Showing posts with label புதன் தோஷம் நீங்க சித்தர் வழிபாடு. Show all posts
Showing posts with label புதன் தோஷம் நீங்க சித்தர் வழிபாடு. Show all posts

Wednesday, September 30, 2020

புதன் தோஷம் நீங்க சித்தர் வழிபாடு

ஸ்வாமிகள் தியானச்செய்யுள் மென்மையே கருவாகி உண்மையே உருவாகி வெண்மையே உடையாகி ஈமையில் இறைமை கண்டவரே நீரில் ஒளி ஏற்றிய நிரமயளே சிவசோதியில் கலந்த பரஞ்சோதியே வழி தேடி அலையும் எமக்கு ஒளி காட்டும் மெய் ஞான சோதியே

சித்தர் வரலாறு

இராமையாப்பிள்ளைக்கும், சின்னக்காவனம் அம்மைக்கும் மகனாக பிறந்தவர் நம் மகான்

தந்தையின் மறைவிற்குப் பிறகு தமையனார் சபாபதிபிள்ளை யோடும், அன்னையோடும் வள்ளலார் சென்னை வந்தடைந்தார். கல்வியில் கவனமில்லாமல், கந்தன் ஆலயத்தில் கிடந்தார். காஞ்சி வித்வான் சபாபதி தன்னால் பாடமுடியாத பாடல்களை மிகச்சுலபமாகப் பாடும் அருட் குழந்தைக்கு தான் பாடம் கற்பிப்பதா? என்றெண்ணி வள்ளலாருக்கு கல்வி கற்பிப்பதை நிறுத்தினார்.

இதனால் கோபமடைந்த தமையனார் தம் மனைவியிடம், 'தம்பிக்கு உணவு அளிக்காதே' என்று கூறிவிட்டார்.

அண்ணியாரோ கணவரில்லாத நேரங்களில் வள்ளலாரை விட்டின் பின்புறத்தில் அழைத்து உணவளித்தார்.

தந்தையின் திதி அன்றும் யாரும் இல்லாத சமயத்தில் நேரம் தாழ்த்தி வள்ளலார் சில்லிட்ட உணவை உண்ணும் பொழுது தனக்காக கலங்கிய அண்ணியாருக்காக வள்ளலார் கல்வி பயில் இசைந்தார்.

ஒரு அறையில் திருவிளக்கேற்றி கண்ணாடியை சுவரில் மாட்டி, அதற்கு மாலை சூட்டி பழம் படைத்து கற்பூரம் காட்டினார். பின்பு, கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தையே உற்று நோக்கினார் அப்பொழுது கண்ணாடியில் கந்தனின் உருவம் தெரியலாயிற்று அன்று முதல் தணிகையன் திருவருளால் அவருக்கு சகல கலைகளும் தாமாகவே விளங்கலாயின.

ஒரு சமயம் தன் தமையனார் செய்யவிருந்த சொற்பொழிவை இவர் செய்ய வேண்டிய சூழ்நிலை

அன்று இரவு 9 மணிக்கு முடிவுற வேண்டிய சொற்பொழிவு நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்தது. கேட்டவரெல்லாம் வாயடைத்து சிலையாய் நின்றனர்

அவையினரெல்லாம் பேரானந்த வெள்ளத்தில் மூழ்கினர்

இந்த ஆனந்தம் வள்ளலார் செல்லுமிடமெல்லாம் தொடர்ந்து.

தன் தம்பி முருகன் அவதாரமென்றுணர்ந்த தமையனார் தன் மனைவியிடம் பெருமானை மிக்க மரியாதையுடன் நடத்துமாறு கூற, அவரும் அவ்வாறே செய்தார் அண்ணியாரின் செயல் பெருமானுக்கு பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

வடிவுடை அம்மனே ஒருமுறை தமது அண்ணியின் உருவிலே காட்சியளித்து அவருக்கு அமுது படைத்திருக்கிறார்.

மூதாட்டி ஒருவரிடம் ஒரு பிடி மண்ணைக் கொடுத்து திறந்து பார்க்கச் சொல்ல மணலெல்லாம் சிறு வடிவ சிவலிங்கங்களாகத் தோன்றின. பின்பு பெருமான் அவர்கள் வடலூரில் "சத்திய ஞான திருச்சபையை தோற்றுவித்தார்.

அங்குள்ள அடுப்பு இன்றளவிலும் புகைந்து கொண்டே இருக்கிறது.

வள்ளலார் பெருமான் அவர்கள் புத பகவானை பிரதிபலிப்பதால் அவரை முறைப்படி வணங்க நம் ஜாதகத்தில் புத பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள்

நீங்கி, நல்ல பலன்கள் கிடைக்கும்

கல்வியில் தடை நீங்கி, சரியாக படிக்க இயலாத நிலை அகலும். வியாபாரப் பிரச்சினைகள் தீரும். பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளைவரம் கிடைக்கும். உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் இத்தகைய பெருமைகள் வாய்ந்த பெருமானை ஒரு புதன்கிழமையன்று தாம்பரம் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் அருகிலுள்ள "சித்தர் பீடத்திற்கு சென்று பச்சை வஸ்திரம், விபூதி, ஜாதிப்பூ ஆகியவற்றைக் கொண்டும், பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறியும் அர்ச்சிக்க வேண்டும்

பதினாறு போற்றிகள்

ஜோதி தரிசனம் செய்பவரே போற்றி

மூவுலகத்திலும் சஞ்சரிப்பவரே போற்றி விபூதி அபிஷேகப்பிரியரே போற்றி அமிர்தப்பிரியரே போற்றி சிவதாண்டவப்பிரியரே போற்றி ப்ரணவத்தின் விளக்கமே போற்றி முருகனோடு ஐக்கிய மலரே போற்றி

ஒருநிலைப்பட்ட மனனத உடையவரே போற்றி

தியகவுகளில் இருந்து காப்பவரே போற்றி

மாயையை அகற்றுபவரே போற்றி!

சித்தகத்தி உடையவரே போற்றி

வெப்ளை வஸ்திரம் தரித்தவரே போற்றி!

சிலம்பத்தை தரிசிப்பவரே போற்றி கமலப்பிரியரே போற்றி

தேவ ஒளியே போற்றி ஈக ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் சர்வ ஒளி உருவான ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே

போற்றி போற்றி இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.

அதன்பின், நிவேதனமாக விபூதி, பஞ்சாமிர்தம்(வாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை, தேன், நெய் சேர்த்து செய்ய வேண்டும்) வைத்து மனமுருக பிரார்த்தித்து வேண்டி நிறைவாக தீபாராதனை காட்ட சகல சவுக்கியங்களும் உங்களை நாடி வரும் என்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கிறோம்