Monday, May 25, 2020

வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமைய செய்ய வேண்டிய ஆலய பரிகாரம்.

அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, வீடு கட்ட வீடெனும் செல்வம் பெற செல்லும் திருத்தலங்கள்.

ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் என்பது மிகவும் அவசியமாகும். இருக்க இடம் என்பது மட்டும் ஈடேறாமல் போகிறது.

வீடின்றி ஒரு மனிதன் படும் வேதனை சொல்லி மாளாது. சொந்த வீடு கிடைக்காதா என்று அவன் ஏங்குகிறான், அனைவரும் சொந்த வீட்டில்தான் வாசம் செய்கின்றார்களா? என்றால் நிச்சயம் இல்லை .

இந்த நிலையை ஏற்படுத்துகின்ற தன்மை அவரின் ஜாதகத்திற்கு உண்டு.

பூமிச்செல்வத்தை அளிப்பவர் செவ்வாய்.

வீடாக மேம்படுத்திக் கொடுப்பவர் சுக்கிரன். இது ஒருவருக்கு இருக்கின்றதா என்பதை அவரின் ராசியின் 4-காவது வீடு காட்டிவிடுகின்றது. மேலும், செவ்வாய், சுக்கிரன், லக்னத்தின் 4-வது வீடு பாதிக்கப்படக்கூடாது. அவ்வாறு பாதிக்கப்படாமலிருந்தால் அவர்களுக்கு வீடு பெரும் பாக்கியம் அமைகின்றது.

அவ்வாறு அமையாதவர்களுக்கு தெய்வத்தின் கடாட்சம் இருந்தால் சொந்த வீடு கட்டும் பாக்கியம் அமைந்து விடுகின்றது.

வீடு கட்ட இயலாதவர்கள், வீடை பாதி நிலையிலேயே கட்டி நிறுத்தியவர்கள் ஆகியோர் சென்று வணங்க வேண்டிய தலம் சுசீந்திரம். நாகர்கோயில்

- கன்னியாகுமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது இத்தலம். பிரம்மா, விஷ்ணு , சிவன் மூவரும் காட்சி தரும் இடம் , சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி ஆகிய மூவரும் தவக்கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.தல மரம் - கொன்றை

பதினாறு அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் இங்கு தரிசனம் செய்யலாம். லிங்க அமைப்பு பிரம்மா, விஷ்ணு, சிவன் அம்சமாக உள்ளது. அனுசுயாவின் கற்பை சோதிக்க இம்மூவரும் குழந்தை வடிவாக மாறியதே இத்தலம்.

சுசீந்திரம் நவக்கிரகத்தை பூஜை செய்தால் சொந்த வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். தல இறைவன்-அம்பாள் ஆகியோரை வழிபட நல்ல பலன் பெறலாம் எனக்கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.

No comments:

Post a Comment