Wednesday, May 5, 2021

பெண்களுக்கு மெட்டி கொலுசு ஏன் தேவை.

பெண்களுக்கு மெட்டி மற்றும் கொலுசு ஏன் அணிவிக்கப்படுகிறது??

நமது பாரம்பரியத்தில் பெண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே காலில் வெள்ளி கொலுசும், 
        திருமண நாளில் கணவனால் கால் இரண்டாவது விரலில் மெட்டியும் அணியப்படுகிறது.

காலில் கொலுசு அணியும் இடத்தில் தான் கருப்பை, சூலகம், மற்றும் மார்பகத்தின் செயல்பாடுகளை தூண்டும் நரம்பு முடிவிடங்கள் வந்து முடிகின்றன. 
          பொதுவாகவே உலோகங்கள் கடத்தல் தொழில்பாடடை சிறப்பாக செய்ய வல்லன.  வெள்ளி உலோகமானது நமது இனப்பெருக்க உறுப்புகளின் விருத்திக்கு மிகப்பெரும் நன்மையை செய்வது. 

ஜோதிட ரீதியில் கூட, 7 ஆமிடம் இனப்பெருக்க உறுப்புகளையே குறிக்கிறது. இயற்கை ஜாதகத்தில் 7 ஆமிடம் துலா ராசியை குறிக்கும்.

 துலா ராசி வெள்ளியின் சொந்த வீடு. வெள்ளி கிரகம் வெள்ளி உலோகத்தில் அதிக சக்தியை செலுத்தக் கூடியது. இதன் காரணத்தாலேயே வெள்ளி என்பது இனப்பெருக்க உறுப்புகளை தூண்டி விடுவதில் சிறந்த பங்காற்றுகிறது.

அதனால் தான் பெண் குழந்தைகளுக்கு காலில் கொலுசு வெள்ளியில் செய்து அணிவிக்கும் வழக்கம் வந்தது.

இதன் மூலம் அவர்களின் கருப்பை, மார்பகங்கள் சீரான வளர்ச்சியை பெற்று உரிய காலத்தில் பருவமடைய உதவுகின்றன. 

இப்போதெல்லாம் பருவமடைதலில் தாமதம் என்றால் மருத்துவரை நாடுகின்றனர். பருவமடைந்தாலும் மாதவிலக்கு பிரச்சனைகள், மற்றும் மார்பக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு காலில் வெள்ளியில் கொலுசு போட்டு விடுங்கள். படிப்படியாக இந்த பிரச்சனைகள் குறைவதை அவதானிக்க முடியும். 

கருப்பை இறக்கத்தை கூட தடித்த கொலுசுகள் சரி செய்யும் குணமுள்ளவை. 

சரி மெட்டி ஏன் திருமணமாகாத இளம் பெண்கள் அணிவதில்லை. 

ஆனால் திருமணத்தில் கணவன் கையால் அணிவிக்கப்படுகிறது?

மெட்டி அணியும் இடத்தில் உள்ள நரம்பு முடிவிடங்கள் பாலுணர்வை தூண்டக்கூடியவை.

திருமணமானாலும், பல பெண்களுக்கு தாம்பத்தியம் பற்றிய விபரங்கள் தெரிவதில்லை. 

இப்போதெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கணவனுடனான தாம்பத்தியத்தையே உடல் வலியாக உணரும் பெண்கள் உள்ளதை பார்க்க முடிகிறது. 

இதற்கு அவர்களுக்கு முறையான பாலுணர்வு ஏற்படாமையே காரணம். அந்த பாலுணர்வை இந்த வெள்ளி மெட்டி இரண்டாம் விரலில் உள்ள நரம்புகளை தூண்டுவதன் மூலம் தூண்டி விட்டு சரி செய்யும். தரமான வெள்ளியில் அளவான மெட்டி இதனை சரி செய்யும் வல்லமை படைத்தது. 

அது மட்டுமல்ல இன்றைய பல ஆண்களுக்கும் பெண்களை சரியாக கையாள தெரிவதில்லை என்பதும் இன்னொரு மறுக்க முடியாத காரணமே. 

ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டிவிட தேவையில்லை. அது உடனே வந்து விடும்.

ஆனால் பெண்கள் நிலை அதுவல்ல. அவர்களது உணர்வுகள் தூண்டப்படடால் மட்டுமே அவர்களால் தாம்பத்தியத்தில் முறையாக ஈடுபட முடியும். அதற்கு ஆண்களின் ஒத்துழைப்பும் புரிதலும் மிக அவசியம். 

அதனால் தான் தாம்பத்தியத்தில் வெறுமே சேர்க்கை என்பதை விடுத்து, முன் விளையாட்டுகள், சீண்டல்கள் மிக மிக அவசியம்.

 இதனை சில மிருகங்களின் கூடலில் கூட அவதானிக்கலாம். மிருகங்களுக்கே உள்ள புரிதல், மனிதர்களின் இன்றைய அவசர வாழ்க்கை முறையினால் மழுங்கடிக்கப்பட்டு பல வாழ்க்கை பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது.

No comments:

Post a Comment