Sunday, May 31, 2020

காதல் திருமணம் வெற்றி பெற பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, காதல் திருமணங்கள் அமையும் ஜாதகங்கள் பற்றியதாகும்.

"களஸ்திரகாரகன்' என்று அழைக்கப்படும் சுக்கிரன், ஒரு ஜாதகத்திலேவலிமையாக இருந்தால், லக்கனத்திலிருந்து எண்ணிவர ஐந்தாம் அதி ஏழில் இருந்தாலும், ஏழாம் ஆதி ஐந்தில் இருந்தாலும், அவர்களுக்கு காதல் திருமணம் கைகூடும்.

காதல் திருமணத்திற்கு ஏராளமான வாய்ப்பாடுகள் இருக்கின்றன. உங்களை அதிகம் குழப்பாது, ஒருசில வாய்ப்பாடுகளக் கூறி அதற்கான பரிகாரத்தையும் கூறுவதே சாலச்சிறந்தது.

ஐந்தாம் ஆதி, ஏழில் இருந்தாலும், ஏழாம் ஆதி ஐந்தில் இருந்தாலும் லக்கனாதிபதியும், சுக்கிரனும் வலிமை பெற்றிருந்தாலும். மேலும், ஏழாவது இடத்திலே சந்திரன் இருக்கப்பிறந்தவர்கள் சந்திரன் இருக்க அந்த அமைப்பை ஜாதகமாகக்கொண்டவர்கள், சந்திரன் ராகு அல்லது கேது சேரும் அமைப்பை உடையவர்கள் இவர்களுக்கெல்லாம் காதல் திருமணம் வரும்.

இந்தக் காதல் திருமணம் அனைவருக்கும் மகிழ்ச்சி தருமா? தரதா? என்பதை அவர்களின் ஜாதகம் காட்டும். இந்த காதல் திருமண அமைப்பு சில பெற்றோர்களுக்கு பிடிக்காத நிலையில் இருக்கும் பொழுது, அவர்களை எதிர்த்து காதல் மணம் புரிய தைரியமற்றவர்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பு இருக்கும்பொழுது அந்த ஜாதகர்களுக்கு அளிக்கப்படும் விளக்கம் எப்படிப்பட்டதென்றால், நாம் பலகைகளில் காண்கிறோமே "விபத்துப்பகுதி" என்ற வாசகம் அதுபோலாகும். அதாவது அங்கு விபத்து நடக்காமல் இருப்பதை தடுப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும், ஒரு எச்சரிக்கை பலகையாகும். அதுபோல, இந்த வாலிப விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றால், வாலிபத்திலே வருகின்ற ஹார்மோன் விளையாட்டுக்களின்படி, இந்த அமைப்பிலிருந்து காக்க சில மார்க்கங்கள் கூறப்படுகிறது.

அதாவது, மேற்கூறிய அமைப்பின்படி இருப்பவர்கள், சுக்கிரன் அதிதேவதையான லஷ்மிதேவியை வழிபாடு செய்ய வேண்டும். சந்திரன் அதிதேவதையான அம்பாளை வழிபாடு செய்ய வேண்டும். சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லஷ்மிகளும் (எட்டு லஷ்மிகளும்) குடிகொண்டுள்ள அஷ்டலக்ஷ்மி கோயிலுக்கு

"நெய் தீபத்தில் தான்" லக்ஷ்மி தேவி உறைகிறாள் என்ற வாக்கின்படி மூன்று வேளைகளிலே வரும் சுக்கிரஹோரை என்று அழைக்கப்படும் ஒரு வெள்ளியன்று.

காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரையும், மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிவரையும், மாலை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரையும் தீபம் ஏற்றலாம். குறிப்பாக, இந்த நண்பகலைத் தவிர்த்து மற்ற இரண்டு வேளைகளிலே நெய் தீபம் ஏற்றி, மானசீகமாக லஷ்மிதேவியின் மஹா மந்த்ரத்தை ஆலயத்திலிருந்து கூறிவர, இப்படிப்பட்ட வாலிப விபத்து தடுக்கப்பட்டது, லஷ்மிதேவியின் அருளாசியால், கடாட்ச்சத்தால் உங்களின் தலையெழுத்து மாறும்.

மேலும், சந்திரன் அமைப்பை பெற்றவர்கள் சக்தியின் ஸ்தலங்களுக்குச் சென்று குறிப்பாக காஞ்சியிலே இருக்கின்ற காமாட்சியை வணங்கி வழிபட இந்தச் சுக்கிரனும், சந்திரனும் கட்டுப்படுகின்றார்கள். காமத்தின் ஆட்சிதான் காமாட்சி, காமத்தின் கோளாறே, இந்த காதல் விளையாட்டு, அந்த அன்னையை ஒரு திங்களன்று அல்லது வெள்ளியன்று சென்று நெய் தீபம் ஏற்றி அந்த அம்மனை வணங்கி வர, உங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடைபெறும்.

இதை மானசீகமாக செய்துவர நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன்கள் தெரியும் என்பதைக்கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்.

No comments:

Post a Comment