Thursday, May 7, 2020

குலதெய்வ வழிபாட்டின் ரகசியம்

குலதெய்வ வழிபாடு ஏன் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது குலதெய்வ வழிபாடு தொடர் நிலையில் செய்பவர்கள் பில்லி ஏவல் சூனியம் எதுவும் அவர்களை  அணுகாது. நிறைய பேர்களுடைய பிரச்சனை அவர்களுடைய குலதெய்வம் என்பது எது என்று தெரியாது ஏனென்றால்  பூட்டன் வணங்கிய தெய்வம் பாட்டன் வணங்கிய தெய்வம் தந்தை வணங்கிய தெய்வம் ஒரே மாதிரி இருந்தால், அதுதான் அவர்களுடைய குல தெய்வம், சுமார் 150 வருடங்கள் யாரொருவர் தொடர்ச்சியாக  பூட்டன், பாட்டன், தந்தை அவர்கள் எந்த ஊரில் தொடர்ந்து  வசித்தார்கள் என்றால் அவர்களுடைய குலதெய்வம் இது அனைவருக்கும் சாத்தியம் இல்லை பூட்டன் ஒரு ஊர், பாட்டன் ஒரு ஊர் வசித்து தந்தை ஒரு வசித்து வந்தால்,  அவர்களுடைய குலதெய்வ வழிபாடு  இழப்பார்கள். யாருக்கு ஆண் குலதெய்வம்  இருந்தது என்றால், அவர்கள் முருகப்பெருமானை வணங்க அவர்களுடைய சொந்த குலதெய்வத்தின் ஆசீர்வாதம் கிடைக்கும், அதுபோல பெண் உள்ளவர்கள் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி வணங்க அவர்களுக்கு பெண் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஒருசிலருக்கு ஆண் குலதெய்வமும் இருக்கும் பெண் குலதெய்வமும் இருக்கும் ஆனால் அது யாரென்று தெரியாது அப்படிப்பட்டவரகள், காஞ்சி காமாட்சி அம்மனை வணங்க அது ஆண் குலதெய்வத்தையும் பெண் குல தெய்வத்தையும்  வணங்கியபுண்ணியத்தைக் கொடுக்கும். இனிமேல் குலதெய்வம் தெரியாதவர்கள் கவலைப்பட வேண்டாம் ஆண் குல தெய்வமா முருகனை வழிபடுங்கள் பெண் குல தெய்வமா மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி  வணங்குங்கள், ஆண் குலதெய்வம் மற்றும் பெண் குலதெய்வம் உள்ளவர்கள் காஞ்சி காமாட்சி அம்மனை வணங்க அற்புதமான பலன்கள் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை ஏன் இதை நீங்கள் முயற்சி செய்யக் கூடாது. வளமுடன் நலமுடன் பலமுடன், வாழ முயற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment