Thursday, September 24, 2020

அதிர்ஷ்டத்தை குறிக்கும் நட்சத்திர குறியீடுகள்

வெற்றிகளை அளிக்கும் நட்சத்திர குறியீடுகள்


ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன.


அன்றாட வாழ்வில் அனைவரும் வெற்றியை விரும்புகிறோம். ஆனால், தொடங்கிய காரியங்கள் அனைத்திலும், அனைவரும் வெற்றி பெறுவதில்லை. முயற்சிகள் தவறினாலும், முயற்சிக்க தவறாத மனதுடனும், பல்வேறு கேள்விகளுடனும் பலர் பல்வேறு வழிகளில் உழைத்துக்கொண்டுள்ளனர்.

வெற்றிக்கு தனி வழி


வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள். வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை.

உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள். சற்றே புதியதாகவும், நூதன விஷயமாகவும் உள்ள அவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

நட்சத்திர குறியீடுகள்:

1. அஸ்வினி நட்சத்திரத்துக்கு குதிரைத் தலை அல்லது குதிரை உருவம்.

2. பரணிக்கு மண் பாத்திரம், அடுப்பு அல்லது முக்கோண வடிவம்

3. கிருத்திகை நட்சத்திரத்துக்கு கத்தி, வாள் மற்றும் ஹோம தீ ஜூவாலை

4. ரோகிணிக்கு தேர், வண்டி, கோவில், ஆலமரம் மற்றும் சக்கரம்

5. மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு மான் தலை மற்றும் தேங்காயின் கண்

6. திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு மனித தலை, வைரம் மற்றும் நீர்த்துளி

7. புனர்பூசம் நட்சத்திர சின்னம் வில் மற்றும் அம்புக்கூடு

8. பூசம் நட்சத்திரத்துக்கு தாமரை, புடலம் பூ, அம்பு மற்றும் பசுவின் மடி

9. ஆயில்யத்துக்கு சர்ப்பம் மற்றும் அம்மி ஆகியவை.

10. மகம் நட்சத்திரத்துக்கு வீடு, பல்லக்கு மற்றும் நுகம்

11. பூரம் நட்சத்திரத்துக்கு கட்டிலின் இரு கால்கள், சங்கு மற்றும் மெத்தை

12. உத்திரம் நட்சத்திர குறியீடுகள் கட்டில் கால்கள் மற்றும் மெத்தை

13. ஹஸ்தம் நட்சத்திரத்துக்கு கைகள் அல்லது உள்ளங்கை

14. சித்திரைக்கு முத்து மற்றும் ஒளி பொருந்திய ரத்தினக் கற்கள்.

15. சுவாதிக்கு புல்லின் நுனி மற்றும் காற்றில் அசையும் தீபச்சுடர்

16. விசாகத்துக்கு முறம், தோரணம் மற்றும் பானை செய்யும் சக்கரம்




17. அனுஷம் நட்சத்திரத்துக்கு குடை, மலரும் தாமரை மற்றும் வில் வளைவு

18. கேட்டைக்கு குடை, குண்டலம் மற்றும் ஈட்டி

19. மூலம் நட்சத்திரத்துக்கு அங்குசம், சிங்கத்தின் வால் மற்றும் யானை தும்பிக்கை

20. பூராடம் நட்சத்திரத்துக்கு விசிறி, முறம் மற்றும் கட்டில் கால்கள்

21. உத்திராடம் நட்சத்திரத்துக்கு யானை தந்தம், மெத்தை விரிப்பு, கட்டில் கால்கள்

22. திருவோணத்துக்கு காது, மூன்று பாதச்சுவடுகள் மற்றும் அம்பு

23. அவிட்டம் நட்சத்திரத்துக்கு மிருதங்கம் மற்றும் உடுக்கை

24. சதயத்துக்கு பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம்

25. பூரட்டாதிக்கு கட்டிலின் இரு கால்கள், வாள் மற்றும் இரு மனித முகங்கள்

26. உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு கட்டில் கால்கள் மற்றும் இரட்டையர்கள்

27. ரேவதி நட்சத்திரத்தின் சின்னங்கள் மீன் மற்றும் மத்தளம்

சின்னங்களின் பயன்:

ஜோதிட சாஸ்திர நூல்களில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் சின்னம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நமது தனிப்பட்ட வெற்றி சின்னங்களாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது, வசிக்கும் வீடு, பணிபுரியும் இடம், அணியும் ஆடைகள், வியாபார நிறுவன சின்னங்கள், ‘லெட்டர் பேடு’ போன்றவற்றில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சின்னங்களை பயன்படுத்தினால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு களும், சந்தர்ப்பங்களும் இயல்பாக அமைகின்றன என்பது நம்பிக்கையாகும்.

அதற்காக, புராண கால உதாரணங்களை இங்கே காணலாம். கீதையின் நாயகன் கிருஷ்ணனின் நட்சத்திரம் ரோகிணி என்பது அனைவரும் அறிந்த விஷயம். ரோகிணி நட்சத்திர குறியீடாக ‘தேர்’ குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனன் தேரின் சாரதியாக கிருஷ்ணன் இருந்து நடத்திய ‘பாரதப்போர் நாடகம்’ அனைவரும் அறிந்ததுதான்.

இன்னொரு உதாரணமாக ராமபிரானை இங்கே குறிப்பிடலாம். அதாவது, ராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம் ஆகும். அந்த நட்சத்திரத்தின் குறியீடாக வில் சொல்லப்பட்டுள்ளது. ராம பாணத்தை செலுத்த உதவும் வில்லை தனது ஆயுதமாக பயன்படுத்தி ஒவ்வொரு கட்டத்திலும் அவர் பெற்ற வெற்றிகள் இதிகாசமாக மலர்ந்ததை உலகமே அறியும்.

இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் மூன்றடி உருவம் கொண்ட வாமன அவதாரம் திருவோண நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. அந்த நட்சத்திரத்தின் குறியீடாக மூன்று பாதச்சுவடுகள் குறிப்பிடப்படுகிறது. ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து முடித்த பின்னர், மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவனை பாதாள உலகத்துக்கு அனுப்பிய புராணத்தை அனைவரும் அறிவார்கள்.

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மரின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை என்று ஒரு தகவல் இருக்கிறது. அதன் குறியீடாக வேல் குறிப்பிடப்படுகிறது. தர்மர் வேலை குறி பார்த்து எறிவதில் திறமை மிக்கவராக சொல்லப்படுகிறார். பாரதப்போரில் சல்லியனோடு நடந்த போரில், திறமையாக வேல் எறிந்து அவனை வென்றது பாரதத்தில் குறிப்பிடப்படுகிறது.

ஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் குறியீடாக சிங்கத்தின் வால் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் கைகளில் உள்ள ‘கதையின்’ வடிவம் கிட்டத்தட்ட அந்த வடிவத்தில் இருப்பதும், தனது வாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதையும் அனைவரும் நன்றாக அறிவோமல்லவா..?

ருத்ரனான, சிவனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதன் குறியீடாக மண்டை ஓடு சொல்லப்பட்டுள்ளது. ருத்ரன் மண்டையோட்டு மாலையை அணிந் திருப்பதோடு, கபால ஓட்டை கையில் வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

திருமகளான மகாலட்சுமியின் நட்சத்திரம் பூசம் ஆகும். அதன் குறியீடுகளாக தாமரை மற்றும் பசுவின் மடி ஆகியவை குறிப்பிடப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் நட்சத்திரங்களுக்கான குறியீடுகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம் என்பதாகும். அதன் மூலம் ஒருவரது ஜனன கால கிரக நிலைகளுக்கு தக்கவாறு சாதகமான சூழல்கள் அமைகின்றன என்று கருதலாம். அந்த குறியீடுகளை அல்லது சின்னங்களை நமது வெற்றிக்கான ‘பார்முலாவாக’ பயன்படுத்தி, வெற்றிக்கான கூடுதல் வாய்ப்பு களையும் பெறலாம்.

Wednesday, September 23, 2020

இறைவனின் உருவம் எப்படி இருக்கும்

💐படித்ததில் பகிர்ந்தது💐

*கடவுளின் உருவம் எவ்வாறு இருக்கும்?* 
  
*"கடவுள் என்பது தன்மைகள் தானே...*
பின்னர் ஏன்...
*கடவுளுக்கு உருவம்?"*
ஒரு சமஸ்தானத்தின் மன்னர்,
சுவாமி விவேகானந்தரிடம்
கேட்க...
அங்கு மாட்டியிருந்த ஒரு
ஓவியத்தை காட்டி,
விவேகானந்தர்,
"இது உங்கள் தந்தையா?"
"ஆம்" என்றார் மன்னர்.
"இது மிகவும் அசிங்கமாக
உள்ளது, இதை கழற்றி
குப்பையில் எறிந்து விடுங்கள்"
என்றார் விவேகானந்தர்.

உடனே, ஆவேசமடைந்த
மன்னர், "உங்களை தவிர வேறு யார் இதை கூறியிருந்தாலும்,
அவரது தலை இந்நேரம்
தரையில் விழுந்து இருக்கும்..."
என்றார்.

"மன்னிக்கவும் மன்னரே! அது
ஒரு ஓவியம் தான். ஆனால்,
உங்களது தந்தையின்
நினைவாக, குறியீடாக அந்த
உருவம் இருப்பதால் தானே
உங்களுக்கு இவ்வளவு கோபம் வந்தது....
அது போல தான், இறைவனை
நோக்கி வழிபடும் போது....
*சிந்தனை ஒரு முகமாக இருக்க வேண்டும்*
என்பதற்காக தான் ஒரு
குறியீடாக உருவம்
உருவாகியது..." என்றார்.

*"சரி, அதற்கு ஏன் இத்தனை கடவுள்கள்?"*
யார் உண்மையான கடவுள்?
சிவனா, விஷ்ணுவா,
முருகனா, விநாயகனா?
காளியா?
இத்தனை கடவுள்களை
வைத்துக் கொண்டு எந்த
இறைவனை வழிபடுவது?"
என்று மன்னர் கேட்க,

விவேகானந்தர்,
"உண்மைதான்....
இன்னும் ஆயிரமாயிரம்
கடவுள்களும் இருக்கிறார்கள்.
சிவ புராணம் படித்தால்,
சிவனே ஆதி இறைவன்
என்பார்கள்.
விஷ்ணு புராணம் படித்தால்
விஷ்ணுவே ஆதி இறைவன்
என்பார்கள்.
இன்னும் வேறு புராணங்களில்
இன்னும் வேறு இருக்கலாம். முதலில் ஹிந்துக் கடவுள்களை
அறியும் முன்....
தத்துவரீதியாக பலவற்றை
தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்து கடவுளர்கள் பெயர்
எல்லாமே *காரண பெயர்.*
*'சிவா* என்றால்
புனிதமானவன்,
தீயதை அழிப்பவன்.
*'விஷ்ணு* என்றால்
அனைத்திலும் இருப்பவன்,
*'கிருஷ்ணன்* என்றால்
வசீகரிக்க கூடியவன்,
*'விநாயகன்* என்றால்
அனைத்திற்கும் நாயகன்.
*இராமன்* என்றால் ஒளி
மிக்கவன்.

இப்படி ஒவ்வொரு பெயர்களும்
ஒரு தன்மையைதான்
குறிக்கிறதே தவிர,
தனித் தனி கடவுள்களை
அல்ல ...
இந்த தன்மைகளை பொருத்தி
பார்த்தால்,
இறைவனுக்கு இந்த
அனைத்து பெயர்களும்
பொருந்தும் அல்லவா?

கீதையில் கிருஷ்ணன்,
*"யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது.*
என்று சொல்கிறார்.
இங்கே கிருஷ்ணன் யார் ?
புல்லாங்குழல்
ஊதிக்கொண்டு, பசுவிற்கு
பக்கத்தில் நிற்பவன் மட்டும்
அல்ல அவன்.
 
*'பரமாத்மா என்பது அனைத்திலும் (உருவம், அரூபம்) வியாபித்து இருக்கும் இறைவன்.*
அவனை நீங்கள் சிவனின்
உருவத்திலும் நினைக்கலாம்,
முருகனின் உருவத்திலும்
நினைக்கலாம்,
இன்னும் சொல்லப்போனால்
இறைவன் நம்
எண்ணிக்கைகளுக்கு அடங்க
மாட்டான்.
ஒருமை, பன்மைகளுக்கு
அப்பாற்பட்டவன் இறைவன்.

அறிவுக்கு புலப்படாத
இறைவனை, ஒன்று, இரண்டு,
நூறு என்று நம்மால் எண்ணி
தீர்க்க முடியாது.
நீங்கள் ஒன்று என்று
நினைத்தால் ஒருவனாய்
காட்சி தருவான்.
பல என்று சொன்னால் பல
தெய்வங்களாக காட்சி
தருவான்.
இல்லை என்று நினைத்தால்
இல்லாமல் இருப்பான்.

புராணங்கள் எனப்படும்
தெய்வீக கதைகள்....
சாமான்ய மனிதர்களுக்கு
இறைவனின் பல்வேறு
 தன்மைகளை குறித்த
பல்வேறு விஷயங்களை
விவரித்து....
அதன் மேல் ஒரு லயிப்பு
ஏற்படும் வகையில்
சுவாரஸ்யமாக சொல்கின்றன.
இறைவனின் ஒவ்வொரு
தன்மையும், ஒவ்வொரு
விதமான உருவங்களில்
சித்தரிக்கப்படுகிறது.
*இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தன்மைகள் இருக்கின்றன...*

ஆகவே .... |
*எண்ணிலடங்காத உருவங்களில் மக்கள் அவனை வழிபடுகிறாகள்.*
என்றார் சுவாமி
விவேகானந்தர்.

ஆக, இறைவனில் பாகுபாடு
பார்த்தால்...
இறைவனை அறிய முடியாது.
இறை தன்மையோடு நாம்
நடந்து கொள்ளும் போது
தான்...
இறைவனின் அருளை பெற
முடியும்...

ஆகவே, 
*இறை தன்மை வளர்ப்போம்..*
*இறையருள் பெறுவோம்*

வாழ்க்கையில் முன்னுக்கு வர அருமையான சிறு குறிப்புகள்

Best tips

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர்...
(பண்ணவும் நினைக்காதீர்)

2. முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர் ...

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ...

4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ...

5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் ....
குறிப்பாக பொது இடம்,சிக்னல்

6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ...
அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ...

7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள் ...

8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் ...அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும் ...

9. டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள் ...
அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம் ...

10. நீங்கள் ஓட்டுனராகவோ , 
அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் ...
உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ...

11. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள் ...

12. நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள் ...அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு , எனக்கு இந்த மாத்திரை வாங்கி ஆவந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள் ...

13. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள் ... 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க ...

14.  நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. 
(நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

15.  வயது, சம்பளம், விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் ... தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் ...

16. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள் ...
(no one likes advices.)

17. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள் ...
அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

18. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள் ...எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள் ...
'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள் ...

19. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் .
'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

20. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள் ...
உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள் ...

21. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம் ...
9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம் ...
(unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் ...
10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் ...

22. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ, 
கோலம் போடும் போதோ , வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள் ...

23. பாடல்களை எப்போதும் 
இயர் போனிலேயே கேளுங்கள்.
சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் ...

24.  ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள் ...
( என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல )

25.  டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள் ...

26. மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் ...
( இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!)

27. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

28.  குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் ...
ஏன் என்று என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்

29. நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.

30. நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன்மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள்.
அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.

குறை/ நிறை அனைவரிடமும் உண்டு ...
நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம் ...

என்றும் அன்புடன் 
குடியாத்தம் பாரத் Er.அன்பு
                                        
ஶ்ரீ ஆண்டாள் வாஸ்து ஆலோசகர்
ஶ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

Tuesday, September 22, 2020

காசியில் இறக்க முக்தி

மாறா மயானம்

காசி நகரம் பல

எங்களுக்கு பெயர்

பெற்றது என்றாலும்

இறப்பு என்பதற்கும் காசி

நகரம் பிரசித்தமானது

இந்தியாவின் பல

பகுதிகளில் இருந்தும்

நேபாளம் மற்றும்

வெளிநாடுகளில் இருந்தும்

முதியவர்கள்

கட்டி மூச்சை காசியில்

விட்டால் மோட்சம்

கிடைத்துவிடும் என்ற

நம்பிக்கையுடன் ஈூடும் ஒரே

நகரம்

உயிர் பிழைக்க வேண்டும்

என்பதற்காக,

ஆஸ்பத்திரிகளில்

செலவிடுபவர்கள்

திடீரென்று இறந்து

போகிறார்கள்

ஆனால், காசியில்

இறப்புக்காக

காத்திருப்பவர்கள்,

அதைத்தோ

வருடக்கணக்கில்

காத்துக்கிடக்கிறார்கள்

அதுதான் கிடைத்த

பாடில்வை

இறப்பு யார் கையிலும்

இல்லை இறப்பு: எவ்வளவு

எளிதான காரியம் ஒன்றும்

இல்லை

என்பதையும் நிரூபித்துக்

கொண்டிருக்கிறது. காசி

நகரம்

இங்கே மக்கள் இறப்பை

கொண்டாடுகிறார்கள்

துளி அளவும் இறப்பின்

சோகம் யாரையும்

வாட்டுவதில்லையா

இறப்பை மகிழ்ச்சியோடு

எதிர்நோக்க காத்திருக்கும்

முதியோர்களால்

சூழப்பட்டிருக்கும்

இடங்களில் ஒன்று

மணிகர்ணிகா பகுதியில்

உள்ள கங்கா பலன்

பல ஆண்டுகளுக்கு முன்பு

கோடீஸ்வரர் ஒருவரின்

பாட்டி, இது இறுதி மூச்சை

காசியில் விட வேண்டும்

என்று விரும்பியிருக்கிறார்

அவரைக் கொண்டு சென்ற

உறவினர்கள், தங்க இடம்

கிடைக்காமல் தவித்து

எப்படியோ ஒரு இடத்தை

தேடி பிடித்திருக்கிறார்கள்:

பாட்டி காலமான பின்பு,

மோட்சம் தேடிவரும்

எழைகள் தங்க எந்த இடமும்

நிரந்தரமாக இல்லை

என்று அவர்கள்

கவலை பட்டிருக்கிறார்கள்,

கபோலப்பட்டவர்கள்

செல்வச் சிமான்களாக

இருந்ததால், அங்கிருந்த

பொலிஸ் நிலையத்தை

குத்தகைக்கு எடுத்து

உயிர் துறக்க

விரும்புகிறவர்களுக்கு

உறைவிடம் ஆக்கினார்கள்.

இதுவரை அங்கு

தங்கியிருந்து 10 ஆயிரம்

பேர் உயிர்

துறந்திருக்கிறார்கள்

இப்போதும் பலர் அங்கே

நாயகி இருக்கிறார்கள்

அவர்கள் மூச்சு முடிவுக்கு

வந்த பின்பு தொடர்ந்து

இங்கு வந்து தங்கி

உயிரைவிட 12 ஆயிரம்

முதியோர்கள் தங்கள்

பெயரை பதிவு செய்து

விட்டு, எட்டாது அழைப்பு

பெரும் என்று

காத்துக்கிடக்கிறார்கள்

கியூவில் நிற்கும் அளவுக்கு

இறப்பு மீது எவ்வளவு ஏக்கம்

பாருங்கள்

இன்னொன்று காசி லாப்

முக்தி பவன்

ஜெய்டாஸ் டாலமியா என்ற

செல்வந்தர், தன் தாய்

காசியில் மரணமடைந்த

பிறகு தாயார் நினைவாக

இந்த கட்டிடத்தை விலைக்கு

வாங்கினார்

முதல் வேத மந்திரம்

ஓதவும், பகவத் கீதை

சொற்பொழிவுகள்

நிகழ்த்தவும் ஐதீக இசை

நிகழ்ச்சிகள் நடத்தும் இந்த

இடத்தை பயன்படுத்தினார்

ஆனால் இறப்பை

எதிர்நோக்கும் முதியோர்கள்

அந்த மையத்தில் வந்து

குவிய

இறுதிக்குரிய இடமாக அது

உறுதி செய்யப்பட்டுவிட்டது!

இங்கு கூடி இருக்கும்

முதியோர்களின் மனம் எப்

போதும் இறைவனை நாடிக்

கொண்டே இருக்க

வேண்டும் என்பதற்காக

வேத மந்திரங்கள்

முழக்கம் கேட்டுக் பெயிண்ட்

இருக்கிறது

முதியோர்கள் தினமும்

கங்கையில் குளித்து

இறைவா எங்களை ஏற்றுக்

பொள் என்று கோரிக்கை

வைக்கிறார்கள்

நேபாள நாட்டு அரசும்

முதியோர்கள் பேர் தங்கி

இருக்கும் ஓர் இடத்தை

பராமரிக்கிறது

அங்கிருப்பவர்களுக்கு

உணவு, உடை கொடுத்து

இறுதி வழியனுப்பி

வைப்பது வரை நேபாள

அரசால்

நியமிக்கப்பட்டிருப்பவர்களி

ன் பொறுப்பு)

இங்கே சகல

அவராசிகளுக்கும் மாணம்

நேரும் போது அவற்றின்

காதுகளில் ராம நாமத்தை

ஓம் என்ற பிரணவத்தை

சிவனே ஓதுகிறது என்பது.

தீராத பிரச்சனை தீர பரிகாரம்

*திருச்செந்தூர் - முக்கிய பரிகாரம்.*

*முக்கியமான ஒரு பரிகாரத்தை இங்கே எல்லோரும் பயனடையும் விதத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.*

வாழ்வில் நடக்காத,முடியாத, இயலாத ஒரு காரியம் என்று எதையாவது நினைத்து கொண்டு வருந்தி கொண்டு இருகிறீர்களா..🤧

*புறப்படுங்கள் திருசெந்தூர் கோவிலுக்கு..*

அங்கே உள்ள  பிச்சைகாரர்களுக்கு [ பிச்சைகாரர்கள் என்று சொல்ல கூடாது ...உங்கள் புரிதலுக்காக அந்த வார்த்தையை சொல்கிறேன் ..மன்னிக்க...]  *#பண்டாரசாப்பாடு கொடுக்க வேண்டும்.*

*அது என்ன பண்டார சாப்பாடு..?*

_திருசெந்தூரில் ஒருவன் பிச்சை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு பல விதிமுறைகள் உள்ளது._

அது பின்னொரு நாள் விளக்கமாக கூறுகிறேன்..

அவர்கள் யாரும் பிச்சைகாரர்கள் அல்ல..

*முருகனை மட்டுமே நம்பி குடும்பத்தை விட்டு விலகி வந்தவர்கள். அவர்களுக்கு அளிக்கும் அன்னதானம் தான் நாம் பண்டார சாப்பாடு என்று கூறுகிறோம்.*

அதை அவ்வளவு எளிதாக கொடுத்து விட முடியாது..

*முன் பதிவு செய்ய வேண்டும்.*

நம்ம பாஷையில் முன்பதிவு முதலிலேயே செய்ய வேண்டும்.

*அவர்களுக்கு வயிறார உணவு அளித்த பின் அவர்கள் சாப்பிட்ட அந்த இலையை மடி பிச்சையாக எடுக்க வேண்டும்.* 

இது மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம்...

*எத்தனை பேருக்கு உணவு தருவது, என்றைக்கு தருவது போன்ற விவரங்களுக்கு கோவிலை அணுகி விளக்கம் பெறுங்கள்.*

செய்து பாருங்கள் ....உங்கள் பல நாள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

நற்பவி

Monday, September 21, 2020

யுகங்களின் கால கணக்குகள்

🟩🔥யுகங்களும்..
          கால 
          கணக்குகளும🔥🟩

🟨🟨🟨🟨🟨🟨🟨🟨
மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து சொல்கிறது புராணங்கள்.
🟨🟨🟨🟨🟨🟨🟨🟨

அதன்படி அவை

01.கிருதயுகம், 

02.திரேதா யுகம்,

03. துவாபர யுகம்,

04. கலி யுகம் 

என்று நான்கு பிரிவாக உள்ளன.

🟨🟨🟨🟨🟨🟨🟨🟨

01.கிருத யுகம்: 

🔥இந்த யுகத்தில் மக்கள் அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள்.

🔥மனிதர்கள் சராசரியாக 
21 அங்குலம் 
(924 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 
1,00,000 வருடமும் வாழ்வார்கள். 

🔥இந்த யுகமானது 17,28,000 வருடங்கள் கொண்டது.

02.திரேதா யுகம்:

🔥நான்கில் மூன்று பகுதி மக்கள் அறநெறியுடனும், 
ஒரு பகுதி மக்கள்  அறமில்லாமலும் வாழ்வார்கள்.

🔥மனிதர்கள் சராசரியாக 14 அங்குலம்
 (616 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள். 

🔥இந்த யுகமானது 12,96,000 வருடங்கள் கொண்டதாகும்.

03.துவாபர யுகம்:

🔥சரிபாதி மக்கள் அறநெறியுடனும், மறுபகுதி மக்கள் அறமில்லாமலும் வாழ்வார்கள்.

🔥மனிதர்கள் சராசரியாக
 7 அங்குலம் 
(308 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள். 

🔥இந்த யுகம் 8,64,000 வருடங்கள் கொண்டது.

04.கலியுகம்: 

🔥நான்கில் ஒரு பகுதி மக்கள் அறநெறியுடனும், மூன்று பகுதி மக்கள் அறம் இல்லாமலும் வாழ்வார்கள்.

🔥மனிதர்கள் சராசரியாக
 3.5 அங்குலம் 
(154 செ.மீ.) உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள். 

🔥இந்த யுகம் 4,32,000 வருடங்களைக் கொண்டதாகும்.

இந்த நான்கு யுகங்களும் சோ்ந்தது ஒரு 
‘மகா யுகம்’ 
அல்லது ‘சதுா்யுகம்.’ 

12 மகா யுகங்களைக் கொண்டது, ஒரு மனுவந்தரம். 

14மனுவந்தரங்களைக் கொண்டது ஒரு கல்பம். 

இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.

🟩தற்போது நடந்து கொண்டிருப்பது 
2-வது கல்பமான ‘ஸ்வேத வராக கல்பம்’ ஆகும்.🟩

மனிதர்களின் கால அளவும், 
தேவர்களின் கால அளவும் வேறுபடும்.

நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள்.

ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது 
ஒரு நாள். 

அதன்படி 360 மனித வருடம், 
தேவர்களின் ஒரு வருடமாகும்.

12,000 தேவ வருடம் என்பது ஒரு சதுர்யுகம். 

அதாவது 43 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். 

ஒரு சதுர்யுகம் என்பது நான்கு யுகங்களை கொண்டது என்பதால், 12 ஆயிரம் தேவ வருடங்களை 
நான்கு யுகங்களாக பிரிக்கலாம்.

ஒவ்வொரு யுகத்திற்கான 
தேவ வருடத்தையும், மனித வருடத்தையும் அறிந்து கொள்வோம்.

கிருத யுகம்
17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடம் - 
4,800 தேவ வருடம்.

திரேதா யுகம் 
12 லட்சத்து 96 ஆயிரம் மனித வருடம் - 
3,600 தேவ வருடம்.

துவாபர யுகம் 
8 லட்சத்து 64 ஆயிரம் மனித வருடம் - 
2,400 தேவ வருடம்.

கலி யுகம் 
4 லட்சத்து 32 ஆயிரம் மனித வருடம் - 
1,200 தேவ வருடம்.

மேற்கண்ட நான்கு யுகங்களும் இணைந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுர் யுகம் என்று பார்த்தோம். 

இப்படி 71 மகா யுகங்கள் கடந்தால் ஒரு மனுவந்தரம் என்று பெயர்.

மொத்தம் 14 மனுவந்தரங்கள் உள்ளன. 

இப்போது நாம் இருப்பது 7-வது மனுவந்தரமான ‘வைவசுவதம்’ ஆகும்.

சரி. 
கல்ப காலம் என்பதைப் பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். 

ஒரு கல்ப காலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். 

பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பு நிகழ்வும் இருக்காது. 

எனவே பிரம்மனின் பகல் மட்டும் பிரம்மனின் ஒரு நாள் ஆகும். 

எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு.

பிரம்மனின் கல்ப காலத்தில் 
14 மனுவந்தரங்கள் அடங்கும். 

ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒரு மனு, 

ஒரு இந்திரன் வீதம், 14 மனுக்கள் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள்.

(இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே).( ஒவ்வொரு மனுவந்தரத்திற்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். )
Indran is a post occupied  by ) (he is expected to follow orderliness,  else, he  will be punished,  by relevant devatha.).

இப்போது இருக்கும் இந்திரனின் பெயர்

🟧♻ புரந்தரா♻🟧

2 மனுவந்தரத்திற்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும். 

இந்த காலத்தின் பெயர்

 “ஸந்தியா காலம்”.

 இந்த காலத்தின் அளவு, 
நான்கு கலியுகத்தின் காலம் அடங்கியது ஆகும். 

அதாவது 17 லட்சத்து 28 ஆயிரம் மனித வருடங்கள். 

இதே போல் 14 மனுவந்தரத்திற்கு பின்பும் மீண்டும் 
ஒரு பெரிய இடைவெளி இருக்கும்.

அதுவே பிரம்மனின் இரவு ஆகும்.

பிரம்மனின் ஒரு பகல் என்பது
 71 மகாயுகங்கள் X 14 மன்வந்தரங்கள் = 994
மகா யுகங்கள்.

 71 X 15 ஸந்தியா காலங்கள் = 2 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகள். 
அதாவது 6 மகா யுகங்கள்.

ஆக. 
பிரம்மனின் ஒரு பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் 
(994 + 6 சதுர் யுகங்கள்). 

இதையே பிரம்மனின் நாள் என்றும், 
கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர். 

இப்படி 360 கல்ப காலம் என்பது பிரம்மனுக்கு ஒரு வருடம் ஆகும்.

பிரம்மனின் 100 வருடம், 
ஒரு பிரம்மனின் ஆயுள். 

12 ராசிகளுக்கு உரிய சிகப்பு புத்தக மந்திரங்கள்

12 இராசிகளுக்கும் அதிஷ்டம் அளிக்க கூடிய பண்டைய கால லால் கிதாப் மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள்

12 இராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள்:
இந்த நூல் வடஇந்தியாவில் பலருக்கும் மிகப் பிரசித்தம்.இந்திய ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரத்தைப் பற்றிய பண்டைய நூலான இதில் சில எளிய மற்றும் சிறந்த பலன்களைத் தரும் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
இந்திய மட்டுமின்றி பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஹிந்துக்கள் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி மக்களும் பின்பற்றிப் பலன் பெறுகின்றனர்.ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள் :-

1.எந்தப் பொருளையும் இலவசமாக வாங்கதிர்கள்.ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .
2.சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.
3.பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும்.பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.
4.ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக்கூடாது .இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும்.
5. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.
6.தாய்,குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்குமுடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.
7.உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்

ரிஷப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.ஆடையில் நல்ல வாசனைத் திரவியம் ( சென்ட் ) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தைப் பேருக்கும்.
2.சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.
3.மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக் குறைவு, மன உளைச்சல் ,பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம்.கவனம் தேவை.
4.மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிறப் பூக்களைப் போடச் சொல்லலாம்.இது தம்பதிகளுக்குத் தோஷ நிவாரணமாகவும் அன்யோன்யத்தைப் பெருக்குவதாகவும் அமையும்.
5.பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்குப் பசுமாடு தானம் தரலாம்.
6.பட்டு,நைலான் ,பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் அதிர்ஷ்டமானவை.
7.ஜனவரி ,பிப்ரவரி மாதங்களில் புதிதாகச் செருப்பு,ஷூ வாங்க வேண்டாம். இது துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
8.நீடித்த நல்வாழ்விற்கு :-
உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மனைவியைத் தினமும் ஏதாவது ஏழைகளுக்குப் பணம்,உணவு என்று முடிந்ததைத் தானமாக வழங்கலாம். யாரும் பிச்சை கேட்டால் இல்லை என்று சொல்லாமல் ஒரு ரூபாயாவது போடுங்கள்.இது நிறைந்த செழிப்பான வாழ்வைத் தரும்.

மிதுன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.படிகாரத்தூள் கொண்டு அல்லது படிகாரத்தூள் சேர்த்த பற்பொடி பற்பசை கொண்டு பல்துலக்குவது அதிர்ஷ்டம் தரும்.
2.முடிந்த போது மீனுக்குப் பொரி அல்லது இரை போடுவது நன்மை பயக்கும்.
3.புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு பால், அரிசி தானமாக வழங்கலாம்.
4.உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வறுமையில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருட்கள் வாங்கித் தரலாம்.
5.12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் திட்டக்கூடாது.அவர்களை புதன்கிழமை அன்று வணங்கி ஆசி பெறுவது நன்மை தரும்.
6.பச்சை நிற ஆடைகள் அணியக் கூடாது.துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
7.வீட்டில் மணி பிளான்ட் வளர்க்கக் கூடாது.
8.பச்சை நிறப் பாட்டிலில் கங்கை நீர் நிரப்பி அந்த பாட்டிலை இறுக்கமாக மூடி விடவும்.ஒரு வயலில் கொஞ்சம் நெருப்பு மூட்டி அதில் அந்த பாட்டிலைப் போட்டு விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்

கடக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.செம்பு நட்டு,போல்ட் போடப்பட்ட கட்டிலில் உறங்குவது நல்லது.
2.வெள்ளி டம்ளரில் பால் அருந்துவது அதிர்ஷ்டம் கொண்டு வரும்.
3.நீங்கள் மருத்துவர்களாக அல்லது ஹீலராக இருந்தால் கஷ்டப்படும் மக்களுக்கு கொஞ்சமாவது குறைந்த செலவில் அல்லது இலவசமாக சேவை செய்வது நன்மை தரும்.
4.எப்பொழுதும் வெறும் காலுடன் கோயிலுக்கு செல்லவேண்டும்.
5.ஆன்மீக பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில் முடிந்த தொண்டாற்ற வேண்டும்.
6.பௌர்ணமி அன்று தாயிடம் இருந்து ஒரு வெள்ளி நாணயம் மற்றும் கொஞ்சம் பச்சரிசியை ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து வாங்கி அதை எப்போதும் பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்திருந்தால் என்றும் வறுமை ஏற்படாது.
7.சிறு வெள்ளித் துண்டு (SILVER BRICK) வாங்கி அதை வீட்டின் முன் வாசலில் வைத்து எரித்து விடவும்.இதுவும் வறுமை கடன் ஏற்படாது தடுக்கும்

சிம்ம ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.முக்கியமான நிகழ்ச்சிகள்,இண்டர்வியூக்கள்,பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.
2.மனைவியின் சகோதரர்கள்,மருமகன்கள் ,தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன் நல்லுறவவைப் பேணுங்கள்.
3.ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில் ஒரு நூலில் கோர்த்து அணிந்து கொள்வது செல்வ நிலையில் ,தொழில் மற்றும் வேளையில் உயர்வு தரும்.
4.கண்பார்வையற்ற 10 பேருக்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு பண்டம் வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்.
5. உங்கள் ப[பொருளாதார நிலைக்கேற்ப ஏதேனும் ஒரு சேவை நிலையம் ,அன்னதான மன்றத்திற்கு அரிசி,பால் வழங்கலாம்.
6.யாரேனும் அன்பளிப்பாக ஏதாவது தந்தால் பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதேனும் ஒரு பதில் மரியாதை செய்வது சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும்.
7.மது மாமிசம் உண்பதை அறவே தவிர்ப்பது நல்லது.
8. 7 வகைத் தானியங்களை வாங்கி ஒரு சிகப்புத் துணியில் முடிந்து தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் காலையில்,அதை எறும்புகளுக்கு உண்ணக் கொடுத்தால் பித்ரு தோஷம் தீரும்.சுப காரியத் தடைகள் நீங்கும்.இதை சனிக்கிழமை தோறும் செய்து வருவது நல்லது.
9.உண்மையே பேச முயற்சியுங்கள்.நன்கு யோசித்த பின் வாக்குறுதி கொடுங்கள் அப்படிக் கொடுத்த பின் அதை நிறைவேற்றுங்கள்

கன்னி ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மூக்குத்தி அணிவிப்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும்.
2.மழை பெய்யும் பொழுது மொட்டை மாடி அல்லது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒரு பாத்திரத்தில் விழும் படி வைக்க வீட்டிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
3.வீட்டில் வழிபாடு செய்யும் இடத்தை அடிக்கடி மாற்றக் கூடாது.
4.புத்தாடை அணியும் முன் அவற்றில் கொஞ்சம் கங்கா ஜலம் அல்லது தீர்த்தாகர்ஷண மந்திரம் ஜெபிக்கப்பட்ட தண்ணீரை அந்த ஆடையில் சிறிது தெளித்த பின் அணிந்து வர என்றும் ஆடை ,அணிகலன்களுக்குக் குறை இருக்காது.
5.சனிக்ரஹ சாந்தி செய்து கொள்ளவும்.
6.மது,புகையிலை,புகை போன்ற போதைப் பழக்கங்களை முற்றிலும் தவிர்ப்பது வாழ்வில் உயர்வு தரும்.
7.புதன்கிழமை அன்று ஒரு மண் மூடியில் அகல் விளக்கு வைத்து அதை ஓடும் நீர் அல்லது கடலில் விடவும்.
8.புதன்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.மேலும் அன்று யாரையும் சபிக்கவோ யாருக்கும் வாக்குறுதி (PROMISE) அளிக்கவோ கூடாது.
9.பச்சை நிற கர்ச்சீப் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்

துலாம் ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள்.
2.கோயில் அல்லது தானங்களுக்கு வெண்ணை,தயிர்,உருளைக்கிழங்கு தானமாக அளிக்கலாம்.
3.வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கோமியம் ( பசுமூத்திரம் ) தெளித்து வர செல்வம் பெருகும்.
4.மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது வளமான வாழ்வு தரும்.
5.நீங்கள் ஆண் என்றால் மாமியார் வீட்டு சீதனம் வரும் பொழுது ஏதேனும் ஒரு பித்தளைப் பாத்திரம் சேர்த்துப் பெற்றுக்கொள்ள அதிர்ஷ்டம் தரும்.
6.வீட்டுப்பெண்கள் வீட்டின் வெளிப்புறம் நடக்கும் போது செருப்பு அணிந்து நடக்கச் சொல்ல வேண்டும்.
7.நீங்கள் ஆண் என்றால் பெண்களை மதிப்பாகவே பேசுங்கள்.அது உங்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தும்.
8.பெற்றோர் தேர்ந்தெடுத்தவரையே திருமணம் செய்து கொள்வது நல்லது.
9. வெள்ளித் தட்டில் கொஞ்சம் தேன் விட்டு வீட்டின் தலை வாசலில் எரிக்கவும்.
10.தானமாக எதையும் பெறாதீர்கள்.அது வறுமையை ஏற்படுத்தும்

விருச்சிக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.வீட்டில் மண்ணால் செய்யப்பட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாக்கும்.
2.தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்.
3.அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக் கூடாது.
4.செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
5.சிகப்பு நிற கர்ச்சீப் ,டை அதிர்ஷ்டம் தரும்.
6.பால் காய்ச்சும் பொழுது பொங்கி வடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
7.இனிப்பு ரொட்டி செய்து சாதுக்கள்,மகான்களுக்கு வழங்கலாம்.
8.யாரிடம் இருந்தும் எந்தப் பொருளும் இலவசமாகப் பெறாதீர்கள்.அப்படிப் பெற்றால் அதற்குப் பதில் ஒரு பொருளேனும் கொடுத்து விடவும்.
9.செவ்வாய்க்கிழமை அன்று தேன், குங்குமம் சிகப்பு ரோஜா இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
10.செவ்வாய்க் கிழமைகளில் இஷ்ட தெய்வத்திற்குச் சிகப்பு பூந்தி படைத்து வழிபட்டு வருவது வாழ்வில் வளம் சேர்க்கும்.
11.சகோதர்களின் மனைவியுடன் சண்டை இல்லமால் பார்த்துக் கொள்ளுங்கள்.
12.மூத்த சகோதரரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் .
13.செவ்வாய்க் கிழமைகளில் ஹனுமனுக்கு செந்தூரம் மற்றும் ஆடை சாற்றி வழிபட வறுமை,கடன்,நோய்கள் நீங்கிய நல்வாழ்வு கிட்டும்

தனுசு ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
2.தந்தையின் படுக்கை,ஆடைகள்,உடைமைகள் அதிர்ஷ்டம் தருபவை.
3.பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதைத் தர்மம் செய்யவும்.
4.திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு நெய்,தயிர்,அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுத்து வருவது நல்வாழ்வு தரும்.
5.வீட்டின் முன்பகுதியில் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
6.வியாழக் கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம்,வழிபாடு நன்மை தரும்.
8.யாரையும் ஏமாற்றவோ ,பொய் சாட்சி கூறவோ கூடாது.
9. வாழ்வில் ஒரு முறையாவது ஹரித்துவார் சென்று கங்கையில் குளித்து தானும் தனது சந்ததிகளும் நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்ள அப்படியே நடக்கும்

மகர ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள்,யாசகர்களுக்கு வாழைப்பழம், பருப்பு,ஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள்,எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்.
2.ஆண் / பெண் யாராக இருந்தாலும் கணவன் /மனைவி தவிர்த்த பிறருடன் தவறான தொடர்பு கொள்ளவோ ,அதற்காக முயற்சிக்கவோ கூடாது.இது பிற்கால வாழ்வில் கொடிய தரித்திரத்தை உண்டாக்கும்.
3.பாலும் சீனியும் கலந்து ஆல மர வேரில் விடவும்.அதில் இருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள செல்வவளம் நிறைந்த வாழ்வு கிட்டும்.
4. கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும்.
5.48 வயதுக்கு பின் வீடு கட்டுவது நாளது.அதற்கு முன் வீடு கட்டுவது அதிர்ஷ்டமல்ல.
6.கருப்பு,நீலம் ,ரோஸ் நிற ஆடைகளைத் தவிர்க்கவும்.
7.ஏதேனும் ஒரு சனிக்கிழமை கொஞ்சம் பால்,மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை கிணற்றில் போடவும்.இது துரதிர்ஷ்டத்தை நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கும்.
8.கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டமானது

கும்ப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.கையிலோ கழுத்திலோ தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும்.
2.குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றியில் திலகம் இட்டு வர நிறைந்த செல்வத்துடன் வாழலாம்.
3.மாதம் ஒரு முறை குளிக்கும் நீரில் கொஞ்சம் பால் கலந்து குளித்து வந்தால் பீடைகள் நீங்கும்.
4.சதுரவடிவமான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்துக் கழுத்தில் அணிந்தால் வேலை அல்லது தொழில் உயர்ந்த நிலை கிட்டும்.
5.வெள்ளியை உருக்கி 4 சிறு உருண்டைகளாகச் செய்து அதை ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு சட்டைப்பையில் வைத்திருந்தாள் செல்வம் பெருகும்.
6.ஏழைகள் அலல்து கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்யலாம்.
7.ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவருக்கு மது படைக்கலாம்.ஆனால் அதை அருந்தக்கூடாது.
8.வீட்டின் மேல்பகுதி அல்லது மொட்டைமாடியில் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள் வைக்கக் கூடாது.
9.விரதம் இருப்பதாக இருந்தால் சனிக்கிழமை இருக்கவும்.
10.மது மாமிசம் உண்பதைத் தவிர்க்கவும்

மீன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.சட்டையின் உள்பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும்.
2.பிறர் முன்னையில் குளிக்கக் கூடாது.
3.மொட்டை போட்டால் முழுக்க மொட்டையடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும்.
4.ஆலயங்களில் உணவு பிராசதம் அளிப்பதை விட ஆடைகள் தானமாக அளிப்பதே சிறப்பு.
5.வீட்டில் துளசி வளர்க்கக் கூடாது.
6.வீட்டின் வழிபாட்டு அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியிலும் கலந்து கொள்வது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம் மற்றும் வழிபாடு நன்மை பயக்கும்.
8. யாரிடம் இருந்தும் தானமாக எதையும் பெறக்கூடாது.
9.வீட்டின் முன்புறம் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.
10.தொழில் சார்ந்த முடிவுகளில் மனைவியைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.
11.பணப்பெட்டி அல்லது பீரோவில் தங்கக் கட்டி அல்லது தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க செல்வம் பெருகும்.
12.கோழிக்குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்.
13.குருமார்களுடன் தொடர்ந்த தொடர்பில் இருத்தல் நன்று.