Showing posts with label ஐந்தெழுத்தின் மந்திர விளக்கம். Show all posts
Showing posts with label ஐந்தெழுத்தின் மந்திர விளக்கம். Show all posts

Thursday, September 17, 2020

ஐந்தெழுத்தின் மந்திர விளக்கம்

ஐந்தெழுத்து மந்திரம் ஒரு சிறு விளக்கம்:

இம் மந்திரத்தில்  ஐந்து நிலைகள் அல்லது ஐந்து வகைகள் உள்ளன என்பர்

முதல் நிலை:  உலக இன்பங்களைத் தரவல்லது.  இம்மை நலம் பயக்கும்.

மந்திரம்:  நமசிவாய

இரண்டாம் நிலை:  இம்மை மறுமைப் பயன்களை அளிக்கவல்லது

மந்திரம்:  சிவாய நம

மூன்றாம் நிலை:  இந்த உலகிலேயே,  ஆணவம், கன்மம்( கர்மா),  மாயை  என்ற  மூன்று தடைகளையும் நீக்கி  இறைவனை அடைய உதவும். 

மந்திரம்:  சிவயசிவ

நான்காம் நிலை:  சிவனாகவே மாறும் நிலை.  சிவ சிவ என்றிட தேவரும் ஆவார்;   சிவசிவ என்ன  சிவகதி தானே -   திருமூலர்.

மந்திரம்:  "சிவ" அல்லது   " சிவ சிவ" 

ஐந்தாம் நிலை:  பெற்ற திருவடிப் பேற்றில்,   சிவகதியில்  என்றென்றும் நிலை பெற்றிருத்தல்.  வாசனா மலம்  தாக்காது  காத்துக் கொள்ளுதல்.

மந்திரம்: " சி"   

சி என்ற ஓரெழுத்தில்  சிவாய நம  என்ற ஐந்து எழுத்துக்களும்  மறைபொருளாக உள்ளது  என்பதை உணர்தல் வேண்டும்.

கூட்டு தவம்  உங்களுக்கு நன்மை பயக்கும்;  உலகுக்கும் நன்மை பயக்கும்🙏🙏