Saturday, August 29, 2020

தியானத்தின் பலன்கள்

#தியானத்தின்_பலன்கள்;-


1) வியாதிகளிலிருந்து நிவாரணம்

2) வியாதி வராமல் தடுக்கும் சக்தி பெருகி, நிரந்தர ஆரோக்கியம் பெறுதல்.

3) தேவையற்ற பழக்க வழக்கங்கள் மடிந்து மறைதல்

4) மனம் எப்பொழுதும், அமைதியான, ஆனந்த நிலையில் இருத்தல்

5) மற்றவருடன் தோழமை, நட்பு வளர்ந்து, செம்மைப்படுதல்.

6) எண்ணிய எண்ணம் வலுப்பெற்று, நிறைவேறுதல்.

7) ஞாபக சக்தி அதிகரிப்பு.

8) இந்த வாழ்க்கையின் இலட்சியத்தை குறிக்கோளை - தெள்ளத் தெளிவாக அறிதல்.

9) வேலைத்திறன் கூடுதல், மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்தல்.

10) மேலுலக குருமார்களுடன், தியானத்தில் தொடர்பு கொண்டு, அவர்கள் அறிவுரைப்படி தீராத பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.

11) சூட்சும சரீர யாத்திரை, வருமுன் கண்டறிதல் இன்னும் பற்பல தியான அனுபவங்கள் ஏற்பட்டு தன்னையறிந்து, முக்தி பெறுதல்.

12) முன் ஜன்மங்களை தியானத்தில்கண்டறிதல்.

13) எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் (awareness) செயல்படல்.

#மாணவ_மாணவியருக்கு:-

1) உடல் ஆரோக்கியம் அடையும்.

2) தேவையற்ற பழக்கங்கள் மடிந்துமறையும்.

3) பாடத்தில், கூடுதல் கவனம் ஏற்படும்.

4) ஞாபக சக்தி வளரும்.

5) எல்லோருடனும் சுமூக உறவு ஏற்பட்டு செம்மை பெறும்.

6) உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் கலைத்திறமை, மற்றும் பற்பல திறமைகளை கண்டறிந்து, வளரச் செய்ய இயலும்.

7) பயம், போன்ற தேவையற்ற உணர்ச்சிகள் நம்மைவிட்டு அகலும். தன்மைபிக்கை பன்மடங்காகும்.

8) உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாமல் மனம், குதூகலம், அமைதி, திருப்தி அடையும்.

9) மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும்.

10) நஷ்டங்களை மற்றும் தோல்விகளைக் கண்டு தளராத மனவலிமை ஏற்படும்.

11) அளவான தூக்கம் மற்றும் பேச்சு உண்டாகும். தேவைக்கதிகமான தூக்கத்திலும், பேச்சிலும், நேரம் வீண் போகாது.

12) சூட்சுமமானவற்றையும் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு வளரும்.

13) தேர்ந்தெடுக்கும் திறன் (Power of choice) எண்ணத்தின் வலிமை (thought power) இவை உண்டாகும் .

#கர்ப்பணிபெண்களுக்கு - தியானம் மிக மிக அவசியம்.

1) தாய், சேய் நலம் உண்டாகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராகும்.

2) மன வலிமை, மன அமைதி ஏற்படும்.

3) பயம் அகன்று, தைரியம் உண்டாகும்.

4) சுகப் பிரசவம் உண்டாகும். பழைய ஆரோக்கிய நிலைக்கு உடனடியாகத் திரும்பலாம்.

5) குழந்தைக்கு ஆன்மீக நெறியான அடிப்படை பாடம், பிறக்கும் முன்பே உருவாகி, வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும்.

No comments:

Post a Comment