Tuesday, August 4, 2020

கிழமைகளும் குணங்களும்

திங்கள்.:
சோம்பேறியாகத் திரியும் பிறவி எடுக்க மாட்டார்கள்.சுறுசுறுப்பாக இருப்பார்கள்.கோவில் கட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கும்;

செவ்வாய்.:
அரசாங்க வேலை கிடைக்கும். சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், மாநில அரசின் மந்திரி அல்லது மத்திய அரசின் மந்திரி பதவி கிடைக்கும்;(இப்பிறவியில் இப்பதவிகளில் இருப்பவர்கள் கடந்த ஐந்து பிறவிகளாக தொடர்ந்து இந்தக் கிழமையில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தவர்களே!!!).

புதன்.:
திருமாலை பார்த்த பலன் கிட்டும்; அதாவது, திருமால் சங்கு சக்கரத்துடன் சாம கானம் ஓத, காட்சி அளித்து ஆசி கொடுப்பார்;

வியாழன்.:
குரு கிட்டுவார்; குருவுடன் சேர்ந்து திருப்பணி செய்ய வாய்ப்பு கிட்டும். சித்தர்கள் அனைவரும் ஆசி கூறுவார்கள்.

வெள்ளி.:
ஆத்மவிசாரம் செய்வார்கள். தான் யார் என்பதை உணர வெள்ளிக்கிழமைகளில் வரும் சிவராத்திரியன்று பூஜை+விரதம் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமையும் சிவராத்திரியும் வரும் இரவில் தனியாக அண்ணாமலை கிரிவலம் வந்தால் ஆத்மவிசாரம்(நான் யார்? என்பதற்கான விடை) கிட்டும்.

சனி.:
சனிபகவானால் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும். சனிக்கிழமையன்று வரும் சிவராத்திரி விரதம்+பூஜை செய்தால் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனியால் வரும் துயரம் சிறிதும் வராது;நெருங்காது;

ஞாயிறு.: 
சூரியதேவனாகப் பிறக்கலாம்;சூரியப் பதவி கிடைப்பது என்பது மிகவும் அரிதிலும் அரிதான அதிசயம்.

No comments:

Post a Comment