Monday, October 19, 2020

ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்தின மந்திரம்

நவராத்திரி நாயகி திருமியச்சூர் லலிதாம்பிகை.

#ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை.

ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸ்த்குரோ சரணம் சரணம்
ஞான னந்தா சரணம் சரணம்
             காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தரனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவேனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக
காக்கும் கணநாயக வாரணமே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

        1 வைரம்
கற்றும் தெளியார் காடேகதியாய்க

கண்முடி நெடுங்கன வானதவம்

பெற்றும் தெளியார் நிலையென்னில் அவள்

பெருகும் பிழையேன் பேசத்தகுமோ

பற்றும் வயிரப்படைவாள் வயிரப்

பகைவர்க்கெமனாக எடுத்தவளே

வற்றாத அருட்சுனையே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

          2. நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்

முடியா முதலே சரணம் சரணம்

கோலக்கிளியே சரணம் சரணம்

குன்றாத ஒளிக்குவையே சரணம்

நீலத் திருமேனியிலே நினைவாய்

நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்

வாலைக்குமரீ வருவாய் வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

        3. முத்து
முத்தேவரும் முத்தொழிலாற்றிட வே

முன்னின் றருளும்முதல்வீ சரணம்

வித்தே விளைவே சரணம் சரணம்

வேதாந்த நிவாசினியே சரஙம்

தத்தேறிய நான் தனயன் தாய் நீ

சாகாத வரம் தருவே வருவாய்

மாத்தேறு ததிக்கிணை வாழ்வடையேன்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையை

         4.பவளம்
அந்தி மயங்கய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை

சிந்தை நிறம் பவளம் பொழிபாரோ

தேன் பொழிலாமீது செய்தவள் யாரோ

எந்தியிடத்தும் மனத்தும் இருப்பாள்

எண்ணுபவர்க்குள் எண்ணமிகுந்தாள்

மந்திரவேத மாயப்பொருளானாள்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

           5.மாணிக்கம்
காணக்கிடையாக் கதியானவளே

கருத்துக்கிடையாக் கலையானவளே

பூனையக்கிடையாப் புதுமைத்தவளே

நாணித்திரு நாமமும் நின்துதியும்

நாவிலாதவரை நாடாதவளே

மாணிக்க ஓளிக்கதிரே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

           6.மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்

மதுரிதபுதமே சரணம் சரணம்

சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்

சுதிஜதி லயமே இசையே சரணம்

அர ஹர சிவ என்றடியவர் குழம

அவரருள் பெற அருள்முதே சரணம்

வர நவநதியே சரணம் சரணம்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

           7. கோமேதகம்
பூமேவிய நான் புரியும் செயல்கள் 

பொன்றாது பயன் குன்றா வரமும்

தீ மேல் இடினும் ஜெய எனத்

திடமாய் அடியேன் மொழியும் திறமும்

கோமேதகமே குளிர்வான் நிலவே 

குழல் வாய் மொழியே வருவாய் தருவாய்

மாமேருவிலே வளர் கோகிலமே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

   8.பதுமராகம்(புஷ்பராகம்)
ரஞ்சனி நந்தினி அங்கணி பதம்

ராக விகாஸ வியாபினி அம்பா

சஞ்சல ரோக நிவாரணி வாணீ

சாம்பவி சந்தர கலாதரி ராணி

அஞ்சல மேனி அலங்க்ருத பூரணி

அம்ருத ஸொருபிணி நித்ய கல்யாணி

மஞ்சுளமேரு சிருங்க நிவாஸினி

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

              9.வைடூரியம்
வலையொத்த வினை கலையொத்த மனம்

மருள பாறயாறொலி  யொத்த வித்தால்

நிலையற் றொளியேன் முடியத்தகுமோ

நிகளம் துகளாக வரம் தருவாய்

அளவற் றசைவற் றநுபூதி பெறும்

அடிவார் முடிவாழ் வைடூரியமே

மலையத் துவசன் மகளே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

                பயன்
எவன் எத்தினமும் இசையாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவாரே

No comments:

Post a Comment