக்திகள் மாறி அமைதியான ஒரு மனநிலை உண்டாகும்.

அதற்குக் காரணம் நீங்கள் மேற்கொண்ட வேண்டுதல்களின் பூரண நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள் என்பதேயன்றி வேறொன்றுமில்லை, என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கிறோம்.

Thursday, May 21, 2020

அடகு வைத்த நகைகளை காப்பாற்றுகின்ற பரிகாரம்



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, அடகு போன நகைகளைக் காப்பாற்ற மேற்கொள்ளும் பரிகாரம் பற்றியதாகும்.

அடகு வைத்த நகைகள் அவ்வாறு வைக்கப்படுவதற்கான ஜாதக ரீதியிலான முக்கிய காரணம் என்ன?

ஒரு ஜாதகத்திலே, குரு ஆறில் மறைந்தாலோ அல்லது எட்டில் மறைந்தாலோ அவர்களிடம் தங்கம் தங்காது. அதேபோல் செவ்வாய் ஆறு அல்லது எட்டில் மறைந்தாலோ அவர்களின் நிலம் தங்காது. பத்திரங்களனைத்தும் அடமானத்திற்குச் சென்று விடும்.

இவ்வகை ஜாதகங்களில் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பிறந்த அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் இன்று ஒரு அருமையான பரிகார விருந்து காத்திருக்கின்றது.

அதாவது, குரு மறைந்தால், தங்கம் மறையும். அடகுக்கடைக்குச் செல்லும், செவ்வாய் மறைந்தால் அவர்களுடைய முக்கியமான பத்திரங்கள் அடகுக்கடையில் இடம் தேடும். இந்த இரண்டு துன்பங்களிலிருந்தும் காப்பற்றுகின்ற ரகசியம் என்ன?

ஒரு சிலர் தங்கம் வாங்குகிறார்கள்:

பின்பு ஏன் அடகு வைக்கின்றார்கள், ஒரு சிலர் தங்கம் வாங்குகிறார்கள். அவர்கள் தொடர்ந்து வாங்கிக்கொண்டே இருக்கின்றார்கள், அடகுக் கடையின் பக்கம் அவர்களின் காலடித்தடம் கூடச் செல்வதில்லை. இதேபோல் வேறுசிலர் நிலங்களை வாங்கிக்கொண்டே செல்கின்றார்கள், எக்காலத்திலும் அவர்களின் நிலப்பத்திரங்கள் அடகுக்கடை அல்லது வங்கி இருக்கும் திசைப்பக்கம் கூட திரும்பாமல் அப்பத்திரங்கள் மிகவும் பத்திரமாக பேணப்படுகின்றன. இந்த வேறுபாடு எதனால் வருகிறது, அதற்கான காரணம் என்ன?

ஆறு அல்லது எட்டாவது குரு அல்லது செவ்வாய் மறைந்தால் நிச்சயமாக இது நடக்கும். இதற்கான பரிகாரம் என்ன? குரு மறைந்தால் உங்கள் ஊரிலே இருக்கின்ற

"தட்சிணாமூர்த்தியை" வியாழனன்று இரவு எட்டிலிருந்து ஒன்பது மணிக்குள் நெய் விளக்கு ஏற்றி வழிபட அல்லது நீங்கள் வாழ்க்கையில் ஒருமுறை "ஆலங்குடிக்குச் சென்று ஆறுமணிநேரம் தங்கி

"நமச்சிவாயா" என்ற மந்திரத்தை ஓதி அந்த குருவின் காந்தசக்தியை உடலில் முழுவதுமாக நிரப்பிக்கொண்டு வந்தால் அல்லது திருச்செந்தூருக்கு சென்று ஸ்ரீம் சரவணபவ" என்ற மந்திரத்தை ஓதி ஆறுமணிநேரம் தங்கி, அந்த செவ்வாயின் குருவாக இருக்கின்ற முருகப்பெருமான் முழுக்கருணையையும் பெற்று, இக்கடுமையான, கொடுமையான தோஷங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளலாம்.

இது எப்படி என்றால், குருவின் அம்சமாக இருக்கின்ற தட்சிணாமூர்த்தியின் வழிபாடு" உங்கள் தங்க நகைகளை அடகுக்கடைக்குச் செல்லவிடாது அல்லது செவ்வாய்க்கு குருவாக இருக்கின்ற முருகப்பெருமானை நீங்கள் செவ்வாயன்றும், வியாழனன்றும் நெய் தீபம் ஏற்றி அந்த மந்திரத்தை எப்பொழுதும் சொல்லி, அந்த அவல நிலையைப் பார்க்கலாம்.

அல்லது நரசிம்ம வழிபாடு, சுதர்சனரின் வழி நடைய நிலத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம். வங்கியிலே வைத்த அந்த நிலத்தை மீட்டுக்கொள்ளலாம். இதற்கான பூஜை தொடர்ந்து செவ்வாயன்று செய்யப்படவேண்டியதாகும். எப்பொழுதும் திருக்கோயில்களிலே, திருவிளக்குகளை மாலையிலே ஏற்றுங்கள் அப்பொழுது நீங்கள் பெறுகின்ற பலன் அளவிடமுடியாத அளவில் பல்கிப்பெருகும். ஏனென்றால் மாலையில் "ரிஷி முனிவர்கள் அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும்" என்று கூறிய வண்ணமாக தங்களுடைய இருப்பிடங்களை நோக்கி வீதி சென்று கொண்டிருப்பார்கள்.

அவர்களுடைய வாக்கானது பொய்க்காது, மாலை நேரத்திலே மனமுருகி இறைவனை தீபம் ஏற்றி வணங்குவது என்பது மிகவும் எளிதான பரிகாரம் போன்று காட்சி கொடுத்தாலும் விளக்கை ஏற்றும் பொழுது உங்களுடைய அக விளக்கையும் ஏற்றுகின்றீர்கள். அகத்திலே இருக்கின்ற இருட்டை விரட்டி விடுகின்றீர்கள்

இதைத்தான், அகப்பை சித்தர் எவ்வாறு கூறினாரென்றால், அகமே முகம்' என்று வேறொரு பழமொழி எவ்வாறு விளக்குகின்றது என்றால், அகத்திணை அழகு முகத்தில் தெரியும்" என்று. நாம் படும் துயரங்கள் அனைத்திற்கும் இரண்டே இரண்டுதான் காரணம் என்று நீங்கள் உள்வாங்க வேண்டும். ஒன்று நவக்கிரகங்கள் தொடர்ந்து நம்மை வற்புறுத்தி நம் கர்மாவை கட்டாயம் ஏற்கும்படி செய்வது, இரண்டு நம் மறைந்த முன்னோர்கள், அவர்களுடைய அமரலோகத்திலிருந்து அவர்களுக்கான உணவை பெறாத நிலையில் இருந்து கஷ்டப்படும்பொழுது, கண்ணீர் சிந்தும் போது, அதாவது அந்த பித்ரு வழிபாடு முறையாக செய்யும்போதுதான், இரண்டும் இரண்டு பக்கத்திலிருந்து மனிதனை பாதிக்கச்செய்கின்றது என்பதுதான் ஜோதிட உண்மை என்பதை உள்வாங்குங்கள். அதை மனதில் நன்கு பதியம் போட்டு கொள்ளுங்கள் அப்பொழுதுதான் உங்களின் உண்மை நிலை என்னவென்று உங்களுக்கு தெரியவரும் என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கின்றோம்

திருமண பொருத்தத்தின் அவசியங்கள் மற்றும் எப்படி பார்ப்பது



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, ஜோதிடமும், திருமணப்பொருத்தமும் அதாவது ஜாதகம், திருமணப்பொருத்தமும் என்ற ஒரு அருமையான நிகழ்ச்சியிலே ஜாதகப்பொருத்தங்களை விரிவாகவும், விளக்கமாகவும் ஒன்றன்பின் ஒன்றாக பார்த்துக்கொண்டிருக்கின்றோம் நட்ச்சத்திர பொருத்தங்கள் பொதுவாகவே எந்தக்காரணம் முன்னிட்டும், எட்டுப்பொருத்தம், ஒன்பது பொருத்தம், பத்துப்பொருத்தம் இருந்தாலும் கூட அவர்களுடைய திருமண வாழ்க்கைக்கு எந்தவித உத்திரவாதமும் கொடுக்க முடியாது. ஆனால், இந்த ஜாதகப்பொருத்தத்தின் அடிப்படையிலே, செய்யப்படும் திருமணங்கள் நிச்சயமாக இருக்கும் என்பது ஆணித்தரமான உண்மை . ஒரு கட்டடத்திற்கு அஸ்திவாரம் எப்படி, அப்படிதான், இந்த திருமண வாழ்க்கைக்கு மிகமிக முக்கியமானது இந்த ஜாதகப் பொருத்தம்

அன்பர்களே, இன்று நாம் காணப்போகும் பொருத்தங்களில் அதிமுக்கியமானது, ஏழாம் பொருத்தம் பற்றியதாகும். இந்த ஏழாம் பொருத்தம் என்றால் என்ன?

ஜாதகத்திலே ஏழாவது இடம்தான் திருமணத்தை காட்டுகின்ற இடமாகும்.

ஒரு ஆண் மகனின் ஜாதகத்திலே ஏழாவது இடத்தைப்பார்க்கும்பொழுது, அவனுக்கு அமையும் மனைவி யார்? எந்த திசையில் இருந்து வருகிறது, எப்படிப்பட்டவள், எப்படிப்பட்ட திருமணம் வாழ்க்கைக் கிடைக்கும் என்பதெல்லாம் சுட்டிக்காட்டுகின்ற இடமாகும். ஏழாவது இடத்தை 'களத்திர ஸ்தானம்" என்றும் அழைப்பர். அதுதான் திருமண ஸ்தானமாகும்.

லக்கனத்திற்கு அடுத்தபடியாக இருக்கின்ற மிகமிக முக்கியமான ஸ்தானம், ஏழாவது ஸ்தானம், லக்கனத்தை உயிர் என்றால், அந்த உயிருக்கு இணையான, நம் வாழ்க்கைத் துணைவியை, துணைவனை,காட்டுகின்ற அதிகாரம் படைத்த ஒரு இடமே ஏழாமிடமாகிய.

இந்த கலஸ்திரஸ்தானத்திலே' இருந்து அவருடைய திருமணம் அரேஞ்சிடு மேரேஜ்' என்று சொல்லப்படும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்பட்ட திருமணமா அல்லது காதல் திருமணமா?

கலப்பு திருமணம்? அவர்களுடைய பார்ட்னர்ஸ் எனப்படும் தொழில்கூட்டாளிகளின் நிலை, குழந்தைகளுடைய அமைப்பு, தத்துக்குழந்தைகளுடைய அமைப்பு, வெளிநாடு செல்லும் பாக்கியம், இப்படி ஏராளமான நிகழ்வுக ஏழாவது இடத்தை வைத்தே கணிக்கலாம்,

பார்க்கும் திருமண பொருத்தத்தில், ஒரு ஆணின் ஜாதகத்திலும், பெண் ஜாதகத்திலும் ஏழாம் இடத்தை பொருத்தும் பொழுது மிகமிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அந்த ஏழாவது இடத்தில் இருக்கும் கிரகங்கள் யாருடைய பாதத்தில் இருக்கிறது. ஏழாவது வீட்டைப் பார்க்கும் கிரகங்கள், நல்ல கிரகங்கள், தீய கிரகங்கள் ், குருவின் பார்வை கிடைக்கின்றதா? இல்லையா? மற்றும் நவாம்சத்தில் ஏழாம் ஆதியினுடைய ஏழாம் அதிபதியுனுடைய நிலை என்ன? வக்கிரமா, பலமா, பலவீனமா, நீட்சமா என்பதையெல்லாம் ஒரு ஆணின் ஜாதகத்திலும், பெண் ஜாதகத்திலும், இணைத்துப் பார்க்கவேண்டும்

ஏழாம் இடத்தில் கிரகங்கள் இல்லாத ஜாதகத்தை கிரகங்கள் இல்லாத ஜாதகத்தோடு இணைக்க வேண்டும்.

ஏழாவது இடத்திலே கிரகங்கள் உள்ள ஜாதகத்தை, கிரகங்கள் உள்ள ஜாதகத்தோடு இணைக்க வேண்டும்.

இதைத்தான் சுத்த ஜாதகம் என்று கூறுவார்கள், இந்த ஏழாமிடம், சுத்தமானதாக இருந்தால் ஒரு ஆண் ஜாதகம், பெண் ஜாதகம் சுத்தமாக இருக்க வேண்டும். ஏழாவது இடத்திலே பெண் ஜாதகத்தில் கிரகங்கள் இல்லாத நிலை இருந்தால் ஆண் ஜாதகத்திலும், அந்த நிலை இருக்க வேண்டும். இதைப் பொருத்தும் போது, அவர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும், அந்த இடத்துக்குரிய கிரகம், பலமா? பலவீனமா? நீட்சமா? வக்ரம்?

என்று அந்த வீட்டிற்கு பார்க்கும்பொழுது நல்லவர்களுடைய பார்வை தீயவர்களுடைய பார்வை, இதையெல்லாம் கணிதம் செய்ய வேண்டும். கணிதம் செய்தால், ஆண்மகன் ஜாதகத்திலே, அவருடைய மனைவியின் பங்கைக் காட்டிவிடும்.

இதை சீர்தூக்க ராசி கட்டத்தை மட்டும் பார்த்தால் போதாது திருமணத்திற்கு நவாம்சம் என்னும் கட்டத்தை மிகக்கவனமாக கவனித்து பரிசீலிக்க வேண்டும். இந்த நவாம்சத்தையும் பார்க்க வேண்டும்.

ராசியும் பார்க்கவேண்டும். திருமண விஷயத்தில் அப்படி பார்க்கும்பொழுதுதான் அதனுடைய பலம், பலவினம் என்னவென்பது நன்கு தெரியும் அப்பொழுதுதான் இந்த இரண்டு ஜாதகங்களையும் நன்றாக சேர்க்க முடியும்.

ஏழாவது இடம் சுத்த ஜாதகமாக இருந்தால் சுத்த ஜாதகத்தோடு சேர்க்க வேண்டும்.

ஏழாம் இடம் கிரகங்களோடு இருந்தால் கிரகங்களோடு சேர்க்க வேண்டும். அது உங்களுக்கு விரிவாகவும் விளக்கமாகவும் அளிக்கப்பட்டுள்ளது. அதை நன்கு பயன்படுத்தி நீங்கள் வளம் பெற வேண்டும் என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

கடன் ஏன் உருவாகிறது கடனை அடைக்க அற்புதமான பரிகாரம்.

அற்புதமான பயனுள்ள பகுதியாக கூறி மனதார வாழ்த்தி, வாயார புகழ்கிறீர்கள் என்றால் உங்களின் பெருந்தன்மை அளவிட முடியாதது நீங்களனைவரும் எல்லா நலனும் பெற்று, இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இனி மேற்கொண்டு பகுதியை தொடர்வோமா

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, கடன் யாருக்கு அதிகம் ஏற்படுகின்றது.

யாரை அதிகபட்சமாக அது தாக்குகின்றது அதற்கு காரணகர்த்தா யார்? அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? என்பதை எல்லாம் ஒரு தொகுப்பாக காணவிருக்கிறோம்.

ஒரு ஜாதகத்திலே ஒருவருக்கு கடன் இருக்கின்றதா? இல்லையா?

என்பதைக்காட்டும் விதானம் ஆறாவது ஸ்தானம், லக்கனத்திலிருந்து எண்ணிலா, ஆறாவது இடமே ஒருவருடைய கடன்படும் நிலையைக்காட்டுகின்றது. அந்த இடத்தை ரணம், ருணம், சத்ரு என்று சாற்றுகிறார்கள்,

ரணம் என்றால் நாம் பெற்ற அவமானங்கள், அவமரியாதைகள், ருணம் என்றால் கடன்கள், சத்ரு என்றால் விரோதிகள் இந்த கடன் எப்படி தோன்றுகின்றது என்றால் ஒருவருடைய ஜாதகத்தில். இரண்டாவது இடம் வருமானத்தைக் காட்டுகின்ற இடம் அந்த வருமானத்தைக் காட்டுகின்ற அதிபதி ஆறிலே சென்று மறைந்தால் அல்லது பத்தாம் ஆதி என்று சொல்லப்பட்டவர், ஆறிலே, சென்று மறைந்தால் கடன் உருவாகிறது.

இந்த கடன் உருவாக்கத்தை அதிகமாகக் கொடுப்பவர் செவ்வாய் ஆவார்.

இப்பொழுது நாம் செவ்வாயை எடுத்துக் கொள்ளலாம். ஒருவருடைய ஜாதகத்திலே செவ்வாய் ஆறிலே சென்று நின்றால் எட்டிலே சென்று நின்றால், இந்த ஆறாவது எப்பதான், எட்டாவது ஸ்தானம் என்ற மோசமான ஸ்தானத்திலே பூமிகாரகன் வீட்டைக் குறிக்கின்ற அந்த செவ்வாய் சென்று நின்றால் நிச்சயமாக கடன் தொல்லை உண்டாகும்.

அதே செவ்வாய் எட்டிலே சென்று மறையும் போது வீட்டுப் பத்திரம் வங்கியில் அல்லது தனியார் நிறுவனங்களிலோ அடமானமாக சென்றுவிடும். இப்பிரச்சினையிலிருந்து விடுபட இவர்களுக்கான சக்தி வாய்ந்த பரிகாரம் என்ன?

அதை இடைக்காட்டு சித்தர் அளிக்கும் விளக்கம் மூலமாக காணலாம். ஒருமுறை இடைக்காட்டுச்சித்தரை வழிபட்ட பக்தர் ஒருவர், சித்தரிடம் சுவாமி, நான் எந்த கடவுளை வணங்கினால், என் கடன் தொல்லையிலிருந்து, நான் விலக முடியும் என்று வினவினார்.) அதற்கு இடைக்காட்டு சித்தர் அவர்களின் சித்த மொழியிலே. பரிபாஷைகள், புரியாத வண்ணம் சில வார்த்தைகளைக்கூறி விடுவார். அது புரிந்தால் நமக்கு விடுதலை. அதுபோன்று அறிவுரை கேட்டவரிடம் சித்தர், 'ஏழையை வழிபாடு "இடையனை வழிபாடு", 'இளிச்சவாயன் வழிபாடு" என்று கூறினாராம். அப்போது அந்த பக்தருக்கு ஒன்றுமே புரியவில்லை, குழம்பினார்.

தனக்குத்தானே, "யார் ஏழை? யார் இடையன்? யார் இளிச்சவாயன்?" என்று ஆழ்ந்து யோசிக்கும் பொழுது,விஷ்ணு அவதாரங்களிலே, மூன்று பேரை இடைக்காட்டு சித்தர் குறிப்பிட்டிருக்கின்றார். என்பதை உணர்ந்துகொண்டார். ஏழை எனக்குறிப்பிடப்பட்டவர் யாரென்றால், அரசகுலத்திலே பிறந்து, விதியின் வசத்தால் காடுகளில் அநாதை போன்று வாழ்ந்தவர் இராமபிரான் அவரை 'ஏழை" என்றார். கிருஷ்ண பரமாத்மா"

ஆயர் குலத்தில் பிறந்தவர் என்பதைச் சுட்டும் விதமாக 'இடையன் என்றார்.

"இளிச்சவாயன் என்று சிரித்துக்கொண்டேயிருக்கும் நரசிம்ம பெருமாளைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த நரசிம்மபெருமாளை நாம் எடுத்துக்கொண்டால், இவரை வணங்குவதால் கடன் தொல்லைகளிலிருந்து மிக சுலபமாக வெளியே வந்துவிடலாம். செவ்வாய் என்பது வைணவ தத்துவத்தின் படி, நரசிம்மன் காட்டும், நரசிம்மன் வணங்கிய குழந்தை பிரகலாதனுக்கு, நரசிம்மர் உதவி செய்ய காத்திருந்தாராம்.

பிரகலாதன் எந்தத்தாணைக் காட்டினாலும் அதிலிருந்து வெளிவர அவர் தயாராக இருந்தார். அப்படிப்பட்ட நரசிம்மரை ஒரு செவ்வாய் தினத்தன்று. நீங்கள் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் நான்கு நரசிம்மரை வணங்கினால் நீங்கள் இந்த கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

அதாவது. "தவளைக்குப்பம்

அருகிலிருக்கின்ற "அபிஷேகப்பாக்கம்", என்ற இடத்தில் இருக்கும் ஒரு நரசிம்மர்,

'பூவரசன்குப்பம்" என்ற இடத்திலே இருக்கின்ற ஒரு நரசிம்மர், "பரிக்கல்

என்ற இடத்திலிருக்கும் ஒரு நரசிம்மர்,

"அந்தளி என்ற கிராமத்தில் இருக்கின்ற இன்னொரு நரசிம்மர் இந்த நான்கு நரசிம்மர் களையும், ஒரே நேர்க்கோட்டில் அதாவது. கடலூர் மாவட்டத்தில் இரண்டு நரசிம்மர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நரசிம்மர்கள். இவர்களை வழிபட இந்த செவ்வாய் ஆறு, எட்டிலிருந்து அவர்களைத் தாக்குவது குறைந்து, கடனில் இருந்து விடுதலை அடையலாம்.

மேலும், இன்னொரு முறை இருக்கிறது, ஆறு எட்டில் செவ்வாய் இருந்தால், வழக்குப் பிரச்சனை வரும், அவ்வழக்குப் பிரச்சினையை தீர்க்கும் சக்திவாய்ந்தவராக காஞ்சிபுரத்திலே இருப்பவர்தான் வழக்கறுத்த ஈஸ்வரன்' அவரை ஒவ்வொரு திங்களன்றும் நெய் தீபம் ஏற்றி வழிபட வழக்கு பிரச்சினைகளும், கடன் பிரச்சினைகள் கட்டுப்படும் என்பது உண்மை , அதை முறையாகப் பின் பற்றி கஷ்டம் தீர்ந்து இன்புற்று வாருங்கள், என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி

Wednesday, May 20, 2020

தாயாருக்கு ஏற்படுகின்ற மாங்கல்ய தோஷத்தை தவிக்கின்ற ஆன்மீக பரிகாரம்.

ஒரு ஆண் குழந்தை வெள்ளியன்று "நவமி"

திதியிலே உருவாகுமானால் நீங்கள் பதறவோ, எண்ணம் சிதறவோ, குழந்தையை உதறவோ வேண்டாம்.

நீங்கள் மேற்கொள்ள வேண்டியது,

"திருச்செந்தூருக்கு சென்று குழந்தையை, திருச்செந்தூர் முருகனுக்கு தானமாக கொடுத்து விட வேண்டும், விலைக்கு கொடுத்துவிடக்கூடாது. "அப்பனே, முருகன், ஞானப் பண்டிதனே" இந்தக் குழந்தை வெள்ளியன்று நவமி திதியில் உருவாகியதால் இதைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு, அதே நேரத்தில் இந்தக் குழந்தையின் தாயார் மாங்கல்யத்திற்கும் சோதனை வரக்கூடாது... என்று அவரிடம் மனமுருகி வேண்ட வேண்டும். அந்தக் குழந்தையை திருச்செந்தூர் முருகனுக்கு தானம் கொடுக்கும் பொழுது, குழந்தை பெரியவனாகி வளர்ந்து, திருமணம் ஆகின்ற அந்த நேரத்திலே, முருகப்பெருமானிடம் சென்று தானத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

கணவருக்கு அதாவது அந்தக் குழந்தையின் தகப்பனாருக்கு வரும் ஆயுள் பயத்தையும் போக்கி விடலாம்.

இப்படிப்பட்ட ஒரு அருமையான பரிகாரத்தை நம் முன்னோர்கள் முத்தாக கொடுத்திருக்கிறார்கள். என்றால் அவர்களுக்கு நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்னொரு பரிகாரமும் இருக்கிறது.

வெளியூரில் வசிக்கும் உங்களால் இப்படிப்பட்ட காரியத்தை செய்ய முடியவில்லை என்றால் அந்த ஆண் குழந்தை வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்துவிட்டால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், உங்கள் குலதெய்வத்தையும், அந்த முருகனையும், நீங்கள் இருக்கின்ற இடத்திலேயே மனதார வணங்கி, இந்தக் குழந்தையை "இறைவா, முருகா" உன்னிடம் தானம் கொடுத்து விட்டோம், தத்து கொடுத்து விட்டோம், இதைக் காப்பாற்றி என் கணவனின் ஆயுள் நிலையை வளர்த்து, என் மாங்கல்யத்தையும் நீதான் காப்பாற்ற வேண்டும். என்று மனம் உருகி வேண்ட வேண்டும். இந்தப் பிரார்த்தனை பலிக்குமா பலிக்காதா என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தீர்களேயானால் நிச்சயமாக பலிக்காது. இறைநம்பிக்கையை ஆழமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நமக்கான இந்த முத்தான பரிகாரங்கள் கொடுத்துச் சென்ற நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட பரிகாரங்கள் எல்லாம் உங்களை வந்து அடைகின்றனவே நீங்கள் எல்லாம் பாக்கியம் செய்தவர்களல்லவா? அதனால் இந்த பரிகாரத்தை தட்டாமல் செய்து அந்தக் குழந்தையின் மீது சாபத்தைப் போடாமல், வெறுப்பைக் காட்டாமல் அதை வருத்தாமல் இருந்து, அன்பைப் பொழிய வேண்டும்.

அந்த முருகன் கடாட்சத்தைப் பெற்று இத்துன்பங்களிலிருந்து விடுபட்டு, அந்தத் தாயார் சுமங்கலியாக வாழலாம். அந்தக் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இப்புவியில் பிறந்த தத்துவத்தை அடைந்து விடுகிறது, என்றால் மிகையாகாது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் , உங்கள் குல தெய்வத்திற்கும், இந்த திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கும் தந்து கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதியின் நோக்கமாகும். என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.