Thursday, July 23, 2020

பூஜை அறையில் என்னென்ன செய்ய வேண்டும்



வீட்டில் பூஜை அறையில்

தெய்வப் படங்களுடன்

மறைந்த மூதாதையர்

படத்தை சேர்க்காமல்

தனியாக வைத்து

வணங்கினால், சிறந்த

பலன் கிடைக்கும்

சனி பகவானுக்கு வீட்டில்

எள் விளக்கு ஏற்றக் கூடாது

ருத்ரம், சமகம்

போன்றவற்றை வீட்டில்

காலையில் தினமும் கேட்பது

நல்லது

நாம் வீட்டில் கடவுளை

வணங்கும்போது

நின்றவாறே தொழுதல்

குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில்

விளக்கேற்றக்கூடாது

தூங்குபவர்கள்

எழுந்த பிறகுதான்

விளக்கேற்ற வேண்டும்

தூங்குபவர்களின் தலைக்கு

நேராக தேங்காய் உடைக்கக்

கூடாது

பூஜையின் போது

விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்

பூஜை அறையில் வழிபாடு

முடிந்ததும் இடது நாசியில்

சுவாசம் இருக்கும்போது

பெண்கள் குங்குமம் இட்டுக்

கொண்டால் மாங்கல்ய

விருத்தி ஏற்படும்

பூஜை அறையில்

தெய்வப்படங்களை

வடக்குப் பார்த்து வைத்தால்

சாபமுண்டாகும்

விரத தினத்தில் தாம்பூலம்

தரித்தல், பகல் உறக்கம்,

தாம்பத்திய உறவு

சண்டையிடுதல் கூடாது

ஈர உடையுடன்

ஓராடையுடனும்

தலைகுடுமியை

முடியாமலும், தலையிலும்

தோளிலும் துணியை

போட்டுக் கொண்டோ

கட்டிக் கொண்டோ வழிபாடு

செய்யக் கூடாது

ஈர ஆடையுடன் வழிபட

நேருமானால் ஈர உடையை

ஓம் அஸ்த்ராய பட் என்ற

முறை கூறி உதறி

உடுத்தலாம்

சுப்ரபாதத்தை தினமும்

காலை வேளையில்

மட்டுமே கேட்க வேண்டும்

அவ்வாறு கேட்க முடியாத

நிலையில் மாலையில்

கேட்பது அவ்வளவு

உசிதமானதில்லை

எனப்படுகிறது

பகவானின் மந்திரத்தை

சொல்லி பிரார்த்திக்க

தெரிந்தவர்களுக்கு

எப்போதும் எல்லாமே

வெற்றிதான். காலையில்

விழித்தவுடன்

நாராயணனையும்

இரவு தூங்கு முன்

சிவபெருமானையும்

நினைக்க வேண்டும்

கஷ்டங்கள் நீங்க

நினைத்தது நடக்க எளிய

வழி தீபம் ஏற்றுவதுதான்

தீப ஒளி இருக்குமிடத்தில்

தெய்வ அனுக்கிரகம்

நிறைந்திருக்கும் வீட்டில்

எங்கெல்லாம் முடியுமோ

அங்கெல்லாம் தீபம் ஏற்றி

வைக்கலாம்

தீபத்தில் உள்ள

எண்ணெய் தான் எரிய

வேண்டுமே தவிர திரி

அல்ல, திரி எரிந்து

கருகாமல் பார்த்துக்

கொள்ள வேண்டும்

விளக்கை ஏற்றும்போது

வீட்டில் பின் வாசல்

இருந்தால் அதன் கதவை

சாத்தி விட வேண்டும்

காலையில் நின்று

கொண்டு செய்யும்

ஜெபத்தால் இரவில் செய்த

பாவமும், மாலையில்

உட்கார்ந்து கொண்டு

செய்யும் ஜெபத்தால்

பகலில் செய்த பாவமும்

தொலைகிறது

விளக்கு எரிந்து

கொண்டிருக்கும்

போது கைவிரலால்

எண்ணெயில் உள்ள

தூசியை எடுப்பதோ திரியை

தூண்டுதோ கூடாது

எரிந்து கொண்டிருக்கும்

தீபத்தை ஆண்கள்

அணைக்கக் கூடாது

உங்கள் தெய்வங்களை

வழிபடும் போது தையல்

உள்ள உடைகளை அணியக்

கூடாது,

No comments:

Post a Comment