Monday, July 20, 2020

புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் வரலாறு

*புதுக்கோட்டை* 
*நார்த்தமலை முத்துமாரியம்மன் கோயில் பற்றிய வரலாற்று பகுதியைப் பார்ப்போம்* 
நன்றி🙏
அன்புடன் கார்த்திகேயன்தெட்சணமுர்த்தி* 

 🌿🌹🌿 முத்துமாரியம்மன் கோயில், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.  கிழக்குப் பார்த்தபடி, ஐந்து நிலை  ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைப்பை கொண்டுள்ளது இத்திருத்தலம்.  மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து சென்றால்  கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் கனிவுடன் அருள்பாலிக்கிறாள் முத்துமாரியம்மன்.  கட்கம், கபாலம், டமருகம் மற்றும்  சக்திஹஸ்தம் கொண்டு நான்கு கரங்களுடன் அரவணைத்துக் காக்கிறாள் அம்மன்.    

🌿🌹நார்த்தாமலையில் இருந்து 4 கல் தொலைவில் உள்ளது கீழக்குறிச்சி என்னும் கிராமம்.  இந்த ஊரில் வாழ்ந்து வந்த குருக்கள்  ஒருவர், வயலுக்கு நடுவே உள்ள ஒத்தையடிப் பாதையில் தினமும் நடந்து செல்லும் போது குறிப்பிட்ட ஓரிடத்தில் ஏதோ ஒன்று  காலில் இடருவதும் இதில் அவர் விழுவதுமாகவே இருந்து வந்தது.  இதனால் வயல்களில் வேலை செய்து  கொண்டிருந்தவர்களின் உதவியுடன், அந்த இடத்தைத் தோண்டினார் குருக்கள்.  அந்த இடத்தில் அழகிய அம்மன் சிலை ஒன்று  தென்பட்டது.  உடனே ஒரு அசரீரி குரல் கேட்டது “அருகில் உள்ள மலையடிவாரத்தில், சிவனார் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு அருகிலேயே எனக்கு கோயில் எழுப்பி வழிபடுங்கள்.  சுற்றியுள்ள ஊர் மக்களை எந்த நோய் நொடியும் தாக்காமல் நான்  காப்பாற்றுகிறேன்” என்றது அந்த குரல்.
அதன்படி நார்த்தாமலையின் அடிவாரத்தில் சின்னதாக கோயில் எழுப்பி, அம்மனின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர்.   இதையடுத்து அம்மை முதலான எந்த நோய்களும் இன்றி மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததால், அம்மனுக்கு முத்துமாரி என்று  பெயர் வந்ததாகச் சொல்கின்றனர்,        

🌿🌹 பெருமைமிக்க நார்த்தாமலையில் குடி கொண்டிருக்கும் முத்துமாரியம்மன், சக்தி  மிக்க திருத்தலமாகப் புகழ் பெற்றதற்கு மலையம்மாள் என்ற பெண் காரணம், அப்பெண்மணியை பற்றி  பார்ப்போம்,வேட்ட வலம் என்னும் ஊர் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது.  வேட்ட வலம் ஊரின் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவள்  தான் மலையம்மாள்.  சிறு வயதில் மலையம்மாளை அம்மை நோய் கடுமையாகத் தாக்கியதால் ஜமீன்தார், மலையம்மாளைத்  தூக்கிக் கொண்டு நார்த்தாமலை மாரியம்மன் கோயில் வாசலில் விட்டுச் சென்றுவிட்டார்.  அம்மை நோயால் தகிக்கும்  வெப்பத்தில் தவித்த சிறுமியின் குரல் கேட்டு, கண் திறந்த முத்துமாரியம்மன், மலையம்மாளுக்கு அருள்புரிந்ததால் உடல்  முழுவதும் பரவியிருந்த முத்துகள் அந்த நிமிடமே சுவடு தெரியாமல் மறைந்து விட்டது.மலையம்மாள், கோயிலை சுத்தப் படுத்துவதும், அம்மனுக்கு முன்னே அமர்ந்து தவம் இருப்பதும் என இங்கேயே வாழ்ந்து  உள்ளார். முத்துமாரியம்மன் தன் பூரண அருளை மலையம்மாளுக்கு வழங்கினாள். இதன் பின்பு குறைகளும் கவலைகளுமாக  கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தாள் மலையம்மாள்! அவளது அருள்வாக்கு பலித்தது;  முத்துமாரியம்மனை வணங்கி, மலையம்மாளிடம் அருள்வாக்கு பெறுவதற்காக பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். மலையம்மாள் கோயிலை விரிவுபடுத்தி எழுப்பினாள்.  பிறகு பிரசித்தி பெற்ற தலமானது நார்த்தாமலை.கோயிலுக்கு சற்று  அருகில் உள்ளது மலையம்மாள் சமாதி! ஆண்டு தோறும் வேட்டவலத்தில் வசித்து வரும் ஒரு பிரிவினர், இங்கு வந்து  மலையம்மாளுக்கு பலியிட்டு, பூஜை செய்து வழிபடுகின்றனர்.

🌿🌹தீர்த்தம் : ஆகாச ஊரணி, தலவர் சிங்கம், தளும்பு சுனை, பாழுதுபடா சுனை, (சுனை என்பது மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் உற்று நிலை).

தலவிருட்சம் :              🌿வேம்பு🌿.

🌿🌹நார்த்தாமலையில் அமைந்துள்ள ஆலயத்தில் அமர்ந்தபடி அத்தனை வளங்களையும் தந்தருள்கிறாள்  முத்துமாரியம்மன்.  ஊரின் பெயர் நார்த்தாமலை என்பதால் இத்தலத்து அம்மன் நார்த்தாமலை முத்துமாரியம்மன் எனப் பெயர்  பெற்றாள்.     

  🌿🌹தேவரிஷியான நாரத மாமுனி இங்குள்ள மலையில் தவம் செய்ததால் நாரதமலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில்  நார்த்தாமலை என மருவியதாக பெருங்களூர் ஸ்தல புராணம் விவரிக்கிறது.

🌿🌹இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மலைகள் மேலமலை, கோட்டைமலை, கடம்பர்மலை, பறையர்மலை, உவக்கன்மலை,  ஆளுருட்டிமலை, பொம்மாடிமலை, பொன்மலை, மண்மலை என எண்பதுக்கும் மேற்பட்ட சிறிய குன்றுகள் உள்ளன.  இவை  அனைத்தும் இலங்கையில் இராமன் – இராவணன் நடத்திய போரின் போது மாண்ட வீரர்களை உயிர்ப்பிக்க வடக்கிலிருந்து  சஞ்சீவி மலையை வாயு புத்திரனாகிய அனுமான் அடியோடு பெயர்த்து வான் வழியே மலையைத் தூக்கி வரும் போது  அம்மலையிலிருந்து சிதறி விழுந்த சிறு துகள்கள்தான் நார்த்தாமலையில் குன்றுகளாக, மலைகளாக உள்ளது. 

🌿🌹 இந்த மலைப்  பகுதிகளில் அரிய மூலிகைகள் பலவும் இப்போதும் உள்ளது என்றும் சொல்கின்றனர்.

  🌿🌹இத்தலத்தில் முத்துமாரியம்மன் சன்னதியில் வடபுறத்து சுவற்றில் கல்லிலான முருகன் எந்திரம் பதிக்கப்பட்டிருக்கிறது.  இதில் மிகவும் அற்புதமான சக்தி உள்ளது ,முருகப் பெருமானுக்கே உரிய சக்தி ஹஸ்தத்துடன் காட்சி தருவதால், பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு காவடி  எடுத்தும் வழிபடுகின்றனர். 

🌿🌹புதுக்கோட்டை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இந்தக் கோயிலில் பங்குனியின் இரண்டாம் ஞாயிறு பூச்சொரிதல் விழா; 3-ம்  ஞாயிறு அம்மனுக்கு காப்புக் கட்டுதல்; 4-ம் ஞாயிறு அன்று எட்டாம் நாள் திருவிழா; மறுநாள் திங்கட்கிழமை தேரோட்டம்;  பத்தாம் நாள் தீர்த்தவாரித் திருவிழா நடைபெறுகிறது.  பக்தர்கள் நார்த்தாமலையில் திரண்டு வந்து அம்மனின் அருள் பெற்றுச்  செல்கின்றனர்.     

  🌿🌹ஆடி வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.  அம்மை, திருமணத் தடை, பிள்ளை  வரம், தீராத நோய், ஓயாத கவலை என கண்ணீரும் கம்பலையுமாக தன்னை நாடி வருவோருக்கு, கருணையும் கனிவுமாக  அருள்பாலிக்கிறாள்,

🌿🌹 முகூர்த்த நாளில், கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.

🌿🌹மேலமலைகுச் செல்லும் வழியில் உள்ள தலையருவி சிங்கம் என்னும் சுனை (மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் உற்று  நிலை) ஒன்று உள்ளது.  இச்சுனையின் கிழே லிங்கம் ஒன்று உள்ளது, அப்பெருமானுக்கு ஜிரஹரேஸ்வரர் என்று பெயர்.  இச்சுனை நீரை இறைத்து பின் இப்பெருமானுக்கு வழிபாடு நடந்து வருகிறது. நாடி வரும் பக்தர்களின் குறை தீர்த்து,                     

   🌿🌹நலத்தை  அள்ளித் தருபவள்.  இந்த முத்துமாரி அம்மன் என்றும், அவள் அருளால் தான் புதுக்கோட்டை மாவட்டமே செழிப்பாக இருக்கிறது ,அம்மைநோய் கண்டவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் கரும்பு தொட்டில் கட்டி  வேண்டினால் பலன் உண்டு என்பது நம்பிக்கை.    

🌹🌿காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை. *புதுக்கோட்டை மாவட்டம்*

No comments:

Post a Comment