Monday, December 25, 2023

எந்தெந்த நட்சத்திரத்திற்கு எத்தனை முகம் ருத்ராட்சம்.

#ருத்ராட்சம்_உண்மையில் #பலன்கள்_உண்டா..?

ருத்ராடசத்தின் பயன்களும் எந்தந்த நட்சத்திரகாரர்கள் எந்த வகையான ருத்ராட்சம் பயன்ப்படுத்த வேண்டும் என்பதையும் பார்ப்போம் .!

இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில், டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்கள் ருத்ராட்சம் குறித்து செய்த ஆய்விற்குப் பின்னர் ருத்ராட்சம் உலக புகழ்பெற்றது.

அந்த ஆய்வும் முடிவில் ருத்ராட்சத்திற்கு மூன்று முக்கிய தன்மைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic)

காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic)

அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive).

ருத்ராட்ச மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதை ஆய்வில் தெரிவித்தனர்.

அதோடு ருத்ராட்ச மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றது என்றும் தெரிவித்தனர்.

ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய ருத்ராட்சத்தையோ அல்லது ஒரு தொகுதி முகங்கள் கொண்ட ருத்ராட்சர மணிகளையோ அணிவோருக்கு தன்னார்வமும், மனோதிடமும் அதிகரிக்கிறது என்பதையம் அவர்களது ஆராய்ச்சியின் மூலம் தெரிவித்தனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவிற்கு பின்பு உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வாழும் பலரும் ருத்ராட்ச மணிகளின் பலனை அறிந்து அதை அணிய தொடங்கியுள்ளனர்.

#ருத்ராட்சத்தின்_பயன்கள்

அதிகமாக பிரயாணம் செய்பவர்கள், பல்வேறு வகைப்பட்ட இடங்களில் சாப்பிட்டு, தூங்குபவர்களுக்கு, ருத்ராட்சம் அவர்களுடைய சக்தியின் கூடாக மாறி ஒரு நல்ல உறுதுணையாக இருக்கும். சில நேரம் நீங்கள் பார்த்திருப்பீர்கள் - புது இடமாக இருந்தாலும் சில இடங்களில் உடனே தூக்கம் வரும், ஆனால் வேறு சில இடங்களில், உடம்பு அசதியாக இருந்தாலும் கூட தூக்கம் வராது.

பொதுவாக உங்களைச் சுற்றியுள்ள சக்திநிலை உங்கள் சக்திநிலைக்கு சாதகமாக இல்லையென்றால், அந்த இடம் உங்களை நிலைகொள்ள விடாது. 

சாதுக்களும், சந்நியாசிகளும் ஒவ்வொரு இடமாக சுற்றிகொண்டு இருப்பதால், பல இடங்களும் சூழ்நிலைகளும் அவர்களுக்கு சாதகமாக இருக்காது. அவர்கள் ஒரே இடத்தில் இரண்டு முறை தங்கியிருந்து தூங்கக் கூடாது என்று ஒரு விதிமுறை உண்டு. இன்று மறுபடியும் மக்கள் வேலை காரணமாகவோ, தொழில் காரணமாகவோ, பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யவும், வெளியில் சாப்பிட்டு, தூங்கவும் வேண்யிருப்பதால் ருத்ராட்சம் அணிவது மிகவும் பயனளிக்கும்.

இதில் மற்றொரு விஷயம் அடங்கியுள்ளது. காட்டில் வசிக்கும் சாதுக்கள், சந்நியாசிகள், அறியாத ஏதோ ஒரு குளமோ அல்லது குட்டையிலோ நீர் அருந்தக் கூடாது.

இயற்கையிலேயே அந்த நீர் விஷ வாயு கொண்டதாகவோ, தூய்மை அல்லாமலோ இருக்கக்கூடும். அந்நீரை குடித்தால் அவர்கள் முடம் ஆகவோ அல்லது உயிர் போகக் கூட வாய்ப்பு ஏற்படும். அந்த சமயங்களில் ருத்ராட்ச மாலையை நீருக்கு மேலாக தொங்க பிடித்தால், நீர் நல்லதாகவும், குடிக்க தகுதியானதாகவும் இருந்தால் - மாலை கடிகார முள் செல்லும் திசையில் (பிரதக்ஷணமாக) சுற்றும். விஷமுள்ளதாக இருந்தால் மாலை எதிர் திசையில்(அப்பிரதக்ஷணமாக) சுற்றும். உணவின் தரத்தையும் இவ்வாறு பரிசோதித்துப் பார்க்கலாம்.

எந்தவொரு நல்ல பிராண சக்தி உள்ள பொருளுக்கு மேலேயும் பிடித்து பார்த்தால் அது கடிகார முள் செல்லும் திசையில் சுற்றும். ஒரு கெட்ட பிராண சக்தி உள்ள பொருளுக்கு மேல் பிடித்தால் அது எதிர் திசையில் சுழலும்.

நட்சத்திரவாரியாக யார் எந்த ருத்ராட்சம் முகங்கள் கொண்டதை அனியலாம் என்று பார்ப்போம்..!

1.அஸ்வினி - ஒன்பது முகம்.

2. பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம்.

3. கார்த்திகை - பனிரெண்டு முகம்.

4. ரோஹிணி - இரண்டு முகம்.

5. மிருகசீரிஷம் - மூன்று முகம்.

6. திருவாதிரை - எட்டு முகம்.

7. புனர்பூசம் - ஐந்து முகம்.

8. பூசம் - ஏழு முகம்.

9. ஆயில்யம் - நான்கு முகம்.

10. மகம் - ஒன்பது முகம்.

11. பூரம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.

12. உத்திரம் - பனிரெண்டு முகம்

13. ஹஸ்தம் - இரண்டு முகம்.

14. சித்திரை - மூன்று முகம்.

15. ஸ்வாதி - எட்டு முகம்.

16. விசாகம் - ஐந்து முகம்.

17. அனுஷம் - ஏழு முகம்.

18. கேட்டை - நான்கு முகம்.

19. மூலம் - ஒன்பது முகம்.

20. பூராடம் - ஆறுமுகம். பதிமூன்று முகம்.

21. உத்திராடம் - பனிரெண்டு முகம்.

22. திருவோணம் - இரண்டு முகம்.

23. அவிட்டம் - மூன்று முகம்.

24. சதயம் - எட்டு முகம்.

25. பூரட்டாதி - ஐந்து முகம்.

26. உத்திரட்டாதி - ஏழு முகம்.

27. ரேவதி - நான்கு முகம்.

No comments:

Post a Comment