Monday, November 16, 2020

பூஜைக்கு மயங்குவாரா கடவுள்?

*பூஜைக்கு கடவுள் மயங்குவாரா*

* கடவுளை வணங்க வெறும் பூஜை முறைகள் பயனில்லை. முதலில் மனதை சுத்தமாக்குங்கள். துாய்மையான மனதை நோக்கி கடவுளே ஓடி வருவார். 

* பணத்திற்காக ஏங்கித் தவிக்கிறோம். ஆனால், கடவுளுக்காக நாம் யாரும் அழத் தயாராயில்லை. கடவுளை அடைய வேண்டும் என்ற ஏக்கம் மனதில் பிறந்துவிட்டால், கடவுள் காட்சியை நாம் தெளிவாக காண முடியும்.

* மனிதனுக்கு, தான் விரும்பும் பொருள்களில் உள்ள பற்று, தாய்க்கு தன் குழந்தையிடம் உள்ள பாசம், கணவனிடம் மனைவி கொள்ளும் காதல் ஆகியன மிக ஆழமானவையாகும். இம்மூன்று கவர்ச்சிகளும் ஒருங்கே அமையுமானால், அந்தமன ஆற்றலே அவனை கடவுளிடத்தில் சேர்க்கும்.

* கண்ணாடியில் அழுக்கு படிந்திருந்தால் உருவம் தெரியாது. அதுபோல, மனதில் அழுக்கு படிந்திருந்தால் கடவுள் நமக்கு தெரிய மாட்டார்.

* கடவுளால் தான் எல்லாம் நடக்கிறது என்ற எண்ணம் வரும் வரையில், மனிதனுக்கு பிறவிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

* கடவுள் மனிதனின் மனதில் தங்கியிருக்கிறார். அந்த விடுதியை பத்திரப்படுத்திக் கொள்வது தான், மனிதனின் தலையாய கடமை.

No comments:

Post a Comment