Wednesday, August 19, 2020

கடன் தொல்லையை நீக்கும் தாந்த்ரீக பரிகாரம்

கடன் தொல்லை தீர்க்கும் தாந்திரீக பரிகாரம்!!

இன்றைய காலக்கட்டத்தில் நாம் கடன் வாங்குவது சில நேரங்களில் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. அதை திருப்பி அடைக்க முடியாமல் பலர் தற்போது உள்ள கால சூழலில்  திணறுகின்றனர்.

பொதுவாகவே கடன் தொல்லை தீர வேண்டும் என்று எண்ணுபவர்கள் அதனை ஒரு நல்ல நாள் பார்த்து கடனை திருப்பி செலுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கடன் தொல்லை நிறந்திரமாக தீரும் என்பது ஐதீகம்.

இதனை சரிசெய்ய வியாழக்கிழமை இரவு அருகே உள்ள ஏதேனும் அம்மன் ஆலயம் சென்று இரவு பூஜை நடக்கையில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு அங்கு தரும் குங்மத்தை எடுத்து வந்து மறு நாள் வெள்ளிக்கிழமை காலை சூரிய உதயத்திற்கு முன்பு குளிக்கும் நீரில் கலந்து குளித்து விட்டு காலை அதே ஆலயம் சென்று காலை பூஜை நடக்கையில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 11 வாரம் செய்து வர எவ்வளவு பெரிய கடன் தொல்லையாக இருந்தாலும் நீங்கிவிடும்.

No comments:

Post a Comment