Wednesday, July 22, 2020

அறிவோம் ஆன்மீகம்

🙏 *அறிவோம் ஆன்மீகம் ........ !!* 🙏

🌚1) கருப்பு எள் கொண்டு வசிக்குமிடத்தில் ஹோமம் நடத்தக் கூடாது !! 

💧2) ஈரத்துணியை உடுத்திய நிலையில் வழிபாடு செய்யவோ , உணவு உண்ணவோ கூடாது !! 

👣3) கால்களை மடித்து அமர்ந்த நிலையில் , இடது கையை தரையில் ஊன்றியபடி உணவு உண்ணக் கூடாது !! 

💩4) திருவிழாவில் பவனி வரும் தேரின் வடக்கயிற்றை கால்களால் மிதிக்கவோ , தாண்டிச் செல்லவோ கூடாது !! 

🔥5) பூஜை , ஹோமம் நடக்கும் போது யாகசாலையைவிட உயரமான இடத்தில் நாற்காலி போன்றவை பயன்படுத்தி அமர்வது கூடாது !! 

🏯6) கோவில் எல்லைக்குள் சுவாமியைத்தவிர மற்ற யாரையும் வணங்கக்கூடாது !! 

🐚7) மார்கழி மாதம் அதிகாலையில் வாசலில் கோலமிடாமலும் , வீட்டில் விளக்கு ஏற்றாமலும் , கோவிலுக்குச் செல்வது கூடாது !! 

🩸8) சனீஸ்வரர் தவிர பிற தெய்வங்களுக்கு கருப்பு நிற வேட்டி , புடவை சாத்தக்கூடாது !! 

🎗️9) வழிபாடு முடிந்ததும் , ஆலயத்தில் அமரும்போது , கோவிலிலுள்ள தெய்வங்களுக்கு , முதுகைக் காட்டியபடி அமர்தல கூடாது !! 

💦10) முந்தைய நாள் எடுத்த தீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் , நைவேத்யம் செய்யக்கூடாது !!

No comments:

Post a Comment