Thursday, May 21, 2020

அடகு வைத்த நகைகளை காப்பாற்றுகின்ற பரிகாரம்



அன்பர்களே, இன்று நாம் காணவிருப்பது, அடகு போன நகைகளைக் காப்பாற்ற மேற்கொள்ளும் பரிகாரம் பற்றியதாகும்.

அடகு வைத்த நகைகள் அவ்வாறு வைக்கப்படுவதற்கான ஜாதக ரீதியிலான முக்கிய காரணம் என்ன?

ஒரு ஜாதகத்திலே, குரு ஆறில் மறைந்தாலோ அல்லது எட்டில் மறைந்தாலோ அவர்களிடம் தங்கம் தங்காது. அதேபோல் செவ்வாய் ஆறு அல்லது எட்டில் மறைந்தாலோ அவர்களின் நிலம் தங்காது. பத்திரங்களனைத்தும் அடமானத்திற்குச் சென்று விடும்.

இவ்வகை ஜாதகங்களில் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பிறந்த அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் இன்று ஒரு அருமையான பரிகார விருந்து காத்திருக்கின்றது.

அதாவது, குரு மறைந்தால், தங்கம் மறையும். அடகுக்கடைக்குச் செல்லும், செவ்வாய் மறைந்தால் அவர்களுடைய முக்கியமான பத்திரங்கள் அடகுக்கடையில் இடம் தேடும். இந்த இரண்டு துன்பங்களிலிருந்தும் காப்பற்றுகின்ற ரகசியம் என்ன?

ஒரு சிலர் தங்கம் வாங்குகிறார்கள்:

பின்பு ஏன் அடகு வைக்கின்றார்கள், ஒரு சிலர் தங்கம் வாங்குகிறார்கள். அவர்கள் தொடர்ந்து வாங்கிக்கொண்டே இருக்கின்றார்கள், அடகுக் கடையின் பக்கம் அவர்களின் காலடித்தடம் கூடச் செல்வதில்லை. இதேபோல் வேறுசிலர் நிலங்களை வாங்கிக்கொண்டே செல்கின்றார்கள், எக்காலத்திலும் அவர்களின் நிலப்பத்திரங்கள் அடகுக்கடை அல்லது வங்கி இருக்கும் திசைப்பக்கம் கூட திரும்பாமல் அப்பத்திரங்கள் மிகவும் பத்திரமாக பேணப்படுகின்றன. இந்த வேறுபாடு எதனால் வருகிறது, அதற்கான காரணம் என்ன?

ஆறு அல்லது எட்டாவது குரு அல்லது செவ்வாய் மறைந்தால் நிச்சயமாக இது நடக்கும். இதற்கான பரிகாரம் என்ன? குரு மறைந்தால் உங்கள் ஊரிலே இருக்கின்ற

"தட்சிணாமூர்த்தியை" வியாழனன்று இரவு எட்டிலிருந்து ஒன்பது மணிக்குள் நெய் விளக்கு ஏற்றி வழிபட அல்லது நீங்கள் வாழ்க்கையில் ஒருமுறை "ஆலங்குடிக்குச் சென்று ஆறுமணிநேரம் தங்கி

"நமச்சிவாயா" என்ற மந்திரத்தை ஓதி அந்த குருவின் காந்தசக்தியை உடலில் முழுவதுமாக நிரப்பிக்கொண்டு வந்தால் அல்லது திருச்செந்தூருக்கு சென்று ஸ்ரீம் சரவணபவ" என்ற மந்திரத்தை ஓதி ஆறுமணிநேரம் தங்கி, அந்த செவ்வாயின் குருவாக இருக்கின்ற முருகப்பெருமான் முழுக்கருணையையும் பெற்று, இக்கடுமையான, கொடுமையான தோஷங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளலாம்.

இது எப்படி என்றால், குருவின் அம்சமாக இருக்கின்ற தட்சிணாமூர்த்தியின் வழிபாடு" உங்கள் தங்க நகைகளை அடகுக்கடைக்குச் செல்லவிடாது அல்லது செவ்வாய்க்கு குருவாக இருக்கின்ற முருகப்பெருமானை நீங்கள் செவ்வாயன்றும், வியாழனன்றும் நெய் தீபம் ஏற்றி அந்த மந்திரத்தை எப்பொழுதும் சொல்லி, அந்த அவல நிலையைப் பார்க்கலாம்.

அல்லது நரசிம்ம வழிபாடு, சுதர்சனரின் வழி நடைய நிலத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம். வங்கியிலே வைத்த அந்த நிலத்தை மீட்டுக்கொள்ளலாம். இதற்கான பூஜை தொடர்ந்து செவ்வாயன்று செய்யப்படவேண்டியதாகும். எப்பொழுதும் திருக்கோயில்களிலே, திருவிளக்குகளை மாலையிலே ஏற்றுங்கள் அப்பொழுது நீங்கள் பெறுகின்ற பலன் அளவிடமுடியாத அளவில் பல்கிப்பெருகும். ஏனென்றால் மாலையில் "ரிஷி முனிவர்கள் அப்படியே ஆகட்டும், அப்படியே ஆகட்டும்" என்று கூறிய வண்ணமாக தங்களுடைய இருப்பிடங்களை நோக்கி வீதி சென்று கொண்டிருப்பார்கள்.

அவர்களுடைய வாக்கானது பொய்க்காது, மாலை நேரத்திலே மனமுருகி இறைவனை தீபம் ஏற்றி வணங்குவது என்பது மிகவும் எளிதான பரிகாரம் போன்று காட்சி கொடுத்தாலும் விளக்கை ஏற்றும் பொழுது உங்களுடைய அக விளக்கையும் ஏற்றுகின்றீர்கள். அகத்திலே இருக்கின்ற இருட்டை விரட்டி விடுகின்றீர்கள்

இதைத்தான், அகப்பை சித்தர் எவ்வாறு கூறினாரென்றால், அகமே முகம்' என்று வேறொரு பழமொழி எவ்வாறு விளக்குகின்றது என்றால், அகத்திணை அழகு முகத்தில் தெரியும்" என்று. நாம் படும் துயரங்கள் அனைத்திற்கும் இரண்டே இரண்டுதான் காரணம் என்று நீங்கள் உள்வாங்க வேண்டும். ஒன்று நவக்கிரகங்கள் தொடர்ந்து நம்மை வற்புறுத்தி நம் கர்மாவை கட்டாயம் ஏற்கும்படி செய்வது, இரண்டு நம் மறைந்த முன்னோர்கள், அவர்களுடைய அமரலோகத்திலிருந்து அவர்களுக்கான உணவை பெறாத நிலையில் இருந்து கஷ்டப்படும்பொழுது, கண்ணீர் சிந்தும் போது, அதாவது அந்த பித்ரு வழிபாடு முறையாக செய்யும்போதுதான், இரண்டும் இரண்டு பக்கத்திலிருந்து மனிதனை பாதிக்கச்செய்கின்றது என்பதுதான் ஜோதிட உண்மை என்பதை உள்வாங்குங்கள். அதை மனதில் நன்கு பதியம் போட்டு கொள்ளுங்கள் அப்பொழுதுதான் உங்களின் உண்மை நிலை என்னவென்று உங்களுக்கு தெரியவரும் என்று கூறி இப்பகுதியை இனிதே பூர்த்தி செய்கின்றோம்

No comments:

Post a Comment