Showing posts with label புரட்டாசி மாதத்தில் எப்படி பெருமாளை வணங்குவது. Show all posts
Showing posts with label புரட்டாசி மாதத்தில் எப்படி பெருமாளை வணங்குவது. Show all posts

Thursday, September 17, 2020

புரட்டாசி மாதத்தில் எப்படி பெருமாளை வணங்குவது



புரட்டாசி மாதத்தில் பெரு மாளை எப்படி வணங்க வேண்டும்

மாதவா, என் மனதுக்கு பிடித்த அரங்கனே எனக்கு மணவாளனாக வந்தால் நூறு அண்டா வெண்ணையும், நூறு

அண்டா அக்காரவடிசல் உனக்கு நிவேதனமாகத்

தருகிறேன்

திருமாலிருஞ்சோலை அழகரிடம் இப்படி வேண்டிக் கொண்டாள்

ஆண்டாள். அவள் மனம்

போலவே அரங்கன்

அவளுக்கு மாலை சூட்டி தன்னுடன் ஐக்கியம் செய்துகொண்டது

உங்களுக்கே

தெரிந்திருக்கும். ஆண்டாள், தான் வேண்டியபடி நூறு அண்டா வெண்ணெயும்

நூறு அண்டா

அக்காரவடிசல் பகவானுக்குக் கொடுத்து

இல்லையா. கிட்டத்தட்ட

முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சந்தேகம் வந்தது, யதிராஜரான

ராமானுஜருக்கு. உடனே

அந்த மகான் என்ன

செய்தார் தெரியுமா?நூறு தடா அதாவது நூறு அண்டா வெண்ணெயும், நூறு

அண்டா அக்காரவடிசல்

நிவேதனம் செய்து அழகரை

ஆராதித்து, ஆண்டாளின் வேண்டுதலை தானே நிறைவேற்றினார்

அதனால், ஸ்ரீவில்லிபுத்த

ஊருக்கு அவர் வந்தபோது வாசலுக்கே ஓடிவந்து வாருங்கள் நம் கோயில்

அண்ணா ... என்று

கூப்பிட்டாளாம் ஆண்டாள். இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்

வருடத்துக்கு ஒருமுறை இந்த சம்பவத்தை உத்ஸவமாக கொண்டாடுகிறார்கள்

அன்று அக்காரவடிசல்

பிரசாதமும் உண்டு

அக்காரவடிசல். அக்காரை என்றால் சர்க்கரை. அடிசல் என்பது குழைய வெந்த சாதம். பார்க்க சர்க்கரைப் பொங்கல் போல

இருந்தாலும் சர்க்கரைப்

பொங்கலுக்கு இதற்கும்

நிறையவே வித்தியாசம்

உண்டு. புரட்டாசி மாதத்தில்

பெருமாளுக்கு

அக்காரவடிசல் செய்து

வணங்கினால் கேட்டது

கிடைக்கும்.