Friday, February 12, 2021

ஸ்ரீசக்கரத்தின் பரமரகசியம்.

மூன்றாவது கண்ணை திறக்கும் ஸ்ரீ சக்கரம் !
---------------------------------------------
-------------------------

 அன்னையின் திருவுருவத்தை சனாதனமான இந்து மதத்தின் சாக்த பிரிவு மூன்று நிலையாக வகைப்படுத்துகிறது. முதலில்
ஸ்தூல வடிவம் இரண்டாவது சூட்சம
வடிவம் மூன்றாவது காரண வடிவம்
என்பதாகும். ஸ்தூல வடிவம் என்பது பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் அம்பு
ஆகியவற்றை கொண்டு இடது பாதத்தை ஊன்றியும் வலது காலை மடித்தும் அமர்ந்திருக்கும் திருக்கோலமாகும். காரண வடிவம் என்பது ஸ்ரீ அன்னையின் மூல மந்திர ஒலிவடிவமாகும். சூட்சம வடிவம் என்பது
புகழ் பெற்ற ஸ்ரீ யந்திரம் என்ற ஸ்ரீ சக்ர
வடிவாகும் மோகினி ஹிருதயம் எனும் நூல் ஸ்ரீ சக்ர வடிவை பற்றி மிக எளிமையாகவும் தெளிவாகவும் பல விவரங்களை நமக்கு தெரிவிக்கிறது.

இந்த நூலை வாமகேஷ்வர தந்திரம் என்று வேறொரு பெயராலும் அழைக்கிறார்கள். இதில் தந்திர மார்க்கம் சார்ந்த உபாசன முறைகள்
விவரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்ரம் என்பது
பிரபஞ்சவெளியில் எங்கும் வியாபித்துள்ள பரம்பொருளின் தன்மையை ஒருமை பாட்டை விளக்குவதே ஆகும். இந்த விளக்கத்தை
ஒவ்வொரு மனிதனும் நன்கு விளங்கிகொள்ள ஒன்பது நிலைகளை கடந்து செல்ல வேண்டும். அதாவது மனிதனுக்கும் பிரம்மத்திற்கும் இடையில் ஒன்பது மறைப்புகள் உள்ளன இந்த மறைப்புகளை ஸ்ரீ சக்ர தத்துவம் ஒன்பது ஆவரணங்கள் என்று பெயரிட்டு
அழைக்கிறது. ஸ்ரீ சக்ரம் என்பது எல்லை
இல்லாத பிரபஞ்சத்தை குறிப்பதாகும்.
அண்டவெளிக்கு துவக்கமும் கிடையாது
முடிவும் கிடையாது அப்படி பட்ட
அண்டத்தின் ரகசியத்தை மனித அறிவால் எக்காலத்திலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.

அப்படி முடியாத விஷயத்தை அறிந்து கொள்ள அக்கால ரிஷிகளும் முனிவர்களும் முயற்சித்து கண்டறிந்த மெய்ஞான ரகசிய வடிவமே ஸ்ரீ சக்ரமாகும். இதை ஒரு பிரபஞ்ச கணித
கண்டுபிடிப்பு என்றும் சொல்லலாம் ஒரு
புள்ளிக்கு 360 பாகைகள் உண்டு ஒவ்வொரு தனித்தனி பாகையில் இருந்து புறப்படும்.

கோடுகள் பிரபஞ்சவெளியில் முடிவே
இல்லாமல் நீண்டு கொண்டே கொண்டே
செல்லும் அந்த கோடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் அதாவது புறப்பட்ட இடத்திலேயே வந்து சேர்வதால் வட்டமாகவோ கோளமாகவோ தோற்றம் அளிக்கும் அந்த வடிவத்தை இரண்டு பாகமாக பிளந்தால் 180 பாகைகள் கொண்ட அரைவட்டம் கிடைக்கும்.
நான்காக பகிர்ந்தால் ஒவ்வொரு பகுதிக்கும் 90 பாகைகள் பிரிந்து நான்கு துண்டுகளாக விரிவடையும். இப்போது அந்த தோற்றத்தை பார்த்தால் ஒரு கூட்டல் குறியை போல நம் கண்ணுக்கு தெரியும்.

இது தான் சிவ சக்தி ஐக்கியத்தின்
வெளிப்பாடாக அமையும். அது தான்
பிரபஞ்சத்தின் அக்ஷர வடிவாகும். இந்த அக்ஷர வடிவம் க என்ற எழுத்தாக அமைந்திருக்கிறது இந்த எழுத்து வடிவம் தான் படைப்பு தத்துவத்தின் வெளிப்புற சின்னமாகும்.

எல்லையே இல்லாத பிரபஞ்சம் க வடிவ
சதுரத்துக்குள் காணப்படுகிறது இந்த
சதுரத்தில் அணிமா லகிமா,மகிமா பிரத்தி பிராம வசித்துவம் சத் சித்துவம் என்ற அஷ்டமா சித்துகள் அடங்கியிருந்து ஆட்சி செய்கிறது.  இந்த சக்கரத்தில் உள்ள நான்கு புற சதுர ரேகைகளும் அண்ட வெளியை காவல்
செய்யும் லோக பாலகர்களாக உருவகப்படுத்தப்பட்டு நிர்மானிக்கப்படுகிறார்கள்.

இச்சக்கிரத்தின் உள் வரிகளில் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் ஆகிய ஆறு குணங்களை கட்டுப்படுத்தும் பண்பு மற்றும் அறிவு ஆகிய இரண்டு நற்குணங்கள்
மறைந்துள்ளன. இதை பிரகட யோகினிகள் என்று அழைக்கிறார்கள். நிலையான பார்வையை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தால் வட்டத்திற்குள் சதுரம் தோன்றும் ஸ்ரீ சக்ர சதுரத்திற்குள் இதே போன்று தான் வட்டம் தோன்றுகிறது. இது நமது கண்களில் உள்ள கருவிழிகள் போல் தெரிவதால் அண்டத்தின் ஒத்தைக் கண் எனவும் சுதர்மம் என்னும் அண்ட கருவாகவும் கருதப்படுகிறது சதுரம் என்பது ஆகாச வெளியினையும் வட்டம் என்பது ஆகாச காலத்தையும் குறித்து நிற்கிறது.

வெளி என்ற சதுரம் வளர்ந்து கொண்டே
செல்கிறது. காலம் என்ற வட்டம் சுழன்று
கொண்டே செல்கிறது.... பார்வையை இன்னும் சற்று கூர்மை படுத்தி வட்டத்தை பார்த்தோம் என்றால் வட்டத்திற்குள் வட்ட வட்டமாக
மூன்று வட்டங்கள் தோன்றும். இதில் இந்திரன் அக்னி எமதர்மன் நிருதிதேவன் வருணன் வாயு
குபேரன் ஈசானன் ஆகிய எட்டு திக்கின்
அதிபதிகள் நிற்கிறார்கள். ஒரு சதுரத்தில் அதற்குள் இருக்கும் வட்டத்தை அதாவது சதுரமான அண்டவெளியும் அதற்குள் இருக்கும் பூகோளத்தையும் எட்டு பாகமாக்கி
அஷ்டதிக்கிலும் பிரபஞ்சம் பறந்து
விரிந்துள்ளதை ஸ்ரீ சக்ர குறியீடுகள்
காட்டுகின்றன. ஸ்ரீ சக்ரத்தின் வட்டத்தில்
உள்ள நடுவட்டம் அகமுகமான வழிபாட்டால் பெருகக்கூடிய கொல்லாமை வெகுளாமை புலனடக்கம் பொறுமை தவம் வாய்மை அன்பு
ஆகிய நற்குணங்களை வரிசைபடுத்தி
காட்டுகிறது.

அதற்கு அடுத்த வட்டத்திற்குள் மனிதனின் 360 சுவாச கூறுகளான காலம் நிற்கிறது. இந்திய நாள்கணக்கு படி ஒரு நாளைக்கு அறுபது நாழிகைகள் உண்டு. ஒரு நாழிகையில் அதாவது
24 நிமிடத்தில் ஒரு மனிதன் விடும்
சுவாசத்தின் எண்ணிக்கை 360 இந்த 360தை 60 நாழிகையால் பேருக்கும் போது சராசரியாக ஒரு மனிதனின் தினசரி சுவாசம் 21,600 ஆகும்.

ஒவ்வொரு நாழிகைக்கான 360 சுவாசத்தை பாகங்களாக கொண்டோம் என்றால் அது ஒரு வட்டமாக வரும். இந்த பாகம் காலத்தை குறிப்பதாகும். இந்த காலம் என்னும் உள் வட்டம் 
(1)கிரேதா யுகம்
(2) திரேதாயுகம் 
(3) துவாபரயுகம்
(4) கலியுகம் ஆகிய நான்கு யுகங்களாக
சுழன்று வருகிறது. இப்படி வட்டமும்
சதுரமும் அண்டவெளியாகவும் காலமாகவும் விளங்கி மூலாதாரத்தில் கனலாக வடிவெடுக்கிறது.

இதை நெருப்புக்குள் நெருப்பு அல்லது
சிவத்துக்குள் சக்தி அல்லது சக்திக்குள் சிவம் என்றும் சொல்லாம். இந்த மூன்றாவது வட்டத்தில் பத்து இதழ் கொண்ட தாமரை ஸ்ரீ சக்ரத்தில் மலர்கிறது. பதினாறு இதழ்கள்
பிறக்கும் சக்ர பகுதியை சர்வ பரிபுரா சக்ரம் என்ற அழைக்கிறார்கள். இந்த ஒவ்வொரு இதழ்களிலும் அன்னையின் பதினாறு யோகினி சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த சக்திகள் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தேவதைகள் ஆவார்கள். யோக
நெறியில் இந்த பகுதி சுவாதிஷ்டானம் என்று அழைக்கப்படுகிறது. இதில் மனம்  புத்தி  சித்தம் அகங்காரம் ஆகிய நான்கு அந்தகரணங்களும் பார்த்தல் கேட்டல் நுகர்தல் சுவைத்தல் உரைத்தல் நினைவு வைத்தல் கனைத்தல் சூட்சமம் சுக்குலம் காரணம் பெயர் வளர்ச்சி ஆகிய பனிரெண்டு தன்மாத்திரைகள்
அடங்கியுள்ளன. இத்தகைய பதினாறு இயல்புகளும் நிரம்பி.இயங்கினால் தான் உலக வாழ்க்கைக்கு தேவையான உடல் நலம் மனநலம் அறிவு நலம் பண்பு நலம் சமூக நலம் பொருள் நலம் ஆகிய பெயர்கள் கிடைக்கும் அதனால் தான்
இப்பகுதியை படைத்தல் தத்துவம்
என்கிறார்கள் அடுத்ததாக பதினாறு இதழ் தாமரைக்குள் எட்டு இதழ் கொண்ட
மூன்றாவது ஆபரணம் பிறக்கிறது.  இது சர்வ சம்மோகன சக்ரம் என்ற பெயர் கொண்டதாகும்.

எட்டு இதழ் கமலத்தில் எட்டு யோகினிகள் உள்ளதோடு அனங்க மன்மதன் என்ற சக்திகளும் அருளாட்சி செய்கின்றன. அனங்க என்றால் உருவம் இல்லாதது என்ற பொருள் வரும். அதனால் இந்த பிரபஞ்சமானது உருவம்
இல்லாத பரப்ரம்மத்தில் இருந்து உதயமானது என்ற மூல கருத்து வெளிப்படுகிறது.

மேலும் இந்த எட்டு இதழ்களும் எட்டு
பிரம்மாணங்களாகும் மேலும் இந்த சக்ரம் மனித உடலின் சதை பகுதியை
குறிக்கிறது. அடுத்ததாக உள்ள நான்காவது ஆவரணத்தில் கீழே எழும் மேலே ஏழும் ஆக பதினாறு உலகங்கள் அமைந்துள்ளன இதை சர்வ செளபாக்கிய தயகச்சக்கரம் என்று
அழைக்கிறார்கள் மேலே உள்ள ஏழு
கோணத்தில் பூர் பூவ சுவ ஜன தப சக்திய ஆகிய ஏழு உலகங்களையும் கீழே உள்ள ஏழு கோணங்கள் அதல விதல சுதல நிதல ரசாதல மகாதல பாதாள ஆகிய ஏழு உலகங்களையும்
காட்டுகிறது.

அது மட்டும் அன்றி ஒலித்தத்துவமான
சட்ஜமம் சமம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் விவாதம் ஆகிய ஏழு சப்த லயங்களையும், ஊதா கருநீலம் நீலம் பச்சை மஞ்சள் ஆரஞ்சி சிவப்பு ஆகிய நிறதத்துவங்களையும் காட்டுகிறது. அதாவது இறை சக்தி ஓசையாகவும் ஒளியாகவும் இருப்பதை இந்த கோணங்கள் விளக்குகின்றன.

ஐந்தாவது ஆவரணமான சர்வார்த்த சாதக சக்கரத்தில் கீழே ஐந்து கோணமும் மேலே ஐந்து கோணமும் உள்ளது. இந்த பத்து கோணங்களும் மனித உடலில் உள்ள தச வாயுக்களை குறிக்கிறது. ஸ்ரீ அன்னையை
வழிப்படும் தசமகாவித்தியா தோற்றங்களை இது காட்டுவதாகவும் அமைந்துள்ளதாக கூறலாம்.

மேலும் மேலே உள்ள ஐந்து கோணங்கள்
சரஸ்வதி லஷ்மி கெளரி மகேஸ்வரி
மனோன்மணி என்ற அன்னையின் பஞ்ச வடிவங்களையும், கீழே உள்ள ஐந்து கோணங்கள் தத்புருஷம் சத்யோஜாதம் அகோரம் வாம தேவம் ஈசானம் ஆகிய ஈஸ்வர பஞ்சப்ரம்ம வடிவத்தையும் காட்டுகிறது. தேவி
யை வழிபடும் சர்வசோமணி சர்வவிக்ஷிரவினி சர்வாஷ்ணி சர்வசந்தசர்வேசினி மாதினி சர்வமகோரங்குசா சர்வகேச சர்வபிகம்ப
சர்வயோனி சர்வதிகண்டா ஆகிய பத்து
மூர்த்திகளையும் இந்த கோணங்கள்
காட்டுகின்றன. இதே போல அன்னமய கோசம் ஞானமய கோசம் மனோமய கோசம் விஞ்ஞானமய கோசம் ஆனந்தமய கோசம் என்னும் ஐந்து உடல்களையும் அந்த உடல்களை தாக்கும் தோஷங்களான பொய்யாமை கொல்லாமை கள்ளுண்ணாமை
திருடாமை காமியாமை ஆகிய ஐந்து
நெறிகளை சுட்டிக்காட்டுகிறது. இப்பகுதி விந்து அணுக்களையும் கருமுட்டைகளையும் காட்டுவதாக தாந்திரிக தத்துவம் காட்டுகிறது.

ஆறாவது ஆவரணமான சர்வஞசக்கரம்
ஆஞ்சாசக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இது உருவ வழிபாட்டின் விளக்கமாகும். அன்னையானவள் சர்வத்தையும் அருளும் மூர்த்தியாகவும் திகழ்கிறாள். சர்வத்தையும் அழிக்கும் சக்தியாகவும் திகழ்கிறாள். உடல் இயக்க ரீதியில் இந்த ஆவரணம் எழும்பில் உள்ள மட்சையை குறிக்கும். 

சர்வரோகர சக்கரம் என்ற ஏழாவது ஆவரணம் பிந்துவை குறிப்பதாகும்.
இதில் எட்டு கோணங்கள் உண்டு இக்கோணங்கள் வசினி காமேஸ்வரி மோதினி விமலா அருணா.ஜெயினி சர்வேஸ்வரி கெளலனி ஆகிய வித்தைக்கும் ஞானத்திற்கும் உரிய தேவதைகள் வாசம் செய்கிறார்கள். இந்த அஷ்ட கோணத்தின் அதிதேவதை திரிபுரா ஆவாள். யோகமார்க்கத்தில் கூறப்படும் இயமம் நியமம் ஆசனம் பிரணாயமம் பிரத்தியாகாரம் தாரணை
தியானம் சமாதி ஆகிய எட்டு நிலைகளும் இதில் அடங்குகிறது.

மேலும் நூல்களை கற்றுத்தரும் போத குரு பேதங்களை அறிய செய்யும் வேதகுரு. மந்திர சித்தி பெற வழிகாட்டும் மிசிதகுரு. செயலுக்கம் தரும் சூட்ச்சக குரு. வார்த்தைகளால் ஞானத்தை போதிக்கும்
வாசககுரு. தான் பெற்ற ஞானத்தை சுயநலம் இல்லாமல் சீடருக்கு தரும் காரககுரு. முத்தியடைய வழிகாட்டும் விஷிதககுரு. ஆகிய அஷ்டகுருக்களையும் இக்கோணங்கள்
உணர்த்துகின்றன.

அன்னை ஆதிபராசக்தியின் நான்கு
திருகரங்களும் அந்த கரங்களில் இருக்கும் பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் கணை ஆகிய நான்கு கருவிகளும் இந்த எட்டு கோணத்தின் வடிவங்கள் எனலாம். இதில் பாசம் என்பது ஆசையின் வடிவம் அங்குசம் என்பது
கோபத்தின் வடிவம் கருப்பு வில் என்பது
மனதின் வடிவம் மலர் கணை என்பது
உணர்வுகளின் வடிவம் எட்டாவதாக உள்ள ஆவரணம் முக்கோணமாக
அமைந்த காயத்திரி பீடமாகும். அன்னை இந்த காயத்திரி பீடத்தில் திரிபுராம்பா என்ற திருநாமத்தோடு அமர்ந்திருக்கிறாள். காமேசி
வச்சிரேசி பகமாலினி என்ற மூன்று
தேவதைகளையும் முக்கோணத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்தி உள்ளாள். மனிதனை கடைநிலைக்கு தள்ளுகின்ற ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களும் இச்சக்கரத்தை
பூஜிப்பதினால் எரிந்து சாம்பலாகி
விடுகிறது. சுழன்றடிக்கும் சூறாவளி என்ற பேராசை அடங்கி விடவும் ஆயிரம்
இடர்பாடுகள் வந்தாலும் அனைத்தும் தவிடு பொடி ஆகிவிடவும் வயிரக்கியத்தை பெறவும் சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருக்கும்
மனமென்னும் மாய பிசாசை வசக்கி ஒடுக்கி.அன்னையின் திருபாதத்தில் பூர்ண சரணாகதி.அடைய செய்யவும் இச்சக்கரம் வழிவகுக்கும்.

இறுதியாக சர்வானந்த மயசக்கரம் என்ற
ஒன்பதாவது ஆவரணம் ஸ்ரீ சக்ரத்தின் மைய புள்ளியான பிந்து மையமாகும். இது பேரானந்தம் அடையக்கூடிய அம்பிகையின் திருகாட்சியை நேருக்கு நேராக தரிசிக்கும் நிலையை காட்டுகிறது. அம்மையும் அப்பனும்
இந்த பிந்து பகுதியில் ஒன்றாக இணைந்து நிற்கிறார்கள். இன்பம் துன்பமற்ற ஆழ்ந்த சமாதி நிலை பிந்து பகுதி காட்டும் சின்னமாகும். யோக மார்க்கத்தில் சொல்லப்படும் சமாதி
நிலையின் மூன்றவது கண் திறக்கும்
அனுபவமே ஸ்ரீ சகரத்தில் உள்ள மூல
பிந்தாகும்.
💐🌹🙏🏻MPK🙏🏻🌹💐

No comments:

Post a Comment