Showing posts with label தற்கொலை செய்து கொண்டால் பெரிய பாவம். Show all posts
Showing posts with label தற்கொலை செய்து கொண்டால் பெரிய பாவம். Show all posts

Saturday, September 12, 2020

தற்கொலை செய்து கொண்டால் பெரிய பாவம்

ஓம்
சிவ சிவ :
     ~~~~~~~
  *தற்கொலை ?*
      ******
    *இது அறிவு மயக்கம் !*
  *மயக்கம் , மயக்கம் , மயக்கம் !* *மயக்கத்திலே பிறந்து மயக்கத்திலே வளர்ந்து மயக்கத்திலே மடியும் மனிதர்கள் !*
  *பலருக்குத் தொட்டில் மயக்கம் சுடுகாடு மட்டும் !*
   *சிவத்தால் நிர்ணயிக்கப் பட்ட ஆயுட் காலத்துக்கு முன்,  வாழ்வை முடித்துக் கொள்வோர் ,ஆயுள் எல்லை வரை பேயாய்த் திரிந்து அலைய வேண்டும் !*
  *""பேயாய்த் திரிந்து எய்த்தேன் "*
  *எய்த்தேன் = இளைத்தேன்.*
 *(பேய் பயனின்றி விரைந்து ஓடி ஒன்றைப் பற்றத் துடிக்கும் ; எய்த இயலாமல் மிக்க மனத் துயருக்கு ஆளாகும். )~07-01-02* ~
 *~இது சுந்தர மூர்த்தி சுவாமிகள் வாக்கு !*
  *பேய் ,பிசாசு , பூதம் , பிரேதப் பைசாசம் , டாகினி போன்ற இழி நிலைகளை அடைவது , வாழ்வியல் துன்பங்களை எதிர் கொள்வதை விட ஆயிரம் மடங்கு கொடுமையானத் துன்பங்களை விளைவிப்பது என்பதை அனைவரும் உணர வேண்டும். !*
   *அங்கே மட்டும் விரும்பியவை கிடைத்து விடுமா ?*
   *துன்பம் நிரந்தர மானதல்ல !*
  *எதனை அடைய முயன்று தோல்வியைத் தாங்க முடியாமல் உயிர் விடுகிறீர்களோ அதுவும் நிலையானதல்ல !*
  *இளமையில் அற்பக் காரணங்களுக்காக உயிரை மாய்த்துக் கொள்வது , எந்த அளவுக்கு , தம்மையே கொடுத்து , ,தம் இன்பங்களை தியாகம் செய்து வளர்த்தப் பெற்றோர்களுக்குக் கொடுந் துன்பம் விளைவிக்கும் என்பதைச் சிந்திக்கக் கூட ஆற்றலில்லையா ?*
   *இது அவர்களுக்கும் , இறைவனுக்கும் செய்யும் நம்பிக்கைத் துரோகம் அல்லவா ?*
    *அடுத்தப் பிறவி மட்டும் தேவலோகப் போகப் பிறவியா கிடைக்கப் போகிறது?*
   *சிந்திக்க வேண்டும். !*
*தற்கொலை எண்ணம் அவ்வப்போது எண்ணத்தில் எழின் இவற்றையெல்லாம் சிந்தியுங்கள்.* 
  *தன் உயிருக்குத் தானே தீங்கு செய்து கொள்வதா அறிவுடைமை ?*
  *மனிதப் பிறவி எளிதில் கிடைக்கப் பெறாது ; இறைவன் கொடுத்த அருட் கொடை !*
  *குழந்தைகள் கையில் கிடைத்தப் பொற் கிண்ணம் போல வீசி எறியாதீர்கள் !*
  *இறைவனது*
*துணையைப் பற்றி வீரத்துடன் வாழுங்கள் !*
  *தேசத்துக்காக , இந்த சமூகத்துக்காக வாழுங்கள் !*
    *சிங்கத்தின் மீது குறி வைப்பது வீரம் !*
  *குறி தவறினால் உயிரை மாய்த்துக் கொள்வது எதிர் மறையானக் கோழைத் தனம் !*
  *தேசீய அவமானம் !*
  *நமக்குங் கீழே கோடானு கோடி மக்கள் வாழ்வதைச் சிந்தியுங்கள் !*
*சிவத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்.*