Thursday, July 9, 2020

கஞ்சமலை சித்தரின் வழிபாடு

ஸ்ரீ கஞ்சமலை சித்தர் தியானச்செய்யுள்

அப்பா என்று அடிதுவங்கி

அழைத்தவருக்கு தப்பாமல் அருள்தரும் தெய்வ சிகாமணியே எப்பாவமும் புரியாமல் உங்கள் திருப்பாதம் பற்றினோம் அஞ்சேல் என்று அபயம் அளிப்பாய் கஞ்சமலை சாமியோ

மலைகளிலே பிறந்து, மலைகுகைகளில் வாழ்ந்தவராக, இந்த சித்தர் பேசப்படுகின்றார். இவர் ஆகாய மார்க்கமாக அவனியை வலம் வந்தவர்.

மூலிகைகளையே ஆடைகளாய் அணிந்து மருத்துவ சீலர். மிருகங்களிடமும், பறவைகளிடமும் பாசமாய் பழகியவர்.

ஒடித்திரியுங்கருத்து -அதை ஓடாமற் கூட்டிப் பிடித்திருந்து நாபிக் கொண்டம்பைப்பொருத்து அந்த நாதாந்த வெட்ட வெளிக்குள்ளிருந்து.

என்ற இவரின் பாடல், சித்தர் தத்துவத்தின் சிறப்பை உறைக்கின்றது. இருப்பினும் இப்பெருமானின் வரலாறு தெளிவாக சொல்லப்படவில்லை. பெருமான் அவர்கள் தமிழகத்திலேயே சித்தி அடைந்ததாக கருதப்படுகின்றது.

இவரை வணங்க தாம்பரம் மாடம்பாக்கம்

"தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில்"

அருகிலுள்ள "சித்தர் பீடத்திற்கு"

வெள்ளிக்கிழமையன்று வெள்ளை வஸ்திரம், விபூதி, பச்சிலை, வெற்றிலை மாலை அணிவித்து பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறவேண்டும்

பதினாறு போற்றிகள்

மலையின் மைந்தரே போற்றி

வாசனை பிரியரே போற்றி

ஆகாயத்தில் சஞ்சரிப்பவரே போற்றி

கருவின் உருவே போற்றி

தாம்பூல பிரியரே போற்றி

வணங்கப்படுபவரே போற்றி

மூலிகைகளால் வணங்கப்படுபவரே போற்றி

முக்தி அளிக்கும் சித்தரே போற்றி

காமக்ரோதத்தை வென்றவரே போற்றி

ஓம் க்லம் பீஜாட்சரம் உடையவரே போற்றி

மதுப்பிரியரே போற்றி

ஸ்ரீதேவியின் மைந்தரே போற்றி

மலைகுகைகளில் வசிப்பவரே போற்றி

தங்க மேனியே போற்றி

மூலிகை ஆடை அணிபவரே போற்றி

சஞ்சாரம் செய்யும் ஸ்ரீ கஞ்சமலை சித்தர் ஸ்வாமியே போற்றி போற்றி

என்று கூறி அர்ச்சித்த பின்பு பின்வரும் மூலமந்திரத்தை "ஓம் க்லம் ஸ்ரீ கஞ்சமலை சித்தர் ஸ்வாமியே போற்றி

என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்

பின்பு நிவேதனமாக தேன் கலந்த வெற்றிலைச் சாறை வைக்க வேண்டும்.

(வெற்றிலையை வாட்டி சிறிதளவு, நீர் சேர்த்து கசக்கி சாறு எடுத்து தேன் கலக்க வேண்டும்) பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகிக் கூறி இறுதியில் நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்

ஸ்ரீ கஞ்சமலை சித்தர் சுக்கிர தோஷத்தைத் தகர்ப்பவர். இவர் நவக்கிரகங்களில் சுக்கிரகிரகத்தை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால், ஜாதகத்தில் உள்ள சுக்கிர தோஷம் அகலும் சுக்கிர கிரகத்தினால் ஏற்படக்கூடிய களத்திர தோஷம், தி ண தடை நீங்கி திருமணம் இனிதே நடக்கும் கணவன்-மனைவியிடையே உள்ள ஊடல் பூசல் நீங்கி ஒற்றுமை பெருகும் பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் அகலும்

மாமியார்-மருமகள், மருமகள்- மாமியார் பிரச்சினைகள் நீங்கும்

தவறு செய்யாமலேயே கெட்ட பெயர் ஏற்படும் நிலை மாறும்

உடலில் மர்மஸ்தானம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அகலும்

மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

வாகன வசதி வந்து சேரும்

அதுமட்டுமின்றி இவரை மனமுருக வேண்டுவதால் மேலும் பல நன்மைகளைப் பெறலாம் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறேன்.
Watch daily rasi palan and parigaramum palangalum at my you tube,  Dr.srikumar jothidam, for appointment call 9962081424 and whatsapp no 9176828958.

No comments:

Post a Comment