Thursday, August 31, 2023

மறு பிறவி இருக்கிறதா? இல்லையா? படித்து பார்க்கவும்.

மறுபிறவி மனிதர்களுக்கு உண்டு என்பதை நாம் எதைவைத்து அறிவது?

புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பது விதி. இந்த உலகில் பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே யிருக்கும். மறுபிறவி அல்லாத வீடுபேறு வேண்டும் என்று நினைப்பவர்கள் சந்நியாசிகள் மட்டுமே. ஆசை என்பதை முற்றிலும் துறந்தவர்களுக்கு மட்டுமே வீடுபேறு என்பது கிட்டும்.

மற்றபடி ஆசை என்ற எண்ணம் எவர் ஒருவர் இடத்தில் உள்ளதோ அவர் யாராக இருந்தாலும் மறுபிறவி என்பது நிச்சயம் உண்டு. ஆசை என்பது இவ்வுலகில் நாம் விதைக்கின்ற விதை. அது மரமாகி கனி தரும் நேரத்தில் நாம் அதை அனுபவிப்பதற்கு மறுபிறவி எடுத்திருப்போம். இதில் ஒரு சிலர் புண்ணியம் எனும் நல்ல விதையை விதைத்து அதற்குரிய பலனை மறுபிறவியில் அடைகிறார்கள். இன்னும் சிலர் பாவம் எனும் விதையை விதைத்து அதற்குரிய பலனை அனுபவிக்கிறார்கள்.

நடைமுறை வாழ்வினில் ஒருவர் சகல சௌபாக்யங்களுடன் வாழ்வதையும் மற்றொருவர் தரித்திர நிலையில் கஷ்டப்படுவதையும் காண்கிறோமே, இவை அனைத்தும் முற்பிறவியின் பலனே. ‘பூர்வ ஜென்ம க்ருதம் பாபம் வ்யாதி ரூபேண பீடதே..’ என்று ஜோதிஷ சாஸ்திரமும், ஆயுர்வேத சாஸ்திரமும் ஒரே குரலில் சொல்கின்றன.

முன்ஜென்மத்தில் செய்த பாபத்தின் தண்டனையை இந்த ஜென்மத்தில் வியாதியாக அனுபவிக்கிறோம் என்பது இதன் பொருள். அவ்வாறு முன்ஜென்ம பலனை இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம் என்பது உண்மையாகில் இந்த ஜென்மத்தில் செய்யும் பாவத்திற்கான பலனை அடுத்த ஜென்மத்தில் அனுபவிப்போம் என்ற கருத்தும் வலியுறுத்தப்படுவதால் மனிதருக்கு மறுபிறவி உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

ஆசை என்பது எவர் ஒருவரிடத்தில் உண்டோ அவருக்கு மறுபிறவி என்பது நிச்சயம் உண்டு. இதில் அணு அளவும் சந்தேகம் இல்லை.

Friday, August 25, 2023

latest and near future predictions

25/8/2023

1) one important temple kalasam will break down and fall

2) here afterwards we will be experiencing very very severe heat.

3) here afterwards we will be seeing very drastic famine people should be very very careful

4) the value of United States dollars will go very very high

5) the price of petrol and diesel will go very very high and people will not be in a person to buy the same

6) in America there will be shortage for diesel and petrol several oil companies will shutdown

7) ice mountains in Himalayas arctic and Antarctic will meltdown and in those places New land will be formed.

8) since these big ice mountains are melting the sea level will increase very sharply and people should be very very careful.

9) three countries will suffer due to very severe rain and floods

10) next month there will be very severe rain in Tamilnadu and several trees will fall down

11) in two countries there will be severe snowfall and the whole day will be very very dark and this sort of thing is never seen before

12) in some countries there will be shortage of drinking water and the price for drinking water will go very very high

13) here afterwards we should concentrate very much on self agriculture and self farming and they have to start cultivating their own vegetables in their own houses. This advice is given because there is going to be severe shortage.

14) there is going to be a new invention in the field of medicine 3 important drugs will come out

15) a new kind of laser machine will be invented and with this help we will be in a position to cure several diseases easily

16) the prices of gold will come down

17) in the coming 4 days we will be getting new photos from the moon

18) ISRO very soon will be sending another rocket to moon and we will be in a position to know more about the moon.

19) apart from this ISRO will send rocket to another planet and this will be a very great success to us

20) in another 3 years ISRO will start doing research on sun and we will be very very successful in this mission also

21) ISRO will also do research on another four planets

22) in the coming 26,29,7,8 in these days there is chances of very heavy rains Chennai also will have some problems due to rain and floods

23) in Chennai 3 places will be affected by floods

24) our prime ministers name and fame will sky rocket in all the countries

25) our prime minister will bring in several improvement in our country

26)  scientists from several countries will come to India

27) NASA will be very much astonished in our progress and they will also come here to learn 

28) there is going to be a very big earthquake in middle of the sea

29) Japan will be affected severely by a Tsunami

30) New Delhi and Hyderabad will have earthquake

31) one important minister will entangle in a problem and suddenly he will be in a deep problem

32) two big forests will catch fire suddenly

33) even though there is some chill in the coming days the heat will be very very severe people should be very careful in their food habits

34) there is going to be water scarcity everywhere

35) people will suffered due to hydration problem

36) ongoing research on moon will be very successful and they will be in a position to identify all the minerals there

37) starting from the month of October the science field will see lot of growth

38) there is going to be very big improvement in the field of robotics

39) there is going to be some problem in the seashore of Chennai

40) chinese president will have a big problem

41) entire China will face several problems

42) starting from next month lakhs of people will loose their job

43) we will be seeing lot of information technology people losing that job and suffering too much

44) in North India we will be seeing several birds dying

45) in Andhra Pradesh and Kerala people will suffer too much due to chest congestion people should be very very careful

46) several Muslim countries will have severe problem including Pakistan

47) in Indonesia there is going to be a very big earthquake

48) in Indonesia a very big volcano will erupt

49) people are advised not to make any investment in share market till first week of next month

50) next year North Korea will start war against other countries

51) since two important information technology companies will be closing down people working in those field are advised to study artificial intelligence subject now itself 

52) in the coming parliamentary election the ruling party will have some set back

53) in the coming parliamentary election BJP will get more seats in South India

54) here afterwards there will be lot of scarcity for petrol and diesel

55) starting from beginning of next year there will be very much shortage of water. People are advised to store some RICE and other essential commodities.

56) 2 States will witness very severe rain and there will be floods and damages

57) one important politician in Andhra Pradesh will have very big problems

58) there is going to be a very big earthquake in a Muslim country and in America

59) one important countries president will have health issues

60) in Australia there is going to be very severe rain and floods

61) people in Sri Lanka will again start protesting

62) starting from the month of September the whole world will witness very severe economic crisis people are advised to be very very careful

63) again there is a danger of virus spreading from the month of September

64) one important train will derail

65) very soon there is going to be a drastic change in the education system

66) there is going to be very big development in the field of science and technology

67) there is going to be new kind of robots with artificial intelligency.


1) ஒரு முக்கிய கோவிலின் கோபுர கலசம் உடைந்து கீழே விழும்

2) இதுவரை பார்க்காத அளவு வெய்யில் மக்களை கடுமையாக வாட்டி வதைக்கும்

3) இதுவரை பார்க்காத மிகப்பெரிய உணவு பஞ்சம் கண்டிப்பாக ஏற்படும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

4) அமெரிக்கா டாலரின் மதிப்பு கிடுகிடு என மிகவும் உயர்ந்து விடும்.

5) பெட்ரோல் டீசல் விலை உலகம் முழுவதும் மிகவும் அதிகமாக ஆகிவிடும் மக்களால் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகும்

6) அமெரிக்காவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அங்குள்ள பெரிய ஆயில் கம்பெனிகள் மூடிவிடும்

7) இமயமலையின் பின்பகுதி ஆர்டிகா அண்டார்டிகா ஆகிய இடங்களில் பனி மலைகள் உருகி புதிய பூமி உருவாகும்.

8) இந்தப் பனி மலைகள் உருகுவதால் கடல் மட்டம் உயரும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

9) மூன்று நாடுகளில் மிகப்பெரிய வெள்ளம் வரும் இந்த வெள்ளம் இதுவரை யாரும் பார்த்திராத அளவு வரும்

10) அடுத்த மாதம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மழை வரும் நிறைய மரங்கள் சாய்ந்து விடும்

11) இரண்டு நாடுகளில் மிகப்பெரிய பனி மழை பெய்யும் பகல் முழுவதுமே இருட்டாக இருக்கும். இதுவரை யாருமே பார்த்துவிடாத அளவு பனி மழை பெய்யும்

12) ஒரு சில நாடுகளில் குடி தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக இருக்கும் குடிதண்ணீரின் விலை மிக மிக அதிகமாகிவிடும்

13) நமது நாட்டில் விவசாயத்தின் மீது நாம் இனிமேல் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் ஒவ்வொருவரும் அவர்களுக்கு வேண்டிய காய்கறிகளை அவர்கள் வீட்டிலேயே பயிர் செய்து கொள்ள வேண்டும்

14) இதுவரை நாம் பார்த்திராத மூன்று முக்கியமான மருந்துகள் கண்டுபிடிப்பார்கள் இது மனித குலத்திற்கு மிக மிக அவசியமானதாகும்

15) ஒரு புது வகையான லேசர் சம்பந்தமான மெஷினை கண்டுபிடிப்பார்கள் இதன் மூலம் நிறைய வியாதிகள் குணமடையும்

16) தங்கம் விலை குறையும்

17)இன்னும் நான்கு நான்கு நாட்களில் நிலவில் இருந்து புதிய படங்கள் நமக்கு கிடைக்கும்

18) இஸ்ரோ மறுபடியும் கூடிய சீக்கிரத்தில் மற்றும் ஒரு ராக்கெட்டை நிலவிற்கு அனுப்பும். இதிலிருந்து நமக்கு இன்னும் முழுவதுமாக தெரிந்து விடும்

19) இது இல்லாமல் இஸ்ரோ வேறு ஒரு கிரகத்திற்கு புதியதாக ஒரு ராக்கெட்டை அனுப்பும். இது நமக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும்

20) இன்னும் மூன்று வருடங்களில் சூரியனைப் பற்றி பெரிய ஆராய்ச்சி செய்து அதில் நாம் வெற்றியை அடைவோம்

21) இந்தியா மேலும் நாலு கிரகங்களுக்கு ஆராய்ச்சி ஈடுபடும்

22) 26,29,7,8, ஆகிய தேதிகளில் மிகப்பெரிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையிலும் மிகப்பெரிய வெள்ளம் பாதிப்புகள் ஏற்படும்.

23) சென்னையில் மூன்று இடங்களில் வெள்ளம் பாதிப்புகள் ஏற்படும்

24) உலக அளவில் பிரதம மந்திரியின் மதிப்பு மரியாதை உயரும்

25) நரேந்திர மோடி இந்தியாவை மிகச் சிறப்பாக நல்ல வழியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்

26) மற்ற நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் இப்போது இந்தியா வருவார்கள்

27) நாசாவே இந்தியாவைப் பார்த்து வியக்கும். மேலும் அவர்கள் இங்கு வந்து சில விஷயத்தை கற்றுச் செல்வார்கள்

28) நடுக்கடலில் மிகப்பெரிய பூகம்பம் ஒன்று ஏற்படும்

29) ஜப்பான் நாட்டில் சுனாமி ஏற்படும்

30) புது டெல்லி ஹைதராபாத் ஆகிய இடங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படும்

31) ஒரு முக்கிய மந்திரி பிரச்சனைக்கு உள்ளவர் அவர் எதிர்பாராத அளவிற்கு மாட்டிக் கொள்வார்

32) இரண்டு காடுகள் எதிர்பாராத அளவிற்கு நெருப்பு பற்றிக் கொள்ளும்

33) குளிர் மழை இருந்தாலும் இனி வரும் காலங்களில் வெப்பம் மிக மிக கொடுமையாக இருக்கும்.

34) எல்லா இடத்திலும் வறட்சி ஏற்படும்

35) மனித உடலில் தண்ணீர் இல்லாமல் பிரச்சனைகள் உருவாகும்.

36) நிலவில் உள்ள கனிமங்களை மிகவும் துல்லியமாக கணித்து விடுவார்கள்

37) அக்டோபர் மாதத்தில் இருந்து விஞ்ஞானம் மிகவும் வளர்ச்சி அடையும்

38) ரோபோக்கள் மிகவும் புது விதமாக வளர்ச்சி அடையும்

39) சென்னையில் கடலோரப் பகுதியில் ஒரு சிறிய பிரச்சனை ஒன்று ஏற்படுவதை நாம் பார்ப்போம்

40) சீன அதிபருக்கு மிகப்பெரிய  பிரச்சனை ஒன்று ஏற்படும்.

41) சீனா முழுவதுமே மிகப் பெரிய பிரச்சனைகள் உருவாகும்

42) அடுத்த மாதம் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழப்பார்கள்

43) எங்கு பார்த்தாலும் ஐடி ஊழியர்கள் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள் 

44) வர மாநிலங்களில் பறவைகள் இறப்பதை பார்ப்போம்

45) ஆந்திரா மற்றும் கேரளாவில் சளி சம்பந்தமாக புதிய பிரச்சனைகள் ஏற்படும். மக்கள் கவனமாக இருக்க வேண்டும்

46) முஸ்லிம் நாடுகளிலும் பிரச்சனை ஏற்படும் அதே போல் பாகிஸ்தானிலும் பிரச்சனைகள் ஏற்படும்

47) இந்தோனேஷியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படும்

48) இந்தோனேசியாவில் மிகப்பெரிய எரிமலை வெடிக்கும்

49) அடுத்த மாதம் நான்காம் தேதி வரை பங்கு சந்திகளில் யாரும் முதலீடு செய்யக்கூடாது

50) அடுத்த வருடம் வடகொரியா வேறு நாடுகள் மீது போர் ஆரம்பிக்கும்.

51) இரண்டு மிகப்பெரிய ஐ.டி கம்பெனிகள் மூடப்படுவதால் அதில் வேலை செய்பவர்கள் வேறு படிப்பு படிப்பது மிகவும் முக்கியம் மற்றும் அவசியம் அதிலும் குறிப்பாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்சி என்கிற சப்ஜெக்டை தேர்வு செய்ய வேண்டும்.

52) வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வட இந்தியாவில் ஆளுங்கட்சிக்கு சில பின்னடைவுகள் ஏற்படும்

53) வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக கட்சிக்கு அதிகம் சீட்டுகள் கிடைக்கும்

54) பெட்ரோல் டீசல் இவற்றிற்கு மிகப் பெரிய தட்டுப்பாடுகள் வரும்

55) அடுத்த வருடம் மிகப்பெரிய வறட்சி ஏற்படும் மக்கள் கவனமாக முன் கூட்டியே அரிசி போன்ற பொருட்களை சேமித்து வைப்பது நல்லது.

56) இரண்டு மாநிலங்களில் மிகப்பெரிய மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படும்.

57) ஆந்திராவில் ஒரு முக்கிய அரசியல்வாதிக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்

58) அமெரிக்கா மற்றும் ஒரு முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும்

59) ஒரு முக்கிய நாட்டின் ஒரு  அதிபருக்கு உடல் ரீதியாக பிரச்சனை வரும்

60) ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய மழை வெள்ளம் ஏற்படும்

61) இலங்கையில் மக்கள் மறுபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்

62) செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் மிகப் பெரிய பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

63) செப்டம்பர் மாதம் மறுபடியும் வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

64) ஒரு முக்கிய இரயில் தடம் புரண்டு விடும்

65) விரைவில் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துவிடும்

66) புதுப்புது டெக்னாலஜிகள் வந்துவிடும் இதுவரை பார்த்திராத டெக்னாலஜிகள் நமக்கு கிடைக்கும்

67) புதுவிதமான மிகவும் அறிவு சார்ந்த ரோபோக்கள் வந்து விடும்.

Thursday, August 24, 2023

இந்து மத பெருமையை பறைசாற்றிய சிறுவன்.

"நீறில்லா நெற்றி பாழ்"எந்த 
நாட்டில் எந்த இடத்தில் விளையாடினாலும் நெற்றியில் திருநீற்றுடன் பிரகாசிக்கும் பிரக்யானந்தா🔥

அசர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிபோட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்த்தி தகுதிபெற்றுள்ளார்

பிரக்யானந்தாவின் வயது 17, இந்தியாவின் தமிழகத்தை   சேர்ந்த அவர் உலக அரங்கில் புகழ்பெற்ற செஸ் ஆட்டக்காரராக சுயமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.. 

இன்று இறுதிபோட்டியில் அவர் நார்வேவின் 32 வயதான அந்த மேக்னஸ் கார்லெஸை சந்திக்கின்றார், கார்லெஸ் ஐந்துமுறை சாம்பியன் பட்டம் பெற்ற்வவர் 

ஆனால் அவர் இதர ஆட்டங்களில் இதே பிரக்ஞானந்தாவிடம் 3 முறை தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது ...

மிக இளம் வயதிலே  உலக சாம்பியனை மும்முறை வென்றவர் பிரக்யானந்தா என்பதால் இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு பிரகாசமான வாய்ப்பு அதிகம் உண்டு...

பிர்க்யானந்தா எப்போதும் திருநீறு அணிந்திருப்பார்,  எந்த நாட்டில் எந்த இடத்தில் விளையாடினாலும் அவர் நெற்றியில் திருநீறு பிரகாசிக்கும்...

இது உலக நாட்டின் மேடைகளில் புதிது

எங்கு சென்றாலும் எவ்வளவு பெரிய அரங்கம் ஆட்டம் என்றாலும் நெற்றியில் திருநீறோடு நிற்கும் அந்த இந்து திருமகனை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்...

இந்தியாவின் இந்துக்கள் பெரும் அடையாளத்தில் இருந்தும்  பெரும் இடங்களில் திருநீறு பூசுவதில்லை
இந்திய கிரிக்கெட் ஆட்டகாரர்கள் பிரசித்தியாக இருந்தாலும் களத்திலோ அரங்கிலோ திருநீறு பூசியாரும் கண்டதில்லை.

ஆனால் இந்த சிறுவன் அதை செய்கின்றான், சரியாக தான் ஒரு  சிவமைந்தன் என்பதில் கவனமாக இருக்கின்றான்,  பெற்றோர் அப்படி வளர்த்திருக்கின்றார்கள்.

விவேகானந்தருக்கு பின் சர்வதேச அரங்கில் திருநீறு அந்த சிறுவன் நெற்றியில்தான் அரங்கேறியிருக்கின்றது, அதை காணும் உலகம் அவன் ஒரு இந்த, இது இந்துக்களின் அடையாளம் என உற்று பார்க்கின்றது.

இந்து பாரம்பரியம் அறியா பல உலகத்தார் அந்த திருநீற்றை உற்றுபார்த்து, இது என்ன? இந்துக்கள் ஏன் இப்படி பூசிகொள்கின்றார்கள் என கேட்கின்றார்கள்.

கடைசியில் சாம்பலே மிஞ்சும் வாழ்விது, இங்கு எதுவும் நிரந்தரமில்லை, எல்லோர் வாழ்வும் பிடி சாம்பலிலே முடிகின்றது அதனால் அகங்காரமும் ஆணவமும் கொண்டு ஆடகூடாது என்பதற்காக அனுதினமும் நெற்றியில் சாம்பலை வைத்து  வாழ்வின் நிலையற்ற தன்மையினை நினைந்துகொண்டே இருப்பார்கள் அது அவர்கள் மத ஏற்பாடு என பதிலும் கிடைக்கின்றது.

எவ்வளவு அருமையான தத்துவம் கொண்ட மதம் இந்துமதம் என அதனை புதிய நோக்கில் ஏராளமானோர் உற்று பார்க்கின்றார்கள்.

இந்திய அரசியல்வாதிகளும் விஞ்ஞானிகளும் விளையாட்டு வீரர்களும், சினிமாக்காரர்களும் நாகரீகம் என கருதி மறைத்த பெருமையினை கொஞ்சமும் தயங்காமல் ஒரு இந்துவுக்கு இதுதான் அடையாளம் என விவேகானந்தருக்கு அடுத்து கம்பீரமாக நிற்கின்றான் அந்த ஞானசிறுவன்.

அவன் சதுரங்கத்தில் மட்டும் தனிவழி காட்டவில்லை, உலக இந்துக்களுக்கெல்லாம் ஒரு உதாரணத்தை காட்டியிருக்கின்றான்,  அவனை அந்த பரமசிவனும் பார்வதியும் இன்னொரு நாயன்மாராக வழிநடத்தி வரட்டும்.

"அர்ஜூனா உயர்ந்த இடத்தில் இருப்போரை உலகத்தார் உற்றுபார்பார்கள், அதனால் நீ செய்யும் ஒவ்வொரு காரியமும் பல்லாயிரம் பேருக்கு வழிகாட்டலும் பாடமுமாக அமையும், கர்மத்தை சரியாக செய்" என கண்ணன் கீதையில் சொன்ன வரிக்கு சரியாக நிற்கின்றான் அந்த சதுரங்க அர்ஜூனன்.

இந்து அடையாளத்தை தாங்கி, தான் ஒரு இந்து என செல்லும் பக்திமிக்கவர் அவர், அப்படித்தான் எல்லா மேடைகளிலும் அமர்ந்திருப்பார்.

அசர்பைஜானிலும் அப்படித்தான் அமர்ந்திருக்கின்றார்.

இது உலக அரங்கில் கவனிக்கபடுகின்றது.

செஸ் எனப்து அறிவால் கணக்கிட்டு விளையாடும் கணித விளையாட்டு, அது விளையாட கணிப்பிடும் திறனும் கணக்கீடும் அவசியம், மூளை பலத்தால் விளையாடும் விளையாட்டு அது, மனோசக்தி அதிகம் வேண்டும்.
நாணயகணேசன்
அவருக்கு எல்லா பலத்தையும் அருளையும் வாய்ப்பையும் அந்த ஈசனின் திருநீறு கொடுக்கட்டும்..

"காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே"

என்பார் சம்பந்த பெருமான்.

உலகம் வாழ் இந்துக்களின் அடையாளமாக விளங்கும் அந்த விபூதி சம்பந்தர் வாக்குபடி அவருக்கு பெருமையும் அறிவும் ஞானமும் வெற்றியும் அருளட்டும்💐🔥

Ganesa Moopanar Public Welfare Trust

Wednesday, August 23, 2023

நிலம் விற்பனைக்கு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்.

***ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால் (proposing land for sale), உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்?👇👇👇

1.முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும். 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.

Zero value நிலம்.....

-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.

2.Double Document நிலம்.....

Power of attorney(POA) double document....

அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர். இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.

POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட, சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள். POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.

அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா? என்று கேளுங்கள்.

அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள்.முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம். விற்றால் அது double டாக்குமெண்ட்.

3.உயில் பத்திர நில.....double document.....

உயில் மூலம் உரிமை மாறி இருக்கா?

 உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.

எது இறுதி/கடைசி உயில்? என்று கவனமாக பார்க்க வேண்டும்.பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.

பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கா? ன்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும்.இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.

4.Settlement பத்திர நிலம்....(double document).....

Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும்.

1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.

செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும்.

பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.

 EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.

உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால். அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.

5. Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-.....(double document.).....

1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.

அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document.

6.Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?....

அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்?.

DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம்.

Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority )என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.

அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என்றும் விசாரியுங்கள்.

Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள்.

 நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள். எனவே ஜாக்கிரதை.

பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.

நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும். உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள்.

இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும். 

VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால்  RTI மனுவில் கேளுங்கள்.
RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள் .

5.பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.....

கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும். இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு.பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம். அதனாலே, விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள்.அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.

6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்....

 நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை  புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில்க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கவேண்டும்.

7. பட்டாவின் பயனாளி யார்?......

முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ்  என்று பார்க்க வேண்டும்

மேஜர் இனாம் நிலம்......

ராயட்டு வாரி
1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரியாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும். வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.

இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை. உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.

Minor இனாம் நிலம்,
சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த   DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்.

தொழில் முறை இனாம் நிலம்.....

தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன், கர்ணம்,தலையாரி,வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார்  இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.

சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.

ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.

DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)
settlement etc என்று பார்க்க வேண்டும்.

மேற்சொன்ன வகைபாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தவை. சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.

Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்ட (HSD பட்டா , 
D-பட்டா, 
நமுனா பட்டா, 
TKT பட்டா,
F-பட்டா, 
B-memo பட்டா, 
அனுபந்த பட்டா, 
Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா.....
 என்று பார்க்க வேண்டும்.

SC & ST பிரிவினற்கு கொடுத்த AD  assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.

F-பட்டா.
இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு, revenue டிபார்ட்மென்ட் வேறு.

ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.

1970-B-Memo land =பீமா பட்டா.

B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.

Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் நிலத்தை வாங்காதீர்.

ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.

 1956-பூமி தான நிலம்....

Manual EC 
கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.

manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம்(கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry  காட்டபட்டு இருக்கும்.

பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.

ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.

Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.

பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். 

Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும். பூமி தான நிலம்  வாங்காதீர். பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு. எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.

Zero value நிலம்....

-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.

கோயில் நிலம் -HR&CE நிலமா.....

வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ்  என்று பார்க்க வேண்டும்.

கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக  இருக்க கூடாது அவ்வளவே.

கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு. இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.

கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.

இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை அரசு திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.

ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.

LAND REFORMS ACT.....

இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில், B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்....

இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme....

RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்
மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்"  என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர். அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.

1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம்......

தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.

இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும். 

1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்.....

நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.

UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.

Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.

1976 களின் Urban land seiling act.....

ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும்.

ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு  revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை.

8. கோர்ட் attached property வாங்காதீர்.

9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர். அந்த நிலத்தை அவர்மனைவிmaintenance(ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.
எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.

10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.

11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,

12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )

13..அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.

1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு   80  to 100 வருடத்திற்கு அவசியம் வேண்டும்.

1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும். இதன்  நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்......

அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.

 அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு, ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும். ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி, UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து, UDR இல்  திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரியாக மாற்றி கொண்டார்கள்.

14.அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா  confirm(உறுதி )பண்ணிக்கணும்.

15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.

16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள்?.இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா, தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள் 

17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர்க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்.

18.அடுத்து, டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின்  ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.

நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.

உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,
லாயர் எங்கு படித்தார்,
 எந்த ஆண்டில் இருந்து practise செய்கிறார், எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள்.புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.

மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.
கண்டுபிடிப்பது உங்கள் சமர்த்தியம்.
Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு.நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.

19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.

20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.

பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர்.எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள். உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்களே.

காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர்  கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.
நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே.அதனாலே அலுத்துக்கொள்ளதீர்.

அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல், இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்....

இந்த சர்வே சிஸ்டம், revenue records எல்லாமே வெள்ளைகாரன் நமக்கு போட்ட பிச்சை. வெள்ளைக்காரன் அளவுக்கு தமிழ்நாட்டை, இந்தியாவை,. நிர்வாகம் செய்தவர் எவரும் இல்லை....

நன்றி.......

என்றும்,
சாமானியன்!

Saturday, August 19, 2023

ஆவணி மாத பலன்

19/8/2023

1) the rain will start from today and from 23rd to 27th rain will be very severe with thunderstorm in Chennai lot of trees will fall down

2) entire Tamil Nadu will witness very good rainfall

3) another state will receive very severe rainfall and there will be lot of damages

4) there is going to be a very big famine in important country where there is a woman premier.

5) there is going to be severe famine in three important countries

6) starting from the month of September there is going to be severe problem for IT companies several companies will shutdown

7) lacks of people working in IT field will loose their job this situation will be there for another 6 months

8) there is going to be another big landslide near a mountain area

9) there is going to be a very severe earthquake in a Muslim country and also a country North of India.

10) one big aircraft while landing will have your problem and it will be diverted to another place and people will suffer too much

11) people living in sea shores must be very very careful

12) the sea level is gradually increasing people should be very very careful

13) the present war between Russia and Ukraine will be something innovative and due to this several cities will be destroyed

14) New Delhi there is going to be some new problems and due to this people will be suffering too much

15) in one important harbour a ship will catch fire suddenly

16) one important country is President will have very big health issues

17) gold prices will come down

18) starting from 22nd to 27 th share markets will fall down

19) American dollar will slightly fall down and later it will pick up and it will go very very high

20) the entire world will witness the very high increase in essential commodities

21) starting from the month of September the prices for rice turmeric and other essential goods will go very high

22) several countries will face severe food food problem due to important export policy

23) there is going to be a crack in a temple

24) one important train will derail.

25) there is going to be some new problem in England and due to this there will be war between few countries

26) there is going to be very big changes in the political scenario one important party will extend it support to the ruling party and due to this there will be lot of commotions

27) there will be waterlogging in several places

28) several birds will die suddenly in a bird sanctuary

29) the whole world will witness severe shortage of electricity

30) in India also there will be very severe electric shortage

31) the whole world will witness shortage of coal

19/8/2023

1) இன்று நாளில் இருந்து மழை பெய்ய ஆரம்பிக்கும் மேலும் 23ஆம் தேதி லிருந்து 27ஆம் தேதி வரை பலத்த காற்று வீசி மிகப்பெரிய மழை பெய்யும் சென்னையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விடும்.

2) தமிழ்நாட்டு முழுவதும் பரவலாகவே நல்ல மழை பெய்யும்

3) வேறு ஒரு மாநிலத்தில் மிகப்பெரிய மழை வெள்ளம் ஏற்பட்டு நிறைய சேதங்கள் ஏற்படும்.

4) ஒரு முக்கியமான நாடு அந்த நாட்டில் பெண் அதிபராக இருப்பார் அங்கு மிகப் பெரிய உணவு பஞ்சம் வரும்.

5) மூன்று முக்கிய நாடுகளில் உணவு பஞ்சங்கள் ஏற்படும்

6) செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்தே பல ஐ.டி. நிறுவனங்கள் பிரச்சனை ஏற்படும் அதில் பல பெரிய பெரிய கம்பெனிகள் இழுத்து மூடி விடுவார்கள்.

7) ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் லட்சகணக்கான மக்கள் வேலையை இழப்பார்கள் இது இன்னும் ஆறு மாத காலம் நீடிக்கும்.

8) ஒரு மலை திடீரென்று சரிந்து விழும்

9) ஒரு முஸ்லிம் நாட்டிலும் மேலும் இந்தியாவின் மேற்பகுதியில் உள்ள நாடுகளிலும் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படும்.

10) ஒரு விமானம் தரையிறங்கும் போது பெரிய பிரச்சனை ஏற்பட்டு அது வேறு ஒரு இடத்தில் இறக்குவார்கள் இதனால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாவார்கள்.

11) கடலோர கரைகளில் இருக்கும் மக்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டும்.

12) கடல் மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து கொண்டு வருகிறது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

13) தற்போது நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் ரஷ்ய இடையே போர் ஒரு நூதனமான போரை நடத்துவார்கள் அதில் சில ஊரே அழிந்து விடும்.

14) புதுடெல்லியில் புதியதாக ஒரு பிரச்சனை கிளம்பும் அதனால் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள்.

15) ஒரு முக்கியமான துறைமுகத்தில் ஒரு பெரிய கப்பல் தானே தீ பற்றி எரியும்

16) வெளிநாட்டின் ஒரு முக்கிய அதிபருக்கு உடல்நிலை பிரச்சினை ஏற்படும்

17) தங்கம் சற்று விலை குறையும்

18) 22 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் பங்குச்சந்தைகள் மிகவும் வீழ்ச்சி அடையும்

19) அமெரிக்கா டாலரின் மதிப்பு சற்று குறையும் அதன் பின்னர் அமெரிக்க டாலரின் மதிப்பு மிகவும் உயர்ந்துவிடும்

20) உலகத்தில் எல்லா நாடுகளிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிவிடும்

21) செப்டம்பர் மாதம் முதல் அரிசி மஞ்சள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிவிடும்

22) ஒரு சில நாடுகளில் ஏற்றுமதி இறக்குமதி பிரச்சனையால் உணவு பற்றாக்குறை ஏற்படும்

23) ஒரு முக்கியமான கோவிலில் விரிசல்கள் ஏற்படும்

24) ஒரு முக்கியமான ரயில் தடம் புரண்டு விடும்

25) இங்கிலாந்தில் புதியதாக சில குழப்பங்கள் ஏற்படும் இதனால் சில நாடுகள் இடையே சண்டை ஏற்படும்

26) அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் ஆளும் கட்சிக்கு வேறு ஒரு கட்சியும் ஆதரவு கொடுக்கும். பெரிய பரபரப்புகள் ஏற்படும்

27) மழையினால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்.

28) சரணாலயங்களில் உள்ள பறவைகள் திடீரென்று இறக்கும்

29) உலகம் முழுவதும் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படும்.

30) இந்தியாவிலும் மின்சார தட்டுப்பாடுகள் வரும்

31) உலக நாடுகளில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும்

Thursday, August 17, 2023

திருச்செந்தூர் முருகன், ஆவணி விழா பட்டியல்.

🚩#திருச்செந்தூா்
அருள்மிகு ஸ்ரீ  சுப்ரமணியசுவாமி திருக்கோவில் 
ஆவணித்திருவிழா-2023 💥

💥1ஆம் திருநாள்
ஆவணி - 18ம் தேதி செப்டம்பர்  04-09-2023  திங்கட்கிழமை அதிகாலை 🚩
கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அதிகாலை: 5:00 மணிக்குமேல்
5.30 மணிக்குள் ஆவணி  திருவிழா கொடியேற்றப்படும். மாலையில்
திருக்கோயிலிலிருந்து
சிறிய தங்கச்சப்பரத்தில் 
அருள்மிகு ஸ்ரீ  அப்பா் சுவாமிகள்    எழுந்தருளி  திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும்,

இரவில் 
பெரிய பல்லக்கில்
அருள்மிகு 
ஸ்ரீ பெலி நாயகா் அஸ்திரத்தேவருடன்  அருள்மிகு ஸ்ரீ ஜெயந்தி நாதர்  எழுந்தருளி   9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

💥2ஆம் திருநாள் 
ஆவணி - 19ம் தேதி
செப்டம்பர்  05-09-2023 செவ்வாய்க்கிழமை
பகல்:-
திருக்கோவிலிலிருந்து 
முஷிக வாகனத்தில் 
அருள்மிகு ஸ்ரீ விநாயகரும் 

சிங்ககேடயச் சப்பரத்தில்
அருள்தரும் வள்ளி அம்பாள் தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான்

சிறிய பல்லாக்கு தனி வாகனத்தில் 
அருள்தரும் வள்ளி அம்பாள்
எழுந்தருளி எட்டு திருவீதிகளில் உலா வந்து பின்னர் 
2ஆம் திருநாள் மண்டபத்தில் சேர்தல் 

✨இரவு :-

முஷிக வாகனத்தில்
அருள்மிகு ஸ்ரீ  விநாயகர் சுவாமி

 அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் 
சிங்ககேடயச் சப்பரத்திலும்

பெரியகேடய தனிச்சப்பரத்தில் 
அருள்தரும் வள்ளி அம்பாள்
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும் 

💥3ஆம் திருநாள் 
ஆவணி - 20ம் தேதி
செப்டம்பர்  06-09-2023 புதன்கிழமை காலை 
அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் பூங்கேடயச் சப்பரத்திலும்

தனிக்கேடயச் சப்பரத்தில் 
அருள்தரும் வள்ளி அம்பாள்
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும் 

✨இரவு 

அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் #தங்கமுத்துக்கிடா வாகனத்திலும்
அருள்தரும் வள்ளி அம்பாள்  தனி #அன்னபறவை வாகனத்தில் எழுந்தருளி 
எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து 
மேலக்கோவில் சேர்தல் நடைபெறும் 

💥4ஆம் திருநாள் 
ஆவணி - 21ம் தேதி செப்டம்பர் 
07-09-2023 வியாழக்கிழமை 
☀️காலை 

அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும்

அன்னபறவை வாகனத்தில் 
அருள்தரும் வள்ளி அம்பாள்
எழுந்தருளி 
எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து 
மேலக்கோவில் சேர்தல் நடைபெறும் 

✨இரவு 
அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் வெள்ளி யானை வாகனத்திலும்
வெள்ளிசரப வாகனத்தில் 
அருள்தரும் வள்ளி  அம்பாள்
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும் 

💥5ஆம் திருநாள்  
ஆவணி - 22ம் தேதி 
செப்டம்பர்  08-09-2023 வெள்ளிக்கிழமை 
காலை 
அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் வெள்ளி யானை வாகனத்திலும்
சரப வாகனத்தில் 
அருள்தரும் வள்ளி அம்பாள் எழுந்தருளி 
எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து 
மேலக்கோவில் சேர்தல் நடைபெறும் 

 ஐந்தாம் திருநாளில் மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு #குடைவரைவாயில்தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அருள்தரும் வள்ளி அம்மாள், தெய்வானை சமேத
அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான்

 தனித்தனி தங்க மயில் வாகனத்தில் அருள்தரும் வள்ளி  அம்பாள் எழுந்தருளி  திருவீதி உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும் 

💥6ஆம் திருநாள் 
ஆவணி - 23ம் தேதி 
செப்டம்பர்  09-09-2023 சனிக்கிழமை 
காலை
கோ ரதமும்
அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான்
எழுந்தருளி 
எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து 
பந்தல் மண்டபம் மத்தியில் சேர்தல் நடைபெறும் 

✨இரவு 
அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் வெள்ளி ரதத்திலும்

இந்திர விமானத்தில்
அருள்தரும் வள்ளி  அம்பாள்
எழுந்தருளி  
எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து 
மேலக்கோவில் சேர்தல் நடைபெறும் 

💥7ஆம் திருநாள் 
ஆவணி - 24ம் தேதி 
10-09-2023 ஞாயிறுக்கிழமை 
அதிகாலை : 5:00 மணிக்கு
அருள்மிகு ஸ்ரீ  ஷண்முகப்பெருமான்-க்கு #உருகுசட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.
காலை : 6:00 மணி
பல்லாக்கு வாகனத்தில் சுவாமி, அம்பாள்
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல்
தொடா்ந்து
காலை:  8.45 மணிக்கு சுவாமி #ஆறுமுகப்பெருமான் #வெட்டிவோ் சப்பரத்தில் பக்தா்களுக்கு #ஷண்முகர்ஏற்றம் தரிசனம் அருளி, பிள்ளையன் கட்டளை மண்டபத்தை அடைகிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார,தீபாராதனை நடைபெற்றதும், மாலை 4.30 மணிக்கு சுவாமி பெரிய  தங்கச்சப்பரத்தில் சிவனின் அம்சமாக ❤️  #சிவப்புசாத்தி   எழுந்தருளி 
எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து 
மேலக்கோவில் சேர்தல் நடைபெறும் 

💥8ஆம் திருநாள்
ஆவணி - 25ம் தேதி 
செப்டம்பர் 
11-09-2023 திங்கட்கிழமை 
எட்டாவது  திருநாளில்
வெள்ளைச்சாத்தி மண்டபத்தில் செந்தூர் சக்கரவர்த்தி ஷண்முகப் பெருமானுக்கு
சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்று
அதிகாலை 5:00  மணிக்குமேல் 
பெரிய வெள்ளிச்சப்பரத்தில் படைக்கும் கடவுள் பிரம்மனின் அம்சமாக 🤍
#வெள்ளைசாத்தி  எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும்  உலா  வந்து மேலக்கோயில் சோ்ந்து பின்னர் 
8ம் திருநாள் மண்டபத்தில் 
காலை 
ஷண்முகப் பெருமானுக்கு  சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். பகல் 
பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி காக்கும் தெய்வமாகிய மகாவிஷ்ணுவின் அம்சமாக 💚 #பச்சைசாத்தி  எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து 
அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி  திருக்கோவில் வந்து சோ்கிறாா். 

💥9ஆம் திருநாள் 
ஆவணி - 26ம் தேதி 
செப்டம்பர் 
12-09-2023 செவ்வாய்க்கிழமை
☀️காலை 
வெள்ளிக்குதிரை வாகனத்தில் 
அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான்

வெள்ளிக்குதிரை வாகனத்தில்
அலையுகந்தபெருமான் 
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும். 

☀️மதியம்
பல்லாக்கு வாகனத்தில்
அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான்
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும். 

✨இரவு 
அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் தங்க கயிலாயப் பர்வத வாகனத்திலும்
வெள்ளி கமல வாகனத்தில் 
அருள்தரும் வள்ளி அம்பாள் எழுந்தருளி 
எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து 
மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

💥10ஆம் திருநாள் 
ஆவணி 27ம் தேதி 
13/09/2023 புதன்கிழமை
காலை தேரோட்டம் 

கோ ரதத்தில்  
அருள்மிகு 
ஸ்ரீ விநாயகர் சுவாமி

பெரிய மரத்தேர்-ல் 
அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான்

சிறிய மரத்தேர்-ல் 
அருள்தரும் வள்ளி அம்பாள்
நான்கு திருவீதிகளிலும்
திருத்தேர் வடம் பிடித்து திரு வீதிகளில் வலம் வந்து சேர்தல்.

✨இரவு 

பெரிய பல்லாக்கு வாகனத்தில்
அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள்
அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான்

சிறிய பல்லாக்கு வாகனத்தில்
வள்ளி அம்பாள்
எழுந்தருளி 
எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து 
மேலக்கோவில் சேர்தல்.

💥11ஆம் திருநாள் 
ஆவணி 28ம் தேதி 
14-09-2023 வியாழக்கிழமை
✨இரவு 
புஷ்ப சப்பரத்தில் அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான்

கேடயச் சப்பரத்தில்
அருள்தரும் வள்ளி அம்பாள் 
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடைபெறும்.

💥12ஆம் திருநாள்
ஆவணி 29ம் தேதி 
15-09-2023 வெள்ளிக்கிழமை மாலை 

அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் புஷ்ப சப்பரத்திலும்

கேடயச் சப்பரத்தில்
அருள்தரும் வள்ளி அம்பாள்
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து 12ம் திருநாள் மண்டபத்தில் சேர்தல் நடைபெறும்.

✨இரவு 

அருள்தரும் வள்ளி அம்பாள், தெய்வானை சமேத அருள்மிகு ஸ்ரீ குமரவிடங்கபெருமான் மலர்கேடயச் சப்பரத்திலும்
பெரியகேடயச் சப்பரத்தில்
அருள்தரும் வள்ளி அம்பாள் 
எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வந்து அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் வந்தடைதல் 🙏

💥ஆவணி திருவிழா - 2023  இனிதே நிறைவுபெறும்💥

Tuesday, August 15, 2023

August month second predictions.

6/8/2023

1) the inflation in our country will be high people are advised to store the essential commodities there is going to be very severe scarcity for essential food items

2) the whole world will experience very severe food shortage

3) in India also in some States there is going to be very much scarcity for certain food items

4) in foreign countries several oil Wells will be closed

5) in India petrol and diesel prices will go very very high and several of oil companies will also shut down this we have been telling since 3 months

6) there is going to be some problem in petrol and diesel and because of this there is going to be severe shortage for petrol and diesel

7) there is going to be severe shortage for essential commodities people are advised to store these items

8) particularly in two countries there is a very big famine and suddenly they will announce this to the world

9) in America the prices of food items will go very very high which is
 unimaginable and the same situation will be there in several of the countries.

10) in America in several places the people will be looting in the malls

11) India government will impose restriction on several food items and clothings

12) the whole world will suffer too much until next January there will be severe scarcity for all things

13) the world will see severe economic crisis and shortage of currency this situation will be there till January

14) in several countries the people will leave their country and go to some other country

15) one of the world's richest person will have some legal problems and he will be in very big problems

16) there is going to be very very severe scarcity for petrol and diesel the world over

17) prices of gold and silver will come down

18) China will create some problem in our boundary

19) people in China will suffer too much even for breathing they will not have immunity power

20) again the war between two countries will intensify

21) there will be here slight slag in the recent astronomical research and it will be rectified

22) there is going to be two cyclones in the end of this month this will not create any problem in Tamilnadu but two neighbouring States will have severe problems

23) in America there is going to be a gun fire and several people will die

24) there is going to be some confusion in the stock market

25)  Maharashtra New Delhi Haryana will see several rallies and protests

26) India's mission chandrayaan will be very very successful

27) in whole of India several States will see several protest and arson 

28) there will be lot of protest and riot in Andhra Pradesh and Kerala

29) there is going to be very severe shortage of coal and coke and because of this there will be no power supply this situation is not only in India but for the whole world.

30) there is going to be very severe water shortage world over.

6/8/2023

1) விலைவாசி கள் இன்னும் அதிகமாகி கொண்டே போகும்.மக்கள் எல்லோரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கண்டிப்பாக முடிந்தவரை அனைத்து அத்யாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் 

2) அனைத்து வெளிநாடுகளிலும் உணவு பஞ்சம் மிகுதியாக ஏற்படும்.

3) இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் ஒரு சில உணவுப் பொருட்களுக்கு மிகவும் பஞ்சம் ஏற்படும்

4) வெளிநாடுகளில் எண்ணெய் கிணறுகள் மூடப்படும்

5) இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிகவும் அதிகமாகும். நிறைய எண்ணெய் கம்பெனிகள் மூடப்படும் இதை நாம் மூன்று மாதங்களாக சொல்லிவருகிறோம்.

6) பெட்ரோல் டீசல் கிடைப்பதில் ஏதோ ஒரு பிரச்சனை ஒன்று ஏற்படும் இதனால் பெட்ரோல் டீசல் விலை அதிகமாகும் மற்றும் தட்டுப்பாடுகள் வரும்.

7) எல்லா அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடுகள் வரும் மேலும் கிடைக்காமல் போய்விடும் மக்கள் கவனமாக முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்வது மிக மிக அவசியம்.

8) உலகில் இரண்டு நாடுகளில் மிகவும் கொடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது இதை திடீரென்று உலகுக்கு அறிவிப்பார்கள்.

9) அமெரிக்காவில் இதுவரையில் பார்க்காத அளவு உணவு பண்டங்களின் விலை மிகவும் அதிகமாகும் இதே நிலைதான் பல நாடுகளில் ஏற்படும்.

10) அமெரிக்காவில் பல இடங்களில் மால்களில் சூறையாடப்படும் நிலை உள்ளது 

11) இந்தியாவிலிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் துணி வகைகளுக்கும் ஏற்றுமதி  செய்ய கட்டுப்பாடுகள் வரும்.

12) உலக நாடுகள் முழுவதும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை எந்த ஒரு பொருளை எடுத்தாலும்  அதற்கு தட்டுப்பாடுகள் இருந்து கொண்டே இருக்கும்.

13) உலகம் முழுவதும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை மிகப் பெரிய பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். எல்லா நாடுகளிலும் பணவீக்கம் ஏற்படும்.

14) இந்த பொருளாதாரப் பிரச்சினைகளினால் மக்கள் நாடு விட்டு நாடு செல்லும் நிலை உள்ளது.

15) ஒரு பெரிய பணக்காரருக்கு பெரிய பிரச்சனை ஒன்று உருவாகி கோர்ட் கேஸ் என்று அலைக்கழிக்கப்படுவார்.

16) உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் மிகப்பெரிய தட்டுப்பாடுகள் வரும்.

17) தங்கம் வெள்ளி விலை குறையும்

18) சீனா நமது எல்லையில் சில குழப்பங்களை ஏற்படுத்துவார்கள்

19) சீனாவில் மக்கள் சுவாசிப்பதற்கே மிகவும் கஷ்டப்படுவார்கள் அவர்களுக்கு எதிர்ப்பு சக்தி இருக்காது

20) மறுபடியும் இரண்டு நாடுகள் இடையே போர் அதிகமாகும்

21) வானவியல் ஆராய்ச்சியில் ஒரு சிறிய தடங்கல் ஏற்பட்டு மறுபடியும் அது சீராகும்

22) இந்த மாதம் கடைசியில் இரண்டு புயல் உருவாகும் அது வேறு மாநிலங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

23) அமெரிக்காவில் ஒரு வளாகத்தில் ஒரு துப்பாக்கி சூடு ஏற்படும் இதில் நிறைய மக்கள் இறக்கும் சூழ்நிலை உள்ளது.

24) பங்கு சந்தைகளில் சில குழப்பங்கள் ஏற்படும்

25) மகாராஷ்டிரா டில்லி புது டெல்லி ஹரியானா ஆகிய பகுதிகளில் மக்கள் கலவரத்தில் ஈடுபடுவார்கள்

26) இந்தியா இப்போது செய்து கொண்டிருக்கும் சந்திரனின் ஆராய்ச்சி பெரிய வெற்றி அடையும்.

27) வட இந்தியாவில் பல மாநிலங்களில் பல காரணங்களுக்காக கலவரங்கள் ஏற்படும்

28)கேரளா ஆந்திரா மற்றும் இன்னும் சில மாநிலங்களில் கலவரங்கள் ஏற்படும்

29) உலகம் முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் இதனால் மின்சாரம் உற்பத்தி செய்வது மிகவும் பாதிப்பு அடையும் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுவார்கள்.

30) உலகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்

Monday, August 14, 2023

ஆவணிமாத சிறப்புகளை படியுங்கள்.

ஆவணி மாத சிறப்புகள் !

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வாரநாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது.

ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதை போல் ஆவணி மாதம் மிக சிறந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள்.

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர்.

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை :

 ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் 'ஞாயிறு" என்றாலே 'சூரியன்". அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

ஆவணி அவிட்டம் :

ஆவணி அவிட்டம் அந்தணர்களுக்கான பண்டிகை. ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்தி பூர்வமான பண்டிகை இது. இந்த நாளில் பழைய பூணூலை கழற்றிவிட்டு, புதிய பூணூல் அணிந்து கொள்வர். இதை குருமுகமாகத் தான் செய்ய வேண்டும்.

விநாயக சதுர்த்தி :

விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது விநாயகர் சதுர்த்தி. விநாயரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் கிடைக்கும்.

ஆவணி மாத வளர்பிறையின் சிறப்பு :

ஆவணி மாதத்தில் கிரஹப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம். திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும்.

விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வர்.

ஜோதிட முறைப்படி பார்த்தால் சூரியன் வலுப்பெறுவதால் அந்த காலத்தில் (ஆவணி) செய்யப்படும் அனைத்து செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறலாம்.

சிறப்பம்சம் நிறைந்த ஆவணி மாத வளர்பிறையில் கடவுளை மனமுருகி பூஜித்து அனைத்து நலங்களையும் பெறுவோமாக.

Friday, August 11, 2023

18 சித்தர்களின் ஜீவ சமாதி மற்றும் அவர்கள் வாழ்ந்த காலம்.

*சித்தர்கள் ஜீவ சமாதியான இடம்,* _அவர்கள் வாழ்ந்த நாட்கள்._
*1. அகஸ்தியர்* – 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.
*2. பதஞ்சலி* – 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.
*3. கமலமுனி* – 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.
*4. திருமூலர்* – 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.
*5. குதம்பை சித்தர்* – 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.
*6. கோரக்கர்* – 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.
*7. தன்வந்திரி* – 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.
*8. சுந்தராணந்தர்* – 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.
*9. கொங்ணர்* – 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.
*10. சட்டமுனி* – 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.
*11. வான்மீகர்* – 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.
*12. ராமதேவர்* – 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.
*13. நந்தீஸ்வரர்* – 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.
*14. இடைக்காடர்* – 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.
*15. மச்சமுனி* – 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.
*16. கருவூரார்* – 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.
*17. போகர்* – 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.
*18. பாம்பாட்டி சித்தர்* – 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்.
*(மரணமில்லா பெருவாழ்வு – சாகா கல்வி)* உலகில் உள்ள மனிதர்கள் வெல்ல முடியாத மரணத்தை வென்றவன் தமிழன்.
_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்._

Thursday, August 10, 2023

தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது,.

*ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட் இதே நிலை இங்கேயும் கண்டிப்பாக வரும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்* 

*ஏப்ரல் 14, 2023*க்குப் பிறகு அதன் அரசாங்கம் தண்ணீர் வழங்க இயலாமையைக் காட்டியதால் *தென் ஆப்பிரிக்காவின்* தலைநகரான *கேப் டவுன்* உலகின் முதல் தண்ணீர் இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் பேரின் இணைப்புகளை துண்டிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இந்தியாவில் பெட்ரோல் பம்புகளுக்குச் சென்று பெட்ரோல் வாங்கும் விதம், கேப்டவுனில் 25 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் தண்ணீர் டேங்கர்கள் இருக்கும், மேலும் தண்ணீர் கேட்பவர்களையோ அல்லது கொள்ளையடிப்பவர்களையோ சமாளிக்க போலீஸ் மற்றும் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
உலகின் இந்த சோகப் பயணம் இறுதியில் யாருக்கும் வரும், எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்.
தண்ணீரை வீணாக்குவதை நிறுத்துங்கள் ரயில் மூலம் லத்தூருக்கு (மகாராஷ்டிரா) தண்ணீர் அனுப்பப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.
*உலகின் 2.7% தண்ணீர் மட்டுமே குடிக்கக்கூடியது.*
*குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்* !!
அருகில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் ஆழமடைந்துள்ளது.
பொறுப்புள்ள குடிமகனாக, தண்ணீரை வீணாக்குவதை தடுத்து, தண்ணீரை சேமிப்போம். நீங்கள் எளிதாக செய்யலாம். :-
1. *கார்/பைக்கை தினமும் கழுவ வேண்டாம்*.
2* முற்றம் / படிக்கட்டுகள் / தளம் ஆகியவற்றைக் கழுவுவதைத் தவிர்க்கவும் அல்லது கழுவும்போது குறைந்தபட்சம் தண்ணீரைப் பயன்படுத்தவும் *.
3.. *தொடர்ந்து குழாயை ஆன் செய்யாதீர்கள்.*.
4. இன்னும் பல நல்ல செயல்களைச் செய்து தண்ணீரைச் சேமிக்கவும்.
5. *வீட்டில் உள்ள கசிவு குழாயை சரிசெய்யவும்.*
6. *மரத்தின் தொட்டியில் குறைந்த பட்ச தண்ணீர் வைக்கவும்.*
7. *சாலையில் தண்ணீர் தெளிக்காதீர்கள்*
ஒன்றாக இந்த நெருக்கடியை எதிர்கொள்வோம்.

Tuesday, August 8, 2023

இதுதான் இல்லற ரகசியம் படியுங்கள் தித்திப்பான கதை.

இதுதான் இல்லற இரகசியம்".

*ஒரு சாது* மரத்தடியில் அமர்ந்திருந்தார்.  *ஒரு பறவை* அவரிடம் சென்று பேசியது.  

*‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன்.  முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்',* என்றது.

*‘பறவையே!  உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?*  முயற்சிப்பதில் தவறில்லை.  *ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.*   பிரயாணத்தின் போது *முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது  உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு'*, என்றார் சாது.

*தலையசைத்து விட்டு பறந்தது பறவை*.  பக்கத்தில் இருந்த *சீடனிடம் பேசினார்* சாது.

‘சீடனே!  *முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்',* என்றார் சாது.  
      
ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.

*‘ஐயா!  கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன்.   நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன்.  இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்',* என்றது பறவை.

*‘பறவையே!  இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல்.  பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார்* சாது.

பதினைந்து நாட்கள் ஓடிப்போனது.  *மீண்டும் பறவைகள்* திரும்ப வந்தன.

*‘ஐயா!  எங்களால் கடலில்  நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது.   நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம்.    தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம்.  ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம்.  எங்களுக்கு உதவுங்கள்'*, என்றது பறவை.

சாது யோசித்தார்.  *கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம்* கொடுத்தார்.  

*‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.  சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள்.  அது மிதக்கும்.  அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள்.  களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்',* என்றார் சாது.

*பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.*  இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன.

*‘ஐயா!  உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம்.   குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்'*, என்றது பறவை.

*‘பறவைகளே அருமை!  நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?'* என்று கேட்டார் சாது. . . . . . . பறவை பேசியது.

*‘ஐயா!  சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம்.  சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம்.  அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது.  பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.*  ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் *“குச்சியை நாங்கள் சுமக்கவில்லை.  குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”*, என்ற உண்மை புரிந்தது', என்று *சொல்லி விட்டு பறந்தது பறவை.*

சாதுவைப் பார்த்தான் சீடன்.   சாது பேசினார்.

*‘சீடனே!  பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது.  துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது.*  அதற்குக் காரணம் *‘துணை'.*  ஆனாலும் *இலக்கை அடைய முடியவில்லை*.   இலக்கை அடைய *‘குச்சி'* என்ற கருவி அவசியமாகிறது.  *அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.*  ஆனால், 
*அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது*.   பறவைகளுக்கு *‘குச்சியை*'ப் போல மனிதர்களுக்கு *‘இல்லறம்'* கருவியாகிறது.  *‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை.*  ‘இல்லறம்' என்ற *குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது*.  

குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், *‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'*.   இதைப் போல, *கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும்*, உண்மையில் *இல்லறமே அவர்களை வழி நடத்துகிறது.*   

 *இதுவே இல்லற ரகசியம்..!!*

Tuesday, August 1, 2023

ஆகஸ்ட் மாத உள்ளூர் வெளிநாடுகள் கணிப்புகள்.

31/7/2023

1) in two foreign countries there is going to be very severe flood and rain

2) China Europe England and Canada will witness very severe heat and people will suffer very much

3) China Europe Canada in all these places the inflation will be very very high people will not be able to buy essential commodities

4) even in America the economic inflation will be very very severe

5) there is going to be a big problem for the president of America

6) in India there is going to be severe shortage for fuel and electricity.

7) the whole world will have the shortage of coal and due to this there will be severe electricity scarcity

8) there is going to be here very severe problem for IT sector people

9) big big IT companies in the whole world will have severe problem and several lakhs of people will loose their job

10) the land prices will go up in all the countries and in India also the land prices will go up

11) the land prices in America also will go up and also the essential commodities prices will go up and there will be scarcity for essential commodities

12) in Russia the public will again revolt

13) petrol and diesel prices will go very very high all over the world

14) one very big ice mountain will meltdown near Himalayas like wise one more big ice mountain will meltdown in Canada

15) there is going to be to earthquakes and one will be near New Delhi and haryana

16) there will be very excess of heat in Japan again there will be a Tsunami in Japan

17) there is going to be a big problem for another politician in Tamilnadu

18) World Bank will announce the shortage of funds and due to this several countries will have financial crisis

19) several big banks all over the world will shut down

20) the prices of gold will come down

21) the share markets will see downfall till 15th of August

22) all over the world people will start revolting and in several places there will be demonstrations

23) in France there is going to be a very big problem in the army

24) in several countries there will be total scarcity of food

25) there is going to be a very big problem for IT sector in the month of September

26)  since the ice mountains are melting the sea level will increase people should be very very careful

27) this year there is going to be heavy rains in Tamilnadu

28) Canada Europe England China will witness severe heat and in some places there will be sudden  fire and a big wall also will catch fire

29) in America two provinces will have severe floods again

30) in North India there will be a very big political crisis which is totally unexpected

31) there is going to be a problem in a school campus and several people will gather there and protest 

32) there is going to be to earthquake under the sea and similarly there will be to big earthquakes

31/7/2023

1) இரண்டு வெளிநாடுகளில் மிகப்பெரிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது நாம் பார்ப்போம்

2) ஐரோப்பா சீனா இங்கிலாந்து கனடா ஆகிய நாடுகளில் வெப்பம் மிக மிக அதிகமாகி மக்கள் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகும்

3) ஐரோப்பா இங்கிலாந்து கனடா ஆகிய நாடுகளில் விலைவாசி மிகவும் அதிகமாகிவிடும் மக்கள் அத்யாவசிய பொருட்களை வாங்க மிகவும் கஷ்டப்படுவார்கள்.

4) அமெரிக்காவில் பொருளாதாரம் பிரச்சனைகள் மிகவும் கடுமையாக இருக்கும்

5) அமெரிக்க அதிபருக்கு ஒரு பெரிய பிரச்சனை உள்ளது

6) இந்தியாவில் எரிவாயு நிலக்கரி மின்சாரம் ஆகியவைகளுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு வரும்.

7) உலக நாடுகள் அனைத்திலும் நிலக்கரி கிடைக்காமல் உலகம் முழுவதும் மின்சாரம் தட்டுப்பாடு வரும்

8) இதுவரை பார்த்திராத அளவு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஐ.டி. தொழில்நுட்ப வேலையில் இருப்பவர்களுக்கு வரும்.

9) உலகம் முழுவதும் உள்ள ஐ.டி தொழில்நுட்ப துறையில் உள்ள பெரிய பெரிய கம்பெனிகள் இழுத்து மூடப்படும் அபாயம் உள்ளது.லட்சக்கணக்காண மக்கள் வேலை இழப்பார்கள்.

10) உலகம் முழுவதும் நிலத்தின் விலை கிடுகிடு என ஏறிவிடும். இங்கு இந்தியாவிலும் விலை ஏறி விடும்

11) அமெரிக்காவிலும் நிலத்தின் விலை அதிகமாகிவிடும் மேலும் அங்கு அத்தியாவசிய பொருட்கள் விலையும் அதிகமாகும் மற்றும் அதிகமாக உணவு தட்டுப்பாடு ஏற்படும்.

12) ரஷ்யாவில் மீண்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

13) உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மிகவும் அதிகமாக ஏறிவிடும்

14) இமயமலை அருகே ஒரு பெரிய பனிமலை உருகி கடலில் விழும் அதே போல் கனடா அருகே ஒரு பெரிய பனிமலை உருகி கடலில் விழும்

15) இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்படும் அதில் ஒன்று டெல்லி அருகே மற்றும் ஹரியானாவில் ஏற்படும்

16) ஜப்பானிலும் சூட்டுத்தன்மை அதிகமாகும் மேலும் அங்கு சுனாமி ஏற்படும்

17) அடுத்த மாதம் மற்றும் ஒரு அரசியல்வாதிக்கு பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்

18) உலக வங்கியின் பணப் பற்றாக்குறையினால் உலக நாடுகள் முழுவதும் நிதி பிரச்சனைகள் ஏற்படும்.

19) உலக நாடுகளில் பெரிய பெரிய வங்கிகள் இழுத்து மூடப்படும்

20) தங்கம் இப்போது சற்று விலை குறையும்

21) பங்குச் சந்தைகள் 15 ஆம் தேதி வரை சரிவை காணும்

22) உலகம் முழுவதும் மக்கள் போர்க்கொடி தூக்குவார்கள் உலகம் முழுவதும் ஆங்காங்கே கலவரங்கள் ஏற்படும்.

23) பிரான்ஸ் நாட்டில் ராணுவத்தில் பெரிய பிரச்சனைகள் வரும்

24) ஒரு சில நாடுகளில் உணவே கிடைக்காத சூழ்நிலை உருவாகும்

25) ஐ.டி. ஃபீல்டில் மிகப்பெரிய ஆபத்து ஒன்று செப்டம்பர் மாதம் உருவாகும்.

26) உலகத்தில் உள்ள பனி மலைகள் எல்லாம் உருகுவதால் கடல் மட்டம் உயரும் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

27) இந்த வருடம் நமக்கு மழை மிகவும் அதிகமாகவே இருக்கும்

28) கனடா ஐரோப்பா இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மிகவும் கொடுமையான வெயில் இருக்கும் சில இடங்கள் தானே நெருப்பு பற்றிக் கொள்ளும் ஒரு முக்கியமான பதில் சுவரும் நெருப்பு பற்றிக்கொள்ளும்

29) அமெரிக்காவில் மேலும் இரண்டு மாகாணங்களில் மிகப் பெரிய மழை வெள்ளம் வரும்

30) வட இந்தியாவில் எதிர்பாராத அளவு மிகப்பெரிய அரசியல் குழப்பங்கள் ஏற்படும்

31) ஒரு பள்ளி வளாகத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும். மக்கள் கூட்டமாக சேர்ந்து பிரச்சனை அனுப்புவார்கள்

32) கடல் அடியில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்படும் அதே போல் இரண்டு இடங்களிலும் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும்

சூரியனார் கோவில் முழு விவரங்கள்..

சூரியனார் கோவில் முழு விவரங்கள்..!

சூரியநாராயணன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டத்தில் திருமங்கலக்குடி என்னும் கிராமத்தில் 1800 வருடங்கள் பழமைவாய்ந்த கோவிலாக அமைந்துள்ளது. சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எனும் சிறப்பை சூரியனார் கோயில் பெற்றுள்ளது. ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தில் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர். சூரியனார் கோவில் வந்து வணங்குபவர்களுக்கு சூரியபகவான் அருளால் செல்வம் கொழிக்கும், உடல் வளம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை.

சூரியநாராயணன் கோவில் கி.பி 1100-ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. இதன் கோபுரம் மொத்தம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டுள்ளது. சூரிய தீர்த்தம் என்னும் புனித நீர் நிலை இங்கு அமைந்துள்ளது. சூரியனார் கோவிலின் தனி சிறப்பாக குரு பகவான் சூரிய பகவானை தரிசிப்பதாக விளக்கப்பட்டுள்ளது.

முதலில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள திருமங்கலக்குடி சென்று அங்கு பிராணநாதரையும், மங்கள நாயகியையும் வழிபட்ட பிறகே சூரிய நாராயணனையும் மற்ற நவக்கிரகங்களையும் வழிபட வேண்டும்.

சூரியனார் கோவில் விவரங்கள்:
மூலவர்: சிவசூரியன்
அம்மன் / தயார்: உஷாதேவி, பிரத்யுஷாதேவி
தல விருட்சம்: வெள்ளெருக்கு
தீர்த்தம்: சூரிய தீர்த்தம்
ஊர்: சூரியனார்கோவில்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
சூரியநாராயணன் கோவிலின் வரலாறு:
சூரியனார் கோவில் குறித்த ஒரு சுவையான புராணச் செய்தி உள்ளது.

அதாவது கால முனிவர் , எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவராய் இருந்தார். தனக்கு தொழுநோய் வர போவதாய் முன் கூட்டியே அறிந்து, அக்கொடிய நோயில் இருந்து தன்னை காத்துக் கொள்ள நவக்கிரகங்களை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவ வலிமையில் அகமகிழ்ந்த நவக்கிரகங்கள் அவருக்கு காட்சி புரிந்து வரம் அளித்தனர்.

தான் எழுதிய விதியை மாற்றியதால் கோபம் கொண்ட பிரம்மா கால முனிவர் அடைய வேண்டிய துன்பங்களை நீங்கள் அடைவீர்களாக என்று நவகிரகங்களை சபித்தார்.

அவரது சாபத்தால் தொழு நோயை அடைந்த நவக்கிரகங்கள் சாப விமோச்சனம் வேண்டி மன்றாடினார்.

திருமங்கலக்குடி சூரியனார் கோவில் பிராணநாதரை தரிசித்து அவரது அருளை பெறுமாறு பிரம்மா கூறினார். அதன் படி பிராணநாதரையும் மங்களாம்பிகையையும் வேண்டி நவக்கிரகங்கள் அங்கு ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து தவம் புரிந்தனர்.

கடவுள் அவர்களுக்கு பாவ விமோச்சனம் அளித்தார் . நவக்கிரகங்களுக்கு நன்றி கூறும் விதமாக காலவ முனிவர் அவர்கள் தவம் புரிந்த இடத்தில் கோவில் எழுப்பினார்.

இக்கோவிலில் பிரதான கடவுளாக சூரியநாராயணன் தன்னுடைய மனைவிகள் பிரத்யுஷா தேவி, உஷா தேவி உடன் ரதத்தில் இருப்பது போல் காட்சியளிக்கின்றார்.

பக்தர்கள் விஜயதசமி அன்றும் ரத சப்தமி அன்றும் சூரியனாரை தரிசித்து அவர் அருளை பெறுவர்.

சூரியநாராயணன் கோவில் தலபெருமை:
சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில். தெற்கே இந்த சூரியனார் கோயில். கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை. ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.

கருவறையில் சூரிய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார்.

சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார். சூரிய பகவான் உக்கிரம் அதிகம். அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார்.

அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது. மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது. சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்கு குதிரை இருக்கிறது.

நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.

இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு.

உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.

இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது.

இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.

திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான கோயில் இது.

திருவிழா:
ரதசப்தமி உற்சவம் தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா, இந்த கோவிலின் மிகவும் முக்கிய திருவிழா ஆகும்.

சூரியநாராயணன் கோவில் சிறப்பு வழிபாடு:
பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூரிய பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெரும். மகா அபிஷேகம் என்று அழைக்கப்படும் இந்த அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி நாட்களில் இந்தகோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

பிராத்தனைகள்:
நவகிரக தலங்களில் சூரிய தலம் முதன்மை என்பதால் பக்தர்கள் அனைவரும் தங்களது பல்வேறு கஷ்டங்கள் நீங்க பிராத்தனை செய்கின்றனர்.

குறிப்பாக ஏழரையாண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச்சனியால் தோஷமுள்ளவர்கள், வேறு பிற நவகிரகதோஷமுள்ளவர்களுக்கும் இந்த சூரியனார் கோவிலுக்கு வந்து 12 ஞாயிற்று கிழமை வரை பிராத்தனை செய்து வழிபட்டு வர தோஷங்கள் நீங்கும் மற்றும் காரிய தடைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

சூரியநாராயணன் கோவில் எப்படி செல்வது?
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் ஆடுதுறைக்கு தெற்கில் 2 கி.மீ. தூரத்தில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது.

கும்பகோணத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், ஆடுதுறையிலிருந்தும், அணைக்கரை – திருப்பனந்தாளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

பேருந்தில் வருவோர் திருமங்கலக்குடி காளியம்மன் கோயில் பேருந்து நிற்கும் இடத்தில் இறங்கி வடகிழக்கே 2 பர்லாங்தூரம் நடந்து வந்தால் சூரியனார் கோவிலை அடையலாம்.

கோவில் திறக்கப்படும் நேரம்:-
காலை 09 மணி முதல் 11 மணி வரை திறக்கட்டும். அதன் பிறகு மலை 4 மணி முதல் 8 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்

நாசா வியந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை #மீனாட்சி_அம்மன்_கோயில்... 
~``~`` ⚜ #நாசா_வியந்தது ⚜ ``~``~
ஆம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம் இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான்.. 
ஒரு வட்டத்துக்குள் வராது சதுரவடிவில் அமைந்த கோவில்.. கோவில் மட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ள தெருக்களும் சதுரவடிவமாகவே அமைந்துள்ளது சிறப்பாகும்.. எல்லா பக்கமும் சம அளவு என்பதே சதுரம்.. அது போல சமூகத்தில் எல்லாரும் சமமே என உணர்த்தும் வண்ணம் உலகிற்கே இக்கோவில் சான்றாய் விளங்குகிறது.
நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்ற எந்த ஒரு சாட்டிலைட்டும் மீனாட்சி அம்மன் கோவிலை முழுதாக படம் பிடிக்க இயலாது.. ஏதாவது இரண்டு பக்கமே படம் தெரியும்.! ஏனெனில் கோவில் சதுரமாக இருப்பதால். 1984ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் கெப்ளர் என்பவர் இதற்காக சதுரவடிவில் ஒரு சிறிய சாட்டிலைட் செய்து விண்வெளிக்கு அனுப்பினார்.!
ஆனால் அது எடுத்தப் படத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் வியப்பில் உறைந்தனர்.. ஏனெனில் அப்படத்தில் மீனாட்சி அம்மன் கோவில் வட்டவடிவில் இருந்தது. கெப்ளர் உடனடியாக மதுரைக்கே வந்தார் மீனாட்சி அம்மன் கோவிலில் கிட்டத்தட்ட 68 நாட்கள் ஆராய்ச்சி செய்தார்.. அப்போது தான் விஞ்ஞானத்தின் பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.!
சதுரமான கோவில் வட்டவடிவமாகத் தெரிய கோவிலின் ஒரு கோபுரமான மொட்டை கோபுரம் தான் என்பதைக் கண்டறிந்தார்.. சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும் மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.. 
அறிவியல் பூர்வமான கட்டுமானத்தில் அன்றே இதை பாண்டிய மன்னர்கள் கட்டியிருந்ததை கண்டு வியந்தார்.. அதே போல மொட்டை கோபுரத்தின் மீது எந்த இராடாரும் வேலை செய்யாது எனவும் கண்டறிந்தார்.. ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் 965 கால்கள் உடையது என்பதை அறிந்து மிகவும் வியந்து போனார்.. காரணம் 965 என்பது விண்வெளியில் 
தவிர்க்க இயலாத எண்!! ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965 Stand எனக் குறிப்பிடுவார்கள்.! வான அறிவியல் வளர்ச்சி பெற்று இருக்கும் இந்த காலத்து விஞ்ஞானம் எல்லாம் அன்றே இருந்தது என்பதை அறிந்து வியந்து போனார்.. அதே போல மீனாட்சி அம்மன் கோவில் பைரவர் சந்நிதியில் இருந்து வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை..
புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்த போது ஓ.. ஜீசஸ் என அலறியே விட்டார்.! அப்பாறையில் இருந்த வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுகளின் சர்க்யூட் பேனல்களின் வடிவத்தில் இருந்தது!!! மேலும் பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசயத்து போனார்! அது எப்படி என்று இன்றுவரை
அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.! மீனாட்சி அம்மன் கோவிலை சுற்ற சுற்ற அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.. சித்தர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதி, முக்குறுணி விநாயகர் சன்னிதி, இவையெல்லாம் விண்வெளி வீரர்கள் அமரும் சேம்பர்கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன!! நாயன்மார்கள் பிரகாரம்,108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம் 
ஸ்பேஸ் ஷட்டில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தார்.. இறுதியில் தன் ஆராய்ச்சிக் குறிப்பில் உலகின் முதல் நாசா மீனாட்சி அம்மன் கோவிலே.. அநேகமாக பாண்டியர்கள் காலத்தில் சூரியனுக்கே இராக்கெட் விட்டிருக்கலாம் அது இன்னும் பயணித்துக் கொண்டிருக்கலாம் உலகின் மெய்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானத்திற்கும் அடையாளம் இக் கோவில் என எழுதி வைத்தார்.!