Wednesday, July 1, 2020

கருவூரார் சித்தர் வழிபாடு

அன்பர்களே , இப்பகுதியில் "சித்தர்கள்"

பற்றிய சில தகவல்களைக் காண இருக்கிறோம். அதில் முக்கியமானவர்"

கருவூரார் சித்தர்" "கருவூர்" என்று சோழ நாட்டிலே ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரிலே "விஸ்வகர்மா" என்ற இனத்திலே உருவாக்கியவர்தான் இந்த "கருவூரார் சித்தர்". இந்த சித்த பெருமான் சோழ நாட்டு மன்னன் இரண்ய வர்மன்' என்பவருக்கு ஒரு சிலை செய்ய "போகர் முனிவரால் அனுப்பப்பட்டார்.

இரண்ய வர்மன் ஒரு நாள் ஆற்றிலே குளித்துக் கொண்டிருகின்றான். அந்த ஆற்றிலே குளித்துக் கொண்டிருக்கின்ற இரண்ய வர்மனுக்கு ஒரு அதிசய காட்சி தெரிகிறது. அந்தக் காட்சி "நடராஜர்

நடனமாடும் காட்சி. அக்காட்சியை அவன் ஓவியம் தீட்டி, அவ்வோவியத்தை "தங்க விக்கிரகமாக" வடிக்க பலரிடம் கொடுத்து முயற்சிக்கின்றான். ஆனால், மன்னன் எதிர்பார்த்த அந்த "தங்க விக்கிரகம்"

வரவில்லை . மன்னன் மிகவும் மனம் வருந்திக் கொண்டிருக்கும்போது, அவனின் எதிரே " போகர் " காட்சியளித்து , மன்னனிடம் குறையைத் தீர்ப்பதாக கூறினார். பிறகுதான் அச்சோழ மன்னன் சமாதானமடைந்தாள்.

அவன் எதிர்பார்த்த ஒரு நாளிலே

"கருவூரார்" வந்தார். "நடராஜரின், தங்க விக்ரகம்” செய்வதற்கான தங்கத்தை மன்னன், கருவூராரிடம் அளித்தார். குறுகிய காலத்தில் விக்ரகத்தை கருவூரார் வடித்து மன்னனிடம் அளித்தார். இருந்தும் மன்னனுக்கு மன நிறைவு ஏற்படவில்லை.

கடும் கோபம் அடைந்த மன்னன் கருவூராரிடம் செப்பை அதிகமாக கலந்து தங்க விக்ரகத்தையே பாழ்படுத்தி விட்டதாகக் கூறி, கருவூராரை சிறையிலடைத்தான். அதன் விளைவாக

"போகர்" அங்கே தோன்றி, கோபத்துடன்,

மட மன்னனே" உனக்கு தெரியாது?

சுத்தமான தங்கத்தால் செய்த அந்த விக்ரகம், பிறரது கண்ணை பொசுக்கி விடுமென்று, இதுகூட தெரியாத உன்னிடம் போய் கருவூராரை ஒப்படைதேனே என்று கூறி தண்டனை வழங்கும்போது மன்னன் தன் தவறையுணர்ந்தான். அதன் பிறகு அந்த விக்ரகத்தை மன்னனிடம் கொடுத்து கருவூராரை போகர் அழைத்துச் சென்றார்

இப்படிப்பட்ட "கருவூரார் சித்தர்"

வணங்குவதால் யார்யாரெல்லாம் சனி திசையில் இருக்கிறார்களோ சந்தோஷமாக இருப்பார்கள். "ஏழரை சனி, "சப்தம சனி",

அஷ்டமத்து சனி ஆகியவற்றின் தொல்லைகள் இவரை வணங்குவதால் அணுகவே, அணுகாது. மேலும், வாகன விபத்துக்கள் இவரை வணங்குவதால் ஏற்படாது. சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு,

"குழந்தை பேரை" இவர் அளிப்பார். மேலும் கர்பப்பை நோய், சனியின் பீடிப்பால் பாதிக்கப்பட்டவர்க்களுக்கு வந்தால் அதற்கான நிவாரணத்தை இந்த கருவூரார் சித்தரை வணங்குவதன் மூலம் நாம் பெறலாம்

மேலும்:பிரம்மஹத்தி" தோஷத்தை ரீரவார் கல்வியில் சித்தரை வணங்குவதன் மூலம் நாம் பெறலாம்

மேலும், பிரம்மஹத்தி" தோஷத்தை நீக்குவார். கல்வியில் மந்தபுத்தியுள்ளவர்கள் "கருவூரார் சித்தர்"

வணங்கி வரும்பொழுது அவர்கள் சுபிட்சமடைவார்கள். இரும்பு தொழில் விவசாயத்தொழில் போன்ற தொழில்களில் இருப்பவர்கள், கருவூராரை வணங்கும்போது நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இப்படிப்பட்ட "கருவூரார் சித்தரை" வணங்க சனியன்று

"மாடம்பாக்கம் சென்று வணங்கி வர அனைவரும் நலம் பெறலாம். என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்.

No comments:

Post a Comment