Friday, July 17, 2020

புலிப்பாணி சித்தரின் வழிபாடு

உங்களுக்காக

ஸ்ரீ புலிப்பாணி சித்தர் தியானச்செய்யுள்

மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச்

சித்தர்

புலி வாகனம் கொண்ட மந்திர சித்தரே மயில் வாகனனை வணங்கியவரே எம் கலிப்பாவம் தீர்க்க உங்கள் புலி பாதம் பற்றினேன்.

சித்தர் வரலாறு

சீனதேசத்திலே ஜனனம் செய்த

"புலிப்பாணி சித்தர் மகா போகர் சித்தரின் முதல் மாணிக்கனார்.

காட்டில் ஒரு நாள் போகர் சுவாமிகள் தண்ணீர் கேட்டவுடன், புலிமேல் ஏறிச்சென்று, வெறும் கையினாலேயே தண்ணீரைத்திரட்டி குருவின் தாகத்தைத் தனித்திருக்கிறேன்.

புலியின் மேல் தண்ணீர் (இந்தியில்- பாணி) கொண்டு வந்ததால், புலிப்பாணி சித்தர் என்ற காரணப்பெயரும் இவருக்கு உண்டு

பழனியாண்டவரின் நவபாஷாண திருவுருவத்தை போகர் வடித்தாலும் அதற்குண்டான மூலிகைகளை காடுமேடு கடந்து கொண்டு வந்த பெருமை புலிப்பாணி பெருமானையே சேரும் காயசித்திகளுக்குக் காப்பிடமாய் இரசவாதத்திற்கு உறைவிடமாய், நோய் தீர்க்கும் வேதியனாய் இருந்த புலிப்பாணி சித்தர். ஒருமுறை சீன தேசத்திலே மயங்கிக் கிடந்த தன் குருநாதர் மகாபோகரை வானமார்க்கமாக முதுகிலேயே சுமந்து வந்து பழனி முருகனிடம் கொண்டு சேர்த்தார். அதுமட்டுமல்ல, இவர் வைத்தியத்திலும், ஜாலங்கள் புரிவதிலும் குருவையே மிஞ்சியவராகக் கருதப்படுகின்றார்.

இறுதிவரை தன் குருநாதருடன் இருந்த ஒரே சீடரும் அவர்தான்

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த புலிப்பாணி சித்தர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர், இவரை வணங்குவதால், ஜாதகத்தில் 1247812 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். இதன் மூலமாக நிலத்தகராறு, சகோதர

சகோதரிகளுக்குள் உட்பூசல்கள் ஏற்பட வாய்ப்புண்டு, இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்க்கண்ட பலன்கள் நமக்குக் கிடைக்கும் நிலைத்தகராறு, சொத்துத்தகராறு வழக்குகள் அகன்று வெற்றி கிடைக்கும். சொந்த வீடு, இல்லாதவர்களுக்கு அதை பெறும் யோகம் உண்டாகும். செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால் திருமணத் தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். பழனி ஸ்ரீ தண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும் அவரை அரளிப்பூ மாலையிட்டு வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்

இவரை வழிபட நாம் செல்ல வேண்டிய இடம் தாம்பரம் மாடம்பாக்கம் "தேனு புரீஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகிலுள்ள "சித்தர் பீடமாகும்" இவரை வணங்க ஒரு செவ்வாயன்று சிவப்பு வஸ்திரம், வில்வம்,அல்லது சாமந்திப்பூ அல்லது அரளிப்பூ ஆகியவற்றைக் கொண்டும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறியும் அர்ச்சிக்க வேண்டும்

பதினாறு போற்றிகள்

கம்பீரமான தோற்றம் கொண்டவரே போற்றி தண்டபாணிப் பிரியரே போற்றி

ஞானவரம் கொடுப்பவரே போற்றி

வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி

சித்த மருத்துவத்தின் தலைவரே போற்றி

ராகு கிரகத்தை பூசிப்பவரே போற்றி

யந்திரங்கள் பிரதிஷ்டை செய்பவரே போற்றி

உலகம் முழுவதும் வாசம் செய்பவரே போற்றி

வனத்தில் வாசம் செய்பவரே போற்றி

தெய்வயானையின் புதல்வரே போற்றி சூலாயுதம் உடையவரே போற்றி மிருகங்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி எளிதில் மகிழ்ச்சி அடைபவரே போற்றி

முருகப் பெருமானை வழிபட்ட புலிப்பாணி சித்தர் சுவாமியே போற்றி போற்றி

இவ்வாறு பதினாறு போற்றிகளை கூறி அர்ச்சித்த பிறகு பின்வரும் மூமந்திரத்தை

ஓம் ஸ்ரீ புலிப்பாணி சித்தரே போற்றி

என்று 108 முறை ஜெபிக்க வேண்டும் பின்பு, நிவேதனமாக கமலா ஆரஞ்சு விதை நீக்கி உரித்து சுளையாய் வைக்க வேண்டும் அல்லது தக்காளியை விதை எடுத்துவிட்டு உப்புதூவி வைக்க வேண்டும்

அல்லது தயிர் சாதத்தை தாளிக்காமல், உப்பில்லாமலும் வைத்து படைக்க அவரின் அருள் பரிபூரணமாகக் கிடைக்குமென்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment