Monday, October 5, 2020

தானங்களும் அதன் பலன்களும்

*_தானங்களும் அதன் பலன்களும்_* 

*அன்ன தானம்:* 

பூர்வ ஜன்ம கர்ம வினைகள் தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

 *ஆடை தானம்:* 

தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்புக்கு ரக்ஷையாக இருக்கும்.

 *காலணி தானம்:* 

பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்ரை செய்த பலன் கிடைக்கும்.

 *மாங்கல்ய தானம்:* 

காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும் .

 *குடை தானம்:* 

தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.

 *பாய் தானம்:* 

பெற்றவர்களை பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.

 *கோ (பசு மாடு) தானம்:* 

இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.

 *பழங்கள் தானம்:* 

பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் வ்ருத்தியாகும்.

 *காய்கறிகள் தானம்:* 

பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.

 *அரிசி தானம்:* 

பிறருக்கு ஒன்றுமே தராமல் தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும்.

 *எண்ணெய் தானம்:* 

நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.

 *புஷ்ப தானம்:* 

அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாகவும், சாந்தமாகவும் அமையும்.

No comments:

Post a Comment