Sunday, July 12, 2020

இடைக்காட்டு சித்தரின் வழிபாடு

அன்பர்களே இன்று நாம் காணவிருப்பது,

"இடைக்காட்டுச் சித்தர்" பற்றியாகும். சித்தர் வரிசையிலே அதாவது கடுவேலி சித்தர், சிவபாக்கிய சித்தர், மகா போகர் சித்தர் போன்றவர்களின் வரிசையிலே இடைக்காட்டுச்சித்தரும் ஒருவராவார்

இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள இடைக்காடு என்ற ஊரிலே திருமாலின் அவதாரமாக கருதப்படுகிறார்.

இந்த இடைக்காட்டுச்சித்தர் ஒருமுறை சித்தர் ஒருவரிடம் ஞான உபதேசம் பெற்றதால் ஜோதிட ஞானம் அவருக்கு அற்புதமாக பெருகுகிறது. அதன் வாயிலாக சில வருடங்களுக்குப் பிறகு, அந்த ஊரிலே கடும் பஞ்சம் ஏற்பட்டு அனைத்தும் முடியப்போகிறது. வறட்சியும் நிலவப்போகிறது, வறுமை தொடரப்போகிறது. போராட்டம் ஆரம்பிக்கப்போகிறது என்று நினைத்த சித்தர் மக்களிடம் உபதேசம் செய்தார்

அவர்கள் அவரின் சொல்லை அலட்சியம் செய்தார்.

அதனால் சித்தர் நவதான்யங்களைக்கொண்டு ஒரு வீட்டை அமைத்தார் ஆடுகளுக்கு எருக்கந்தழையை உண்ண அளித்தார்

அவர் எதிர்பார்த்தபடியே அந்த ஊரிலே கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது, தண்ணீர் வரவில்லை . மக்கள் மடிந்தனர், பல உயிர்களும் நாசமாயின, ஊரே மயானமாக காட்சியளித்தது.

இடைக்காட்டுச் சித்தர் மட்டும் அற்புதமான நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதை கண்ட நவக்கிரக நாயகர்கள் அதிர்ந்தார்கள். உண்மை நிலை அறிய நிலவுலகத்திற்கு இறங்கி அவரின் வீட்டை நோக்கி வந்து, அவரிடம்

ஐயா, தாங்கள் மட்டும் எப்படி தனியாக வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள், என்று கேட்க விஷ்ணுபகவானின் அவதாரமாக இருக்கின்ற "இடைக்காட்டுச் சித்தருக்கு"

தெளிவானது வந்திருப்பது நவக்கிரக நாயகர்கள் என்று. அவர்களுக்கு ஆட்டின் பாலைக் கொடுத்து, அந்த தான்யத்தால் கட்டிய வீட்டிலிருந்து சிறிது தான்யத்தை எடுத்து, களி மாவு கொடுத்தார். அதை உண்ட சிறிது நேரத்தில்

"நவக்கிரகங்களும்" உறங்க ஆரம்பித்துவிட்டனர்.

இடைக்காட்டுச் சித்தர் பார்த்தால் அருமையான தருணம் யாருக்கும் கிடைக்காத ஒரு பேறு, அவர்களை அழகான இடத்திலே வைத்து அடைத்து , அந்த ஜாதகத்தை மாற்றி எழுதினார். உடனே வானம் பெருமழையை பொழிந்தது ஏரிகளும், ஆறுகளும் நிரம்பின. வசந்தம் திரும்பியது, வளம் பெருகியது

அனைவரும் இவரைக்கண்டு அதிர்ந்தார்கள். நவக்கிரக நாயகர்கள் இவர்கேட்ட வரங்களை அளித்து மறைந்தார்கள்.

இப்படி மகிமை பொருந்திய இடைக்காட்டுச்சித்தரை வணங்குவதால் ஏற்படும் பலன்மிக அற்புதமானது.

அதாவது, புதன் ஒரு ஜாதகத்தில் மங்கிப்போனால, நாமும் வாழ்க்கையில் மங்கிவிடும், மறைந்துவிடும், ஞான சூன்யமாகிவிடுவோம். கல்வியில் தொழிலில், சிறந்து விளங்கவும் அரசாங்க தொல்லையிலிருந்து விடுபடவும் இவரை வணங்கலாம். புதன் தோஷத்தால் குழந்தை வரம் இல்லாதவர்கள் இடைக்காட்டுச்சித்தரை வணங்கலாம்.

இடைக்காட்டுச்சித்தரை வணங்க புதனன்று பச்சை வஸ்திரம்,துளசியும் மல்லிகைமலரும் எடுத்து மாடம்ப்பாக்கத்திற்கு சென்று இவரை வணங்கினால் கேட்ட வரம் கிடைக்கும்.

அதன் மூலம் வளமான வாழ்வை இனிதே வாழுங்கள் என்று கூறி இனிதே இப்பகுதியை பூர்த்தி செய்கிறோம்

No comments:

Post a Comment