Friday, May 28, 2021

சக்திவாய்ந்த தேங்காய் பரிகாரம்.

*திருஷ்டியால் துன்பமா?* *துர்சக்திகளை விரட்டும் தேங்காய் மகிமை!*

தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளை உள்ளடக்கியது.

மேலும் நிலம், நீர், ஒளி, காற்று, விண் ஆகிய பஞ்சபூத தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்சபூத சக்திகள் குவிக்கப்படுகிறது. இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது சிவனின் மூல சக்தியாக உள்ளது. இதில் உள்ள முக்கண்களின் வழியே பஞ்சபூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும். கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும்போது அது இறை சக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது.

இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது.

ஒரே இடத்தில் தேங்காயை சிதறுகாய் இடும்போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும். முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது அங்கு துர்சக்திகள் விலக்கப்படுகிறது.

ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில், திங்கள் கிழமையின் முற்பகலில் முச்சந்தி விநாயகருக்கு வாரம்தோறும் சிதறுகாய் இட்டால் காலசர்ப்பதோஷம் கூட சரியாகிவிடும். வீட்டில் தினம் ஒரு தேங்காயை உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.

மாந்திரீகத்தில் சண்ட காளிவேர், நரபூதாளம், சூலநாசவேர் இவற்றுடன் வேண்டாதவரின் காலடி மண் இந்த நான்கையும் நவமி திதியில் வேங்கை மரத்தின் கீழ் பதித்தால் சம்பந்தப்பட்டவர்கள் நிலை அதோகதிதான். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மறு நவமி வரை அந்தியில் தேங்காய் உடைத்து உடன் நுகரச் செய்தால் குணமாகிவிடும். இது சித்தர்கள் முறையாகும்.

முள்ளம்பன்றி முள், எட்டிமர வேர், இரண்டையும் வீட்டில் வைத்து விட்டால் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்துவிட்டால் சுபிட்சம் ஏற்படும். மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசுபிசுவென்று இருப்பதை காணலாம்.

அமாவாசையில் பிறந்த குழந்தைகள் கெட்ட பெயரெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த குழந்தைகளுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் குணம் மாறும்.

குழந்தைகளுக்கு தேங்காய் பால் கொடுத்தால் உடல் பலமாகும். ஞாபக சக்தி கூடும். வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் தேங்காயில் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டிவிட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்டியும் கழிந்துவிடும்.

வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறு காய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும்...

No comments:

Post a Comment